சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவில் ராஜமவுலியின் ஆர் ஆர் ஆர் படத்தில் வரும் ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு விருது கிடைத்துள்ளது. பாடல் எழதிய கீரவாணி மற்றும் சந்திரபோஸ் இருவருக்கும் ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது.
இந்திய வரலாற்றில் முதன்முறையாக ஒரு இந்தியப் படத்தில் வந்த பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்திருக்கிறது. இதில் பாராட்டப்படவேண்டியவர்கள் இயக்குனர் ராஜமவுலி ,பாடல் எழுதியவர்கள் கீரவாணி & சந்திரபோஸ் , இசை கீரவாணி , நடித்தவர்கள் என் டி ராமராவ் ஜுனியர் & ராம் சரண், பாடியவர்கள் ராகுல் சிப்ளிகஞ் ,& காலா பைரவா , நடனம் அமைத்தவர் பிரேம் ராக்சித்
அதேபோல் முதன்முறையாக ஆவண குறும்படத்திலும் இந்தியா பரிசு பெற்று சாதனை நிகழ்த்தியுள்ளது.
சிறந்த ஆவண குறும்படம் (Best Documentary Short) பிரிவில் ‘The Elephant Whisperers’ விருது வென்றுள்ளது. தாயிடம் இருந்து பிரிந்து தவிக்கும் குட்டியானைகளை பராமரிக்கும் பழங்குடியின தம்பதியின் யதார்த்த வாழ்க்கையை மையமாகக் கொண்டு இந்த ஆவணப்படம் எடுக்கப்பட்டுள்ளது. முதுமலையில் எடுக்கப்பட்ட இந்தப்படத்தை இயக்கியவர் கார்த்திகி கோன்சால்வாஸ் . தயாரிப்பாளர் குனீத் மோங்கா !