தூரத்தே நெருப்பை வைத்து சாரத்தைத் தருவாய் போற்றி
காலங்கார்த்தாலயே என்ன வெய்யில், என்ன வேர்வை! என்று சொல்லிக் கொண்டே அப்பா காய்கறிப் பைகளுடன் உள்ளே வந்தார்.
‘வெயிலோடு விளையாடி, வெயிலோடு உறவாடி, வெயிலோடு மல்லுக்கட்டி ஆட்டம் போட்டோமே’ என்று சரவணன் பாட்டுப் பாடி அவரைச் சீண்டினான்.
“உங்க வயசுல நாங்களும் ஆட்டம் போட்டோமில்ல, அதுதான் இப்படி தோல் கருத்துடுத்து”
‘ஆமா, இல்லாட்டி பால் வெள்ளைதான் உன் அப்பா’, என்று தன் பங்கிற்குக் சேர்ந்து கொண்டாள் அம்மா.
“அம்மா, பால்ல சக்கரை போடலியா?” என்று கேட்டான் சரூ.
“இன்னிக்கி, சக்கரையும், உப்பும் கட்{“
“ஏம்மா, அப்ப என்னத்தச் சாப்ட்றது?”
“முளை கட்டினப் பாசிப் பயிறு, மலைப்பழம், பானகம் தான் இன்னிக்கு ப்ரேக்பஸ்ட். வெல்லம் சேத்துக்கலாம். 11 மணிக்கு நீர் மோர், உப்பில்லாம”
“அப்போ, லஞ்ச்?”
‘குளுகுளுன்னு தயிர்சாதம் மாதுள முத்தும், திராக்ஷையும் போட்டு. நோ தாளிச்சுக் கொட்டல், நோ சால்ட்’ என்றார் அம்மா.
“சாயந்த்ரம், ராத்திரிக்கு மெனு என்ன?” என்று உள்ளே வந்து கொண்டிருந்த சஞ்சய் கேட்டான்.
‘வாடா, வாம்மா பவானி. சாயந்த்ரம் நான் செஞ்ச பிஸ்கெட்டும், பாலும். ராத்திரிக்கு தேங்காய் அவல். சரூவுக்கு இப்பத்தான் குடுத்தேன். நீங்க பால் சாப்ட்றேளா?’
‘இப்பத்தான் குடிச்சுட்டு வந்தோம்.’ என்றாள் பவானி
“எனக்கு அரை கப் கொடுங்கோ” என்றான் சஞ்சய்.
பவானி சிரித்தாள்- ‘இவனுக்கு நாலு குடல்’
“ஆமா, ஆன்டி, ஏன் சால்ட், சக்கரையெல்லாம் இன்னிக்கிக் கிடையாதுன்னு சொன்னேள்?”
‘இன்னிக்கி சித்ரா பௌர்ணமி. சித்ரகுப்தன் பொறந்த நாள். அதுக்கான விரதத்துல உப்பு கூடாது. அவர் யார்ன்னு தெரியுமா?’
“எமனோட அஸிஸ்டென்டுன்னு அம்மா சொல்லுவா.”
‘கரெக்ட். நாம செய்யற நல்லது கெட்டதெல்லாம் இவர் தான் பதிவு செஞ்சு எமங்கிட்ட படிச்சுச் சொல்லுவார்.’
“சரூ, நோட் திஸ் பாயின்ட்” என்றார் அப்பா.
“அம்மா, இன்னிக்கி சந்த்ரக்ரஹணமும் கூட. ஆனா, இந்தியால தெரியாது. புத்த பூர்ணிமா கூட இன்னிக்குத்தான்.”
“கிரஹணம் எப்படி வரதுன்னு தெரியுமா?” என்றார் அப்பா.
‘சூர்யன், சந்திரன், பூமி இவாளோட சுழற்சியில ஒரு கோட்டுக்குள்ள வரும் போது இப்படி நடக்கும். பூமிக்கும், சூர்யனுக்கும் இடையில நிலா வரும் போது, பூமியோட சில பகுதிகள்ல சூர்யன் தெரியாமப் போயிடும் அது சூர்ய கிரஹணம். பூமியோட நிழல்ல நிலா நுழந்துன்னா அப்போ அது தெரியாமப் போகும், அது சந்த்ர கிரஹணம். ஆமா, ஆன்டி, சித்ரா பௌர்ணமிக்கான கதை ஒன்னும் இல்லையா?’
‘அது இல்லாமயா? இந்திரனுக்கும், ப்ரஹஸ்பதிக்கும் ஒரு வாக்குவாதம். இந்திரன், தன் குருவை அவமானப்படுத்திட்டார். அவர் சாபம் கொடுத்தனால நம்ம மதுரல இந்திரன் பொறந்து படாத பாடுபட்டு, அப்றம் சிவனைக் குறிச்சு தவம் செய்றார். கடம்ப மரத்தடிலேந்து சிவன், லிங்க ரூபமா வந்து இந்திரனுக்கு சாப விமோசனம் அளிக்கிறார். அந்த நாள் சித்ர குப்தனின் பொறந்த நாள். அவர் ஏட்டுல எழுதறது, சித்ர எழுத்து, ரகசியமானது- அதனாலத்தான் சித்ர குப்தன்னு பேரு. காஞ்சிபுரத்ல அவருக்கு ஒரு கோயில் இருக்கு. பால் பொங்கல் நைவேத்யம் செய்வா, நெறைய தாமர மால சாத்துவா.’
“இதையும் தெரிஞ்சுக்கணும், சைன்ஸ்சையும் தெரிஞ்சுக்கணும்’ எத்தன டைப் கிரஹணம் இருக்குன்னு நீ சொல்லு பவானி.”
‘அங்கிள், நாலு டைப். முழுசா மறையறது, ஒரு பாகம் மறையறது, மோதிரமா வளையமாத் தெரியற ஒன்னு, எல்லாம் கலந்த ஒன்னு.’
“குட், 2023ல விசேஷமான சூர்ய கிரஹணம் வந்துதே, அதப்பத்தி.”
‘நான் சொல்றேன் அங்கிள். இந்த வருஷம், ஏப்ரல் 20ம் தேதி ‘ஹைபிரிட்’ சூர்ய கிரஹணம் வந்தது. பூமில சில இடங்கள்ல மோதிர வளையமாத் தெரிஞ்ச அதுவே, இன்னும் சில இடங்கள்ல முழுசாவே மறைஞ்சது.’
‘ஏன் அப்படி?’
சரூ சொன்னான்: இதை பூமியின் ‘ஸ்வீட் ஸ்பாட்’ அப்படின்னு சொல்றாங்க. அமாவாசையின் நிலாவும், சூர்யனும் கிட்டத்தட்ட ஒரே அளவுல இருக்கும். நிலா, பூமிய விட்டு தொல தூரத்ல தென்பட்ற இடங்கள்ல, கிரஹணம் மோதிர வளையமாத் தெரியும். சந்திரனோட நிழல் பூமில மொத்தமா கவியறச்சே சூர்யன் முழுசா மறைஞ்சு அப்புறமாத் தெரியும்.
“ஆமா, அங்கிள், இத ஏன் அபூர்வம்னு சொல்றாங்க?”
“பூமியோட வளைஞ்ச பரப்புல, நிலாவோட நிழல் விழற கோணத்தைப் பொறுத்து, கிரஹணம், முழுசாவும், பாதியாவும், வளையமாவும் தெரியறதில்லையா, அதனாலத்தான்.’
‘இந்த 21ம் நூற்றாண்டுல 224 சூர்ய கிரஹணம் தெரியுமாம். அதுல ஏழு ஹைபிரிட் வகை. 2031, நவம்பர், 14ஆம் தேதியிலதான் அடுத்த ஹைபிரிட் சூர்ய கிரஹணம்.’
‘இன்னொரு சேதி, தென் பசிபிக் கடல் பகுதியில சூர்யன் விரைஞ்சு பயணிக்கறச்ச, நிலாவோட நிழல் மேற்கு ஆஸ்த்ரேலியா, இந்தோனேசியால விழுந்த இந்த ஹைபிரிட்டப் பாத்து படம் பிடிச்சுருக்காங்க, அற்புதமா இருக்கு.’ என்றார் அம்மா.
‘எல்லாம் சரிம்மா, சித்ரா பௌர்ணமி இல்லையா? ராத்திரி பால் பொங்கலும், தேங்காய் அவலுமா கொண்டாடுவோமே? இல்லேன்னா, தேங்காய்ப்பாலோட நம்ம பால்ல வேக வச்ச சாத்துல பால் பொங்கலாய் செஞ்சு தரயா, ப்ளீஸ். என்றான் சரூ
“எங்க சுத்தியும் ரங்கனச் சேவிச்சுடுவ நீ” என்றான் சஞ்சய். சிரிப்பு அலை மோதியது.
https://cdn.mos.cms.futurecdn.net/bor3yvm9WCaweEiH8ovsK5-1200-80.jpeg.webp
விளையாட்டாய் அறிவியலை விருந்தாக்கும் பானுமதி
அம்மாநின் எழுத்துக்கள் அரியநகை முத்துக்கள்!
LikeLike