பிட்சாவின் எட்டு பாகங்கள் – ரேவதி ராமச்சந்கிரன்

Best Homemade Pizza - How to Make Homemade Pizza

‘அம்மோவ் துணி போடும்மா, பாத்திரம் எல்லாம் கழுவிட்டேன்’ அஞ்சலையின் குரல் அமுதமாகக் காதில் பாய்ந்தது. கோரனாக் கால லாக் டவுனுக்குப் பிறகு அஞ்சலை இப்போதுதான் வேலைக்கு வர அரம்பித்துள்ளாள். நம்பிக்கையான, உண்மையான வேலையாள் கிடைப்பது பூர்வ ஜன்ம புண்யம். அந்தப் புண்யம் சாவித்திரிக்கு அஞ்சலை ரூபத்தில் கிடைத்துள்ளது.

வேலை எல்லாம் முடித்தப்பிறகு மெதுவாக ‘அம்மோவ், இரண்டு நாள் லீவு குடும்மா, பெண்ணையும், பேத்தியையும் பார்த்து ரொம்ப நாள் ஆகிறதம்மா. இந்த கணேச சதுர்த்தி ஒட்டி ஒரு எட்டு போய்ட்டு வந்துடரேன்மா’ என்றாள். இதைக் கேட்ட சாவித்திரி பேப்பரைத் தலைகீழாக புரட்டிக்கொண்டிருந்த கணவர் சுந்தரத்திடம் ‘நாளை இரண்டு நாட்கள் துணி அதிகம் போடாதீர்கள். அஞ்சலை லீவு கேட்கிறாள்’ என்று தொடர்ந்து மெதுவாக ‘அவள் பெண்ணையும் பேத்தியையும் பார்த்து வரணும் என்கிறாள். ஒரு ஐநூறு ரூபாய் தரட்டுமா’ என்று சுந்தரத்தின் முகத்தையேப்  பார்த்து நின்றாள். சாவித்திரிக்கு இரக்க குணம் கொஞ்சம் ஜாஸ்திதான்.

உடனே சுந்தரம் ‘சரி துணி அதிகம் போடவில்லை. ஆனால் இப்ப தீபாவளி வருகிறதே, அப்ப போனஸ் கொடுத்தா பத்தாதா, இப்ப வேற தரணுமா’ என்று கணக்குப் பேசினான். சாவித்திரியும் விடாமல் ‘பாவம் அவள், “இந்தக் கோரனாக் காலத்தில் அவளது வருமானம் மிகவும் குறைந்து விட்டது, ரொம்பவும் வறுமையில் இருக்கிறாள், விலைவாசியும் ஏறிப் போயுள்ளன, அவள் தன் பெண்ணையும், பேத்தியையும் பார்க்கப் போகிறாள், இந்தப் பண்டிகையை கொண்டாட வேண்டாமா, நாம் பணம் கொடுத்தால் அவளுக்கும் சந்தோஷமாக இருக்கும்” என்று ஒரு குட்டி லெக்சர் அடித்தாள்.

‘ஏன் இப்படி மண்டூகமாக இருக்கிறாய்’ என்று கடிந்து கொண்டான் சுந்தரம். அப்படியும் அவள் மெதுவாக ‘கவலைப்படாதீர்கள், இன்று பிட்சா ஆர்டர் செய்வதாக உள்ளோம், அந்த எட்டு பாகமுள்ள பழைய பிரட்டை வாங்குவதை நிறுத்திவிடலாம். ஏன் அனாவசிய செலவு?  அதற்காகும் ஐநூறு ரூபாயை இவளுக்குத் தரலாம்’ என்று நீதி வழங்கினாள். கோவத்தில் பற்களை கடித்தவாறே “ஒ, நல்லது, எங்களிடமிருந்து  பிட்சாவைப் பிடுங்கி அந்தப் பணத்தை அவளுக்குத் தரப் போகிறயாக்கும் நல்ல நியாயம்’ என்ற சுந்தரம் விடுவிடுவென்று சட்டையை மாட்டி கோவத்துடன் வெளியில் சென்று விட்டான்.

மூன்று நாட்கள் கழித்து வேலைக்கு வந்த அஞ்சலை தூசி தட்டி வீடு பெருக்கித் துடைப்பதில் மும்முரமாக இருந்தாள். ’லீவு எப்படி இருந்தது’ என்று அவளை மெதுவே வினவினான் சுந்தரம். கண்களில் சிறிது எட்டிப் பார்த்த கண்ணீர்த் துளிகளுடன் ‘ரொம்ப நன்றாக இருந்தது ஐயா. அம்மா ஐநூறு ரூபாய் கொடுத்தார்கள்’ என்று நன்றியுடன் கூறினாள்.’ நீ போய் பெண்ணோடும் பேத்தியோடும் ஜாலியாக இருந்தாயோ’ என்று சுந்தரம் சிறிது நக்கலோடு கேட்டான். ‘ஆமாம் சாரே, ரொம்பவும் சந்தோஷமாக இருந்தது. இரண்டு நாளில் ஐநூறு ரூபாயும் காலி’ என்று குதூகலத்துடன் கூறி அந்த நினைவில் கண்கள் சிறிது சொறிகினாள்.. ‘நிஜமாகவா! அப்படி என்னதான் செய்தாய் சொல் பார்க்கலாம்’ என்று அலட்சியமாகக் கேட்டான் சுந்தரம்.

யார் இப்படிக் கேட்பார்கள் என்று காத்திருந்த மாதிரி துடைப்பத்தைக் கீழே போட்டு விட்டு, தரையில் குந்தி உட்கார்ந்து, மலர்ந்த முகத்துடன், கைகளை விரித்து, விரல்களால் எண்ணிக் கொண்டே ‘60 ரூபாய் பஸ்சுக்கு, 25 பெண்ணுக்கு வளையல், 50 ரூபாய்க்கு பலகாரம், 50 ரூபாயில் அவள் வீட்டுக்காரருக்கு ஒரு நல்ல பெல்ட், 150 பேத்திக்கு புதுத் துணி, 40 ரூபாய் அவளுக்கு ஒரு தலையாட்டி பொம்மை, கோயில் உண்டியலில் 50 ரூபாய், மீதம் இருந்த 75 ரூபாயை பெண்ணிடம் கொடுத்து பேத்திக்கு நோட்புக், பென்சில் வாங்கச் சொல்லியுள்ளேன்’ என்று பூரா 500 ரூபாய்க்கும் பட்ஜெட் போட்டாள். இதைச் சொல்லிவிட்டு புடவைத் தலைப்பை உதறி விட்டுக் கொண்டே எழுந்து பாக்கி வேலைகளைத் தொடர்ந்தாள். ஆ, 500 ரூபாய்க்குள் இத்தனையா என்று சுந்தரம் ஆச்சரியத்துடன் யோசிக்க ஆரம்பித்தான்.

அப்போது அவன் கண் முன்னே பிட்சாவின் எட்டு தூண்டுகளும் தோன்றி ஒவ்வொன்றும் அவனது மனசாட்சியை சுத்தியல் போல அடித்தன. ஒரு பிட்சாவுடைய விலையையும் அஞ்சலை தன் மகளைப் பார்க்கப் போகும்போது செய்த செலவையும் ஒப்பிட்டுப் பார்க்கத் தொடங்கினான். முதல் துண்டு பஸ்சுக்கு, இரண்டாவது பெண்ணின் வளையலுக்கு, மூன்றாவது பலகாரத்துக்கு, நான்காவது மாப்பிள்ளையின் பெல்ட்டுக்கு, ஐந்தாவது பேத்தியின் துணிக்கு, ஆறாவது துண்டு அவளுக்கு பொம்மை, ஏழாவது கோயிலுக்கு, எட்டாவது நோட்புக், பென்சிலுக்கு. அடடா எப்படி இப்படி நினைக்கத் தோன்றியது!

திடீரென்று டாக்டர் அப்துல்கலாம் அவர்கள் ‘பிட்சா வட்டமாக இருக்கும், எட்டு கோண பெட்டியில் வரும், ஆனால் எடுத்தால் முக்கோணமாக இருக்கும் எப்படி!’ என்று சொன்னது ஞாபகத்துக்கு வந்தது. இப்போது சுந்தரத்துக்கு ‘இத்தனை நாள் நாம் ஒரே கோணத்தில்தானே பிட்சாவைப் பார்த்தோம். ஆனால் இப்போது அஞ்சலை பிட்சாவைத்  தலைகீழாகப் புரட்டி அதன் இன்னொரு பக்கத்தையும் காட்டி விட்டாளே’ என்று எண்ணத் தோன்றியது. எட்டு பாகமுடைய பிட்சா சுந்தரத்திற்கு வாழ்க்கையின் உண்மை அர்த்தத்தைப் புரிய வைத்தது

 “வாழ்க்கைக்காக பணத்தை செலவழிப்பதா அல்லது செலவழிப்பதற்காக வாழ்க்கையா!’

படிக்காத அஞ்சலை படித்த சுந்தரத்திற்கு வாழ்க்கைத் தத்துவத்தை எளிய முறையில் உணர்த்தி விட்டாள்!   

 

பெண் எழுத்தாளரிடமிருந்து கடிதம் – தமிழில் – இரா மீனா

Indian Women Authors Lalithambika Antharjanam Chaturang Anniversary issue | प्रतिकारदेवतेचं अवतरण घडवणारी कथा | Loksatta

மூலம்       : லலிதாம்பிகா அந்தர்ஜனம் [1909—1989 ]

ஆங்கிலம்    : ஜே. தேவிகா

தமிழில்      : தி. இரா. மீனா

 

நவீன  மலையாள இலக்கியத்தின் முதல் பெண் எழுத்தாளர் என்று அடை

யாளப்படுத்தப்படும் லலிதாம்பிகா அந்தர்ஜனத்தின் படைப்புக்கள் சமூக

சீர்திருத்தப் பார்வை கொண்டவை. ’அக்னிசாட்சி ’நாவலுக்காக சாகித்ய

அகாதெமி விருது பெற்றவர்.

 

எழுத்தாளர்,அரசியல் செயல்பாட்டாளர் போன்ற புறவய பொதுப் பணிக

ளைச் செய்ய பெண்கள் போராட வேண்டியிருந்ததான நிலையை ஆழமான

விமர்சனமாக கதை முன்வைக்கிறது.   


பெண் எழுத்தாளரிடமிருந்து கடிதம்

valuable readers |இந்தக் கடிதம் ஒவ்வொரு தினமணி வாசகருக்கும் தாங்களே எழுதியதான உணர்வைத் தரலாம்...- Dinamani

என் அன்பிற்குரிய தங்கையே,

நீண்ட நாட்களாகவே உனக்குக் கடிதம் எழுத வேண்டுமென்று நினைத்துக்

கொண்டிருந்தேன். உண்மையைச் சொல்லப் போனால்,உன் முதல் கதை பிரசுரமான போதே நான் உனக்கு எழுதத் தயாராகி விட்டேன்.

ஆனால்,அது உனது முதல் கதை,பெண் எழுத்தாளர் பெயரில் ஒரு கவிதை

அல்லது ஒரு கதை பிரசுரமானால் அதற்கான பாராட்டு வெள்ளம்தொடரும்  அது உன்னை போதைக்குள்ளாக்கியிருக்கும் போது—அது மாதிரியான தருணத்தில் ,என்னுடைய பணிவான குறிப்பை உன்னால் ஏற்றுக் கொள்ள முடியுமா?அதனால் நான் காத்திருக்க முடிவு செய்தேன். புகழென்னும் கவசம் உன்னை விட்டு விலகும் காலம் உனக்கும் வரும்; குற்றம் சொல்கிற கூர்மையான முட்களாக விமர்சனங்களை நீ எதிர்கொள்ள வேண்டியிருக்கும். நீ தொடர்ந்து எழுத விரும்பினால். . . உன் உணர்வுகள்,எண்ணங்கள்,இலக்கியம் பற்றிய அபிப்பிராயங்கள்  ஆகியவற்றை தொடர்ந்து வெளிப்படுத்தினால், அப்படி ஒரு நேரம் விரைவில் வரும். உன் மனம் முட்களால் கிழிபடும். உன் தைரியம் சறுக்கி விழும். உன் வாழ்க்கை. . . அதை விட்டுவிடலாம் என்ற வெறுப்பு நிலைக்குக் கூட நீ வரலாம். . . உன் திறமையும்,கற்பனையும் இவை எல்லாவற்றையும் சகித்துக் கொள்ளுமானால்  நீ தொடர்ந்து எழுதலாம். இன்று, புகழுக்காக எழுதும் நீ, பின்னாளில்,எழுத்தின் மேலான விருப்பத்தில் எழுதலாம். அதற்குப் பிறகு,நீ புகழைத் தூக்கி எறிவாய். உன் ஆன்மாவிலிருந்து வெளிப்படும் உண்மை இலக்கியம் ,புகழ், பிரசுரிக்கும் ஆசை ஆகியவை பற்றிக் கவலைப்படாது். . .

இந்தக் கடிதம் அந்த நேரத்தில்  நீ படிப்பதற்காகத்தான்.

புகழில் விருப்பம் குறைந்த ஒரு நேரத்தில்,இந்தக் கடிதத்தை எழுதியவரின் பெயரைக் கூட தெரிந்து கொள்ள வேண்டுமென்ற வேகம் உனக்கு இருக்காது.  நான், முகம் தெரியாத பெண் சிநேகிதி—-சிறிது இலக்கியஆளுமையும், தன்னளவிலான பெருமையும் கொண்டவள் என்ற அளவில் தெரிந்தால்போதும். ஒரு காலத்தில் எனக்குள்ளும் நம்பிக்கைகளிருந்தன. நிறைய எழுத வேண்டும்,என் பெயர் பெரிய அச்சிலும், என் புகைப்படம் செய்தித்தாள்களிலும் வரவேண்டுமென்று கனவு கண்டேன். என்னைப் பார்ப்பதில் எனக்கு அப்படி ஓர் ஆனந்தம்—அவைதான் என் நம்பிக்கைகளும்,ஆசைகளும்.  

ஆனால் அதற்கு ஒரு பெரிய தடையிருந்தது. என் பெற்றோர் மிகவும் பழமைவாதிகள். தன் மகள் ஓர் எழுத்தாளராக அல்லது ஒரு நடிகையாக வரலாமென்ற சிந்தனை சிறிதுமில்லை. பாட்டி–கொள்ளுப் பாட்டி –அவளுடையபாட்டிக்குப் பாட்டி என்று தன் மகளுக்கு ஒரு மிகப் பழைய பெயரை வைத்தனர். நிச்சயமாக,புதுமை ,இனிமை என்று எந்தப் பரவசமுமின்றி, கொஞ்சம்கூச்சம் தருவதாக என் பெயர் இருந்தது! என்தோற்றம், வீட்டில் இருக்கும்சிறிய கண்ணாடியில் கூட நீண்ட நேரம் பார்க்க முடியாதது. ஆனாலும்நான் எழுதவேண்டுமென்று விரும்பினேன். . . புகழ் பெற. . . என் புகைப்படத்தை அச்சில் பார்க்க . . .

என்ன வகையான நோய் இது. கற்பனை செய்து பார். வசதியான வீட்டு எஜமானியாக இருப்பவள், இந்த இலக்கிய மூட்டைப் பூச்சியை சாவதானமாக உட்கார்ந்து ரசிப்பது பொருத்தமாக இருக்கும். பொதுவாக இது நகர்ப்புறத் தொற்றுநோய் ;பெரும்பாலும் கிராமப் பகுதிகள் இதிலிருந்து விலக்கப்பட்டவை. அங்குள்ள ஒளியும்,காற்றும் அதைக் கடத்திவிடும். ஆனால்,மஞ்சள் காமாலையைப் போல, ஒருவன் இலக்கிய மூட்டைப்பூச்சியைப் பிடித்து விட்டால் பார்ப்பதெல்லாம் ஒரே நிறத்தில்தான் தெரியும். கேட்பதெல்லாம் அதே தொனியாகத்தான் இருக்கும். . .  இலக்கியம். . இலக்கியம். . .

இந்தத் தீரா நோய்க்கு ஒரே ஒரு தீர்வுதானுண்டு. மனதில் தோன்றும் எல்லாவற்றையும் தாளில் எழுதி வைத்துவிடவேண்டும். நாம்–பெண்கள்–மருத்துவ விளம்பரதாரர்கள் ரகசியம் என்று நினைக்கிற நோய்களையும் கூடப்பொதுவில் அறிவிக்க விரும்புவோம். ஆனால் நம்மில் மிகச் சிலருக்கு மட்டுமே நம்மைப் பிடித்திருக்கிற இலக்கியப் பூச்சியை தைரியமாக வெளிப்படையாக அறிவிக்க முடியும்.

சகோதரியே!நாள் முழுவதும் நூற்றுக்கணக்கான எண்ணங்களோடு உழன்று கொண்டிருக்கும் ஒரு குடும்பத்தலைவி நான். சமையலறையில் மட்டும் கணக்கற்ற வேலைகள். எனினும்,இந்த நாட்களில் சொல்வது போல,’துடிக்கும் வல்லமையான ஒரு படைப்பாக்கப் புரட்சி’ எல்லா நேரங்களிலும்,என் மனதில் ஓடிக் கொண்டிருக்கும் நான் அரிசியைக் கழுவும் போதும், பொரியலைக் கிளறும்போதும், தொட்டிலை ஆட்டும்போதும் அதே எண்ணம்தான்

நான் எழுத,எழுத விரும்புகிறேன். நான் எழுத வேண்டும்! அதனால் ,சமையலறை அலமாரியில்,உப்பு, மஞ்சள்,மிளகாய்க்கும் இடையே ஒரு சிறியதாளும், பென்சிலும் இடம் கண்டுபிடித்திருக்கின்றன.

நான் எழுதிய முதல் கவிதை. . நீ அதைப் படிக்க விரும்புகிறாயா?உனக்குக் கவிதை பிடிக்குமா என்றெனக்குத் தெரியவில்லை. கவிதையில் ஒருவரின்உணர்வுகளும்,எண்ணங்களும் வெளிப்படுவது அவசியமற்றது என்று சிலர் இன்று சொல்கின்றனர். அது மொழியை அடிமைப்படுத்தி விடுகிறது. இது விதிகளை உருவாக்கி படைப்புச் சுதந்திரத்தில் தடைகளை ஏற்படுத்துவதற் காகத்தான்.  முதலாளி வர்க்கத்தின் அதிகாரம். அவர்கள் சொல்வது சரியாகஇருக்கலாம். ஆனால் என் மனதிற்குள் முதலில் வருவது ஒரு கவிதைதான்.  நான் உன்னைச் சோர்வாக்க விரும்பவில்லை. என் கவிதை இதோ!

       “புதிய வாழ்க்கையைப் பெற விரும்புபவன்,முதலில் சாவின்

       கதவைத் தட்டவேண்டும். வலியிலிருந்துதான் வசந்தம் மலர்கிறது.

       இது தாய் பாடும் பாட்டு. ஆனால்,என் கற்பனைக் குழந்தையே !

       என் கருப்பையில் நீ எடையிடப்படவில்லை. நீ நகர்ந்த போதும்,

       அசைந்த போதும்,வளர்ந்த போதும், விருத்தியானபோதும் 

       மகிழ்ச்சியைத் தவிர எனக்கு வேறெதுவுமில்லை,நிறைவான மகிழ்ச்சி.  

       நீ பிறந்த தருணத்தின் பரவசத்திற்கு இணை ஏதுமில்லை. ”

இதுபோன்ற எண்ணங்கள், நான் எழுதினேன். அடுத்து என்ன?இதைச் செய் தித்தாளுக்கு அனுப்புமளவிற்கு எனக்குத் தைரியமில்லை.  காதல், மற்றும் புரட்சிக்கான காலகட்டம் அது. அவற்றைத் தவிர வேறெதைப் படிப்பார்கள்? இந்தச் சிறியதாள் அஞ்சறைப் பெட்டியில் சில காலமிருந்தது. அதற்குப்பிறகு காபி போட எரிக்கும் நெருப்பானது அல்லது பல்பொடி பொட்டலம் போட உதவியதென்று நினைக்கிறேன்.

இந்த ஏமாற்றம் என் ஆர்வத்தைக் கட்டுப்படுத்தி விடவில்லை.  அதே சமயத்தில் பக்கத்து வீட்டில் ஏதோ நடந்தது. ஓர் இளைஞன்,இளம் பெண்ணைக் காதலிக்க வழக்கம்போல வீட்டில் எதிர்ப்புகள். சில நாட்கள் அழுதும் அரற்றியும்,கழித்து விட்டு ஓடிப்போனார்கள். அல்லது தற்கொலை செய்து கொண்டார்கள்.  வழக்கமாகக் கதைகள் இப்படித்தான் இல்லையா ?ஆனால் இது வித்தியாசமானது. ஓர் இளைஞன், இளம் பெண்ணைக் காதலித்தான்.   ஆனால் அவள் காதலிக்கவில்லை. வழக்கம்போலக் குடும்பம் வற்புறுத்த, வழக்கமற்று அவள் எதிர்த்தாள். . பிறகு சம்மதித்து. .  கடைசியில். . கடைசியில் . . கோபப்படாதீர்கள். . திருமணத்தன்று அவள் குழந்தை பெற்றாள்.

என்ன வினோதமான கதை! நான் எழுதினேன் உண்மையைச் சொல்ல  வேண்டுமெனில் என்னைப் பற்றி எனக்குப் பெருமையாக இருந்தது. அந்தஇளம்பெண்ணுக்கு முன்னாள் காதலனைத் தந்தேன். கதையின் உச்சமென்பது அவனுடைய துரோகத்தில்தானிருக்கிறது.

உலகத்திலேயே காதலும்,திருமணமும்தான் முக்கியமான நிகழ்வுகளா?—என்று நீ கேட்கலாம். இந்தப் பெரிய உலகில் ,பெரிய உலகில் நோய்,சாவு, தேவை ,செல்வம், அடிமை,முதலாளி என்று பல— இந்த அற்ப விஷயங்கள் எழுதப்பட வேண்டியவையா? நாம் ஒவ்வொருவரும் தனித்தன்மையானவர்கள். . இளைஞர் உலகம் தனக்கு நெருக்கமானதை மட்டுமே கவனிக்கிறது.  .

தன்னைக் கவரும் விஷயங்களை மட்டுமே பார்க்கிறது;பேசுகிறது. அது  அற்பமாகத் தெரியலாம். ஆனால் அதை பின்னாளில்தான் உணர்கிறோம்.என் பள்ளித் தோழி—ஜானகி அம்மா என்று வைத்துக் கொள்வோம்—என்னை அடிக்கடி வீட்டில் வந்து பார்ப்பார்கள். அப்போது நான் காபி கொடு்ப்பது வழக்கம். என் கவிதைகளை விட, நான் கொடுத்த காப்பியும்,நொறுக்கு தீனி யும்தான் அவர்களிடமிருந்து எனக்கு நற்சான்றிதழைத் பெற்றுத் தந்தன. என்  கவிதைகளைக்  கேட்பதற்காக அந்தச் செலவுகள்.

ஒரு நாள் பொறுக்க முடியாமல் கேட்டு விட்டேன். ”ஜானம்மே! ஆழமான எல்லா ரகசியங்களையும் பகிர்ந்து கொள்ள ஒரு பெண் இன்னொருபெண்ணை நம்பக் கூடாதென்று சொல்வது தவறா?”

ஜானகியம்மா என்னை அர்த்தத்தோடு பார்த்தார்,”உனக்கு அது பற்றி சந்தேகமா? நிச்சயமாக ,அது தவறுதான்.  ஒரு பெண் வேறு யாரை நம்ப முடியும்? ”

’அப்படியானால் ஒரு ரகசியம் சொல்கிறேன். அதை யாரிடமும் சொல்லமாட்டேன் என்று சபரிமலை கடவுள் மேல் அல்லது கொடுங்காளூர் பகவதி மேல் சத்தியம் செய்ய வேண்டும். ”

“சபரிமலைகடவுள், கொடுங்காளூரம்மன் மேல சத்தியம் நான் யாரிடமும். . ”ஜானகியம்மா மிக ஆர்வமாக இருந்தார். ”

 

(மீதி அடுத்த இதழில் )

மணி வயிறு வாய்த்தவனே!- என் பானுமதி

அறிவியல் கதை 

Secrets of the Y Chromosome - The New York Times

தென்னம் பாளை வெடித்துப் பூப்பூத்து நிறைந்திருந்தது சில நாட்களுக்கு முன். குறும்பைகள் மஞ்சளில் மினுக்கின. மற்றொன்றில் மட்டைகள் அதன் குலைகளின் பாது காப்பிற்கென கவிழ்ந்து நின்றன. ஒரு மரத்தில் குலைகள் பருக்கத் தொடங்கிவிட்டன. கரம்பன் வந்து பறித்துப் போடுவான் அப்போதெல்லாம். கரு மேனி பளபளவென்றிருக்கும். வேட்டியை வரிந்து கட்டி இடையில் ஒரு துண்டு அதை இறுக்கி இருக்கும். இருபது வயதிலேயே வெற்றிலை மெல்லும் பழக்கம் அவனுக்கு. அதனால் சிவந்த உதடுகள், அவன் சிரிக்கும் போது தெரியும் கறை படிந்த பல் வரிசை, கண்களில் கொப்பளிக்கும் குறும்பு. மரத்திலிருத்து எதை இறக்குவது, எதை விட்டு வைப்பது என்பதெல்லாம் ஒரு பார்வையிலேயே அவனுக்குத் தெரிந்து விடும்.

“அம்மாட்டேந்து கொழந்தயைப் பிரிக்கற, பாவமில்லையா?” என்பாள் வசந்தா வேண்டுமென்றே.

அவன் சிரிப்பான். ‘நா பறிக்காங்காட்டியும் அவ விட்டுடுவா, நெலத் தாயீ ஏந்திக்கிடுவா.’

“அது பேசித்துன்னா, தாயும், கொழந்தையும் பதற்றது உனக்குக் கேக்கும்.”

‘அம்மணி, கொல தள்ளிச்சா விடுதல; பின்னாப்ல தள்ளோணுமில்ல; நாம ஆண்டோனுக்கு படக்கிறோம், ஆத்தாளுக்கும் படக்கிறோம், எப்ப செதர் விடுவாங்கன்னு தும்பிக்க நீட்டிக்கிட்டு தொந்தி சாமி வேற காக்கறாரு. அத்தயெல்லாம் விடுங்க, கரம்பனுக்கு வவுறு இருக்கில்ல, அம்மணி.’

“அது சரி, அம்மாட்டேந்து சிசு பிரியணும்தான். ஆனா, கண்ணெதர்க்க பாத்துண்டே இருக்கோமில்ல; தென்ன என்ன பண்ணும், பாவம்.” என்பாள் வசந்தாவின் அம்மா கிண்டலாக இவர்கள் பேச்சில் கலந்து கொண்டு.

‘சிரிப்பாணியா வருதுங்கோ, அம்மணி. மூளயில பத்திக்கிட அது மனுசப் பயலா? புல்லு, பூண்டு கணக்கில்ல.’

வசந்தா அதை நினத்துக் கொண்டு இப்போது வாய்விட்டு சிரித்தாள். அவளுக்கு சிறு வயதில் நல்ல பொழுது போக்கே கரம்பனின் வருகைதான். அவன் வாயைக் கிண்டுவதில் அவனது அறிவும், அறியாமையும் வெளிப்படும் விசித்திரம்.

இன்று அவள் நகரின் தலை சிறந்த மருத்துவர் மற்றும் ஆராய்சியாளர். நாளை ஐந்து சிசேரியன்கள் இருக்கின்றன; அதிலும் ஒரு பெண்ணின் நிலை கவலைக்கிடம். மிகக் குட்டை அவள்,  முதல் பிள்ளைப் பெற்றுப் பதினோரு வருடங்களுக்குப் பிறகு மீண்டும் தாயாகி இருக்கிறாள். உடல் எடையும் 43 கிலோதான். அவளுக்கு வலியை வரவழைத்துப் பிள்ளைப் பெறச் செய்வது நல்லது. அவள் சிசேரியனைத் தாங்க மாட்டாள் எனத் தோன்றினாலும், அவள் நிர்வாகம் அதை ஒத்துக்கொள்ளப் போவதில்லை.

அவளது ஆய்விற்குக் கணிசமான பங்கு அவள் செய்யும் சிசேரியனிலிருந்து வருகிறது. அதற்காக அவள் சிசுவைப் பிரிக்கத்தான் வேண்டும்-அதுவும் இலாபகரமான முறையில். அவள் கரம்பனைப் போல்தான்-பக்குவத்திற்குக் காத்திருந்துதான் எதையும் செய்வாள்.

அந்தப் பெண்ணின் பெயர் கௌமாரி; அதிகம் புழக்கத்தில் இல்லாத அந்தப் பெயர் அவளை நினைவில் நிறுத்தியது. சூசன் கவலையுடன் அவளைத் தியேட்டருக்குக் கொண்டு வந்தாள்-எப்போதும், எதிலும் நிதானம் இழக்காத சூசன்; வசந்தாவிற்கு ஏனோ முதுகில் சிலீரிட்டது. சிசு வயிற்றில் சலனத்தை நிறுத்தி விட்டது; அந்தப் பெண்ணின் முகமும் சிலையானதைப் போல் ஒரு தோற்றம்; அனைத்து மானிட்டர்களும் மரணம், மரணமென்று மௌனமாகக் கூவின.

அவள் கணவன் மிக அமைதியாக இந்தச் செய்தியை எதிர் கொண்டான். ‘அனாடமி பாடப் பிரிவிற்கோ, ஆய்விற்கோ அவளை, அந்த ஆண்மகவை எடுத்துக் கொள்ளலாமென எழுதிக் கொடுத்தான். அவளது முகத்தை ஒரு முறை வருடினான். போய்விட்டான். எத்தனை துரிதத்தில் இரு இறப்புகளும் ஒரு துறப்பும்.

கௌமாரியின் உடலின் பல பாகங்கள் படமெடுக்கப்பட்டன. பல கோணங்கள், முழு உடலாக, உள் உறுப்புகளாக, மொத்தமாகத், தனித்தனியாக ஆறுமுகப் பரிமாணங்களில் நிமிடத்திற்குள் அவள் ஒரு பாடத்திட்டமாகி விட்டாள். இனி கணினி அவளை அனாடமிக் அல்காரிதம்படி வடிவமைக்கும்-அவள் கண்கள் அதில் செயற்கையாகப் பார்க்கும், காதுகளில் ஒலி பயணிப்பதை, நாசி விரிவடைவதை, நா ஊறுவதை, முலைகள் விறைப்பதை, உந்திச் சுழியை, பெண் உறுப்பை, எல்லாவற்றையும் லைவ் ரிலே எனக் காட்டும்; தோலை உரித்து எலும்பை, நரம்புப் பின்னலை, சதையை, நுரையீரலை, நெஞ்சுக்கூட்டை, விலா அமைப்பை, கல்லீரலை, மண்ணீரலை, சிறுநீரகங்களை, மலக்குடலை, தண்டு வடத்தை…அது எதையும் விடப்போவதில்லை. கம்ப்யூடர் சிமுலேஷனில் செயற்கை உறுப்புகளைப் பார்த்துப் படித்தவர்கள்தான் இப்போதெல்லாம்; ஆனால், நிஜ மனித உடலை இப்படிப் பார்ப்பது  மருத்துவப் படிப்பில் அரிதாகிவிட்டது.

கௌமாரியின் மூளையில் சில ஆய்வுகள் செய்வதற்காக அது தனியே புரதக் கரைசலில் வைக்கப்பட்டது. அளவில் சிறிய மூளை;ஆனால், அது எத்தனை எண்ணங்களைக் கொண்டிருந்ததோ?

‘ஆ, இதென்ன வசந்தா?’ என்று கிட்டத்தட்ட அலறினாள் மேகா.

Newly-Discovered Brain Cell | Institute for creation research, Human brain, Nerve cellவசந்தாவின் புருவங்கள் வளைந்து கேள்வி கேட்டன. ‘இதைப் பார், இதெப்படி இங்கே?’ இன்னமும் நடுக்கமும், ஆச்சர்யமும், கிறீச்சிடலுமாக அவள் குரல் ஒலித்தது. அந்த மூளையில் ‘வொய்’ குரோமசோம் இருந்தது.

இருவரும் பரபரப்பானார்கள். உடனடியாகக் கௌமாரியின் கேஸ் ஹிஸ்டரியைத் திரையில் படித்தார்கள். அவளுக்கு முதலில் பெண் பிறந்திருக்கிறாள்; பதினோரு வருடங்களுக்குப் பிறகு இப்போது ஆண்; அதுவும் இறந்துபோனக் குழந்தை; இவள் மூளையில் ஆணின் ‘வொய்’ எப்படி, எங்கிருந்து வந்திருக்கும், எப்படி இன்னமும் மூளையில் இருக்கிறது என எதுவும் புரியவில்லை.

இதை எப்படிப் பிரிப்பது, இதை எங்கே பாதுகாப்பது, இது சொல்லும் செய்திதானென்ன?

“பிரிக்கலாம் அந்த நிருவுருவை; ‘க்ளோனிங்’கில் அதைச் செய்கிறார்கள்; நம் ‘ஜெனொம் லைப்ரரி’யில் ‘க்ரோம் ஜம்பிங்’ செய்ய முடியும். ஆனால், இதை இரகசியமாகச் செய்ய வேண்டும்; மேலும், இப்போது திரவத்தாலும், மூளையின் சூடு இயல்பாக இருப்பதாலும் அதி உற்சாகமாக அந்தக் க்ரோம் இருக்கிறது.”

‘ஏன் இரகசியமாக?’

“வா, பின்னால்” என்ற வசந்தா அதி வேகமாக அந்த மூளைக்குடுவையை எடுத்துக் கொண்டு முழுதும் குளிரூட்டப்பட்ட நீண்ட வராந்தாவில் நடந்தாள். முக்கிய மருத்துவ மனை முடிந்து அதன் பின்னர் நீள் செவ்வகத்தில் சிறு தோட்டமிருந்தது.அதன் குறுக்கு நடைபாதையில் சென்ற அவள் வெற்று மனையை அடைந்தாள். அதையும் தாண்டிய பிறகு முழுதும் பெரும் மரங்களுள்ளே பொதிந்திருந்த ஒரு வளாகம் கண்களில் பட்டது. மூன்று வருடங்களாக வேலையில் இருக்கும் தனக்கு இப்படி ஒன்று இருப்பதே தெரியவில்லை என வியந்தாள் மேகா.

தானியங்கிக் கதவு வசந்தாவை படம் பிடித்து அவளை மட்டும் உள்ளே அனுமதித்தது; கதவின் மறுபுறம்  வசந்தா ஏதோ குமிழைத் திருக மேகா உள்ளே இழுக்கப்பட்டாள். தெர்மல் சூட்டை அவர்களுக்கு உடனே  ரோபோக்கள் அணிவித்தனர். ‘ரிவர்ஸ் ஜெனெடிக்ஸ்’ என்ற ஒரு பிரிவு மிகப் பெரிதாகத் தெரிந்தது. முழுதும் தானியங்கியான அதில் மானிடர்கள் முன் ரோபோக்கள் அமர்ந்து       நிருவுருக்களை அமைத்துக் கொண்டிருந்தன-அதாவது அவைகள் ஒருவித கோர்க்கும் செயல்பாடுகளைச் செய்து காட்டிக் கொண்டிருந்தன. மேகா புரிந்து கொண்டாள்- அவை மிக மிகச் சிறுத் துண்டுகளாக க்ரோமின் ஒரு நுனியைப் பகுத்துப் பிரித்தன. அவை இணைய வேண்டிய பகுதிகளை மற்றொரு திரை சோதித்து க்ளோன் குழுக்களை அமைத்துக் கொண்டிருந்தது. பல அவற்றில் ‘ஏற்கப்படவில்லை’ என்று மறு சுற்றுக்குச் சென்றன. இதை வியப்போடு பார்த்துக் கொண்டிருந்த மேகா, வசந்தா அங்கே இல்லாததை அப்போது தான் உணர்ந்தாள். பயத்துடன் தயங்கியவாறு அவள் ‘ரிவர்ஸ் ஜெனெடிக்ஸ்’சிலிருந்து வெளியே வந்தாள்.

‘க்ரோம் ஜம்பிங், க்ரோம் வாக்கிங், ஹைபிரடைசெஷன்’ என்று லேசர் ஒளி சுட்டிய பகுதியில் வசந்தாவின் தெர்மல் உடை தெரிந்ததும் அவளுக்கு உயிர் வந்தது போல இருந்தது. வசந்தா அந்த மூளையிலிருந்து ‘வொய்’ க்ரோமைப் பிரித்துக் கொண்டிருந்தாள். நுண்நோக்கியுடன் இணைந்த வலை அமைப்பிலான கூரற்றக் கத்திக் கரண்டி அந்தக் க்ரோமை பிடிக்க முயன்று கொண்டிருந்தது. ஐந்தாம் முறை அது மாட்டிக்கொண்டது. வசந்தாவின் முகத்தில் அந்த முகமூடியையும் தாண்டி ஒரு புன்னகைக் கீற்று வந்து போனது மேகாவிற்குத் தெரிந்தது.

நஞ்சுக் கொடி போன்ற ஒரு வடிவமைப்பை அங்கிருந்து வசந்தா எடுத்தாள்; மேகா அதன் உயிர்ப்புச் சக்தியைச் சரி பார்க்க, அதனுள் ‘வொய்’ க்ரோமை வைத்தாள் வசந்தா.

‘வெல் டன், டாக்டர்ஸ்’ என்ற குரல் அவர்களை அதிரச் செய்தது. மேகா நம்பாமல் அந்த நஞ்சுக்கொடியை பார்த்தாள், அதுவா பேசியது என்று. மேற்கூரையிலிருந்து தன் ஆய்வக நோக்கி வழியாகப் பார்த்துக் கொண்டிருந்த மருத்துவர் எம் கே எஸ் லேசர் பாதையில் இறங்கி வந்தார். பச்சை நிறக் கண்களுடன், இள நீல நிறத்தில் ஒரு தவளை அவர் கைகளிலிருந்து தொங்கும் ஆய்வகப் பையில் இருப்பது தெரிந்தது.

அவரைப் பார்த்ததும்தான் வசந்தாவிற்குத் தெம்பே வந்தது. அவர் அருகே வந்து வசந்தாவின் முதுகில் தட்டிப் பாராட்டினார். ‘வா, வேகமா’ என்றவர் மிக மிகக் குளிரூட்டப்பட்ட அறைக்குள் சென்றார்.

மெலிதான மஞ்சள் வெளிச்சம் பரவியிருந்த அறை அது. எங்கும் ஃப்ரீஸர் இயந்திரங்கள் காணப்பட்டன. வைரக் கத்திகள், செயற்கையாக உருவாக்கப்பட்ட மனிதத் தோல்கள், உறையவைக்கப்பட்ட ப்ளாஸ்மாக்கள்,  முழுதும் வளராமல் ஆனால் துடித்துக் கொண்டிருந்த இதயங்கள், க்ரையோஜெனிக் முறையில் நைட்ரஜன் திரவத்தில் நீந்தும் உயிரிகள்.

அவர் அந்தத் தவளையை மெதுவே விடுவித்து அங்கிருந்த மேஜையில் கிடத்தினார். ‘இவள் கர்ப்பத்துள் மனித க்ரோம்கள் 22 ஜோடி செலுத்தப்பட்டுள்ளன. அத்தனையும் செயற்கையாக ‘ஜம்பிங்’ மற்றும் ‘வாக்கிங்’கில் வடிவமைகப்பட்டவை. மிகத் தூய்மையானவை- ஐ மீன், மரபணு குறைபாடில்லாதவை. அடுத்து என்னிடம் இரண்டு ‘எக்ஸ்’ க்ரோம்கள் தானிருந்தன. இப்போது உன் ‘வொய்’ கிடைத்திருக்கிறது. ஒரு செயற்கை ‘எக்ஸ்’, ஒரு மனித ‘வொய்’; வாட் அ வொன்டர்! இவள் கர்ப்பப் பை, குழாய்கள் எல்லாம் மனித இனத்தைப் போன்றவை. மிகச் சுலபமாக இந்தக் கருவை இவள், என் நீலி வளர்த்துத் தருவாள். ஆ! எ ஹிஸ்டரி மேட் டு டே.’

‘எக்ஸ்’ மற்றும் ‘வொய்’ செலுத்த அந்தக் கத்திகளை அவர் திறமையாகக் கையாண்டார். பச்சைக் கண்ணழகி சுமக்கும் முதல் இயற்கை-செயற்கை  மனித உயிர். நினைத்தாலே புல்லரித்தது.

‘பிறப்பு எப்போது நடை பெறும்?’ என்றாள் மேகா. ‘செல் ம்யூடேஷன் ஆரம்பிக்கும் நிலையில் இவளது கர்ப்பம் சோஃபிக்கு மாற்றப்படும்; அதிலிருந்து ஆறே மாதங்கள். வேக வளர்ச்சிக்கான அனைத்தும் சோஃபியிடம் உட்செலுத்தப்பட்டுள்ளது.’ என்றார் அவர்.

‘அதுவரை..’ என்றாள் மேகா; ‘இரகசியம், பரம இரகசியம்’ என்று சிரித்தார் அவர்.

“டாக்டர், இறந்த பெண்ணின் மூளையில் அந்த ‘வொய்’ க்ரோம் எப்படி?” என்றாள் வசந்தா.

‘மனிதக் கரு இருக்கே, பாலூட்டிகளில் மிகவும் பிடிவாதமுள்ளது அது. ஆக்ரமிக்கும் நஞ்சுக் கொடி, அதன் தனிப்பட்ட சிக்கல்கள், கருவறையின்  சுவற்றில் ஆழமாக ஒட்டிக்கொண்டு மேலும் மேலும் எனக் கேட்கும் அதன் தன்மை, அதிலும் இந்த ‘வொய்’ க்ரோம் இருக்கே, அது அம்மாவின் இரத்தத்தில் கலப்பதுடன் நிற்பதில்லை, மூளையில், மண்ணீரலில், நுரையீரலில் 100% வரை பார்க்கலாம்-அதவது ஆண்மகனைப் பெறும் அம்மாக்களின் மூளைகளில்; உள் உறுப்புக்களில், குடலில் 95%, இதயத்தில் 29% எனவும் பார்க்கலாம்; உங்களுக்கு ஒரு வினோதம் சொல்லவா? 94 வயதான  ஒரு அம்மா விபத்தில் இறந்தார்; அவரது பிரேதப் பரிசோதனையில் அவரது மூளையில் இந்த ‘வொய்’ உட்கார்ந்திருந்தது; அவரும் ஆண் குழந்தையைப் பெற்றிருந்தார். ஏன் இப்படி நடக்கிறதென்று மிகச் சரியாகச் சொல்வதற்கில்லை. ஆனால், கருப்பையின் உள்ளே புதைந்திருக்கும் கரு, தன் நலத்திற்காக, அது அன்னையைச் சார்ந்தது என்பதால், அம்மாவின் உடலை தனக்கெனக் கடத்துகிறது எனச் சொல்லலாம்.”

‘அப்போ, எக்ஸ்..?’

எம் கே எஸ் சிரித்தார்- ‘என்னை வம்பில் மாட்டுகிறாய்; இது வரை ‘வொய்’ தான் காணப்பட்டிருக்கிறது. எக்ஸ் இருக்கும், தன்னை அவ்வளவாகக் காட்டாமல் இருக்கும்.’

“கரம்பன் அன்று எவ்வளவு இயல்பாகச் சொன்னான்- ‘மூளைல பத்திக்கிட’ அர்த்தம் தெரிந்து சொன்னானா இல்லை கேள்வி ஞானமா?” திகைத்தாள் வசந்தா. அம்மா ஏன் சரத்தை அதிகம் வெளிப்படையாக நேசித்தாள் என மேகா யோசிக்கத் தொடங்கினாள். தவளையில் ‘வொய்’ செயலைத் தொடங்கியிருந்தது.

 

காற்று வெளியிடை…..இரஜகை நிலவன்

Bengaluru: KIA gate for hand baggage passengers

சாகுலை கண்டிப்பாக நான் சென்னை விமான நிலையத்தில் எதிர் பார்க்கவில்லை. அவன் கடவுச்சீட்டு சரி பார்க்கும் வரிசையில் எனக்கு முன் மூன்றாவது ஆளாக நின்று கொண்டிருந்தான்.

’சத்தம் போட்டுக்கூப்பிடலாமா?’ என்று நினைத்தேன். அநாகரீகமாக இருக்கும் என்று உணர்ந்து கொண்டு பின்னால்

நின்றவரிடம் “ ஒரு நிமிடம். என் நண்பரை பார்த்து விட்டு வருகிறேன்” என்றுசொல்லி விட்டு முன்னால் வந்து “ என்ன சாகுல்

எப்படி இருக்கிறீர்கள்?” என்று கேட்டேன்.

சாகுலும் என்னை எதிர்பார்க்கவில்லை என்பது அவர் முகத்தில்

ஏற்பட்ட ஆச்சரிய குறியே எனக்கு காட்டித்தந்தது. “ என்ன பவுல்

எப்படி இருக்கீங்க?” என்ன இந்தப்பக்கம்?” என்றார்.

“சாகுல் நான் கேட்க வேண்டிய கேள்வியை நீங்கள் கேட்கிறீர்கள்?”

அவர் கையைப்பிடித்துக் குலுக்கியவாறு புன்னகைத்தேன்.

“அது தானே பார்த்தேன். உங்கள் சிரிப்பே தனி தானே. அதைக்

காணவில்லை என்று நினைக்கு முன்னே சிரித்து விட்டீர்கள்..”

அவனும் சிரித்துக்கொண்டே சொன்னான்.

 ” கண்டிப்பாக சினிமாவில் ஜெயிக்காமல் ஊருக்கு போக மாட்டேன் என்றீர்கள். இப்போது திரும்ப அபுதாபி பயணமா?”

கொஞ்சம் கேலி கலந்தே கேட்டேன்.

என் கேலியை உணர்ந்த சாகுல்,” பவுல். நான் சொன்னதற்கு

என்றுமே பின் வாங்கியதில்லை. எனக்கு ஒரு நண்பர் கொஞ்சம்

பணம் தர வேண்டியதிருக்கிறது, அதற்காகத் தான் இந்த பயணம்.

மற்றபடி, நான் எடுத்த முடிவில் என்றுமே பின் வாங்கவில்லை.

ஆறு மாதமிருக்குமில்லையா?. இங்கே அபுதாயில் இவ்வளவு நல்ல வேலையை விட்டு விட்டு திரை இசைப்பாடல் எழுத ..எடுத்த முயற்சி எல்லாம்… நன்றாகத்தான் … போய்க்கொண்டிருக்கிறது.. நாம்விமானத்தில் சந்திக்கலாமா?” என்று சொல்லி விட்டு முன்னே வரிசையில் சென்றான்.

எனக்கு அவன் சொன்னத் தொனியில் உள்ள நம்பிக்கை எவ்வளவு

அழுத்தமாக இருந்தது என்று ஆச்சரியமாக இருந்தது.

எவ்வளவு பேசியிருப்போம்… இன்னும் சினிமா பாடலாசிரியராகப்

போகிறேன் என்கிறானே… தலையைச் சிலிர்த்துக் கொண்டே வரிசையில் நகர்ந்தேன்.

என்னுடைய பாஸ்போர்ட், விசா எமிகிரேசன் எல்லாம் முடித்து விட்டு லாஞ்சுக்குள்ளே வந்த போது “வாங்க பவுல் சார்” என்று வரவேற்றான்.

‘சாகுல் கண்டிப்பாக நம்மை பார்க்க விரும்பாமல் ஓடியிருப்பான்’

என்று தான் எண்ணியிருந்தேன். அவன் என்னை எதிர்கொண்டு அழைத்து காபி கடைக்குள் (கப்புசின் காபி க்ஷாப்) கூட்டிப் போய்

அமர்த்தி, “ பவுல் உங்களுக்கு விருப்பமான காபி” என்று வாங்கி என் முன் வைத்து விட்டு அவனும் பருக ஆரம்பித்தான்

’சாகுல் பேசட்டும் ’ என்று அமைதியாக அவன் முகம் பார்த்துக்

கொண்டே காபியை இரசித்தேன்.

“ என்ன அமைதியாகிட்டீங்க?” என்றான் சாகுல்

“சொல்லுங்கள் சாகுல். எந்த அளவிற்கு வந்திருக்கீங்க? நீங்கள் விரும்பினால் இன்னும் நம்ம கம்பெனியிலே உங்களுக்காக கேட்டுப்பார்க்கிறேன்”

“ நாலு ஆல்பம் போட்டாச்சு.. கையிலே இருந்த பணம் காலியானாலும் என் வீட்டுக்காரி எனக்கு முழு உதவியாக இருக்காங்க…”

”ம்..ம்… அப்புறம்?”

”ஒரு படத்திலே ஒரு பாட்டு எழுதி  இசையமைச்சாச்சு… இனி சினிமாவிலே எப்படி வருதுண்ணு எதிர் பார்த்துகிட்டே இருக்கேன். அடுத்தாலே ஒரு சினிமாவிலே வாய்ப்பு தர்றதா சொல்லியிருக்காங்க..”

“ எனக்கேன்னவோ சாகுல்…” என்று நான் சொல்லி முடிப்பதற்குள்

“கவலையே படாதீங்க… பவுல்  அடுத்த முறை நாம் சந்திக்கும் போது கண்டிப்பாக… நீங்க எதிபார்க்கின்ற வெற்றிபெற்ற ’வசந்தசாகுலா’ தான் பார்ப்பீங்க!  வேணும்ணா பாருங்க..அடுத்த முறை துபாய்த் தமிழ்த்தேர் நிகழ்விற்கு கூட என்னை முக்கிய விருந்தினர்களில் ஒருத்தரா அழைக்கத்தான் போறீங்க…” என் தோளில் தட்டிச் சொன்னான்

விமானத்திற்கான அழைப்பு அறிவிக்கப் பட.. அவனுடைய அசாதரரண நம்பிக்கையைக் கண்டு, அசந்து போய், “வாழ்த்துக்கள்”

என்று அவனைக் கட்டிப்பிடித்து வாழ்த்துச்சொல்லி விட்டு பையை

எடுத்துக் கொண்டு விமானத்தை நோக்கி கிளம்பினேன்.

’அவனுடைய அசாதாரண நம்பிக்கை எப்படியிருக்கிறது’ என்று

எனக்கே இன்னும் விரிந்த வியப்புடன் கூடிய ஆச்சரியமாக இருந்தது.

                                        

கேள்விக்குறி – டி வி ராதாகிருஷ்ணன்

Image result for விவசசாயியின் தற்கொலை

அந்தக் காட்சியை விடியலில் மச்சக்காளை தான் முதலில் பார்த்தான்.

சுப்பிரமணியம் ஊருக்கு வெளியில் ஒரு மரத்தில் தன் வேட்டியின் ஒரு முனையை மரத்தின் கிளையில் கட்டி..மற்றொரு முனையை தன் கழுத்தில் சுருக்காக்கி  அண்டர்வியருடன் தொங்கிக் கொண்டிருந்தான்.

தீப்பொறிபோல செய்தி பரவி ஊரே குடி விட்டது மரத்தருகே

“நல்லவனுக்கு இந்தக் காலத்திலே இதுதான் கதி”

“சுப்பிரமணிக்கு இப்படி ஒரு சாவு வர வேண்டாம்.”

ஒவ்வொருத்தர் ஒவ்வொன்று சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

கதிரவன் இதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல்தன் தட்சணாயனப் பாதையில் மேற்கு நோக்கி நகர்ந்து கொண்டிருந்தான்.

உச்சி வேளையில்தான் போலீஸ் ஜீப் ஒன்று வந்து நின்றது.ஜீப்பிலிருந்து ஒரு
போலீஸ்காரர் இறங்கிக் கூட்டத்தை விரட்டியடிக்க ஆரம்பித்தார்.

அவருக்கு பயந்து ஓடுவது போல ஓடிய கூட்டம் அவருக்குப் போக்குக்
காட்டிவிட்டு மீண்டும் சேர்ந்தது.

போலீஸ் விசாரணை ஆரம்பித்தது..”இதை முதல்லே பார்த்தது யார்?” அதட்டல்
குரலில் கேட்டார் ஜீப்பில் வந்திருந்த போலீஸ் அதிகாரி.

“மச்சக்காளைதேன்..மச்சக்காளைதேன்..”எனக் கூட்டத்தினரிடையே ஒரு சலசலப்பு ஏற்பட..அந்தக் கூட்டத்தைத் துளைத்துக் கொண்டு அந்த அதிகாரி முன் வந்து நின்றான் மச்சக்காளை.

“நான்தாங்க பார்த்தேன்..காலையில வெளிக்கு வந்தேனா அப்போதான் பார்த்தேன்”.

அந்த அதிகாரி அவன் சொன்னதைக் காது கொடுத்துக் கேட்டாரா என்று தெரியவில்லை.

அதற்குள் சுப்பிரமணியின் உடலை இறக்கிய இரு போலீசார்..அதைக் கீழே
கிடத்தி..இரு சாக்குப்பைகளைக் கொண்டு வரச் சொல்லி அதன் மேல் போர்த்தினர்.

இந்த அதிகாரி எப்போ விசாரணையை முடிச்சு, உடலை எப்போ பிரேத பரிசோதனைக்கு எடுத்துட்டுப் போய்…எப்போ நம்மக்கிட்டே கொடுப்பாங்க என்று பஞ்சாயத்துத் தலைவர் கவலைப்பட ஆரம்பித்தார்.

திடீடென போலீஸ் அதிகாரி, “இங்க பஞ்சாயத்துத் தலைவர் யாருய்யா?” எனக்
கேட்க பலவேசம் முன்னால் வந்தார்.

“என்னய்யா..நீர் இப்படி ஓடி ஒளிஞ்சுக்கிறீர்..யார் மேல் உமக்கு சந்தேகம்னு ஒரு லிஸ்ட் போட்டுக் கொடும்..உம்..அதுக்கு முன்னாலே நாலு இளநீ வெட்டி கொண்டு வரச் சொல்லு”

“ஐயா..இது தற்கொலைதானே..இதுக்கு யார் மேலே சந்தேகப்பட முடியும்?”
பலவேசத்தின் குரல் அவருக்கேகிணற்றின் உள்ளிருந்து பேசுவது போலக் கேட்டது.

‘ஓய்..இது கொலையா..தற்கொலையான்னு நாங்கதான் சொல்லணூம்..எதுக்கு
படிச்சுட்டு இந்த வேலைல இருக்கோம்..சரைக்கறதுக்கா?”

பலவேசம் சற்றே பயந்து விட்டார்,

அதைக் கவனித்த அதிகாரி..தன் தொனியைச் சற்றே குறைத்து “சரி..சரி..இறந்து
போன ஆளைப்பத்தி உமக்கு என்ன தெரியும்?.அவங்க குடும்பத்தைப் பத்திச்
சொல்லும்”என்றார்.

“ஐயா..சுப்பிரமணியம்..”போலீஸ்காரர் புருவத்தை உயர்த்த..”அதுதாங்க..இறந்து
போனவருடைய பெயர்.அவங்க குடும்பம் பரம்பரை..பரம்பரையாய் இந்தக்
கிராமத்தில்தான் இருக்காங்க”

பலவேசம் சொல்ல ஆரம்பித்தார்.

மாரிமுத்து கவுண்டர் அந்தக் கிராமத்திலேயே பெரிய நிலச்சுவான்தார்.அந்தக்
காலத்திலேயே பாதி பேருக்கு மேல் அவருடைய வயல்கள்தான் சாப்பாடு
போட்டன.பரம்பரைப் பணக்காரன்னாலும் அவரது மனம் லேசானது.ஏழ்மையை
உணர்ந்தது.மனித நேயம் மிக்கது.யார் இல்லை என்று வந்தாலும் வாரி வாரி
வழங்குவார்.அவர் வயலில் விதை விதைப்பதே ஒரு அழகு.முதலில் விதை
முகூர்த்தம் பார்ப்பார்.

முதலில் அவரது குடும்ப சோதிடர் பாம்பு பஞ்சாங்க சாஸ்திரிகளிடம்
போவார்.அவர் பஞ்சாங்கத்தைப் புரட்டு..புரட்டு எனப் புரட்டிப் பாத்துவிட்டு மனசில் பல கணக்குகளைப் போட்டுப் பார்ப்பார்.உதடுகள் மட்டும்
அசையும்.பின் ஒரு நல்ல நாளையும்..நேரத்தையும் குறித்துக் கொடுப்பார்.அது
கிட்டட்தட்ட காவிரியில் தண்ணீர் பொங்கி வரும் நாளை ஒட்டித்தான் வரும்.

சாஸ்திரிகள் தெரிந்துதான் நாள் குறிச்சுத் தருவாரா என்று தெரியாது.

நாள் குறித்து வந்த அன்று மாரிமுத்து ரொம்ப சந்தோஷமாக
இருப்பார்.வீட்டுக்குவந்து பெரிய பெண்ணானாலும் இன்னும் சின்னப்
பொண்ணுன்னு பெயரைத் தாங்கிக் கிட்டிருக்கும் மனைவியைக் கூப்பிட்டு..

“புள்ளே..பசிக்குது தட்டு வை” என்று சொல்வார்.

சின்னப் பொண்ணு தட்டு எடுத்து வைத்து..ஒரு லோட்டாவில் தண்ணீரும்
வைத்துவிட்டுச் சோறுப் போடுவாள்.”நீயும் உட்காரு..சேர்ந்தே சாப்பிடுவோம்” என அவளையும் பிடிவாதமாகச் சாப்பிட உட்காரவைத்துவிடுவார்.

விதை முகூர்த்தம் அன்று விடியலில் கணக்குப்பிள்ளை வந்து குரல்
கொடுப்பார்.சின்னப்பொண்ணு மாரியை எழுப்பி விடுவாள்.அவர் எழுந்து
கணக்குடன் காவிரியை நோக்கிச் செல்வார்.போகும் வழியிலேயே ஏதாவது ஒரு
ஆலமரத்திலிருந்து குச்சியை ஒடித்து பல்லை விளக்கிக் கொண்டே செல்வார்.

பொங்கிவரும் பொன்னியில் இறங்கி இடுப்பளவு தண்ணீர் உள்ள பகுதிக்குச்
செல்வார்.சூரியதிசையைப் பார்த்து மூழ்கி எழுவார். இடுப்புத்துணியை
அவிழ்த்து பிழிந்து தலையைத் துவட்டிக் கொள்வார். மெல்லக் கரையேறி அவசர..அவசரமாகத் துணியை இடுப்பில் கட்டிக் கொள்வார்.

படித்துறையை ஒட்டியுள்ள கோவிலுக்குச் சென்று கொஞ்சம் விபூதியை எடுத்து
வருவார்.அதை இடது உள்ளங்கையில் கொட்டி குனிந்து ஆற்றிலிருந்துப்சிறிது
நீரை வலது கையில் எடுத்து ஓரிரு சொட்டுகள் விபூதியில் இட்டுக் குழைத்து
நெற்றியில் மூன்று பட்டைகளாக இட்டுக் கொள்வார்.

நூல் வைத்தாற்போல இவரால் இப்படி விபூதி வைத்துக் கொள்ள முடிகிறதுஎன
வியந்து உடன் இருக்கும் கணக்கும் முயன்று பார்ப்பார்.அரிசிக் கஞ்சியை
நெற்றியில் வைத்துக் கொண்டாற் போலத்தான் இருக்கும்.

நெற்றி நிறைய விபூதியுடன் “முருகா” என கிழக்குத் திசையைப் பார்த்து பக்தி
சிரத்தையுடன் அவர் கும்பிடும்போது..என்றாவது ஒருநாள் விண்ணிலிருந்து
மயில் மீது முருகன் மாரிமுத்துவைக் காண இறங்கி வந்தாலும் வந்துவிடுவார் என கணக்கு நினைப்பார்.

முருகப் பெருமானிடம் அவருக்கிருந்த பக்தியால்தான் ஒரே குழந்தைக்கும்
சுப்பிரமணியம் என்று பெயரிட்டார்.

“முருகா இன்று விதை விதைக்கிறோம்..எந்த வித பாதிப்பும் இல்லாமல்..அமோக
விளைச்சலைத் தரணும்” என மனமுருக வேண்டுவார்.

வீட்டுக்கு வந்ததும்..குளித்து முடித்து விட்டு மஞ்சள் பூசிய முகத்துடன்,
தலைநிறையப் பூவுடன் சின்னப்பொண்ணு, குழந்தை சுப்பிரமணியையும்
தயார்ப்படுத்திவிட்டு நிற்பாள் கோயிலுக்குச் செல்லத் தயாராக.

“கோயிலுக்குப் போறதுக்கு முன்னால..ஒரு தம்ளர் நீராகாராமாவது
சாப்பிடுங்க..திரும்ப வர நேரமாயிடும் இல்ல”

“வேணாம் புள்ள..சாமி கும்பிட வெறும் வயித்தோடத்தான் போறது விஷேசம்”

“அப்ப..புறப்படலாம்னு கொல்லைக்கதவு நாதாங்கியைச் சாத்திவிட்டு  வாசல்கதவையும் பூட்டிவிட்டு ஊர் காக்கும் ஈஸ்வரன் கோவிலுக்குச் செல்வார்கள்.

கோவில் குருக்கள் இவர்களுக்காகவே சீக்கிரமாக வந்திருந்து கோவிலைத்
திறந்திருப்பார்.அதற்கும் முன்னமேயே கட்டைவண்டியில் அமாவாசை விதை
மூட்டைகளுடன் வந்திருப்பான்.குருக்கள் அர்ச்சனையை முடித்து தீபாராதனை
காட்டுவார்.இதன் நடுவே ஒரு படி அளவிற்கு விதைநெல்லைக் கோவில்
வாசல்படியில் அமாவாசை வைத்திருப்பான்.

பின் வண்டி வயலை நோக்கி விரையும்.மாரிமுத்து வயலின் கிழக்கு மூலைக்குச்
சென்று களைக்கொத்தியை ஓரடிக்கு ஓரடி நிலத்தைக் கொத்துவார்.

திருமணத்திற்குத் தயாராக இருக்கும் இளநங்கையைப் போல வயல் விளைச்சலுக்குத் தயாராயிருப்பதால் சுலபமாகக் கொத்தவரும்.

பின் கை..கையாக விதை நெல்லை எடுத்து வயம் முழுதும் தூவுவான் அமாவாசை.

அமாவாசையின் குடும்பம்தான் பரம்பரை பரம்பரையாக மாரிமுத்து கவுண்டரின் வயல்களில் விதை விதைக்கும் வேலைகளைச் செய்து வந்தது.

சாதி மதம் பார்க்காத அதிசய கிராமமாகவே அந்தக் கிராமம் திகழ்ந்தது.

காவிரியில் நுங்கும் நுரையுமாக புதுத் தண்ணீர் வர ஆரம்பிக்கும் சிலு..சிலு..என காற்று அடிக்க ஆரம்பிக்கும்.

நாளாக நாளாக நடவு நட்டு முடித்து நாற்றுகள் வேர்விடத் தொடங்கும்
மார்ழி.தை மாதங்களில் கதிர்கள் முற்றி வயல்கள் மரகதப் படுக்கையாகக்
காட்சி அளிக்கும்.

அறுவடை முடிந்ததும் தனக்கு வருஷத்திற்கு தேவையான நெல்லை
வைத்துக்கொண்டு,தன் வயல்களில் உழைத்த அனைவருக்கும் மீதத்தைப் பங்கிட்டுக் கொடுத்துவிடுவார்.அவர்கள் வேலைக்கு எனத் தனிச் சம்பளம் கிடையாது.இருபது மூட்டை நெல்லை அன்னதானத்திற்காகக் கோவிலுக்குக் கொடுத்து விடுவார்.

காலச்சக்கரம் யாரையாவது கேட்டுக் கொண்டா சுழல்கிறது..சுழன்றது.

மாரிமுத்து கவுண்டர், சின்னப்பொண்ணு வயல்களை எல்லாம் சுப்பிரமணியமும் அவனுக்கு வந்த மனைவி தேவயானையும் பார்த்துக்
கொண்டனர்.

ஆனால் மாரிமுத்துக்கு இருந்தது போன்ற நிலைமை இப்போது இல்லை.எல்லாமே தலைகீழ்.

வருடத்திற்கு சில தினங்களே யானைக்குக் கோவணம் கட்டியது போல ஆற்றில்
தண்ணீர் ஓடுகிறது.எல்லாப் பாசனக் கிணறுகளிலும் மணல்தான் தெரிந்தது. வயலுக்குத் தேவையானபோது தண்ணீர் கிடைப்பதில்லை.ஆடிப்பெருக்கு
அன்றுகூட வாய்க்காலாகத்தான் நீர் ஓடுகிறது.புகுந்த வீட்டின் மீது அந்த
காவிரிப் பெண்ணிற்கு என்ன கோபம் என்றே தெரியவில்லை.

வறுமை..கிராமங்களில் தாண்டவமாட ஆரம்பித்துவிட்டது.கணக்குப்
பிள்ளை,அமாவாசை குடும்பங்கள் எல்லாம் வேறு வேலைத்தேடி நகாங்களுக்குச்
சென்றுவிட்டனர்.

எல்லோருக்கும் அள்ளி..அள்ளிக் கொடுத்த மாரிமுத்துவின் மகன்
சுப்பிரமணியமோ, குடும்பச் செலவுகளுக்காக நிலங்களை கொஞ்சம் .கொஞ்சமாக விற்க ஆரம்பித்தான்.காவிரியையும் நம்பமுடியாது..விண்ணையும் நம்ப முடியவில்லை வானம் பார்த்த பூமிக்கு.நிலங்கள் அடிமாட்டு விலைக்கே போயின.

பல நூறு ஏக்கர்கள்..இன்று ஏக்கரில் வந்து நின்றது.அதிலும் சுப்பிரமணியால்
விதைக்க முடியவில்லை.

சீதை, அக்கினிப்பிரவேசம் செய்த போது..பூமி பிளந்து அவளை உள்வாங்கிக்
கொண்டதாம்.இப்போது யார்..யாரை உள் வாங்குவது எனத் தெரியாமல் வயல்
முழுதும் பூமித்தாய் பிளந்து காணப்பட்டாள்.

ஆடுமாடுகள் வைக்கோல் ,தண்ணீர் இன்றி இறந்து விழ ஆரம்பித்தன.தமிழக
கிராமங்களில் சோமாலியா மக்கள் கண்ணில் தென்பட ஆரம்பித்தனர்.

இளமையில் வறுமை என்பதே என்ன என்று தெரியாத சுப்பிரமணியம்,மனைவி
தேவயானை..குழந்தைகளை காப்பாற்ற வழி தெரியாது விழித்தான்.

நீண்ட நேர யோசனைக்குப் பின் ஒரு முடிவுக்கு வந்தான் சுப்பிரமணியம் பஞ்சாயத்துத் தலைவருக்கு ஒரு கடிதம் எழுதி..கண்ணில் பட்ட
மூக்கனிடம் கொடுத்து அவரிடம் கொடுக்கும்படி சொல்லிவிட்டு வீட்டை விட்டுப்
புறப்பட்டான்.

அடுத்த நாள் காலையில் மரத்தில் தொங்கும் அவனை மச்சக்காளைப் பார்த்தான்.

 

வியர்வை வழியும் தன் வழுக்கை மண்டையைக் கர்சீப்பால் துடைத்துக் கொண்டார் போலீஸ் அதிகாரி. பின், “எங்கேய்யா.. அவன் உங்ககு எழுதின கடுதாசு” என்றார் பலவேசத்தைப் பார்த்து.

பலவேசம் தன் ஜிப்பாவின் பாக்கெட்டிலிருந்து அதை எடுத்துக்
கொடுத்தார்.அதைப் படிக்க ஆரம்பித்தார் அதிகாரி..

அன்புள்ள தலைவர் அவர்களுக்கு,

என்னுடைய தகப்பனார் யார் பசி என்று வந்தாலும் இல்லையெனக் கூறாது ஊருக்கே அன்னம் படைத்தவர்.”சோழ நாடு சோறுடைத்து” “தஞ்சை தமிழகத்தின் நெற்களஞ்சியம்” என்பதெல்லாம் பொய்யாகி விட்டது. சோற்றுக்கே தஞ்சைத் தரணி தடுமாறத் தொடங்கிவிட்டது.

இவ்வளவு நாட்கள் என்னால்,தேவானையையும்,என் குழந்தைகளையையும் கௌரவத்தை விடாமல் காக்க முடிந்தது.இனியும் என்னாலதுபோல இருக்க முடியாது போல இருக்கு.இரந்தும் உயிர்வாழ வேண்டாதவன் நான்.அதனால் என் உயிரை முடித்துக் கொள்ள முடிவு செய்துவிட்டேன்.

இந்தக் கடிதத்தை நீங்கள் படிக்கும் போது..என் உடலைத்தான் நீங்க பார்ப்பீங்க.

என்னை நம்பி வந்த தேவானியையும்,குழந்தைகளையையும் எப்படிடா விட்டுப்போக உனக்கு மனசு வந்த்து என நீங்க கேட்பீங்க..

எனக்குத் தெரியும்..என்னோட சாவுக்கப்புறம் ,அரசாங்கம் என் மனைவிக்கு
எதாவது பணம் தரும்.விவசாயி உயிரோட இருக்கப்போதைவிட செத்தாத்தானே
இன்னிக்கு மதிப்பு.அந்தப் பணத்தை வைச்சு அவ பொழச்சுப்பா.

ஆனாலும்..என் ஆத்மா இந்த கிராமத்தைத்தான் சுத்திக் கிட்டு
இருக்கும்…என்னிக்காவது பழய நாட்கள் திரும்பி வராதான்னு
ஆதங்கத்துடன்.அப்படி ஒருநாள் வருமேயானால்..இந்தக் கிராமத்தில் எதாவது ஒரு வீட்டில் நான் பொறந்திருப்பேன்.

உங்களுக்கும்..என் கிராம மக்களுக்கும் வணக்கம் கூறி..உலகத்துல இருந்து
விடை பெறுகிறேன்

இப்படிக்கு

சுப்பிரமணியன்

அந்தக் கடிதத்தைப் படித்துவிட்டு அதை மடித்துத் தன் சட்டைப் பையில்
வைத்துக் கொண்டார் போலீஸ் அதிகாரி.

“ஐயா..அது எனக்கு எழுதிய கடிதம்”

“அது எனக்குத் தெரியும்..இது என் கிட்டேயே இருக்கட்டும்”

அதற்குள் ஒரு ஆம்புலன்ஸ் வண்டிவர சுப்பிரமணியம் என்ற பெய்ரைத்
தாங்கியிருந்த அந்த உடல் பிரேத பரிசோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்டது.

மறுநாள் உடலை ஈமக்கிரியைக்கு தெய்வயானையிடம் ஒப்படைத்தனர். பலவேசமும் உடன் சென்றிந்தார்.

குடியைப் பற்றியே அறியா சுப்பிரமணியம் அதிகம் குடித்துவிட்டு வயிற்றுவலி
தாங்காமல் தற்கொலை செய்து கொண்டான் எனபோஸ்ட்மார்ட்டம் ரிபோர்ட்
சொல்லியிருந்தது.

பல கேள்விக்குறிகள் பதில் இல்லாமல் கேள்விக்குறிகளாகவே நின்று விடுகின்றன.

நீல வெளிச்சம் -மலையாளத்தில் முகமது பஷீர் தமிழில் மீனா

 

Image result for indian village house in blue lights

 

மலையாள இலக்கிய உலகின் மிகச் சிறந்த படைப்பாளியான வைக்கம் முகமது பஷீர் பால்யகால சகி, பாத்திமாவின் ஆடு,சப்தங்கள்,மதிலுக்குள், அனர்க்க நிமிஷம் உள்ளிட்ட அற்புதமான படைப்புக்களுக்குச் சொந்தக்காரர்

தன் கதை குறித்து அவர் :

நீல வெளிச்சம் என்ற இச்சிறுகதை என் வாழ்க்கையின் விளக்க முடியாத அனுபவங்களில் ஒன்றாகும்.அனுபவம் என்பது மிகச் சரியான வார்த்தையில்லை.ஒன்றொன்றாக,அடுத்தடுத்து விரைவாக மாறுகிற,ஒரு கனவில் நிகழ்கிற உண்மை அல்லது கற்பனைத் தோற்றங்களின் தொகுதி என்று வேண்டுமானால் சொல்லலாம். இதை அறிவியல் அணுகுமுறை என்ற ஊசியால் குடைய முயன்றேன். வெற்றி யில்லை.விளக்க முடியாத அனுபவம் என்ற வார்த்தையில் தஞ்சமடைவதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை.

 

சென்றமாதத் தொடர்ச்சி!

முன்கதை 

கதை சொல்லி ஒரு தனி வீட்டுக்குக் குடி போகிறார். போன பிறகுதான் நண்பர்கள் கூறினார்கள். அந்தவீட்டில் பார்கவி என்ற பெண் தற்கொலை செய்துகொண்டாளாம் . அதனால் அவள் அங்கே ஆவியாகிய இருக்கிறாளாம் . எனக்கு பேயெல்லாம் பயமில்லை என்று வெளியில் தைரியமாகச் சொன்னாலும் உள்ளூர அவருக்கு ஒரு உதறல். அதனால் அவள் கூட உரையாடத் துவங்குகிறார்.

இனி பஷிரின் வரிகளில் .. 

 

நான் சந்தித்தேயிராத பார்கவி இருபத்தியோரு வயதான இளம்பெண். ஒருவனை ஆழமாகக் காதலித்தவள். அவன் மனைவியாகத் ,துணை யாக இருக்கக் கனவு கண்டவள். ஆனால் கனவு ..ஆமாம் கனவாகவே நின்றுவிட்டது. அவளுக்கு மனச்சோர்வு ஏற்பட்டது.அவமானமும் கூட..

         “பார்கவி, நீ அதைச் செய்தேயிருக்கக் கூடாது.நான் உன்னைக் குற்றம் சொல்கிறேன் என்று நினைக்காதே. நீ காதலித்த மனிதன் அந்த அளவிற்கு உன்னைக் காதலிக்கவில்லை.உன்னைவிட அதிகமாக இன்னொரு பெண்ணைக் காதலித்தான்.வாழ்க்கை உனக்குக் கசந்து விட்டது,

உண்மை.ஆனால் வாழ்க்கை அவ்வளவு கசப்பானதில்லை.மறந்து விடு. உன்னைப் பொறுத்த வரை, சரித்திரம் திரும்பப் போவதில்லை.

       “பார்கவி,நான் உன் தவறைச் சுட்டிக் காட்டுகிறேன் என்று நினைக்காதே. நீ உண்மையிலேயே காதலுக்காகத்தான் இறந்தாயா? நித்திய வாழ்க்கையின் வைகறைதான் காதல்.எதுவுமே தெரியாத ஓர் அப்பாவி நீ. ஆண்களை நீ வெறுக்கும் விதம் அதை உறுதி செய்கிறது. உனக்கு ஒரே ஒரு ஆணைத்தான் தெரியும்.ஒரு பேச்சுக்காக அவன் உன்னை மோசமாக நடத்தினான் என்றே வைத்துக் கொண்டாலும் அதே பார்வையில் அத்தனை ஆண்களையும் பார்ப்பது சரியா? நீ தற்கொலை செய்து கொள்ளாமல் இன்னும் சிலகாலம் வாழ்ந்திருந்தால் உன்னுடைய ஊகம் எவ்வளவு தவறென்று தெரிந்திருக்கும். உன்னைக் காதலித்து,வழிபடும் ஒருவன் இருந்திருப்பான். உன்னை ’என் தேவதையே ’என்று அழைத்திருப்பான்.”

       “ஆனால்.. நான் சொன்னது போல சரித்திரம் திரும்பாது. உன் சரித்திரத்தை எப்படியறிவது ? இன்றிரவு நீ என் கழுத்தை நெரித்தால் கூட எனக் காக பழிக்குப்பழி வாங்க யாரும் வரமாட்டார்கள், ஏனெனில் எனக்கென்று யாருமில்லை. என்னை நீ தாக்காதே. இது என் மெய்யான சமர்ப்பணம்.”

      என் நிலை உனக்குப் புரிந்திருக்கும்.நாம் இங்கு வாழப் போகிறோம். சட்டரீதியாகச் சொன்னால் இந்த வீடும் ,கிணறும் என்னுடையது. கீழேயுள்ள நான்கு அறைகளையும், கிணற்றையும் நீ பயன்படுத்திக் கொள். குளியலறையையும், சமையலறையையும் நாம் பகிர்ந்து கொள்வோம். நீ இதற்கு உடன்படுகிறாயா?”

         இரவு வந்துவிட்டது.சாப்பிட்டுவிட்டு ,பிளாஸ்கில் தேநீருடன் வந்தேன். ஹரிக்கேன் விளக்கை ஏற்றினேன். அறையில் மஞ்சள் வெளிச்சம் நிறைந்தது.

       டார்ச்சுடன் கீழே போன நான் இருட்டில் நின்றேன்.  குழாய்களைப்பூட்ட நினைத்தேன். ஜன்னல்களை முழுவதுமாகத் திறந்து விட்டு,கிணற்றைப்  பார்த்துவிட்டுச் சமையலறைக்குப் போனேன். குழாய்களைப் பூட்டக்கூடாதென்று நினைத்தேன். கதவைப் பூட்டிவிட்டு மாடிக்குப் போய் தேநீர்  குடித்தேன்.பீடியைப் பற்ற வைத்துக் கொண்டு எழுதத் தொடங்கினேன். திடீரென்று பார்கவி என் நாற்காலிக்குப் பின்னால் நிற்பது போலுணர்ந்தேன்.

     “நான் எழுதும்போது யாரும் பார்ப்பது எனக்குப் பிடிக்காது” சொல்லி விட்டுத் திரும்பினேன். யாருமில்லை. ஏனோ திரும்ப எழுதத் தோன்ற வில்லை.நாற்காலியை என்னருகே இழுத்தேன்.

     “பார்கவிக் குட்டி, உட்கார்ந்து கொள்”காலியான நாற்காலி.அறைகளினி டையே உலவினேன். காற்றில்லை. இலைகளில் அசைவில்லை. ஜன்னலினூடே ஒரு விளக்கு வெளிச்சத்தைப் பார்த்தேன்.அது நீலமா, சிவப்பு அல்லது மஞ்சளா?ஊகிக்க முடியவில்லை. கண நேரக் கண்ணோட்டம்தான்.

     அது என் கற்பனைதான் என்று சொல்லிக் கொண்டேன்.பார்த்தது ஒளிதானென்று சத்தியம் செய்யமுடியாது. எதையும் பார்க்காமல் எப்படி வெளிச்சமென்றுணர்ந்தேன். அது மின்மினிப் பூச்சியா ?

      ஜன்னலையே பார்த்துக் கொண்டிருந்தேன் .அது வீண்தான்.படிக்க முயன்றேன். முடியவில்லை. நாற்காலி காலியாக இருந்தது. சீக்கிரம் தூங்க நினைத்து விளக்கை அணைத்தேன். பாட்டுக் கேட்கலாமென்று தோன்றியது.

             விளக்கை ஏற்றிவிட்டு கிராம்போனை வைத்தேன்.

      யார் பாடலைக் கேட்கலாம்.உலகம் அமைதியாக இருந்ததெனினும் என் காதுகளுக்குள் ஒலி ஊடுருவிக் கொண்டிருந்தது. அது திகிலா? பின் முடி குத்திட்டு நின்றது.கொடூரமான அந்த அமைதியைத் துண்டுகளாகச் சிதறடிக்க விரும்பினேன். அதற்கு யாருடைய பாடலை வைப்பது?பால்ராப் சன்..’ஜோஸுவா பிட் தி பாட்டில”..அது முடிந்தது.பின் பங்கஜ் மாலிக்கின் ’து டர் ந ஜராபி’ பிறகு எம்.எஸ்ஸின் ’காற்றினிலே வரும் கீதம் ’பாடல்களைக் கேட்டு முடித்த பிறகு சிறிது அமைதி வந்தது. பிறகு சைகலைக் கேட்டேன்.’சோ ஜா ராஜ்குமாரி ’இளவரசியே தூங்கு ,கனவுகளுடன்..

        இன்றைக்குப் போதும்,நாளைக்குப் பார்த்துக் கொள்ளலாம். முணுமுணுத்துக்கொண்டே விளக்கை அணைத்து விட்டு பீடியை பற்றவைத்துக்  கொண்டு கட்டிலில் சாய்ந்தேன்.  அருகில் டார்ச்,கைக்கடிகாரம்,கத்தி, காலியான நாற்காலி.

        முகப்பிற்குப் போகும் கதவைச் சாத்தினேன்.மணி பத்திருக்கும். கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தேன்.கடிகாரத்தின் ’டிக் ,டிக் ஒலி தவிர வேறெதுவும் கேட்கவில்லை.நிமிடங்கள் பல மணி நேரங்களாகின.மனதில் பயமில்லை. குளிர்..தூக்கம் வரவில்லை. இது எனக்குப் புதிய அனுபவ மில்லை.பல இடங்கள்,நாடுகள்…இருபது வருடத் தனிமை.. புரிந்து கொள்ள முடியாத பல அனுபவங்கள் எனக்கு.அதனால் என் கவனம் இறப்பிலும், நிகழ்விலும் படர்ந்தது. இடையே சந்தேகங்கள்.யாராவது கதவைத் தட்டி னார்களா?குழாய் திறந்திருக்கிறதா?என்னை மூச்சுத் திணற வைக்க முயற் சியா?காலை மூன்று மணிவரை விழித்திருந்தேன்.

       எதுவும் நடக்கவில்லை’.”வணக்கம்,பார்கவி மிக்க நன்றி. எனக்கு ஒரு விஷயம் தெளிவாகி விட்டது!ஜனங்கள் உன்னைப் பற்றி புரளி கிளப்பி விடுகிறார்கள். போகட்டும் விடு.”

      நாட்கள் கடந்தன. பார்கவி,அவள் பெற்றோர்,சகோதர சகோதரிகள்.. எனக்குத் தெரியாத பல கதைகள் இருக்கலாம் அவற்றைப் பற்றி யோசிப்பேன். எழுதிக் களைப்படைந்த பிறகு எல்லா இரவுகளிலும் கிராம்போனில் பாடல்கள் கேட்பேன்.ஒவ்வொரு பாடலுக்கு முன்பும் பாடகர் பெயர் பொருள் சொல்லுவேன்

     “குஜார் கயா வோ ஜமானா” இது சோகத்தையும், ஞாபகங்களையும்   நினைவுக்குக் கொண்டு வரும் பங்கஜ் மாலிக்கின் பாடல்..கவனமாகக் கேள்’ என்பேன்.அல்லது’ இது பிங் கிராஸ் பையின் ’இன் தி மூன் லைட்’ பாடல. பொருள் என்னவென்றால் ஒளியில்.. ஐயோ மறந்துவிட்டேன்! நீ பி.ஏ. படித்தவள் ! ஸாரி.. “என்பேன்.

               இந்த நிலையில் இரண்டு மாதங்கள் கடந்தன. தோட்டம்  போட்டேன். பூக்கள் மலர்ந்த போது அவளுக்காகத்தான் என்றேன். இதற்கிடையில் ஒரு நாவலை எழுதி முடித்தேன்.என் நண்பர்கள் இரவில் வந்து தங்குவார்கள்.அவர்கள் தூங்குவதற்கு முன்னால்,அவர்களுக்குத் தெரியா மல் கீழே போய் இருட்டில் நின்று கொண்டு “ பார்கவி, என் ஆண் நண்பர்கள் இரவில் தங்குவதற்காக இங்கு வந்திருக்கிறார்கள்.நீ யார் குரல்வளையை யும் நெறித்து விடக்கூடாது.அப்படி ஏதாவது நடந்து விட்டால் போலீஸ் என்னைப் பிடித்து விடும்.தயவுசெய்து ஜாக்கிரதை.. குட்நைட்!” என்பேன்.

            வீட்டை விட்டு வெளியே போகும் போது “பார்கவி ,வீட்டைப் பார்த்துக் கொள்,யாராவது நுழைந்து விட்டால் குரல்வளையை நெறித்துவிடு. சவத்தை மூன்று மைல் தள்ளிப் போட்டுவிடு, இல்லையெனில் நாம் சிக்கலுக்குள்ளாவோம். ”இரண்டாவது ஆட்டம் சினிமா முடிந்து வரும்போது ’நான்தான்’ என்று சொல்வேன்.

            அப்படித்தான் தொடங்கியது. காலப் போக்கில் பார்கவியை மறந்தேன்.தீவிர உரையாடலில்லை.எப்போதாவது ஞாபகம்,அவ்வளவுதான். நினைவை இப்படிச் சொல்வேன்..உலகம் தொடங்கிய நாளிலிருந்து எத்தனையோ பேர் தோன்றி மறைந்திருக்கிறார்கள். அவர்கள் எல்லோரும் தண்ணீர் ,தூசு,புகை என்று உலகின் ஒரு பகுதி என்று நமக்குத் தெரியும். பார்கவியும் அப்படி ஒரு நினைவுதான்.

         அதற்குப் பிறகுதான் இந்தச் சம்பவம் நடந்தது. அதைச் சொல்கிறேன்.

         ஒரு நாளிரவு பத்துமணியிருக்கும். தொடங்கியதை முடித்து விட வேண்டுமென்ற மும்முரத்தில் எழுதிக் கொண்டிருந்த போது விளக்கொளி மங்குவதாக உணர்ந்தேன்.ஹரிக்கேன் விளக்கைத் தூக்கி லேசாக ஆட்டினேன். மண்ணெண்ணைய் காலியாகும் நிலைக்கு வந்த போதும், ஒரேயொரு பக்கத்தை எழுதிமுடித்து விடச் சிறிது பாதுகாத்து வைத்திருந்தேன். எழுதத் தொடங்கிய போது மீண்டும் விளக்கு மங்கியது. எழுதுவதைத் தொடர்வ தற்கு முன்னால் திரியைத் தூண்டி விட்டேன்.சிறிது நேரத்தில் திரி குறுகிச், சிவந்த நெருப்பு வர விளக்கை அணைத்தேன்.

       என்ன செய்வது ?எனக்கு மண்ணெண்ணைய்வேண்டும். அருகிலுள்ள விடுதிகளில் தங்கியிருக்கும் நண்பர்களிடம் எண்ணெய் வாங்கி வருவதற்காக டார்ச்சையும் ,பாட்டிலையும் எடுத்துக் கொண்டு,கதவைப் பூட்டிவிட்டு ஆளரவமற்ற சாலையில் மிக மெலிதான நிலாவொளியில் வேகமாக நடந்தேன்.கருமேகங்கள் கூடியிருந்தன வெளியிலிருந்து கூப்பிட ஒரு நண்பன் வந்தான்.பின்பக்க வழியாக விடுதியில் நுழைந்தோம்.மற்ற மூவர் சீட்டாடிக் கொண்டிருந்தனர்.

       நான் மண்ணெண்ணைய் கேட்ட போது ஒருவன் சிரித்துக்கொண்டே “நீ ஏன் பார்கவியிடம் கேட்கக் கூடாது?அவள் கதையை எழுதி முடித்து விட்டாயா ?” என்று கேட்டான்.நான் பதில் சொல்லவில்லை.பார்கவி கதையை எழுதவேண்டும்.பாட்டிலை நிரப்பிக் கொண்டு வெளியே வந்தபோது மழை ஆரம்பித்திருந்தது.

        “எனக்குக் குடை வேண்டும் “என்றேன்.”எங்களிடம் குடையில்லை. எங்களுடன் விளையாடு. மழை நின்றதும் போகலாம்.”

         விளையாடினோம்.மூன்று முறை தோற்றுப் போனேன்.என் தவறு தான். பாதியாக நின்ற கதையிலேயே மனமிருந்தது.ஒரு மணிக்கு மழை நின்றது.நான் டார்ச்சையும் ,பாட்டிலையும் எடுத்துக் கொண்டு வெளியே வந்த போது விளக்கு அணைக்கப்பட்டு நண்பர்கள் படுக்கப் போய்விட்டனர்.

         இருட்டில் தெரு அமைதியாக இருந்தது.வீட்டை நோக்கி நடந் தேன்.மிக மெலிதான் நிலவொளியில் முழு உலகமே மூடுபனியில் தழுவப்பட்டுக் கிடந்தது.என் மனதில் ஓடிக் கொண்டிருந்த  நினைவுகளின் சலசலப்பு பற்றி நான் அறியவில்லை. அல்லது நான் எதைப் பற்றியுமே  யோசிக்கவில்லை.வெறுமையான அந்த வழியில் டார்ச்சின் ஒளியோடு தனியனாக நடந்தேன்.அந்தப் பயணத்தில் ஒரு ஜந்துவைக் கூடப் பார்க்கவில்லை.

         கதவைத் திறந்து உள்ளே போய் தாழிட்டுக் கொண்டேன். அசாதாரணமாக எதுவும் நடக்கும் என்ற சந்தேகம் அந்த நேரத்தில் மனதிலில்லை.

திடீரென்று காரணமின்றி மனதில் சொல்ல முடியாத துக்கம் வந்தது. அழ வேண்டும் போலிருந்தது.நான் சுலபமாகச் சிரித்து விடுவேன்; ஆனால் கண்ணீர் விடுவது கடினம். சில சமயங்களில் என் மனம் மிக நிச்சலனமாகிவிடும். அந்த வகையான மனவுணர்வில் மாடியேறினேன்.

         நான் கதவைப் பூட்டிக் கொண்டு போனபோது,விளக்கணைந்து வீடு முழு இருளிலிருந்தது.மழை பெய்திருக்கிறது.இரண்டு,மூன்று மணி நேரம்கடந்திருக்கிறது. ஆனால் இப்போது அறை வெளிச்சமாக இருந்ததைக் கதவின் சட்டகம் வழியாக என்னால் பார்க்க முடிந்தது.

        கண்கள் பார்த்த ஒளியை ஆழ்மனது ஒப்புக் கொண்டது.ஆனால் அந்தத் தெளிவின்மை என் உணர்வில் இன்னும் ஊடுருவவில்லை. அதனால் வழக்கம் போலச் சாவியையெடுத்து பூட்டின் மீது டார்ச் வெளிச்சத்தைக் காட்டினேன்.பூட்டு வெள்ளியைப் போல மின்னியது.அது என்னைப்பார்த்துச் சிரித்தது.கதவைத் திறந்து உள்ளே போனதும்,மனவுலைவு ஏற்பட,  சுற்றியிருப்பது எல்லாம் தெரிந்தது.என் உடலின் ஒவ்வொரு அணுவும் அதை உணர்ந்த போதும் பயவுணர்வு வரவில்லை. எனக்குள் உணர்ச்சிகளின் பிரளயம் : இரக்கம்,அன்பு அல்லது இரண்டின் கலவை.வியர்வையில் நனைந்து ஊமையாக நின்றேன்.

           நீல வெளிச்சம்!வெள்ளைச் சுவர்கள்,அறை—நீல வெளிச்சத்தில் பளபளத்தது. அந்த வெளிச்சம் ஹரிகேன் விளக்கிலிருந்து பிரதிபலித்தது.

          இரண்டு இன்ச் திரியிலிருந்து ஒரு நீல ஜூவாலை.!  

        மண்ணெண்ணைய் இல்லாததால் அணைந்து போன ஹரிக்கேன் விளக்கு : யார் அதை ஏற்றியது ?பார்கவி நிலையத்திற்கு எங்கிருந்து அந்த வெளிச்சம் வந்தது?

                                                               *******************

 

 

அந்த மூன்று நாட்கள் – டாக்டர் ரேவதி ராமச்சந்திரன்

           Image result for doggy and lady in chennai                                            

என்ன தலைப்பு இது என்று யோசிக்கிறீர்களா! வாங்க கதைக்குள் இல்லை இல்லை நிஜத்திற்குள் போகலாம்.  

எனக்கு ஆஸ்திக்கு ஒரு பையனும், ஆசைக்கு ஒரு பெண்ணும். பையன் தான் ஆஸ்தி, வேறு ஆஸ்தி நாஸ்தி. இருவருக்குமே நாய் வளர்ப்பதில் சிறு வயதிலிருந்தே ஆசை. ஆனால் அபார்ட்மெண்டில் இது கொஞ்சம் கஷ்டம். மேலும் நான் மூன்றை ஏற்கனவே வளர்த்துக்கொண்டிருந்தேன். என்ன என்ன நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? நான் சொன்னது என் இரு செல்வங்களையும் அவர்களைப்  பெற்றவரைப் பற்றியும் தான். மேலும் நான் ஆபீஸ், வீடு என்று இருந்ததால் இன்னொன்றுக்கு ஏது நேரம்? அதாங்க நாய்க்குத்தான். 

என் பையன் அவன் கல்யாணத்திற்குப்பிறகு இந்த ஆசையை வந்தவளிடம் சொன்ன போது அவளும் ஒண்ணு நான், இல்லை நாய்’  என்றாள். அவள் அதற்குக் கூறிய காரணங்கள் நியாயமானது தான். என்  பையன் வேலை அப்படி. எப்போது வேண்டுமானாலும் கூப்பிடுவார்கள். பெண்டாடியோட வாக்கிங் போகவே நேரம் இல்லை. இதில்  எங்கேயிருந்து நாயுடன். அந்த வேலையும் அவள் தலையிலேதான் விழும். பிறகு என் முறை. ‘ம்ஹூம், என்னைப் பார்க்காதீர்கள். பத்து பேருக்கு வேண்டுமானாலும் ஒண்டியாக சமைக்கிறேன், இந்த நாய் பேய் எல்லாம் என்னால் முடியாது’ என்று தைரியமாக சொல்லி விட்டேன். அவ்வளவு தான் கதை முடிந்து விட்டது என்று நாங்கள் இருவரும் அதாங்க மாமியாரும் மாட்டுப்பெண்ணும் சந்தோஷப்பட்டோம். இதில் ரொம்ப ஒற்றுமை. ஆனால் விதி வலியது, இல்லை இல்லை கொடியது.

என பையன் ஆபீஸ் கேட் கிட்ட ஒரு நாய் ஐந்து அல்லது ஆறு குட்டிகளைப்  போட்டது. பாவம் எல்லாக்குட்டிகளும் காரில் அடி பட்டு பரலோகம் சென்றன. இரண்டு குட்டிகளைத் தவிர. என் பையன் முதலில்  ஒரு குட்டியைப் பார்த்துப் பாவப்பட்டு கனி கொண்டு வந்துள்ளேன் என்று தருமர் சொல்லி திரௌபதியைக் கொண்டு வந்த மாதிரி இடுப்பில் காய்கறியைத் தூக்கி வர மாதிரி தூக்கி வந்தான். எங்களுக்கும் பாவமாக இருந்தது. தாயுள்ளம். ஆனால் கடைசியில் நான் தாங்க பாவம். அதுதான் கதையே. இன்னொரு குட்டி அடுத்த நாள் இறந்து விட்டது அதை நான் கவனிக்கவில்லை என்று என் பையன் சொன்னான். 

நாய் ஓகே. முதலில் அது எங்கே என்று தேட வேண்டி வரும். பயந்து கதவுக்குப் பின்னால், கட்டிலுக்கு அடியில் என்று ஒளிந்து கொண்டிருக்கும். இப்போ அதுக்குப் பயந்து நான் தான் ஒளிந்து கொள்கிறேன். என் பேரனுடன் அழகாக விளையாடும். என் பையன் குரல் கேட்டால் எங்கிருந்தாலும் ஓடி வரும். கொஞ்சம் பயந்த சுவாபம். பூனையைக் கண்டால் முன் சென்று பின்னேறும். மனித குணம் ஒன்று உண்டு. நாங்கள் கொடுக்கும் சப்பாத்தியைத் தொடாமல் அடுத்த வீட்டு காய்ந்த ரொட்டியை ருசித்து  சாப்பிடும். ஆரஞ்சு ஆப்பிள் தர்பூசணி  என இராஜ வாழ்க்கைதான். நானும் என் மாட்டுப்பெண்ணும் அருந்தும் ஆப்பிள் வெள்ளரி ஜூசை அது சாப்பிடும் அழகே அழகு. நாயைத் தொடாமலே நான் இதையெல்லாம் ரசிப்பேன்.   

     ஒரு தடவை என் பையன், மாட்டுப்பெண், பேரன் மூன்று பேரும் மூன்று நாட்கள் என்னையும் நாயையும் விட்டு விட்டு வெளியூர் சென்றனர். நானும் நாயுமடி எதிரும் புதிருமடி என்று முதலில் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டோம். ஓகே நாம் இருவர் நமக்கு மூன்று நாட்கள் என்று தீர்மானம் ஆயிற்று.

என குழந்தை என்னை விட்டுப் பிரிந்து இருந்தாலும் இருப்பான் இவன் இருக்க மாட்டான். அது எப்பிடித்தான் தெரியுமோ! நான் என்  அறைக்குள் சென்றால் பத்து நிமிடம் பார்ப்பான். எனக்கு கொடுக்கும் நேரம் அவ்வளவுதான். அதற்குப் பிறகு கதவைத் தட்டுவான். என்னால் நம்பவே முடியலை. எப்படி அவன் நேரம் பார்க்கிறான் என்று!  இதுவாவது பரவா யில்லை. இராத்திரி பகல் எப்படித் தெரியும்! இராத்திரி என் அறையில் போனாலே விட மாட்டான். இதை விட ஆச்சரியம்! சரியாக இரவில் மூன்று மணிக்கு எழுந்து என்னைக் கூப்பிடுவான். வெளியில் போக. பிசாசு கூட பயப்படும் இரவில் தைரியமாக இவனுடன் வெளியில் சிறிது நேரம் உட்கார்ந்து கொள்வேன். அப்பப்பா! இனி யாராவது ‘நாயே’ என்று திட்டினால் நான் ஒப்புக்கொள்ள மாட்டேன். நாய்க்குள்ள அறிவு நம்மிடம் உள்ளதா என்று. என் குணம் அறிந்து என்னைத் தொடாமலே என மனதில் உட்கார்ந்து விட்டான். என் பெண்ணிடம் நேற்று பேசிய இருபது நிமிடத்தில் பதினைந்து நிமிடம் இவனைப் பற்றித்தான் என்றால் அவள் ஆச்சர்யப்பட்டுப்போனாள்!

அந்த மூன்று நாட்கள் மூன்று யுகமாகக் கழிந்தாலும் மூன்று முத்தான நாட்களாக இப்பொழுது பார்க்கிறேன். ‘நாயே  நன்றியுள்ள நீயே! நலம் பட வாழியவே!’

  

“எலுமிச்சை “- லக்ஷ்மணன்

Image result for cheap lemon yellow saree for old people

அவனுக்கு ஒரே ஆச்சர்யம். கொஞ்சம் நிம்மதியும் கூட. வாடகைக்கு ஒரு வீடு பார்த்து அது மனைவிக்கு பிடித்துப்போய் அங்கு குடி போவதும் நாடு விட்டு நாடு புலம் பெயர்ந்து போவதும் அவனைப் பொறுத்த வரை ஒன்றுதான்.  எவ்வளவு அலைச்சல். வீடு நல்லாயிருந்தா ரோடு சந்து மாதிரி இருக்கிறது. வேண்டாம். எல்லாம் சரியாயிருந்தா வாடகை ரொம்ப அதிகம், வேண்டாமே என்பாள்.

என்னமோ அவளுக்கு இந்த வீடு மிகவும் பிடித்து போனது. கேட்டை திறந்து முன்னாடி உள்ள வீட்டின் பக்கவாட்டின் வழியே பின்பக்கம் சென்றால் அதுதான் அவர்கள் பார்த்திருக்கும் வீடு. சின்ன சின்னதாய் இரண்டு படுக்கை அறைகள். ஹாலும் சின்னதே. சமயலறை ரொம்ப சுமார். வாசலில் குட்டி வராண்டா. “500, 1000 மேல போனாலும் பரவாயில்லை. இந்த வீட்டை பேசி முடிச்சுடுங்க” என்று சொல்லிவிட்டாள். என்ன காரணமென்று தெரியாமலேயே அவனும் வீட்டு உரிமையாளரிடம் பேசி சம்மதம் பெற்று அந்த வீட்டிற்கு குடித்தனம் வந்து ஒரு வாரம் ஆயிற்று.

அவனது வாழ்க்கை அவனது கடைதான். மாம்பலத்தில் சின்ன துணிக்கடை. புடவை ரவிக்கை மற்றும் டெய்லர்களுடைய தேவைக்கான அத்தியாவசிய பொருள்கள். (துணிக்கடை வைத்திருந்ததால் எழுத்தாளர்களில் சுந்தர ராமசாமியை அவனுக்கு ரொம்ப பிடிக்கும்)

போதுமான வருமானம். காலையில் 9 மணிக்கு கடையை திறந்தால் மூடுவதற்கு இரவு 10 மணி ஆயிடும். வீட்டிற்கு வந்து சாப்பிட்டு சிறிது நேரம் டி வி பார்த்து படுக்க எப்படியும் 12 மணி ஆகிறது. எதாவது ஒரு நாள் கடைக்கு சீக்கிரமாக 8 மணிக்கு சென்றால் காத்திருந்தார்போல சாலையில் குப்பை பெருக்குபவள் ‘சார் டீ குடிக்க எதாவது காசு’  கேட்பாள். அவனும் அவள் பேரை ( சரஸ்வதிங்க, சரசுன்னு கூப்பிடுவாங்க ஒரு பையன் சார், கண்ணாலம் கட்டிகிட்டு தனியா போய்ட்டான். நானும் அம்மாவும்தாங்க. அவ சீக்காளிங்க. ) கேட்டுவிட்டு 20 ரூபாய் கொடுப்பான். ஒரு வெளுத்த நீல புடவை, வெள்ளை ரவிக்கை, ஒரு கையில் நீண்ட கொம்பு. அதன் முனையில் குப்பை கூட்ட கணிசமான அகலத்தில் பிளாஸ்டிக் பிரஷ்.அந்த கோலத்தில் அவளை பார்த்தால் பாவம், எவ்வளவு வேணா உதவி செய்யலாம் என தோணும்.

இது வாரா வாரம் தொடர்ந்தது. அவனிடம் பணம் கேட்பதனாலோ என்னமோ அவன் கடை வாசல் எப்போதும் சுத்தமாக இருக்கும். பக்கத்து கடை அடகு கடை. பழக்கத்தில் நண்பராகி விட்டார்.

அடகு வைப்பவர்கள் முக்கால்வாசி பேர் அனாவசிய செலவுப் பண்ணத்தான் பணம் கேட்டு அவரிடம் வருகிறார்களாம் இவனிடம் வந்து வருத்தப்படுவார். அந்த வருத்தம் உண்மையானதா என இன்று வரை அவனுக்கு சந்தேகம்தான்.

ஒரு நாள் அவன் மனைவியின் தங்கை முதன்முதலாக அந்த வீட்டிற்கு வந்தாள். வந்தவள் ‘பிரமாதமான வீடு. உனக்கு பிடித்த மாதிரியே இருக்கே. கேட்லேருந்து உள்ளே வர எவ்ளோ தூரம்.’ என்று வியந்தாள். பகல் முழுவதும் இருந்துவிட்டு அவள் போன பிறகு அன்றுதான் முதன்முதலாக வாசலில் நின்று கொண்டு அவன் மெயின் கேட்டைப் பார்த்தான்.

இவனுடைய வீட்டிற்கும் வாசலுக்கும் 100 அடி தூர இடைவெளி. இடது பக்கம் பின்னாடி பெரிய வேப்ப மரம். கொஞ்சம் வெட்ட வெளி. அதை ஒட்டின வீடு. சொந்தக்காரருடையது.

வலது பக்கம் ஒரு தென்னை மரம். பக்கத்தில் வேப்ப மரம். அடுத்தாற்போல எலுமிச்சை மரமும் அதை சேர்ந்தார்போல் காம்பவுண்ட் வரை பவழமல்லி மரம். நடுவே எங்களுக்கென்று நடைபாதை.

ஆனால் அவன் கண்ணில் பட்டது பாதை முழுவதும் குவிந்திருக்கும் குப்பைதான். மனைவியை கூப்பிட்டு “யார் இந்த குப்பையெல்லாம் தினமும் அள்றா”  என்று கேட்டான்.

“யார் வருவா, நான்தான் ரெண்டு வேளையும் பெருக்கி தள்றேன்”

“கஷ்டமாயில்லையா? ஆனா நீதானே இந்த வீட்டிற்காக பிடிவாதம் பிடிச்சே?”

“தெரியும், இப்படி சொல்வீங்கன்னு தெரியும். பரவால்ல, எங்க ஊர்ல எங்க வீட்ல இருக்கறா மாதிரி இருக்குங்க, என் தங்கையும் அதாங்க சொன்னா, வெய்யில் தெரியல பாருங்க”

அன்று மாலையில் அவள் பெருக்க ஆரம்பித்தபோது துடப்பத்தை வாங்கி அவன் பெருக்கினான். எலுமிச்சை மர குப்பைதான் அதிகம். அவ்வளவு தூரம் குனிந்து பெருக்கி முடிக்க முதுகு லேசாக வலித்தது.

மறு நாளே கடைக்கு சென்று சரசுவின் கையில் பார்த்தது போல நீண்ட குப்பை பெருக்கும் கொம்பை வாங்கி வீட்டில் வைத்ததோடு இல்லாமல் அவனே காலையில் ஐந்து மணிக்கு எழுந்து நடைபாதையை பெருக்க ஆரம்பித்தான். குனியாமல் பெருக்கினதால் முதுகு வலிக்கவில்லை.

அவன் மனைவிக்கு ரொம்ப சந்தோஷம். தங்கைக்கு ஃபோன் போட்டு அவன் செய்யற காரியத்தை சொல்லி மகிழ்கிறாள். அவனுக்கு அந்த கொம்பை கொண்டு குப்பையை கூட்டுற ஒவ்வொரு முறையும் டீ காசு கேட்கும் சரசுவின் ஞாபகம்தான் வருகிறது. இதை அவன் மனைவியிடமும் சொல்லி விட்டான்

“தோ பாருங்க முதல்ல டீ காசு கேட்பா. அப்புறம் புடவை கேட்பா நீங்க பாட்டுக்கு கடைலேருந்து ஒண்ணும் கொடுக்காதீங்க. வேணும்னா எம்புடவை ஒண்ணு பீரோலேருந்து குடுக்கறேன்” என்றாள். ஆனால் அப்படி ஒண்ணும் நடக்கவேயில்லை.

ஒரு வாரம் ஆயிற்று. அன்று மதியம் திடீரென்று சரசு வந்தாள். பதட்டமாக இருந்தாள். இரண்டு நாளாக சாப்பாடு தூக்கம் இல்லாத மாதிரி இருந்தாள்.

“சார் நல்லதா ஒரு புடவை சீக்கிரமா கொடுங்க 500, 600 ரூவா வரைக்கும் போகலாம் பரவால்ல “ என்றாள்.

மனைவி சொன்னது நினைவில் வர புடவைகளை எடுத்துப் போட்டான். அதில் ஒன்றை எடுத்து விலை லேபிளை பார்த்தாள் ₹660/- என்று போட்டிருந்தது. அவனே முந்திக்கொண்டு “600 ரூபா கொடு போறும்” என்றான்

பணத்தை கொடுத்து விட்டு புடவையை எடுத்துக் கொண்டு ஒரே ஓட்டமாக ஓடி விட்டாள்

அவள் போன சற்று நேரத்திற்கெல்லாம் பக்கத்து மார்வாடி உள்ளே வந்து

“பாவம் அந்த குப்பை கூட்றவ அவ அம்மா காலேல இறந்து விட்டாளாம் தாலிய அடகு வெச்சு 8000 ரூபா வாங்கிண்டு போறா” என்றார்

அவன் மேஜையின் மீது இருந்த புடவைகளப் பார்த்தவர் “ஓ புடவை வாங்கிண்டு போணாளா. அவ அம்மா மேல போடறத்துக்காக இருக்கும்” என்றார்

சற்று நேரம் அவனுக்கு பேச்சே வரவில்லை. அன்று காலையில் வீட்டைப் பெருக்கும்போது குப்பையின் நடுவே ஒரு எலுமிச்சைப்பழத்தை பார்த்தது நினைவுக்கு வந்தது. குப்பை அகற்றும் சரசு வாங்கின புடவை நிறமும் எலுமிச்சை மஞ்சள்தான். மாலை வெய்யிலில் கடைக்கு  வெளியே நின்று அவள் போன  தெருவின் கடைசி முனையைப் பார்த்துக் கொண்டே இருந்தான்.

   நாட்டிய மங்கையின் வழிபாடு – 6 – கவியரசர் தாகூர்- தமிழில் மீனாக்ஷி பாலகணேஷ்

 

Image result for tagore's natir puja

                        

முன்கதைச்சுருக்கம்: புத்தரின் உபதேசங்களில் ஈடுபட்ட மகத நாட்டரசன் பிம்பிசாரன் தனது அரண்மனைத் தோட்டத்து அசோகமரத்தடியில் புத்தர்பிரானுக்காக ஒரு வழிபாட்டு மேடையை அமைத்திருக்கிறான். அவன் இளவரசன் அஜாதசத்ருவிற்கு அரசைக் கொடுத்துவிட்டு நகரிலிருந்து சிறிது தொலைவில் வசித்துவந்தான். அரசி லோகேஸ்வரி இதனை விரும்பவில்லை. அவளுடைய மகன் சித்ராவும் பிட்சுவாகி விட்டதில் மனம்மிக நொந்து போயிருக்கிறாள்.

மாலதி என்றொரு கிராமத்துப்பெண் அரண்மனை நாட்டியமங்கையான ஸ்ரீமதியிடம் வந்து சேர்கிறாள். அங்குவரும் பிட்சுணி உத்பலா அன்றுமாலை வழிபாட்டிற்கான காணிக்கைகளை ஸ்ரீமதியே செலுத்துவாள் எனக்கூற, இளவரசிகள் திகைக்கின்றனர். தன்னைக்காண வந்த மகன் தன்னைத் தாயாக மதிக்கவில்லை என அரசி அளவற்ற சினமும் வேதனையும் கொண்டு புத்தமதத்தை நிந்திக்கிறாள்.

          இனித் தொடர்ந்து படிக்கவும்:  

                                                   ————————

          அரசி: நீ இன்னும் ஒரு சிறுகுழந்தையே! அஹிம்சையே மிகவும் உயர்வானதென்று நீ விளம்பரப் படுத்திக் கொண்டிருக்கிறாய் என்பது உண்மைதானா?

          வாசவி: என்னைவிட வயதிலும் அறிவிலும் மூத்தவர்களே அதனை விளம்பரம் செய்து கொண்டிருக்கிறார்கள். நாங்கள் அவர்களுடைய சொற்களையே திரும்பக் கூறுகிறோம்.

          அரசி: அநாகரிகமானவர்களின் மதம்தான் அஹிம்சை என்று நான் எவ்வாறு முட்டாள் மனிதர்களாகிய உங்களை உணரவைக்கப் போகிறேன்? வலிமை என்பது  தோளில் அணியும் ஒரு ஆபரணத்தைப்போன்று அதன் கொடூரமான ஒளியால் க்ஷத்திரியனின் வலிமையான தோளில் இலங்குகிறது.

          வாசவி: ஆயினும் சக்தி (வலிமை)யின் ஒரு பகுதி மென்மையும் தானே?

          அரசி:  ஆம். அது இழுத்துச் செல்லும்போதுதான்; பிணிக்கும்போது அல்ல. படைத்தவன் இரக்கமற்ற பாறைகளால்தான் மலைகளை உருவாக்கினான்; களிமண்ணால் அல்ல. உங்கள் போதகர் எல்லாவற்றையும், உயர்ந்தவற்றிலிருந்து தாழ்ந்தவை அனைத்தையும், மண்ணாலேயே உருவாக்க எண்ணுகிறார். அரச குடும்பத்து ரத்தம் உனது ரத்தநாளங்களில் ஓடுகின்றது; ஆனாலும் இந்தப் பிதற்றலை நம்புவதற்கு உனக்கு வெட்கமாக இல்லை? எனக்கு பதில்சொல், பெண்ணே!

          வாசவி: நான் ஆச்சரியப்படுகிறேன், மகாராணி.

          அரசி: இதில் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது? ஒரு அரசகுமாரன் தனது அரண்மனை, பதவி, அரசபோகங்கள் அனைத்தையும் ஒரு கணத்தில் துறந்து உலகத்தில் கருணையைத் தேடச் சென்றதனை நீயே உன் கண்களால் பார்த்திருக்கிறாய், உண்மையல்லவா? அப்படித்தானே, வாசவி?

          வாசவி: நான் நிஜமாகவே பார்த்திருக்கிறேன்.

          அரசி: அப்படியானால் கொடூரமான இரக்கமற்ற கடினமான கடமைகளை நிறைவேற்றுவதற்கு யார் இருக்கிறார்கள்? யாரும் இல்லாவிட்டால், ஒரு தலைவனின் வலிமைவாய்ந்த கரங்களைத் தேடும் உலகம் என்னவாகும்? உற்சாகமற்ற, உயிரற்ற ஆண்களின் கவிழ்ந்த தலைகளும், பட்டினியால் வருந்திய உடல்களும், மெல்லிய குரல்களும் மட்டுமே மக்களின் முடிவற்ற துயருக்குக் காரணமாகிவிடாதா? நீ க்ஷத்திரிய குலத்தைச் சேர்ந்தவள்; இருப்பினும் எனது இந்தச் சொற்கள் உனக்கு விசித்திரமாகத் தோன்றுகின்றன!

          வாசவி: இல்லை; அவை பழக்கப் பட்டவையே; ஆனால் வசந்தகாலத்தில் முழுவதும் மலர்களால் மறைக்கப்பட்டுவிடும் கின்சுகா மரத்தைப்போல தற்போது ஒரே நாளில் அவை கண்முன்னிருந்து ஒடுக்கப்பட்டு விட்டனவே!

          அரசி: ஆண்களின் சித்தப்பிரமை சில நேரங்களில் அவர்களது ஆண்மையையே மறக்கவைத்துவிடுகிறது. ஆனால் பெண்கள் அவ்வாறு ஆண்கள் மறந்து விடுவதை ஒப்புக்கொண்டால், அந்தப் பெண்களே அதன் பலாபலன்களை தாங்கள் சாகும்வரை ஏற்றுக்கொள்ளவேண்டும். பெரிய கொடிகளைத் தாங்கி நிற்க பெரிய மரங்களே தேவை. எல்லா மரங்களும் புதர்களாகிவிட்டால் கொடிகளின் நிலைமை என்னவாகும்? ஏன் பேசாமல் நிற்கிறாய்?

          வாசவி: பெரிய மரங்கள் கட்டாயம் தேவையே.

          அரசி: ஆனால் உங்கள் போதகர் இவற்றை அழிப்பதற்கே வந்துள்ளார்; ஒரு பெரும்வீரனின் துணிச்சலுடன் அல்ல. அவருடைய போதனைகள் ஒருவனின் ஆண்மையின் ஆழத்துள் புழுப்போலக் குடைந்துசென்று ஒரு க்ஷத்திரியனின் வீரத்தை சண்டைபோடாமலேயே அழித்து விடுகிறது. அவருடைய குறிக்கோள் நிறைவேறியதும், அரசகுமாரிகளான நீங்கள் அனைவரும் உங்கள் தலைகளை மொட்டையடித்துக்கொண்டு வீடுவீடாகப் போய் பிச்சை எடுப்பீர்கள். அவ்வாறு நடப்பதற்கு முன்பு நீங்கள் அனைவரும் இறந்துவிட வேண்டும்- இதுவே என் ஆசிர்வாதம்! (சிறிது நிறுத்துகிறாள்).

          நான் சொல்வதை நீ ரசிக்கவில்லையா?

          வாசவி: நான் சிறிது யோசிக்க வேண்டும்.

          அரசி: நீ யோசிக்கவே தேவையில்லை, இதற்கு நிறைய ஆதாரங்கள் உள்ளன. ஒருகாலத்தில் க்ஷத்திரிய அரசராக விளங்கிய எனது கணவர் பிம்பிசாரர் தனது அரசபதவியை தன் சொந்த மகிழ்ச்சிக்காக இன்றி, ஒரு மதக்கடமை எனவே கருதினார். பாலைவனத்தின்  எரியும் காற்றுபோன்ற ஒரு குரல் அவர் காதுகளில் ஒலித்ததும் அவர் ஒரு மக்கிப்போன இலைச்சருகாக தனது சிம்மாசனத்திலிருந்து கீழே விழுந்தார் – கையில் ஆயுதங்களுடனல்ல, போர்க்களத்திலல்ல, தனது சாவை எதிர்நோக்கியுமல்ல. வாசவி, நீயும் ஒருநாள் அரசியாகும் நம்பிக்கையை இழந்துவிட்டாயா?

          வாசவி: இல்லை.

          அரசி: அப்படியானால் நான் உன்னை ஒன்று கேட்கிறேன். சிம்மாசனத்திற்கும் கருணைக்குமிடையே அலைக்கழிக்கப்படுபவனும், தனது செங்கோல் நடுநடுங்க, அவனது வெற்றியின் சின்னம் மங்கிப்போனவனுமான ஒரு அரசனை நீ மணந்துகொள்ள சம்மதிப்பாயா?

          வாசவி: இல்லை.

          அரசி:  நான் என்னைப்பற்றிக் கூறுவதனைக் கேள். மஹாராஜா பிம்பிசாரர் தான் இன்று வரப்போவதாகவும், அவரை வரவேற்க நான் தயராக இருக்கவும் கூறிச் செய்தி அனுப்பியுள்ளார். அரசனுமல்லாத பிட்சுவுமல்லாத ஒருவருக்காக, இந்த உலகின் சந்தோஷங்களை அனுபவிக்கவோ அல்லது துறக்கவோ தெரியாத ஒருவருக்காக, அவருக்காக நான் என்னை அலங்கரித்துக் கொள்வேன் என நினைக்கிறாயா? கட்டாயமாகக் கிடையாது! உன்னிடம் வேண்டிக்கொள்கிறேன் வாசவி, ஆண்மைத்தனம் முற்றிலும் அற்ற தன்னையே இழிவுபடுத்திக்கொள்ளும் இந்தக் கொள்கைக்கு நீ அடிபணியாதே.

                     (வாசவி மெல்ல திரும்பிச் செல்கிறாள்)

          மல்லிகா: இளவரசி, நீங்கள் எங்கே செல்கிறீர்கள் இளவரசி?

          வாசவி: என் வீட்டிற்கு!

          மல்லிகா: ஆனால் நாட்டியமங்கை கிட்டத்தட்டத் தயாராகிவிட்டாளே.

          வாசவி: பரவாயில்லை!

                     (வாசவி வெளியேறுகிறாள்)

          மல்லிகா: (ஒரு பக்கம் சுட்டிக்காட்டி) கேட்கிறதா, மஹாராணி!

          அரசி: ஒரு பெரிய இரைச்சல் கேட்கிறது.

          மல்லிகா: அவர்கள் நகரத்தை வந்து அடைந்திருப்பார்கள்.

          அரசி: ஆனால் நாம் கேட்பது புத்தரை வாழ்த்தும் குரல்களைத்தானே!

          மல்லிகா: அந்தக்குரல்கள் வீரமொழிகளாக இல்லை? அவற்றிற்கு எதிர்ப்பு இருப்பதனாலோ என்னவோ அவை திடீரென்று உரத்துக் கேட்கின்றன. அவற்றுடன் இன்னுமொரு குரலும் ஒலிக்கிறதே: பிநாகத்தை ஏந்திய சிவனுக்கு வந்தனங்கள்! இனி நீங்கள் பயப்படத் தேவை இல்லை.

          அரசி: ஓ, அது தள்ளாடுகிறது, தள்ளாடுகிறது! இந்த மதம் உதிர்ந்து பொடியாகிப் புழுதியில் விழும்போது, என்னுடைய வாழ்வின் ரத்தம் எவ்வளவு அதில் சென்று விட்டதென்று யாருக்குமே தெரியப்போவதில்லை! ஐயோ! எனது பக்தி எத்தகையது! ஆ, மல்லிகா, அதன் முடிவு சீக்கிரமே வரட்டும்; ஏனெனில் அதன் வேர்கள் என் உள்ளத்தில் ஆழப் பதிந்துள்ளனவே!

                     (ரத்னாவளி உள்ளே நுழைகிறாள்)

          (ரத்னாவளியிடம்) நீ வழிபாட்டுத் தலத்திற்குச் செல்கிறாயா?

          ரத்னாவளி: நான் சிலவேளைகளில் எங்கு மரியாதை செலுத்த வேண்டுமோ அந்தக் கடமைகளிலிருந்து தவறியிருந்திக்கலாம்; ஆனால் யோக்கியதையற்றவர்களிடம் மரியாதை காட்டினேன் என என்மீது யாரும் குறைகூற முடியாது!

          அரசி: அப்படியானால் நீ எங்கே போகிறாய்?

          ரத்னாவளி: மாட்சிமை பொருந்திய தங்களிடம் இரு கோரிக்கைகள் வைக்க வந்துள்ளேன்.

          அரசி: அது என்னவென்று சொல்.

          ரத்னாவளி: அந்த நாட்டியப்பெண்ணுக்கு வழிபாட்டுத்தலத்தில் காணிக்கைகளைச் சமர்ப்பிக்கும் சலுகை தரப்படுமானால், இத்தகைய தெய்வநிந்தனை நிகழ்ந்த இந்த அரண்மனையில் இனிமேலும் இருக்க என்னால் இயலாது.

          அரசி: புனிதத்தன்மையைக் கெடுக்கும் அந்தச்செயல் நிறுத்தப்படும், நான் அதற்கு உத்தரவாதம் அளிக்கிறேன்.

          ரத்னாவளி: இன்றைக்கு அது தடுக்கப்பட்டாலும் நாளை நடைபெறக் கூடுமல்லவா?

          அரசி: பயப்படாதே. மகளே! இந்த வழிபாடு அதன் வேர்களோடு சிதைக்கப்படும்.

          ரத்னாவளி: இத்தனை நாட்கள் நாம் அனுபவித்த வேதனைகளுக்கெல்லாம் இது ஒரு பலமற்ற சமாதானம்!

          அரசி: அரசரிடம் உனது கோரிக்கையை முன்வை. அவர் ஒன்று, அவளை நாடுகடத்தவோ அல்லது கொலைசெய்யவோ கட்டளையிடுவார்.

          ரத்னாவளி: அது அவளது புகழை உயர்த்திடவே உதவும்.

          அரசி: அப்படியானால் உனது விருப்பம்தான் என்ன?

          ரத்னாவளி: பூசை செய்பவளாக எந்த வழிபாட்டுத்தலத்தில் அவள் காணிக்கைகளைச் செலுத்தப் போகிறாளோ அங்கே அவளை நாட்டியமாடக் கட்டளையிடுங்கள்; அவளுடைய இழிந்த வேலை அதுதானே! மல்லிகா, நீ என்ன சொல்கிறாய்?

          மல்லிகா: இந்த ஆலோசனை சுவாரசியமானதாக இருக்கிறது.

          அரசி: ஆனால் எனது உள்ளம் என்னை சந்தேகப்பட வைக்கிறது, ரத்னா.

          ரத்னாவளி: மஹாராணி அந்தப்பெண்ணிடம் இன்னும் பரிவு காட்டுவதாக நான் எண்ணுகிறேன்.

          அரசி: பரிவா? அவள் உடலை நாய்கள் கைகால் வேறாகக் கிழித்தெறியும்போது என்னால் பார்த்துக்கொண்டு நிற்கமுடியும். அவள் மீது பரிதாபமா? அந்த வழிபாட்டு மேடைக்கு நானே ஒருகாலத்தில் என் காணிக்கைகளை எடுத்து வந்தேன்; அந்த மேடை நாசமாக்கப்படுவதனை என்னால் சகித்துக்கொள்ள முடியும்; ஆனால் ஒரு சாதாரண நாட்டியப்பெண்ணின் இழிவான கால்களால் ஒரு அரசியின் வழிபாட்டுத்தலம் அவமரியாதை செய்யப்படுவதைப் பொறுத்துக்கொள்ள முடியாது.

 (தொடரும்)

                               ———————-&&&———————-

                    

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

யாளி – பானுமதி.ந

Image result for sex robots

நீலக் கண்ணாடியென அந்தத் திரை ஒளிர்ந்தது. அது ஒரு சட்டகத்தைப் போலக் காணப்பட்டாலும் அதன் வெல்வெட் வழுவழுப்பு, தோன்றித் தோன்றி மறைந்து கொண்டிருந்தது. அதைத் தொட்டுப் பார்க்கும் ஆசையும், அச்சமும் ஒரே நேரம் எழுவதைத் தடுக்க முடியவில்லை.

கால் புதையும் நடை மெத்தைகள், உடலை இதமாக உள் வாங்கும் இருக்கைகள், இளம் ரோஸ் வண்ண சுவர்ப் பூச்சுக்கள். அறை முழுதும் சுவற்றினை ஒட்டி அமைக்கப்பட்டுள்ள சாய்வான கண்ணாடிப் பெட்டிகளில் பல அறிவியல் கருவிகள். அதிலும் தெற்குப்பக்கத்திலுள்ள கண்ணாடி பாதுகாப்பான் முழுதுமே வெற்றிடம். அதிலிருந்து இரு சுற்றுகள் ஹீலியம் ஃபைபர்கள் பூமிக்குள்ளே செல்கின்றன. அது மலைப்பாங்கான இடம். குகையின் ஆழம் வெளியில் தெரியாத வண்ணம் கட்டப்பட்டுள்ள ஆய்வகம்.

அங்கே வர ப்ருத்விராவிற்கு மட்டும் உரிமையுண்டு. சரியான உடல் வாகோடு, அளவான மார்பகங்களோடு, நீளக் கால்களோடு ஆகாஷ் பார்த்திருந்த அத்தனைப் பெண்களிலிருந்தும் அவள் மாறுபடுகிறாள்.

ஆகாஷ் தன்னையே நினைத்து சிரித்துக் கொண்டான்.  நீல வண்ணத் திரையிலிருந்து, மூவருக்கு மட்டும் தெரிந்த இரகசியத்திலிருந்து, தன் மனம் காமத்தை நினைப்பது அவனுக்குச் சற்று வேதனையாக இருந்தது. அவன் முழு முனைப்போடு செய்து கொண்டிருப்பது, மனித மூளை, மூளை உபயோகப்படுத்தும் சக்தி, நேனோ மூளைகள், அது பொருந்தும் உடல் வடிவங்கள், அவைகளின் பயன்பாடு ஆகியவற்றைப் பற்றி மட்டுமே.

எண்ணங்களால் சூடேறும் உடலைக் குளிர்விக்க தானாகவே ஏசி செயல்பட்டது. அவன் விரும்பும் பானங்களை, அவன் அணிய வேண்டிய ஆடைகளை, அவன் உணவு உண்ணும் நேரங்களை, அவன் பேச வேண்டிய விஷயங்களின் தொகுப்பை, அவன் சந்திக்கக் கூடிய மனிதர்களை, அவன் ஓய்வு கொள்ள வேண்டிய நேரத்தையெல்லாம் செயற்கை அறிவுத் துணை ஒன்று நிர்ணயிக்கிறது. அவன் எந்தப் பெண்ணுடன் கூடலாம், அதில் காதல் எவ்வளவு இருக்கலாம், என்று அந்தத் துணை தான் சொல்கிறது. அதை அவன் செல்லமாகக் ‘கல்பா’ என அழைத்தான்.

கல்பாவின் வடிவமைப்பில் பெரும் பங்கு அவனுக்குத்தான் இருக்கிறது. அதன் மின்சார வலைப் பின்னல் மனிதர்களின் ந்யூரல் நெட்வொர்க்கை விட சில மில்லியன் அதிகம். மனித மூளை நரம்புகள் ஒரு விஷயத்திற்குத் தயாராகுமுன், அல்லது அது என்னவென்று அறிந்து கொள்ளும் முன் கல்பா சொல்லிவிடும்.

முன்பொரு நாள் கோடை மழை பெய்தது. அவன் வெளியில் சென்று மழையில் நனைய ஆசைப்பட்டான்.  அவனை தூக்கிச் சென்று புல் வெளியில் நிறுத்திவிட்டது. இள வெயிலும், ஆலங்கட்டிகளும் ஒன்றாய் அவன் கண்டதில்லை. கைகளில் ஏந்திய அந்த மழைக்கட்டிகளில் சூரியன் பல்வேறு வண்ணக் கலவைகளில் சிரித்தான். கைகளிலேயே கரைந்தும் மறைந்தான். தற்காலிகமாக ஒரு சிற்றருவி அவன் ஆய்வகத்தின் அருகிருந்த மேட்டு உச்சியிலிருந்து கீழே துள்ளிப் பாய்ந்தது. தனக்கென ஒரு பாதை அமைத்துக் கொண்ட நீரின் வழி. அதுவும் கதிரின் கிரணங்களில் வண்ணம் காட்டி அவனுக்குப் போக்குக் காட்டுவது போல் சுழித்து மறைந்தது.

அவனைப் போலவே ப்ருத்வி ராவும் அந்த மழையில் நின்று சுழன்று ஆடுவதை அவன் பார்த்தான். அத்தனையும் வேதியியல் மாயம் என்று தெரிந்தும் தன் உணர்வுகள் தூண்டப்பட்டு அவளை மீள மீள விழுங்குவது போல் பார்ப்பதில் ஆண் எனத் தான் மேலோங்கி அறிவியலாளன் பின்னே தள்ளப்படுவது அவனுக்கு எப்போதுமே பெரும் வியப்பு.

‘ஹேய், ஆகாஷ், என்ன மறந்துட்டியா, என்ன நீ கடசியா ஒரு வருஷம் முன்னாடி பாத்தே. நீ உன் லேப்லயே இருந்த. இப்ப இந்த மழ உன்ன வரவைச்சுடுத்து. தள்ளியே ஏன் நிக்கற? இந்த ஷவர்ல ரோமன்ஸ் பண்ணனும்னு தோணல?’

அவன் நினைப்பதை அப்படியே சொல்லும் அவளை அள்ளி அணைத்துக் கொண்டான். இது இயற்கையோ, கடவுளோ, சாத்தானோ எதுவாக இருந்தால் என்ன? அனுபவி, ராஜா, அனுபவி.

அவள் கண்களில் கல்பா படவில்லை. பின்னர் அவர்கள் செய்தது எல்லாவற்றையும் நடித்துக் காட்டும். முதல் முறை அவன் கூடியதை அது, ஒரு இயந்திரமென மாறி விவரித்த போது அதை உடைக்க எழுந்த ஆவலை அவன் அடக்கிக் கொண்டான். கல்பா அபூர்வமானது. அதைப் போல் இன்னொன்றைக் கட்டமைக்க அவனுக்கு இன்னும் ஏழு ஆண்டுகள் வேண்டும். அவன் கோபத்தை, தன்னை அழிக்க எழுந்த உத்வேகத்தை, அதை அவன் அடக்க முயன்றதை தன்னைக் காட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தது கல்பா. பின் கூடலை அழித்து விட்டதாகத் தன் மெமரி ஹிஸ்டரியைக் காண்பித்தது.

அது தன்னுள் ஆழத்தில் இன்னொரு வலைப் பின்னல் பின்னி சில கண்ணிகளை வைத்திருந்தது.

அவன் விரும்பும் உணவகங்கள், கேளிக்கை இடங்கள், நண்பர்கள் கூடுகை, காமக் கொண்டாட்டங்கள் எல்லாவற்றையும் சுழற்சி முறையில் ஆண்டுக்கொருமுறைதான் அவன் விரும்பும்படி அது தனிச் செயலி எழுதி வைத்திருக்கிறது. ‘லாங் டைம் நோ சீ’ என்று யாரேனும் சொன்னால் அதை வழமைச் சொல் என அவன் எடுத்துக்கொண்டான்.

திடீரென்று அவனுக்கு ஒரு எண்ணம் மின்னலென எழுந்தது. அவனது ஆய்வகம் மற்றும் இருப்பிடம் அது. மலைப்பாங்கான இடத்தில் மனிதர்கள் அதிகம் வந்து போக இயலாத  உட்சரிவுக் குகையினுள் போராடி அவன் அமைத்த ஆய்வகம் அது. ஒரு காலத்தில் அவர்களின் ஜமீன் அங்கே அமைந்திருந்தது. ஒரு குறுநகரம் என்றே சொல்லலாம். இதமான குளிரும், வெப்பமும், காற்றும், அத்தி மரங்களும் சிறிய ஏரியும் உள்ள அற்புத நிலம். கொள்ளை நோய் ஒன்று தாக்கியபோது அவன் வடிவமைத்த மென்பொருள், பாதிக்கப்பட்ட மனிதர்களை நொடியில் கண்டறிந்தது.

அந்தச் சிக்கலான செயலி, நோயுற்ற மனிதர்களிடமிருந்து ஒரு ஒலியை எழுப்பி அவர்களை அருகிலுள்ள மருத்துவமனைக்கு உடனே கொண்டு செல்ல வழி வகுத்தது. அது மட்டுமன்றி நோய் வரும் சாத்தியக்கூறுள்ள மனிதர்களை அடையாளம் காட்டியது. அதற்குத் ‘தன்வந்திரீயம்’ எனப் பெயர் வைத்தான். எந்த மனிதனிடத்திலும் எந்த மின்சாதனமும் இல்லாவிட்டாலும் அந்த மனிதனின் உடல் வெளியேற்றும் சமிக்ஞைகளை அது அவனைச் சுற்றியுள்ள காற்றிலிருந்து அறிந்தது. எடை குறைந்த மைக்ரோ சிப்கள் அதிக அளவில் பொதியப்பட்ட தானியங்கி ட்ரோன்களில்  ரேடார் நுட்பத்தையும் இணைத்து மனிதன் அறியாமல் அவனைக் கண்காணித்தது தன்வந்திரீயம். மகிழ்ந்த அரசு அவன் தாத்தாவின் காலத்திலிருந்து ஜமீனுக்காக நடை பெற்ற வழக்கைத் திரும்பப் பெற்று அவன் ஆய்வுகளுக்கு இருந்த தடைகளையும் நீக்கியது.

அந்த ஆய்வகத்திற்கு வெளியில் தான் அத்தனை இயற்கையும். உள்ளே எல்லாமே செயற்கைதான். அத்தனையும் அவன் கை வண்ணம். அப்படியிருக்கையில் எப்படி இந்த நீலத்திரை இங்கே?

சிறு மைக்ரோ சிப்கள் பொதியப்பட்ட சின்னஞ்சிறு பாட்கள், அவைகளின் முதன்மை வேலையே உலகின் அனைத்து அறிவியல் ஆய்வுகள் மற்றும் களநிலவரம் பற்றி செய்திகளைச் சேகரித்து அதைக் கல்பாவிடம் பகிர்வது. அது அறிவியல் ஸ்கூப்பா, இணை உறுதிகள் உள்ளதா, என்று நிமிடத்தில்

அலசி அதன் முக்கியத்தை அவனுக்குச் சொல்லிவிடும் கல்பா.

ஆனால், அந்த நீலத் திரை எப்போது அங்கு வந்தது? அவனா அதை வைத்தான்? எப்போது, எதற்காக? அந்த சமையல் பாட்டும், தோட்ட பாட்டும் சற்று விஷமிகள். ஸ்பேஸ் ஷட்டில் விளையாடுவதை அவன் பார்த்திருக்கிறான். அந்த விளையாட்டைப் போட்டுப் பார்க்க அவைகள் தான் இந்தத் திரையை வைத்திருக்க வேண்டும்; ஆனாலும், குளிர் விட்டுப்போயிற்று அதுகளுக்கு. அவனுடைய தனிப்பட்ட அறையிலா கொண்டு வைப்பது? இந்தக் கல்பா என்ன செய்து கொண்டிருந்தது அப்போது?

அவன் மீண்டும் திடுக்கிட்டான். எண்ணங்களைப் படிக்கும் கல்பா ஏன் ஒன்றும் சொல்லவில்லை இப்போது? தன்னை மீறி ஏதேனும்…. ச்சே இருக்காது, இயந்திரம் மனிதனல்ல.

அவன் எரிச்சலுடன் கல்பாவைக் கூப்பிட்டு அந்தத் திரையை அகற்றுமாறு  சொன்னான்.

“ஆகாஷ், அது உன்னை என்ன பண்றது?”

‘என்ன கேள்வி இது? எடு என்றால் எடு.’

“அவ்வளவெல்லாம் வெயிட் இல்ல. நீயே தூக்கி வை”

அவன் ஆத்திரத்துடன் அதை எடுக்கையில் கல்பா சிரித்தது. அவன் தலைப் பகுதி மட்டும் பிரிந்து சென்று அமினோ அமிலக் கரைசலில் விழுந்தது. அதில் மிதந்த அவன் மூளை, அந்தக் குடுவைக்கு வெளியே செயற்கை இதயம், நுரையீரல் போன்ற அனைத்து உறுப்புகளும் அதனதன் வேலையைச் செய்து அந்த மூளையைப் பாதுகாப்பதைப் புரிந்து கொண்டது. இது எதற்காக, ஏன் இப்படியெல்லாம் அவனுடைய கல்பா, நடந்து கொள்கிறது? தன் உடல் செயலற்றுக் கிடக்க அதை மூளையால் பார்க்கும் முதல் விஞ்ஞானி அவனாகத்தான் இருப்பான்.

கல்பா தன் முதுகுப் பகுதியைத் திறந்தது. அதில் இருந்த ஒரு காணொலியை நீலத்திரையில் கொணர்ந்தது. 16 நாட்களான கருவில் ந்யூரல் குழாய் இரண்டெனப் பிரிந்தது. ஆகாஷின் மூளை அதிர்ந்தது. இரண்டாம் மாதத்தில் அக்கருவில் இரண்டு மூளைகள் அமைவது தெரிந்தது. முதல் மூன்று மாத முடிவில் கரு இருபாலினச்சுரப்பிகளைச் சுரக்கத் தொடங்கியது. இப்போது காணொலியில் அக்கரு 14 வது வாரத்தை எட்டிவிட்டது. இரு மூளைகள் இருந்தும்  சாதாரணக் கருவிற்கு இருக்கும் அளவே, அதாவது, உடல் அளவில் பாதியில் தான் தலை அமைந்திருந்தது.

அவனால் நம்ப முடியவில்லை. தன் மனதில் அவன் கண்ட கனவை கல்பா வடிவமைத்திருக்கிறது; ‘இன் சைட்டு’(in situ) கலப்பினம் நடத்தியிருக்கிறது. அவனது கனவு ப்ராஜெக்ட். அவனது அத்தனைக் கோட்பாடுகளையும் படித்துப் பதுங்கிப் பதுங்கிச் செயலாற்றியுள்ளது. எத்தனை வேகமாக, எத்தனை சாதூர்யமாக! அதற்குத்தான் ஓய்வென்பதே கிடையாதே?

ஆண் எனப்படுவதுவும், பெண் எனப்படுவதுவும் ஒரே உடலில் இரு மூளைகள் கொண்டு இயங்கும் அற்புதமல்லவா இது வடிவமைத்திருப்பது. மனித அறிவியலாளர்கள், மேம்படுத்திய ந்யூக்ளிக் அமிலத்தைச் செலுத்தி, எறும்பைப் போல் ஊர்ந்து ஊர்ந்து குறிப்பிட்ட டி.என்.ஏ வைத் தேடித் தேடி தலை நரைத்து மண்டையைப் போட்டார்கள். இதுவோ ஒளிப் பாய்ச்சல் எடுத்துள்ளது. கல்பாவிற்காக அவன் பெருமைப்பட்டான், பொறாமையும் பட்டான். மங்கையும், மனிதனும் ஒரு உடல், இரு மூளைகள், இருபாலருக்குமான பயோ சிப்ஸ்கள் மூலம் ஈஸ்ட்ரோஜென், புரோலேக்டின், டெஸ்டோஸ்டரீன், செரொடோனின், அட்ரீனலின் இன்ன பிற சுரக்கும் அமைப்பு. துரிதம், துரிதமென 24 மணியில் 48 மணிச் செயல்பாடு. அவன் தயங்கித் தயங்கித் தவித்தான். கல்பா இவனிடமிருந்து கற்றுக் கொண்டு இவன் அறியாமல் ஒன்றைப் படைத்துவிட்டது.

ஆனால், அதற்கு போட்டியிடும் குணம் ஏன் வந்தது? அவனை உடலற்று உயிரோடு சிறை பிடித்து விட்டதே! செயற்கை அறிவில் இயற்கை குணம் எப்படி?

“த்ரோகி”

‘நீ நினைக்காத ஒன்றையும் செய்திருக்கிறேன், பார்.  ந்யூரலில் ஒரு ‘அமை, தவிர்’ என்ற ஒரு சிறு குமிழி. ஆதாம் தூங்கப் போக வேண்டுமென்கிறான். ஏவாள் ந்யூட்ரினோவைப் பகுத்துக் கொண்டிருக்கிறாள். யாரும் யாரையும் தொந்தரவு செய்ய மாட்டார்கள். இன்னொரு வேடிக்கையையும் கேளேன், நாளமில்லாச் சுரப்பிகள் பருவ மாறுதலைக் கொண்டு வரும். அப்போது கூடலைத் தவிர்க்கத் தானாகவே அந்தக் குமிழி ‘தவிர்’ என்று ஆணையிட்டுவிடும். தேவையான போது ‘அமை’ விழிக்கும்.’

ஆகாஷ் அசந்து போனான்.

“என் வெற்றிப் படைப்பு இது. யாளி என்று பெயர். இப்போதைக்கு இதன் ஆயுள் இரு மடங்கு, இதன் செயல் டபுள், இதன் அழகோ அற்புதம், சராசரியாக ஒரு மூளை 20 வாட்ஸ் சக்தி கேட்கும்; ஆனால், யாளி இரு மூளைகளுக்காகக் கேட்பதே 30 வாட்ஸ்தான். ஆம் மாதொருபாகன். கம்பீரமும், நிதானமும் ஒன்றான ஒன்று. இது வெவ்வேறு மரபுத்திரி கொண்ட உடல் அணுக்களின் கூறு. இப்போது இது முழுதாக, ஆனால் சிறு வடிவாக, விரும்புகையில் பெண்ணாகவும், ஆணாகவும், இருவராகவும் இருக்கும். டி என் ஏவின் டீலோமியெர் வால் பகுதியை அதிகமாக்கி அதன் மூலம் வயதாவதைத் தடுத்து இதை அமைத்துள்ளேன்.’

“க்ரேட், என்னை ஏன் இப்படிச் செய்தாய்?”

‘நான் கற்றுக்கொண்டேன் உன்னால், ஆனால், உன்னிடமிருந்தல்ல. உன் இனத்திற்கு இருமையில் தான் ஈர்ப்பு. நீயே நினைத்துப் பார் –ஃபோடான் என்டேங்கிலில் ஒரு அமைப்பு, மூளையில் ஒரு சோதனை, வெயிலும், பனிக்கட்டி மழையுமாக ஒன்று; சுற்றிலும் தனித்தனி செயல்களுக்காக ரோபாட்கள். நீங்கள் பிரிக்கிறீர்கள், நான் சேர்க்கிறேன். வா, எனதருமை யாளி, ஆகாஷைப் பார்.”

யாளி கம்பீரமாகத் திரையிலிருந்து வந்தது . கல்பாவின் ந்யூரலைத் தொட்டிழுத்தது. உலகம் முழுதும் நிலைகுத்தி நின்றது. ஒளி ஒரு நிமிடம், இருள் ஒரு நிமிடமென மாறி மாறி வந்ததில், கணிணிகள் காலப் பிசகை எதிர் கொள்ளத் திணறின. மனித இனம் அழித்தது போக எஞ்சிய விலங்குகளும், பறவைகளும் திக்குமுக்காடிக் கூச்சலிட்டன.ஹீலியம் சுருளவிழ்ந்து செய்திகளைப் பிழையாக அனுப்பியது. ஏதோ தவறு என்று அறிவியல் இரகசியத் துறை அதிர்ந்தாலும் ஒளியும், இருளும் அவர்களையும் குழப்பின. பிருத்வி ராவ் மின் பூட்டைத் திறந்து தட்டுத் தடுமாறி உள்ளே வந்தாள்.

 

 

ஸூம் மேரேஜ் – ரேவதி ராமச்சந்திரன்

India's First (NOT) Big, Fat Zoom Video Call Wedding - Homegrown     

 ‘கல்யாணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது’ ஆனால்  நடப்பது பூலோகத்தில்தானே! இப்போது எல்லோருக்கும் தெரிந்ததுதான் இந்த ஸூம் மேரேஜூம் (ZOOM MARRIAGE) . ஐந்து நாள் கல்யாணம், மூணு நாள் கல்யாணம், காதல் கல்யாணம், பதிவுத்திருமணம் மாதிரி இந்தக் கொரோனா காலத்தில் இதுவும் இப்போது ஒரு வித கல்யாணம்தான்.

வாட்சப்பில் ஒரு செய்தி வந்தது மேரேஜ் முடிந்து எல்லோர் வீட்டுக்கும் கேரியரில் சாப்பாடு என்று. அது எப்படி!

கல்யாண அழைப்பிதழை வாட்சப்பில் அனுப்பிவிட்டு அத்துடன் 100 ஜீபி டாடா பேக்கையும் இணைத்து திருமணத்திற்கு இரண்டு நாள் முன்னதாகவே பிக்பாஸ் வீடு மாதிரி ஸூமில் லைவ் ரிலேவில் கலந்து கொண்டு சிறப்பிக்கவும் என்று அழைத்தார்கள் சுமதி தம்பதியினர்.

சம்பந்தி ஆத்துக்கு தனி ஸூம் மீட்டிங் பெண்ணாத்துக்கு தனி ஸூம் மீட்டிங். ஆஹா என்ன ஒரு திட்டம்! நம்மாத்து கொணஷ்டை, மொகறைல இடிச்சுக்கறைதையெல்லாம் பிள்ளை ஆத்துக்காரா பார்க்க வேண்டாம். கல்யாணத்தை ஆன்லைன்லே அட்டெண்ட் பண்றதாக இருந்தாலும் டிரஸ்சை எல்லோரும் பார்ப்பார்களே! எனவே முதலில் சாரி செலக்ட் செய்ய ஆரம்பித்தோம். இது நேரில் போறதை விட கஷ்டமாக இருந்தது. இந்தப் புடவை நல்லா தெரியுமா ?  இராமர் பச்சை, நீலம் என்று கண்டுபிடிப்பார்களா என்று ரொம்பவும் யோசிக்க வேண்டி இருந்தது. பச்சை எத்தனை பச்சையடி! ‘ஸூம் மீட்டிங்கில் அவ்ளோதான் வரும் மாமி. சம்பந்தி மாமி புடவை கரு நீலமா நாவல் பழக்கலரா என்று கேட்கிறேளே நியாயமா’ என்று நீலா கல்யாணி மாமியிடம் அங்கலாயித்தது பின்னால் தெரிய வந்தது.       

கல்யாணம் ஆரம்பித்தாகிவிட்டது. மாலைகளும் பூவும் ஆன்லைனில் மிகவும் அழகாக ஜொலித்தன. மாப்பிள்ளை பெண்ணின் கையை அழுத்தமாகப் பிடித்து விட்டார் போலும் அவள் முகச்சுளிப்புக் கூட துல்லியமாகத் தெரிந்தது. பெண் புடவை மாத்திண்டு வர நேரம் ஆனதைப் பார்த்த கோகிலா மாமி ‘அம்புஜம் அவ மேடைக்கு வந்தான்னா பிங்க் பண்ணு, நான் அரிசியை ஊற வைச்சுட்டு வந்துடறேன்’ என்று சமையல் கட்டிற்குள் ஓடினாள். இது ஒரு சௌகரியம்தான். ஆனாலும் மாமிகளெல்லாம் டெக் ப்ரிண்டலிதான். சந்திரா மாமியோ ஒரு படி மேலே போய் ‘சாப்பாடோட ஊஞ்சல்ல சுத்தறத்துக்கு பச்சபுடியும் டோர் டெலிவரி செஞ்சுட்டா நேரில் கலந்துண்ட திருப்தி இருக்கும்’ என்று நொடித்தாள்.

சண்டை  இல்லாத கல்யாணமா அது எப்படி! பாச்சு மாமா வரது அத்தையைப் பற்றி சேகர் மாமா கிட்ட சொல்றதா நினைச்சு  அன்ம்யூட்ல சொன்னதைக் கேட்டு வரது அத்தை கோச்சுண்டு லாகாஃப் செய்துட்டாள். ஒரு ஜோக்கும் நடந்தது. கேமிராமேன் லைவ் ஆன்ல வெச்சுண்டே சமையல் இடத்துக்குப் போய் நாலைந்து லட்டு ஒருசேர  சாப்பிட்டதை எல்லோரும் பார்த்து சிரித்தனர்.

மாங்கல்ய தாரணம் ஆயிடுத்து. கெட்டி மேளம் வாசிக்கும்போது வாத்தியக்காரர் ம்யூட்ல போய்ட்டார், பயிஞ்சாயிரம் தண்டம் என்று அங்கலாயிற்றார் பெண்ணைப் பெற்றவர். அவர் கவலை அவருக்கு. கல்யாணி மாமியோட ஹஸ்பண்ட் ‘கல்யாணி, மானிட்டருக்கு அட்சதை போட்டயே, ஓரளவுக்கு நியாயம், ஆனா, ஹோமம் செஞ்ச எஃபக்ட் வரணும்னு வரட்டியெல்லாம் கொளுத்தறியே, இதெல்லாம் அடுக்குமா?’ என்றார். தாலி செயினோட டிசைனைப் பற்றி எல்லா மாமிகளும் ஒரு கலந்துரையாடல் பண்ணினார்கள். நல்ல வேளை அங்கே நீயா நானா கோபிநாத் இல்லை.

தாலி முடிஞ்சதுக்கு நாத்தனாருக்கு தங்கசெயின் போட்டதுக்கு எல்லோரும் வாய்ப்பிளந்தார்கள். பொரி போட்டதுக்கு பிள்ளை வீட்டுக்காரர்களும் அவள் தம்பிக்கு வைரமோதிரம் போட்டது எல்லோருக்கும் சந்தோஷத்தைக் கொடுத்தது. சப்தபதி முடியும் வரை வாத்தியார் மாப்பிள்ளையை ம்யூட்ல போடச் சொல்லிட்டார். மாங்கல்ய தாரணம் ஆனதினால் பாக்கி எல்லோரும் அன்ம்யூட் பண்ணி ‘மாப்பிள்ளை வந்தாரா, மாட்டுப்பெண் வந்தாச்சா’ என்று கேட்டுக்கலாம் என்றார். நடுவில் ஒரு குட்டி அநௌஸ்மெண்ட் ‘சம்பந்தி சண்டை தனி ஸூம்  மீட்டிங்க்ல நடக்கிறது. விருப்பப்பட்டவா இந்த லின்க்ல கிளிக் செஞ்சு கலந்துக்கலாம்இதற்குள் கனெக்க்ஷன் டெர்மிநேட் ஆனதைப் பார்த்து சண்டையினால் கல்யாணம் நின்று போவதாக வருத்தப்பட்ட காமு பாட்டிக்கு இன்டர்நெட் வேலை செய்யவில்லை, கல்யாணம் நடந்துண்டுதான் இருக்கு என்று புரிய வெக்கப் போராட வேண்டி இருந்தது.

என்னதிது! கல்யாண சாப்பாடு வீட்டிற்கே வந்து விடுமா! ‘அப்ப மாப்பிள்ளை அழைப்பிலிருந்தே லாகின் செஞ்சுடறோம். எங்காத்து கீழ் போர்ஷன்லே வயசான மாமா இருக்கார். அவருக்கும் சேர்த்து அனுப்பிடுங்கோ’ என்று உரிமையாக சொன்னாள் அத்தைப்பாட்டி அகிலாண்டம். அதற்குள் பெரியப்பா சம்பத் ‘சாப்பாட்டை ஸ்விகில அனுப்பிச்சுட்டேள் கட்டுச்சாதக் கூடையும் டோர் டெலிவெரி செய்வீர்களா’ என்று மிளகாய்ப்பொடி தடவின இட்லியையும் புளியஞ் சாதத்தையும் எண்ணி சப்புக்கொட்டினார். ஸ்விகிக்காரனும் எட்டு மணிக்கே சப்பாடைக் கொடுத்து விட்டு ‘நீங்கள்தான் முதல் பந்தி’ என்று குசும்பாகச்  சொல்கிறான். இந்த ஜெயந்தி சித்தி ரொம்ப மோசம். செலவானாலும் பரவாயில்லை என்று ஆத்துக்கே ஸ்விகில சாப்பாடு அனுப்பி வைச்சா டன்ஸோல ரெண்டு டிஃபன் கேரியர் அனுப்பி பிசிபேளாபாத்தும், ஸ்வீட் பச்சடியும், உருளைக்கிழங்கு கறியையும் ஃபில் செய்து அனுப்பச் சொல்கிறாள். பாகீரதி மாமி அதைவிட மோசம். பழக்க தோஷத்தில் வீட்டுக்கு வந்த சாப்பாட்டிலிருந்து பாதாம் அல்வாவை பொட்டலம் கட்டி முந்தானையில் முடிச்சு வைச்சுக்கறார். பத்மா மாமி எல்லோரையும் தூக்கி சாப்பிட மாதிரி ஸ்விகிகாரனையே பரிமாறச் சொல்கிறாள். அவனிடமே இலை நுனி எந்தப் பக்கம் போடணும்னு சந்தேகம் வேறு கேட்கிறாள். சாப்பாடு பிரமாதம் யார் கேட்டரிங்க்னு கேட்ட வாசு மாமாவிடம் ‘நீங்க எந்த ஏரியான்னு சொல்லுங்கோ அதுக்கேத்தமாதிரி கேட்டாரர் யாருன்னு  சொல்றேங்’கறான். பெரிய இடத்து கல்யாணம்தான் போல! தாம்பூலப் பையையும் ஸ்விகி மூலமாக அனுப்பி இருக்கா! ஆனால் ‘ஆன்லைன்   கல்யாணம், மொய் எழுத வேண்டாம்னு சந்தோஷப்பட்டால் ஈமெய்ல்ல பேமண்ட் லிங்க் அனுப்பறான் விடாக்கண்டனான பஞ்சாபகேசன்’ என்று அலுத்துக்கொண்டார் அலகேசன் மாமா. உஷா மாமி தன் குடும்பத்துடன் அமெரிக்காவிலிருந்து கண்டு களித்தது இந்த டெக்னிகல் சாதனத்தினால் என்றால் மிகையாகாது.  

இதையெல்லாம் தூக்கிச்சாப்பிடுகிற மாதிரி கனகம் மாமி லலிதா மாமிக்குப் ஃபோன் பண்ணி ‘உனக்கு அரக்கு கலர் பார்டரா, உன்கிட்டேதான் இந்தக் கலர் இருக்கே, மாத்திப்போமா, என்னோடதை டன்ஸோல அனுப்பி வைக்கறேன், நீ உன்னோடதை அனுப்பி வை, புடவை வாங்கறப்ப கொஞ்சம் டேஸ்டோட வாங்கப்படாதோ!’ என்று அங்கலாயித்தாள். சரோஜா மாமி சச்சு மாமியிடம் ‘உன் பெண்ணுக்கு வரன் பார்க்கிறாயே, அதோ பார் அந்தப்  பையன் களையாக, துறுதுறு என்று  இருக்கிறான் அவனைப் பற்றி விசாரி’ என்று இன்னொரு கல்யாணத்திற்கு அங்கே அடி போட்டாள். இதுதான் கல்யாணம். எத்தனை இடர் வந்தாலும் இந்த சந்தோஷங்கள், சிணுங்கல்கள், எதிர்ப்பார்ப்புகள் இவையெல்லாம் சேர்ந்ததுதான் வாழ்க்கை.

எந்த மாதிரி கல்யாணமாக இருந்தாலும் அதனை  ரசித்து  மகிழ்வோமாக!     

வாஷிங்டனில் திருமணம் - 11 | washingtonil thirumanam series - episode 11

                           

குட்டீஸ் லூட்டீஸ்- சிவமால்

Aval Vikatan - 14 July 2015 - அடம் பிடிக்கும் குழந்தை அழகாக சாப்பிட வேண்டுமா..?! | Healthy eating habits for childrens

ஸாம்பஸதா சிவ…!

கல்யாண விருந்து நடந்து கொண்டிருந்தது. நானும், என்
சுட்டி மகள் மிதிலாவும் சாப்பிட உட்கார்ந்து கொண்டிருந்-
தோம். மிதிலாவுக்குப் பக்கத்தில் நெற்றியெல்லாம் விபூதி
இட்டுக் கொண்டு சிவப் பழமாக ஒரு பெரியவர் உட்கார்ந்து
கொண்டிருந்தார்.

‘ஸாம்பஸதா சிவ.. ஸாம்பஸதா சிவ.. சம்போமகாதேவ
ஸாம்பசிவா.. ஸாம்ப ருத்ர மகாதேவா.. ஸம்போருத்ர மகா-
தேவா..’ என்று அவர் வாய் முணுமுணுத்துக் கொண்டிருந்தது.

அதைக் கேட்டுக் கொண்டிருந்த மிதிலா, ‘ஸாம்பஸதா
சிவ.. ஸாம்பஸதா சிவ…’ என்று அவளும் சொல்ல ஆரம்-
பித்தாள். மகிழ்ச்சியோடு அவளை ஊக்குவிக்கும் விதமாக
அந்தப் பெரியவரும் அவளுடன் சொல்லிக் கொண்டிருந்தார்.

பரிமாறிக் கொண்டிருந்த சிப்பந்திகள், சாம்பாரை
ஊற்றிக் கொண்டே வந்தார்கள்.

‘ஸாம்பஸதா சிவ.. ஸாம்பஸதா சிவ ஸம்போ மகாதேவ
ஸாம்ப சிவா.. ‘ என்று கூறிக் கொண்டிருந்த மிதிலா சிறிது
நிறுத்தி, ‘ஸாம்பார் ஊத்தற மகாதேவா.. இங்கேயும் கொஞ்-
சம் ஊத்து மகாதேவா’ என்றாளே பார்க்கலாம்..

அந்த ஹாலில் எழுந்த சிரிப்பலை அடங்க வெகு
நேரம் ஆயிற்று.

 

வரம் – தீபா மகேஷ்

A father is often known as a son's first hero and a daughter's first love. Give the special man in your … | Portrait drawing, Father's day drawings, Pencil portrait

 

அமுதாவின் ஃபோன் ஒலித்தது. அகிலா என்று பெயர் பார்த்ததும் ஆர்வமுடன் ஆன் செய்து “சொல்லு அகில்” என்றாள்.

ஆனால் அகிலா சொன்ன விஷயத்தைக் கேட்டதும் அந்த ஆர்வம் எல்லாம் நொடியில் அடங்கி அவளுடைய படபடப்பு அதிகமாகியது.

“அச்சச்சோ… எப்போ? எங்கே? எந்த ஹாஸ்பிடல்? என்று அடுத்தடுத்து கேள்விகள்.

ஹாலில் ந்யூஸ்‌பேப்பர் படித்துக்கொண்டிருந்த சங்கரன் அவள் பதட்டத்தைக் கவனித்து அருகில் சென்றான்.

“நாங்க உடனே கிளம்பி வரோம்” என்று போனை வைத்தவள், சங்கரனைப் பார்த்து “அகிலா ஃபோன் பண்ணாங்க. மாப்பிள்ளைக்கு ஆக்ஸிடெண்ட்டாம் . வாக்கிங் போற போது ஒரு ப்ளைன்ட் டர்ன்ல கார் வந்து இடிச்சு, கீழ விழுந்துட்டனாம் , தலைல அடிபட்டிருக்காம்.”

அவள் கண்களில் கண்ணீர் ததும்பி எந்நேரமும் வழிந்து விழுவதற்குத் தயாராக இருந்தது.  பேச முடியாமல் தொண்டை அடைத்தது.

அவள் சொன்னதைக் கேட்டு சங்கரனுக்கு சப்த நாடியும் ஒடுங்கியது. கடவுளே, இது என்ன சோதனை. நெஞ்சில் ஒரு பெரிய கல்லை ஏற்றி வைத்தது போல் பெரும் பாரம் அழுத்தியது .

ஆனாலும் சமாளித்து, “அமுதா, இந்தா கொஞ்சம் தண்ணி குடி. நம்ம போய் முதல்ல அகிலாவைப் பார்க்கலாம். பாவம், குழந்தைப் பயந்து போயிருப்பா . அருணுக்கு ஒண்ணும் ஆகாது. நம்ப யாருக்கும் எந்த கெடுதலும் செய்யல. நம்ப வேண்டுற தெய்வம் நம்பள கைவிடாது” என்றான்.

அமுதாவை சமாதானம் செய்தானே தவிர சங்கரன் மனதில் ஒரு பெரிய எரிமலையே குமுறிக் கொண்டிருந்தது.

ஹாஸ்பிடல் செல்லும் வழியெல்லாம் ஏதேதோ எண்ணங்கள், யோசைனைகள் .

பாவம், சின்னப்பெண். கல்யாணமாகி ஒரு வருடம் கூட முடியவில்லை. அதற்குள் இப்படி ஒரு சோதனையா. நாங்கள் யாருக்கு எந்த ஜென்மத்தில் என்ன தீங்கு செய்தோம்?

அமுதாவுக்கும் சங்கரனுக்கும் திருமணமாகி கிட்டத்தட்ட ஆறு வருடங்கள் கழித்துப் பிறந்த பெண் அகிலா.

 ஒரு குழந்தை வரம் வேண்டி அவர்கள் போகாத கோவில் இல்லை, வேண்டாத தெய்வம் இல்லை. ஒரு நவராத்திரி சமயம் திருச்சியில் தங்கி திருவானைக்காவல் அகிலாண்டேச்வரியைத் தரிசனம் செய்தார்கள். அதற்குப் பின் பிறந்த பெண் குழந்தை என்பதால் அந்த அகிலாண்டேச்வரியின் பெயரையே அவளுக்கு வைத்தார்கள்.

அவள் பிறந்த வேளை எல்லா சந்தோஷமும் அவர்களைத் தேடி வந்தது. சங்கரனுக்கு ஒரு பெரிய மல்ட்டி நேஷனல் பாங்க்கில் வேலை கிடைத்தது. திருவான்மியூரில் கொஞ்சம் நிலம் வாங்கி அழகாக ஒரு வீடு கட்டினார்கள்.

பத்து நிமிட நடையில் மருந்தீஸ்வரர் கோவில். இந்தப் பக்கம் நடந்தால் கடற்கரை

இயல்பாகவே அப்பாக்களுக்கு மகள்களின் மீது இருக்கும் பாசத்தையும் ஒட்டுதலையும் தாண்டி, சங்கரனுக்கு அகிலாவின் மீது உயிர். அகிலாவும் அப்பா செல்லம்தான்.

இரவில் அப்பாவோடு தான் சாப்பிட வேண்டும். கடைக்குப் போனால் அப்பாதான் ட்ரெஸ் செலெக்ட் செய்ய வேண்டும். அவன் எங்கு போனாலும் வால் போல பின்னாலேயே ஒட்டிக் கொண்டு அவளும் போவாள்.

ஆபீஸிலிருந்து சீக்கிரம் வரும் நாட்களில் எல்லாம் அப்பாவும் மகளும் தவறாமல் கோவிலுக்குக் கிளம்பி விடுவார்கள். சனி, ஞாயிறுகளில் பீச்.

சங்கரன், கோவிலில் மாலை வேலைகளில் நடக்கும் திருவாசகப் பாராயணத்தில் கலந்து கொள்வான். அகிலாவும், அப்பாவிற்கு அருகில் அமர்ந்து மழலை மாறாமல் தனக்குத் தெரிந்தபடி “நமசிவாய வாழ்க, நாதன் தாள் வாழ்க” என்று பாடுவாள்.  மற்றவர்கள் அவளை ஆச்சிரியமாகப் பார்க்க சங்கரன் மனம் பெருமிதத்தால் நிறையும்.

எல்லாம் நேற்று நடந்தது போல இருக்கிறது.

அகிலா படிப்பில் படு சுட்டி. பள்ளி நாட்களில் எல்லா முக்கிய ஃபைனல் பரீட்சைகளுக்கும்  சங்கரன் தான் கொண்டு போய் விட வேண்டும்.அவன் தான் ரிஸல்ட்  பார்க்க வேண்டும். அப்படி ஒரு சென்டிமெண்ட்.

அவளுக்காக எத்தனையோ முறை மீட்டிங்குகளை , வெளியூர் பிரயாணங்களை தள்ளிப் போட்டிருக்கிறான்

அவளுடைய நண்பர்கள் பலரும் என்ஜினீயர், டாக்டர் என்று கனவு கண்டு  சயன்ஸ் க்ரூப் எடுக்க, அவள் சி ஏ படிக்க வேண்டும் என்றாள்.  

‘காலேஜ் போனா சி. ஏ எக்ஸாம்க்கு ஃபோகஸ் பண்ண முடியாது. ஆர்ட்டிகல்ஷிப் வேற பண்ண வேண்டியிருக்கும். நான் பி.காம் கரெஸ்பான்டென்ஸ்லே படிக்கறேன்பா, ‘என்றாள்.

ஒவ்வொரு விஷத்திலும் ஆழ்ந்து யோசித்து முடிவு எடுக்கும் தன் மகளை நினைத்து சங்கரனுக்குப் பெருமையாக இருக்கும்.

படிப்பு, வேலை என்று வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் அவளே யோசித்து முடிவெடுக்க அவளுக்கேற்ற துணையையும் அவள் சரியாகத்தான் தேர்ந்தெடுப்பாள் என்று அவன் நம்பினான்.

ஆனால் அங்குதான் பிரச்சனை ஆரம்பமாகியது.

அருணைத் தான் விரும்புவதாக அவள் சொல்லிய போது, சங்கரனால் அதை ஒத்துக்கொள்ள முடியவில்லை.

அருண் அவளுக்குக் கொஞ்சமும் பொருத்தமானவன் இல்லை என்று அவன் நினைத்தான். அவனும் சி ஏ, அவளுக்கு சீ னியர், அது மட்டும் போதுமா?

அவளுடைய வருங்கால கணவனைப் பற்றியும் திருமண வாழ்க்கையைப் பற்றியும் சங்கரன் செய்து வைத்திருந்த கற்பனைகளில் அருண் கொஞ்சமும் பொருந்தவில்லை.

ஏன் என்று கேட்டால் சரியான காரணம் சொல்லத் தெரியவில்லை.

‘ஹாய்  அங்கிள்’, என்ற ஒற்றை விசாரிப்பில் அவன் தன்னை  கடந்து போகும் போதெல்லாம், தன் மருமகன் தனக்கு மகனாகவும் இருக்க வேண்டும் என்று அவன் ஆசை ஆட்டம் கண்டது.    

தானே வலிய போய் பேசிய சந்தர்ப்பங்களும் ஏமாற்றத்தையே கொடுத்தன.

ஒரு சமயம் பத்திரிகையில் வந்த ஒரு ஜோக்கைப் படித்து ரசித்து, சிரித்துத் கொண்டே அவனிடம் காட்டினான்.

“ஐ காண்ட்  ரீட் தமிழ், சாரி அங்கிள்,”  என்று சிரித்தான். டெல்லியில் படித்தானாம். சி ஏ படிக்கும் போதுதான் சென்னை வந்தானாம்.

அது கூட பரவாயில்லை. ஐ பி எல் பார்க்காத ஒருவன் இருப்பானா? கிரிக்கெட் பிடிக்காதாம். தலையில் அடித்துக்  கொள்ள வேண்டும் போல இருந்தது.

அப்படி என்னதான் கண்டாள் அவனிடம்? அகிலா மீது கோபம் கோபமாக வந்தது.

ஆனால் இதெல்லாம் ஒரு காரணம் என்று சொல்லி அவள் தேர்ந்தெடுத்தவனை எப்படி வேண்டாம் என்று சொல்வது. இது அவள் வாழ்க்கை அல்லவா?

எவ்வளவோ சமாதானம் சொன்னாலும் மனம் ஒப்புக் கொள்ளாமல் தவித்தது.  ஆனாலும், மகளின் விருப்பத்தை மதித்து திருமணம் செய்து வைத்தான்.

 சந்தோஷமாக போய்க் கொண்டிருந்த அவர்கள் வாழ்க்கையில் சற்றும் எதிர்ப்பார்க்காமல் இந்த பேரிடி.

ஹாஸ்பிடல் வந்து எமர்ஜென்ஸ்சி வார்ட் விசாரித்துக் கொண்டு உள்ளே சென்றார்கள்.

அவனைப் பார்த்ததுமே ‘அப்பா’ என்று வந்துக் கட்டிக் கொண்டாள், அகிலா.

தன் மகளின் கண்ணீரைப் போல ஒரு ஆண் மகனைப் பலவீனப்படுத்தக் கூடியது இந்த உலகில் எதுவும் இல்லை.

சங்கரன் கண்களில் துளிர்த்த கண்ணீரை மறைத்துக் கொண்டான்.

“தலைல அடிப்பட்ட ஷாக்ல, பிரைன்ல க்ளாட் ஆகியிருக்கு. இப்போ கோமால இருக்கார். கொஞ்ச நாள் அப்ஸர்வ் பண்ணிட்டு தான் சர்ஜரி தேவையான்னு டிஸைட் பண்ணனும்” என்றனர் டாக்டர்கள்.

அதன் பின் ஹாஸ்பிடல் இன்னொரு வீடாகி போனது.

பகல் இரவு பாராமல் அருணுடன் இருந்தான்.

அவன் கைகளைப் பற்றிக் கொண்டு பேசினான். நம்பிக்கைக் கொடுத்தான். கந்த சஷ்டி கவசம் சொன்னான்.

இப்படி ஒன்றல்ல இரண்டல்ல இருபத்தியோறு நாட்கள் ஒரு தவம் போல அவன் அருகில் அமர்ந்திருந்தான்.

மனதில் அன்பு பெருகும் போது  அதிசயங்கள் நிகழ்கின்றன.

அவை நடக்கும் போது அதன் வீரியத்தை நாம் பல சமயம் உணர்வதில்லை. பெரும்பாலும் அதை ஒரு சாதாரண நிகழ்வாகவே கடந்து போகிறோம்.

பின்னோக்கிப் பார்க்கும் போதுதான் அது ஒரு பூ மலருவது போல எவ்வளவு அழகாக நிகழ்ந்திருக்கிறது என்பது புரிகிறது.

மூன்று வாரங்கள் கழித்து டாக்டர்கள் சர்ஜரி தேவையில்லை என்றார்கள். ஆனாலும் அருண் நினைவில்லாமல் கோமாவில் தான் இருந்தான்.

இன்னும் எத்தனை நாட்கள் இப்படி ? ஒன்றும் புரியவில்லை.

ஏதாவது ஒரு அதிசயம் நடக்காதா, அவன் கண் விழித்துப் பார்க்க மாட்டானா என்று மனம் ஏங்கியது.

கோவிலுக்குப் போனால் தேவலை என்று தோன்றியது.

மருந்தீஸ்வரரை தரிசனம் செய்து விட்டு திரிபுர சுந்தரி அன்னையின் சந்நிதியில் வந்து அமர்ந்தான்.

யாரோ ஒரு பெண்மணி அழகாக அபிராமி அந்தாதி பாடிக் கொண்டிருந்தாள் . அதில் மெய் மறந்து கண்கள் மூடினான்.

மணியே மணியின் ஒளியே….

ஒளிரும் மணி புனைந்த அணியே

அணியும் அணிக்கு அழகே

அணுகாதவர்க்குப் பிணியே, பிணிக்கு மருந்தே..

என்று கேட்டதும் அவன் அறியாமல் அவன் கண்களில் கண்ணீர் வழிந்தது. நீதான் இந்த நோய்க்கு மருந்தாக வர வேண்டும் என்று மனம் அன்னையிடம் மன்றாடியது.

நீ கொடுத்த குழந்தை அவள். இனியும் அவள் கண்ணீர் சிந்துவதைப் பார்க்கும் படி வைக்காதே. அவள் ஆசைப்பட்ட வாழ்க்கையை அவளுக்குக் கொடுத்துவிடு. அருணும் என் மகன் அல்லவா? உனக்கு உயிர்தான் வேண்டும் என்றால் என்னை எடுத்துக் கொள்.  அவனைத் திருப்பிக் கொடுத்துவிடு.

வேதனையில் மனம் ஏதேதோ பிதற்றியது . வேண்டியது.

தனம் தரும், கல்வி தரும்.

ஒரு நாளும் தளர்வறியா மனம் தரும்

தெய்வ  வடிவும் தரும் நெஞ்சில் வஞ்சமில்லா இனம் தரும்

…. நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே..

அந்தப் பெண் பாடிக் கொண்டிருந்தாள். மூடிய கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தபடி  இருந்தது

அன்னையிடம் அழுதானா, தொழுதானா , சண்டை போட்டானா, தெரியவில்லை.

ஆத்தாளை எங்கள் அபிராம வல்லியை ..

அண்டமெல்லாம் பூத்தாளை…

…..முக்கண்ணியை தொழுவார்க்கு ஒரு தீங்கில்லையே..

என்று பாடி முடிக்கும் வரை அவன் அந்த இடத்தை விட்டு அசையவில்லை.   

அடுத்து வந்த நாட்களில்  அருணின் உடல் நலம் வேகமாக முன்னேறியது. அவன் உடலும் மனமும் நன்றாகத் தேறிய பிறகு வேலைக்குப் போக ஆரம்பித்தான்.

அன்று அருணுக்குப் பிறந்த நாள். அமுதா அவர்கள் இருவரையும் சாப்பிட அழைத்து தடபுடலாக விருந்து தயாரித்திருந்தாள் .

சாப்பிட்டு முடித்து மற்றவர்கள் தூங்கப் போக சங்கரன் புத்தகம் படித்துக் கொண்டிருந்தான்.

சற்று நேரத்திற்கெல்லாம் தன் அருகில் வந்தமர்ந்த அருணை ஆச்சரியமாகப் பார்த்தான். “தூங்கலியா அருண்” ?

“தூக்கம் வரல”, என்று சிரித்தான்.

‘நான் ஹாஸ்பிடல்ல இருந்த போது நீங்க எப்பவும் என் கூடவே  இருந்து என்னை எப்படி பாத்துக்கிட்டீங்கனு அகிலா சொன்னா’ .

பேசிக் கொண்டிருந்தவன், சட்டென்று அவன் கைகளைப் பற்றி “தாங்க் யூ அப்பா”. என்றான்.

 

சங்கரனுக்கு தன்னுள் அழுத்திக் கொண்டிருந்த ஏதோ ஒன்று உடைந்து மனம் லேசானது போல இருந்தது.

அவனை அப்படியே தழுவிக் கொண்டான்.

அவர்கள் சென்ற பிறகு கூட மனம் அந்த ஆனந்தத்திலேயே லயித்திருந்தது.

மறுநாள் சிவராத்திரி. காலையில் மார்க்கெட் போய் பூஜைக்குத் தேவையானதெல்லாம் வாங்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டே தூங்கச் சென்றான்.

அகிலாவின் செல் ஃபோன் ஒலித்தது.

யார் காத்தால ஃபோன் பண்றாங்க என்று யோசித்தபடி  எடுத்தாள்.

அம்மாதான். இன்று சிவராத்திரி என்று நினைவுபடுத்தத்தான் இருக்கும்.

அப்பா சாயங்காலம் பூஜை பண்ணுவார். நீங்க ரெண்டு பேரும் சீக்கிரம் வந்திடுங்க. அம்மா சொல்லப் போவதையெல்லாம் மனதில் சொல்லிப் பார்த்துக்  கொண்டே ஃபோனை காதில் வைத்தாள்.

‘அப்பா நம்ம விட்டுட்டு போய்ட்டாரு, அகில். தூக்கத்திலேயே உயிர் போயிருக்கு.

டாக்டர் வந்துப் பாத்துட்டு மூளைல ரத்தக் கசிவுனால மரணம்னு சொல்றாரு. ‘

தான் கேட்பதை நம்ப முடியாமல் “அப்பா” என்று அலறினாள் அகிலா.

அவல் ஆச்சி – ந பானுமதி

        When the camera rolled, she lived the character' - The Hindu

 

காலமில்லாக் காலத்தில்  நேற்று மாலையிலிருந்து நல்ல மழை. முதலில் தயங்கிப் புதிதாக வேலைக்கு வருபவர்கள் போல் அடக்கமாக வந்தது. மொட்டைமாடியில் சிறு தூரல்; உடல் நனைக்க வேண்டும் என்று விபரீத ஆசை வந்தது எனக்கு. கண் இமைகளின் மேல், முகவாய்க் குழியில், அண்ணாந்த கழுத்தில், நீட்டித் துழாவிய இருகரங்களில் காதலனென முத்தமிட்டு முத்தமிட்டுச் சல்லாபித்த மழை. அது வலுக்க ஆரம்பிக்கையில் கணவனின் நினைவு ஏனோ வந்தது. அம்மா கீழ் முற்றத்தில் நனைந்தபடியே என்னைத் திட்டிக் குரல் கொடுத்தாள். இன்னமும் கூட நான் வெல்லம் போலக் கரைந்து விடுவேன் என்று பயப்படுகிறாள்.

“வொங் கொழந்தைக்கே நாலு நாள்ல ஆயுக்ஷோமம்; நீ மாட்டுக்கும் மழேல வெளயாட்ற; ஒன் ஆம்படையான் எல்லாரோடையும் நாளன்னிக்கு வந்திடுவானோல்யோ?”

‘வருவாம்மா, ஐஞ்சு பேரு வரா; ஐயோ எதுக்கு இப்போ என்னத் தொடைக்கற; ஜில்லுன்னு இருந்ததெல்லாம் போச்சு’

“நெருப்பு காங்கய இப்டி அணக்கறயாக்கம். சும்மா இருடி, நாளும் கெழமையுமா படுத்துண்டா, கொழந்தைக்கும் உன்னால ஜொரம் வந்துடும்.”

ஒருமுறை பறிகொடுத்தவளை அப்படியே என்று முத்திரை குத்திவிடுவார்கள் போலிருக்கிறது. அம்மாவின் கவலை ஊராரைக், குறிப்பாக, என் புக்ககத்தைப் பற்றியது. பாவம், கவலையினால் உடம்பு ஊதுகிறது அவளுக்கு. உனக்கும் மழை பிடிக்கவில்லையா என்ற வார்த்தைகளை விழுங்கி விட்டேன். மழை ஆக்ரோஷமாக அறைந்து கொண்டிருந்தது. மரங்கள், செடிகள், கொடிகள், தளிர்கள் எல்லாவற்றையும் நனைக்கும் மழை. வளைந்து குனிந்து ஏற்றுக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை அவைகளுக்கு. இரவு விளக்கின் மென்மையான நீல ஒளி, ஜன்னல் கண்ணாடியில் சிதறி வெளியே  தெறிக்கும் நீர்த்துளிகளில் ஒரு பக்கம் அவிழ்ந்த தூளியென கோட்டுரு வரைந்தது. எப்போது தூங்கினேன் என்று தெரியவில்லை. ஆனால், கனவுகள், கனவுக்குள் கனவுகள், பாபத்தின் நிழல் கொத்தைக் காட்டும் அனுபவம், மாறாத கொடூரத்தில் என்னைத் தோலுரிக்கும் கேள்விகள், தன்னிரக்கத்தில் அலறும் மனது, அந்தச் சமயத்தின் ஆர்ப்பாட்டம் என்ற சமாதானம், அவல் ஆச்சியைப் பார்க்க முடியுமா, அவள் கால்களில் விழுந்து அழ முடியுமா, அவளிடம் மன்னிப்புக் கேட்க என் வறட்டுக் கௌரவம் இடம் கொடுக்குமா என்று கனவுக்குள் பதில் தேடும் கேள்விகள். என் கனவும்,நினைவும் அந்தத் தருணத்தில் பூத்து, வாடாமல் அப்படியே என்னைத் தின்று கொண்டிருக்கிறது.

கரு மலைப் பாம்பென நீண்ட சாலை இது. வடக்குத் தெற்காகப் பரந்த சாலையில் எதிரெதிராக வீடுகள். அரை கிலோ மீட்டர் தொலைவில் நடு நாயகமாக பூவாடை நாதர் திருக்கோயில். வில்வ தளப் பிரியரான அவர், ஒரு சிவயோகியின் கனவில் நானூறு ஆண்டுகளுக்கு முன் தோன்றி, தனக்குத் தினமும் வாசனைப் பூக்களால் ஆடை செய்து ஆவுடையிலும், தன் மேற்புறத்திலும் சார்த்தச் சொன்னாராம். சிவன் கோயில் நந்தவனம் பருவத்திற்கேற்றாற் போல், மருக்கொழுந்து, முல்லை, மல்லிகை, ரோஜா, நாகலிங்கம், நந்தியாவட்டை, கதிர்பச்சை, செண்பகம் எல்லாம் பூத்து எங்கள் தெருவே பூவின் மணத்தால் நிறையும். அவர் கோயிலை ஒட்டிய திருக்குளத்தில் ஆம்பல், தாமரை, அல்லி மலரும். ஆனால், அவருக்குத்தான் மலர்ந்த மலர்களைச் சாற்றுவார்கள்; அம்பாளுக்கு மொட்டரளி, விரியாத தாமரை மொட்டு போன்றவை. இந்த விசித்திரம் என்னை என்னவோ செய்யும், சிறு பெண்ணாக இருக்கையிலேயே. எனக்கு எந்த சந்தேகம் வந்தாலும் நான் நம்பக் கூடியமாதிரி பதில் சொல்பவள் அவல் ஆச்சிதான்.

‘கௌரிக் கண்ணு, அம்மயே ஒரு பூவு. பேரும் மொட்டுக் கன்னி; அப்ப அதுதான மொற’

“ஆச்சி, அது முத்துக் கன்னி ஆச்சி. பேரயே மாத்திப்புட்டீயளே”

‘சரிதானே, பேருல கன்னி இருக்குதில்ல.’

அந்த வயதில் அது எனக்குப் போதுமானதாக இருந்தது. ஆச்சியிடம் ஒரு நளினமும், கம்பீரமும் எப்போதும் இருந்தன. அவள் நெடுநெடுவென்று உயரமாக இருப்பாள். கொஞ்சம் கருமை கலந்த மண் நிறம். முட்டி வரை நீளும் கைகளில் தேளை பச்சை குத்தியிருப்பாள். வெள்ளைச் சேலை, மார்பில் எதுவும் அணியாத போதும், முழுக்க உடலை மறைத்திருக்கும். செருப்பு அணிய மாட்டாள். பனைக் கொட்டான் கூடையில் தலைச் சுமையாக அவல்; தோல்பட்டையிலிருந்து தொங்கும் பனை நார்ப்பையிலும் அவல்தான். ஊருணிக்கு அப்புறம் உள்ள செங்கையூர் அவளுக்கு.

  ஐந்து நாட்களுக்கு ஒரு முறை அவளை நிச்சயமாக எங்கள் தெருவில் பார்த்துவிடலாம். அவளுக்கு கிலோ கணக்கெல்லாம் தெரியாது. படி, ஆழாக்கு என்று இன்று வழக்கில் இல்லாத பெயர்களைத்தான் சொல்வாள். நாங்கள் பள்ளியில் கிலோவைப் படித்தோம், வீட்டில் அம்மா படியால் அளந்தாள். அந்தத் தெரு முழுவதற்கும் எங்கள் வீட்டுப் படி ஆச்சியுடன் பயணிக்கும். எல்லாவற்றையும் விற்றுவிட்டு எங்கள் வீட்டுத் திண்ணையில் உட்காருவாள். மோர் மட்டும் தான் குடிப்பாள், சாப்பிட எது கொடுத்தாலும் வாங்க மாட்டாள். நான்கு நாட்கள் ஆகிவிட்டதென்றால் காலையில் சீக்கிரம் எழுந்து அவள் வருவதற்கென்றே நான் வாசலை, வாசலைப் பார்த்திருப்பேன். ‘இந்தக் குட்டியை, அந்த ஆச்சிக்குப் புள்ள இருந்தா கல்யாணம் செஞ்சுடலாம்’னு கேலி செய்யும் அப்பாவிற்குப் பின்புறமாக பழிப்புக் காட்டிக்கொண்டே நான் அலை பாய்வேன். சுமையை எங்கள் வீட்டுத் திண்ணையில் இறக்கி வைத்துவிட்டு, ‘பாத்துக்க கண்ணு, இந்தா வந்திடுதேன்’னு ஓட்டமா கோயிலப் பாக்க ஓடுவா ஆச்சி. அவ சொத்துக்கு நான் காவல்ன்னு நான் கர்வமா இருப்பேன்.

சீரகச் சம்பா நெல்லைப் புழுக்கி அவள் கொண்டு வரும் அவலுக்கு நாங்கள் அனைவரும் அடிமை. அம்மாவிற்குத் தெரியாமல், என் கைகள் நிறைய அவலும், பொடி வெல்லமும் சேர்த்து எனக்கு மட்டும் ஸ்பெஷலாகத் தருவாள். ‘கண்ணனும், குசேலனும்’ என்று அப்பா சிரித்துக்கொண்டே சொல்கையில் நாணிச் சிரிப்பாள். அவர்கள் இடத்தில் அவல் எப்படி செய்கிறர்கள் எனப் பார்க்க நான் ரகளை செய்தாலும் என் பெற்றோர்கள் விட்டதில்லை. ஆச்சியும் அவ்வளவு எளிதாக ஒத்துக்கொள்ளவில்லை. சற்று வயதான பிறகு நான் ஒரு ட்ரிக் செய்தேன்-அந்த ஸ்பெஷல் அவலை வாங்காமல் உள்ளே ஓடிவிட்டேன் ஒரு நாள். நடு முற்றம் தாண்டி அன்றுதான் ஆச்சி உள்ளே வந்தாள். ‘பொளச்சுக் கிடந்தா நாளக்கி போயாரலாம். அம்மா, புள்ள எம் புள்ளயாக்கம், கூட்டிப் போயி கொணாந்தும் விட்டுடுதேன். வெசனப் படாதீய’

எப்போதும் நடந்து வரும் ஆச்சி மறு நாள்  மாட்டு வண்டியில் வந்தாள்; ‘பூவுக்க பொன்னு பாதமில்லா’ என்று அவள் என்னைத் தூக்கி வண்டியில் அமர வைத்த போது அம்மா கமறிய குரலில் ஏதோ சொன்னாள். அப்பா, அவசர அவசரமாக எடுத்துக் கொடுத்த பணத்தையும் வாங்க மறுத்தாள். ‘எனக்க மவ, நானும் பூவாடைக்காரியாக்கும்’

பயண வழியெங்கும் பாக்கு மரங்களும், புளி மரங்களும் நின்றிருந்தன. சற்றுத் தொலைவில் பனை மரங்கள் தெரிந்தன. வான் நீலம் சொட்டுச் சொட்டாக ஊருணியில் இறங்குவதைப் போல் ஒரு தோற்றம். அது நீல மேகங்களின் மாயம். ஊருணியைக் கடக்கையில் சொன்னாள்- ‘ஐயா, ஒரு நிமிசம் நிப்பாட்டு; வா மவளே, இந்தா இங்கண கையள்ளிக் குடி தாயி தண்ணிய, ஊருக்குள்ள வாரத் தண்ணிதான், அதில என்னமோ மருந்து அடிக்கான்.’ ஆம், இது தேனாய் இனித்தது, நெல்லிக்காயைச் சாப்பிட்ட பிறகு குடிக்கும் தண்ணீர் இனிக்குமே அது போல் இருந்தது.

ஆச்சியின் வீடு ஒரு சிறு தோட்டத்திற்குள் இருந்தது. இரு தென்னை, வாகை மரங்கள். கீரைப் பாத்தி சற்றுப் பெரிதாக இருந்தது. வெண்டை, தக்காளி, பச்சை மிளகாய், அவரைப் பந்தல், சில காய்கறிச் செடிகள்; கூரை முகப்பில் பூசணி படர்ந்திருந்தது. ஒரு மாடத்தில் அம்மனின் முகம் போல ஒன்று செதுக்கப்பட்டு அதில் இரு பிரிவுகளாக துளசியும், தும்பையும் இருந்தன; ‘எங்க மாமியா வூட்டு சாமி, கன்னி பரமேசுரி, கும்புட்டுக்க கௌரி.’ அந்த அம்மன் முகம் அசப்பில் ஆச்சி முகம் போலத்தான் எனக்கிருந்தது.

‘உங்க வீட்டாரு செய்ற மாரி செய்ய மாட்டோம்; இது சீனியும், துருவலும் போட்டு செஞ்ச சேப்பு அவல் புட்டு, எடுத்துக்க தாயி’

அம்மா நிறைய நெய் ஊற்றி  அரிசிப் புட்டு செய்வாள்; இந்த எளிமையில் ஏதோ இனம் புரியா ருசி இருக்கிறது-அது அன்பின் ருசியோ என்னவோ?

செங்கல் பாவி சிமெட்டிப் பால் ஊற்றி இறுக்கி வெள்ளை வண்ணம் பூசி விறகால் எரிந்து கொண்டிருந்த அடுப்புகளின் மேல் ஆறு சர்வங்களில் இருவர் நெல் புழுக்கிக் கொண்டிருந்தார்கள். என்ன ஒரு மணம்! பெரிய நான்கு அண்டாக்களில் நெல்லை ஊற வைத்தார் ஒருவர். புழுக்கிய நெல்லை சரேலென்று சரித்து வடிகட்டினார்கள் நால்வர். பெரும் கரண்டிகளால் வரிசையாக இருந்த பெரும்  வாயகன்ற சமச்சீரான தவளைகளில் போட்டு கும்மாடத்தால் அமிழ்த்திப் புடைத்து உமியை வெளியேற்றினார்கள் மூவர். அத்தனையும் உடலுழைப்பு. பின்னரும் முறத்தில் போட்டு புடைத்து எடுத்தார்கள். தொழுவத்தில் இருந்த எருமைகளும், ஒரு பசுவும் கன்றும் நெல் களைந்த நீரை ஆசையாகப் பருகுவதைப் பார்த்தேன். ஆச்சி என்னை மீளவும் வீட்டிற்கு கொண்டு வந்து விட்டாள்; கண்ணாடி வளையல்கள், பருத்திப் பாவாடை, மேல்சட்டை, தாவணி, கண்மை பனைச் சிமிழில், குங்கமமும் அதைப் போலத்தான்.

அப்பா ரிடையர் ஆகப் போவதால் எனக்குப் பதினெட்டு வயதில் திருமணம். ஆச்சி தானே தன் கிராமத்திலிருந்து அனைத்து வேலைகளுக்கும் ஆட்களைக் கூட்டி வந்தாள். பதினெட்டு வண்ண பனைக் கொட்டான்களில் அனைத்து வகை அவல்கள்; ‘எம் மவளுக்கு, கட்டு சாதமில்ல கொடுக்கேன்’

எனக்கு அம்மா,அப்பாவை விட ஆச்சியைப் பிரிவது அவ்வளவு வேதனையாக இருந்தது. கிளம்புகையில் தனியே அழைத்துச் சொன்னாள் “கௌரிம்மா, மாசில்லாத ஊருணித்தண்ணி இனிச்சது நெனப்பிருக்கா; இந்தா இருக்காரே பூவாட நாதரு;அவரது கோயிலுக்குள்ளாற இருக்கே கேணித் தண்ணி, அது அம்புட்டு இனிக்காது; தலேல வக்குற பூவு வாசம், பதார்த்தத்ல எறங்கிடுச்சுனா உண்ண ஏலாது. நாவு இனிக்க ஒரு தண்ணி, ஊரே மணக்க ஒரு நீரு.” எனக்குப் புரிந்தும் புரியாததுமாக இருந்தது.

வாக்கப்பட்டு வந்த ஊரில் ஜீவனே இல்லாத தண்ணீர்தான். ருசி பேதங்கள் கடுத்தன. நான் கர்ப்பமானேன். வளைகாப்பு, சீமந்தம் முடிந்தவுடன் மீண்டும் பூவாடையூர். என் குழந்தைக்கு முதல் செவ்வெண்ணை ஆச்சிதான் வைத்தாள். அம்மா இதற்கெல்லாம் போட்டிக்கு வர மாட்டாள். ‘பசுவும், கன்னுமா போய் வாழயும் வரப்புமா வளரு தாயி’ என்று ஆச்சி சொல்கையில் ஏனோ அழுகை முட்டிக் கொண்டு வந்தது. அது பெண் குழந்தை. என் புக்ககக் குடும்ப வழக்கப்படி அனன்யா தவழ்ந்து உட்காருகையில் காது குத்தும் விழா. குழந்தைக்கும் பதினோரு மாதங்கள் ஆகிவிட்டது. மீண்டும் பிறந்த ஊருக்கு வர, சீராட இதெல்லாம் நல்ல வாய்ப்பு அல்லவா?

விபாபாரத்தை முடித்துவிட்டு வந்தாளென்றால், குழந்தையை மடியை விட்டு இறக்க மாட்டாள் ஆச்சி. ‘ஆச்சி, ஊருக்கு வந்துடுங்க,உங்க மக, பேத்தி எல்லாரோடையும் இருக்கலாமில்ல’ என்று சொல்வேன், சிரிப்பாள் ஆச்சி. மறுப்பதை மறைக்கும் சிரிப்பு அது.

அந்த ஒரு நாள் ஏன் அப்படி விடிந்தது? எந்தக் கணக்கில் முத்துக் கன்னி ஒர் உயிரைக் கொண்டு வந்தாள், பதினோரு மாதம் சொர்க்கத்தை எனக்குக் காட்டினாள்? எந்தக் கணக்கில் என்னையும் ஆச்சியையும் பிரித்தாள்? அந்தக் கணத்தை ஏன் கனமானக் கல்லாக என் மனதில் ஏற்றினாள்?

அனன்யாவை முன் வராந்தா தரையில் சிறு மெத்தையின் மேல் படுக்க வைத்து இரு பக்கமும் தலையணையை அண்டக் கொடுத்துவிட்டு நான் முகப்பில் பிச்சிப்பூ பறிக்கப் போனேன். கொட்டு மேளம் கேட்டது. அம்மையும், அப்பனும் ஆனித் திருமஞ்சண ஊர்வலத்தில். சங்கொலி, உடுக்கை சத்தம், நாகஸ்வரம்; எல்லாவற்றிற்கும் மேலாகப் பரவி வரும் பூ வாசம். ஆச்சி தலைச்சுமையை வராந்தாவில் வைத்துவிட்டு ‘சின்னப் பூவு வொறங்குது, கனா கண்டு சிரிக்குது’ என்றவாறே  என் அருகில் வாசலில் வந்து நின்றாள். எங்கள் வீட்டுத் திண்ணையிலும் போவோர் வருவோர் ஏறி தரிசனத்திற்காக நின்றார்கள். ஜவ்வாதும், மருக்கொழுந்துமாக முன் வாசம்; வெட்டி வேரில் பின் வாசம். ‘வாசலுக்கு சாமி ஏன் வருது தெரியுமா? கிழடு, சிறுசு எல்லாம் நடந்து போய் பாக்க முடியாதில்ல;’ என்றாள் ஆச்சி. நான் குழந்தையை எடுத்துவர உள்ளே ஓடினேன். தூக்கத்திலிருந்து விழித்துக் கொண்ட அனன்யா தட்டுத் தடுமாறி நடந்து வந்து  அவலை அள்ளி அடைத்துக் கொண்டிருக்கிறாள்; அது மூச்சுக் குழாயில் சிக்கிச் சொருகி அடைத்து என் குழந்தை காற்றிற்குத் திணறி இறந்திருந்தாள்; ‘ஐயோ,ஆச்சி கொன்னுட்டீங்களே’ என்று அலறிவிட்டேன்.

ஆச்சி திகைத்து நின்றாள். ஒரு வார்த்தை பேசவில்லை. வாசலுக்குச் சென்றாள். ‘மொட்டுக் கன்னி, உம்மேல ஆண-இனி அவல் செய்ய மாட்டேன், விக்க மாட்டேன்.’

ஆச்சி இந்தக் குழந்தையைப் பார்க்க வர வேண்டும்; கொஞ்ச வேண்டும். எனக்கு அவள் வீடு தெரியும்.ஆனால்…..

 

 

 

குப்பை – S L நாணு

Although today is education growth day ,,Still there are students picking up something in garbage| கல்வி வளர்ச்சி நாளான இன்றும் சிறுவர்கள் பள்ளிக்கு செல்லாமல் குப்பை பொறுக்கும் ...      

ரொம்பவே அவசரமாகக் குப்பையைத் துழாவித் துழாவிப் பொறுக்கினான் ஜனா.. அவனுக்குத் தெரியும்.. எவ்வளவு சீக்கிரம் கிடைத்ததை அள்ளிப் போட்டுக் கொண்டு போய் சிங்காரம் கடையில் கொட்டுகிறானோ.. அவ்வளவு சீக்கிரம் அவன் குடிசையில் அடுப்பு எறியும்.. விபத்தில் முதுகெலும்பு உடைந்து படுத்த படுக்கையாகக் கிடக்கும் அப்பா.. காச நோய் முற்றிய நிலையில் அம்மா.. இருவரையும் பார்த்துக் கொள்ளும் தங்கை.. சூழ்நிலைக் காரணமாக பள்ளிப் படிப்பை நிறுத்தி விட்டு வேறு வேலை கிடைக்காமல் சிங்காரத்தின் அறிவுரைப் படி இந்த குப்பைப் பொறுக்கும் வேலை.. கஷ்டமாக இருந்தாலும்.. தன் குடும்பத்தை நினைத்து விடாமல் குப்பையைக் கிளறினான்.. தினமும் நூறு நூற்றைம்பது தேறுகிறது.. அதிருஷ்டம் இருந்தால் சில நாட்கள் போனசாக மேலும் ஐம்பது நூறு கிடைக்கும்..

       இன்று நான்கு தெருக்கள் சுற்றியாகி விட்டது.. உருப்படியாக எதுவும் தேறவில்லை.. சில நாட்கள் இப்படியும் இருக்கும்.. இன்று கிடைத்ததை வைத்துப் பார்த்தால் ஐம்பது கூடத் தேறாது போலிருந்தது.. நான்கு பேர் சாப்பிட இது போதாதே..  மனதில் வேகம் ஏற ஏற.. கண்கள் இன்னும் வேகமாக அலைபாய்ந்தன.. அறுந்த செருப்பு.. அழுகின பழங்கள்.. காய்கள்.. ஈரத்தில் நனைந்த காகிதங்கள்.. கிழிந்த நாராகத் துணிகள்..

       “சே.. இன்னிக்கு ஏன் இப்படி ஒரு சோதனை?”

       அலுத்துக் கொண்டு நிமிர்ந்தான் ஜனா.. இந்த குப்பை மேட்டை விட்டால் பெரிதாக வேற எந்த குப்பைத் தொட்டியும் அவன் போகும் பாதையில் கிடையாது என்று அவனுக்குத் தெரியும்..

       என்ன செய்வது என்று புரியாமல் சில கணங்கள் சிலையாக நின்றான்.. வெயிலின் தாக்கத்தில் வியர்வை கசிந்து தொண்டை வரண்டது.. காலையிலிருந்து எதுவும் சாப்பிடாததால் கண்கள் இருட்டிக் கொண்டு மயக்கம் வருவது போலிருந்தது..

       தன்னையுமறியாமல் குப்பை மேட்டில் அப்படியே உட்கார்ந்தான்.. கீழே சாயாமல் இருக்க இரண்டு கைகளையும் ஊன்றியபடி கண்களை  மூடிக் கொண்டான்.. சிறிது நேரம் அப்படியே உட்கார்ந்திருந்தவனுக்கு சற்று ஆசுவாசப் பட்டது போல் இருந்தது..

       மெதுவாக எழுந்திருக்க முயன்றான்..

       குப்பையில் புதைந்திருந்த அவனுடைய இடது கையில் ஏதோ சிக்கியது.. எடுத்துப் பார்த்தான்..

       மணி பர்ஸ்..

       அவசரமாக அதைத் துழாவினான்.. உள்ளே பத்து இரண்டாயிரம் நோட்டுக்கள்.. நான்கு நூறு.. மூன்று ஐம்பது.. மிச்சபடி சில கசங்கிய காகிதங்கள்..

       இவ்வளவு பணத்தை ஒன்றாகப் பார்த்தவுடன் ஜனா முதலில் மிரண்டு போனான்.. நம்பாமல் அந்த நோட்டுக்களைக் கையில் எடுத்து மறுபடியும் மறுபடியும் தடவிப் பார்த்தான்.. எண்ணிப் பார்த்தான்..

       நிஜம் தான்..

       என்ன செய்யலாம்?

       மறுபடியும் பர்ஸை துழாவினான்.. அதில் சொந்தக் காரரின் பெயரோ விலாசமோ குறிக்கும் கார்ட் எதுவுமில்லை.. போட்டோ கூட இல்லை.. தவறுதலாக யாரோ இதைத் தொலைத்திருக்க வேண்டும்..

       ஜனா ஒரு முடிவுக்கு வந்தான்..

       தன் பிராத்தனைக்குக் கடவுள் கொடுத்த வரமாகவே அவனுக்குப் பட்டது..

       இந்தப் பணம்.. இன்னும் பல நாட்களுக்கு அவர்கள் குடிசையில் அடுப்பு எறிய உதவும்.. அவன் அப்பாவின் முதுகுத் தண்டுக்கு தைலம் வாங்க  உதவும்.. கிழிந்த பாவாடையை சுற்றிக் கொண்டு அலையும் தங்கைக்குப் புதுப் பாவாடை சட்டை வாங்கிக் கொடுக்க உதவும்.. அவனுக்கும் வேறு எங்காவது வேலை தேட கொஞ்சம் அவகாசம் கிடைக்கும்..

       பணம் கிடைத்தவுடன் அவனுடைய சோர்வெல்லாம் ஒரு நொடியில் விலகியது போலிருந்தது..

       சுற்று முற்றும் பார்த்தான்.. யாரும் அவனைக் கவனிக்கவில்லை என்பதை ஊர்ஜிதம் செய்த்துக் கொண்டான்.. பர்ஸை சட்டைக்குள் மறைத்துக் கொள்ள முயன்றவனின் மனதை ஏதோ குத்தியது..

       ”ஜனா.. நீ பண்றது சரியா?”

       ஒரு கணம் திடுக்கிட்டான்.. ஆனால் உடனே அவனுடைய புத்தி அவனுக்கு ஆதரவாக வந்தது..

       “என்ன தப்பு? நானா எடுத்தா திருட்டுன்னு சொல்லணும்.. இது எனக்கு எதிர்பாராத விதமாக் கிடைச்ச பணம்.. எடுத்துக்கறதுல என்ன தப்பு?”

       மனம் விட வில்லை.

       “இல்லை ஜனா.. எப்படி இருந்தாலும் நீ செய்யறது திருட்டு தான்.. இதை சொந்தக் காரர் கிட்ட சேர்க்க வேண்டியது உன் கடமை”

       ”ஏய்.. பைத்தியம் மாதிரி பேசாதே.. பர்ஸை துழாவியாச்சு.. இதோட சொந்தக் காரர் யாருங்கறதுக்கு எந்த அடையாளமும் இல்லை”

       “சரி.. அப்ப நேர போலீஸ் ஸ்டேஷன் போய் அவங்க கிட்டக் கொடு.. அவங்க சொந்தக் காரனைக் கண்டு பிடிச்சு அதைக் கொடுத்துருவாங்க”

       “வந்து.. “

       “யோசிக்காதே ஜனா.. இந்தப் பர்ஸை போலீஸ் கிட்ட ஒப்படைக்கறது தான் தர்மம்.. நியாயம்.. அவங்க கிட்ட இதை நீ ஒப்படைச்சா உன் நேர்மையைப் பாராட்டி அவங்க உனக்கு ஏதாவது பரிசு கொடுக்கலாம்.. அது தான் உனக்குப் பெருமை.. கௌரவம்..”

        “இல்லை.. வந்து..”

        ”உடனே எழுந்திரு.. போலீஸ் ஸ்டேஷனுக்குக் கிளம்பு”

        “சரி.. சரி.. கத்தாதே.. போலீஸ் ஸ்டேஷன் போறேன்”

         என்று எழுந்து குப்பைப் பையைச் சுமந்து கொண்டு நடக்க ஆரம்பித்தான் ஜனா..

          “நான் ஆசைப் பட்டது தப்பு தான்.. போலீஸ் கிட்டத் தான் பர்ஸைக் கொடுக்கணும்.. போலீஸ் கிட்டத் தான் கொடுக்கணும்.. அவங்க அதை சொந்தக் காரர் கிட்ட ஒப்படைச்சுருவாங்க.. போலீஸ் கிட்டத் தான் கொடுக்கணும்.. போலீஸ்..”

          ஜனாவின் மனதில் பரபரப்பு ஏறியது.. வேகமாக நடக்க ஆரம்பித்தான்..

          ஆனால் கால்கள் தன்னிச்சையாக அவன் குடிசையை நோக்கி நகர்ந்தன..

பிரியம்- ரேவதி ராமச்சந்திரன்

Sadabhishekam Samagri Kit, पूजा की किट, पूजा किट - Pooja Dhravyam 18, Hyderabad | ID: 11505880933

தலைப்பு சம்ஸ்கிருதத்தில் இருக்கிறதே என்று யோசிக்கிறீர்களா, கதையைப் படித்தவுடன் நீங்களே இந்த தலைப்புதான் இதற்குப் பொருத்தம் என்று எண்ணுவீர்கள். இதற்கு சமமான அன்பு, ஆசை, பாசம், நேசம், காதல் என்று எத்தனை வார்த்தைகள் இருந்தாலும் இத்தம்பதியரின் அந்நியோன்யத்தைப் ‘பிரியத்’தைத் தவிர வேறு எதனாலும் பறை சாற்ற முடியாது என்று நீங்களும் உணர்வீர்கள்.

‘கல்யாணமாம் கல்யாணம் 60 ஆம் கல்யாணம்’ என்று 20 வருடங்களுக்கு முன் 60 ஆம் கல்யாணம் முடிந்து, இதோ 10 நாட்களுக்கு முன் 80 ஆம் கல்யாணமும் ஆயிற்று அந்த தம்பதியினர் பார்வதி சங்கரனுக்கு. பெண், பிள்ளைகள் கல்யாணம் ஆகி தம்தம் குழந்தைகளோடு அமெரிக்காவில் உள்ளனர். இவர்கள் இருவரும் தற்போது சின்னதொரு வீட்டில் சிறிய சிறிய பூந்தொட்டிகளுடனும், அளவான சமையலுடனும் இரண்டாவது தனிக்குடித்தனம் நடத்திக் கொண்டிருந்தனர். மெதுவாக கோவிலுக்குச் செல்வதும், தம்தம் காரியங்களைத் தாமே செய்து கொள்வதுமாக நாட்களைக் கடத்திக் கொண்டிருந்தனர் .

அந்த வீட்டிற்குப் பக்கத்து வீட்டிற்குப் புதிததாக மணமுடித்த தமபதியினர் சதீஷும் ஹேமாவும் குடித்தனம் வந்தனர். துணி உலர்த்தும் போது பார்த்து பரிச்சயம் ஆன இந்த மூத்த தம்பதியினரின் பரிவும், பேச்சும், அக்கறையும் இவர்கள் இருவருக்கும் மிகவும் பிடித்துப் போய் விட்டன. அப்பப்ப கேரள ஸ்டைல் எரிசேரி, காளான், ஓலன் என்று சதீஷுக்குப் பிடித்த சமையல் ஐட்டங்களை பார்வதியிடமிருந்து கற்று வந்து ஹேமா சமைப்பாள். இப்படி அவர்களின் நட்பு நாளொரு மேனியும் பொழுதொரு சமையலுமாக வளர்ந்து வந்தது.

பார்வதி ஒரு நாள் சாயந்திரம் காபி குடிக்க சதீஷையும், ஹேமாவையும் அழைத்தார். காபி அருந்தி விட்டுக் கொஞ்ச நேரம் அளவளாவிக் கொண்டிருந்து விட்டு இவர்கள் இருவரும் வீட்டிற்கு வந்தனர். இதில் இரண்டு தம்பதியினர்க்கும் சுவாரஸ்யம் ஏற்படவே இப்பழக்கம் தொடரலாயிற்று.

சதீஷ் தினமும் காபி சாப்பிடும் நேரத்தில் ஒரு காட்சியைக் கவனித்தான். பார்வதி காபி குடுவையைக் கொண்டு வருவதும், அதைத் திறக்க முடியாமல் திணருவதும், தன் கணவர் சங்கரனை விட்டுத் திறக்கச் சொல்வதுமாக இருந்தாள். சதீஷுக்குத் தன் அம்மா நினைவு வரவே, அந்தப் பெண்மணியின் கஷ்டத்தைப் போக்க நினைத்தான். அந்தக் குடுவையை எளிதாகத் திறக்க ஒரு ஸ்பேனர் மாதிரி பொருளை வாங்கி வந்து அவர் கணவருக்குத் தெரியாமல் பார்வதியிடம் கொடுத்து ‘நீங்கள் என அம்மா மாதிரி. தினமும் குடுவையைத் திறக்கக் கஷ்டப்படுகிறீர்கள். இதன் உதவியால் திறந்து பாருங்கள். உங்கள் கஷ்டம் தீரும்’ என்று ஆதரவாகக் கூறினான். அதைக் கேட்டு பார்வதி ஒரு சிறு புன்முறுவலுடன் அதனை ஏற்றுக் கொண்டாள்.

ஆனால் இது என்ன! மறு நாள் பழையபடியே பார்வதி தன் கணவரை விட்டு குடுவையைத் திறக்கச் சொல்வதைப் பார்த்து சதீஷ் ஆச்சர்யப்பட்டான்! ஏன் நான் வாங்கிக்கொடுத்த ஸ்பேனர் சரியில்லையா அல்லது அவர்களுக்கு அதை உபயோகப்படுத்தத் தெரியவில்லையா என்று யோசித்தான். பார்வதி உள்ளே சென்றவுடன் இவனும் பின்னாலயே சென்று ‘ஏன் அம்மா ஸ்பேனர் சரியில்லையா, ஏன் அதை உபயோகப்படுத்தவில்லை’ என்று வினவினான். அதைக் கேட்டு பார்வதி ‘கண்ணா, நீ என மீது இவ்வளவு அக்கறையும் பரிவும் காட்டுவதற்கு நன்றி. என்னால் எதன் உதவியும் இல்லாமல் இந்தக் குடுவையைத் திறக்க முடியும்’ என்று சிறிது நிறுத்தினாள். அதைக் கேட்டு ஆச்சரியம் அடைந்த சதீஷ் ‘அப்ப ஏன் மறுபடியும் உங்கள் கணவரையேத் தொந்தரவு செய்கிறீர்கள்’ என்று கண்கள் விரிய, புருவம் சுருங்கக் கேட்டான். அதற்கு பார்வதி சொன்ன பதில் அவனை வியப்பின் எல்லைக்கே கொண்டு சென்றது. ‘ மகனே, என்னால் முடியாமல் நான் அவரிடம் செல்லவில்லை. இந்த மாதிரி அவரைக் கேட்பதால் அவர் மனத்தில் நான் இன்னமும் அவரைச் சார்ந்திருப்பது போலும், அவரில்லாமல் என்னால் இயங்க முடியாது என்றும், என வாழ்வின் ஆதாரம் அவர், இந்தக் குடும்பத்தின் தலைவர் அவர் என்ற உணர்வு அவர் மனதை விட்டு நீங்காதிருக்கவும் தான் நான் அவ்விதம் நடந்து கொள்கிறேன்’ என்றார். இதைக் கேட்ட சதீஷ் கண்கள் பணிக்க, மனம் நிறைக்க வியந்து மகிழ்ந்து வீடு திரும்பினான்.

பின்னால் வந்து கொண்டிருந்த சங்கரன் அவர்கள் இருவரும் அறியா வண்ணம் இதைக் கேட்டு விட்டு தனக்குள் சிரித்துக்கொண்டே ‘எனக்காகத்தான் பார்வதி இவ்வாறு நடந்து கொள்கிறாள் என்பது நான் மட்டுமே அறிந்த ரகசியம். அவள் மனம் கோணாதவாறு நானும் நடந்து கொள்வேன்’ என்று மனத்தில் நினைத்துக் கொண்டார்.

இவர்களது இத்தனைக்  கால வாழ்வின் இயல்பு ஒருவரைஒருவர் சார்ந்திருக்கும் இந்தப் ‘பிரியமே’ என்று புலனாகிறது அல்லவா!

 

இளநீர் – தீபா மகேஷ்.

பைசாவா சேத்தாலே ஒன்னும் காணல! இதுல இளநீரை டெய்லி குடிக்க முடியுமா? | படக் கட்டுரை | வினவு

 

சித்திரை மாதத்து வெயிலின் உக்கிரம் அந்த ஞாயிறு பிற்பகல் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது.

ஒரு வாரம் அலுவலக வேலையாய் வெளிநாடு சென்று விட்டு அன்று அதிகாலைதான் சென்னை திரும்பியிருந்தேன். அதனாலேயே என்னவோ வெய்யில் அதிகமாக இருப்பது போல தோன்றியது.

அந்த பயணத்தின் அலுப்பும், அசதியும் உடலில் இன்னும் நிறைய மிச்சம் இருந்தது. கண்களில் கூட லேசான எரிச்சல்.

வந்தவுடன் ஒரு நல்லெண்ணைக் குளியல் போட்டிருக்கலாம். சோம்பேறித்தனம்.

கண்டிப்பாக இன்று இளநீராவது குடிக்க வேண்டும்.

நான் ஒரு இளநீர் பைத்தியம். எல்லாருக்கும் ஏதாவது ஒரு பொருளின் மேல் இருக்கும் பற்றும் பைத்தியமும் எனக்கு இளநீர் மேல்.

மழை நாட்கள், குளிர் காலம் (அது எங்கு சென்னையில் இருக்கிறது?) தவிர, நான் சென்னையில் இருக்கும் பெரும்பாலான நாட்களில் இளநீர் குடிக்கத் தவறியது இல்லை.

கோடைக் காலம் என்றால் கேட்கவே வேண்டாம். தினம் ரெண்டு இளநீராவது குடித்து விடுவேன்.

எனக்கு நினைவு தெரிந்து முதலில் இளநீர் குடித்தது ஸ்கூல் படிக்கும் போதுதான். அப்போது எனக்கு மஞ்சள் காமலை வந்திருந்தது. தினமும் காலையில் அப்பா என்னை தி நகரில் இருக்கும் டாக்டரிடம் மருந்து சாப்பிட அழைத்துப் போவார்.

கசப்பான அந்த கஷாயத்தை குடித்து விட்டு திரும்பும்போது, என்னை சமாதானம் செய்யும் விதமாக பனகல் பார்க் அருகில் இருக்கும் இளநீர்க்காரனிடம் தினமும் இளநீர் வாங்கித் தருவார்.

“தண்ணி காயா ரெண்டு இளநீர் குடுப்பா”, என்று கேட்டு, ஒன்றை எனக்கு வெட்டி தரச் சொல்வார். நான் மிகுந்த ஆவலோடு அவன் அதை வெட்டுவதையே பார்த்துக் கொண்டிருப்பேன். அவன் காயின் மேல் பாகத்தை சீவி அதில் ஒரு ஸ்ட்ரா போட்டுத் தரும் போது ஏதோ ஆஸ்கார் அவார்ட் வாங்குவது போல நான் கை நீட்டுவேன். அந்த இளநீர் பூராவும் எனக்குத் தான் என்பதில் எனக்கு அலாதி சந்தோஷம்.

“இளநீர் உடம்புக்கு ரொம்ப நல்லதுமா. ரத்தத்த சுத்தம் பண்ணும். உடம்ப குளிர்ச்சியாக்கும்”, என்று அவருக்குத் தெரிந்த இயற்கை மருத்துவத்தை சொல்லுவார். எனக்கு அதைப் பற்றி எல்லாம் பெரிதாக அக்கறை இல்லை. ஆனால், இளநீர் நீரின் சுவை தொண்டை வழியே உள்ளே போக உடம்பெல்லாம் ஒரு புத்துணர்ச்சி பரவுவது போல தோன்றும்.

வீட்டில் உள்ள மற்ற எல்லாருக்கும் அந்த இன்னொரு காயில் இருக்கும் தண்ணீர் தான், பாவம், என்று நினைத்துக் கொள்வேன்.

இளநீரை பாட்டிலில் வாங்கி வந்து ஃப்ரிட்ஜ்ல் வைத்துக் குடிப்பதில் எல்லாம் எனக்கு உடன்பாடில்லை. சில மாதங்களுக்கு முன்னால் அமெரிக்கா போன போது அங்குள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் ‘கோகநட் வாட்டர்’ என்று அழகாக பேக் செய்து வைத்திருந்தார்கள். ஏன் நம் ஊரில் கூட இப்போது இளநீர் பேக் செய்து பாட்டிலில் வந்து விட்டது. ஆனால், ஏனோ அதை வாங்க மனம் ஒப்பவில்லை.

பாண்டி காய், பொள்ளாச்சி காய், செவ்வெளநீர் என்று நமக்கு இப்போது ‘சாய்ஸ்’ அதிகம். மேலும், நம் ஊரில் இளநீர் வாங்கி குடிப்பதே ஒரு தனி அனுபவம்.

“நல்ல தண்ணி காயா லேசா வழுக்கையோட குடுங்க,” என்று கேட்டு வாங்கி, கடைக்காரர் அதை அழகாக மேல் பக்கம் சீவி, லாவகமாக நடுவில் நெம்பி துளை போட்டுத் தரும் அழகை ரசித்துக் குடிக்க வேண்டும்.

நான் இளநீர் ஸ்ட்ரா போட்டு குடிப்பதை நிறுத்தி பல வருடங்கள் ஆகி விட்டது. ஸ்ட்ரா ப்ளாஸ்டிக் பொருள், சுகாதாரம் கிடையாது என்று காரணம் எல்லாம் தாண்டி, இளநீரை இரு கைகளில் பிடித்து, அதன் வாயோடு வாய் வைத்து, கடைசி சொட்டு வரை ரசித்துக் குடிப்பதில் ஒரு தனி சுகம் இருக்கத்தான் செய்கிறது.

இளநீர் கனவில் மூழ்கி இருந்தவளுக்குத் தாகம் அதிகமாகி எடுத்து ஏதாவது குடித்தால் தேவலை என்று தோன்றியது.

ஜில்லென்று கொஞ்சம் பானைத் தண்ணீர் குடித்தேன்.

டீ வி பார்த்துக் கொண்டிருந்த மகனிடம், ‘டேய், அம்மாக்கு இளநீர் வாங்கிட்டு வாடா’ என்றேன்.

அட போம்மா, உனக்கு வேற வேலை இல்லை என்பது போல என்னைப் பார்த்தான். ‘என்னால போக முடியாது, அப்பாவ போக சொல்லு,’ என்று அவரைக் கோர்த்து விட்டான்.

இதுதான் பிள்ளைகளின் சாமர்த்தியம். அவர் பாவமாக என்னைப் பார்த்தார்.

“கொஞ்ச நேரம் கழிச்சு டூ வீலெர்ல போய்ட்டு வரலாம்.  இப்ப வேணாம். ரொம்ப வெயிலா இருக்கு,” என்றார்.

இது நடக்கும் கதையாக எனக்குத் தோன்றவில்லை. ‘தெருமுனைதானே, நானே நடந்து போய் குடிச்சிட்டு வரேன்’, என்று வீம்பாக கிளம்பினேன்.

தெருவில் இறங்கி நடக்க ஆரம்பித்ததும் வெயில் கொஞ்சம் குறைந்திருப்பது போல தோன்றியது. காற்று கூட கொஞ்சம் அடித்தது.

நிழலில் நிறுத்தியிருந்த கார்களையும் என்னையும் தவிர தெரு வெறிச்சோடி இருந்தது.

எங்கள் தெருவின் இரு பக்கமும் நெடிந்து வளர்ந்து கிளை பரப்பியிருந்த குல்மொஹர் மரங்கள், சாலை முழுதும் மஞ்சள் பூக்களை இறைத்திருந்தன.

அவற்றை மிதிக்க மனமில்லாமல் சாலையின் நடுவில் நடந்தேன்.

தெரு முனையை நெருங்கும் போதே ஏமாற்றம் காத்திருந்தது.

எப்போதும் இருக்கும் இளநீர் வண்டி அங்கில்லை.

ஞாயிற்று கிழமை கூட இருப்பானே, ஏன் காணோம்? ஊருக்குப் போயிருப்பானோ? அவன் ஊரில் இல்லை என்று இவருக்கு முன்னாடியே தெரியுமோ? அதனால்தான் டூ வீலர்ல போலாம்னு சொன்னாரோ? என்றெல்லாம் யோசித்தபடி எனது அவசர குடுக்கைத்தனத்தை நானே திட்டிக் கொண்டேன்.

ஆனாலும் ‘இளநீர் தாகம்’ விடுவதாய் இல்லை. என்ன ஆனாலும் சரி. எவ்வளவு தூரம் நடந்தாலும் சரி. இன்று இளநீர் குடித்துவிட்டுதான் மறுவேலை, என்று முடிவு செய்துக் கொண்டேன்.

மெயின் ரோடில் கோயில் எதிரே ஒரு இளநீர்கடைக்காரர் இருப்பது நினைவுக்கு வந்தது.

இன்னும் கொஞ்சம் நடந்தால் அங்கே போய் குடிக்கலாம் என்று என்னை நானே உற்சாகப்படுத்திக் கொண்டு மறுபடியும் நடக்கத் தொடங்கினேன்.

மெயின் ரோடில் வெய்யில் அதிகமாகத் தெரிந்தது. வாகனத்தில் போய் பழக்கப்பட்ட அந்த ரோடில் நடக்கும் போது ரொம்ப தூரம் நடப்பது போல் தோன்றியது.

கொஞ்ச நேரத்திற்கெல்லாம் இது என்ன முட்டாள்த்தனமான பிடிவாதம் என்று தோன்ற ஆரம்பித்தது.

ஒரு வேளை அந்த கடையும் இல்லை என்றால்? இந்த வெய்யிலில் இவ்வளவு தூரம் நடப்பது ரொம்ப அவசியமா, அதுவும் ஊரிலிருந்து வந்தவுடனே? ஒரு நாள் இளநீர் குடிக்காவிட்டால் என்ன ஆகிவிடும்? என்றெல்லாம் என் சுய விமர்சனம் தொடர்ந்தது.

நல்ல வேளை தூரத்தில் கோவிலுக்கு எதிரே ஒரு பெரிய மரத்தின் நிழலில் இளநீர்க் கடை இருப்பது தெரிந்தது.

சட்டென்று நடையில் ஒரு சுறுசூறுப்பும் உற்சாகமும் வந்து ஒட்டிக்கொண்டன.  

ஒரு பெரிய தள்ளுவண்டி முழுதும் பெரிதும் சிறிதுமாய் காய்கள். வண்டிக்கு அருகில் ஒரு ப்ளாஸ்டிக் சேரில் கடைக்காரர்.

ஒரு அழுக்கான கரையேறிய லுங்கியில் தன்னுடைய பருத்த சரீரத்தை மறைத்திருந்தார். அவரது கண்கள் மூடி, வாய் லேசாக திறந்திருந்தது. நல்ல தூக்கத்தில் இருந்தார்.

அவர் மூச்சின் சீரான தாளத்திற்கேற்ப அவரது வயிறு மேலும் கீழும் ஏறி இறங்கியது.

வெப்பமோ, வாகனங்களின் இரைச்சலோ அவரை தொந்திரவு செய்ததாக தெரியவில்லை.

ஐயா என்று அழைத்து அவரை எழுப்பலாமா என்று தோன்றிய யோசைனையை சட்டென்று மாற்றிக் கொண்டேன்.

இந்த வெயிலில், சத்தத்தில் இப்படி தூங்குகிறார் என்றால் எவ்வளவு களைப்பு இருக்க வேண்டும். பாவம் என்ன அசதியோ, இரவு தூங்காமல் வேலைப் பார்த்தாரோ என்னவோ? யாருக்குத் தெரியும் இவர்களுடைய உழைப்பும், வாழ்க்கையும்?

என் மனம் தனக்குத் தெரிந்த விதத்தில் அவருடைய வாழ்க்கையைக் கற்பனை செய்து கொண்டது.

அவர் நிம்மதியாக தூங்குவதைப் பார்த்து ரசித்தபடியே, இளநீர் குடித்தத் திருப்தியோடு வீட்டை நோக்கி நடக்கத் தொடங்கினேன்.

 

இறையருள் – எஸ் கண்ணன்

அவர் தமிழகத்தில் ஒரு பிரபலமான சாமியார்.

அவருடைய பெயர் ஸ்ரீ ஸ்ரீ பாபா சங்கர். வயது அறுபது.

தக்காளிப்பழ நிறத்தில் நீண்ட தாடியுடன்; கோல்ட் ப்ரேம் கண்ணாடியில் தள தளவென இருப்பார்.

அவர் சென்னையில் நேற்று ஒரு ஆன்மீக சத்சங்கத்தில் ஈடு பட்டுக் கொண்டிருந்தபோது திடீரென மார்பு வலி ஏற்பட்டு அப்பல்லோ ஹாஸ்பிடலில் அனுமதிக்கப் பட்டார்.

செய்தியைக் கேள்விப் பட்டவுடன் தமிழகமே பதறியது.

அவருக்கு உடனே ஆஞ்சியோகிராம் செய்யப்பட்டது. அவரைப் பரிசோதித்த டாக்டர் அவருக்கு இதயத்தில் 80% அடைப்பு இருப்பதைக் கண்டுபிடித்து, உடனே பை-பாஸ் சர்ஜரி செய்யவேண்டும் என்றார்.

பை-பாஸ் சர்ஜரி இல்லாமல் தனக்கு ஆஞ்சியோ பிளாஸ்ட் மட்டும் செய்யும்படி சாமியார் டாக்டரிடம் கெஞ்சினார். டாக்டர் அது அவருக்கு பலனளிக்காது என்பதை விளக்கிச் சொன்னபிறகு;  “எல்லாம் பகவத் சங்கல்பம்” என்று கைகளைக் கூப்பினார்.  கடைசியில் நீண்ட யோசனைக்குப் பிறகு சர்ஜரி செய்து கொள்வதற்கு சாமியார் ஒப்புக் கொண்டார்.

விஷயத்தைக் கேள்விப்பட்ட அவருடைய பக்தர்கள் மிகக் கவலையடைந்தனர். பை-பாஸ் சர்ஜரி நல்லபடியாக நடக்க வேண்டுமே என எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொண்டனர்.

Free Old People Cartoon, Download Free Clip Art, Free Clip Art on Clipart Library

சர்ஜரிக்கு முந்தைய நாள் சாமியாருக்கு உடம்பிலுள்ள மயிர்கள்  அனைத்தும் மழிக்கப்பட்டு அவரை சிகிச்சைக்குத் தயார் செய்தனர். . நீண்ட தாடியை இழக்க நேரிட்ட சாமியார் மொழுக்கென மிகவும் வித்தியாசமாக காணப்பட்டார். இரவு தூங்கும்முன் அவருக்கு எனிமா கொடுக்கப்பட்டு வயிற்றை காலியாக்கினர்.

சர்ஜரிக்கு குறைந்தபட்சம் நான்கு லட்சம் ஆகும் என்று டாக்டர்களால் எஸ்டிமேட் தரப் பட்டது. சாமியாரும் அதற்கு ஒப்புக் கொண்டார்.

எனினும் பை-பாஸ் சர்ஜரி என்பதால், அவருக்கு உள்ளூர மரண பயம் . தொற்றிக்கொண்டது. மிகவும் பயந்தபடியேதான் ஆப்பரேஷன் தியேட்டருக்குள் சக்கர நாற்காலியில் நுழைந்தார்.

ஆபரேஷன் நல்லபடியாக நடந்து முடிந்தது.

சாமியார் மிகுந்த சந்தோஷமடைந்தார்.

இரண்டு நாட்கள் சாமியார் ஐசியூவில் பாதுகாக்கப் பட்டார்.

அவரை டிஸ்சார்ஜ் செய்யும் முன், சாமியாரிடம் மருத்துவ மனையின் பொறுப்பான அதிகாரி ஒருவர் எட்டு லட்ச ரூபாய்க்கான டோட்டல் பில்லைக் கொடுத்தார்.

அந்தப் பில்லை வாங்கிப் பார்த்த சாமியார் பெரிதாக அழ ஆரபித்துவிட்டார். அவரின் அழுகையை மருத்துவ அதிகாரியினால் எவ்வளவோ முயன்றும் கட்டுப்படுத்த முடியவில்லை.

“சாமி… அழாதீர்கள். நான்கு லட்சத்திற்கு எஸ்டிமேட் கொடுத்தோம் என்பது உண்மைதான். ஆனால் தற்போது எட்டு லட்சம் வரை ஆகிவிட்டது. நான் எங்களின் சிஈஓவிடம் பேசிப் பார்க்கிறேன். அவர் கண்டிப்பாக மொத்தத் தொகையைக் குறைப்பார்…”

“அட போய்யா… எட்டு லட்சம் என்ன… இந்த உலகிற்கு என்னை மறுபடியும் மீட்டுத் தந்த இந்த ஹாஸ்பிடலுக்கு எண்பது லட்சமே என்னால் இப்போது தரமுடியும்…. ஆனால் அறுபது வருடங்களாக என் இதயத்தைப் பாதுகாத்த இறைவன் இதுவரை ஒரு ரூபாய்க்குகூட என்னிடம் பில்லை நீட்டவில்லையே… இத்தனை வருடங்களாக நான் இதை உணரக்கூட இல்லை. இப்போது அதை உணர்ந்துகொண்டதும் என்னால் என் அழுகையை கட்டுப் படுத்த முடியவில்லை…”

“………………………………”

“நான்கு மணிநேரங்கள் மட்டும் என் இதயத்தை கிழித்துப் பார்த்து தையல் போட்டுத் தைத்துவிட்ட உங்களுக்கு எட்டு லட்ச ரூபாய். ஆனால் அந்த எல்லாம் வல்ல இறைவன் என்னை இதுகாறும் 525,600 மணி நேரங்களுக்கும் மேல் பாதுகாத்திருக்கிறான். பதிலுக்கு அவனுக்கு நான் என்ன செய்தேன்? அவனின் கருணையையும்; அன்பையும் நினைத்துப் பார்க்கையில் எனக்கு பரவசம்தான் ஏற்படுகிறது…”

“ஆமாம் சாமி தாங்கள் கூறுவது உண்மைதான். நம் எல்லோருக்கும் இது பொருந்தும்…”

“இறைவனின் அருட்கொடைக்கு நிகர் இறைவனே… நாம்தான் நன்றி கெட்டவர்களாக இப்பூவுலகில் வாழ்கிறோம்…நம்மிடம் எந்த எதிர்பார்ப்புமே இல்லாமல்; நம்மை எப்பொழுதும் கண்ணும் கருத்துமாக பத்திரமாகப் பாதுகாப்பவர், அன்பே உருவான இறைவன் மட்டுமே.”

“நன்றாகச் சொன்னீர்கள் சாமி…”

“நமக்கு கிடைத்த இந்த நல்ல வாழ்க்கை எத்தனை பேருக்கு கிடைக்கவில்லை என்பதை உணர்ந்தால்,  நாம் இறைவனுக்கு நன்றி சொல்ல மட்டுமே தினமும் கோவிலுக்குச் செல்லுவோம்…”

சாமியார் அன்றே மொத்தத் தொகையான எட்டு லட்ச ரூபாயைக் கொடுத்துவிட்டு சந்தோஷத்துடன் ஹாஸ்பிடலை விட்டு வெளியேறினார்.

உயிருடன் முழுதாக மீண்டு வந்த சாமியார் மிகவும் மாறிப்போனார். அதன்பிறகு சாமியாரே வாழ்வின் தாத்பரியங்களைப் பற்றிய பல உண்மைகளை தனக்குள் உணர்ந்துகொண்டார். ஏழைகளின் நல் வாழ்விற்காக பல நல்ல காரியங்களுக்கு நிறையப் பணம் கொடுத்து உதவினார். அது தவிர, பல கல்வி நிறுவனங்களைத் தொடங்கி, நன்கு படிக்கும் ஏழை மாணவர்களுக்கு அதில் முன்னுரிமை கொடுத்து அவர்களை முன்னேறச் செய்தார். கல்வி ஒன்றுதான் மக்களை முன்னேறச் செய்ய ஒரேவழி என்பதை உலகிற்குப் புரிய வைத்தார்.

சேவை மனப்பான்மையை மட்டுமே தன் மனதில் குவித்து, அதைத் திறம்பட செயலில் காட்டி, மக்களிடம் மேலும் நிறைய மரியாதையை சம்பாதித்துக் கொண்டார்.

 

பால்கார வாத்தியாரு -வளவ. துரையன்

கர்நாடகா மாநிலத்தில் 384 ஆலமரங்களை நட்டு வளர்த்துள்ள 103 வயது சூப்பர் பாட்டி!

     பொழுது விடிந்தும் விடியாதது போல இருந்தது. முருகன் எழுந்திருக்க மனமின்றி படுத்துக் கிடந்தான். உடலோடு உள்ளமும் சோர்வாக இருந்தது. அம்மா வாசலில் சாணம் தெளிக்கும் சத்தம் கேட்டது. தோட்டத்தில் சேவல் குரலெடுத்துக் கூவியது. காகங்கள் கரையும் சத்தம் தெளிவாகக் கேட்டது.

      முருகன் எழுந்து வாசலில் திண்ணையில் உட்கார்ந்தான். அம்மா கோலம் போட்டுவிட்டுப் பால் கறக்கப் போய்விட்டாள். அம்மா போடும் கோலம் மிக அழகாக இருக்கும்.  இனி அவள் உலகம் தொடங்கி விட்டது. நான்கு மாடுகளில் பால் கறந்து அதைக் கொண்டுபோய்ப் பல வீடுகளில் கொடுத்துவிட்டு வந்து இவனைப் பள்ளிக்கு அனுப்பும் வேலைகளில் ஈடுபடத் தொடங்கி விடுவாள். சமையலை முடித்து முருகனுக்கும் சாப்பாடு எடுத்து வைத்துவிட்டு மாடுகளையும் ஆடுகளையும் மேய்க்கப் போய்விட்டாளானால் இவன் பள்ளிவிட்டு வருவதற்குள் வந்து விடுவாள்.

      பாலைக் கறந்து எடுத்துக் கொண்டு வந்தவள் முருகனைப் பார்த்து ”ஏன் தம்பி ஒக்காந்துகிட்டு இருக்கே, போய் பல்லு வெளக்கிட்டு வா, காப்பித் தண்ணி வச்சு குடுக்கிறேன்” என்று சொல்லி விட்டு உள்ளே போனாள்.

      முருகன் எழுந்து தோட்டத்திற்குப் போனான். அங்கே வீடு கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. இன்னும் வெள்ளை அடிக்க வேண்டியதுதான் பாக்கி. கிணற்றிலிருந்து நீர் இறைத்துப் பல் தேய்த்து முகம் கழுவியபின் சற்றுப் புத்துணர்ச்சி வந்ததுபோல் இருந்தது. 

      முருகா, ”காப்பியைக் குடி, பாலைக் கொண்டுபோய்க் குடுத்துட்டு வந்துடறேன்” என்று சொல்லிவிட்டு அம்மா போவது தெரிந்தது. பள்ளிக்குப் போகவேண்டுமே என்று முருகன் கவலைப் பட்டான். முதல் நாள் பள்ளிக்குப் போனபோது இருந்த புத்துணர்ச்சியெல்லாம் எங்கே போனதென்று தெரியவில்லை.

      தான் படித்த பள்ளியிலேயே அதுவும் படித்த தலைமையாசிரியர் கீழேயே வேலை பார்ப்பது என்பது முருகனுக்கு முதலில் மிகவும் உற்சாகமாக இருந்தது.  அந்தத் தனியார் உயர்நிலைப் பள்ளி அந்த வட்டாரத்திலேயே மிகவும் புகழ் பெற்றது. படிப்பிலும் விளையாட்டிலும் முதன்மையாய் இருந்த பள்ளி அது. ஓரிருவர் தவிர அனைவருமே உள்ளூர் ஆசிரியர்கள்தாம். அதனால் முருகனைப் பற்றி எல்லார்க்கும் நன்றாகத் தெரிந்திருந்தது. அதுவே அவனுக்கு பலமாகவும் பலவீனமாகவும் இருந்தது. 

      தமிழாசிரியாரகப் பொறுப்பேற்ற இந்த இரண்டு ஆண்டுகளிலேயே அவனது ஆளுமையால் முருகன் அனைவரையும் கவர்ந்து விட்டான். ஒவ்வொரு நாளும் இறைவணக்கத்தில் ஒவ்வோர் ஆசிரியர் மாணவர்க்கு அறிவுரை கூறி உரையாற்றும் வழக்கம் அங்கிருந்தது. முருகன் பேசுகிறான் என்றால் அனைவரும் கூர்ந்து கவனித்து வந்தனர்.

      இருந்தாலும் உள்ளூர் ஆசிரியர்கள் சேதுமாதவன், கோபாலன் போன்றவர்களின் போக்கு இன்னமும் அவனுக்குப் பிடிபடாத புதிராகவே இருந்தது. முதல் நாளே மதிய இடைவேளையில் சாப்பிடும் போது கோபாலன் கேட்டான். “பால்காரர் என்னா சாப்பாடு கொண்டாந்திருக்காரு?”

      பெரும்பாலும் எல்லாருமே மதிய உணவை எடுத்துக் கொண்டு வந்துவிடுவது வழக்கமாக இருந்தது. அதுவும் முருகனின் அம்மா ஆடு மாடு மேய்க்கச் செல்வதால் அவன் காலையில் வரும்போதே எடுத்து வந்து விடுவான்.

      காதில் விழாதவாறு முருகன் இருக்க கோபாலன் அதே கேள்வியை மறுபடியும் கேட்டான். வந்த கோபத்தை அடக்கிக் கொண்ட முருகன், ”என்பேரு முருகங்க, அதைச் சொல்லிக் கூப்பிடுங்க” என்றான். ”சரி, வெளையாட்டுக்குச் சொன்னேம்பா. என்னா கொண்டாந்திருக்கே? சொல்லு”

      ”தயிர் சோறுதான்”என்றான் முருகன் வருத்தமான குரலில்.

      பதிலுக்கு அங்கே உட்கார்ந்திருந்த சேதுமாதவன் ”அதானே பார்த்தேன், ஒங்க வீட்ல பாலுக்கும் தயிருக்கும் பஞ்சமா? தெனம் பால் தயிர்தானே?” என்றார் கிண்டல் குரலில். முருகன் பதில் சொல்லிப் பிரச்சினையை வளர்த்த விரும்பாமல் சாப்பிட்டு முடித்தான்.

      ”இப்படியும் மனிதர்கள் இருப்பார்களா” என்று முருகன் நினைத்தான். அவன் நினைத்தது சரிதான் அந்த மனிதர்கள் மறைமுகமாக பல பிரச்சனைகளை உருவாக்கினார்கள். முருகன் சும்மா இருந்தாலும் சீண்டிப் பார்த்தார்கள். அவனது வளர்ச்சியை அவன் பெரும் புகழைப் பார்த்துப் பொறமைப் பட்டார்கள். நேற்றுதான் அவனுக்குத் தெரியாமல் அந்த விஷ விருட்சம் மிகப் பெரியதாக வளர்ந்திருப்பதைத் தெரிந்து கொண்டான்.

      வகுப்பில் நுழையும்போது யாரோ ஒரு மாணவனின் குரல் ”டேய், பால்கார வாத்தியாரு வராருடா” என்று சொன்னது முருகன் காதில் விழுந்தது. அவனுக்குக் கோபம் வரவில்லை. இச் சூழலின் வேர் எங்கிருக்கிறது எனத் தெரிந்து கொள்ள விரும்பினான். எனவே சிரித்துக் கொண்டே ”யார்ரா அது சொன்னது” என்று கேட்டான். யாருமே பதில் பேசவில்லை.

      ”பயப்படாமே சொல்லுங்கடா, ஒண்ணும் செய்ய மாட்டேன், தைர்யமா சொல்லுங்கடா” என்று முருகன் மீண்டும் கேட்க ,”ஐயா, கண்ணாயிரம்தான் சொன்னான்” என்றான் ஒரு மாணவன். உடனே சிரிப்பு மாறாமல் முருகன் கண்ணாயிரத்தைப் பார்த்து, “என்னா கண்ணாயிரம்” என்றான்.

      எழுந்து நின்ற கண்ணாயிரம் பேசாமல் இருந்தான். அவன் முகத்தைப் பார்த்தால் அழுது விடுவான்போல் இருந்தது. முருகன் அவனைப் பார்த்து ”ஏம்பா தமிழ் வாத்தியார்னு சொல்லியிருக்கலாம்ல” என்றான்.

      ”இல்லிங்கய்யா தவறிப் போய் வந்திட்டுது” என்று அவன் பதில் சொல்ல வேறொருவன் எழுந்து ‘இல்லிங்கய்யா, கணக்கு வாத்தியார் சொல்லச் சொல்ல அதுவே பழக்கமாயிடுச்சி” என்றான். ”கணக்குக்கு யாரு,சேதுமாதவனா?” என்று கேட்டான் முருகன். கண்ணாயிரம் சொன்னான் ”ஆமாங்கய்யா, தெனமுமே தமிழ் வகுப்புக்கு முன்னாலே கணக்குதாங்கய்யா, அவர் கெளம்பிப் போகச்சே “அடுத்த வகுப்பு யார்ரா? பால்கார வாத்தியாரா”ன்னு கேட்டுட்டுதான் போவாரு.

      முருகனுக்கு முகத்தில் அறைவதுபோல் இருந்தது. மனம் மிகவும் கனமாகியது. ஆத்திரமும் கோபமும் சேர்ந்து வந்தன. தலைமை ஆசிரியரிடம் போய்ச் சொல்லலாமா, சொன்னால் என்ன ஆகும்? மாணவர்களுக்கு ஏதாவது பாதிப்பு வருமா” என்றெல்லாம் நினைத்தான். அப்படியே நாற்காலியில் உட்கார்ந்து விட்டான். ஒரு நொடிதான், அதற்குள் தன்னைச் சுதாரித்துக் கொண்டு முகத்தைச் சாதாரண நிலைக்குக் கொண்டு வந்து விட்டான். “சரி செய்யுள் பகுதியை எடுங்கள்” என்று கூறினான்.              ”என்னடா தம்பி ரெண்டு இட்லியைப் பாத்துக்கிட்டே ஒக்காந்துக்கிட்டு இருக்கே? காலையிலேந்தே ஒரு மாதிரியாயிருக்கே?” என்றாள் அம்மா. பதில் பேசாமல் ஒரு இட்லியை எடுத்து விண்டு வாயில் போட்டுக் கொண்டான். ”என்னடா முருகா,ஒடம்பு கிடம்பு சரியில்லியா?” என்று கேட்ட அம்மாவிடம் முருகன் பட்டென்று கேட்டான். “ஏம்மா நீ இந்த பால் வியாபாரத்தை உட்டுட்டா என்னா?”

      அவன் அம்மாவுக்கு இந்தக் கேள்வி ஆச்சரியமாக இருந்தது. ”என்னடா திடீர்னு இப்படிக் கேக்கறே?” சிரித்துக் கொண்டே கேட்டாள் அவள். ”இல்லம்மா, எனக்கும்தான் கை நெறய சம்பளம் வருது. பின்னால ஊடும்தான் ஓரளவிற்கு முடிஞ்சு போச்சு, இன்னும் ஏம்மா நீ கஷ்டப்படணும்தான். நானும் ரொம்ப நாளா நெனச்சிகிட்டுதான் இருக்கேன்.” என்று வருத்தமான குரலில் சொன்னான் முருகன்.

      ”இன்னும் ரெண்டு இட்லி வச்சுக்கோ” என்று கூறியவாறே இட்லியை வைத்துவிட்டுப் பேசாமல் இருந்த அம்மாவிடம் மேலே என்ன பேசுவதென்றே தெரியவில்லை முருகனுக்கு. சற்று நேரம் ஏதும் பேசாமல் இட்லிகளைத் தின்று முடித்த அவன் தட்டில் கை கழுவிக்கொண்டே  “என்னம்மா ஒண்ணுமே பேசலே” என்றான். அவன் அம்மா பதிலுக்கு, ”எனக்கு என்னடா கஷ்டம் வழக்கமா செய்யறததுதானே? நீயும் பள்ளிக்கூடம் போனதுக்கு அப்புறம் நான் இங்க குந்திகிட்டு என்னா செய்யப் போறேன். சும்மா மோட்டுவளையைப் பாத்துகிட்டு ஒக்காராமே மாடு கன்னை மேய்ச்சுட்டு வரேன் வேறஎன்னா?” என்றாள்.

       சட்டையை மாட்டிக் கொண்டே, ”இல்லம்மா, வாணாம் இந்த பால் வியாபாரம் உட்டுடு” என்றான் முருகன். ”என்னாடா அதையே புடிச்சுகிட்டிருக்கே, என்னாச்சு ஒனக்கு? ஏன் இந்தப் பால் வியாபாரம் செய்யறதுல்ல ஒனக்கு என்னா நஷ்டம்” என்று அழுத்தமாகக் கேட்டாள் அம்மா.  ”இல்லம்மா நாமதான் இப்ப கொஞ்சம் நல்லா வந்துட்டம்ல” என்று அவன் தொடங்கியதுமே அம்மா குறுக்கிட்டாள்.

      ”என்னடா நல்லா வந்துட்டோம், ஊடு கட்டிச்சுன்னா ஆச்சா,என்னும் எவ்வளவோ இருக்குடா. அது மட்டும் இல்லடா, இது ஒரு ஒதவி மாதிரி; நல்ல பாலை எல்லாருக்கும் கொடுக்கிறோம்ல?”

      ”நாம இல்லாட்டா வேற யாராவது கொடுக்கப் போறாங்க”

      ”என்னா நீ முடிவு செஞ்சுட்ட மாதிரி பேசறே? யாராவது ஏதாச்சும் சொன்னாங்களா?

      அம்மா இதைக் கேட்டதுதான் அவன் காதில் விழுந்தது. உடனே அவன் உள்ளில் இருந்தது பட்டென்று வெளியில் வந்துவிட்டது.

      அம்மாவைப்பார்க்காமல் வேறு பக்கம் திரும்பிச் சொன்னான் முருகன்.

      ’ஆமாம்மா எல்லாரும் பால்கார வாத்தியாருன்னு மட்டம்மா பேசறாங்கம்மா”

      ”அதானே பாத்தேன் இன்னிக்கி ஒருநாளும் இல்லாத திருநாளா அதையே பேசிகிட்டு இருக்கியேன்னு நெனச்சேன்”. என்று சிரித்த முகத்துடன் பேசினாள் அவன் அம்மா.  

      ”இல்லம்மா, எல்லாரும் பேசச்சே மனசுக்கு ரொம்ப வேதனையாயிருக்கும்மா”. அவனுக்கு அழுகை வருவது போல இருந்தது. மனம் மிகவும் கனத்தது. தலைவலி வரும்போல இருந்தது. இன்று பள்ளியில் எப்படிப் பாடம் நடத்தப் போகிறோம் என நினைத்தான். அதைவிட இந்த அம்மாவுக்கு எப்படிப் புரிய வைக்கப் போகிறோம் என நினைத்தான்.

      ஆனால் அவன் அம்மா மிகவும் தெளிவாகப் பேசினாள். ”முருகா, இந்த உலகம் பொல்லாதது. நாலுபேரு நாலுவிதமா பேசத்தான் செய்வாங்க, அதையே நெனச்சுகிட்டு ஒக்காந்தா வாழவே முடியாது. நான் கேக்காத பேச்சா, பாக்காத மனுசங்களா? பேசறவங்களா நாளைக்கு வந்து ஒதவப்போறாங்க, ஒங்கப்பா ஒன்னை அஞ்சு வயசுல உட்டுட்டு அல்பாயுசில போனபோது ரெண்டு ஆடும் ரெண்டு மாடும் தான் இருந்தது. நானோ வீட்டை உட்டு வெளியே போகாத ராசாத்தி மாதிரி இருந்தேன். கொஞ்சம் கொஞ்சம்மா பழகிகிட்டு இதுங்களை மேச்சு பெரிசாக்கி ஒன்னையும் வளத்து ஆளாக்கினேன். ஏதோ நாமும் இப்ப கொஞ்சம் மனுசங்க மதிக்கிற மாதிரி வர்றதுக்கு இதுங்கதான்பா காரணம். போ, மனசைக் கொழப்பிக்காதெ, வேலையைப் பாரு”    

       அம்மா சொல்லி விட்டுப் போய்விட்டாளே தவிர முருகன் மனம் இன்னும் நிலைக்கு வரவில்லை. ஊர் முழுதும் சுற்றி விட்டு வந்தால்தானே தேர் நிலைக்கு வரும். அவன் மனம் இன்னும் சுற்றிக் கொண்டே இருந்தது. முதல் இரண்டு பிரிவுகளும் பாடம் கற்பிக்கவே முடியவில்லை. மாணவர்களுக்கு எழுத்து வேலை அதிகமாகக் கொடுத்து சமாளித்தான். இடைவேளையின்போது தலைமை ஆசிரியர் அழைப்பதாகத் தகவல் வந்தது.  

      அவரிடம் போனபோது ”முருகா, நாளை இறைவணக்கத்தின் போது நீதான் பேசவேண்டும், அதற்குத்தான் வரச்சொன்னேன் என்று கூறினார். உரையாற்றக் கூடிய மனநிலையில் அவன் இல்லை என்றாலும் அவர் சொல்லை மீற முடியாமல் அவன் ஒப்புக் கொண்டான். அவன் பேசினான்.

      ”இன்று அன்னையர் தினம். நாம் அறியும் முதல் தெய்வம் தாய்தான். அதனால்தான் அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்றார்கள். ஒவ்வொரு தாயும் தனது பிள்ளையைப் பத்து மாதம் சுமந்து பெற்றுத் தருவதோடு அவனை அல்லது அவளை வளர்த்து ஆளாக்கி ஒரு நல்ல வாழ்வு உண்டாக்கித்தர படாத பாடு படுகிறாள். அது       அநுபவித்தவர்களுக்குத்தான் தெரியும். எனக்கு அந்த அநுபவம் உண்டு ஏனென்றால் என் தாய் என்னை அப்படித்தான் மாடு மேய்த்து பால் வியாபாரம் செய்துதான் வளர்த்துப் படிக்க வைத்தாள். அதனால் என் அம்மாவின் பெயரே எல்லாருக்கும் மறந்துபோய் பால்காரம்மா என்றாகி விட்டது. என்னையும் இப்போது பால்கார வாத்தியாரு என்று அழைக்க ஆரம்பித்து விட்டனர். இப்போது அது குறித்து எனக்கு வருத்தம் ஏதும் இல்லை. ”பால்கார வாத்தியாரு” என்று என்னை அழைக்கும்போது என் அம்மாவின் உழைப்பை மதிப்பதாகவும் கௌரவப் படுத்துவதாகவும்தான் நான் நினைக்கிறேன். அப்படி உழைத்த அம்மாவுக்கு நான் மரியாதை செலுத்த வேண்டாமா”     

      இப்போது முருகன் பேச்சை சற்று நிறுத்தினான். அவன் என்ன செய்யப் போகிறான் என்று யாருக்குமே தெரியவில்லை. சட்டென்று பள்ளிக் கட்டிடத்தின் பக்கம் திரும்பி “அம்மா இங்கே கொஞ்சம் வாங்க” என்று சத்தமாகக் கூவினான். அப்போதுதான் அவன் அம்மாவும் வந்திருப்பது அனைவர்க்கும் தெரிந்தது. மரங்களுக்கிடையில் மறைந்து இருந்தவர் வெளியில் வந்தார்.  

      சாதாரண கிராமத்துப் பெண்மணியாக ஒரு நூல் புடவை கட்டியிருந்த அவர் தலை குனிந்துகொண்டே கூச்சத்துடன் வந்தார். அடுத்து முருகன் செய்ததை யாருமே எதிர்பார்க்கவில்லை.

      ”இவங்கதான் என் பால்கார அம்மா” என்று கூறிக் கொண்டே அவர் காலில் அனைவர் முன்னிலையிலும் நெடுங்கிடையாய் விழுந்தான். “தம்பி என்னா இது எழுந்திரு’ என்று கூறியவாறே அவன் அம்மா அவனைத் தூக்கினாள்.  மாணவர்களின் கைத்தட்டல் வானைப் பிளந்தது. தலைமை ஆசிரியர் கண்ணாடியைக் கழற்றிக் கண்களைத் துடைத்துக் கொண்டார்.

            —————————  ———————————-  ————————-

“போட்டி” ஜி.பி. சதுர்புஜன்

Image result for tamil actor naser and his son

 

நம்பவே முடியவில்லை.

எழுத்தாளர் ராம்நாராயணன் ‘முத்தமிழ்’ இலக்கிய இதழில் வெளிவந்திருந்த சிறுகதைப் போட்டி பற்றிய அறிவிப்பை மீண்டும் ஒரு முறை முதலிலிருந்து ஒரு வரி விடாமல் படித்து மூக்கின்மேல் விரலை வைத்தார்.

இருக்காதா பின்னே?

சென்னைத்  தமிழ்ச்சங்கம் என்ற முன்னணி இலக்கிய அமைப்பு ஒன்று ‘அமரர் விஷ்ணம்பேட்டை வி.சீ.சுந்தரம் நினைவுச் சிறுகதைப்போட்டி’யை அறிவித்திருந்தது.

பொதுவாக இதுபோன்ற போட்டிகளின் அறிவிப்புகளை மேலோட்டமாக மேய்ந்துவிட்டுப்   பக்கத்தைத்  திருப்பிவிடுவதுதான் ராம்நாராயணனின் வழக்கம்.  ஏனென்றால், இந்த சிறுகதைப் போட்டிகளில் சுதந்திரமாக ஒரு கதையை எழுதி அனுப்பிவிட முடியாது.  முதலில் நான்கு பக்கங்களுக்குள் இருக்கவேண்டும் என்பார்கள்.  சமுதாயத்திற்கு உபயோகமான நல்ல கருத்து ஒன்றை,  கதைக்குள் கருவாய் வைத்துச் சொல்லவேண்டும் என்பார்கள்.  ஏற்கெனவே கதைகளை வெளியிடாத அறிமுக எழுத்தாளராக இருக்க வேண்டும் என்பார்கள்.  இன்னும் இதுபோன்ற ஆயிரம் நிபந்தனைகள்.  இது போதாதென்று, நடுவர்கள் யார் என்று பார்த்து அதையும் மனதில் வைத்துக் கதையை எழுதித் தொலைக்க வேண்டும்.  கடைசியில் பார்த்தால், முதல் பரிசே ஐந்நூறு, ஆயிரத்தைத் தாண்டாது.

ஆனால், இந்த அறிவிப்பு…?

எந்த விதமான அபத்த நிபந்தனையும் இன்றி வந்தது.

இது எல்லாவற்றையும்விட, ’ஒரு லட்ச ரூபாய் முதல் பரிசு’ என்றால் எந்த எழுத்தாளருக்கும் ஆசை வரத்தானே செய்யும்?

ராம்நாராயணனும் இதற்கு விதி விலக்கல்லவே!

நான் இதுவரை என் நண்பன் ராம்நாராயணின் இயற்பெயரை குறிப்பிட்டிருப்பதால், உங்களுக்கு அவர் யார் என்று தெரிந்திருக்க நியாயமில்லைதான்.  ‘வெற்றிவரதன்’ என்ற அவருடைய புனைப் பெயரைக் குறிப்பிட்டால் நீங்கள் சிறுகதைகளை விடாமல் படிக்கின்றவர் என்ற காரணத்தால் உங்களுக்கு இப்போது உடனே பிடிபட்டுவிடும்.

ஆம்.  சிறுவயதிலிருந்தே தன்னுடைய புனைவெழுத்துப் பயணத்தைத் தொடங்கி, தொன்னூறுகளில் தமிழ் எழுத்துலகில் சிறுகதை மன்னராகச்  சரேலென்று விஸ்வரூபமெடுத்த அதே வெற்றிவரதன்தான்.  ஆனந்த விகடன், கல்கி என்று எல்லா முன்னணிப் பத்திரிக்கைகளிலும் அவர் பெயரைத் தாங்கிய ‘முத்திரைக் கதைகள்’ சரசரவென்று வந்து விழுந்தபோது, அவரது சொல்லாட்சியிலும் கற்பனையிலும் மனதைப் பறிகொடுத்த ஆயிரக்கணக்கான வாசகர்களில் என்னைப்போல் நீங்களும் இருந்திருப்பீர்கள்தானே? அழகிய பெண்களை மட்டுமே அட்டைப்படமாய்ப் போட்டிருந்த காலம் மாறி, இலக்கியவாதிகளை அட்டையில் போட்டாலும் பத்திரிக்கைகள் விற்கும் என்று வெற்றிவரதன்தானே மாற்றிக் காட்டினார்?

இதையெல்லாம் நினைத்து அசைபோட்டபோது, வெற்றிவரதனாகவே முழுமையாக பெயர் மாற்றம் ஆகிவிட்ட ராம்நாராயணனுக்குப்  பெருமையாகவே இருந்தது.  தன்னையறியாமல் அவர் வலதுகை, அவருடைய நரைத்த மீசையை முறுக்கிவிட்டு முதிர்ந்த முகத்தில் ஒரு முறுவலையும் வரவழைத்தது.

எவ்வளவுதான் வெற்றிமேல் வெற்றி பெற்றிருந்தாலும் இந்த சிறுகதைப் போட்டி அறிவிப்பைக் கண்டதும் அவருக்குள் புது ரத்தம் பாய்ந்தது.  எப்படியும் ஒரு சிறந்த கதையை எழுதி முதல்பரிசைத் தட்டிச் செல்ல வேண்டும் என்று உடனே மனதிற்குள் உறுதிமொழி எடுத்துக்கொண்டார்.

அத்தகைய கதையின் கருவைத் தேடி அவர் மனம் அமைதியின்றி அலைபாயத் தொடங்கியது.

எப்போதையும்விட அன்றைக்கு அவருக்கு குளியல் அதிக நேரம் பிடித்தது.  ஏனென்றால், தீவிரமாகக் கதையைப்பற்றி யோசிக்கும்போது அவருக்குத் தலையில் தண்ணீர் விழுந்து கொண்டே இருக்கவேண்டும்.  ஒரு நல்லகரு பிடிபட்டவுடன்தான் சுயநினைவு திரும்பி ஒருவழியாகக் குளியலை முடித்துக்கொள்வார்.

லட்ச ரூபாய் பரிசு என்றால் நிறைய எழுத்தாளர்கள் போட்டி போடுவார்களே?  எல்லாவற்றையும் மிஞ்சுவது போலல்லவா கதை இருக்கவேண்டும்…?

தலையைத் துவட்டிக் கொண்டு வந்தபோது அவர் முகத்தில் திருப்தியும் சந்தோஷமும் கொப்பளித்தது.  விநாயகர் அகவலை எப்போதும்போலப் படித்து முடித்துவிட்டு, சிற்றுண்டி முடித்து, தன்னுடைய அறையில் ஒரு திடமான முடிவோடு உட்கார்ந்து கொண்டு எழுதத் தொடங்கினார்.

பிள்ளையார் சுழி போட்டதுதான் தாமதம், அவருடைய கைப்பேசி அலறியது.

பெயர் எதுவும் இல்லை.  நம்பர் மட்டும்தான் இருந்தது.  ஆனாலும் எடுத்தார்.

“ஹலோ சார்… எழுத்தாளர் வெற்றிவரதன் சார்தானே…?”

“ஆமாம் …. வெற்றிவரதன்தான்… சொல்லுங்க…”

“வணக்கம் சார்… என் பேரு ஆனந்த் சீனிவாசன்… நான் ஒரு காலேஜ் ஸ்டூடண்ட் சார்… எம்ஃபில் பண்றேன்.  உங்களைப் பற்றியும் உங்களோட சிறுகதைகளைப்பற்றியும்தான் என்னோட ஆய்வு.  உங்களோட சிறுகதைத் தொகுப்பு அத்தனையும் முழுசாப் படிச்சு குறிப்பெடுத்து வெச்சிருக்கேன்!”

“சரி அதுக்கு நான் என்ன செய்யணும்?”

“வேற ஒண்ணும் இல்ல சார்!  ஒரு பத்து நிமிஷம் உங்களோட பேசணும்.  சில கேள்விகள் இருக்கு… அதை நேர்ல வந்து பாத்து பேசிட்டுப் போலாம்னு தோனிச்சு.  சார் ஒரு பத்து நிமிஷம் எனக்கு இன்னிக்கு நேரம் ஒதுக்குங்களேன்… ப்ளீஸ்!”

“பத்து நிமிஷங்கறே… சரி, சரி… வந்து பாரு… எனக்கு சென்னை தமிழ்ச் சங்கத்தோட சிறுகதைப் போட்டிக்கு வேற கதை எழுதி அனுப்ப வேண்டியிருக்கு… ஆனாலும், நீ ஸ்டூடன்ட்ங்கறே… காலையில பத்து மணிக்கே வந்து பாத்துட்டுப் போயிடு… அப்புறம் என் வேலையைத் தொடர்வேன்…!”

“ரொம்ப நன்றி சார்!”

கைப்பேசியைக் கட் பண்ணிவிட்டு மீண்டும் கதையைப்பற்றிச் சிந்திக்கத் தொடங்கினார் வெற்றிவரதன்.

Related image

பத்துமணிக்கு டாண் என்று அழைப்பு மணி ஒலித்தது.  கதவைத் திறந்ததும் புன் சிரிப்புடன் முதுகில் நீலநிறப்பை ஒன்றை மாட்டிக் கொண்டு அந்த இளைஞன் தயங்கித் தயங்கி உள்ளே வந்தான்.  அவன் அணிந்திருந்த கண்ணாடி அவன் ஒரு தீவிர படிப்பாளி என்று பறை சாற்றியது.

“வாப்பா… உட்காரு.  வழி கண்டுபிடிக்கக்  கஷ்டமா இருந்துதா…?”

“நீங்க வேற… அதெல்லாம் இல்லே சார்.  எழுத்தாளர் வெற்றிவரதன் வீடுன்னு தெருமுனையில கேட்டாலே எல்லாரும் சொல்றாங்க.  நீங்க நெறய அவார்ட்ஸ் எல்லாம் வாங்கியிருக்கீங்க.  ஒங்க முகம் எல்லாருக்கும் தெரிஞ்ச ஒண்ணு.  தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்ளகூட அடிக்கடி பேட்டி, அது இதுன்னு வரீங்க.  யூ ஆர் எ செலிப்பிரிட்டி சார்!”

புகழ் போதை மனிதனுக்கு எங்கே போகிறது?  வெற்றிவரதன் மீண்டும் குளிக்காத குறைதான்.

“சரி… கேளுப்பா ஒன்னோட கேள்விகளை!” என்று அவரே தொடங்கி வைத்தார்.

அவர் நினைத்ததைவிட ஆனந்த் சீனிவாசன் தீவிர வாசிப்பாளனாக இருந்தான்.  அவர் எழுதிய புத்தகங்களை எல்லாம் ஒன்றுவிடாமல் கரைத்துக் குடித்திருந்தான்.  அவரே மறந்துவிட்டிருந்த அவருடைய அந்த நாளையப்  பழைய சிறுகதைகளை ஞாபகப்படுத்தி, அவற்றில் இடம் பெற்ற சம்பவங்களைப்பற்றி நுணுக்கமான ஆயிரம் கேள்விகளை அடுக்கினான்.  கதைமாந்தர்களின் மனப்போக்கைப் பற்றி அறிவதில் ஆர்வம் அவனுக்கு அதிகமாக இருந்தது.  ஏன் இப்படி எழுதவில்லை, ஏன் இப்படி ஒரு முடிவை எழுதினீர்கள் என்று அவனுடைய   தீராத ஆர்வம் பல திசைகளில் பாய்ந்தது.

வெற்றிவரதனுடைய சிறுகதைகளைத்தவிர, பொதுவாக சிறுகதைகள் எழுதும் கலையைப்பற்றியும் கேட்டுத் தெரிந்து கொண்டான்.  சிறந்த கதைகள் என்றால் எப்படி இருக்க வேண்டும், எந்தெந்த எழுத்தாளர்களைப் படித்தால் சிறுகதைச் சூத்திரம் பிடிபடும் என்று  துருவித்துருவித் தெரிந்துகொண்டான்.

ஆனந்த் சீனிவாசனுடன் பேசுவதும் அவனுடைய கேள்விகளுக்குப்  பதிலுரைப்பதும் வெற்றிவரதனுக்கு மிகவும் சவாலான, சந்தோஷமான அனுபவமாக இருந்தது.  இந்த சிறிய வயதில் இப்படி ஒரு தீவிர வாசகரை அவர் இதுவரை சந்தித்ததே இல்லை.

“சார்!  சென்னை தமிழ்சங்கம் நடத்தற மெகாபரிசு சிறுகதைப் போட்டியில் நீங்களும் கலந்துக்கறீங்களா சார்…?  அப்படிக் கலந்து கொண்டா, உங்களுக்குத்தான் சார் முதல் பரிசு ஒரு லட்சம்!  அது நிச்சயம் சார்…!”

“ஆமாம்ப்பா… நான் கலந்துக்கப்போறேன்.  ஒரு கல்லூரி மாணவன் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமா எப்படித் தீவிரவாதியா மாறினான்ங்கறதை வெச்சுத்தான் என்னோட கதை…”

“அப்படியா சூப்பர் சார்!  அதை எப்பிடி சார் ஆரம்பிப்பீங்க?  எப்பிடி டெவலப் பண்ணுவீங்க?  கடைசியில் திருப்பம் ஏதாவது இருக்குமா…?”

மீண்டும் மீண்டும் ஆனந்த் சீனிவாசனின் இடைவிடாத கேள்விகள்.

அவனுடைய ஆர்வத்துக்குத் தீனிபோடும் விதமாய் வெற்றிவரதன் தன் மனதிலுள்ள சிறுகதையை அப்படியே உணர்ச்சிகரமாய் விளக்கினார்.  இந்த முயற்சியில் கதையும் முழுமையாய் அவருடைய மனதிலும் விரிந்தது.

“சூப்பர் சார்!  நன்றி சார்!  வாழ்த்துக்கள் சார்!” – உற்சாகம் கொப்பளிக்க விடை பெற்று விரைந்தான் அவருடைய இளம் விசிறி.

விடைகொடுத்துவிட்டு மீண்டும் அறைக்குத் திரும்பி கதையை ஒருவாறாக எழுதி முடித்தார் வெற்றிவரதன். ஆனாலும் கால அவகாசம் நிறைய இருந்ததால், இரண்டு வாரங்கள் கழித்தே அதைப் போட்டிக்கு அனுப்பி வைத்தார்.

 

***

ஒரு மாதம் கழித்து சிறுகதைப் போட்டியின் முடிவுகள் வெளியானபோது இலக்கிய உலகமும் வாசகர் வட்டங்களும் வியப்பில் விரிந்தன.

‘ஒரு மாணவன் மாறுகிறான்’ என்ற தலைப்பில் எழுதப்பட்ட  சிறுகதை மிகச் சிறந்த சிறுகதையாக நடுவர்களால் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, எல்லா முன்னணித்  தமிழ்ப் பத்திரிகைகளிலும் இந்த விபரம் கொட்டி முழங்கியது.

கதையை விறுவிறுவென்று படு சுவாரசியமான நடையில் எழுதி ஒரு லட்சம் ரூபாய் மெகா பரிசைத் தட்டிச் சென்றது ஒரு கல்லூரி மாணவனாம்.

அறிமுக எழுத்தாளர் ஆனந்த் சீனிவாசன் கண்ணாடியின் வழியே எல்லாப் பத்திரிக்கைகளிலிருந்தும் சிரித்துக் கொண்டிருந்தான்.

வெற்றிவரதன் தனக்குள்ளேயே சிரித்துக் கொண்டார்.

களஞ்சியத்தின் பெட்டி – சுரேஷ் ராஜகோபால்

 

Image result for old man in village tamilnadu reading a letter

 

களஞ்சியத்துக்கு ,

அப்பா எழுதறது

இப்பவும் எனக்குக் கண் பார்வை மங்கலாகத் தெரிகிறது, காதும் சரியாகக் கேட்கமாட்டேங்கறது. உடம்பு ரொம்ப முடியலை. உங்க ஆத்தா இருந்தவரை  ஏதோ ஆக்கிப் போட்டா. நாலு வார்த்தை பேசினா இரண்டு சண்டை போட்டாலும் பேச்சுத்துணைக்கு ஒரு ஆளிருந்தது.  இப்ப வயல் வரப்பு கயணி பாத்துக்க ஆளில்லை, விவசாயமும் நின்னுபோச்சு. யார்யாரோ கூறு போட்டுகிட்டாங்க , எல்லாம் கைமீறிப் போச்சு.

ஐந்து கறவை மாடு, மூணு கண்ணு குட்டி பராமரிக்க முடியல, ஐந்திலே இரண்டு கறவை மாடு களவு போச்சு. மீதி மாடு கண்ணு எல்லாம் நம்ம பால்க்காரக் கோனாருக்கு வித்துட்டேன். ரூபா பத்து வந்தது. அந்த மாடு கட்டற குடிசைலதான் நான் இப்ப இருக்கேன். கயித்துக் கட்டிலும் பாதி ஒடஞ்சு போச்சு.

வருமானம் நின்னு போனதாலே நம்ம கல்லு வீட்டை ரூபாய் நாநுறுக்குப் பொட்டிக்கடை நாடாருக்கு வாடகைக்கு விட்டுவிட்டேன். அதுதான் மாச வருமானம்.. நாடார் வீட்டம்மா தினமும் கஞ்சியோ கூழோ கொடுப்பாங்க, மவராசி, அதுதான் சாப்பாடு.

நீ ஆத்தா காரியம் முடித்து போகும்போது வரதன் தெரு சேட்டுகிட்டே கடன் வாங்கிப் போனயாம். சேட்டு பீரோ கட்டில் எல்லாம் எடுத்து போயிட்டான். பீரோலே நம்ம நிலப்பத்திரம் எல்லாம் இருக்கு, பாத்துக்க.

நீயும் அப்பப்ப இங்க வந்து போ, எனக்குக் கொஞ்சம் தெம்பா இருக்கும். பணம் கிணம் ஒண்ணும் கொடுக்கவேண்டாம், வந்து பாத்துட்டு போ.

நாலு மாசம் முன்னே உன்தம்பி மட்டும் வந்து போனான், என் கையிலே ரூபா ஐயாயிரம் கொடுத்துப் போனது ரொம்ப உதவியா இருந்தது. ஏதோ உயிரைப் பிடிச்சுக்கின்னு ஏன் இன்னும் இருக்கேன் தெரியலை.

உன்தங்கை மவராசி மீரா, மாப்பிள்ளை, அவங்க பசங்க எல்லாம் எப்படி இருக்காங்க. யாரும் ஒரு எட்டு வந்து போகல. அது உலகம் தெரியாத பொண்ணு, நீதான் பெரியவனா இருந்து பாத்துக்கணும். உனக்கு தம்பி கூட சண்டையாமே, எதுக்குப்பா…… சின்னவன் தானே விட்டுக்கொடுத்து போ தம்பி.

இதையும் நாடார் தம்பிட்டச் சொல்லித்தான் எழுதறேன். அவர்தான் எல்லா உதவியும் செய்யராறு, யாரு பெத்த பிள்ளையோ.

ஒரு எட்டு பாத்துப் போடா. உன் பிள்ளை குட்டி, மருமவளை பாக்கணும்போல இருக்கு, இந்த குருட்டுக் கிழவனுக்கு. எல்லாத்தையும் கேட்டேன் சொல்லுடா.

இப்படிக்கு

வடிவேலு (கிறுக்கிய கையெழுத்து)

முப்பது வருடம் முன்னே வந்த கடுதாசி.

அப்பா இறந்த செய்தி வந்தபோதுகூட அண்ணன் தம்பி தங்கை யாரும் போகலை. அப்போ நல்ல வசதியாத்தான் இருந்தார்கள். எல்லாமே தன் பங்கு செலவாகுமே என்று இவனும் ஒதுங்கி விட்டான். நாடார்தான் காரியங்களைக்  காத்துக் காத்து இருந்து விட்டுச் செய்தாராம் இதுகூட இவன் தோழன் சொன்னதுதான். ஊர்ப் பக்கமே அப்பறம் போகலை.

களஞ்சியத்தின் மனைவி இறந்து மூணு வருஷமாச்சு, இரண்டு பசங்க, இரண்டு பேருமே பொண்டாட்டி புள்ளைகளோடு அமெரிக்காவிலே இருக்காங்க.

இவன் மனைவி இறந்தவுடன் சின்னவன், “ டாடி இங்க இரண்டு வீடு வெட்டியா இருக்கு, உன் ஒருத்தருக்கு எதுக்கு அது ? உன்னை அந்த முதியோர் இல்லத்தில் சேர்த்துடறேன், வீட்டை வித்துட்டு போயிடுரோம்” என்றான். தான் சொந்த சம்பாத்தியத்தில் வாங்கிய வீடு, மகன்கள் பேரில் மாத்தியது தப்பா போச்சு. விக்கிற வேலை கிடுகிடுவென நடந்தது. வித்த பணம் என்ன ஆச்சுன்னு தெரியாது. மரியாதைக்குக்கூட சொல்ல நாதியில்லை.

சின்னவன்தான் சொன்னான் “ பணம் எதனா வேணுனா கேளு அனுப்பறேன்”ன்னு. இப்ப களஞ்சியத்துக்கு பென்சன் வரதுனால எதோ தப்பிச்சான். மூணு வருஷத்தில ஒருதடவைகூட வந்து பாக்கல, தபாலும் போடலை.

இப்பப் பெட்டியை குடைந்தபோது முதன்முறையாக அப்பா எழுதிய கடிதத்தைப் படித்தான். கண்ணில் கண்ணீர் வரவில்லை  ரத்தம் வந்தது.

ராஜ நட்பு – ஜெய் சீதாராமன்

2.வாங்மெங்கின் ஓலை தொடர்கிறது.

 

Image result for thanjavur temple constructions in rajarajan days

முன்கதை…..

வருடம் கிபி 1011. சைனாவின் தலைநகரமான  பீஜிங்கில் ஷேங்க்ஸான் சக்ரவர்த்தியைக் காணவந்திருந்த, கடல் கடந்து வணிகம் செய்யும் தலைவர், தென் இந்திய சோழ சக்கரவர்த்தி ராஜராஜ சோழனின் பரிசுப் பொருட்களையும் ஓலைகளையும் சமர்ப்பிக்கிறார். முதல் ஓலை சைனாவின் கலாச்சாரத் தூதுவன் வாங்மெங் 1001ம் வருடம் தஞ்சாவூரில் ராஜராஜசோழனை சந்தித்தபோது எழுதியது. அதை சபை அதிகாரி ஒருவர் படிக்க எல்லோரும் ஆவலுடன் கேட்கின்றனர். அரங்கேற்றப்பட்ட சீன கலாநிகழ்ச்சிகளைக் கண்டு பிரமித்த சக்கரவர்த்தி, தான் துவங்க இருக்கும் பிரம்மாண்ட பெருவுடையார் ஆலயத்திற்குப் பணி செய்யும் அத்துணைபேரையும், சைன கலா நிகழ்ச்சிகள் மூலம், மகிழ்வித்து உற்சாகப்படுத்த அங்கேயே தங்கி நடத்த இயலுமா என்ற வேண்டுகோளை வாங்மெங் முன் வைக்கிறார்.
இனி……………

அடுத்த நாள், சபை மறுபடியும் கூடியது. நானும் என் குழுவும் சக்ரவர்த்தியை வணங்கி நின்றோம். “என்ன முடிவு எடுத்திருக்கிறீர்கள்?”என்று அரசர் வினவ, நான் பதிலளிக்கலானேன்.“அரசே! மனைவி, மக்கள், பெற்றோர் மற்றும் சுற்றத்தார் எவரும் எனக்கில்லை. எனவே நேற்றே நான் உங்களுக்கு உதவ முடிவெடுத்துவிட்டேன். உங்களின் இந்த உலகப் பெரும் சாதனையை நினைத்து வியந்து அதில் எனக்கும் என் குழுவிற்கும் ஒரு சிறு பங்கு கிடைக்கப்போவதை எண்ணி மிகவும் பெருமைப்படுகிறேன். ஆலயம் கட்டி முடிவடையும்வரை இங்கேயே இருப்பேன். இது உறுதி!”

“உங்கள் குழுவின் விருப்பம் என்ன என்பதைத் தெரிந்து கொள்ளலாமா?” என்று மறுபடி அரசர் கேட்டார். அதற்கு நான், “ஒரு பாதி மணமாகாத ஆணும் பெண்ணும் கலந்த இளைஞர்கள். மறுபாதி மணமானவர்கள். இளைஞர்களுக்கு சம்மதம். மற்றவர்கள் கப்பல் கிளம்பும்வரை இருப்பார்கள். எனினும் கவலை கொள்ள வேண்டாம். எங்கள் கப்பல்கள் வருடம் இருமுறை இங்கு வருகிறது. கிளம்பியவர்களுக்கு பதிலாக அமர்த்த புதிய கலைஞர்கள் கொண்டு வரப்படுவார்கள். உங்கள் விருப்பத்துடன் சோழ நாட்டிலேயே புதிய தமிழ் கலைஞர்களைத் தேர்ந்தெடுத்து நிகழ்ச்சிகளில் பங்குபெற தயார் செய்துவிடுகிறேன்” என்றேன்.

ராஜராஜசோழ தேவர் சிம்மாசனத்திலிருந்து எழுந்து வந்து என்னை அப்படியே தழுவி,  “என் வேண்டுகோளுக்கு செவிசாய்த்து சம்மதம் தெரிவித்ததற்கு நன்றி. நான் உங்களுக்கு மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன்” என்று கூறி திருமந்திர ஒலை நாயகம் கிருஷ்ணன் ராமனை அழைத்து எங்களுக்கு எல்லாவித வசதிகளையும் செய்து கொடுக்க உத்தரவிட்டார்.

சம்பவப் பட்டியல் பதிவு அதிகாரி வாங்மெங் எழுதியிருப்பதை மேலேதொடர்ந்து படித்தார். “கிருஷ்ணன்  ராமன் எங்களுக்கு, தங்க, ஒத்திகை பார்க்க போன்ற ஏனைய வசதிகளுக்கும் ஏற்பாடுகள் செய்தார். வேலை செய்வோர் தொழில்களுக்கேற்றவாறு இடங்கள் அமைக்கப்பட்டிருந்ததால் நாடக மேடைகள் அதற்கேற்ப கட்டப்பட்டன. அவைகளில் கலை நிகழ்ச்சிகள் நல்ல வரவேற்பைப்பெற்று நடந்தேறின. கடின உழைப்பினால் சோர்வடைந்திருந்த உழைப்பாளிகளுக்கு இது புத்துணர்வு அளித்தது. தெம்புடனும் மகிழ்ச்சியுடனும் வேலை செய்ய ஆரம்பித்தார்கள். ஆகையால் அவர்களுடைய உழைப்புத் திறன் பல மடங்கு உயர்ந்தது.

Related image

ஆலயம் கட்டும் பணியால் உழைப்பாளிகளின் குடும்ப நிர்வாகம் பாதிப்படைந்தது.  இதில் இல்லத்தரசிகளின் பங்கு மேலானது. குடும்ப நிர்வாகத்துடன் வீட்டு நிர்வாகத்தையும் தலைமேல் ஏற்றுத் திறம்பட செய்தனர். எனினும் எல்லாவற்றிற்கும் எல்லை என்று ஒன்று இருக்கிறதல்லவா? களைப்படைந்திருந்த மனைவிமார்களுக்கு கலை நிகழ்ச்சிகள் குடும்பங்களுக்கென்று தனியாக நடத்தப்பட்டன. எனவே குடும்பமும் இதனால் பயனைப்பெற்றது. நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை மனதில் கொண்டு அவர்களுக்கு ஏற்றவாறு மாற்றி அமைக்கப்பட்டன.நாடகங்கள் தஞ்சாவூரில் மட்டுமல்லாது நார்த்தாமலை, நாகப்பட்டினம் போன்ற மற்ற ஊர்களிலும் நடத்தப்பட்டன.

Related image

நான் சோழநாட்டு தமிழ் நடிகர்களைத் தேர்ந்தெடுத்து,அவர்களுக்கு அடிப்படைப் பயிற்சி கொடுக்க ஆரம்பித்தேன். மூன்று மாதங்கள் நிறைவுக்கு வந்தன. கப்பலில் செல்வோருக்கு அழைப்புகள் விடுக்கப்பட்டன. தமிழ் நடிகர்கள் தயாரானார்கள். மணமான கலைஞர்கள் தாய் நாட்டுக்குச்  செல்லக் கப்பலேறினார்கள். மூன்று ஆண்டுகள் உருண்டன .  எனக்குத் தமிழ் பேச நன்றாகவே வந்தது. நிகழ்ச்சிகளைக் காலம், இடம் மற்றும் பார்வையாளர்களை மனதில் கொண்டு என் அநுபவத்தையும் கற்பனையையும் சேர்த்துத் தயாரித்து வந்தேன்.

இந்தக் காலகட்டத்தில் விமானத்திற்கு அஸ்திவாரம் அமைக்கப்பட்டு ராஜராஜ சோழ தேவரின் ஆலயத்தின் முதல் தளம் வரை உயர்ந்திருந்தது. ஆராய்ந்து திட்டமிட்ட சில வேலைகள் இரு தளங்களிலும் ஒரே சமயத்தில் நடைபெற்றன

 

அன்றொரு நாள்!  நிகழ்ச்சி நடத்த நார்த்தாமலை சென்றிருந்தேன். என்னால் தேர்ந்தெடுத்துத் தயார் செய்யப்பட்ட நார்த்தாமலை தமிழ்க் குழுவின் நாடகம் அங்கு நடந்தேறியது. மறுநாள் காலையில் உணவருந்திய பின் புரவியில் தஞ்சாவூருக்குக்  கிளம்பினேன். பாதி வழியில் அச்சம்பட்டி அருகில் வனப்பகுதியில் வரும் சமயம் பகல் பொழுதாகிவிட்டது. திடீரென மேகம் இருண்டது. இடி மின்னலுடன் காற்று பேரிரைச்சலுடன் பெரிய மழை வானத்தைப்   பிய்த்துக்கொண்டு கொட்ட ஆரம்பித்தது. உடைகள் நன்றாக நனைந்துவிட்டன. ஒவ்வொரு இடி மின்னல் போதும் குதிரை  கனைத்துக்  கால்களைத் தூக்கி மிரண்டு கொண்டிருந்தது.

கடைசியாக யாருமில்லாத பாழடைந்த மண்டபம் ஒன்று தென்பட்டது. மெதுவாகக் குதிரையை அதன் அருகே ஓட்டிக்கொண்டு சென்றேன். இறங்கிக் குதிரையை இரண்டு தட்டு தட்டினேன். பாவம் எங்கேயாவது ஓடிப் பிழைத்துக் கொள்ளட்டும், நாம் எப்படியாவது இவ்வழி போகும் வழிப்போக்கர்களின் உதவியை நாடிக் கொள்ளலாம் என்பது என் எண்ணம். குதிரை நொடிப்பொழுதில் பிய்த்துக்கொண்டு பறந்து சென்றுவிட்டது. எங்கு சென்றது என்று புரியவில்லை!

மண்டபத்தில் நிறையத் தூண்கள் காணப்பட்டன. கடைசியில் தென்பட்ட இரு தூண்களின் நடுவில் கீழே கிடந்த கட்டைகளின் உதவியால் சுத்தம் செய்துவிட்டு மேலாடையைக் கழட்டி உலரப் போட்டுவிட்டுக் கையைத் தலையணையாக்கிப் படுத்ததுதான் தெரியும், எவ்வளவு நேரம் தூங்கியிருப்பேன் என்பது தெரியாது. ஏதோ சத்தம் கேட்டுத்  திடுக்கிட்டு உட்கார்ந்தேன்.

மழை நின்றுவிட்டிருந்தது. காற்று, இடி, மின்னல் அடங்கி அமைதி அடைந்திருந்தது. மேகம் இன்னும் இருண்டிருந்ததால் விளக்கு ஏதுமில்லாமல் மண்டபம் கும்மிருட்டில் மூழ்கியிருந்தது. மண்டபத்தின் முன் பகுதியிலிருந்து இருவர் கம்மியக் குரலில் ரகசியமாகப் பேசும் பேச்சுக்குரல் மிகவும் துல்லியமாகக் கேட்டது. அவர்களுக்கு நான் இங்கு படுத்திருப்பதுபற்றித் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. உடனே அவர்களின் உதவியை நாடலாம் என்று எழ எத்தனித்தேன். அதற்குள் அவர்கள் பேச்சின் ஒரு பகுதி என் காதுகளுக்கு எட்டி என்னைத்  திகிலடைய வைத்தது. அதில் கொலை, தீ, விஷம் போன்ற வார்த்தைகள் அடிபட்டதால் என் வயிற்றில் புளியைக் கரைத்துத் தலையைச் சுற்ற வைத்தது. திடுக்கிட்ட நான் மூச்சைப் பிடித்துக்கொண்டு அவர்கள் சம்பாஷணையை கூர்ந்து ஒட்டுக்கேட்க ஆரம்பித்தேன்.

“நான் சொல்வதை மிகக் கவனமாகக் கேட்டுக்கொள். இன்று புதன் கிழமை. நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை காலையிலிருந்து பகல் நேரத்திற்குள் நாம் திட்டமிட்டபடி சோழநாட்டின் தலையெழுத்தை மாற்றக்கூடிய இரண்டு காரியங்களை வெற்றிகரமாக முடித்தாக வேண்டும். தஞ்சாவூர் விண்ணகரத்திலிருந்து வடக்கேயுள்ள குறிப்பிட்ட பத்தாயிரம்  வேலி நிலங்களில் நன்கு செழித்து வளர்ந்துள்ள நெற்கதிர்கள் முற்றி, உயர்ந்து, தலை சாய்ந்து அறுவடைக்குத்   தயார் நிலையில் இருக்கின்றன. வெள்ளிக்கிழமை கிழக்கு வெளுக்குமுன் அவைகளில் ஒரே சமயத்தில் தீ வைக்கப்பட்டு கதிர்கள் கருகி சாம்பலாக்கப்படும். தஞ்சாவூரில் குவிந்துள்ள ஆலயம் கட்டும் வேலையில் ஈடுபட்டிருக்கும் பணியாளர்களுக்கு இதனால் பெரும் பாதிப்பு ஏற்படும். சோழ நாடு குறுகிய காலத்தில் இதை ஈடுகட்ட   தவிப்பார்கள். இந்தா, இந்த ஓலையை குணசேகரனிடம் நாளை காலைக்குள் ஒப்படைத்துவிடு. மற்றவைகளை அவன் பார்த்துக்கொள்வான்.

இரண்டாவது உனக்கிடப்பட்டிருக்கும் வெகு முக்கிய வேலை, ஒவ்வொரு வெள்ளியன்றும் ராஜராஜன் பகல்பொழுது ஆலயம் கட்டும் பணியைப் பார்வையிட நேரில் அங்கு வருவான். தஞ்சாவூரில் ஊடுருவியிருக்கும் நமது கூட்டாளிகளின் உதவியைக்கொண்டு அவனை அங்கேயே தீர்த்துக்கட்டவேண்டும். அதற்கு அங்கு நிறைய சந்தர்ப்பங்கள் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. இது    சோழர்களுக்குப்     பெரிய பேரிடியாக அமையும். நமது உயிரைப்   பணயம் வைத்து இதில் இறங்கியுள்ளோம். நமது உயிர் போனாலும் இக்காரியத்தை வெற்றிகரமாய் முடித்தாகவேண்டும். இனி ஒன்றும் பேசவேண்டாம். சோழ நாட்டில் சுவர்களுக்கும் காதுகள் உண்டு. நீ உன் வழியே செல். நான் என் வழி போகிறேன்”.

இத்துடன் சம்பாஷணை முடிவுற்றது. குதிரைக் குளம்புகளின் ஒலி கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து கடைசியில் நிசப்தம் நிலவியது.

(தொடரும்)

 

அட ராஜாராமா….! — நித்யா சங்கர்

(சென்ற இதழ் தொடர்ச்சி..)

காட்சி — 3

Image result for dulquer salmaan with a friend

(மாதவன் வீடு. மாலை நேரம். மாதவன் ஹாலில் அமர்ந்து
கொண்டிருக்கிறான். ராஜாராமன் வருகிறான்)

ராஜா : (வந்து கொண்டே) குட்டிச் சுவர்.. எதை எடுத்தாலும் குட்டிச் சுவர். எப்படிப் பார்த்தாலும் குட்டிச் சுவர்.

மாத : (சிரித்துக் கொண்டே) பின்னே… ஏதாவது கழுதைகிட்டே யோஜனை கேட்டுப் போய்நின்னுருப்பே… குட்டிச்சுவராத்தானே
இருக்கும் பக்கத்துலே…

ராஜா : (எரிச்சலோடு) எக்ஸாக்ட்லி கரெக்ட்.. இவ்வளவு நாள் இது
தெரியாம இருந்துட்டேன் பாருடா.. என் மூளையை அடுப்புலே
தான் போடணும்.

மாத : சரி… கொண்டாடா.. என்னடா கரெக்ட்…?

ராஜா : ஆமா… உன் யோசனையைக் கேட்டுட்டுப் போய்த்தான்
செஞ்சேன்… குட்டிச் சுவர் இல்லாம வேறென்ன இருக்கும்…

மாத : (திடுக்கிட்டு) டேய்.. டேய்… ஹோல்டான்… ஹோல்டான்…
என்னடா சொல்றே?

ராஜா : பச்சையா சொல்லச் சொல்றியா… நீ சொன்னபடி நீ கழுதை
தாண்டா…

மாத : ஏண்டா.. டேய்.. திட்டறதுன்னு புறப்பட்டுட்டே… இப்படி
மூஞ்சிக்கு நேரே திட்டணுமாடா…? நேரே பார்த்தபோது நாலு
புகழ்ச்சி வார்த்தை சொல்லிப்புட்டு நான் இல்லாதபோது என்னைக்
கண்டபடி ஆசை தீர வையக்கூடாதாடா…?

ராஜா : இது வேற நியூ அட்வைஸா..? டேய் எங்கப்பா.. உன் கிட்டே
அட்வைஸ் கேட்டதும் போதும். நான் இப்போது அவதிப்-
படறதும் போதும்..

மாத : டேய் அப்படி என்னடா முழுகிப் போயிடுத்து..?

ராஜா : குடி முழுகிப் போயிடுத்துடா… குடி  முழுகிப் போயிடுத்து….

மாத : முழுதுமே முழுகிடுத்தா…?

ராஜா : (ஏளனமாக எரிச்சலோடு) இல்லே வால் மட்டும் பாக்கி இருக்கு.. போடா.. குடியே முழுகிப் போயிடுத்துங்கறேன்…

மாத : ஓ… அப்போ சரி… கவலையை விடு… சாண் போனா என்ன..
முழம் போனாலென்ன….? விடு கவலையை…

ராஜா : டேய்.. என் உள்ளம் வேதனைப்பட்டுட்டிருக்கு… உனக்கு
விளையாட்டா இருக்கா..?

மாத : வாழ்வே ஒரு விளையாட்டுத்தானே பிரதர்.. நீ வெளங்கற
மாதிரி சொன்னாத்தானே எனக்குப் புரியும்.. முதல்லே உட்கார்..

(ராஜாராமன் உட்கார்கிறான்)

ராஜா : டேய்.. என் வைப் மனோ கண்டு பிடிச்சுட்டாடா….

மாத : (திடுக்கிட்டு) என்ன கண்டுபிடிச்சுட்டாளா..?

ராஜா : இன்னும் முழுதும் கண்டுபிடிக்கலே… நான் வாராவாரம்
எங்கேயோ போறேன்னு அவளுக்கு சந்தேகம் வந்துடுத்து…

மாத : டாமிட்… அவளுக்கு எப்படீடா தெரிஞ்சது..?

ராஜா : ஏதோ தற்செயலா நம்ம கிருஷ்ணன் வைப் கமலாவைப்
பார்த்திருக்கா… அவ உண்மையை உடைச்சுட்டா…
கிருஷ்ணன் ஸண்டே வெளியிலேயே போறதில்லைன்னு
உளறி வெச்சுட்டா…

மாத : க்வைட் அன்·பார்ச்சுனேட்… மூடி மூடி வெச்சா இப்படித்-
தாண்டா… நாம நம்ம  ப்ரண்ட்ஸ்கிட்டேயும் சொல்லி வெச்சிருந்தா
சமாளிச்சிருக்கலாம்…

ராஜா : நீ இந்த யோஜனையைச் சொன்னபோது நான் அதைத்தான்
சொன்னேன்… நீதான் வேண்டாம்னுட்டே…

மாத : டேய்.. அனாவசியமாய் இதுக்கெல்லாம் எதற்கு பப்ளிசிடி கொடுக்கணும்னு பார்த்தேன்… இது போய் இப்படி முடியும்னு எனக்கு
என்ன ஜோசியமா தெரியும்..? நாம தப்பா ஒண்ணும் செய்யலேன்னு உன் வைஃப்க்கு நம்பிக்கை ஏற்படறமாதிரி நீ ஒண்ணும் சொல்லலியா..?

ராஜா : சொன்னேன்டா… சொன்னேன்.. அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய்ன்னு சொல்றமாதிரி சந்தேகம் ஏற்பட்ட மனதுக்கு எல்லாத்தையுமே சந்தேகத்தோட பார்க்கத்தான் தோணும்.

மாத : இப்போ என்னடா பண்ணறது? பேசாம உன் வைஃப்கிட்டே
உண்மையைச் சொல்லிட்டா…

ராஜா : இடியட்… நீயே இப்படிச் சொல்றியே.. உண்மையைச் சொன்னா  ஷுவரா மனஸ்தாபம் வரும். குடும்பத்துலே மகிழ்ச்சியே கெட்டுப்போயிடும்.

மாத : அப்போ ஒண்ணு பண்ணு… வாராவாரம் அங்கே போகாதே..
அவளை மறந்துடு..

ராஜா : டேய்… அவளை நான் எப்படீடா மறக்க முடியும்?

மாத : வேறே என்னடா செய்ய முடியும்?

ராஜா : டேய் மாதவா.. மனோரமாவிற்கு ஏண்டா என் மேலே நம்பிக்கை ஏற்பட மாட்டேன்ங்குது? அவ மகிழ்ச்சிக்காக நான் எதையெல்லாம் தியாகம் செஞ்சுட்டேன்..? என் உயிருக்கு உயிராக
இருந்த அம்மாவை விட்டுட்டுத் தனிக் குடித்தனம் போட்டேன்.
அவள் கேட்டதுக்கும், சொன்னதுக்கும் மதிப்புக் கொடுத்து
அதன்படியே நடந்துட்டிருக்கேன். அவளுக்குத் தெரியாத
இரகசியங்கள் என்கிட்டே ஒண்ணுமே இல்லே இது ஒண்ணத்
தவிர..

மாத : அந்த இரகசியம்தான் என்னன்னு உன் வைஃப் கேட்கறாளே..?

ராஜா : அதெப்படி நான் அதைச் சொல்றது? வீண் மனஸ்தாபங்கள்
உண்டாகி குடும்ப மகிழ்ச்சியே கெட்டுப் போயிடுமே.. ம்…

மாத : எக்ஸாக்ட்லி.. அதுக்கு ஒரு வழிதான் இருக்கு… நீ ஒண்ணுமே
நடக்காதமாதிரி சாதாரணமா இரு.. மேலும்மேலும் சந்தேகம்
வளரறமாதிரி நடந்துக்காதே… இனி ஸண்டேஸண்டே
போகாதே…

(ராஜாராமன் காதில் ஏதோ கூறுகிறான்)

ராஜா : ம்… அப்படித்தான் செய்யணும். மாதவா, நான் போய்ட்டு
வறேன்.. நாளைக்குப் பார்ப்போம்..

(போகிறான்.. மாதவன் அவனையே பார்த்துக்
கொண்டு நிற்கிறான்.. அவன் கண்களில் நீர் )

மாத : அட, ராஜாராமா… உன் நல்ல மனதுக்கா இந்த சோதனைகளெல்லாம் வரணும்..

 

காட்சி – 4

(ராஜாரமன் வீடு.. அந்தி வேளை.. மனோரமா ஏதோ
படித்துக் கொண்டிருக்கிறாள்.. ராஜாராமன் வருகிறான்)

ராஜா : (வந்து கொண்டே) மனோ… மனோ…

மனோ: (புத்தகத்தை மூடி வைத்தவாறு) ம்.. வந்துட்டீங்களா.. டிரஸ்
மாத்திட்டு வாங்க… காபி கொண்டுவறேன்…

ராஜா : ம்.. இன்னிக்கு என்ன ஏக தடபுடலா உபசாரங்கள் நடக்குது..?

(காபியைக் குடிக்கிறான்)

மனோ: தடபுடலான்னா..? காபி நல்லா இருக்கா..?

ராஜா : ஓ.. எஸ்.. ஆனா ஒண்ணுதான் குறை…

மனோ: (திடுக்கிட்டு) குறையா..?

ராஜா : ஆமா.. சர்க்கரைன்னு நெனச்சிட்டு உப்பை அள்ளிஅள்ளிப்
போட்டிருக்கே… சர்க்கரைக்கு ரேஷன் பார்…

மனோ: ஐயையோ… உப்பையா போட்டுட்டேன்… இப்போ என்ன
செய்யறது..?

ராஜா : ம்.. அதுக்கு ஒரே வழிதான் இருக்கு.. நெறைய மிளகாய்த்
தூளைப் போட்டுட்டா காரத்துக்கும் உப்புக்கும் சரியாய்ப்
போயிடும்…

மனோ: (சிரித்துக் கொண்டே) அதைவிட வேறே ஒரு நல்ல வழி
இருக்கு..

ராஜா : என்னது..?

மனோ: கொண்டுபோய்க் கொட்டிட்டு வேறே காபி கொடுக்கறது..

(காபியைக் கொண்டு கொட்டிவிட்டு வேறு
காபியுடன் வருகிறாள்)

ராஜா : இதுலே சுண்ணாம்புப் பொடியைக் கலக்கலியே…?

(மனோரமா சிரிக்கிறாள்.. ராஜாராமன் காபியைக்
குடிக்கிறான்.)

Image result for dulquer salmaan and girl friend in ok kadhal

மனோ: இன்னிக்கு ஒரு அருமையான புத்தகம் படிச்சேன்…

ராஜா : ஓ.. தெரியுமே…

மனோ: (திடுக்கிட்டு) என்ன தெரியுமா…?

ராஜா : ஓ.. எஸ்…

மனோ: எப்படி…?

ராஜா : ஊஹூம்.. சொல்ல மாட்டேன்..

மனோ: சரி.. வேண்டாம்…

ராஜா : அடிப்பாவி.. நீ கெஞ்சுவேன்னல்ல நெனச்சேன்.. சொல்றேன்
கேளு.. நீ இன்னிக்கு என்ன வரவேற்ற தோரணையும்,
ஓடிப் போய் காபி கொண்டுவந்த தோரணையும் பார்த்த-
போது ஏதோ இன்னக்குப் புதுசா அறிவைத் தரக்கூடிய
புத்தகம் படிச்சிருப்பேன்னு முடிவுக்கு வந்தேன்.

மனோ: ஆமா… என்னை எப்பவும் கலாட்டா பண்ணிட்டிருக்கணும்..
அதுதான் உங்க பொழுதுபோக்கு… அது போகட்டும்..
இன்னக்கு நான் படிச்ச தீம் எத்தனை பிரமாதமா இருந்தது
தெரியுமா..? கேட்கறீங்களா…?

ராஜா : ம்… கேட்காம விடவா போறே.? சொல்லு…

மனோ: ரொம்ப சந்தோஷமா வாழ்ந்துட்டு இருந்த ஒரு குடும்பம்
சந்தேகத்துனாலே பிளவுபட்டுடுத்து… கணவன் மேலே
மனைவிக்கு சந்தேகம் வந்துடுத்து… அவளாலே சந்தேகப்-
படவும் முடியலே… சந்தேகப்படாமலும் இருக்க முடியலே..
அவ மனசு சந்தேகப்பட்டு வருத்தப்பட சந்தோஷமே
அழிஞ்சு போச்சு…

ராஜா : ஓஹோ.. மனோ… நீ எதுக்கு இந்தக் கதையைச் சொல்றேன்னு
எனக்குப் புரிஞ்சிடுத்து..

மனோ: நம்ம குடும்பம் எத்தனை சந்தோஷமா நடந்துட்டு
வந்தது… அந்த சந்தோஷத்தைக் கெடுக்க இப்படியா வந்து
சேரணும்…?

ராஜா : மனோ… அந்த சந்தோஷம் கெடக் கூடாதுன்னுதான் நானும்
முயற்சி பண்ணறேன்…

மனோ: இப்படியொரு சந்தேகம் இருக்கறபோது எப்படி நான்
சமாதானத்தோடு இருக்க முடியும்..?

ராஜா : மனோ.. என்னை உனக்குத் தெரியாதா..? நான் உனக்குத்
துரோகம் நினைப்பேனா..? என்மேலே உனக்கு நம்பிக்கை
இல்லையா..?

மனோ: மனப்பூர்வமா நம்பிக்கை இருக்கு..

ராஜா : பின்னே என்ன..? ஏன் அனாவசியமா அலட்டிக்கறே…
நான் தப்பான வழியிலே ஒண்ணும் போக மாட்டேன்.

மனோ: நீங்க செய்யறது தப்பு ஒண்ணும் இல்லேன்னா ஏன்
என்கிட்டேயிருந்து  அதை மறைக்கறீங்க… சொல்லிடுங்களேன்..

ராஜா : ஸாரி மனோ… இனிமே தயவுசெய்து இந்தப் பேச்சையே
எடுக்காதே…

மனோ: (பெருமூச்சுடன்) சரி.. என்னை மன்னிச்சிடுங்க.. எனக்கு
உங்கமேலே பூரணமா நம்பிக்கை இருக்கு… இனிமேல் இதைப்
பற்றிப் பேசவே மாட்டேன்….

(உள்ளே போகிறாள்.)

Image result for ஒ கே கண்மணி

(என்னதான் நடக்கிறது..? மனோ ராஜாராமனை
உண்மையில் நம்பி விட்டாளா.. இல்லை ஏதாவது
திட்டம் வைத்திருக்கிறாளா…?

(அடுத்த இதழில்,,,)

தொடரும்)

  முடிவாக ஒரு  வார்த்தை – வைதீஸ்வரன்

 Related image

  நான் வேலையிலிருந்து களைப்புடன் உள்ளே நுழைந்தேன்.

 நான் வருவதை அம்மா கவலையுடன் பார்த்துக்கொண்டிருந்தாள்.

 நான் என்ன? ” என்பதுபோல் அவள் முகத்தைப் பார்த்தேன்அவள் கட்டிலில் படுத்திருந்த அப்பாவைக் காட்டினாள்.

  “எப்படி இருக்கே அப்பா? ”  சட்டையைக் கழட்டிக்கொண்டே  கேட்டேன்.

Image result for sivaji dying scene in muthal mariyathai

  அப்பா அரைமயக்கத்திலிருந்தார் போர்வையும் படுக்கையும் கலைந்து அலங்கோலமாக இருந்ததுஅவர் மெள்ளத் தலையைத் திருப்பிக் குரல் வந்த  திசையைப் பார்த்தார்.

  “ நீ வந்துட்டியா?  “

  நா குழறிய குரலில் ஒரு சின்ன சந்தோஷம் தொனித்தது அம்மா மெதுவான குரலில் சொன்னர்.

  “ இதோட ஆறேழு தரம் சிறுநீர் கழிச்சுட்டார்..

  நான் கவலையுடன் அப்பாவைப் பார்த்தேன்  அவர் அருகில் மேஜையில் வைத்திருந்த மாத்திரைகளைப் பார்த்தேன்இன்னும் ஒரு நாளைக்குத் தேவையான மாத்திரைகள் இருந்தனடாக்டர் நாளைக்குத்தான் வரச்சொல்லியிருந்தார்.

  கடந்த ஆறு மாத காலமாக இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை அப்பாவை ஆஸ்பத்திரியில் சேர்க்கவேண்டியிருந்ததுஅவருக்கு சிறுநீரகக்  கோளாறு காரணமாக ரத்தத்திலுள்ள அவசியமான தாது வஸ்துக்களெல்லாம்  சிறுநீர் மூலமாக வெளியேறிக்  கொண்டிருந்தன. ஆபத்தான நிலைக்குப்  போய்விடுவார்.

  ஆஸ்பத்திரிக்குப்போய் இரண்டு மூன்று நாட்களுக்கு  நாலைந்து பாட்டில்கள் ஊட்டத்தை செலுத்தினால்தான்   ஓரளவு நிலைமை சீராகி  வீட்டிற்கு வருவோம் ஆனால் இரண்டு வாரங்களுக்குள் உடம்பு சோகை பிடித்து பழைய கதிக்குத் திரும்பி விடும்.

  ” இது தற்காலிக வைத்தியம் தான்… வயதாகி விட்டதுபார்த்துக் கொள்ளுங்கள்  என்றார் டாக்டர் எச்சரிக்கையுடன்

  அப்பா தலையை மெள்ள என் பக்கம் திருப்பினார்

  ” இன்னிக்குத் தானே போகணும்?” 

  “இன்னிக்கு இல்லேப்பா..நாளைக்குத்தான் டாக்டர் வரச் சொல்லியிருக்கார்….

  “ அப்போஇன்னிக்கு இல்லையா?…”

  “ இன்னும் ஒரு நாளைக்கு மாத்திரை  இருக்கே!  அது முடிந்த பின் நாளைக்குப் போகலாமே

  என் பதில் அப்பாவுக்கு   ஏமாற்றமாக இருந்ததுமெதுவாக இரண்டு முறை பெருமூச்சு விட்டுக்கொண்டார்.  நான்  உடை மாற்றிக்கொள்ள உள்ளே போனேன்.

  “ அப்போ இன்னிக்கு இல்லையா?… இன்னிக்கே போ....லா..மே

 அவர் குரல் என் பதிலை எதிர்பார்க்காமல் தொய்வுடன்  தனக்குள்ளே  முனகலுடன்  முடிந்தது.

 எனக்கு அவர் வேதனையை  உணரமுடிந்தது இதை கவனித்துக் கொண்டிருந்த  அம்மா ” அப்பாவுக்கு என்ன பண்றதோ தெரியலேஅவருக்கு இன்னிக்கே டாக்டரைப் பாக்கணும்னு  இருக்கு” என்று எதிர்பார்ப்புடன் என் முகத்தைப் பார்த்தாள்.

சிறிது தயக்கத்துக்குப்பிறகு நான் சட்டையைப் போட்டுக் கொண்டு வெளியே கிளம்பினேன்.

 எங்கள் வீட்டுக்குச் சிறிது தூரத்தில்தான் நகரத்தின்  பிரதான சாலை இருந்தது.  ஆட்டோக்கள் கிடைப்பது அவ்வளவு ஒன்றும் சிரமம் அல்லகடந்த சில மாதங்களாக ஓயாமல் தொந்தரவுபடுத்தும்  அப்பாவின்  உடல் நிலையும் தீர்வு இல்லாத வைத்தியங்களும் எனக்குள் நிவர்த்தியில்லாத   துக்கத்தையும்  சலிப்பையும் ஏற்படுத்தியிருந்தன.

அப்பாவைப்பற்றி அப்படிப்பட்ட  சலிப்பு ஏற்பட்டு விடக் கூடாதென்று எனக்குள் எவ்வளவோ எச்சரிக்கை செய்து கொண்டேன்.

அப்பா  சமீப காலம்வரை ஆரோக்கியத்துடன் இருந்தவர் சொல்லப்  போனால் என்னை  விட  உடல் தெம்புடன் இருந்தவர்.  இரண்டு வருடங்களுக்கு முன்பு கூட தீராத  ஆஸ்துமா  வேதனையில் நான் தவித்தபோது  மழை கொட்டும் ராத்திரியில் வெளியே நனைந்து கொண்டு நடந்துபோய்  டாக்டரை அழைத்து வந்து  ஊசி போடச்செய்து  மூச்சுத்திணறலை  ஆறுதல்படுத்தினார்.  அவருக்கு வயதாகி உடல் நலம் இப்படிக்  கெட்டுப்போகுமென்று  நான்  எண்ணிப் பார்த்ததேயில்லை

பிரதான சாலை  ஒரு ஆட்டோ கூட இல்லாமல்  வெறிச்சோடிக் கிடந்தது. வித்தியாசமாகப் பத்தடிக்கு ஒரு போலீஸ்காரராக சாலையின் இருபக்கமும் காவல்காரர்கள் நின்றுகொண்டிருந்தார்கள்

சாலையின் விளக்குக் கம்பங்களில் குறுக்குமறுக்காக கட்சிக்கொடிகள் எந்த அக்கறையுமற்று ஊஞ்சலாடிக் கொண்டிருந்தன.

மெதுவாக  ஒரு காவல்காரரரை நெருங்கி   இன்னிக்கு என்ன  ஸார் விசேஷம்?..”  என்று கேட்டேன்.

“ இது தெரியாதா?.. பேப்பர்லே எல்லாம் வந்திருக்கே!   இந்தத் தெரு முனையிலே இருக்கற பெரிய ஆஸ்பத்திரியை  பிரதமர்  வந்து தொறக்கறாரே முதல் மந்திரி எல்லாம்  வரப் போறாங்களே!…..

“ அப்போ

இன்னும் ரெண்டு அவருக்கு இந்த ரோடு க்ளோஸ்

நான்  உதவியற்றுச்  சாலையின் வெறுமையைப் பார்த்துவிட்டு நடந்தேன்

வீட்டுக்குள் நுழைந்து சட்டையைக் கழட்டினேன்நான் வருவதை எதிர்பார்த்துக் கொண்டிருந்தமாதிரி   தலையைத்  தூக்கினார் அப்பா.

  இன்னிக்குப் போக முடியாதுப்பா…

“ என்னாச்சு? “ 

பிரதம மந்திரி இந்த வழியா போறாராம்.  அதனாலெ  ட்ராபிக்கை எல்லாம் நிறுத்தி வச்சிருக்கான் இப்போ போகலைன்னா  டாக்டரை நாளைக்குத்தான் பாக்க  முடியும்.  

 அப்பா  இரண்டு மூன்று தரம் புரண்டு படுத்தார் .பெருமூச்சு விட்டார்.

பிரதம மந்திரி ஒரு ஓரமா போனாநாம்ப ஒரு ஓரமா போக முடியாதா?”

அப்பாவைப் பார்த்து நான் சிரித்தேன்அவர் இதை விளையாட்டாகச் சொன்னதாகத் தெரியவில்லை  அவர் கேட்டது ஒரு வகையில் நியாயமாக யதார்த்தமாகக் கூட இருந்தது

மேஜையில் குடிக்கப்படாமல் இருந்த ஜூஸை  அவர் வாயில் மெள்ள  ஊற்றி   மீதி இருந்த மாத்திரைகளைப் போட்டேன் . போர்த்தி விட்டேன்

 “கொஞ்சம் பொறுத்துக்கோங்கோப்பா..நாளைக்குப் போயிடலாம்.. ஏற்கனவே நாளைக்குத்தான் டாக்டர்  அப்பாய்ண்ட்மெண்ட்  கொடுத்திருக்கார்..””

நான் மெதுவாக என் அறைக்குள் போய்க்கொண்டிருந்தேன்.

ஏம்ப்பா..பிரதமர் ஜனங்களோட சேத்தியில்லையா?..அவர் வர்ரார்னா.. ஜனங்களை  இப்படி விரட்டி அடிக்கணுமா?..எம்மாதிரி பிராணாவஸ்தை.”  பட்றவ…னெ..ல்லாம்………………………..”…

வார்த்தை வராமல்    துக்கம்  தொண்டையை அடைத்து    ஏதோ முணுமுணுப்பாக முடிந்தது.  ..

அவர் முணுமுணுப்பு ஒரு தனி மனிதனின் முணுமுணுப்பாகத் தொனிக்காமல் இது மாதிரி வேதனைக்கு உள்ளாகிக் கொண்டிருக்கும் எத்தனையோ பாமர மக்களின்  குரலாக ஒலித்தது. 

 மறு நாள் அப்பாவை டாக்டரிடம் கூட்டிக்கொண்டு போனேன்.

நிலைமை நிஜமாகவே கவலைக்கிடமாகி விட்டதுஅப்பா பெரிதாக மூச்சு விட்டுக்கொண்டிருந்தார். நிலைமையைப்  பார்த்து  அறிந்து கொண்ட  நர்ஸ் ஓடிப்போய்  டாக்டரை  அவசரமாக வெளியே அழைத்து வந்தார்.

டாக்டர்  அப்பாவின் நாடியைப் பரிசோதித்துப் பார்த்துவிட்டு   “அய்யய்யோ” என்றார். தனக்கு மட்டும் சொல்லிக் கொண்ட மாதிரி.

நேற்றே வந்திருக்க வேண்டும் டாக்டர்...  .வரமுடியாமல் போய் விட்டது….  என்றேன்  கவலையுடன்

 ”  அடடா.. நேற்று  வந்திருந்தா நல்லா இருந்திருக்குமே!   …..ஏன் இப்படி தாமதப்படுத்தினீங்க.   என்னா ஆச்சு?

 “ அது  வந்து..   ரோட்லே ….”  நான் சொல்ல வாயெடுத்தேன்.

அதற்குள் அப்பாவின் கையும்  தலையும்  வேகமாக அசைந்தது. 

 பேச்சு வராமல்   மூச்சு  தொண்டையில் சிக்கிக்கொண்டு உயிரின் இரைச்சலுடன் இழுத்துக் கொண்டிருந்தது ..

 அப்பா  நடுங்கிய விரல்களை அந்தரத்தில் யாரையோ சுட்டிக் காட்டியவாறு  அவர் சொன்ன அந்த முடிவான  வார்த்தை…..

Image result for sivaji dying scene in muthal mariyathai

 “ பி….தழ்..  ம்ம ….. ர்.”.

 

சில ஆவணங்கள் சிக்கின – ஈஸ்வர்

 

Image result for raid in chennai

புலனாய்வுத்துறை, அந்த வீட்டில் அதிகாலை ஐந்து மணி அளவில் வந்து சோதனைபோட ஆரம்பித்துவிட்டனர் என்ற செய்தி அதற்குள் அந்தப் பெரிய வீதியில் எப்படிப் பரவிற்று என்றே இன்னமும் யாருக்கும் சரியாகத் தெரிந்திருக்கவில்ல. இருபது, முப்பது மனிதர்களாவது அங்கு குழுமி விட்டனர்.  பங்களாவினுள் இருந்து இரண்டு பேர் வெளியே வர, அவர் முன்னர் சிறு மைக்கை நீட்டியவாறே ஒரு ஊடகக்காரி கேள்விகளை ஆரம்பித்துவிட்டாள்.

‘சார், புலனாய்வுத்துறை, அஞ்சு மணிக்கெல்லாம் இந்தப் பங்களாவை சோதனை போடறது எங்களுக்குத் தெரியும் சார்.  நீங்க பங்களாவோட  பாத்ரூமைக் கூட சோதனை போட்டதா செய்தி வெளில கசிய ஆரம்பிச்சுது .ஏதாவது கெடைச்சுதா சார்.. மக்கள் தெரிஞ்சிக்க ஆசைப்படறாங்க..”

Image result for raid in minister's house

சங்கரலிங்கம் எதுவும் சொல்லும் மன நிலையில் இப்பொழுது இல்லை.  அதிகாலை மூன்றரை மணிக்கே அவர் எழுப்பப்பட்டு விட்டார். வெளியே கார் வந்து நின்றதும், அழைப்பு மணி, ஒலித்ததும்தான் அவருக்குத் தெரியும். எதற்குமே நேரம் கொடுக்கப்படவில்ல. இன்னும் இருவர் வீடுகளுக்குப்  போய், அவர்களையும் இதுபோல் அவசரம் அவசரமாக அதே வண்டியில் தூக்கிப் போட்டுக்கொண்டு அவர்கள் வந்த வண்டி இந்த பங்களாவுக்கு வரும்போது காலை மணி நாலரை ஆகியிருந்தது.  புலனாய்வுத்துறை வாழ்க்கை அவருக்குத் தலையில் எழுதப்பட்டிருந்ததா, என்று அவருக்கு அடிக்கடி சந்தேகம் வரும்.

இந்த வீட்டுக்காரர்கள் அழைப்பு மணி ஒலி கேட்டு, கதவைத் திறந்தவர்கள் அதிர்ந்துவிட்டனர். சடசடவென்று உள்ளே வந்த அதிகாரிகள் , ஒன்றும் பேசாமல் அடையாள அட்டைகளைக் காட்டி, தொலைபேசி இணைப்புக்களைத் துண்டித்து, கை பேசிகள் அனைத்தையும் தங்கள் வசமாக்கிக் கொண்டு, வீட்டில் இருந்த, அனைத்துக் கணினிகளையும் பிடுங்கி, அவற்றினுள் கடந்து, புலனாய்வை மேற்கொண்டபோது மணி ஐந்தைத் தொட்டுவிட்டது.

Related image

அவர்தான் முதலில் பாத்ரூமுக்குப் போனார். அவர் அவசரம் அவருக்கு. காலையில் வேகவேகமாக வந்ததன் விளைவு.  இந்தப் பெண்ணிடம் , அதை எப்படிச் சொல்லுவது.?

“ஆமாம்..  சில டாக்யுமெ…. ‘ நிறுத்துகிறார்.  ஊடக மொழி அவருக்கு நினைவுக்கு வர..

“ஆமாம்.. சில ஆவணங்கள் சிக்கி இருக்கு. இதுக்கு மேலே எதுவும் கேக்காதீங்க…

‘சார்..சார்…”

அதிகாரிகள் இருவரும் காலை காஃபி சாப்பிட, அருகில் இருக்கும் ஏதோ ஒரு நாயர் கடைக்குப் பறக்கின்றனர்.

முதலில் அவர்களிடம் சிக்கிய ஒரு ஆவணம் அவர்கள் அந்த வீட்டில் இருந்து எடுத்த ஒரு டைரியில் இருந்த ஒரு சிறு குறிப்புத்தான்.

‘கட்டினவதானே’ன்னு கண் மூடித்தனமா கம்முனு இருந்தே, கடைசிலே கண்ணை மூடிக்கிட்டு கண்ணீர் சிந்தற நிலைக்குக் கொண்டு போயிடும்’டா., வாத்தியாரா இல்லாம  பெத்த அப்பனா  சொல்லணம்னு தோணிச்சு. சொல்லிட்டேன். சின்ன வயசுலயே உனக்குச் சொல்லியிருக்கேன். சமயத்துல உன் போக்கே சரியில்லயோன்னு தோணுது.’

பெத்த தந்தை, பையனை  விட்டுப்போய் ஓராண்டு காலம் ஆகிவிட்டதாம். மகன் இவ்வளவு உயர்ந்த பதவியில் இருந்தும், தந்தை எங்கோ போரூரில் தனியாக இருக்கிறாராம்.

என்னென்ன ஆவணங்கள் சிக்கின என்று இன்னமும் வெளியில் தெரியாது. புலனாய்வுத் துறை எப்பொழுதுமே ஊடகங்களிடம் இருந்து ஒதுங்கிநின்றே செயல்பட, பல காரணங்கள் இருக்கின்றன.

அடுத்தபடியாக அவர்களிடம் சிக்கிய ஒரு முக்கிய ஆவணம்தான் அவர்களை மேலும் குழப்பியது.

குமுதம், விகடன் பத்திரிகை அளவில் ஆன ஒரு தனி மனிதனின் கையேடு. குழந்தைகள் பள்ளிப்  புத்தகங்கள் வாங்கியவுடன் அவற்றிற்கு அட்டைபோடும்  பழுப்பு வண்ணத் தாள்களில் உருவான ஒரு ஆவணம்.

அதைப் பார்த்தால், அதற்கு உரியவர் ஒரு பெரிய பதவியில் இருக்கும் உயர்ந்த அதிகாரி என, நிச்சயமாக யாரும் சொல்லமாட்டார்கள். பக்கத்திற்குப் பக்கம் வட்ட வடிவில் இந்தியத் திரை உலகின் அவ்வளவு நடிகைகளும் ஏதாவது ஒரு கோணத்தில்,  ‘one piece or two piece ‘   துணிகளில் அனாயாசமாகச் சிரித்துக்கொண்டிருந்தனர். ஆனால் அந்தப் பக்கங்கள்  அனைத்திலும் மையமாக, இந்த வீட்டு மனையாள் ஒய்யாரமாகக், கிறங்கடிக்கும் சிரிப்பில் நின்றிருந்தாள்.

Image result for silk smitha

இவர்களில் அனைவரிலும் மேலானவள் என் செல்லம்-             ஒவ்வொரு பக்க அடியிலும், இந்தக்குறிப்பு.

கிறங்கடிக்கும் அந்த சிரிப்புக்காரி அந்தக் கையகலத் துணித் துண்டுகள்கூட இல்லாத நிலையில் பலவகையான நிலைகளில் படமாக இருந்தாள்

திரை உலகத் தாரகைகளைப்போல் இவள் சிவப்பு வண்ணத்தினள் அல்ல. ஆனால் அவர்களில் பலரைவிட இவள், உடல் வளத்தில் மிகச் செழுமையானவளாகவே இருந்தது, வீட்டிற்குள் வந்தவுடன் அவளைப் பார்த்தவுடனேயே,  இந்த உண்மை, புலனாய்வுத் துறை அதிகாரிகள் அனைவரின் எக்ஸ்ரே கண்களிலும் பதிந்துவிட்டது.  நெடுநெடுவென்ற உயரம் வேறு. கண்களை அகற்ற முடியாத வளைவுகள். . அடக்க அடக்க அடங்காத அரபிக்குதிரை போன்ற தீட்சண்யமான கண்கள். நான் வேற ஜாதி,  என்ற அட்டகாசப் பார்வை.  இதுதான் அவள் வீட்டுக்காரனை, அவன் உயர்ந்த பதவியில் இருந்த ஆரம்பகாலக் கட்டங்களில் அவளிடம் ஈர்த்திருக்கவேண்டும்.

பாவிப் பய, குப்புற விழுந்துட்டான்.

புலனாய்வுத் துறைக்குப் புரிந்துவிட்டது.

ஆனால் புரியாமல் குழப்பியது மூன்றாவது ஆவணம்தான்.

அடுத்தபடியாக புலனாய்வுத்துறை ஆராய்ந்துகொண்டிருந்த ஒரு ஆவணம், சில வங்கிக்கணக்குகள்.. அவ்வப்பொழுது பல லட்சம் வரவு வைக்கப்பட்டு, இரண்டு மூன்று நாட்களில், வேறு எங்கெங்கோ புறப்பட்டுப் போயிருந்தன. இந்த வங்கிக் கணக்குப் புத்தகங்கள் இந்த வீட்டு மனையாளின்  தனி பீரோவில் பல விலை உயர்ந்த புடவைகளின் நடுவில் மிக பத்திரமாக இருந்தன.  அதே பீரோவில், தனிப் பெட்டகமாய் ஒளிந்திருந்த ஒரு ரகசிய அறையில் அவர்களுக்குக் கிடைத்த ஒரு சாவிக்கொத்தில் ஒன்று, வங்கி லாக்கர்சாவி என்பது இவ்வளவு வருட அனுபவத்தில் அந்த புலனாய்வு மூளைகளுக்கு உடனடியாகத் தெரிந்த விஷயமாக இருந்தது.

முதலில் அதுபற்றிக்கூற அந்த வீட்டு ஆண் மறுத்துவிட்டான்.

“சார்,  நீங்க என்னைத்தானே விசாரிக்க வந்திருக்கீங்க?  என்னை என்ன வேணும்னாலும் கேளுங்க சார்.., ரத்னா பாவம் சார், அவ ஒரு சாதாரண அரசாங்க ஊழியர் மட்டும்தான்.  அவளையும் வாட்டுறீங்க. இது ரொம்பவே அராஜகமா இருக்கு.”

“உங்களுக்கே தெரியும் மிஸ்டர் சரவணன்.  தலைமைச் செயலர் அலுவலகத்துக்கு உள்ளயே போயி நாங்க கட்டாயமா சோதனை போடவேண்டிய காலத்துல இப்போ இருக்கோம். யாரை, எப்போ, எப்படி சோதனை போடணும், அப்படிங்கற இந்த விஷயங்களை நாங்க பாத்துக்கறோமே, ப்ளீஸ்..”

அதற்குப்பிறகு சரவணன் IAS –சால் பேசமுடியவில்லை.

“சாரி ரத்னா,”  அவள் முகத்தைத்  தடவியவாறே, அவளுக்கு ஆறுதல் சொல்கிறான் சரவணன்.  “ இவனுகள்ள சில பேரு இப்படித்தான். வலுக்கட்டாயமா, பாத்ரூமுக்குள்ள கூட புகுந்து சோதனை போடுவானுங்க. நாம ஒண்ணும் செய்யமுடியாது. மடில கனமிருந்தா பயப்படணும்.. நமக்கென்ன பயம்?”

சரவணனால் கண்ணீர் விடும் நிலையில் உள்ள ரத்னாவை அணைத்துக்கொள்ளாமல் இருக்க முடியவில்லை.

“சார்,  நீங்க உங்க சம்சாரத்தோட இதோ,  இந்த சோஃபாவுல, உட்கார்ந்துகிட்டு, உங்க பாணியிலயே ஆறுதல் சொல்லிக்கிட்டு இருங்க. நாங்க மத்த இடங்கள்லயும் சோதனை போட்டுடறோம்.”.

“இவன்லாம் எப்படி ஒரு IAS  ஆபீசர் ஆனான்.. இவனும் ஒரு களவாணிப்பயதானோ?”- மனதில் ஓடிய ஓட்டத்தை அடக்கிக்கொண்டு சங்கரலிங்கம் அடுத்துச் செய்யவேண்டிய காரியங்களில் கவனத்தைச் செலுத்தினார்.

வங்கி பாதுகாப்புப்பெட்டகம் வேறு பல ஆவணங்களை அவர்களிடம் கொடுத்தது.

சரவணன் வங்கி மேலாளர் எதிரேதான் அமர்ந்திருந்தான். முகம் சற்றே வாடி இருந்தது.

சரவணனும் ‘நல்ல மூக்கும் முழியுமாக’ இருந்தவன்தான். கூர்ந்து நோக்கும் கண்கள். நீண்ட நாசி. சட்டென்று மறந்துவிட முடியாத முக அமைப்பு. மனைவியை விட நல்ல நிறம் வேறு. காரில் இருந்து இறங்கி,  கோட்டை வாசலில் சும்மா நின்றால் கூட ,  கடக்கும் முக்கால்வாசிப் பெண்கள் வழிய வந்து ஆங்கிலத்தில் வந்தனம் சொல்லாமல் போகமாட்டார்கள். அதில் பாதி, கடந்த பின்பும், ஒருமுறையாவது, இவனைத் திரும்பிப் பார்க்காமல், போயிருக்க மாட்டார்கள். அவனுக்கு அப்படி ஒரு ராசி.

இருந்தாலும் விவரம் அறிந்த எந்த ஜோசியனும், ரத்னாவின் ராசி அவனுடையதை அடித்துவிட்டது என்றே சொல்லி இருப்பார்கள்.  சில வருடங்களுக்கு முன் ஏதோ ஒரு அமைச்சரவைக் கூட்டத்தின்,  ஆரம்ப கட்டப் பணிகளுக்காக அவன் ஒரு அமைச்சரின் அறைக்குள் போனவன், தற்செயலாக அங்கு  வேறு ஏதோ காரணமாக  வந்த ரத்னாவைப் பார்க்க நேரிட்டது.   அவள் என்ன செய்வது என்றே தெரியாமல் சிறு புன்முறுவல் பூத்தாள்.   அவ்வளவே.  சரவணன் அன்று விழுந்தவன்தான்.  இதை ஜோசியர்கள் வேறு எப்படிச் சொல்ல முடியும்?

ஆனால் ரத்னா எதற்காக அந்த அமைச்சர் அறைக்கு அடிக்கடி போனாள் என்று அவன் இதுவரை கேட்டதில்லை. இப்பொழுதும் போகிறாளே, ஏன் என்றும் அவனுக்குத் தெரியாது. அவளுடைய வங்கிக் கணக்குகளை அவன் ஆராய்ந்ததே இல்லை.

அவள் உடலை மட்டுமே ஆராய்ந்திருக்கிறான். அவளும் அதற்கு முழுவதுமாகவே சம்மதித்து, அவளைப்பற்றி வேறு எதுவும் அவன் அறிந்திராதவறே  பார்த்துக்கொண்டிருந்தாள்.

வங்கி பாதுகாப்புப் பெட்டகத்தினுள் கிடைத்த வேறு சில ஆவணங்கள், அந்தப் புலனாய்வுத்துறை அதிகாரிகளை மேலும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கின.

Related image

ரத்னாவின் தனிப் பெயரில் சென்னையிலும், கோவையிலும், பெங்களூரிலும் என மூன்று தனி பங்களாக்களும், மும்பையில் இரு அடுக்கு மாடிக்குடியிருப்புக்களும் இருந்தன. அவற்றின் மதிப்பே பல கோடிகளைத் தாண்டியது. வேறு சில வங்கிகளிலும் அவள் பெயரில் பல லட்சக்கணக்கான நீண்ட கால வைப்புத்தொகைகள் இருந்தன. ஒரு கோடை பங்களாவில் இருந்த நகைகளின் மொத்த மதிப்பு, நிச்சயமாக, ஒரு சாதாரண அரசு ஊழியர் இவ்வளவு நகைகள் வாங்க, நியாயமான வழியே இல்லை என்று பார்த்தவுடன் கூற வைத்தது..

கடைசியாக  இரண்டு மூன்று வருடங்களுக்கு முன்னர் சரவணனைப் பற்றி, அவன் பள்ளி இறுதிப் படிப்பு முடித்த சமயம் ஒரு பத்திரிகையில் வந்த பேட்டி அவர்களுக்குக் கிடைத்த இன்னொரு ஆவணமாயிற்று.

பள்ளி இறுதிச் சுற்றுத்தேர்வில் அவன் மாகாணத்தில்,  அவன்தான் முதல் மாணவன்.  அவன் ஆசிரியர்களில் சிலர் அப்பொழுது கொடுத்திருந்த பேட்டிகள்:

“சரவணன் நிஜமாகவே சூது வாது அறியாப் பிள்ளைங்க..   தான் உண்டு, தன் வேலை உண்டுன்னு இருப்பான். அடுத்தவங்க காரியங்கள்ல தலையிடவே மாட்டான். வீட்டுலயும் அப்படித்தான்னு அவங்க அப்பாவே ஒரு முறை எங்ககிட்ட சொல்லிருக்காருங்க.” – ஒரு ஆசிரியர்.                          “

“ஆனா அவன் பாணியே தனிங்க.. அவன் சிலரை நம்பினா கண்மூடித்தனமா நம்பிடுவானோன்னு எனக்குத் தோணும்.  இதக் கூட அவங்க அப்பாதான் எங்ககிட்டியே கண்டுபிடிச்சுச் சொல்லி இருக்காரு. பெத்தவங்களுக்குத் தெரியாததாங்க?”- இன்னொரு ஆசிரியர்.

சங்கரலிங்கம் பத்திரிகைகளுக்கு நேரிடைப் பேட்டிகள் கொடுப்பத்தைத் தவிர்ப்பவர்.

ஆனால் இப்படியும் சில அதிகாரிகள் வரலாற்றில் இருப்பதை அவர் அரசாங்கத்திடம் சொல்லவே விரும்புகிறார்.   என்னவென்று சொல்வது?

சிக்கிய சில ஆவணங்கள் சில உண்மைகளைப் புட்டு வைத்து விட்டன.

அங்கு கிடைத்த ஆவணங்கள்,  அவர்களுக்கு அடுத்து எங்கு அதிரடி சோதனை நடத்தவேண்டும் என்று ஊர்ஜிதப்படுத்துகின்றன.

இப்பொழுது இவர்கள் இருவரில் யாரைத் தூக்கி உள்ளே போடவேண்டும்?

இதுவே சங்கரலிங்கம் முன் ஊசலாடும் கேள்வி.