குட்டீஸ் லூட்டீஸ்:
அப்படித்தான் இருக்குமோ..!
காலை வேளை.. ஹாலில் பேப்பர் படித்துக் கொண்டிருந்தேன். மகள் மிதிலாவும் உடன் இருந்தாள்.
‘அப்பா.. ‘ஆமாம்’ங்கறதுக்கு இங்க்லீஷ்லே ‘எஸ்’ன்னுசொல்றோம். ஆனா அந்த ‘எஸ்’ங்கறதுக்கு ஸிம்பிளா ‘எஸ்’ங்கற ஒரு எழுத்து ஸ்பெல்லிங்க் வைக்கறதுக்கு பதிலா ஏன் ‘வை-ஈ-எஸ்’ன்னு மூணு எழுத்து ஸ்பெல்லிங் வச்சிருக்காங்க?’ என்றாள் திடீரென்று.
பேப்பரிலிருந்து பார்வையை விலக்கி அவளைப் பார்த்தேன். என் பதிலுக்காக புன்னகையோடு காத்திருந்தாள்.
சில நிமிடங்கள் யோசித்து என் மூளையில் ஒன்றும் பிடிபடாமல், ‘அத அந்த இங்கிலீஷ்காரன்கிட்டேதான் கேட்கணும். உனக்குத் தெரிந்தால் நீயே சொல்லு..’ என்றேன் சிரித்துக் கொண்டே.
அவள் சிறிது மமதை கலந்த வெற்றிப் புன்னகையோடு, ‘யார் எதைச் சொன்னாலும் ‘எஸ்’ஸ¤ன்னு காரணம் காரியம் தெரியாம செய்யக் கூடாது. அது ‘ஏன்’, ‘எதுக்கு’ ‘எப்படி’அதாவது ‘why ன்னு கேட்டுத் தெரிஞ்சு செய்யணும். அதுக்-
குத்தான், ‘வை’ ன்னு முதல் எழுத்து கொடுத்து, அதையும் ‘எஸ்’ என்ற எழுத்தையும் இணைக்க இடைச் செருகலா ‘ஈ’ என்ற வவ்வலையும் கொடுத்திருக்காங்க. அதனால்தான் அதன் ஸ்பெல்லிங் ‘வை-ஈ-எஸ்” என்று சொன்னாளே
பார்க்கலாம்.
‘ஒருகால் உண்மையில் அதுதான் காரணமாக இருக்குமோ’ என்று யோசிக்க ஆரம்பித்தேன்.
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
கொஞ்சம் சிரித்து வையுங்க பாஸ்:
கண்ணாடிலே படலே!
‘ஆமா.. நார்மலா ப்ரூ·ப் படிச்சிட்டு கண்ணுலே ஒரு
தப்பும் படலே’ன்னு சொல்வாங்க… ஆனா ஏன் அந்த
ப்ரூ·ப் ரீடர் ‘கண்ணாடிலே ஒண்ணும் படலே’ன்னு
சொல்றார்..!?’
‘ஓ அதுவா.. அவர் மூக்குக் கண்ணாடி வழியா ப்ரூ·ப்
பார்த்தார் இல்லையா… அதுதான்…!’