ஆஸ்காருக்குச் செல்லும் இந்திய ஆவணப்படம் – Writing with fire – oscar entry

 சிறந்த டாக்குமென்டரிப் படங்களுக்கான பட்டியலில் இந்தியாவிலிருந்து கலந்து கொண்ட ‘ரைட்டிங் வித் பயர்’ என்ற படம்  ஆஸ்கார் இறுதிப் போட்டிக்குத் தேர்வாகி உள்ளது.

டில்லியைச் சேர்ந்த ரின்டு தாமஸ், சுஷ்மித் கோஷ் உருவாக்கியுள்ள இந்தப் படம் மொத்தமாகக் கலந்து கொண்ட 138 படங்களிலிருந்து ஷார்ட் லிஸ்ட் ஆன 15 படங்களிலும் தேர்வாகி கடைசியாக இறுதிப் போட்டியில் 5 படங்களில் ஒன்றாகப் போட்டியிடுகிறது.

“இந்திய டாகுமென்டரி படம் ஒன்று ஆஸ்கர் விருதுக்கு நாமினேட் ஆவது இதுவே முதல் முறை. நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம். இந்திய சினிமாவுக்கே இது ஒரு முக்கியமான தருணம். தலித் பெண் பத்திரிகையாளர்களைப் பற்றிய படம் இது. வலிமை என்றால் என்ன என்பதையும், இந்தக் கால இந்தியப் பெண்களைப் பற்றிய படமாகவும் இந்தப் படம் உருவாகியுள்ளது” என படத்தை உருவாக்கியவர்களில் ஒருவரான சுஷ்மித் கோஷ் தெரிவித்துள்ளார்.

ஒரு தலித் பெண் நிருபர் ‘கபர் லாகாரியா ‘ என்ற ஒரு பத்திரிகையை  பலவிதமான தடைகளை மீறி எப்படி வெற்றிகரமாகக் கொண்டுவந்தார் என்பதுதான் இந்தப் படத்தின் மையக்கருத்து.

உத்தர பிரதேசம் பூந்தல்கண்ட் ஊரில் தலித் பெண்களின் அவல நிலையை வெளிக் கொண்டுவர இந்தப் பத்திரிகை பட்டபாட்டை வார்த்தைகளில் சொல்ல முடியாது. 

அதன் டிரைலர் இதோ:

முழுப் படத்தைக் காண ஆவலுடன் காத்துக்  கொண்டிருக்கிறோம். 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.