சஞ்சய் ஸ்வாமினாதன் 15 வயது நிரம்பிய பள்ளிமானவன் . ஆனால் இப்போது எழுத்தாளர்.
THE TRINITY என்ற ஒரு 358 பக்கங்கள் கொண்ட ஆங்கிலப் புத்தகத்தை எழுதி அமேசான் கிண்டிலில் வெளியீட்டிருக்கிறார்.
பெங்களூரில் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் வித்யா மந்திரில் படிக்கும் மாணவனின் இந்த அபார முயற்சிக்கு கிரியா ஊக்கியாக இருந்தவர் அவரது பெற்றவர்கள் மட்டுமல்ல. அவரது தாத்தா சுகவனமும் கூட.
சஞ்சய்க்குப் பல திறப்பட்ட விருப்பங்கள் உள்ளன. மிருதங்க வாசிப்பு, கர்நாடக இசைப் பயிற்சி, நீச்சல், விளையாட்டு போன்றவை அதில் அடங்கும்.
எல்லாவற்றையும் விட மிக முக்கியமாக எண்ணுவது புத்தகம் வாசிப்பதுதான்.
இந்த வாசிப்பு அனுபவம்தான் தன்னை எழுதத்தூண்டியது என்கிறார் இந்தக் குழந்தை எழுத்தாளர்.
அவருடன் சில நிமிடங்கள் போனில் உரையாடி இந்த டிரினிடி புத்தகம் எந்த வகையச் சார்ந்தது என்று கேட்டபோது மிகவும் அழகாக ” இது ஒரு பேன்டசி பற்றிய நாவல் . அலெக்ஸாண்டர் என்ற சிறுவன் தனது தந்தை மரணத்திற்குப் பிறகு புதியதொரு உலகத்திற்குச் செல்கிறான். அந்த உலகத்தில் அவன் காணும் ரகசிய மனிதக் கூட்டம், இருளில் உலாவும் கொடூர மிருகங்கள், வித்தியாசமான மொழிகள் அவனை மட்டுமல்ல படிக்கும் வாசகர்களையும் புதியதொரு உலகத்திற்கு அழைத்துச் செல்லும்” என்று மிகுந்த நம்பிக்கையுடன் கூறினார். .
புத்தகத்தை கிண்டிலில் வாங்கிப் படித்துவிட்டு இதைப் பற்றிய முழு விமர்சனம் செய்யலாம்.
சஞ்சய்க்கு இன்னும் நிறைய சாதனை புரிய குவிகத்தின் வாழ்த்துக்கள்.
THE TRINITY Kindle Edition
by Sanjay Swaminathan (Author) Format: Kindle Edition
4.6 out of 5 stars 3 ratings
Kindle Price $1.28
Read with Kindle Free App
Product details
-
ASIN : B0B18MJ8TY
- Publication date : May 12, 2022
- Language : English
- File size : 6893 KB
- Text-to-Speech : Enabled
- Screen Reader : Supported
- Enhanced typesetting : Enabled
- X-Ray : Not Enabled
- Word Wise : Enabled
- Print length : 358 pages