இமையம் கணிப்பில் சிறந்த நாவல்கள்

இமையம் என்ற புனைப்பெயரில் எழுதும் வெ. அண்ணாமலை  நன்கறியப்பட்ட  எழுத்தாளர். தனது முதல் புதினமான கோவேறு கழுதைகள் மூலம் தமிழ் வாசகர்களுக்கு அறிமுகமானார்.

Image result for இமையம்

2000 க்குப் பிறகு வந்த நாவல்களில் குறிப்பிடத்தக்க புதினங்கள்  என்று எழுத்தாளர் இமையம் அவர்கள் அறிவித்தவை:

ஆழி சூழ் உலகு‘ (2004) – ஜோ.டி.குரூஸ்

‘சோளகர் தொட்டி‘(2004) – ச.பாலமுருகன்

‘கருக்கு‘(1992) ‘வன்மம்‘ (2002)  – பாமா

‘ஏழாம் உலகம்‘ (2003) – ஜெயமோகன்

‘துயில்’ (2012) – எஸ்.ராமகிருஷ்ணன்

‘கீதாரி’ (2003) –  சு.தமிழ்செல்வி

கூகை (2006) –  சோ.தர்மன்

‘தகப்பன்கொடி‘ (2011) – அழகிய பெரியவன்

‘வாங்கல்‘(2001) – ஸ்ரீதர கணேசன்

‘உண்மைக்கு முன்னும் பின்னும் (2013) – சிவகாமி

‘சிலுவை ராஜ் சரித்திரம்’ (2002), ‘காலச்சுமை’ (2003), ‘லண்டனில் சிலுவை ராஜ்’ (2004) – ராஜ் கௌதமன்

‘காவல் கோட்டம்‘(2008) – பா.வெங்கடேசன்

‘அஞ்ஞாடி’ (2012) – பூ மணி

‘வெள்ளை யானை’ (2013) – ஜெயமோகன்

‘போதியின் நிழல்’ (2012) -அசோகன் நாகமுத்து

‘காலகண்டமும்‘(2013) – எஸ்.செந்தில்குமார்

‘புலிநகக் கொன்றை’ (2004) – பி.ஏ.கிருஷ்ணன்

‘அஞ்சு வண்ணம் தெரு‘, (2008) – தோப்பில் முகமது மீரான்

‘இரண்டாம் ஜாமங்களின் கதை (2004) – சல்மா

மீன்கார தெரு (2006), ‘துருக்கித் தொப்பி’ (2008) – கீரனூர் ஜாகிர் ராஜா

‘யாரும் யாருடனும் இல்லை‘(2003), அஞ்சாங்கல் (2013) – உமா மகேஸ்வரி

‘ஏற்னனவே சொல்லப்பட்ட மனிதர்கள்‘ (1985), ‘முசல் பனி‘ (2010), ‘வார்சாவில் ஒரு கடவுள்‘ (2008) – தமிழவன்

‘பிதுரா’, (1998) ‘பாழி’ (2008) –  கோணங்கி

‘ராஸ லீலா, காம ரூபக் கதைகள் – சாருநிவேதிதா

எழுதிய ‘மரம் – ஜி.முருகன்

‘ராஜீவ் காந்தி சாலை – விநாயக முருகன்

‘மூன்றாம் சிலுவை’  – உமா வரதராஜன்

சிலந்தி (2001), ‘யுரேகா என்றொரு நகரம்’ (2002), ‘37’ (2003)  – எம்.ஜி.சுரேஷ்

6174 (2012), – என்.சுதாகர்

‘கொரில்லா’ (2002), ‘ம்’ – ஷோபா சக்தி.

‘உம்மத்‘ (2013)  – ஸர்மிளா ஸெய்யத்

‘இமையத் தியாகம்’ (2006)  – அ.ரெங்கசாமி

‘புயலிலே ஒரு தோணி’ – ப.சிங்காரம்

“நகர்ந்து கொண்டிருக்கும் வாசல்கள் (2009)” – கே.பாலமுருகன்

 

சாகித்ய அகாதமி விருது பெற்ற நூல்கள்

Image result for சாகித்ய அகாதமி விருது

இலக்கியத்தில் இந்தியாவில் ஞானபீடத்திற்கு அடுத்த வரிசையில் உள்ள சிறப்பான விருது ! ஞானபீடம் எல்லா மொழிகளுக்கும் பொதுவானது. சாகித்ய அகாதமி ஒவ்வொரு மொழிக்கும் தனியே வழங்கப்படும் விருது!

அப்படிபட்ட சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்களையும் அவற்றை எழுதிய  எழுத்தாளர்களையும் இங்கே தருகிறோம். 

இவற்றில் நாம் எத்தனை படித்திருக்கிறோம்? 

ஆண்டு புத்தகத்தின் பெயர் ஆசிரியர் பிரிவு
2015 இலக்கியச் சுவடுகள் ஆ.மாதவன் புதினம்
2014 அஞ்ஞாடி பூமணி புதினம்
2013 கொற்கை ஜோ டி குரூஸ் புதினம்
2012 தோல் டி. செல்வராஜ் புதினம்
2011 காவல் கோட்டம் சு. வெங்கடேசன் புதினம்
2010 சூடிய பூ சூடற்க நாஞ்சில் நாடன் சிறுகதைகள்
2009 கையொப்பம் புவியரசு கவிதை
2008 மின்சாரப்பூ மேலாண்மை பொன்னுசாமி சிறுகதைகள்
2007 இலையுதிர்காலம் நீல பத்மநாபன் புதினம்
2006 ஆகாயத்திற்கு அடுத்த வீடு மு. மேத்தா கவிதை
2005 கல்மரம் ஜி. திலகவதி புதினம்
2004 வணக்கம் வள்ளுவ ஈரோடு தமிழன்பன் கவிதை
2003 கள்ளிக்காட்டு இதிகாசம் வைரமுத்து புதினம்
2002 ஒரு கிராமத்து நதி சிற்பி கவிதை
2001 சுதந்திர தாகம் சி. சு. செல்லப்பா புதினம்
2000 விமர்சனங்கள் மதிப்புரைகள் பேட்டிகள் தி. க. சிவசங்கரன் விமர்சனம்
1999 ஆலாபனை அப்துல் ரகுமான் கவிதை
1998 விசாரணைக் கமிஷன் சா. கந்தசாமி புதினம்
1997 சாய்வு நாற்காலி தோப்பில் முகமது மீரான் நாவல்
1996 அப்பாவின் சினேகிதர் அசோகமித்திரன் சிறுகதைகள்
1995 வானம் வசப்படும் பிரபஞ்சன் புதினம்
1994 புதிய தரிசனங்கள் பொன்னீலன் புதினம்
1993 காதுகள் எம். வி. வெங்கட்ராம் புதினம்
1992 குற்றாலக்குறிஞ்சி கோவி. மணிசேகரன் புதினம்
1991 கோபல்லபுரத்து மக்கள் கி. ராஜநாராயணன் புதினம்
1990 வேரில் பழுத்த பலா சு. சமுத்திரம் புதினம்
1989 சிந்தாநதி லா. ச. ராமாமிர்தம் சுயசரிதை
1988 வாழும் வள்ளுவம் வா. செ. குழந்தைசாமி இலக்கிய விமர்சனம்
1987 முதலில் இரவு வரும் ஆதவன் சிறுகதைகள்
1986 இலக்கியத்துக்கு ஓர் இயக்கம் க.நா.சுப்பிரமணியம் இலக்கிய விமர்சனம்
1985 கம்பன்: புதிய பார்வை அ. ச. ஞானசம்பந்தன் இலக்கிய விமர்சனம்
1984 ஒரு கவிரியைப் போல லட்சுமி (திரிபுரசுந்தரி) புதினம்
1983 பாரதி : காலமும் கருத்தும் தொ. மு. சி. ரகுநாதன் இலக்கிய விமர்சனம்
1982 மணிக்கொடி காலம் பி. எஸ். இராமையா இலக்கிய வரலாறு
1981 புதிய உரைநடை மா. இராமலிங்கம் விமர்சனம்
1980 சேரமான் காதலி கண்ணதாசன் புதினம்
1979 சக்தி வைத்தியம் தி. ஜானகிராமன் சிறுகதைகள்
1978 புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் வல்லிக்கண்ணன் விமர்சனம்
1977 குருதிப்புனல் இந்திரா பார்த்தசாரதி புதினம்
1975 தற்காலத் தமிழ் இலக்கியம் இரா. தண்டாயுதம் இலக்கிய விமர்சனம்
1974 திருக்குறள் நீதி இலக்கியம் க. த. திருநாவுக்கரசு இலக்கிய விமர்சனம்
1973 வேருக்கு நீர் ராஜம் கிருஷ்ணன் புதினம்
1972 சில நேரங்களில் சில மனிதர்கள் ஜெயகாந்தன் நாவல்
1971 சமுதாய வீதி நா. பார்த்தசாரதி புதினம்
1970 அன்பளிப்பு கு. அழகிரிசாமி சிறுகதைகள்
1969 பிசிராந்தையார் பாரதிதாசன் நாடகம்
1968 வெள்ளைப்பறவை அ. சீனிவாச ராகவன் கவிதை
1967 வீரர் உலகம் கி. வா. ஜெகநாதன் இலக்கிய விமர்சனம்
1966 வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு ம. பொ. சிவஞானம் சரிதை நூல்
1965 ஸ்ரீ ராமானுஜர் பி.ஸ்ரீ. ஆச்சார்யா சரிதை நூல்
1963 வேங்கையின் மைந்தன் அகிலன் புதினம்
1962 அக்கரைச் சீமையிலே மீ. ப. சோமு பயண நூல்
1961 அகல் விளக்கு மு. வரதராசன் புதினம்
1958 சக்கரவர்த்தித் திருமகன் கி. இராஜகோபாலாச்சாரியார் உரைநடை
1956 அலை ஓசை கல்கி புதினம்
1955 தமிழ் இன்பம் ரா. பி. சேதுப்பிள்ளை கட்டுரை

 

 

கோமலின் தண்ணீர் தண்ணீர் !

கோமல் சுவாமிநாதன் அவர்களின் கருத்தான வசனங்களைக் கேட்க செல்லவேண்டும் இந்த நாடகத்திற்கு! 

அனைவரும் பார்க்கவேண்டிய நாடகம் !

திரைப்படமாக வந்து அனைவரது பாராட்டையும் பெற்றது. 

 சிறந்த தமிழ்ப்படம் மற்றும் சிறந்த தமிழ்ப்பட இயக்குநருக்கான பிலிம்பேர் விருதையும், சிறந்த தமிழ்ப் படத்திற்கான “சினிமா எக்ஸ்பிரஸ்’ விருதையும் “தண்ணீர் தண்ணீர்’ தட்டிச் சென்றது. 

 

கதை, வசனம் : கோமல் ஸ்வாமி நாதன் 

திரைக்கதை இயக்கம் : கே.பாலசந்தர்

 

ராமலிங்கம் பிள்ளை

2030இல் சங்கர் இயக்கத்தில் ரஜினி படம் – நாம் எப்படி இருப்போம்?

rajini rajini2

\Image result for martianஇது 2030 வது வருடம். இன்றைக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி தான். அவர் செவ்வாய் கிரகத்திலிருந்து வரும் வேற்றுக் கிரகவாசி. பெயர் அங்காரகன்.

பூமியை ஆக்ரமிக்க ஒவ்வொரு கிரகத்திலிருந்தும் ஒவ்வொருவர் வருகின்றனர்.  எட்டு வில்லன்கள் –  ஜாக்கி சான், அஜீத், விஜய், ஆமிர்கான், மகேஷ் பாபு, பிருத்விராஜ்,  டாம்க்ரூஸ்,  பிராட் பிட்.   எப்படி மற்ற கிரக வாசிகளையெல்லாம் சண்டையில் தோற்கடித்து விரட்டிவிடுகிறார்  என்பது தான் ஷங்கரின் அருமையான கதை .

கடைசியில் ரஜினியும்   வேற்றுக்கிரகவாசியாகையால் அவரும் போகவேண்டும் என்று பூமியில் மக்கள் போராட அப்போது அவர்களுக்கு உண்மை தெரியவருகிறது. ரஜினி உண்மையில் மங்கள்யானில் சென்ற பூமிநாதன் என்ற நம்மவர். மற்ற கிரகங்கள் பூமியைக் கைப்பற்றப்போவதை அறிந்து காப்பாற்றுவதற்காக செவ்வாய் கிரகத்திலிருந்து வரும் அங்காரகனைக் கொன்றுவிட்டு  அவன் வடிவில்  வருகிறார். கடைசியில் உண்மை அங்காரகன் -அட்டகாசமான வில்லன் பத்துத் தலைகளுடன் வந்து பூமிநாதனுடன் மோத வருகிறான். அது  வேறு யாரும் இல்லை . கமல் தான்.

ஹீரோயின் ஹாலிவுட்டிலிருந்து வந்த அழகுப் பதுமை.   ஷங்கரின் பிரும்மாண்ட படம் அது. இந்தியாவின் எல்லாமொழிகளிலும் மற்றும் ஆங்கிலத்திலும் வெளியான படம்.

போதுமா நம்ம ரீல்?

 

அது சரி.  உண்மையில் 2030இல் நாம் எப்படி இருப்போம்?

கிப்லிங்கர் என்பவர் சொல்லுகிறார். இது உண்மை தான்.

Subscribe to Kiplinger's Personal Finance

 

சென்ட் வாசனை, டெக்னாலஜி மூலம் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்குப் போகும் !

நன்றாகத் தூங்க வைக்கும்  புது கணினிமயமாக்கப்பட்ட படுக்கை

நம்  குளிர்சாதனப்பெட்டியே தேவையான சாமான்களை வரவழைக்கும்

வயல்களை விட அடுக்கு அடுக்கான  உயரங்களில் உணவுப் பொருட்கள் விளையும் – விளைச்சல்களை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குக் கொண்டு செல்லவேண்டிய அவசியமே இருக்காது.

டிரோன்கள் சாமான்களை உங்கள் வீட்டு வாசலிலேயே  பட்டுவாடா செய்யும்

உங்கள்  வை ஃபை ரவுட்டர் மற்ற எல்லாப் பொருட்களையும் இயக்கும்.

நடமாடும் வீட்டு  உபயோகச் சாமான்கள் (நடமாடும் படுக்கை, கட்டில்)

டிரைவர் இல்லாத கார்

அதிவேகத்தில் பறக்கும் ஆகாயவிமானங்கள்

கைரேகை கையெழுத்து பாஸ்வோர்ட் இல்லாமல் முகத்தை வைத்து அடையாளம் கண்டுபிடிக்கும் சாதனம்

சாவிகளே இல்லாமல் போய்விடும். டிஜிட்டல் சாதனத்தினால் திறக்கலாம் மூடலாம்.

மாயக் கண்ணாடி அணிந்துகொண்டு வர்சுவலாக எங்கு வேண்டுமானாலும் போகலாம்- அதாவது பார்க்கலாம். 

இயற்கை வாயு, காற்று, சூரிய ஒளி, போன்றவற்றால் சுத்தமான மின்சாரம் கிடைக்கும்.

விட்டுக்குத் தேவையான மின்சாரத்தைப் பேட்டரியில் சேமித்து வைக்கும் வசதி

குளிக்கும் தண்ணீரைச் சுத்திகரித்து மீண்டும் உபயோகிக்கும் முறை

உங்கள் ஆரோக்கியத்தைச்  சரியாகக் கண்காணிக்க மைக்ரோ சிப் உடலில் பொருத்தப்படும்.

உங்களுக்குத் தேவையான  பிரத்தியேகமான மருந்துகள் கிடைக்கும்

சோதனைச் சாலையில் தயாரித்த உங்கள் உடல் உபகரணங்கள் தயாராக இருக்கும்.

நீங்கள் பேசுவதை உங்கள்  போன் பதிவு செய்யும்

எல்லா பரிமாற்றமும் மின்னணு மூலமே நடக்கும். பணம்,செக்,கிரெடிட் கார்ட் எல்லாம் மறைந்துவிடும்.

 

 

 

 

 

 

 

 

 

 

தமிழ்த்தாத்தா டாக்டர் உ.வே.சுவாமிநாதய்யர்

Image result for u ve swaminatha iyer

தாத்தாவின் சொத்தில் பேரனுக்கு உரிமை உண்டல்லவா?

தமிழ்த் தாத்தா உ.வே.சுவாமிநாதரின் தமிழில் நம் அனைவருக்கும் பங்கும் உரிமையும் பாசமும் மரியாதையும் எப்போதும் இருக்கவேண்டும்!

அவர் பிறந்த உத்தமநாதபுரத்திற்குக் ( கும்பகோணம் -தஞ்சை செல்லும் வழியில் பாபநாசத்தில்  இறங்கி அங்கிருந்து மூன்று கிலோமீட்டர் தூரத்தில் செல்லவேண்டும் )  குவிகம்  நண்பர்கள் வட்டம் சென்று தாத்தாவின் நினைவிடத்தைக் கண்டு – வணங்கி – ஆராதித்துவிட்டு வந்தது. 

தமிழக அரசு அவர் இருந்த இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றி வைத்திருக்கிறது. அதற்காக அனந்த கோடி நன்றி. 

அவர் இல்லை என்றால் இன்று தமிழில் இருக்கும் எண்ணற்ற சங்கப் பாடல்கள் எல்லாம் நம் கண்களுக்குத்  தென்படாமலேயே போயிருக்கும். பத்துப்பாட்டும், எட்டுத்தொகையும் , சிலப்பதிகாரமும், மணிமேகலையும், சீவகசிந்தாமணியும்  இத்தனை அழகாக நமக்குக் கிடைத்திருக்காது. 

அங்கே எடுத்த புகைப்படங்களைப் பார்த்து மகிழுங்கள்! 

img_7245

img_7256-1
img_7261

img_7255

img_7257

அவரது வரலாற்றை ஒரு சிறிய நாடகமாக அமைத்திருக்கிறார்கள். பார்த்து அவர் பெருமையை உணருங்கள்!!

 


ஔரங்கசீப் – இந்திரா பார்த்தசாரதியின் நாடகம் (விமர்சனம் – கிருபாநந்தன்)

Panoramic Tale From ‘Aurangazeb’.

‘இந்நாடகம், இதில் வரும் கதாபாத்திரங்களின் ஒன்றுக்கொன்று முரண்பட்ட மன இயல்புப் போரட்டங்களைப் பகைப்புலனாகக் கொண்டிருக்கிறது’ என்றும் ‘இது ஒரு சரித்திர நாடகம் என்பது ஒரு எதேச்சையான சம்பவம்’ என்கிறார் திரு இந்திரா  பார்ததசாரதி.

அல்யான்ஸ்  ஃப்ராசன்சேஸ் (இதன் உச்சரிப்பை ஒருமாதிரி கூகிளிட்டு தெரிந்து கொண்டேன்) அரங்கில் “ஔரங்கசீப்’ நாடகத்தைப் பார்த்த பிறகுதான் இ பா வின் மேற்கண்ட கருத்துக்களைப் படித்தேன்.

வரலாற்றுப் பாடங்கள் மூலமாக நாமறிந்த ஔரங்கசீப் …. சங்கீத விரோதி, போர் வெறியன், , சகோதரர்களைக் கொன்று ‘ஷா இன் ஷா’ ஆனவன்,  எல்லை விஸ்தரிப்புக்காகவே வாழ்ந்து கிழடுதட்டி  மகனாலேயே சிறைவைக்கப்பட்டு மடிந்தவன் … என்பதுதான்.

நாடக அறிவிப்பைப் பார்த்துவிட்டுஃப் பலருக்கு எழுந்த சந்தேகம், இந்த நாடகம் கதாநாயகனை மகிமைப்படுத்துமோ என்பது தான். அரசாள்வதில் நேர்மை, ஊழலற்ற கட்டுக்கோப்பான அரசாங்கம் நடத்துவது, மதுவை ஒழிப்பது  ஆகியவற்றைக் குறிக்கோளாகக் கொண்டவன் என்றாலும் அதனை சாதிக்க சகோதர்களைக்     கொல்வது, தந்தையைச் சிறையிடுவது, நுண்கலைகளை ஒடுக்குவது போன்ற கேள்விக்குரிய வழிமுறைகளைப் பின்பற்றியவன் என்று சித்தரிக்கப் படுகிறான்.

எல்லா மனிதர்களையும் போன்றே  நல்ல மற்றும் தீய குணங்களைக் கொண்ட கலவை தான் ஔரங்கசீப் என்பது  நாடகத்தைப் பார்த்தபிறகு தோன்றுகிறது.

இனி நாடகம்.

ஒரே அரங்கு, நான்கே காட்சிகள், (ஒரு காட்சி மட்டும் அரண்மனை தர்பாருக்கு வெளியே என்றாலும் ஒரு மாற்றமும் காண்பிக்கவில்லை)..  

கதாநாயகன் தவிர

கடந்த காலத்திலேயே வாழ்ந்து நடைமுறைச் சாத்தியமில்லாத கனவுகளுடன் வாழ்ந்த அரசனான  ஷாஜஹான் (தாஜ்மஹால் கட்டியதால் இன்னும் அறியப்பட்டாலும், அது கட்டப்படும்போது மக்கள் பாடாய் பட்டார்கள்).

தானே இன்னொரு அக்பர் என்னும் கனவில், மத நல்லிணக்கம், மக்கள் மகிழ்ச்சி போன்ற குறிக்கோள்கள் கொண்டிருந்தாலும் சாமர்த்தியத்தில் தம்பி ஔரங்கசீபிடம் தோற்றுப்போகும் மூத்தவன் தாரா

தாராவிற்கு பக்கபலமாக ஜஹனாரா, ஔரங்கசீப்பிற்குத் துணையாக ரோஷனாரா என்று ஷாஜஹானின் புதல்விகள்.

ஆகிய முக்கிய பாத்திரங்கள்

ஜெயிப்பவர் பக்கம் சாயும் சந்தர்ப்பவாதிகளான சிற்றரசர்கள் மற்றும் படைத்தளபதிகள்,  தாராவை உஷார் படுத்தவரும் மௌல்வி  தனது உயிரையே காப்பாற்றியவன் தாரா என்றாலும், அவனையே சிறைப்பிடித்து ஒப்படைக்கும் மாலிக் போன்ற துணைக் கதாபாத்திரங்கள்.

இ பா வின் முத்திரையாக கூர்மையான, பொருள் பொதிந்த  தர்க்கபூர்வமான வசனங்கள் இந்த நாடகத்தின் பெரும் பலம். வசன உச்சரிப்புகளும் (குறிப்பாக உருது மற்றும் அராபிய சொற்கள்) மிக நன்றாக இருந்தது. நடிப்பிலும் எல்லோரும் நன்றாகச் செய்தார்கள்.

தர்பாருக்கு அரசகுடும்பத்தினர் ஒருபுறமிருந்தும் மற்றவர்கள் பிறபுறங்களிலிருந்தும் வருவதும் காட்சியில் இல்லாத உப பாத்திரங்கள் மேடையின் பின்புறத்தில் அரண்போன்று நிற்பதும் புதிய உத்திகளாகப் பட்டன.

சில நூற்றாண்டுகளுக்கு முந்தைய இந்த கதை, தற்போதும் தேவையாக உணரக் காரணமே இ.பா வின்  வசனங்கள்தான் என்று படுகிறது. நாடகம் தமிழில்தான் எழுதப்பட்டது என்றாலும், ஹிந்தி, ஆங்கிலம், குஜராத்தி என்று பலமொழிகளில் முன்பே அரங்கேற்றப்பட்டு, தமிழில் இப்போதுதான் நடிக்கப் படுகிறதாம். ஆச்சரியம்.

நாடகத்தைப் பார்த்தது ஒரு நல்ல அநுபவம். மீண்டும் அதனைப் படித்தது இன்னொரு நல்ல அநுபவம்.    

பார்த்தாலும் படித்தாலும் ஏமாற்றம் நிச்சயம் இருக்காது என்பது என் நம்பிக்கை.

 

img_7067

தீவு பிறந்த கதை – ஸர்ட்ஸீ(SURTSEY) – ராமன்

உலக வரைபடத்தில்  இல்லாத நிலப்பரப்பு  திடீரென்று கடல் அடிமட்டத்திலிருந்து மேலே முளைத்தது –  புதிய தீவு ஒன்று பிறந்தது!!

தீவுக்குக் கொடுக்கப்பட்ட பெயர் ஸர்ட்ஸீ (surtsey).

பிறந்த வருடம் 1967ல்.

இடம் ஐஸ்லாண்ட் நாட்டின் தென்கோடி எல்லை.

pic1pic2

 

 

 

 

       ஆரம்ப காலத்தில்                             15 நாட்களுக்குப் பிறகு


 pic3pic4

ஸர்ட்ஸீ தீவு                                   ஐஸ்லாண்ட் – தென்கோடியில் ஸர்ட்ஸீ

 

வட அட்லாண்ட்டிக் கடலில்  மட்டத்திலிருந்து கீழே 130 மீட்டரில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பு தரை மட்டத்திற்கு நவம்பர் 1963ல் வெளிவந்து 1967 ஜூன் வரை நீடித்தது.  2.7 சதுர கிமீ-ல் இருந்த நிலப் பரப்பு தற்போது அலை அரிப்பினால் 1.3 சதுர கிமீ-ல் குறைந்து காணப்படுகிறது.

 ஸர்ட்ஸீயின் பெயருக்கு, இயற்கையை வழிபட்டு வந்த பழங்கால ஸ்காண்டினேவியாவின் நார்ஸ் மிதாலஜியில்  அனல் அல்லது பூதத்  தீவு என்று பொருள்.

முதலில் எரிமலையின் மூன்று வாய்கள் மூலமாக ஏற்பட்ட வெடிப்புகள் கடைசியில் ஒன்றாக இணைந்து இந்த தீவு உருவானது. 130 மீ கடலுக்கு அடியில் சாதாரணமாக ஏற்படும் வெடிப்புகள் பல திசைகளில் சிதறி தண்ணீர் அழுத்தத்தினால்  நனைக்கப்பட்டு பரவி விலகிவிடும். தொடர்ந்து  வெடிப்புகள் நீடித்தால் அதன் மூலமாய் வெளிவரும் உருகிய உலோகக் கலவைகளினால் மேடுகள் கிளம்பும். வெடிப்புகளினால் கட்டுப்படுத்த இயலாத மேடுகள் பெரிதாகிப் பெரிதாகி  கடல் மேல் மட்டத்திற்கு மேலே வந்துவிடும்.

1964ம் ஆண்டில் தண்ணீர் கலவையினால் நிகழ்ந்த வெடிப்புகளின் வாய்களை தண்ணீர் வெகு எளிதில் செல்ல இயலாததால் எரிமலையின் வீரியம் குறையத் தொடங்கியது. அப்போது எரிமலை குழம்புகளின் ஊற்றுகள் மற்றும் ஆறுகளின் செயற்பாடுகள் தொடங்க ஆரம்பித்தன. இறுக்கமற்ற எரிமலை சாம்பல்களும், ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கப்பட்டிருந்த பாறைகளும் எரிமலை குழம்புகளினால் மூடப்பட்டு  தீவு கடல் அலைகளினால் அடித்துக்கொண்டு போகவிடாமல் காப்பாற்றப்பட்டது. எரிமலை 1967 ஜூனில் சாந்தம் அடைந்தது. இப்போது வருடா வருடம் ஸர்ட்ஸீ 1.0 ஹெக்டேர் நிலத்தை இழந்து வருகிறது. இழந்த நிலம் எரிமலை குழம்பினால் மூடப்படாத இறுக்கமற்ற பாறைகளும் சாம்பல்களுமாகும்!  குழம்பினால் முற்றிலும் மூடப்பட்ட இத்தீவு மறைய இப்போது வாய்ப்பில்லை.

பல்லுயிர் பெருக்கத்தைப் (biodiversity) பற்றி ஆராய இத் தீவு முதல் நிலையான உதாரணம். பாறைகளில் 1967ம் வருட இறுதியில்   பாசி மற்றும் பூக்கள் இல்லாத செடிகளும் தென்பட ஆரம்பித்தன. 2008ம் ஆண்டு 69 வகையான செடி கொடிகள் தென்பட்டு கடைசியில் 30 மட்டுமே இயற்கையால் தேர்ந்தெடுக்கப்பட்டு ஸ்தாபனமாயின. இடம் மாறும்(migratory) பறவைகள் தீவில் கூடு கட்ட ஆரம்பித்தன. இதனால் மண்ணின் தரம் உயர ஆரம்பித்தது. புதிய புதிய செடி இனங்கள் வருடத்திற்கு 5 வீதம் உண்டாகின்றன. பறவைகளின் பெருக்கம் தீவின் செடிகொடிகளின் பெருக்கத்திற்கு உதவின. இப்போது 12 வகையான பறவைக்  கூட்டங்கள் இங்கு கூடு கட்ட வருகின்றன. பஃபின், ஸீல் மற்றும் ஸ்டார் மீன்கள் ஏராளமாக காணப்படுகின்றன. ஐரோப்பாவிலிருந்து காற்றினால் தள்ளப்பட்டு மற்றும் அதன் பலத்தினாலேயே வந்த பறக்கும் பூச்சிகள், மரக்கிளைகளில் தங்கி மிதந்து வந்தவைகள், கரையில் ஒதுங்கிய கடலில் செத்த உயிரினங்கள் மூலமாகவும் இன்று 663 பூச்சிகள் முக்கியமாக உண்ணிகள் கணக்கிடப்பட்டுள்ளன.

pic5

pic6

 

பஃபின்                                                                          ஸீல்

ஆராய்ச்சியாளர்கள் வசிக்கும் குடில் ஒன்று கட்டப்பட்டிருக்கிறது. தீவில் வாழ எவருக்கும் அனுமதி கிடையாது. ஐஸ்லாண்ட் அனுமதியின்றி யாரும் அங்கு செல்ல இயலாது.

தற்சமயம்  UNESCOவினால் அங்கீகரிக்கப்பட்டு காப்பாற்றப்படும் தீவாக விளங்குவதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை!!!

 

 

 

 

 

 

 

 

பாபநாசத்தில் அக்டோபர் இரண்டில் – காந்தி-சாஸ்திரி -காமராஜ் -தினமலர் ஆசிரியர் விழா

உண்மைச் சம்பவம் – ஊரைச் சொன்னாலும் பேரைச் சொல்லமாட்டோம் !

அது ஒரு அழகான சுற்றுலாத் தலம்!

அன்றைக்கு மதியம் நானும் என் மனைவியும்  கடலில் நீச்சலடித்துவிட்டு சற்று ஓய்வு எடுத்துக் கொள்வதற்காக அருகில் இருந்த பாறையில் அமர்ந்திருந்தோம். எங்களைச்  சுற்றி சுமார் 50 பேர் இருந்தார்கள்.

அருகில் ஒரு பெண்.  கொஞ்சம்  வித்தியாசமாகக் காணப்பட்டாள்.

அவள் மெல்ல நடந்தாள். அவள் தலை பொன் வண்ணத்தில் குட்டையாக பாப் செய்யப்பட்டிருந்தது. அந்த மதிய நேரத்திலும்  அவளது சிவப்பு லிப்ஸ்டிக்  மற்றும் மேக்கப் எல்லாம்  மிகவும் கச்சிதமாக இருந்தது. அவள் கடற்கரைக் குளியலுக்குத் தகுந்தவாறு நீச்சலுடையில் இருந்தாள். அவள் ஆசியப்  பெண் என்பது நன்றாகவே  தெரிந்தது. வயது இருபத்தைந்து,   இருக்கலாம். எங்களுக்குப் பக்கத்தில்   நின்று கொண்டிருந்தாள். அவள் தன்னுடைய  அழகான  கேமராவை எடுத்து செல்ஃபி   ஸ்டிக்கில் சொருகிக்  கொண்டாள். சுதந்திரப் பெண்மணிச் சிலையின் தீப்பந்தத்தைப் போல  அந்தக் காமிராவை உயர்த்திப் பிடித்தாள். அவள் என்ன செய்யப் போகிறாள் என்று நாங்கள் ஊகிக்குமுன் அவள் அப்படியே  தொபுகடீர்  என்று தண்ணீருக்குள் குதித்தாள்.

சில வினாடிகள்.

தண்ணீருக்கு மேல் கையில் கேமராவுடன் வெளியே வந்தாள். நல்ல செல்ஃபிப்  படம் வந்திருக்கக்கூடும்.

அவள் தலை தண்ணீரில் மறைந்தது, டிக் டிக் என்று  வினாடிகள் போய்க் கொண்டிருந்தன. இன்னும் சில வினாடிகள்.

 

இது தான்  கார்னிகிலியா என்ற இத்தாலியின் சான்ஸே இல்லாத அழகான கடற்கரைக் கிராமம். புகைப்படப் பிரியர்களுக்கு அல்வா. சுற்றுலாப் பயணிகளின் சொர்க்கம் .  ரம்மியமான பகல் பொழுது. வெது வெதுப்பான  33 டிகிரி  வெயில். தண்ணீரில் 28 டிகிரி இருக்கலாம். அதிகக் குளிரில்லை. வானமும்  மேகமூட்டம்  எதுவும்   இல்லாமல் பளிச் என்று இருந்தது. அழகான மத்திய தரைக் கடல். பாறைகள் நிறைந்த கடல்வெளி. இரு மலைப் பாறைக் குன்றுகள்.  கிட்டத்தட்ட இருபது அடி   தூரத்தில்  கடல் அலைகள் அந்தப் பாறைக் குன்றில் மெதுவாக மோதிக் கொண்டிருந்தன. இயற்கையாகவே அந்தப் பாறைகளில்   ஆங்காங்கே தண்ணீரில் குதித்து விளையாட நீச்சல் பலகைகள் அமைத்தது போல் இருந்தது. கடலில் குஷியாகக் குதித்து நீச்சலிட  இதைவிட அருமையான இடம் கிடைப்பது அரிது.

இன்னும் சில துல்லிய  தகவல்கள். தண்ணீர் கிட்டத் தட்ட 30 அடி ஆழம் இருக்கலாம். உயிர் காக்கும் காவலர்கள் பக்கத்தில் யாரையுமே காணோம். செங்குத்தான அந்தப் பாறைகள் கரடுமுரடாக  இல்லாமல் கொஞ்சம் வழுவழு என்று  வேறு இருந்தன. தண்ணீரிலிருந்து    பாதுகாப்பான இடத்திற்குச் செல்லத்  தேவையானவை கயிறு அல்லது ஏணி . அவை இரண்டும் எங்களுக்கு அருகில்  இல்லை.

சில வினாடிகள் கழித்து அந்தப் பெண்ணின் பொன்னிறத் தலை தண்ணீருக்கு மேல் தெரிந்தது. எங்கேயோ ஏதோ  தப்பு என்று புரிகிறது; ஆனால்  என்ன என்று தெரியவில்லை .  அவள் கை  இன்னும் அந்த செல்ஃபி ஸ்டிக்கைப்  பிடித்தவண்ணமே இருந்தது.  அவை ஆடவில்லை -அசையவில்லை . அவள் கால்கள் தெரியவில்லை.அப்படியே நின்றவாறே இருந்தாள். அவள் நீச்சலடிக்கவும் முயலவில்லை. சில வினாடிகளில் அவள் தலை மீண்டும் தண்ணீரில் மறைந்தது.

சுற்று தூரத்தில் ஆண்களும் பெண்களும் சிறுவர்களும்  நீச்சலுடையில் கும்மாளமிட்டுக் கொண்டிருந்தார்கள். சிலர் பாறைகளில் சாய்ந்து சூரிய வெப்பத்தைப்  பருகிக்  கொண்டிருந்தார்கள். இன்னும் சிலர் சும்மா  ஜாலியாக நடந்து கொண்டிருந்தார்கள். அந்த  அகலமான  கடல்வெளியில் ஹோ என்ற கடல் காற்றின் இரைச்சல்  வேறு. முப்பது நாற்பது அடி சுற்றுவட்டாரத்தில்  எங்கள் மூன்று பேரைத் தவிர வேறு யாருமே இல்லை.

.நானும் என் மனைவியும் அந்த சிவப்பு லிப்ஸ்டிக் முகம் மறுபடி ஒருமுறை கடலுக்கு மேலே வருவதைப் பார்த்தோம்.  ஓரிரு  நொடிகள் தான். மறுபடியும் அவள் தலை தண்ணீருக்குள்  முழுகப் பார்த்தது. ” நீ ஒகேயா?” என்று கத்தினேன். என் குரலில் இருந்த பயம் எனக்கே தெரிந்தது.

மறுபடியும் அவள் தலை வெளியே வந்தது . வாயை  அகலத் திறந்துகொண்டு மூச்சுவிடத் திணறுவது போல் இருந்தது.  கொஞ்சம் தண்ணீரையும் குடிக்கிறாளோ? அவள் தலை மீண்டும் தண்ணீருக்குள் முழுகியது. என்னால் அதற்கு மேல் பொறுக்க முடியவில்லை. தண்ணீருக்குள் குதித்தேன். என் மனைவி பாறையில் அவளுக்கு எவ்வளவு தூரம்  அருகில் வர முடியுமோ அந்த இடத்துக்கு வந்தாள்.

காற்றுக் குமிழிகளைத் தேடி அவள் இருக்கும் இடத்தைக் கண்டு பிடித்தேன்.  தண்ணீருக்கு அடியில் இருந்தாள்.  அவளைத் தூக்கினேன். அவள் என் கையைப் பிடித்துக் கொண்டு மூச்சு வாங்குவதற்காகத் தண்ணீருக்கு வெளியே வந்தாள். நான் அவளைத் தூக்கிப் பிடித்துக்கொண்டு பாறைக்கு அருகில் வந்தேன். அங்கே என் மனைவி ஒரு கையால் அந்த வழவழப்பான பாறையைப் பிடித்துக் கொண்டு மறு கையை அந்தப் பெண்ணிடம் நீட்டினாள். அந்தப் பெண் சட்டென்று என் மனைவியின் கையைப்  பற்றிக் கொண்டாள். அந்த  மின்னல் அதிர்ச்சியில் தானும்  தண்ணீரில் விழுந்து விடுவோமோ  என்று  என் மனைவிக்குத் தோன்றியது. . நல்ல வேளையாக அப்படி  நடக்கவில்லை. என் மனைவி தன் முழு பலத்தையும் திரட்டி அந்தப் பெண்ணின் கையைப் பிடித்து கொஞ்சம் கொஞ்சமாக அவளை அந்தப் பாறையில் பத்திரமாகக் கரையேற்றினாள்.

” என்னாச்சு ? நீ ஒகேயா? ” என்று அவளிடம் என் மனைவி கேட்டாள். அவள் மெதுவாக  மூச்சு வாங்கிக் கொண்டே கூறினாள்.  “தாங்க்ஸ்”.  மறுபடியும் மூச்சை இழுத்துக் கொண்டு ” தாங்க்ஸ் .  இப்போ நான் ஓகே.”  என்றாள்.

பரவாயில்லை. ஆங்கிலம் தெரிந்த பெண். அவள் வார்த்தைகளும் புரிந்தன.

தண்ணீரிலிருந்தபடியே ,  ” என்ன ஆயிற்று?” என்று கத்தினேன்.

 “எனக்கு நீச்சல் தெரியாது. உங்க ரெண்டு பேர் உதவிக்கும்  நன்றி”  என்று சொல்லிக் கொண்டே மெதுவாக  எழுந்தாள். கால்கள் தடுமாறின. ஆனால் ஆபத்தில்லை. பிழைத்துக் கொண்டாள்.

“நிறைய பேர் தண்ணீரில் மிதக்கறதைப் பாத்தேன். ஆழம் இருக்காதுன்னு நினைச்சு சும்மா குதிச்சேன்”  என்று சொல்லிக் கொண்டே எங்களை விட்டுச் சென்றாள்.

“சும்மா குதிச்சேன்”

………. 

அரை மணி நேரத்துக்கு முன்:

 நானும் என் மனைவியும் அந்தக் கடலில்  குளித்துக் கொண்டிருந்தோம். 

அவள்:  சும்மா  இங்கே வா. ஆழமாத் தான் இருக்கும். காலை லேசா உந்தினா போதும் . அப்படியே தண்ணியில மிதக்கலாம் ” 

நான்: உனக்கென்ன ஈஸியா சொல்லிட்டே. . நான் இப்ப  தான் முதல் தடவையா காலில தரை தொடாத இடத்துக்கு வந்திருக்கேன். “

அவள்:  இதில ஒரு கஷ்டமும் இல்லை. நீ இதை ஈஸியா செய்யலாம். ஆனா உனக்கு பயம்”

நான்: ” கரெக்ட் தான். அது சரி.. நீ எப்பவாவது பாறையிலிருந்து தண்ணீரில குதிச்சிருக்கியா?”

அவள்: ” அவ்வளவு உயரத்திலிருந்தா? சாரி! அது வேற சமாசாரம் ”   

நான்: ” அந்த மாதிரி தான் எனக்கும்.” 

அவள்:  ” நாம ரெண்டு பேரும்  பயத்தைப் பாத்துப்  பயப்படாம இருக்க பயிற்சி எடுத்துக்கணும்.”

 நான்  இன்னும்  அந்தக் கடலிலிலேயே இருந்தேன். பயம் இல்லாமலில்லை.  தரையில் கால் படவில்லை தான் . நீச்சல் குளத்தின் ஆழமான பகுதி என் மனக் கண்ணில் தோன்றியது. சற்று தூரத்தில்  ஏணிப்படிகள் தெரிந்தன.

மெதுவாக நான் மிதக்க ஆரம்பித்தேன்.  ஏணியை நோக்கிச் சென்றேன்.  

எனக்குப் பதிலாக நீச்சல் தெரிந்த  என் மனைவி குதித்திருக்க வேண்டும் 

நான் பாறையிலிருந்து அந்தப் பெண்ணைத்  தூக்கி விட்டிருக்க வேண்டும் 

அந்தப் பெண்ணும் ஜாக்கிரதையா இருந்திருக்க வேண்டும்.

ஆனால் , சில சமயங்களில் நாம் அதிகமாக யோசிப்பதில்லை 

“சும்மா குதித்து விடுகிறோம்” 

பின்குறிப்பு:

” தண்ணியில  விழுந்தவங்களைக் கையைப் பிடிச்சுத் தூக்கக்கூடாதுன்னு எனக்கு நல்லாத் தெரியும். ஆனா அவ தலை முடி ரொம்ப அழகா வாரியிருந்தது; அதை எப்படிக் கலைக்கறதுன்னு தயக்கமா இருந்தது.” என்று என் மனைவி சொன்னாள்,  அந்த சிவப்பு லிப்ஸ்டிக்காரி  எங்களை விட்டுப் போன பிறகு !

 
 
 
 

நாடகமே உலகம் – நகைச்சுவை நடிகர் நீலு

FullSizeRenderஅன்னியனில், அம்பி சபாவில் நந்தினிக்கு சான்ஸ் கேட்கப் போகும்போது முதலில் மாட்டேன் என்று மறுத்துப் பின்னர் அன்னியனாக மாறி அவரை துவம்சம் செய்தபிறகு ஒப்புக் கொள்வாரே அந்த நீலுவை மறக்க முடியுமா ?

பார்த்தாலே சிரிக்கவைக்கும் ஆற்றல் கொண்டவர்கள் சிலர். அதில் நீலுவும் ஒருவர். ததாரின்னா என்று என்ட்ரி ஆகும்போது பாடிக்கொண்டு வரும் போதே தியேட்டராகட்டும் – நாடக அரங்கமாகட்டும் அது களை கட்டிவிடும்.

அவரது சதாபிஷேகம் இந்தவாரம் நடைபெற்றது. வாழ்த்த வயதில்லை என்று சொல்லாமல் சொல்லி அவரை வணங்கிடுவோம்.

அவரைப் பற்றி நாம் என்ன சொல்வது? அவரே சொல்லி  சங்கர் வெங்கடராமன் எழுதி அதை அல்லயன்ஸ் பதிப்பகம் “நாடகமே உலகம்” என்று பிரசுரித்த புத்தகம், நீலு அவர்களின் வாழ்க்கைப் பயணத்தில் பல சுவையான தகவல்களைக் கொண்டுள்ளது.

அவற்றில் சிலவற்றைப் படித்து ரசிப்போம்:

  • தேவனின் துப்பறியும் சாம்புவை  நாடகமாகப்  போட்ட நடராஜன் அவர்களின் நாடகத்தில் தான்  நீலு முதன் முதலில் நடித்திருக்கிறார்.
  • கூத்தபிரானின், தேன்மொழியாள் என்ற நாடகத்தில் தனக்கு ஒரு பிரத்யேகமான கேரக்டர் வேண்டுமென்று அடம் பிடித்து அற்புத ரோலை வாங்கியவர் ராமசாமி. அந்த கேரக்டர் பெயர் ‘சோ’. அதிலிருந்து தான் அவர் சோ ராமசாமி ஆனார்.
  • விவேகா ஃபைன் ஆர்ட்ஸ் என்ற நாடகக் குழு ஆரம்பிப்பதற்கு நீலு ஒரு முன்னோடி.
  • சோவின் எல்லா நாடகங்களிலும் இவருக்கென்று ஸ்பெஷல் பாத்திரம் உண்டு.
  • டி கே எஸ், ஆர் எஸ் மனோகர்,  நவாப் ராஜமாணிக்கம், ஒய் ஜி பி , கே. பாலசந்தர், மேஜர் சுந்தரராஜன், வி எஸ் ராகவன் இவர்களுக்கு நடுவில் சோவின் நாடகக் குழு வெற்றிக்கொடி நாட்டியதென்றால் அது சாதாரண விஷயம் இல்லை.
  • நீலு நடித்த முதல் திரைப்படம் ஆயிரம் பொய். கிட்டத்தட்ட 150 படம் பண்ணியிருக்கிறார்.
  • நீலுவின் மனைவி சாந்தா எம் எஸ் சுப்பலக்ஷ்மியின்  உறவினர்
  • வி டி சுவாமி என்ற கம்பெனியிலிருந்து ஓய்வு பெற்றபிறகு எல் வி கிரியேட்டர்ஸ் என்ற டி வி சீரியல் தயாரிக்கும் கம்பெனியில் புரடக்சன் மேனேஜராக இருந்தார்.
  • வாஷிங்டனில் திருமணம் சீரியலில் நடித்திருக்கிறார்.
  • பெஹரின் தமிழ்ச் சங்கம் இவருக்கு வாழ்நாள் சாதனையாளர் பரிசு கொடுத்துள்ளது.
  • திருப்பூரில்,  ரயில் நிர்வாகம் சோவின் நாடகக் குழுவிற்கான கோச்சை இணைக்க மறக்க ரயில் தண்டவாளத்தில் அமர்ந்து  சோவும் மற்றவர்களும் மறியல் செய்து வேறு கம்பார்ட்மெண்டில் இடம் பிடித்து வந்தார்களாம்.
  • கே பாலசந்தர், சோவோட நாடகங்களை டைரக்ட் செய்திருக்கிறார்.
  • விவேகா ஃபைன் ஆர்ட்ஸ் போட்ட நாடகங்கள் :
  • கோரக்கொலை, இன்டர்வியூ, டாக்டர் வேஷதாரி, திரிசங்கு, If it were to happen, , கல்யாணி, தேன்மொழியாள், If I get it, Why not, Don’t tell anybody, Wait and See, What for, Quo vadis, Call for Kingdom, சம்பவாமி யுகே யுகே, மனம் ஒரு குரங்கு, Saturday night, Is God Dead, சரஸ்வதியின் சபதம், முகமத் பின் துக்ளக், Tea house and the August Moon, என்று தணியும் இந்த சுதந்திர தாகம், இன்பக் கனா ஒன்று கண்டேன், உறவுகள் இல்லையடி பாப்பா, யாருக்கும் வெட்கமில்லை,உண்மையே உன் விலை என்ன, வைதேகி காத்திருந்தாள், வந்தே மாதரம், சட்டம் தலை குனியட்டும், ஜட்ஜ்மெண்ட் ரிசர்வ்ட், நேர்மை உறங்கும் நேரம்   
  • நீலு,  கிரேஸி மோகன் நாடகங்கள் பலவற்றிலும் (சமீபத்திய கூகிள் கடோத்கஜன் வரை) நடித்திருக்கிறார்.
  • விவேகா ஃபைன் ஆர்ட்ஸ் வெளிநாட்டில் நாடகம் போட்டதில்லை
  • நீலுவுக்கு அன்றும் இன்றும் என்றும் நண்பர்கள் நிறைய உண்டு.

கிரிஸ்பி தியேட்டரின் அசத்தலான நாடக விழா!

 

பிரும்ம ஞான சபா மற்றும் தமரா  வழங்கும் கிரிஸ்பி தியேட்டரின்  அசத்தலான நாடக விழா!

நேரம் : செப்டம்பர் 17  ஆம் தேதி சனிக்கிழமை மாலை 7 மணிக்கு

இடம் :  P S தக்ஷிணாமூர்த்தி கலையரங்கம், ஆர் . கே. மடம்  சாலை ,மயிலாப்பூர் , சென்னை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் சுமார் பத்து நிமிடம் மட்டுமே நடைபெறும் விறுவிறுப்பான எட்டு நாடகங்கள் !

கட்டணம் :  Rs . 200/ மட்டுமே

play1

1. முதல் நாள் முதல் காட்சி  ( தமிழ்  மற்றும் மலையாளம் ) – இயக்கம் : பூஜா டேவாரியா

2. அந்த ஒரு நிமிடம் (தமிழ்)  –  இயக்கம் : ஈஸ்வரன்

3. வலி  ( ஆங்கிலம்)  –  இயக்கம் : வஸந்த்

4.  விட்டு விடாதே (தமிழ்) – இயக்கம் : ஜகதீஷ் கன்னா

5.  கதவு ( தமிழ்)  – இயக்கம் :  ஜகதீஷ் கன்னா

6. மனித உறவுகள் (தமிழ்) –  இயக்கம் : தாரிணி

7. சாதாரண நகரம் (ஆங்கிலம்) – இயக்கம் : ஜனார்த்தன் ராகவன்

8. யூதவா (இலங்கைத் தமிழ்) –       இயக்கம் : விவேக் ராஜு

இவற்றில் பல சமீபத்தில் சென்னை ஷார்ட் & ஸ்வீட் நடத்திய நாடக விழாவில் பரிசு பெற்றவை !

தயாரிப்பு : தாரிணி – ஈஸ்வரன்  – ஜெயக்குமார்

 

படைப்பாளி – சுப்ரபாரதி மணியன் (எஸ் கே என் )

sub

திருப்பூர் வாசியான திரு சுப்ரபாரதிமணியன், கடந்த நாற்பது ஆண்டுகளாகச் சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள், கவிதைகள், நாடகம், நூல் மதிப்புரைகள் என பல படைப்புகளை அளித்தவர். இவரது “கனவு” இலக்கியச் சிற்றிதழ் 1987 முதல் வெளிவருகிறது. திருப்பூரில் தொடர்ந்து இலக்கிய நிகழ்வுகளையும் நடத்தி வருகிறார். கதா விருது, தமிழக அரசு சிறந்த நாவல் விருது உட்பட பதினைந்திற்கும் மேற்பட்ட விருதுகள் பெற்றவர். பல்வேறு மொழிகளில் இவரது கதைகள் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளன. சிறந்த திரைப்பட ஆய்வாளர். இவரது தெளிவான விமர்சனக் கட்டுரைகள் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. 11 நாவல்கள், 15 சிறுகதைத் தொகுப்புகள், குறுநாவல்கள், கட்டுரைத் தொகுப்புகள், மொழிபெயர்ப்புகள் என 40க்கும் மேற்பட்ட புத்தகங்கள் வெளியாகி உள்ளன.
**************************************************************
இவரது புதுப் பழக்கம் என்னும் கதை இப்படித் தொடங்குகிறது.

பஸ் இரைச்சலுடன் வந்து நின்றது. புழுதியை அலட்சியப்படுத்தியபடி இறங்கினர். தினத்திற்கு ஒரு தரம் மட்டுமே வரும் பஸ். ஏறவும் நிறையக் கூட்டமிருந்தது. ஆலமரத்துப் பின்புறத்திலிருந்து பரபரப்பாய் ஓடி வந்தாள் ஈஸ்வரி. ” அய்ய… பஸ்ஸு.. ” என்று வாய் விட்டுச் சொன்னாள்.
ஈஸ்வரிக்கு பஸ் ஒரு வேடிக்கை.

பள்ளிக்கூட நாட்களில் சரியாகக் கணக்கு பாட நேரத்தில்தான் வரும். கணக்கு வாத்தியார் வேடிக்கை பார்க்க அனுமதிக்க மாட்டார். எனவே, விடுமுறை நாட்களில் இன்னும் சில வாண்டுகளுடன் இரைக்க இரைக்க ஓடி வந்து பஸ் வருவதை வேடிக்கை பார்ப்பது ஒரு ஆனந்தம். “ஆரன் அடி மாமா ..” என்று ஓட்டுனுரைப் பார்த்துக் கேட்பதும்  அந்த ஒலி கேட்டு மகிழ்வதும் சிலசமயம் நடக்கும்.

இரண்டு நாட்கள் முன்பு, மூன்று கூடைகளுடனும் ஒரு பெரிய பாத்திரத்துடனும் ஒரு பெண்மணி பஸ்ஸில் வந்து இறங்கி நின்றுகொண்டு இருந்தாள். ஈஸ்வரியையும் அவள் சகாக்களையும் பார்த்து இல்லம் எங்கே இருக்கிறது என்று கேட்டாள். இவர்களே இல்லத்தைச் சேர்ந்தவர்கள்தானே. ஆளுக்கு ஒரு பொருளைத் தூக்கிகொண்டு இல்லம் நோக்கிச் செல்கையில், எவ்வளவு நாளாக அவர்கள் இல்லத்தில் இருக்கிறார்கள் என்று விசாரிக்கிறார். ஈஸ்வரி மட்டும் கடந்த ‘விசாழன்’ வந்து சேர்ந்தவள் என்று தெரியவருகிறது, ‘நீங்களெல்லாம் அனாதைகளா?’ என்றும் கேட்டுவிட்டு, தவறாகக் கேட்டுவிட்டோமோ என்று கூச்சமும் அடைந்தாள் அந்தப் பெண்மணி.

ஈஸ்வரிக்கு அக்காவும் ‘பாவா’வும் உண்டு. ஈஸ்வரியையும் அவள் அக்காவையும் வளர்த்த மாமா, அந்த அக்காவை இரண்டாம் தாரமாக மணமுடிக்கக் கேட்டாராம் , அதனை மறுத்து ‘பாவா’வை மணமுடிக்க, ஈஸ்வரியை வளர்க்க மாமாவோ பாவாவோ முன்வரவில்லை. வேறு வழியின்றி அனாதை என்று சொல்லி அக்காவே ஈஸ்வரியை இல்லத்தில் சேர்த்துவிட்டாள்.  இந்த ஒரு வாரத்திற்குள்ளேயே ஜெபம் சொல்லவும் சரியாக சிலுவை போடுவதற்கும், சிஸ்டர், பிரதர் என்று விளிக்கவும் கற்றுக்கொண்டுவிட்டாள் ஈஸ்வரி.

அந்தப் பெண்மணி கொண்டு வந்த இனிப்புகளும் பழங்களும் அனைவருக்கும் கிட்டின. சிஸ்டர் அவளுக்கு ஹாப்பி பர்த்டே சொல்ல அனைவரும் கைதட்டினார்கள்.

இன்றும் யாராவது வருவார்களா என்ற எதிர்பார்ப்புடன் பஸ்ஸிற்காகக் காத்திருந்த ஈஸ்வரி, யாரும் வராததால் பஸ் பின்னால் ‘டுர்ர்’ என்று ஓடிக் களைக்கிறாள். சிவப்பு நந்தியாவட்டைப் பூக்கள், பிள்ளையார், வண்ணத்துப் பூச்சி என்று வேடிக்கை பார்த்த ஈஸ்வரி ஆலமரத்தடியிலே கண்ணயர்ந்து விடுகிறாள்.

விழித்ததும் சுற்றுமுற்றும் பார்க்கிறாள். கூடவந்த இல்லத்து நண்பர்கள் யாரையும் காணவில்லை. ஜெப நேரமும் அதனை அடுத்த உணவு நேரமும் கடந்திருக்குமா என்றும் தெரியவுமில்லை. ரோட்டில் போய்க்கொண்டிருக்கும் மாட்டு வண்டிகளையும், செம்மறியாட்டு மந்தையையும் வேடிக்கை பார்த்தபடி நடக்கிறாள். மாமா வீட்டில் இருந்தபோது விடுமுறை நாட்களில் அக்கா காட்டன் ஆபீசிலிருந்து திரும்பும்வரை இப்படி அலைந்து திரிவதுதானே வழக்கம்.
இல்லம் அடைகிறாள். கைவைத்து மெல்லக் கேட்டைத் திறந்து போகிறாள்

எல்லோரும் சாப்பாட்டுத் தட்டுடன் அமர்ந்திருந்தார்கள். தட்டில் சாதம் விழுந்திருந்தது. அவளை யே எல்லோரும் பார்த்தார்கள்.
பிரதர் சார்லஸ் கைகளைக் கட்டிக்கொண்டு நின்றிருந்தார். கேட்டை மறுபடியும் மூடுகையில் அவர் நகர்ந்து வருவது ஈஸ்வரிக்குத் தெரிந்தது, அவர் வெகு சீக்கிரம் அவள் அருகில் வந்து நின்றார்.

“ஜெபத்துக்கு வராமே எங்க போயிருந்தே…?
“வெளியே…”
அவள் சொல்லச் சொல்ல அவள் முகத்தில் அறை விழுந்தது.
“ஜெபத்துக்கு இல்லாமே வெளிய கேட்குதோ…”

கோணிக்கொண்டு வந்த அழுகையுடன் “தினமும் போறதுதானே பிரதர். ஜெபம்தா புதுசு” என்றாள் சிதைந்த குரலில்.
என்று முடிகிறது.
***********************************************************************
செகந்தரபாத்தில் பணிபுரிந்த நாட்களில் வெளிவந்த ‘தொலைந்துபோன கோப்புகள்’ முதலிய கதைகள் பரவலாகப் பேசப்பட்டவை. ‘டாலர் சிட்டி’ என்று அறியப்படும் திருப்பூர் வாழ்க்கை பனியன் தொழிற்சாலைகள் ஏற்படுத்தும் ஏற்ற தாழ்வுகளையும் , சமுதாயச் சிக்கல்களையும், சுற்றுப்புற சூழல் பாதிப்புகளையும் தனது கதைகள், கட்டுரைகள் நாவல்கள் மூலம் பேசி வருபவர். குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு, நொய்யல் ஆற்றைப் பாதுகாத்தல், பெண்கள் சுரண்டப்படும் ‘சுமங்கலி’ திட்ட எதிர்ப்பு என சமூகக் களப்பணியிலும் முன் நிற்பவர்.
இவரது குறிப்பிடத்தக்க நாவல்களில் சில : ஓடும் நதி, மற்றும் சிலர், சாயத்திரை, நீர்த்துளி, புத்துமண்.

சிறுகதைகளில் சில:- ஆழம், தொலைந்துபோன கோப்புகள், ஒலைக்கீற்று, அரேபியக் கிராமம், கைகுலுக்க நிறைய சந்தர்ப்பங்கள்.
இணையத்தில் கிடைக்கும் ஒரு கதை : ஒவ்வொரு ராஜகுமாரிக்குள்ளும்-

எஸ் கே என்

சாகித்ய அகாதமி விருது (எஸ் கே என்)

2015 ஆம் ஆண்டு மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாதமி விருது திருமதி கௌரி கிருபானந்தனுக்கு வழங்கியதை நாம் பிப்ரவரி குவிகம் இதழிலேயே கூறினோம்.

அந்த விருது வழங்கும் விழா இந்த ஆகஸ்ட் மாதம் 4 ந் தேதி மணிப்பூரின் தலைநகர் இம்பாலில் நடைபெற்றது.

Inline images 2

தெலுங்கில் வோல்கா என்பவர் எழுதிய கதையை மீட்சி என்ற தலைப்பில் எழுதியதற்காகக் கிடைத்த விருது இது இதற்காக கௌரி கிருபானந்தனை எத்தனை முறை பாராட்டினாலும் தகும். 

 

IMG_5737

(ஆகஸ்ட் 7 அன்று சென்னையில் நடந்த ஒரு விழாவில் எடுத்த புகைப்படம் )

 IMG_5735 IMG_5733

 

மணிப்பூரில் சாகித்ய அகாதமி நிகழ்வு

இந்திய அரசினால் 1954ல் இலக்கியத்திற்காக ஒரு தேசீய அமைப்பாக தொடங்கப்பட்ட சாகித்ய அகாதமி  இந்திய மொழிகளில் படைப்பு உலகத்திற்கு ஒரு சீரிய பணியை ஆற்றி வருகிறது. இடையிடையில் பல விவாதங்களுக்கும் உள்ளாகி வருகிறது.

அகாதமி யின் முக்கியச் செயல்பாடுகளுகளில் ஒன்றாக ஆங்கிலம் மற்றும் 23 இந்திய மொழிகளில் படைப்பு, இளைஞர்கள் படைப்பு, குழந்தைகளுக்கான இலக்கியம் மற்றும் மொழிபெயர்ப்பு என்று நான்கு விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப் படுகிறது.

அகாதமி யின் ஒரு சில நிகழ்ச்சிகளில் பார்வையாளனாகக் கலந்துகொள்ளும் வாய்ப்பு அவ்வவ்போது? கிடைக்கும். 2015 ஆண்டிற்கான மொழிபெயர்ப்பு விருது  வழங்கும் விழா மணிப்பூர் மாநிலத்தில் இம்பால் நகரத்தில் ஆகஸ்ட் மாதம் 4 தேதி நடைபெற்றது. விருது வழங்கும் நிகழ்ச்சியைத் தொடர்ந்து 5 ஆம் தேதி  கௌரவிக்கப்பட்ட மொழிபெயர்பாளர்கள் உரை மற்றும் ‘அபிவ்யக்தி’ என்னும் நிகழ்வின் முதல் பகுதியான கவிதை வாசிப்பு நடைபெற்றது. ஆறாம் தேதி நிகழ்வுகளான சிறுகதை வாசிப்பு, நான் எழுதுவதற்கான தூண்டுகோல் மற்றும் கவிஞர்கள் சந்திப்பு ஆகிய நிகழ்ச்சிகளைக் காண இயலவில்லை.

மகாராஜா சந்த்ரகீர்த்தி அரங்கில் அரங்கிலும் வெளியிலும் அருமையான அலங்காரங்கள்.  நிகழ்ச்சி தொடங்கும் முன் நடந்த மணிப்பூரின் பரம்பரிய கலையான நடனமாடும் தாள இசைக்கலைஞர்களின் நிகழ்ச்சி    (‘பங்க் சோலோம்’)  கண்ணிற்கும் காதிற்கும்  நல்ல விருந்தாக இருந்தது. அங்கீகரிக்கப்பட்ட 24 மொழிகளிலில் மொழிபெயர்ப்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்கள் அதில் வந்திருந்த 22 விருது பெற்றவர்களுக்கும் அவர்களைப் பற்றிய குறிப்புகளை வாசிக்கப்பட,  திரு திவாரி (சாகித்ய அகாதமியின் தலைவர்) மற்றும் ஞானபீட விருது பெற்ற குஜராத்தி எழுத்தாளர் திரு சவுதரி ஆகியோர் பூங்கொத்து, பட்டயம் மற்றும் பரிசுத்தொகை வழங்கினார்கள்.

பல்வேறு மொழிகள் பேசப்படும் இந்தியாவின் ஒருங்கிணைப்பிற்கு மொழிபெயர்பாளர்களுக்குக் குறிப்பிடத்தக்க பங்களிப்பு இருப்பதை தலைவர் திவாரி குறிப்பிட்டார். சிறப்புரையாற்றிய திரு சவுத்ரி விருது பெரும் படைப்பாளிகளில் 13 ஆண்களும் 9 பெண்களும் என்று குறிப்பிட்டு இது இனி வரும் ஆண்டுகளில் தலைகீழாக மாறலாம் என்று கருத்து தெரிவித்தார். மேலும் புதினங்களும், கவிதைத் தொகுப்புகளும், சிறுகதைத் தொகுப்புகளும் நிறைய இருந்தாலும் ஒரே ஒரு கட்டுரைத் தொகுப்புதான் உள்ளது என்றார். நாடகம் இல்லவே இல்லை என்பதும் கவனிக்கத்தக்கது என்றார்.

மறுநாள் முதல் அமர்வில் 22 விருதாளர்களும் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்கள். உரைகள் ஆங்கிலத்திலோ அல்லது ஹிந்தியிலோ இருந்தது. (படைப்பின் ஆங்கில அல்லது ஹிந்தி மொழிபெயர்பிலிருந்து மறு மொழிபெயர்ப்பு செய்வதைவிட  படைப்பு வெளிவந்த மொழியிலிருந்து நேரடியாக மொழிபெயர்த்தலே சிறந்தது என்ற பொதுக் கருத்து நிலவியது. மொழிபெயர்ப்பில் எடுத்துக்கொள்ள வேண்டிய கவனங்கள், படைப்பு மொழி பேசுபவர்களின் கலாச்சாரம் மற்றும்  இருமொழிகளிலும் நிலவும் சொலவடைகள் தெரிந்திருத்தல் , படிப்பினை ஆழ்ந்து படித்து உணரவேண்டிய தேவை, சரியான சொல் அல்லது சொற்றொடர் ஆராய்ந்து பயன்படுத்துதல் ஆகியவற்றின் அவசியம் பலரது சொற்பொழிவுகளில் குறிப்பிடப்பட்டது. ஒரே ஒரு மொழிபெயர்ப்பாளர் தவிர மற்றவர்கள்  இலக்கு மொழியினரின் புரிதலுக்காக தேவைப்படும் இடங்களில் அடிக்குறிப்பு கொடுப்பதுதான் சிறந்தது என்று எல்லோரும் கருத்து தெரிவித்தார்கள். ஒருவர் மட்டும்,   இலக்கு மொழியினரின்  புரிதலுக்காக  சொல்லப்பட்டவைகளில் கூட்டல் கழித்தல் மற்றும் மாற்றலும் கடைபிடித்து மொழிபெயர்ப்பு ஒரு மொழியாக்கமாக  இருக்கவேண்டும் என்றார்.

மாலையில் ‘அபிவ்யக்தி’யின் முதல் அமர்வாக கவிதை வாசிப்பு நிகழ்வு. அபிவ்யக்தி என்றால் வெளிப்பாடு  என்னும் பொருள் என்று சொன்னார்கள்.  கருத்து என்பது எல்லோருக்கும் இருந்தாலும் அதை வெளிப்படுத்துபவர்கள் குறைவு. அவர்கள்தான் படைப்பாளிகள். சொல், இசை, சித்திரங்கள், சிற்பம் போன்ற பல சாதனங்களில் அந்த வெளிப்பாடு இருக்கக்கூடும். மொழிபெயர்ப்பு என்பது ஒருங்கிணைப்பு ஆயுதம் என்றும் சொல்லப்பட்டது. தொடர்ந்து தவிர அஸ்ஸாமிய, போடோ, மணிப்புரி, நேபாளி, டோங்க்ரி, ஹிந்தி கவிஞர்கள் தவிர தமிழகத்தை சேர்ந்த கவிஞர் யூமா வாசுகி கவிதைகளை வாசித்தார்கள். முதல் கவிதையை தங்கள் மொழியிலும் பிறவற்றின் ஆங்கில அல்லது ஹிந்தி மொழிபெயர்ப்புகளை வாசித்தார்கள்.

எல்லா நிகழ்வுகளும் சிறப்பாக இருந்தன. ஏற்பாடுகள் மிகுந்த கவனத்துடன் செய்யப்பட்டிருந்தன. மூன்றாவது நாள் நிகழ்வுகளை தவறவிடும் மனக்குறை இருந்தது. பணி நிமித்தமாக கொஞ்சம் ஹிந்தி பேசக் கற்றிருந்தது மிக உதவியாக இருந்தது. இல்லையெனில் ரசிப்பது மற்றுமின்றி  மற்றவர்களுடன் உரையாடுவதே மிகக் கடினம்.

இடையில் கிடைத்த சிறிது நேரத்தில், இம்பாலின் காங்க்லா கோட்டை, அருங்காட்சியகம், முழுவதும் பெண்களே நடத்தும் கடைகள் கொண்ட சந்தை RKCS கலைக்கூடம் ஆகிய இடங்களுக்குச் சென்று வந்தோம். (பெண்கள் நடத்தும் சந்தை மற்றும் அருங்காட்சியம் இரண்டுக்கும் இடையே எங்கள் வாகனம் நின்றிருந்த இடத்தில் மறுநாள் குண்டு வெடிப்பு நடந்தது)

தீர்க்கரேகை 94ல் அமைந்திருப்பதால் ஐந்து மணிக்கு முன்பே பொழுது விடிந்தது விடுகிறது. மிக அருமையான இயற்கை எழிலுடன் கூடிய மணிப்பூர் மாநிலம் சோகங்கள் நிறைந்த  வரலாறும், பழமை வாய்ந்த கலாச்சாரமும் உடையது.

Inline images 1

சில மாதங்களுக்கு முன்னால் சதுரங்கம் என்னும் நாடகம் பார்க்கும் வாய்ப்பு கிட்டியது. மணிப்பூரில் அமலில் இருக்கும்   ராணுவம் (விசேஷ அதிகாரங்கள்) சட்டம் 1958 தொடர்பான சிக்கல்களை மையமாகக் கொண்ட நாடகம் அது.  கடந்த வாரத்தில் எல்லா தினசரிகளிலும்  மணிப்பூர் போராளி  இரோம் ஷர்மிளா  பற்றிய செய்திகள் வந்துள்ளன.   வரலாறும் அரசியல் சமூகச் சிக்கல்களும் குறித்த ஒரு கட்டுரை தனியாக எழுத வேண்டும்.         

 

கடல்புறா – ஒலிப்புத்தகம் – பாம்பே கண்ணன்

பாம்பே கண்ணன்  ஏற்கனவே பொன்னியின் செல்வன் ஒலிப்புத்தகத்தில் மிகவும் பிரபலமானவர்.  பார்த்திபன் கனவு, சிவகாமியின் சபதம், அப்புசாமியும் ஆப்பிரிக்கா அழகியும்  போன்ற அருமையான கதைகளை ஒலி வடிவத்தில் தந்திருக்கிறார்.

அவரது சமீபத்திய மாபெரும் படைப்பு சாண்டில்யனின் கடல்புறா. சிறப்பான குரல் வளம் கொண்ட கலைஞர்களைக் கொண்டு தயாரித்த அந்த ஒலிப் புத்தகத்தின்  பெருமையை அந்தப் புத்தகமே பேசுகிறது. சாண்டில்யனின் சிருங்கார வர்ணனைகளை பாம்பே கண்ணனே படிக்க, மற்ற கதா பாத்திரங்கள்  உணர்ச்சியுடன்  காதில் தேன் வந்து பாய்ந்தது போல வளப்பமானத் தமிழைத் தெளிவாகக் கணீரென்று சொல்ல, கதையுடன் இழைந்து  வரும் மெல்லிசையும் சேர்ந்து இசைக்க நாம் நம்மை  அறியாமலே 1063க்கு – கதை  நடந்த காலத்திற்கே நாம் சென்றுவிடுகிறோம் என்றால்  அது ஒலிப் புத்தகமாக அமைத்த பாம்பே கண்ணன் அவர்களின்  வெற்றி என்று தான் சொல்லவேண்டும்.

ஐ டி கம்பெனியில் முதன்மை அதிகாரியாக இருந்தாலும் தமிழின் மீது உள்ள ஆர்வத்தால் வெங்கடராமன் அவர்கள் பாம்பே கண்ணனுடன் இணைந்து இந்த ஒலிப் புத்தகங்களைத் தயாரிக்க வந்ததற்காக அவரை எவ்வளவு பாராட்டினாலும் தகும் .

இதன் டிரைலரைப் பாருங்கள். இல்லை கேளுங்கள்!

கடல்புறாவின் ஒலிப்  புத்தகத்தின் வெளியீட்டு விழா நல்லி குப்புஸ்வாமி, டெல்லி கணேஷ், பாத்திமா பாபு, ‘லேடீஸ் ஸ்பெஷல்’ ஆசிரியர் கிரிஜா ராகவன், சாண்டில்யன்  அவர்களின் மகன் சடகோபன் ஆகியோர் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது.

2 டி வி டி கள். 3 பாகங்கள்.  42 மணி 34 நிமிடங்கள் ஆகும் இந்தப் புத்த்கத்தை முழுதும் கேட்க .  நிச்சயம் அவ்வளவு நேரம் ஒரேடியாகக்  கேட்க யாராலும் முடியாது.

மொபைலில் தினம் ஒரு அத்தியாயத்தைப் பதிவிறக்கம் செய்துகொண்டு  கேட்கலாம். அலுவலகத்துக்குக் காரிலோ இரயிலிலோ செல்லும் போது  அல்லது வீட்டில் இரவில் சாப்பிட்டுவிட்டுப் படுக்கும் போது மனைவியுடன் சேர்ந்து கேட்கலாம்.

மேடையில் டெல்லி கணேஷ் நான் கேட்க  நினைத்த கேள்வியையே கேட்டார்.  ” இந்த ஒலிவடிவத்தில்  வருணனைகள் இல்லாமல் நாடகமாகச் செய்திருக்கலாமே ? ” என்று கேட்டார். பாம்பே கண்ணன்     ” வருணனைகளுடன்  சொன்னால் தான் புத்தகத்தை முழுமையாக  உணரமுடியும்”  என்றார். எனக்கு அதில் முழு உடன்பாடு இல்லை. ஒலிச்சித்திரமாக தேவையானால் கதை புரிய சில  வருணனைகளுடன்  அமைத்தால் இன்னும் நல்ல  வீச்சும் ரீச்சும் இருக்கும் என்பது என் கணிப்பு.

ஆனால் இது பாம்பே கண்ணனின்  வடிவம் ( வசனத்தைப் படிப்பவர் அவரே) . அதைப் போற்றுவோம். மேலும் பல புதுமைகள் வரட்டும். வரவேற்போம். 

2 டிவிடிக்கள் கொண்ட ‘கடல்புறா’ ஒலிப்புத்தகத்தின் விலை ரூபாய் 700/ .

நல்ல தமிழ் கேட்க விழையும் தமிழ் ரசிகர்களும், சரித்திரத்தில் ஈடுபாடு கொண்ட மக்களும், சாண்டில்யனின் வர்ணனைகளில் மனதைப்  பறி  கொடுத்தவர்களும், கடல்புறா என்ற காவியத்தில் கலந்து அதன் ஒவ்வொரு அணுவையும் ரசிக்கும் என் போன்ற உள்ளங்களும் இதை வாங்கிப் பயன்பெறவேண்டும். 

வாங்க நினைப்பவர்கள் திரு பாம்பே கண்ணன் அவர்களை அணுகலாம் ( மொபைல்: 9841153973) . கீழே குறிப்பிட்டுள்ள  இணைய தளத்தின் மூலமாகவும் பெறலாம்.

http://nammabooks.com/Buy-Novels-Essays-Tamil-Books-Online/Buy-Tamil-Historical-Novels-Online/buy-kadal-pura-audio-book

புதிய கண்டுபிடிப்புகள் – நன்றி சாய் கிருஷ்ணன்

அந்தக் காலத்து தினத்தந்தி ஜோக் மாதிரி ( மேற்கண்ட சிரிப்புக்கு வசனம்  தேவையில்லை)

படம் பார்த்துப் புரிந்து கொள்ளலாம் !

genius-products

 

genius-products3

 

genius-products6

genius-products9

 

genius-products19

நல்லா இருக்கில்ல?

இன்ஃபினி

 

1infi

மஹாத்ரயா ரா ஆசிரியராக இருந்து அறிவியல், உறவுகள், திருமணம், குழந்தை வளர்ப்பு, பதின்பருவம், மனோதத்துவம், பொருளாதாரம், ஆரோக்கியம், வாழ்வியல் விஞ்ஞானம் உள்ளிட்ட பல்வேறு பரிமாணங்களைக் கொண்ட மாதம் இருமுறை இதழாக இன்ஃபினி இதழ் வெளியாகிறது.

ரங்கராஜன் என்கிற மஹாத்ரயா ராவின் அழகான ஆங்கிலத்தில் வாழ்க்கைத் தத்துவ விளக்கங்களைக் கேட்கும் போது அந்தக்கால சின்மயாவின் அழகான ஆங்கில விளக்கங்களைக் கேட்பது போல் இருக்கிறது. 

உங்கள் கண்ணுக்குப் புலனாகாத உங்களின் அபரிதமான சக்தியாய்h வெளியே கொண்டுவந்து உங்களையும் உலகையும் மேம்படுத்துவது தான் இன்ஃபினி தத்துவத்தின் சாரம்.

பல்லாயிரக் கணக்கான மக்கள் குறிப்பாக இளைஞர்கள் மஹாத்ரயா ரா  அவர்களின் வார்த்தைகளைக் கேட்டு , தங்களை மேம்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

அவரது பயிற்சி முகாம்களில் பயின்று வாழ்வில் உன்னத நி.லையை அடைந்தவர் ஆயிரம் ஆயிரம். 

  

அவரது கையெழுத்திலேயே  கருத்துக்கள் அனுப்பப்படுகின்றன. 

இணையதளத்தின் மூலமாகத் தன் பரப்புரைளை நிகழ்த்துகிறார் மஹாத்ரயா ரா. 

தினமும் காலை 11.11 மணிக்கு  அவருடைய  உரை இணையதளத்தில் வெளியிடப்படுகிறது. 

http://www.infinitheism.com/todays-message.html
 

Subscription(Annual) - infini (Tamil)

சாட் போட் – chatbot – செயற்கை நுண்ணறிவு (Atificial Intelligence)

ரோபோட் என்பதிலிருந்து வந்தது தான் போட் .  நம்முடைய செய்திகளைப் படித்துப் புரிந்துகொண்டு அதற்குச் சரியான பதிலை அளிக்கும் மென்பொருள்தான் போட் .  அத்துடன் நாம் தொடர்ந்து டெக்ஸ்ட் செய்து உரையாடினால்  அதற்குப் பெயர்தான் சாட்போட்   (CHATBOT) 

CHATBOT க்கு  நான் வைத்த பெயர் ” அரட்டை எந்திரா” 

உங்கள் டி‌வி சரியாக வேலை செய்யவில்லை. நீங்கள் கம்பெனி ஆட்களுடன் போனில் பேசி விஷயத்தைக் கூறலாம் . இல்லையேல் இமெயில் அனுப்பலாம். அல்லது கம்பெனி பிரதிதிகளுடன் சாட்  செய்யலாம். அதாவது டெக்ஸ்ட் அனுப்பலாம் – உரையாடலாம்.  அரட்டை அடிக்கலாம்.   அல்லது அவர்கள் அழைப்பு மையம் ( கால் சென்டர்) ஆட்களுடன் பேசலாம். 

இதெல்லாம் பழங்கதை. வந்துவிட்டது புது கலக்கல் –  CHATBOT – அரட்டை எந்திரா. செயற்கை நுண்ணறிவுடன் உங்களுடன் உரையாடும் ஒரு கருவி. கிட்டத்தட்ட ரஜினிகாந்த் எந்திரனில் பேட்டி கொடுப்பது போல  இது நீங்கள் கேட்கும் கேள்விக்குப் பதில் சொல்லும் .  

இப்போது இந்தத் துறைதான் மிகவும் சூடான தலைப்பு.   செயற்கை நுண்ணறிவும் ( Artificial Intelligence) கருவி மொழியும் (Machine Language ) இணைந்து மிக வேகமாக முன்னேறிவருகிறது.  நாளையத் தொலைத் தொடர்பின் ஆணிவேர் இதுதான். 

 ஆப்பிள் ஐ போனில் வரும் ‘சிரி’ விண்டோஸ் சிஸ்டத்தில் வரும் ‘கோர்ட்டானா.’ கூகிளின் ‘கூகிள் நௌ’ , அமேஜானின்  அலெக்ஸ் எக்கோ போன்றவையும்  போட் வகைதான்.

இது எப்படி வேலை செய்கிறது என்று பார்க்கவேண்டும் என்று தோன்றுகிறதல்லவா ?

மிட்ஸுகு என்ற ஜப்பானிய எந்திரா (BOT ) உங்களுடன் உரையாடக் காத்திருக்கிறது.

செல்லுங்கள்    http://www.mitsuku.com/

நீ யார்? என்று கேட்டதற்கு மிட்ஸுகு சொன்ன பதில் : 

நான் செயற்கை நுண்ணறிவின் புதிய வரவு.  மனித மூளையின்  திறமையோடு அதி வேகமாகவும் சரியாகவும் செய்யக் கூடிய மனித எந்திரம். 

உங்களுக்குப் பொழுது போகவில்லையா ? ஒரு நல்ல எந்திராவுடன் அரட்டை அடியுங்கள்.

 கண்ணம்மாப்பேட்டைக்கு எப்படி போகணும்னு வழி தெரியலையா? (வேற உதாரணமே கிடைக்கலையா என்று எந்திரா திட்டினாலும் திட்டும்) . எந்திரா கிட்டே கேட்டால் ரோட்டை மட்டுமல்ல ரூட்டையும் காட்டும். அது இணைய தளத்தில தேடித்தான் காட்டுது. 

பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் கோச்சிங் சென்டரிலும் இந்த போட்டுக்கு நல்ல வரவேற்பு. மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் கொடுப்பதிலிருந்து, அவர்கள் அவற்றைச் சரிவரச் செய்து விட்டார்களா, எங்கே எல்லாம் தப்பு செய்திருக்கிறார்கள் ,எங்கு அவர்களுக்கு ஆசிரியரின் உதவி தேவைப்படுகிறது, சரியான விடை இருக்கும் இணையதளம் போன்ற பல நிகழ்வுகளை நிகழ்த்துகிறது இந்த எந்திரா. மனித குறுக்கீட்டைக் கிட்டத்தட்ட 90 சதவீதம் குறைக்கிறது . 

இப்போதைக்கு ஆங்கிலத்தில்தான் நீங்கள் இதனுடன் உரையாடலாம். கூடிய விரைவில் தமிழில்

” என்னம்மா கண்ணு சௌக்கியமா ? ” என்று நீங்கள் செய்தி அனுப்பினால் எந்திரா ”  ஆமாம்மா  கண்ணு சௌக்கியம்தான்” என்று பதில் எழுதும்  காலம் ரொம்ப தூரத்தில் இல்லை. 

 

பத்து நிமிட நாடகப் போட்டி முடிவுகள்

 

சிறந்த தயாரிப்பு : முதல் பரிசு :  Evam Lab : 27/ஃப்/5’11”

 

சிறந்த தயாரிப்பு : ரன்னர்ஸ் -அப் : QUID PRO QUO: தமயந்தி  & The Ordinary City 

 

பரிசு பெற்ற மற்றவர்கள்: 

சிறந்த பொதுத் தோற்றம் : F D F S ( First Day First Show) 

சிறந்த இயக்குனர்:பார்க்கவ் ராமகிருஷ்ணன்  (Shakespeare As You Like It ) 

சிறந்த மேடைக்கதை : சென்னைப்பட்டினம் 

சிறந்த நடிகர் (ஆண்) : கோகுல் ஆனந்த், வைத்யா எம் சுந்தர் , வெங்கடராமன் பாலகிருஷ்ணன் 

சிறந்த நடிகர் (பெண்) : லக்ஷ்மிப்ரியா சந்த்ரமௌலி 

இவை மீண்டும் பி‌எஸ் பள்ளி நாடக மன்றத்தில் செப்டம்பர் 17,18 தினங்களில் நடக்க உள்ளன.  

நா முத்துக்குமார் – ஓர் அஞ்சலி

  “ஆனந்த யாழை மீட்டுகிறாய் ” என்று எழுதிய இவரது கரங்கள் தற்போது இறைவனுக்காகப்  பாடல் புனையப் போய்விட்டன !

“அழகே அழகே எதுவும் அழகே : என்று அழகை ஆராதித்த இவர் சொர்க்கத்தின் அழகை வர்ணிக்கப் போய்விட்டார் !

‘காவிரி நாட்டைInline images 1யும் கைக்குத்தல் அரிசியையும்’  பல்லெலக்கா என்று பாடிய இவர் இவற்றையெல்லாம் உதறித் தள்ளிவிட்டு  வேறு உலகம் சென்றுவிட்டார்!

இரண்டு தேசிய விருதுகள் ! தமிழக அரசு விருதுகள்! பிலிம்பேர் விருதுகள்! என்று விருதுகள் வாங்கிக் குவித்தவர் இன்று ஆண்டவன் கையில்  விருது வாங்கப் புறப்பட்டுவிட்டார் ! 

நல்ல கவிஞரை நாடு இழந்துவிட்டது!

 

அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கும் ரசிகர்களுக்கும் குவிகம் தனது ஆழ்ந்த வருத்தங்களைத் தெரிவித்துக் கொள்கிறது. 

ஷார்ட் பிளஸ் ஸ்வீட் – பத்து நிமிட நாடகங்கள்

drama1

உலக அளவிலான குறு  நாடகங்களை ( பத்தே நிமிடங்கள்) ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கணக்கில்  அறிமுகப்படுத்து கிறார்கள் இந்த ஷார்ட் பிளஸ் ஸ்வீட் அமைப்பு. 

தென் இந்தியாவில் ஜூலை மாதத்தில்   அல்லையன்ஸ் பிரான்சிஸ் அரங்கில் (நுங்கம்பாக்கம்,சென்னை ) இந்த விழா நடைபெறுகிறது. 30க்கும்  மேற்பட்ட நாடகங்களை நடத்தி அவற்றுள் சிறந்தவற்றைத் தேர்ந்தெடுத்து இயக்குனர்,நடிகர்களுக்குப்   பரிசுகள் வழங்கி உலக அளவில் அவர்களைக் கொண்டு செல்ல இந்த ஷார்ட் பிளஸ் ஸ்வீட் அமைப்பு உதவுகிறது. 

ஜூலை 6 லிருந்து – 23 வரை  இந்த குறு நாடக விழா நடைபெற உள்ளது.  முப்பது நாடகங்கள் மற்றும் திடீர் வரவு ( wild card ) கிட்டத்தட்ட 20   நாடகங்கள் நம்மை மகிழ்விக்க வருகின்றன.

27,29.30,31 தேதிகளில் இவற்றின்  இறுதிச் சுற்று நடைபெறும்.

வருகின்ற நாட்களில் வரப் போகும் நாடகங்கள் : 

Top 30 Week Two (13, 15, 16 and 17 July 2016 – 7 pm to 9 pm)
Play Playwright Director/ITC
The Goon Pete Malicki Ramakrishna Dhanasekaran
Objectum Sexuality Ron Burch Meera Sitaraman
Who Am I R.Baskar (Koothu -P- Pattarai) R. Baskar
Unsubscribe! Drishya Gautam (The Stirfry Collective) Drishya Gautam
Nee John Pradeep Udhaykumar Gunasekaran
Real or Reel Sabarish Menon (The Drama Troupe) Sabarish Menon
Damayanthi Janardhan Raghavan Guru Narayan Chandrasekaran
Making a Supershero Bhargav Prasad Bhargav Prasad
Sweep Sweep Balakrishnan Venkataraman (Theatre Nisha) Janani Narasimhan
A tale of a tall girl or 27 f 5 11 Shruti Parasuram (Evam Lab) Sunil Vishnu
Wildcards 2 (16 and 17 July 2016 – 2 pm to 4 pm)
Play Playwright Director/ITC
Ariyanai 234 Vishnu Varatharajan, Kishore (Saaral Koothu Pattarai) Prasanna M
Forgive me Father Sally Bartley Dharish Kumar
Debutantes Shakila Arun (Applause Theatric Activities) Shakila Arun
Man & Monkey Cordis Paldano (Theatre of Maham ) Hari Ramakrishnan
The Animal Sudarsun Raghavan (Theatre Zilch) Sudarsun Raghavan
Right Swipes and Wrong Moves Susan Goodell Charles Britto
A Play on Consent Tarana Reddy Prarthana Chandrasekaran

Top 30  Week Three (21, 22, 23 and 24 July 2016 – 7 pm to 9 pm)
Play Playwright Director/ITC
Hammer Time Sasha Siljanovic Sushant Alexander
War Kiss Alex Broun Karthik Anantharaman
Red Wire Blue Wire Albert Jamae Shravan Karthikeyan
How to find Joy in Nothingness Charles Britto Adhira Pandilakshmi
Yours Urgently Rajiv Rajaram (MP Sabha) Rajiv Rajaram
Chennai Pattinam 2065 Mathivanan Rajendran (Stray Factory) Mathivanan Rajendran
Makku Police Manguttu Thirudan Karthikeyan Ravi John Pradeep
Sweet Manibharathi (Azhagammai Theaters) Manibharathi
Thaathaavin Petti Vinodhini Vaidyanathan (Theatre Zero) Amit Singh
Boob Job Meera Sitaraman Balakrishnan Venkataraman

 

இளமை  + புதுமை + வித்தியாசமான கதைக் களன் + அட்டகாசமான நடிப்பு + வசனம் + அதி வேகக் காட்சி அமைப்பு – இவையே இந்த விழாவின் சிறப்பம்சங்கள்.

ஜூலை 8 அன்று நடைபெற்ற பத்து நாடகங்கள், நமக்கு ஒரு புது உலகத்தை அறிமுகப் படுத்தியது.  பெரும்பாலும் ஆங்கிலத்தில் இருந்தாலும் சில நாடகங்கள் தமிழில் இருந்தன. 

The Funny Big Girl, First Day First Show, The Blind date, Manitha uravukal (தமிழ்), The Ordinary City, Ballet of Death (தமிழ்), How to find joy in Nothingness (தமிழ்), Shakespeare – As you Like It,Never Give Up (தமிழ்), Jam .

பார்த்த எட்டு நாடகங்களைப் பற்றி நம் கணிப்பு: 

The Blind Date: ஒருவன் தன் காதலிக்காக் காத்திருக்கும் போது காதலியின் பாட்டியைப் பார்த்து மயங்கி ஆவலுடன் டேட்டுக்குப் போகத் துடிக்கும் நாடகம்.

Manitha uravukal: எட்டு வருடங்களாக  அமெரிக்காவிலிருந்து  வராத மகன் ஒரு நாள் வருகிறான்.  ஆனால் பெற்றோர்களுடன் ஓரிரு நிமிடங்கள் பேசிவிட்டு உடனே புறப்பட்டுச் செல்கிறான் – அவனுடைய பெற்றோர்கள் துயரில் துடிக்கிறார்கள். 

The Ordinary City: சென்னையை வெறுக்கும் ஒரு வடக்கத்திக்காரன் கடைசியில் ஊரைவிட்டுப் போகும்போது சென்னையின் அருமையை உணர்ந்து தவிக்கும் கதை 

The Ordinary City, Ballet of Death : கண்ணுக்குத் தெரியாத ஒரு ‘குரல்’ஆறு பேரின் மனதில்  இருப்பதைச் சொல்ல அதனால் ஏற்படும் குழப்பத்தில்  ஒருவரை ஒருவர் சுட்டுக்கொண்டு சாகும் காமெடி கதை 

How to find joy in Nothingness : ஒரு முன்னாள் ராணுவ வீரன் தனக்குக் கிடைத்த ஓட்டல் காவல்காரன் வே:லையில் நிறைவு கொள்வது பற்றிய கதை. 

Shakespeare – As you Like It:  ஜூலியட்  எப்படி ஆணாதிக்கத்தால் பந்தாடப்படுகிறாள், புரூட்டஸ் ஜூலியஸ் சீசரைக் கொன்றது எப்படி GIF ஆக வந்தது, புரூட்டசும் ஆண்டணியும்  பேசும்போது அருண் கோஸ்வாமி போல controversy கிளப்புவது எப்படி என்று  சொல்லும் கலக்கல் காமெடி கதை  

Never Give Up: ஒலிம்பிக்ஸில் 400 மீட்டர் ஒட்டப்பந்தயத்தில் உலக சாதனை புரிய எண்ணிய பெண் கடைசி 100 மீட்டரில் துவண்டு விழ, ஆனால் மனம் கலங்காமல் வலியைப் பொருட்படுத்தாமல் நிகழ்ச்சியை முடித்து அடுத்த ஒலிம்பிக்ஸில்  சாதனை படைக்கத் தயாராக நிற்கும் பெண்ணைப் பற்றிய கதை 

Jam: டிராஃபிக் ஜாமிலும் இனிமை காணமுடியும் என்ற மேஜிக்கைச் சொன்ன கதை 

பார்வையாளர்கள் ஒட்டில் Shakespeare – As you Like It மற்றும் Never Give Up இரண்டும் சிறந்த நாடகங்களாகத் தேர்ந்து எடுக்கப்பட்டன. 

மகத்தான இறுதிச் சுற்றைப் பார்க்க ஆவலாயுள்ளோம் ! 

 

 

ரவிகிரணின் சாதனை – 1330 திருக்குறள் கர்நாடக இசையில்

‘சித்திரவீணை என். ரவிகிரண்’ என்றழைக்கப்படும் என். ரவிகிரண் தென்னிந்தியாவின் மைசூரைச் சேர்ந்த சித்திரவீணை கலைஞர் ஆவார். பாடகர், பாடல் இயற்றுநர், இசை ஆசிரியர், இசை எழுத்தாளர் என கர்நாடக இசைத் துறைகளில் பங்காற்றி வருகிறார்

இரண்டு வயதில் புதிய ராகத்தைக் கண்டுபிடித்து அதற்கு தன் அம்மா சூடாமணியின் பெயரை வைத்த இளம் புயல் இவர்.

கர்நாடக இசையில் இருக்கும் 35 தாளத்திற்கும் இசை அமைத்தவர் இவர். இது ஒரு தனி சாதனையாகும்.

பயிற்சிக்கும் மேடையில் பாடுவதற்குமான 72 மேளகர்த்தா ராகமாலிகா கீதத்தை கர்நாடக இசை உலகில் மலரச் செய்தவர்.

அவரோகணத்திலேயே  இசை அமைத்துப் பாடிய பெருமை இவருக்கு உண்டு.

தமிழ், தெலுங்கு,கன்னடம், ஹிந்தி, சமஸ்கிருதம் என்று ஐந்து மொழிகளில் இசை அமைத்த வித்தகர் இவர்.

சங்கீதா சூடாமணி , இசைப் பேரொளி என்ற பட்டங்களைப் பெற்றவர்.

அவரது சமீபத்திய சாதனை :

திருக்குறளின் 1330 பாடல்களுக்கும் கர்நாடக இசையில் இசையமைத்து அதற்குப் பெருமை சேர்த்தது தான். அதுவும் மூன்று நாட்களில் ( ஜனவரி 12-14) மொத்தம் 16 மணி நேரத்தில் இதை முடித்தது  அவரது பெருமையின் சிகரம்.  சில பாடல்களில் ஹிந்துஸ்தானி மற்றும் கர்நாடக இசையுடன்  நாட்டுப்புற இசையையும் இணைத்திருக்கிறார். 169 ராகங்களில் 1330 குறளையும்  இணைத்திருக்கிறார். சுதா ரகுநாதன், நெய்வேலி சந்தானகோபாலன் , அருணா சாய்ராம், சௌம்யா, உன்னிகிருஷ்ணன், நித்யஸ்ரீ மகாதேவன் போன்ற  75 பிரபலங்கள் மூலம் அவரது திருக்குறள் இசையை இசைக்க வைத்துள்ளார்.

இதன் இசை வெளியீட்டு விழா பிரபலங்கள் முன்னிலையில் ஜூலை 3ஆம் நாள் நாரதா கான  சபாவில் நடைபெற்றது.

அதற்காக ரவிகிரண் அவர்களை எப்படிப் பாராட்டினாலும் தகும்.

அந்த விழாவைத் தவறவிட்டவர்கள் இந்த வீடியோவில் அதைப் பார்க்கலாம்.

கிரேஸி மோகன் எஸ் எஸ்

கிரேஸி மோகன் – தமிழ் நாடக உலகில் கிட்டத்தட்ட 40 வருடங்களாக சிரிப்பு மழை பொழிந்துகொண்டிருக்கின்றவர். (எஸ் வி சேகர் ஒருவரைத்  தான் இவருக்குப் போட்டியாளராகக் கருதவேண்டும்). இவர்கள் வந்த பிறகு தமிழ் நாடகத்தின் தலையெழுத்தே சிரிப்புத் தோரணமாக மாறிவிட்டது என்று குறையும் உண்டு. ஆனாலும் நாடகம் திரைப்படம் தோலாக்காட்சி என்ற மூன்று  துறைகளிலும் நகைச்சுவையை வாரி வழங்கியவர் கிரேஸி மோகன்.

அவருடைய முதல் நாடகம் கிரேஸி தீவ்ஸ் இன் பாலவாக்கம், கிரேஸி மோகன் எழுதி எஸ் வி சேகர் நடித்த நாடகம்.  பயங்கர ஹிட்.  அதன் டாப் கிளாஸ் நகைச்சுவை வசனங்கள் குமுதம் பத்திரிகையில் தொடராக வந்து மாபெரும் வரவேற்பைப் பெற்றன.

அவரது  மற்ற நாடகங்கள்

 

ஒரு சொந்தவீடு வாடகை வீடாகிறது, – எஸ் வி சேகர்
ஒன் மோர் எக்ஸார்சிஸ்ட், எஸ் வி சேகர்
ரிடர்ன் ஆப் கிரேஸி தீவ்ஸ்,
கிரேஸி கிஷ்கிந்தா,
அய்யா அம்மா அம்மம்மா – காத்தாடி ராமமூர்த்தி
அலாவுடீனும் 100 வாட்ச் பல்பும்
மேரேஜ் மேட் இன் சலூன் -பாலசந்தரால் திரைவடிவும் ஆனது.  
மாது பிளஸ் டூ
மதில் மேல் மாது
மாது மிரண்டால்
ஜூராஸ்ஸிக் பேபி
மீசை ஆனாலும் மனைவி
ஒரு பேபியின் டயரிக் குறிப்பு
சாட்டிலைட் சாமியார்
சாக்லேட் கிருஷ்ணா
கூகுள் கடோத்கஜன்

திரைப் படங்களிலும் கிரேஸி மோகன் தன் சிரிப்பு முத்திரையைப் பதிக்கத் தவறவில்லை. அவரும் கமலும் சேர்ந்தால் படம் சிரிப்பில் எகிறும். படங்களில் இவரும் சேர்ந்து நடிக்கும்  போது காமெடி சும்மா களை கட்டும்.

கிரேசியின் கிரேஸி படங்கள் :

அபூர்வ சகோதரர்கள்
மைக்கேல் மதன காம ராஜன்
மகளிர் மட்டும்
இந்திரன் சந்திரன்
சதி லீலாவதி
அவ்வை சண்முகி
தெனாலி
காதலா காதலா
பம்மல் கே சம்மந்தம்
பஞ்சதந்திரம்
வசூல் ராஜா எம் பி பி எஸ்
ஆஹா
அருணாசலம்

இந்தப் படங்களில் இவருடைய நகைச்சுவை கொடி கட்டிப் பறக்கும்.

தொலைக்காட்சியில் 90 களில் அதுவும் டி‌டி1 மற்றும் டி‌டி2 இருக்கும் போது இவரது நகைச்சுவைத் தொடர்களில்  ஈர்க்கப்படாத மனிதர்களே இல்லையென்று சொல்லலாம்.

ஹியர் ஈஸ் கிரேஸி                                                                                                           மாது -சீனு                                                                                                                         நில் கவனி கிரேஸி                                                                                                         சிரி  க ம ப த நி                                                                                                                   கிரேஸி நேரம்                                                                                                                       விடாது சிரிப்பு                                                                                                                     சிரி சிரி கிரேஸி

இவற்றைத் தவிர விகடன், ஜூனியர் விகடன் பத்திரிகைகளில் இவர் எழுதிய தொடர் நாடகக் கதைகள் சிரிப்பை அலை அலையாகக் கொண்டு சேர்க்கும்.  அவற்றுள் முக்கியமானவை இரண்டு.

ஒன்று சிரிப்பு ராஜ சோழன்.  மற்றொன்று  கலிகால கரிகாலன்.

கலிகால கரிகாலனை அவரது crazymohan.com  என்ற அவரது வலைப் புத்தகத்தில் காணலாம்.

 

கடல் புறா -நாடக விமர்சனம்

கடல் புறா [Kadal Pura]

குமுதத்தில் கிட்டத்தட்ட மூன்று வருடம் தொடர் கதையாக வந்து மாபெரும் வெற்றி  பெற்ற சாண்டில்யனின் காவியப் புறா அது. இளைய பல்லவன் என்ற கதாநாயகனை எம்.ஜி.ஆர். பாணியில் ஏன் அதற்கும் மேலாகப் படைத்திருப்பார் சாண்டில்யன்.

அவனுடைய புத்திசாலித்தனம், எந்த சூழ் நிலையிலும் தன் அறிவு மீது அபார நம்பிக்கை வைக்கும் திறமை,  பெண்களைக் கவரும் கவர்ச்சி, வீரம், துணிச்சல், விவேகம் எல்லாம் கலந்த கலவை அவன்.

கருணாகர பல்லவன் என்ற இளைய பல்லவன் உண்மையில் சரித்திரத்தில் சோழன் குலோத்துங்கனுக்கு சேனாதிபதியாக இருந்தவன். பிற்காலத்தில் கலிங்கத்துடன் போரிட்டு கலிங்கத்தையே எரித்தவன் என்று கலிங்கப்பரணி என்ற காவியத்தைப் படைத்த  ஜெயங்கொண்டார்  என்ற புலவர் கூறுகிறார்.

குலோத்துங்கன் இளவரசனாக இருந்த போது  அதாவது – கலிங்க யுத்தத்திற்கு முன் – ஸ்ரீவிஜயம் – கடாரம் என்ற இரு நாடுகளுக்கிடையே இருந்த அரசுரிமைப் போர்களில் கலந்து கொண்டு தீர்த்து  வைத்தான் என்பது வரலாறு. குலோத்துங்கன் சீனாவிற்கும் சோழப் பிரதிநிதியாகச் சென்றான் என்றும் வரலாறு கூறுகிறது.

இதையும் கருணாகர பல்லவன் என்ற நம் இளைய பல்லவனே செய்து முடித்தான் என்பது  தான் சாண்டில்யனின் கற்பனை.

சரி, இனி நாடகத்திற்கு வருவோம்.

கதையைச் சொல்வதில் ஓரளவு வெற்றி கண்டிருக்கிறார்கள். செட்டிங் ஓஹோ என்று இல்லாவிட்டாலும் பரவாயில்லை. உடைகள் பள பளவென்று நாம் கற்பனை செய்து வைத்திருந்த அரச காலத்தை அப்படியே  காட்டுகிறது. கடல் போரும் அதற்கு முக்கியத் தேவையான கடல்புறா என்ற கப்பலும் தான் கதையின் நங்கூரங்கள். அவற்றைத் திரையில் காட்டுவது கடினம் தான் என்றாலும்  அதில் அவர்கள் அதிகம் மெனக்கிடவில்லை என்பது சுத்தமாகத் தெரிந்தது.

கதையை மட்டும் எடுத்துக் கொண்டு வசனத்தைத் தங்கள் போக்கில் அந்தக் காலத்து ராஜா – ராணி சினிமா  பாணியில் எழுதியிருப்பது கதையின் உயிரோட்டத்தைப் பாதிக்கிறது.

சாண்டில்யனின் கதையில் சோகம் என்பது இலேசாக இழையோடியிருக்கும் அவ்வளவு தான். ஆனால் இதில் எல்லா பாத்திரங்களும் சோகத்தைப் பிழிந்து சிவாஜி, பத்மினி போன்று  அழுது நடிப்பது கேலிக்கூத்தாக இருக்கிறது. அதுவும் கொடூரமாவன் என்று பெயர் பெற்ற  அகூதாவை ஒரு குணசித்திர நடிகர் போல் குலுங்கிக் குலுங்கி ஆழ வைத்திருப்பது தாங்க முடியவில்லை சாமி.

கதாநாயகிகள் காஞ்சனா தேவி மற்றும் மஞ்சளழகி இருவரும் கவர்ச்சிகரமாக உடையணிந்து வருகிறார்கள். மஞ்சளழகியாக நடித்தவரின் குரல் முதல் வரிசைக்கே கேட்டிருக்குமோ என்பது சந்தேகம். ஆனால் அபாரமாக ஆடுகிறார்  அதுவும் தலையில் விளக்கை வைத்துக் கொண்டு.

கதையைப் படித்தவர்களுக்கு அதன் போக்கு புரியும் . மற்றவர்களுக்கு ரொம்பவே சிரமம் தான்.

தேவையில்லாமல் பாத்திரங்கள் வள வள வென்று பேசுகிறார்கள். மேடைக்கதையை இன்னும் கச்சிதமாகச் சொல்லியிருக்க வேண்டும். கதையின் சில பகுதிகளை விட்டால் தவறு ஒன்றும் இல்லை. ( உதாரணம்: பாலிக் குள்ளன்). பலவர்மனை, சேந்தனை முழுக் காமெடியனாகப் போட்டிருப்பதில் நயம் இல்லை.

கலிங்க மன்னர்கள், அநபாயன் ,ஜெயவர்மன் ,அமீர், கண்டியத்தேவன் எல்லாரும் நன்றாக நடித்தார்கள்.

இளையபல்லவனாக நடித்தவர் நன்றாக நிற்கிறார். ஆனால் அந்தப் பாத்திரத்துக்கு உயிர் தரவில்லை. ஒரு ஜோஷ் இல்லை.

நாலேகால் மணி நேரம் நடக்கிறது. திரை மாறும் நேரத்தைக் குறைத்திருந்தாலே நாடகம் ஒரு மணி நேரம் குறைந்திருக்கும்.

சிறப்பான மேடைக் கதையும், இன்னும் நிறைய பணபலமும் இருந்திருந்தால் இந்த நாடகம் பெரும் வெற்றி அடைய வாய்ப்பு இருந்திருக்கும்.

( இரண்டு காட்சிகள் என்று சொல்லி கடைசி நாளில் இரண்டையும்  ஒன்றாக மாற்றி அப்படியும் பாதி அரங்கு தான் நிறைந்தது என்றால் என்ன வென்று சொல்ல?)

சில்லறையில் ( மொத்தத்தில் அல்ல) எனக்குப் பிடித்திருந்தது. ஐம்பது மார்க் தருவேன்.