‘ஏன் வனஜா.., ‘உங்க வீட்டுலே வேலை செய்யறவ, துளிக் கூட சத்தம் செய்யாம பாந்தமா பாத்திரங்களை யெல்லாம் தேய்த்து வெச்சுட்டுப்
போயிடுவா… அவ வரதும் தெரியாது.. போறதும் தெரியாது.. அப்படி ஒரு
மின்னல் வேகம்’னு உன் மாமியார் நேத்து எங்க வீட்டுக்கு வந்திருந்தபோது
வேலைக்காரியை ‘ஓஹோ’ன்னு புகழ்ந்து தள்ளினாங்க.. ஆனா அப்படி
ஒண்ணும் தெரியலையே… பாத்திரங்களின் கடமுடா சத்தம் கேட்கத்தானே
செய்யுது…?’
‘ஓ.. அதுவா… எங்க வீட்டுலே வேலைக்காரி காலையிலே சீக்கிரம் வந்துடுவா..
அவ வரபோது நார்மலா என் மாமியார் ஹாலிலே பேப்பர் படிச்சிட்டிருப்பாங்க..
படிக்கும்போது ஒரு டிஸ்டர்பன்ஸும் இருக்கக் கூடாதுன்னு ஹியரிங் எய்டை
கழட்டி வெச்சுட்டுத்தான் படிப்பாங்க… பாத்திரம் தேய்க்கிற கடமுடா சத்தம்
என்ன.. பக்கத்துலே ஒரு அணுகுண்டு வெடிச்சாலும் அவங்களுக்குக் கேட்காது..
தெரியாது…’