ஓயிட் காலர் வேலை – கோவில்பட்டி கு மாரியப்பன்

 

Bank manager hi-res stock photography and images - Alamy

வங்கிக்கு வந்திருந்த வாடிக்கையாளர்களைப் பேசி அனுப்பிவிட்டு சோனல் ஆபீஸ் தபால்கவரைப் பிரித்தேன். ஒரு கணம் என்னால் நம்ப முடியவில்லை. ஆச்சரியம் ஒருபக்கம்! கை லேசாக நடுங்கியது.

பதவி உயர்வுக்கு ஆசைப்பட்டு தேர்வுக்குப் போக சீனியர் மேனேஜராகப் பதவி உயர்வு. இன்று கையில் இடமாறுதல் உத்தரவு. கோயமுத்தூர் வந்து ஒருவருடம் முடியும்முன் பதவி உயர்வும்ää இடமாறுதலும்.

மனம் பின்னோக்கி நகர்ந்தது.

கல்லூரியில் எம்.எஸ்.ஸி படிக்கும்போது அப்பா காலமாகிவிட்டார். வேலை பார்த்ததால் அம்மாவுக்கு பென்ஷன் வந்தது.

என் கூடப்பிறந்த அண்ணணுக்கு பெங்களுரில் ஐ.டி. கம்பெனியில் வேலை. உடன் வேலைபார்த்த பெண்ணையே விரும்பிக் கட்டிக்கொண்டார்.

கொஞ்ச நாளில் அமெரிக்காவுக்குச் சென்று குடும்பத்துடன் செட்டில் ஆகிவிட்டான்.
என்னைவிட ஐந்து வயது மூத்தவன். இந்தியா வந்தால் மாமனார் வீட்டில் வந்து இறங்குவான்.

அமெரிக்கா திரும்பும் போது ஒருநாள் எங்களைப் பார்க்க வருவான்.

எனக்குப் படித்தவுடன் வங்கியில் தேர்வு எழுதி வேலை கிடைத்தது. சென்னையிலேயே வேலை என்பதால் பழைய வீட்டிலேயே நானும் அம்மாவும். வாடகை வீட்டுதான் என்றாலும் நீண்ட வருடங்கள் அங்கு வாழ்ந்ததால் ஒரு பாதுகாப்பை உணர்ந்தோம்.

திருமணப்பேச்சு வந்தது.

பையனின் அப்பா என் அம்மாவுக்கு தூரத்து சொந்தம். பையனின் அம்மாää அப்பா இப்போது இல்லை. அப்பாவின் தம்பி சித்தப்பா சித்திதான் பெரியவர்கள்.

பையன் போஸ்டல் டிபார்ட்மென்டில் நல்ல பதவி. சென்னையில் உத்தியோகம்.
அம்மா சம்மதம் கேட்டாள். சரியென்று சொல்லிவிட்டேன்.

திருமணத்திற்குப் பிறகு அம்மா எங்களோடு என்று திருமணத்திற்கு முன்பே பேசிவிட்டேன். அன்புக்கும் பாசத்திற்கும் ஏங்குபவர் என்பது திருமணத்திற்கு பிறகு புரிந்தது.
என் கேபின் கதவு தட்டப்படும் சப்தம்.

அஸிஸ்டண்ட் பிராஞ்ச் மேனேஜர்(எ.பி.எம்) வந்தார்.

விஷயத்தைக் கூறினேன்.கிளையை அவரிடம் ஒப்படைத்துவிட்டு கிளம்புமாறு உத்தரவு.

ஜாயினிங் டயத்துக்கு விண்ணப்பித்து விட்டு புதிய இடம் குளத்துப்பட்டு என்ற பெரிய கிளைக்கு மேனேஜராகப் போட்டதால் அங்கு வீடு பார்த்தோம்.

பாங்கில் மேனேஜர் என்றாலே பொதுவாக வாடகைக்கு வீடு உடனே கிடைக்கும். மாதா மாதம் வாடகை கேட்காமல் வந்துவிடும் அல்லவா!.

ஜாயினிங் டயத்தில் கோயமுத்தூர் வீட்டைக் காலி செய்து வீட்டு சாமான்கள் கொண்டு செல்ல லாரி ஏற்பாடு செய்திருந்ததால் வீட்டுச் சாமான்களை ஒழுங்குபடுத்தினோம்.

என் கணவருக்கு கோயமுத்தூர் பிடித்துப் போய் விட்டதால் மாறுதல் என்று சொன்னவுடன் கோபம். என் மாறுதலுக்கு அட்ஜஸ்ட் செய்து அவருக்கு இடமாறுதல் வாங்குறார். எத்தனை முறை இடமாறுதல். அவர் பொறுமையைச் சோதிப்பது போல் உணர்ந்தார்.

பதவி உயர்வுக்காக இப்படிப் பெட்டியைத் தூக்கிகிட்டுக் காலம் பூராவும் அலைய முடியுமா?. பையன் படிப்பு வருடத்திற்கு ஒரு ஊர் என்றால் எப்படிப் படிப்பான்?.

எங்களைச் சென்னையில் உள்ள நம்ம வீட்டில் விட்டுவிடு நான் அங்கு டிரான்ஸ்பர் வாங்கிக்கிறேன். நீ பதவி உயர்வுடன் சுத்திவா. எனக்கு இப்பவே இடுப்புவலியும் முழங்கால் வலியும் தாங்க முடியவில்லை. வயதான என் சித்தி தனியாக உள்ளார். அவரைக் கூட்டி வந்து விடுகிறேன் எங்கள் சாப்பாட்டுக்கு. நம்மளை மாதிரி சென்னையில்; கடன்வாங்கி வீடுகட்டிப் பக்கத்திலிருந்தவர்கள். பதவி உயர்வுன்னு போகாம அங்கேயே இருந்தால் அலைச்சல் இல்லை. பெட்டியை தூக்கிட்டு ஊர் ஊராகச் சுத்தாமல் நிம்மதியாக ஓரே தண்ணீயைக் குடிச்சிக்கிட்டு இருக்காங்க. அவங்க புள்ளைகளும் ஓரே இடத்தில் படிக்கிறாங்க.

உனக்கு பதவி உயர்வால் வர்ற கூடுதல் சம்பளம் எல்லாம் அலைச்சல்ல காலியாகிப் போகுது.
முதல்ல பையன் படிப்பை நினைச்சிப்பாரு. ஓரே பள்ளிக்கூடத்தில் படிச்சா சூழ்நிலை கூடப்படிக்கிறவங்களோட போட்டிப் போட்டுப் படிக்கிற மனசு எல்லாம் இருக்கும்.
நம்மபிள்ளை கால்வச்சி நெலைச்சி நிக்கிறதுக்குள்ளே அடுத்த ஊருக்குன்னா அவன் எப்படிப் படிப்பான்;?. உனக்கு உன் ஆபீஸ்தான் முக்கியம்னா என்ன செய்வது? மனத்தில் உள்ளதைக் கொட்டித் தீர்த்தார்.

காலம் கடந்த புலம்பல் என்பதால் நான் பதில் பேசவில்லை. அவ்வப்போது இது வெளிப்படும். வீணாவாக்குவாதம்தான் மிஞ்சும். கொஞ்ச நேரம் புலம்பிவிட்டு அமைதியாகிவிடுவார். என்ன செய்யறது?.

பேய்க்கு வாழ்க்கைப்பட்டால் முருங்கை மரம் ஏறமுடியாதுன்னு சொல்ல முடியுமா?. அவருக்கும் இது தெரியும்.

ஜாயினிங் டயம் எடுத்து வீட்டைக் காலி செய்து சாமான்களைக் கொண்டு செல்லமுதலில் கேஸ் சரண்டர் பண்ண ஸ்கூட்டியில் கேஸ் ஏஜென்ஸிக்குப் போகும்போது ராங்சைடில் எதிரில் வந்த பைக்காரர் செல்போனில் பேசியபடி எங்கோ பார்த்துக் கொண்டு வந்து மோதினார்.
நானும் எவ்வளவோ ஒதுங்கியும் வாய்க்கால் ஓரத்தில்போய் வண்டியோடு விழுந்தேன். காலில் பலத்த அடி. வலி தாங்கமுடியவில்லை.

வீட்டுக்காரர் இந்நேரம் பார்த்து ஆடிட் என்று வெளியூர் சென்றுவிட்டார். நாளைத்தான் திரும்புவார்.
மோதியவர் பயந்துபோய் ஓடிவந்து “திருதிரு”வென்று முழித்துக் கொண்டிருந்தார். கொஞ்ச வயசுப் பையன். “சாரி மேடம்” என்று அழாத குறையாக மன்னிப்புக் கேட்டார்.

“என்ன செய்ய? மோதியாகிவிட்டது. விழுந்தாகிவிட்டது”. இனியாவது திருந்தினால் சரியென்று நினைத்துக் கொண்டு அவரைக் போகச் சொல்லிவிட்N;;டன்.

பக்கத்தில் நின்றால் இன்னும் கொஞ்சம் நமக்குதான் பிரஷர் ஏறும். கூட்டம் கூடிவிட்டது.

கேஸ் சிலிண்டரை ஆட்டோக்காரர் பின்னாலேயே கொண்டு வந்ததால்ää சிலிண்டரை மீண்டும் வீட்டின் வராண்டாவில் வைத்துவிட்டு ஆஸ்பத்திரிக்கு வரச் சொன்னேன். அம்;மா கதவை உள்ளே தாள்போட்டுக் கொண்டு இருப்பாள்.

நான் வேற ஒரு ஆட்டோவில் பழக்கமான ஆஸ்பத்திரிக்குச் சென்று “எக்ஸ்ரே” எடுத்துப் பார்த்தால் லேசான எலும்பு முறிவு. ஒரு வாரத்தில் சரியாகிவிடும் என்று கட்டுப்போட்டுää ஊசிப்போட்டுää மாத்திரைகளை எழுதிக் கொடுத்தார்கள்.

வண்டிக்கு அதிகம் சேதம் இல்லையாம். பைக்கை அருகிலிருந்த தெரிந்தவர் ஒருவர் பிராஞ்சில் விட்டுவிட்டார்.

பையனை ஒரு வாரத்திற்குள் கூட்டி வருவதாகப் பள்ளியில் பர்மிஷன் வாங்கியிருந்தோம். முதலிலேயே டி.சி.வாங்கி லீவுபோட்டு வீடு பார்க்கக் குளத்துப்பட்டு சென்றபோது பள்ளிக்கூட அட்மிஷனையும் முடித்துவிட்டு வந்திருந்தோம்.

பையன் ஒன்பதாம் வகுப்பு என்பதால் கொஞ்சம் கெஞ்சித்தான் அட்மிசன் கிடைத்தது. அந்த பிராஞ்ச் கேசியர் பையன் அங்கு படித்ததால் அவரும் கூட வந்து உதவினார்.

“நீங்க இன்ஸ்சூரன்ஸ் போட்டிருப்பாங்க வண்டிக்கு வேற சேதாரம். அவங்கக்கிட்ட நஷ்டஈடு கேட்க முடியாதா?.” பக்கத்திலிருந்தவர் கேட்டார்.

நான் அடிபட்டுää வலியால் ஆஸ்பத்திரி போயி மருத்துவம் பார்க்கனும். வண்டியை பிராஞ்சுக்குக் கொண்டுவிட்டதால் வங்கி நண்பர்கள் ஓர்க்ஷாப்புக்கு போன் செய்து வண்டியை சரிபண்ணிவிடுவார்கள். இதில் இன்ஸ்சூரன்ஸ்காரர்களை வரச் சொல்லி போட்டோ எடுத்து அவர்கள் பார்மாலிட்டியை முடித்துää நான் எப்போது ஆஸ்பத்திரிக்கு போவது?.

உடம்புக்கு சரியானதும் புது இடத்துக்கு கிளம்ப வேண்டும். வேறு வேலையில் அலைய முடியாது. மெடிக்கல் சர்டிபிகேட்டுடன் லீவுக்கு விண்ணப்பித்தேன். ஆயிற்றுää பத்துநாட்கள் வேகமாக ஓடிவிட்டன.

காலில் சிறிய வலி இருந்தாலும் சமாளித்து வீட்டுச்சாமான்களுடன் வந்து குளத்துப்பட்டு வந்தோம். லாரி சாமான்கள் வந்து சேர. இறக்கிவிட்டு வீட்டுக்காரர் திரும்பிவிட்டார்.

இரண்டு நாளில் ரிலீவ் ஆகிவருவார்.

கேஸ் கனெக்ஷன் வாங்கியாகிவிட்டது.

அப்பாடா! இனி என் வீட்டுக்காரர் புலம்பிக் கொண்டே சாமான்களை அடுக்கிவிடுவார். ஒவ்வொரு முறையும் இதுதான் கதை.

இன்றுதான் ஆபிஸ் வந்தேன். அஸிஸ்;டண்ட பிராஞ்ச் மேனேஜர்(எ.பி.எம்) வந்து இரண்டுவாரத் தபால்களைக் கிளிப்பில் போட்டுக் கையில் கொடுத்தாh.

இரண்டு வாரத்தில் நடந்த நிகழ்வுகளையும் சங்கடங்களையும் சமாளித்தவிதத்தையும் விவரித்தார்.
பாரத்தை இறக்கிய நிம்மதியுடன் “மேடம் நீங்க வந்தவுடன் சோனல் மேனேஜர் பேசச் சொன்னார்” என்றார்.

பேசினேன்.

“ மேடம் ஆக்ஸிடெண்ட்ன்னு சொன்னாங்க சரியாகி நல்லாயிருக்கீங்களா?

“ஆமாசார்”. கொஞ்சம் வலியிருக்கு பாத்துகிடறேன்சார்”

“அப்புறம் உங்க கிளை நெகட்டிவ்ல இருக்குஇ டெப்பாஸிட்டும் அட்வான்ஸ{ம் இறங்கிகிட்டே இருக்கு. இந்தக்காலாண்டில் என்ன பண்ண முடியும்னு சொல்லுங்கää அதோட வாராக்கடன் ஏறிக்கிட்டே போகுது.

உங்களை ஐத்தராபாத் சோனுக்கு அலாட் பண்ணியிருந்தாங்க உங்க பெர்பாமன்ஸ் பழைய பிராஞ்சில் நல்லா இருந்ததாலே இந்த சோன்லயே கேட்டு வாங்கிட்டேன். நல்லா பண்ணுங்க ஆல்தபெஸ்ட்”.

“சரிசார் முடிஞ்ச அளவுக்கு நெகட்டிவ்ல இருந்து வெளியே வரப்பாக்குறேன். அடுத்த காலாண்டுகளுக்குள் டார்கெட்களை அடைய எல்லா முயற்சியும் எடுக்கிறேன் சார்”
போன் கட்டானது.

எழுந்தேன்.

கால் வலி இருப்பதை உணர்த்தியது. கடிகாரம் மதியம் 12 மணியைத்தாண்டி ஓடியது.
காலையில் சாப்பிட வேண்டிய மாத்திரைகளைப் போட்டுக்கொண்டேன்.

போன் மணி அடித்தது.

டீ பையன் டீயை வைத்தான்.

தலைமை அலுவலகத்திலிருந்துதான் போன்.

“லீகல் டிபார்ட்மெண்டிலிருந்து பேசுறேன். சந்திரன் இண்டஸ்ட்ரீஸ் மேலே ஒரு வாராக்கடன் கணக்குக்கேஸ் கோர்ட்டில் இருந்ததே? இப்ப என்ன நிலைமை?”.

“சார் பைலைப்பார்த்துட்டு நானே கூப்பிடுறேன். நான் இன்னைக்குத்தான் புதுசா ஜாயின்பண்ணியிருக்கேன் சார்”.

ஏ.பி.எம்மிடம் கேட்டேன் பைலைக் கொடுத்தார்.

நாலுவருஷத்துக்கு முன்னாலயே கோர்ட்டுக்கு வெளியில் கடன் முகாமில் கடன் தீர்வுகண்டு கணக்கு முடிக்கப்பட்டிருந்தது.

தலைமை ஆபீஸ்க்கும் சோனல் ஆபீஸ்க்கும் கணக்கு முடிந்த விவரம் தெரிவிக்கப்பட்ட விவரமும் இருந்தது.

லீகல் டிபார்ட்மெண்ட்டுக்குப் போன் செய்து விவரங்களைக் கூறினேன்.

“சரி இன்னைக்குத் தனிக்கவரில் முந்தைய கடிதங்களை ஜெராக்ஸ் எடுத்து விவரமாக எழுதி அனுப்பியிருங்க ரொம்ப அவசரம் புதுசாவந்த ஜெனரல் மேனேஜர் கேட்கிறார்”. என்றார்.
போனை வைத்துவிட்டு எழுந்தேன்.

மீண்டும் போன். சோனல் ஆபீஸிலிருந்து

“தலைமையகத்திலிருந்து போன் வந்தது. சந்திரன் இண்டஸ்ட்ரீஸ் என்கிற கணக்கு பற்றிக்கேக்கறாங்க உடனே பதில் எழுதுங்க அனுப்புற பதிலில் ஒரு காப்பி எங்களுக்கு அனுப்பி வைங்க இன்னைக்கே பதிலை அனுப்பனும்”.

“உடனே அனுப்புகிறேன் சார்”. ஜெராக்ஸ் எடுக்க பேப்பர்களைப் பிரித்தேன்.

டீ யைத்தொட்டுப் பார்த்தேன் ஆறிவிட்டது. குடிக்க முடியாது.

தலைமை அலுவலகத்திற்கு கடிதம் எழுதி சோனல் ஆபீஸ்க்கு காப்பி போட்டுப் பழைய கடிதங்களின் நகலுடன் அனுப்பிவிட்டு உட்கார்ந்தேன்.

“மேடம்” ஒருவர் கும்பிடுபோட்டு நின்றார்.

“என்னங்க”

மேடம் நான் பழைய மேனேஜர் இருக்கும் போது “தொழில் விரிவாக்கம் பண்ண “கண்ணன் இண்டஸ்ட்ரீஸ்” என்ற பெயரில் ரூ.10 லட்சம் லோன் கேட்டிருந்தேன். இங்கிருந்து எல்லாம் அனுப்பிட்டதாகச் சொன்னார். சோனல் ஆபிஸிலிருந்து இன்னும் சாங்ஷன் வரலை” என்று சொன்னார்.

“சரிசார்  கொஞ்சம் இருங்க சோனல் ஆபீஸில் கேட்டுக் சொல்கிறேன்”.

போன் மணி அடித்துக் கொண்டேயிருந்தது.

மணி ஒன்று நாற்பது.

சாப்பாட்டு நேரமாக இருக்கலாம்.

“வெளியில் உட்காருங்க கேட்டுச்சொல்றேன். சுகர் லெவல் குறைந்துவிட்டிருந்தது.
லேசான நடுக்கம். ரெண்டு பிஸ்கட் கடலை மிட்டாய் சாப்பிட்டுத் தண்ணீர் குடித்தேன்.
சாக்லேட்டை மென்றேன்.

கஷ்டமர் வெளியில் உட்கார்ந்தார் .

எப்படியாவது பதிலைப்பெற வேண்டுமென்ற உறுதியோடு. மணி இரண்டே கால்
போன் பண்ணினேன்.

“சார் நான் குளத்துப்பட்டு மேனேஜர் பேசறேன் அட்வான்ஸ் செக்ஷன்ல பேசனும்” என்றேன்.

“அவரு புதுசா வந்திருக்கார் ஜாயினிங் டயத்துல இருக்கார். ஒருவாரம் கழித்துப் பேசுங்க”
வாடிக்கையாளரிடம் நிலைமையை எடுத்துச் சொன்னேன்.

கடுப்புடன் போலியாகச் சிரித்தார்.

போய்விட்டார்.

மீண்டும் போன் சத்தம்.

சோனல் மேனேஜர் லைனில் வந்தார்.

“உங்க கிளையிலேயே வாரக்கடன் வசூல் ரொம்ப மோசமாயிருக்குன்னு ரெக்கவரி ஜி.எம் வெரட்டுரார். என்ன செய்வீங்களோ இன்னைக்கு வாரக்கடன் கணக்குகள்ள வசூல்காட்டுங்க. நீங்க வெளியே கிளம்புங்க. மாலை 6 மணிக்கு எனக்கு எவ்வளவு வசூல்ன்னு சொல்லனும். ஒருவாரத்துக்கு மத்தியானத்துக்குப்பிறகு வாராக்கடன் கணக்குகள்ள வசூலுக்குக்கிளம்பீடுங்க.
அப்புறம் நாளை மதியம் 1 மணிக்கு சோனல் ஆபீஸில் மீட்டிங் இருக்கு. வாராக்கடன் கணக்குகள் பற்றி விரிவான விவரங்களோட வாங்க”.

சாப்பிட்டு டப்பாவை எடுத்துக்கொண்டு டைனிங் டேபிளுக்கு வந்தேன். கடைநிலை ஊழியர் வேகமாக வந்தார்.

“மேடம் சோனல் ஆபீஸிலிருந்து உங்களைக் கூப்பிடுறாங்க”

போனை எடுத்தேன்.

“தலைமை ஆபிஸ்லிருந்து அவசரமாக ஒரு விவரம் கேக்கறாங்க. நீங்க உடனே எல்லா கிளையிருந்து விவரம் சேகரித்து 4 மணிக்குள்ள சோனல் மொத்தத்துக்கும் அனுப்பனும். குறித்துக்கோங்க.” என்று சொல்லி அனுப்ப வேண்டிய விவரங்களை பட்டியலிட்டார்.

கண்ணைக் கட்டிக்காட்டில் விட்டதுபோல் இருந்தது. அவர் கேட்ட விவரங்களைச் சேகரிக்க குறைந்தது ஒரு நாளாகும்.

ஒரு மணிநேரத்துக்குள் எப்படிக் கொடுப்பது?.

அவசர அவசரமாக பைல்களைப் புரட்டினேன். கிடைத்ததை வைத்து எழுதி வைத்தேன்.

மூன்றறை மணிக்கு போன். விவரங்களைப் படிக்கும்படி கூறினார்.

முடிந்ததும் டைனிங் டேபிளுக்கு நடந்தேன்.

டப்பாவை திறந்தேன். சாப்பாட்டில் ஒருமாதிரியான வாடை.

சாப்பிட மனமில்லை. காலையில் 8 மணிக்கு சமைத்தது. அம்மா சமையல். குப்பையில் தட்டி விட்டேன்.

வீட்டுக்குக் கொண்டு சென்றால் அம்மா வருத்தப்படுவார்.

டீ பையன் டீ வைத்தான். மீண்டும் கொஞ்சம் பிஸ்கட்டும் கடலை மிட்டாய்களும். டீயைக் குடித்தேன். உயிர் வந்தது போல் இருந்தது. பசி அடங்கிவிட்டது.

மணி 4. இந்த நேரத்தில் எங்கேயும் சாப்பாடு கிடைக்காது. எங்கும் பரோட்டாதான்.

பையன் ஸ்கூல் பஸ்ஸில் வந்துவிடுவான். அம்மா பார்த்துக் கொள்வார்.
முகத்தைக் கழுவிவிட்டு வாராக்கடன் கணக்குள்ள பட்டியலுடன் உள்ளுர்காரரான கடைநிலை ஊழியரை முன்சீட்டில் உட்கார வைத்துக் கொண்டுää அவர் வழிக்காட்ட டாக்ஸியில் கிளம்பினேன்.

பெயரும் விலாசமும் படித்தேன்ää ஆட்கள் அவருக்கு தெரிந்திருந்தது. 6 மணிக்குள் வாராக்கடன் வசூலை முடித்துதிரும்ப வேண்டும். வசூலை ரிப்போர்ட் செய்ய வேண்டும். வழியில் டீக்கடையில் வண்டியை நிறுத்தி டீ சாப்பிட்டோம். 6 மணிவரை தாங்க வேண்டுமே.

என் கால்வலிக்கான மத்தியானம் சாப்பிட வேண்டிய மாத்திரை பையில் பத்திரமாக இருந்தது.

நல்ல வேளை நாளை சோனல் ஆபீஸ் மீட்டிங் ஞாபகத்துக்கு வந்தது.

காரில் போகும்போதே எ.பி.எம்-மிடம் வாராக்கடன் கணக்குகள் பைல்களை என் மேஜையில் அடுக்கி வைத்துவிட ஏற்பாடு செய்யச் சொன்னேன்.

ரெக்கவரி முடிந்ததும் ஆபிஸ்க்குப் போய் பைல்களை வீட்டுக்கு எடுத்துச் சென்று படித்துக் குறிப்பு எடுக்க வேண்டும்.

காலையில் ஆபீஸ் போனால் அதைத் தொடமுடியாது. மறுபடியும் 11 மணிக்கு சோனல் ஆபீஸ் கிளம்ப வேண்டும். அம்மாவுக்கு போன் பண்ணி சாதம் வைக்கச் சொன்னேன்.

“டிபன்தானே சாப்பிடுவாய்”

“இன்னைக்கு நிறைய வேலை நிறைய பசி. அதனால் சாப்பாடு வேணும். வரலேட்டாகும்”

“சரிம்மா”

அம்மாவுக்கும் பழகிப்போச்சி.

2 responses to “ஓயிட் காலர் வேலை – கோவில்பட்டி கு மாரியப்பன்

  1. வங்கி வேலை எவ்வளவு கஷ்டம், பிள்ளைகள்படிப்பு, கணவனின்கோபம், பதவி உயர்வில் அவரவர் நிலை யதார்த்தமான முறையில் வடிவமைக்கப்பட்ட சிறுகதை

    Like

    • உடல் நலக்குறைவுடன் குடும்பத்தையும் கவனித்து அலுவகத்தில் பணிபுரிந்து மேலதிகாரிகளிடம் நற்பெயருடன்
      நேரத்திற்கு உணவுகூட அருந்த முடியாமல் தன் ஒரே பையனின் எதிர் காலத்தை மனதில் வைத்து. வாழும் ஒரு பெண்ணின் கதையை பாராட்டிய திரு. ரங்கராஜன்
      அவர்களுக்கு நன்றி! கு. மாரியப்பன்

      Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.