சிவசங்கரி- குவிகம் சிறுகதைத் தேர்வு – டிசம்பர் 2022 – சாந்தி ரசவாதி
சிவசங்கரி-குவிகம் சிறுகதைத் தேர்வில் டிசம்பர் 2022
மாதத்திற்கான என்னுடைய தேர்வு
முதல் இடத்திற்கு உரிய சிறுகதை
“சாமி போட்ட பணம்”
எழுதியவர் ஆர்னிகா நாசர்
தினமலர் வாரமலர் 4 டிசம்பர் 2022
—————————————————————————————-
முதல் பரிசு வாங்கிய கதையைப் பற்றி:
படிப்பறிவில்லாத பாமரன் மண்டை கசாயம் என்பவரின் கணக்கில் தப்பாக இருப்பு வைக்கப்பட்ட அரசாங்கப் பணம் மூன்று கோடி ரூபாய் எப்படி செலவானது ஒரு வித்தியாசமான கற்பனை
வங்கி மேனேஜரும் அந்த பணத்தின் உரிமையாளருமான அரசாங்க காண்ட்ராக்டர் வந்து மண்டை கசாயத்தை சாம பேத தான தண்ட முறையில் பணத்தை வசூல் செய்ய முயற்சிக்க மண்டை கசாயம் அந்த பணத்தை கிருஷ்ணாபுரம் கிராமத்து இளைஞர்களுக்கு பிரித்துக் கொடுத்து ஜே சி பி யால் கருவேல மரமகற்றும் பணியும் தார் ரோடு போடும் பணியும் குளங்களை தூர் வாரும் வேலையும் நடந்து கொண்டிருப்பதாக கூறி கை விரிக்கிறார் இந்த பணம் அரசாங்க காண்ட்ராக்டர் இடம் சென்றிருந்தால் ஒரு வேலையும் நடந்திருக்கப் போவதில்லை. நடந்ததாக கணக்கு மட்டுமே காட்டப்படும்.
தொட்டதற்கெல்லாம் வரி விதித்து ஒரு ரோடு கழிவு நீர் வடிகால் குப்பை ஆளுமை என்று எதையும் சரியாக பராமரிக்க தெரியாத கையாலாகாத அரசாங்கத்தையும் ஓட்டு போட்ட நம் கையறு நிலையையும் நினைத்து நீறு பூத்த நெருப்பாக இருக்கும் நம் கோபத்திற்கு ஆறுதலாக ஒரு வடிகாலாக இந்த கதை
மற்றும் ஒரு பெரிய தொகை கணக்கில் வைப்பு வைத்திருப்பதாக வந்த குறுஞ்செய்தி உடன் இந்த கதையை நிறைவு பெறுகிறது
கதை எழுதிய ஆர்னிகா நாசர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் இந்த கதை மிக எளிய நடையில் இயல்பாக இருக்கிறது
மற்றும் சில கதைகள் தேர்வுக்காக பரிசீலிக்கப்பட்ட வை கீழே
1. உணர்வின் எல்லைகள் எழுதியவர் கே ஜி ஜவகர் – டிசம்பர் பூபாளம் பத்திரிகை
ஒரு சிறுகதையை சினிமா மாதிரி கண் முன்னே விரித்து இருக்கிறார். சினிமா சான்ஸ் தேடி ஊரை விட்டு ஓடி வந்த பெண் திக்கற்று இரவில் ரவுடிகளால் துரத்தப்படும் பொழுது நமக்கு திக் திக் என்கிறது. அவளை, தசமதியை சமயோசிதமாக காப்பாற்றி ஒரு வீட்டு வாசலில் கொண்டு சேர்க்கும் இளைஞன் வேலன்.
தசா கலக்கத்துடனும் சந்தேகத்துடனும் எதிர்கொள்ளும் அந்த வீடும் அதில் இருந்த பெண்ணும். ஆனால் நல்ல விதமாக அந்த வீட்டு பெண்ணின் பெற்றோர்கள் கதாநாயகியை அவள் ஊருக்கு அனுப்ப ஏற்பாடு செய்கிறார்கள்.
உறங்கிக் கொண்டிருக்கும் அந்த வீட்டுப் பெண்ணின் கையில் வேலன் என்று பச்சை குத்தி இருக்கிறது
சினிமா உலக அபலைகளின் அவலம் இருள், பயம், மனிதநேயம், மென்மையான காதல் எல்லாம் அழகாக வெளிப்படுகிறது வர்ணனைகள் கச்சிதமாக பொருந்துகிறது உதாரணத்திற்கு புளிய மரத்தின் பின்னால் இருந்து பயத்துடன் வெளிப்படும் பெண் மேகத்திலிருந்து மெல்ல வரும் நிலவு போல் என்று குறிப்பிடுவது. வாழ்த்துக்கள்
2. எதுவும் என்னுடையது அல்ல ஜே பாஸ்கரன் – 22 12 22 பூபாளம் பத்திரிகை
ராஜ்ய பாரத்தினால் சலிப்படைந்த அரசன் எல்லாவற்றையும் விட்டு விடுதலையாகி நிற்க குருவைத் தேடி வந்தான். குருவின் யோசனைப்படி ராஜபாரத்தை அவருக்கு தாரை வார்த்து கொடுத்து மகிழ்கிறான்.
வேலை தேடி செல்லும் அவனுக்கு அந்த ராஜ்யத்தை நிர்வாகம் செய்யும் வேலை தகுந்த சம்பளம் என்று குரு நிர்ணயிக்கிறார்.
அதே ராஜ்ய வேலைகளை அவன் ராஜாவாக இல்லாமல் ஊழியனாக நிறைவேற்றும் பொழுது நிம்மதியாக கவலை அற்றவனாக உணர்கிறான் எவ்வளவு உயர்ந்த தத்துவம். எல்லாமே மனம் செய்யும் மாயை. அதை மிக அழகாக கதையாக வடித்திருக்கிறார் வாழ்த்துக்கள்
3 இன்னொரு வானம் எழுதியவர் சங்கரி அப்பன் கல்கி இதழ் 22 12 21
எமிலி டிக்சன் அவர்களின் வரிகளில் , “இன்னொரு வானம் இருக்கிறது உனக்காக, எப்போதும் அமைதியாக அழகாக இன்னொரு சூரிய வெளிச்சம் இருக்கிறது நீ எப்போது வேண்டுமானாலும் இளைப்பாற வரலாம்”
தந்தையிடமிருந்து இந்த வரிகளின் பொருளை உணர்ந்த கதாநாயகி.
தன் மூத்த மாப்பிள்ளை மூலம் படும் வலிகளுக்கு மருந்து போடுவது போல அமையும் இரண்டாவது மாப்பிள்ளை அவளுக்கு மேற்கண்ட வரிகளை நினைவுபடுத்துகிறது சிறந்த கதை
4. அதெல்லாம் ஒரு சுகம் எழுதியவர் மயிலாடுதுறை ராஜசேகர் கல்கி பத்திரிகை
மாமனார் மாமியார் வருகை அதற்கு மருமகளின் வழக்கமான பிரதிபலிப்பு, சலிப்பு. மாமனாரின் இயல்பான குணமான வாயில்லா ஜீவன்களுக்கு உணவளிக்கும் பழக்கத்தை சாடும் மருமகள். இதைத் தாண்டி பையனின் தீர்மானமான சேவை பெற்றோருக்கு
மாமனாரின் பரோபகாரம் நற்பண்புகளால் மருமகள் மனம் மாறுவது, அவர்கள் தன்னுடன் தங்க விருப்பம் தெரிவிப்பது. ஆனால் அவரை நம்பி உணவுக்காகவும பாசத்துக்காகவும் ஊரில் இருக்கும் பிராணிகள் பறவைகள் இவைகளை நினைத்து திரும்பச் செல்ல முடிவு செய்யும் பெற்றோர்கள்.
சிறந்த கதை
5. அப்போதும் அவள் கருவுற்று இருந்தாள் எழுத்தாளர் லட்சுமி சரவணகுமார் – டிசம்பர் அந்தி மழை பத்திரிகை
ஒரு விழிப்புணர்வு கதையாக இது நம்மை கவர்கிறது -கலக்கமடையச் செய்கிறது.
முதல் குழந்தையின் மருத்துவ செலவுக்காக ஊர் விட்டு ஊர் வந்து பணத்துக்காக யாருடைய குழந்தயையோ சுமந்து வேதனை பட்டு பெற்ற குழந்தையைக் கூட பார்க்க முடியாமல் கவர்ந்து செல்லும் பயாலஜிக்கல் பெற்றோர். கையெழுத்துப் போட்ட பணம் என்ன ஆயிற்று என்று தெரியாத அறியாமை. நடுவில் விளையாடும் ஏஜெண்டுகள்.
மீண்டும் மீண்டும் எதிர்பார்ப்புடன் அவள் அப்போதும் கருவுற்றிருக்கிறாள் என்று முடியும் ஒரு கொடுமை.
இந்த வாடகை தாய் வியாபாரத்தை வெளிச்சம் போட்டு காட்டி இருக்கிறார் எழுத்தாளர் வாழ்த்துக்கள்
6. அதிதி எழுத்தாளர் விஜி ரவி 22 12 கல்கி பத்திரிகை
வழக்கமான அதிருப்தி இளைய தலைமுறை மீது, சாமி கும்பிடுவதில்லை, வீட்டுக்கு வந்த அதிதி பெரியவர்களுக்கு மரியாதை தருவதில்லை, எப்போதும் கணினி கைபேசி.
ஆனால் அந்த யுவதி பிருந்தா புறாவுக்களுக்கு தானியம், தெரு நாய்களுக்கு தயிர் சாதம், வெண்ணெய் சேர்த்து கோப்பையில் தண்ணீர் பறவைகளுக்கு, வண்டியில் அடிபடும் தெரு நாய்க்கு அரச வைத்தியம்.
கடவுள் படைப்பில் மனிதர்களைத் தவிர உள்ள ஜீவராசிகளை அதிதியாக கருதும் இந்த தலைமுறை கவனிக்கப்பட வேண்டியவர்கள் விஜி ரவி அவர்களுக்கு வாழ்த்துக்கள்
பதவி உயர்வு தட்டி தட்டி போகும் வருத்தம் கணவனுக்கு. கோயில் பயணத்திற்கு சுணங்குகிறான்
தான் கோயிலுக்கு கொடுத்த அளப்பரிய காணிக்கை பெற்றோர்களை அருமையாக பார்த்துக் கொண்டு கரை சேர்த்தது அவர்களது நினைவு நாட்களை முதியோர் இல்லத்தில் கொண்டாடுவது இதுபோன்ற தர்ம கணக்கை எடுத்துரைக்கிறான் இது எதுவுமே தனக்கு உதவி செய்யவில்லை என்று அங்கலாய்க்கிறான்
மனைவி அமைதியாக சுட்டிக்காட்டுகிறாள் ஏலச்சீட்டு நடத்திய நண்பர் இறந்ததும் அந்த மாத தவணை கட்டாமல் ஏமாற்றியது, வேலைக்காரி கன்னியம்மா புருஷனுக்கு தெரிந்த டாக்டரிடம் சிபாரிசு செய்யாமல் மெத்தனமாக இருந்து அவள் புருஷன் இறந்ததும் ஒரு உறுத்தல் இல்லாமல் உலா வந்தது இதெல்லாம் அவன் தர்மக்கணக்கை சூனியம் ஆக்கிவிட்டது என்று புரிந்து கொண்டு கோவில் பயணத்திற்கு கிளம்பத் தயாரானான்.
மக்கள் சேவை மகேசன் சேவை என்ற இந்த புது தர்ம கணக்கை புரிய வைத்த ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்.
சினிமா உலகின் குருவும் சிஷ்யனும் feature ஃபிலிம் படங்களை தேசிய விருதுக்காக அனுப்பி வைத்து முடிவுக்காக காத்திருக்கும் தருணம்.
விக்டர் நல்ல சிஷ்யன் சாதாரண மளிகை கடை சிப்பந்தியாக இருந்த அவனை செதுக்கிய குரு சூர்யா அவர் மேல் மதிப்பும் அவர் மனைவி வித்யா மேல் அளப்பரிய அன்பும் வைத்திருப்பவன்.
சிஷ்யர் விக்டருக்கு மிருக மனிதன் என்ற திரைப்படத்திற்காக சிறந்த இயக்குனர் சிறந்த பீச்சர் ஃபிலிம் விருதுகள் கிடைக்கின்றன குரு சூர்யாவின் படைப்பிற்கு விருது கிடைக்கவில்லை. தான் உருவாக்கிய கலைஞன் என்றாலும் அவன் மேல் பொறாமையுடன் இருந்த சூர்யாவின் கண்களை அவர் மனைவி வித்யா திறக்கிறாள். மிருக மனிதன் படத்தை பார்க்குமாறு தூண்டுகிறாள்.
ஒரு தனிப்பட்ட திரையீட்டில் சூர்யா விக்டர் குடும்பம் மட்டும் அப்படத்தை பார்க்கிறார்கள் மதுரையில் ஒரு காலகட்டத்தில் நடப்பதாக சொல்லப்பட்ட அந்த திரைக்கதை அவரை அறியாமல் அவரை கவர்கிறது. அந்த கதை எடுத்த விதம் அதன் முடிவு அதிலிருந்த கலைநயம் அவரை கரைய ச்செய்ய, ஒரு நல்ல கலைஞனின் உயரிய படைப்பு அவரது பொறாமை அழுக்கை கழுவி அவரை அமைதிப்படுத்துகிறது சிஷ்யனைத் தழுவி மனதாரப் பாராட்டுகிறார் மனிதர்களுடைய மிக இயல்பான பலவீனமான பொறாமை உண்மையான கலைக்கு அடிபணிந்து தோற்றுப் போகிறது அருமையான படைப்பு எழுத்தாளருக்கு வாழ்த்துக்கள்