யார் பெத்த கவிதையோ ? படிக்கும் போதே மனதைக் குத்துது!
வறுமை ஒன்னும் புதுசில்ல…!
– அரசுப்பள்ளி மாணவன்
அட்டை போடாத
அஞ்சாவது புக்கு
என்னைக்கோ கிழிஞ்சுருச்சு.
ஆறாம் வகுப்புக்கு தேறிட்டன்னு
அறிவிப்பு மட்டும்
வந்திருச்சி..
பள்ளிக்கூடம்
பூட்டு போட்டு
மாசம் இன்னைக்கு
நாலாச்சு…
பிரைவேட்ல
படிக்கிறவனுக்கு
“ஸ்கூல்”
வீட்டுக்கே வந்தாச்சு.. .
ஆன்லைன்ல படிக்கிறேன்டா..
ஆணவமா ஆதி சொன்னான்..
எதிர்வீட்டு
கோபி சொன்னான்..
ரெண்டு ஜிபி
தேவைப்படுமாம்..
சட்டையில மட்டுமில்ல
அப்பா போன்லயும்
ரெண்டு பட்டன் இல்லை..
ஸ்மார்ட் போன் வாங்க
காசு இருந்தா
ஸ்கூல் பீஸ் கட்டி
சேர்த்திருப்பார்..
கூலிக்கு மாரடிக்கும்
குருவம்மா எங்கம்மா..
கூறுகெட்ட
கொரானாவால
வீட்டுக்குள்ளே
முடங்கிருக்கா..
அப்துல் கலாம் ஆவேன்னா…
அரசு பள்ளியில
சேர்த்துவிட்டா?
ஒரு வேல
சுடு சோறு
தின்பான்னு
ஆசைப்பட்டா…!!
இப்ப…
சொல்லித் தரவும்
ஆளில்லை…
சோத்துக்கும் வழியில்ல…
கத்து தந்த
வாத்தியாரும்
முழு சம்பளமும்
…வாங்கி விட்டு
முடங்கி கெடக்காரு…
அவரு பையன்
ஸ்ஸ்கூல் கான்வென்ட்ல ஆன்லைன்ல
இங்கிலீசுல தூள்
கிளப்புறான் !
வறுமை ஒன்னும்
புதுசில்ல…
வாழ்ந்து பார்த்து
பழகிடுச்சு…
வாய்ப்பு பறி போயிடுமோன்னு தான்
வாசல் பார்த்து
காத்திருக்கேன்…
மாஸ்க் வாங்க
காசு இல்ல…
கர்ச்சீப் தான்
கட்டிக்கிறேன்…
புக்கு மட்டும் குடு சாமி…
புரட்டி கிரட்டி கத்துக்கறேன்…
இப்படிக்கு
அரசுப்பள்ளி மாணவன்😭😭😭
வாட்ஸ் அப் பகிர்வு