இன்று ஏன் பல்லிளிப்பு? – சு. பசுபதி

என் நண்பன் நம்பி, அவன் மனைவி நங்கை, அவர்களுடைய குழந்தைகள் யாவரும் இருக்கும் வீட்டின் பெயர் ‘வெண்பா வீடு’;

இது என் வீட்டிற்கு அருகில்தான்  உள்ளது. எல்லோரும் அங்கே ‘வெண்பா’க்கள் மூலமாய்த்தான் பேசிக்கொள்வார்கள்.

ஒரு நாள்  ‘வெண்பா வீட்’டிற்குள் நுழையும் போது, நான் கேட்டது:

நம்பி:

முன்தூங்கிப்  பின்னெழுந்து(உ)ன் மூஞ்சிக்குச் சாயமிட்டுப்
பொன்னான நேரத்தைப் புத்தகத்தில் பாழாக்கி
மிஞ்சிடுமிவ் வேளையிலே வீண்வம்பு பேசாமல்
கொஞ்சம்நீ என்னுடன் கொஞ்சு.

‘அடடா, தப்பான நேரத்தில் வருகிறேனோ?’ என்று எனக்குத் தோன்றியது.

எனக்குப் பதில் சொல்வதுபோல் இருந்தது  நங்கை
நம்பிக்குக் கூறின பதில்:

நங்கை:

பண்பற்ற நண்பருடன் பாதிநாள் சீட்டாட்டம்;
கண்கெடுக்கும் தீயதொலைக் காட்சி சிலமணிகள்;
மின்னிணைய மேனகைகள் மீதிநாள் வீணடிக்க
என்னிடமின்(று) ஏன்பல் இளிப்பு ?

என்கையில் இருந்த சீட்டுக் கட்டை அவசரம் அவசரமாக மறைத்துக் கொண்டு, நான் வெண்பா வீட்டை விட்டு வெளியேறினேன்.

 

~o~0~O~0~o

One response to “இன்று ஏன் பல்லிளிப்பு? – சு. பசுபதி

  1. அருமை! அருமை! இறையடி சேர்ந்துவிட்ட தமிழ் ஆர்வலரே! உமது கவிதைகள் அனைத்துமினி அவனுக்கே அர்ப்பணமோ!

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.