பிரம்மா தலைநிமிர்ந்தார்
எதிரே ஒருவன்
எப்படி வந்தான் இவன்
முழுதாய் முடிப்பதற்குள்
முளைத்து விட்டானே!
அவனே கேட்டான்
என்னை எங்கே
அனுப்பப் போகிறீர்?
அதோ அவள் தன்
அசுரப் பசியைத்
தீர்க்க முடியாமல்
அல்லல் படுகிறாளே அவளிடமா?
அதிகமாகத் தின்று
உடல் கொழுத்து
அதை இளைக்கச் செய்ய
அலைகிறாளே அவளிடமா?
இல்லாத காரணங்களை
இங்கென்று காட்டி
இனம்பிரித்து சண்டையிடும்
இவர்களிடமா?
பிரம்மா சிந்தித்தார்.
சிந்தினார் புன்சிரிப்பை
எமனை அழைத்தார்.