அதுவும் சரிதானே…!
‘நான் ஆன மட்டும் சொன்னேன் என் நண்பன் சாரதியிடம் அவன் பார்த்து வைத்திருந்த பையன் வேண்டாம். என்னுடைய மாமா பையனுக்கு அவன் பெண்ணைக் கட்டிக் கொடுன்னு.. அவன் கேட்கலே.. இப்போ அந்த மாப்பிளைப் பையன் ஒரு ஆக்ஸிடன்ட்லே போய்ட்டானாம். என் மாமா
பையனைக் கட்டிட்டிருந்தா அந்தப் பெண் நல்லா இருந்திருப்பா பாவம்’ என்றேன் என் மனைவியிடம் ஆதங்கத்தோடு.
அருகில் இருந்த மிதிலா, ‘அப்பா.. அந்த அக்காக்கு இது மாதிரி ஆகணும்னு விதிச்சிருக்கு. அதனாலே அந்த அங்கிள் ஆக்ஸிடன்ட்லே போய்ட்டாரு… இப்போ உங்க மாமா பையனுக்கு கட்டிக் கொடுத்திருந்தா உங்க மாமா பையனுக்கு இந்தக் கதி ஏற்பட்டிருக்கலாம்.. எதெது எப்படி எப்படி நடக்-
கணுமோ அதது அப்படி அப்படி நடக்கும்பா..’என்றாள் பெரிய மனுஷித்தனமாக.
நெற்றிப் பொட்டில் அடித்த மாதிரி இருந்தது எனக்கு.
அதுவும் சரிதானே..!!
————————————————————————————
‘தொட்டுக் கொள்ள…!!’
மனைவி : அட ராமா.. அப்பளாத்தைப் பொரித்து பை மிஸ்டேக் யூஷ¤வலா போடற டப்பாவுலே போடாம வேறே புதிய டப்பாவுலே போட்டு வெச்சிருக்கேனே.. என்னங்க மதியம் சாப்பாட்டுக்கு என்னத்த தொட்டுட்டு சாப்பிட்டீங்க
கணவன் : லஞ்ச் அவர்லே நீ ·போன் பண்ணி என்ன சொன்னே.. ‘சாதம் குக்கருக்குள்ளே இருக்கு. குழம்பு ·ப்ரிட்ஜ்லே இருக்கு. தொட்டுக்க..
மறக்காம கிச்சன் ஷெல்·ப்லே உள்ள அப்பளா டப்பாவை எடுத்து வெச்சுக்கங்க’ன்னு சொன்னியா.. அப்பளா டப்பாவை எடுத்துப்
பார்த்தேன்.. அதிலே அப்பளாம் இல்லே.. ஒரு வேளை அப்பளா டப்பாவை அப்படியே தொட்டுட்டு சாப்பிடுங்க’ன்னு சொன்னியாக்கும்னு ஒரு கையாலே அப்பளா டப்பாவைத் தொட்டுண்டு இன்னொரு கையாலே எப்படியோ சாப்பிட்டு முடிச்சேன்..
மனைவி : !!!
————————————————————————————