குதூகலம் தரும் குழந்தை பாடல்கள் – சதுர்புஜன்-                                           

குழந்தைப் பாடல்கள் - பூஞ்சிட்டு

  குவிகம் வாசகர்களுக்கு வணக்கம்.

  “குதூகலம் தரும் குழந்தை பாடல்கள்” என்ற பாடல் தொடரை உங்கள் வீட்டு குழந்தைகளுக்காக வழங்குகிறேன்.

  எளிய நடையில் குழந்தைகளுக்கு ஏற்றவாறு ஒவ்வொரு பாடலையும் அமைக்க முயற்சிக்கிறேன். ஒவ்வொரு குவிகம் மாத இதழிலும் ஒன்று, இரண்டு அல்லது மூன்று சிறிய பாடகள் இடம் பெறும். பாடல்களை செல்வி சாய் அனுஷா அழகாக தன கொஞ்சும் குரலில் பாடிய வீடியோக்களையும் இத்துடன் இணைத்துள்ளோம்.

  பார்த்து, கேட்டு மகிழுங்கள் !

இதுவரை இந்த பாடல் தொடரில் இடம் பெற்றவை:

  1. பிள்ளையார் பிள்ளையார் – ஜூலை 2020
  2. அம்மா அப்பா ! –  ஜூலை 2020
  3. ஹையா டீச்சர் ! – ஆகஸ்ட் 2020
  4. இயற்கை அன்னை ! – ஆகஸ்ட் 2020
  5. எனது நாடு – செப்டம்பர் 2020
  6. காக்கா ! காக்கா ! – செப்டம்பர் 2020
  7. செய்திடுவேன் ! – அக்டோபர் 2020
  8. மயிலே! மயிலே! மயிலே! – அக்டோபர் 2020
  9. நானும் செய்வேன் ! – நவம்பர் 2020
  10. அணிலே ! அணிலே ! –  நவம்பர் 2020
  11. எல்லையில் வீரர் ! – டிசம்பர் 2020
  12. பலூன் ! பலூன் ! பலூன் ! – டிசம்பர் 2020
  13. ஜன கண மன ! – ஜனவரி 2021
  14. ஊருக்குப் போகலாமா ? – ஜனவரி 2021
  15. எங்கள் வீட்டு மொட்டை மாடி ! – பிப்ரவரி 2021
  16. பட்டம் விடலாமா ? – பிப்ரவரி 2021
  17. சாமி என்னை காப்பாத்து ! – மார்ச் 2021
  18. கடற்கரை போகலாம் ! – மார்ச் 2021
  1. பிறந்த நாள் !

மின்னம்பலம்:சிறப்புப் பார்வை: ஏன் பிறந்த நாள் கேக்கில் மெழுகுவத்தி ஏற்றுகிறோம்?

பிறந்த நாள் கொண்டாட வாங்க – என்

வீட்டுக்கு எல்லோரும் வாங்க !

இனிப்புகள் தருவாள் அம்மா –

சேர்ந்து சுவைக்கலாம் வாங்க !

 

கோவிலுக்கு போகலாம் வாங்க !

சேர்ந்து கும்பிடலாம் வாங்க !

நல்லபடி வாழனும் என்று – நாம்

அனைவரும் வேண்டலாம் வாங்க !

 

நண்பர்கள் எல்லோரும் வாங்க – நாம்

குஷியாய் இருக்கலாம் வாங்க !

வேடிக்கை விளையாட்டு எல்லாம் – நாம்

சேர்ந்து ஆடலாம் வாங்க !

 

கேக்கு உண்ணலாம் வாங்க – நீங்க

கேக்கறதை தருவேன் வாங்க !

பாட்டு பாடலாம் வாங்க – சேர்ந்து

ஆட்டம் போடலாம் வாங்க !

 

அல்லி, ரங்கா, ரமேஷ், துர்கா –

அனைவரும் வீட்டுக்கு வாங்க !

ஆண்டுக்கு ஒருமுறை வரும் இந்நாள் –

சேர்ந்து கொண்டாட வாங்க !

 

  1. வேப்ப மரம்

விதையாகும் கதைகள்: உதிராத கடைசி இலை! - வத்திக்கான் செய்திகள்

எனக்கு பிடித்தது வேப்ப மரம் !

என் நாட்டில் எங்கும் வேப்ப மரம் !

கசப்புகள் நிறைந்த வேப்ப மரம் !

மருத்துவ குணங்களும் நிறைந்ததுவாம் !

 

எங்கோ தொடங்கும் ஒரு காற்று –

வேப்ப மரக் கிளை நுழைந்து வரும் !

மூச்சை முழுதாய் விட்டுப் பார்த்தால்

மனமும் உடலும் மலர்ந்து விடும் !

 

வயிற்றுப் பிரச்சினை வந்து விட்டால்

வேப்பங் கொழுந்தே மருந்தாகும் !

வேப்ப மர நிழலில் போய் நின்றால்

வெய்யில் நம்மை வாட்டாதே !

 

வேப்பம் பூவைப் பார்த்து விட்டால்

பாட்டி எடுத்து வைத்திடுவாள் !

பாட்டி கையால் ரசம் செய்தால்

பத்து ஊருக்கு மணந்திடுமே !

 

அம்மை போன்ற நோயைக் கூட

வேப்ப இலையால் விரட்டிடுவோம் !

அம்மா போல் எனக்கு வேப்ப மரம் !

அரவணைக்கும் என்னை வேப்ப மரம் !

 

வேப்பங்காய் போல் எதுவேனும்

இளமையில் இருப்பது கண்டீரோ ?

பழுத்து விட்டால் வேப்பம் பழமும்

இனிக்கும் என்பதை அறிவீரோ ?

 

மரமே ! மரமே ! வேப்ப மரமே !

என் வீட்டில் என்றும் இருந்து விடு !

தருவேன் ! தருவேன் ! அன்பைத் தருவேன் !

என் நாட்டை என்றும் காத்து விடு !

 

              

குறுங்கவிதைகள் – என் பானுமதி

 

தற்சமயம்

சிறுமி சோப்பு நுரைக் குமிழில்

விளையாடுகிறாள்

வண்ண வண்ண பலூன்கள்

அவை இனிமை மறைந்தாலும்.

நதியிலாடும் பூவனம் - நீலாவின் குறுங்கவிதைகள் - Photos | Facebook

பிரதி பலிப்பு

மொட்டை மாடியில்

கண்ணாடி விரிசலென

வெய்யில்

ஜவ்வரிசி வடகம்

நேற்று

அந்தத் தோட்டப் பூ தேன் மிக்கது

சிலிர்த்தது பொன் வண்டு

அது

தோட்டக்காரனை இன்று அறிந்தது.

 

கூடு

எப்படி இந்தக் கூட்டில்

எது வழியே

எங்கிருந்து

எப்படி என்றெல்லாமே

பதிலுடன் கூடிய வினாக்களோ

இல்லையோ

கேளுங்களேன் சற்று

ஏனென்பதை மட்டும்.

 

வாதை

சலசலக்கும் கீற்றுகள்

இரையும் மனம்

மௌன வாய்.

 

ஆயாசம்

இளஞ் சிவப்பு பாதங்கள்

ஊன்றிய கட்டைச் சுவர்

ஒரே முனை நோக்கித் தவம்

எதிரெதிரே பார்க்கையில்

கோதும் சிறகு

ஆயாசப் பேடை

 

மீறல்

அவ்வப்போது கரையை சிறிதாக

மீறுவதில் உனக்கு

எத்தனை கேள்விகள்

 

 

ஏடாகூடக் கவிதைகள் – செவல்குளம் செல்வராசு

Types of kisses and what they mean : உங்க துணையோட உடம்புல நீங்க எந்தெந்த இடத்துல குடுக்குற முத்தத்துக்கு என்னென்ன அர்த்தம் தெரியுமா? - Tamil BoldSky

வெற்றிலைச் சிவப்பை

பார்க்கச் சொல்லி

வேலாய்க் கூரிய நாக்கை

வெளி நீட்டிக் காட்டுகிறான்

சிலிர்க்கிறது உள்ளுக்குள்

 

அவசர அவசரமாய்

உடை திருத்தி

வெளிவருகையில்

திடுக்கிடச் செய்தது

பயந்து ஓடிய

திருட்டுப் பூனை  

 

எக்கணத்திலும்

வாசல் நுழையக்கூடும்

விளையாடப் போன சின்னவன்

பாதி உரித்த பழங்களை

மூடிக்கூட வைக்கவிடாமல்

என்ன அவசரம் இந்த மனுசனுக்கு

 

சுரோனிதக் கனவுகளில்

பிசுபிசுக்கத் துவங்குகையில்

நாசியேறித் தொல்லை செய்கிறது

நன்கு பழகிய

முதுகுவலித் தைலத்தின் நெடி

 

மனப் பிறழ்விலிருந்து

மீள முயல்கிறேன்

மனம் பிறழ்வையே விரும்புகிறது

மதுரக் கோப்பைக்குள்விரும்பி விழுந்த

சிற்றெரும்பாய் நானும்

மலகோப்பைக்குள்

தவறி விழுந்த

பல்லியாய் அவளும்

மகளிர் தினக் கவிதை! – சுரேஜமீ

சர்வதேச மகளிர் தினம் இன்றுஊனிலே வைத்து நம்மின்
உயிரினை வளர்த்த தாயும்
ஏனைய உறவு்க் கெல்லாம்
மேலையாம் மனைவி, தோழி
கூடவே பிறந்த தங்கை
கொஞ்சியே வளர்த்த அக்கா
தேடியே வந்த டைந்த
தெய்வ மகள்கள் என்றே

மண்ணிலே பெண்மை இல்லா
மாண்புகள் ஏதும் உண்டோ?
நுண்ணிய கிருமி நம்மை
நொந்திடச் செய்த போதும்
மண்ணிலே நம்மைக் காத்த
மருத்துவர் செவிலி யர்கள்
கண்ணிலே கண்ட தெய்வம்
காலமும் போற்று வோமே!

பெண்களைக் கொடுமை செய்யும்
பேய்களை அழிப்போம் இன்றே
பெண்களைக் கேலி செய்யும்
புல்லரை ஒழிப்போம் நின்றே
பெண்களை வணிக நோக்காய்
பின்னிடும் மடமை போக்கி
பெண்களைக் காத்து நிற்போம்
பெருமையாம் ஆண்மை அஃதே!

மானுடம் தழைக்க நன்று
மாதவம் நிலைக்க என்றும்
நானிலம் ஓங்க வென்று
நலமெலாம் பெருக நின்று
வானவர் போற்ற நீண்டு
வையமும் வாழ்த்த என்றும்
தானிகர் அற்ற மாதர்
சக்தியை வணங்கு வோமே!

குதூகலம் தரும் குழந்தை பாடல்கள் -ஜி.பி.சதுர்புஜன்-

  குவிகம் வாசகர்களுக்கு வணக்கம்.

  “குதூகலம் தரும் குழந்தை பாடல்கள்” என்ற பாடல் தொடரை உங்கள் வீட்டு குழந்தைகளுக்காக வழங்குகிறேன்.

  எளிய நடையில் குழந்தைகளுக்கு ஏற்றவாறு ஒவ்வொரு பாடலையும் அமைக்க முயற்சிக்கிறேன். ஒவ்வொரு குவிகம் மாத இதழிலும் ஒன்று, இரண்டு அல்லது மூன்று சிறிய பாடகள் இடம் பெறும். பாடல்களை செல்வி சாய் அனுஷா அழகாக தன கொஞ்சும் குரலில் பாடிய வீடியோக்களையும் இத்துடன் இணைத்துள்ளோம்.

  பார்த்து, கேட்டு மகிழுங்கள் !

இதுவரை இந்த பாடல் தொடரில் இடம் பெற்றவை:

  1. பிள்ளையார் பிள்ளையார் – ஜூலை 2020
  2. அம்மா அப்பா ! –  ஜூலை 2020
  3. ஹையா டீச்சர் ! – ஆகஸ்ட் 2020
  4. இயற்கை அன்னை ! – ஆகஸ்ட் 2020
  5. எனது நாடு – செப்டம்பர் 2020
  6. காக்கா ! காக்கா ! – செப்டம்பர் 2020
  7. செய்திடுவேன் ! – அக்டோபர் 2020
  8. மயிலே! மயிலே! மயிலே! – அக்டோபர் 2020
  9. நானும் செய்வேன் ! – நவம்பர் 2020
  10. அணிலே ! அணிலே ! –  நவம்பர் 2020
  11. எல்லையில் வீரர் ! – டிசம்பர் 2020
  12. பலூன் ! பலூன் ! பலூன் ! – டிசம்பர் 2020
  13. ஜன கண மன ! – ஜனவரி 2021
  14. ஊருக்குப் போகலாமா ? – ஜனவரி 2021
  15. எங்கள் வீட்டு மொட்டை மாடி ! – பிப்ரவரி 2021
  16. பட்டம் விடலாமா ? – பிப்ரவரி 2021

           

 

    1. சாமி என்னை காப்பாத்து !
இதன் வீடியோ காண  கீழே கொடுக்கப்பட்ட லிங்கை சொடுக்கவும் !

சாமி என்னை காப்பாத்து !

சமத்தாய் இருக்கேன் – வழி காட்டு !

கோவில் வந்து கும்பிடறேன் !

குளித்துப் பூஜைகள் செய்திடறேன் !

 

நல்லதே நானும் எண்ணுகிறேன் !

நல்ல வார்த்தையே சொல்லுகிறேன் !

நல்ல காரியங்கள் செய்திடறேன் !

நல்ல பெயர் நானும் எடுத்திடுவேன் !

 

இயற்கை என்பதும் நீதானே !

எல்லா உயிர்களும் நீதானே !

அல்லா இயேசு எல்லா பேரும்

இறைவன் உந்தன் பெயர்தானே !

 

உயிர்களில் நானும் ஒருவன்தான் !

உன்னைப் போற்றியே வாழுகிறேன் !

என்னைக் காக்கும் ஏதோ சக்தி –

அந்த சக்தியும் நீதானே !

 

இறைவா, உன்னை வேண்டுகிறேன் ! என்

திறமைகள் பளிச்சிட வேண்டுகிறேன் !

உன்னை நானும் துணை கொண்டேன் !

வெற்றி நடை நான் போட்டிடுவேன் !

 

  1. கடற்கரை போகலாம் !

 

அப்பா, கடற்கரை போகலாம் வா !

கடலை ரசிக்க போகலாம் வா !

அலை அலையாக வந்திடுமே !

ஆனந்தம் எனக்கு தந்திடுமே !

 

பொங்கும் கடலை பார்க்கணுமே !

கால்களை நனைத்து ஆடணுமே !

கைகளை நீரில் அளையணுமே !

கை கோர்த்து நாம் விளயாடணுமே !

 

பெருசு பெருசாய் அலை வருமே !

பேரிரைச்சலுடன் அது வந்திடுமே !

பக்கத்தில் வந்தால் பயமுறுத்தும் !

எதிர்த்து நின்றால் ஓடிவிடும் !

 

கொஞ்சம் கொஞ்சமாய் கரை இருந்து –

உள்ளே உள்ளே போகணுமே !

கையைப் பிடித்து நான் நிற்பேன் !

அலையுடன் சண்டை போட்டிடுவேன் !

 

சுண்டல் முறுக்கு வாங்கித் தா !

பஜ்ஜியும் சூடா இருக்கப்பா !

பலூனை சுடலாம் குறி பார்த்து !

குதிரை சவாரியும் செய்திடலாம் !

 

நீயும் நானும் தம்பியுமே –

மணலில் கோபுரம் கட்டிடலாம் !

சோழி கிளிஞ்சல் பொறுக்கிடலாம் !

பந்தும் போட்டு ஆடிடலாம் !

 

அப்பா, கடற்கரை போகலாம் வா !

கடலை ரசிக்கப் போகலாம் வா !

அலை அலையாக வந்திடுமே !

ஆனந்தம் எனக்கு தந்திடுமே ! 

 

               **************************************************

 

 

 

 

 

 

 

 

            

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

குதூகலம் தரும் குழந்தை பாடல்கள் -ஜி.பி.சதுர்புஜன்-

 

  குவிகம் வாசகர்களுக்கு வணக்கம்.

  “குதூகலம் தரும் குழந்தை பாடல்கள்” என்ற பாடல் தொடரை உங்கள் வீட்டு குழந்தைகளுக்காக வழங்குகிறேன்.

  எளிய நடையில் குழந்தைகளுக்கு ஏற்றவாறு ஒவ்வொரு பாடலையும் அமைக்க முயற்சிக்கிறேன். ஒவ்வொரு குவிகம் மாத இதழிலும் ஒன்று, இரண்டு அல்லது மூன்று சிறிய பாடகள் இடம் பெறும். பாடல்களை செல்வி சாய் அனுஷா அழகாக தன கொஞ்சும் குரலில் பாடிய வீடியோக்களையும் இத்துடன் இணைத்துள்ளோம்.

  பார்த்து, கேட்டு மகிழுங்கள் !

இதுவரை இந்த பாடல் தொடரில் இடம் பெற்றவை:

  1. பிள்ளையார் பிள்ளையார் – ஜூலை 2020
  2. அம்மா அப்பா ! –  ஜூலை 2020
  3. ஹையா டீச்சர் ! – ஆகஸ்ட் 2020
  4. இயற்கை அன்னை ! – ஆகஸ்ட் 2020
  5. எனது நாடு – செப்டம்பர் 2020
  6. காக்கா ! காக்கா ! – செப்டம்பர் 2020
  7. செய்திடுவேன் ! – அக்டோபர் 2020
  8. மயிலே! மயிலே! மயிலே! – அக்டோபர் 2020
  9. நானும் செய்வேன் ! – நவம்பர் 2020
  10. அணிலே ! அணிலே ! –  நவம்பர் 2020
  11. எல்லையில் வீரர் ! – டிசம்பர் 2020
  12. பலூன் ! பலூன் ! பலூன் ! – டிசம்பர் 2020
  13. ஜன கண மன ! – ஜனவரி 2021
  14. ஊருக்குப் போகலாமா ? – ஜனவரி 2021
  1. எங்கள் வீட்டு மொட்டை மாடி !

எங்கள் வீட்டு மொட்டை மாடி !

எனக்குப் பிடித்த மொட்டை மாடி !

எத்தனை முறை வந்து போனாலும்

எனக்கு அலுக்காத மொட்டை மாடி !

 

காக்கா குயில் கிளியைப் பார்த்திடலாம் !

காகா கூ கூ கீ கீ கேட்டிடலாம் !

மரங்களின் தலையினைத் தொட்டிடலாம் !

அடிக்கும் காற்றை ரசித்திடலாம் !

 

அண்ணாந்து பார்த்து வியந்திடலாம் !

நட்சத்திரங்களை நாம் எண்ணிடலாம் !

நிலவினை அருகினில் பார்த்திடலாம் !

ஓடி ஆடி நாம் பாடிடலாம் !

 

ரோஜாச் செடியினை நட்டிடலாம் !

தோட்டத்தைச் சுற்றி வந்திடலாம் !

பட்டாம் பூச்சியைப் பார்த்திடலாம் !

பூக்களைப் பறித்து மகிழ்ந்திடலாம் !

 

அனுஷா பாலா வைதேஹி !

வெங்கி வேலா ஸ்ரீதேவி !

மாடிக்குப் போகலாம் லூட்டி அடிக்கலாம் !

இப்பவே வாங்க – நானும் ரெடி !

              

 

  1. பட்டம் விடலாமா ?

 

பட்டம் விடலாமா ? -பாமா

பட்டம் விடலாமா ?

ஆகாயத்தில் அழகாய்ப் பறக்கும்

பட்டம் விடலாமா ?

 

பச்சை சிவப்பு ஊதா வண்ண

பட்டம் விடலாமா ?

ஆடிக் காற்று அடிக்குது பாரு

பட்டம் விடலாமா?

 

உயர உயர உயரப் போகும்

பட்டம் விடலாமா ?

ஆடி ஆடி அசைந்து போகும்

பட்டம் விடலாமா ?

 

பிரேமா கிரிஜா நந்து கிருஷ்ணா

பட்டம் விடலாமா ?

மைதானத்தில் திறந்த வெளியில்

பட்டம் விடலாமா ?

 

பட்டத்தோடு பட்டம் மோதி

சண்டை போடலாமா ?

ஒண்டிக்கு ஒண்டி வாடா என்றே

சவால் விடலாமா ?

 

வாங்க வாங்க அனைவரும் வாங்க

பட்டம் விடலாமா ?

வாலை ஆட்டி ஆட்டிப் பறக்கும்

பட்டம் விடலாமா ?

        

மனிதநேயம் வளர்ப்போம்-  ‘கவி ஞாயிறு’ துரை. தனபாலன்

             

Image result for மாடத்தில் செடிவளர்த்து மகிழ்ந்ததெலாம் போதுமினி  மாந்தர்தம் உள்ளத்தில் மனிதநேயம் வளர்ப்போம்Image result for மனிதநேயம் வளர்ப்போம்

வீட்டினிலே பெற்றோரைப் போற்றிவைக்க இயலாது 

வேறெங்கோ தள்ளிவைக்கும் வீணர்களின் இடையினிலே

நாட்டினிலே அரசியல்முன் னேற்றமெனும் வேட்டையிலே  

நற்குணமாம் பண்பிழக்கும் நயவஞ்சகர் நடுவே

ஏட்டினிலே பேர்வரவே ஏராளம் செலவழித்து

இல்லாதார்க் குதவாத இருளோர்கள் இருக்கையிலே  

மாடத்தில் செடிவளர்த்து மகிழ்ந்ததெலாம் போதுமினி 

மாந்தர்தம் உள்ளத்தில் மனிதநேயம் வளர்ப்போம்

 

ஏடெடுத்துக் கல்விகற்று ஏற்றமுற்ற பின்னாலே 

எல்லோரும் நலம்வாழ எண்ணாதோர் மனந்தெளிய  

பாடுபட்டு உழைப்பாலே பாழ்நிலத்தைச் சீராக்கும்

பாட்டாளியைப் போற்றாத பணக்காரர் பரிவுகொள

காடுவயல் கழனியிலே உழல்கின்ற உழவரது

நீடுதுயர் நீக்காத ஆட்சியினர் நெறியுணர

மாடத்தில் செடிவளர்த்து மகிழ்ந்ததெலாம் போதுமினி 

மாந்தர்தம் உள்ளத்தில் மனிதநேயம் வளர்ப்போம்

 

தனித்தமிழில் பேசாமல் தமிங்கிலத்தைப் பேசுகின்ற

தமிழர்தம் அறிவினிலே மொழிநேயம் வளர்ப்போம்

தமிழ்பேசும் அனைவருமே தமிழரெனும் உணர்வில்லா

சாதிமத வெறியரிடை இனநேயம் வளர்ப்போம்

காடுகளில் ஆறுகளில் காணுகின்ற இயற்கைவளம்

கருதாத மூடரிடம் புவிநேயம் வளர்ப்போம்

மாடத்தில் செடிவளர்த்து மகிழ்ந்ததெலாம் போதுமினி 

மாந்தர்தம் உள்ளத்தில் மனிதநேயம் வளர்ப்போம்!

                                                                          

அம்பு பட்ட மான் – வளவ. துரையன்

Image result for அம்பு பட்ட மான்

அடர்ந்த காட்டினுள் புகுந்த வேடர்கள் அக்காட்டில் இருக்கும் விலங்கினங்களை வேட்டையாடுகிறார்கள்.  அவர்கள் பார்வையில் ஓர் ஆண் மானும் பெண் மானும் பட்டு விட்டன. உடனே அவற்றை நோக்கி அவர்கள் அம்பு எய்தார்கள். அம்பு பெண் மான் மேல் தைத்து உள்ளே புகுந்தது. ஆண்  மான் தப்பித்து அங்கிருந்த ஓர் ஓடையைத் தாண்டி மறு கரைக்குப் போய் விட்டது.

 

              பெண் மானும் தைத்த அம்புடன் அக்கரைக்கு ஓடும்போது வேறு சிலர் அவ்வழியே வந்து விட்டார்கள். அவர்கள் சென்ற பின்னர் போகலாம் என்று அந்தப் பெண் மான் அங்கிருந்த ஒரு புதருக்குள் மறைந்து கொண்டது. அவர்கள் போனபிறகு போகலாம் என நினைத்தால் மேலும் வேறு சிலர் வந்துவிட்டார்கள். ஐயோ, இவர்கள் நான் இருக்கும் நிலை கண்டால் சிரிப்பார்களே என்று நினைத்து அந்தப் பெண் மான் இன்னும் மறைந்து நிற்கிறது.

 

      அந்த மானைப் போல என் மனம் நிற்கிறதே என்று முத்தொள்ளாயிரத் தலைவி எண்ணுகிறாள். பாண்டியன் உலா வருகிறான். தலைவி அவனைப் பார்க்கிறாள். அவள் மனத்தில் மன்மதனின் அம்பு போய்த் தைக்கிறது. ஆனால் பாண்டியன் எக்கவலையுமின்றி அரண்மனை சென்று விடுகிறான். தலைவியோ இங்கே இருந்தால் இந்த மன்மதனின் அம்பு நம்மை கொன்று விடும் என்று எண்ணுகிறாள். எனவே தன்  மனத்தை ‘ஓடு, ஓடு, என்று அரசனின் பின்னே செல்ல விடுக்கிறாள். அதுவும் அவன் பின்னே செல்கிறது.

 

ஆனால் அரண்மனை வாயிலில் ஒரே கூட்டம். மனம் உள்ளே செல்ல முடியாமல் வெளியே நிற்கிறது. பல்வேறு காரியங்களுக்காக அரசனைக் காண பலர் உள்ளே செல்வதும் வருவதுமாக இருக்கிறார்கள். ”பாண்டியன் எப்போது தனியாக இருப்பான்? தலைவியின் நிலையை அவனிடம் கூறலாம்” என்று மனம் எட்டிப் பார்க்கின்றது. கூட்டமோ குறையவே இல்லை. உள்ளே செல்பவர்களுக்கும் வெளியே வருபவர்க்கும் இடம் விட்டு இந்த மனம் கதவு ஓரமாக நின்று கொண்டிருக்கிறது. ’அட, இந்த மனத்தைப் பாரடா; அம்பு தைத்து அத்துடனேயே வந்து நிற்கின்றது’ என்று பேசிச் சிரித்துக் கொண்டிருப்பாரைக் கண்டு நாணி நிற்கிறது.        அவள் மனம் பாண்டிய மன்னனின் பின்னே சென்றது. ஆனால் அவன் இருக்கும் அரண்மனைக்குள் செல்ல முடியவில்லை. ”மன்னனைக் காண்பதற்காக உள்ளே செல்பவருக்கும், அவனைப் பார்த்துவிட்டு வெளியே வருபவர்க்கும் வழிவிட்டு தன் நிலை கண்டு சிரிப்பார்க்கும் நாணி அம்பு பட்ட பெண் மானைப் போல என்மனம் நிற்கிறதே” என்று அவள் தன் தோழியிடம் கூறுகிறாள்.

 

      தலைவின் ஏக்கம், இரக்கம், மன்மதனின் மலர்க்கணை பட்டு அவள் நெஞ்சு கலங்கியுள்ள நிலை எல்லாம் இப்பாட்டில் நிறைந்து இருக்கின்றன

 

           ”புகுவார்க்[கு]  இடம்கொடா  போதுவார்க்[கு] ஒல்கா

           நகுவாரை  நாணி  மறையா — இகுகரையின்

           ஏமான்  பிணைபோல்  நின்றதே  கூடலார்

           கோமான்பின் சென்றஎன் நெஞ்சு. 

                                          [முத்தொள்ளாயிரம்—42]

      இப்பாடலில் இடங்கொடா, ஒல்கா, மறையா, எனும் மூன்று எச்சங்களைப் பார்க்கிறோம். இவை ’செய்யா’ எனும் வாய்பாட்டு எச்சங்கள். இவை வாசிப்போர்க்குத் தலைவியின் நிலையை உணர்த்தி உணர்ச்சியை அதிகமாக்குகின்றன. இதே போன்ற மூன்று எச்சங்களை நளவெண்பாவிலும் காண முடிகிறது.

           ”மக்களைமுன் காணா மனம்நடுங்கா வெய்துயிரா

            புக்கெடுத்து வீரப் புயத்தனையா”

என்று நளன் தன்னை வெளிக்காட்டிக் கொள்ளமுடியாத நிலையில் தன் புதல்வர்களை எடுத்து அணைப்பதை அவலச்சுவை தோன்ற புகழேந்திப் புலவர் பாடுவார்.

      மேலும் ’பிணை’ என்ற அருமையான சொல் இப்பாடலில் உள்ளது. ஆண்மானைக் ’கலை’ என்றும் பெண் மானைப் ’பிணை’ என்று சொல்வது மரபாகும். ஏமான் என்பதில் ’ஏ’ என்பது அம்பைக் குறிக்கும். ’மரை’ எனும் சொல்லும் மானைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளன.

           ”தாமரைபோல் வாண்முகத்துத் தையலீர் காணீரோ

            ஏமரை போந்தன ஈண்டு” என்று திணை மாலை நூற்றைம்பதில் வருகிறது.

      திருவாய்மொழி வியாக்கியானத்திலும் ஏ எனும் சொல் இருப்பதைக் காண முடிகிறது.

      ”இன்ன காட்டிலே மான்பேடை ஏவுடனே கிடந்து உழையா நின்றது, என்று ஊரிலே வார்த்தையானால், எய்தவன் கை உணராதோ”

      என்பது வியாக்கியானமாகும்.        

இவ்வாறு முத்தொள்ளாயிரம் தலைவின் பிரிவாற்றாமையை ஓர் அம்பு பட்ட மானைக் காட்டி சுவையாகக் கூறுகிறது.      

தாயுமானவள் – யார் அவள்? – கிரிஜா

மகளின் `க்யூட்' மீசை! - குட்டி ஸ்டோரி #MyVikatan | Father shares about his daughter's candid moment in a short story

 

பச்சிளம் பருவத்தில் இன்னுமொரு தாயுமானவள்

பால்மணம் மாறாப்  பருவத்தில்  கதைகள்பல  கூறியவள்

பிள்ளைப் பிராயத்தில்  என்னுடன் பாண்டியாடினவள்

பள்ளிப் பருவத்திலே என்னுடன் பல்லாங்குழி ஆடினவள்

கல்லூரிநாட்களில்  என் எண்ணங்களுக்குக்  காவலாய் இருந்தவள்

தோளுக்குமேல் வளர்ந்த எனக்குத் தோழியுமானவள்

மணமான பொழுதில் மணியான யோசனைகள் கூறியவள்

இப்படிப் பல்வேறு முகங்களைக் கொண்டவள்

யார் அவள்?

வேறு யாருமில்லை

?

?

?

?

?

?

?

?

?

?

?

என் பாட்டிதான்!!!

ஹலோ...பாட்டியம்மா!- Dinamani

 

 

குதூகலம் தரும் குழந்தை பாடல்கள் -ஜி.பி.சதுர்புஜன்-

“குதூகலம் தரும் குழந்தை பாடல்கள்” என்ற பாடல் தொடரை உங்கள் வீட்டு குழந்தைகளுக்காக வழங்குகிறேன்.

எளிய நடையில் குழந்தைகளுக்கு ஏற்றவாறு ஒவ்வொரு பாடலையும் அமைக்க முயற்சிக்கிறேன். ஒவ்வொரு குவிகம் மாத இதழிலும் ஒன்று, இரண்டு அல்லது மூன்று சிறிய பாடகள் இடம் பெறும். பாடல்களை செல்வி சாய் அனுஷா அழகாக தன கொஞ்சும் குரலில் பாடிய வீடியோக்களையும் இத்துடன் இணைத்துள்ளோம்.

பார்த்து, கேட்டு மகிழுங்கள் !

இதுவரை இந்த பாடல் தொடரில் இடம் பெற்றவை:

  1. பிள்ளையார் பிள்ளையார் – ஜூலை 2020

  2. அம்மா அப்பா ! –  ஜூலை 2020

  3. ஹையா டீச்சர் ! – ஆகஸ்ட் 2020

  4. இயற்கை அன்னை ! – ஆகஸ்ட் 2020

  5. எனது நாடு – செப்டம்பர் 2020

  6. காக்கா ! காக்கா ! – செப்டம்பர் 2020

  7. செய்திடுவேன் ! – அக்டோபர் 2020

  8. மயிலே! மயிலே! மயிலே! – அக்டோபர் 2020

  9. நானும் செய்வேன் ! – நவம்பர் 2020

  10. அணிலே ! அணிலே ! –  நவம்பர் 2020

  11. எல்லையில் வீரர் ! – டிசம்பர் 2020

  12. பலூன் ! பலூன் ! பலூன் ! – டிசம்பர் 2020                          




 ஜன கண மண !

ஜன கண  மண  என்றாலே
எழுந்து நிற்பேன் நான் !
எழுந்து நின்று நானும் சேர்ந்து
கூடப் பாடிடுவேன் !

ஜன கண  மண  என்பதே
எம் தேசிய கீதம் !
இந்தியாவை ஒன்று சேர்க்கும்
இனிய சங்கீதம் !

ஜன கண  மண  என்று சொன்னால்
வீரம் பொங்குமே !
நாடி நரம்பு எல்லாம் எனக்கு
சிலிர்த்திடும் எங்குமே !

ஆங்கிலேயர் எமை ஆண்ட
இருண்டது அந்நாள் !
எங்கள் நாடும் அடிமையாக
இருந்தது அந்நாள் !

காந்தி பின்னே அணி வகுத்து
சுதந்திரம் பெற்றோம் !
வீரர் பலர் ரத்தம் சிந்தி
விடுதலை பெற்றோம் !

இமயம் முதல் குமரி வரை
எங்கள் நாடே !
வங்கம் முதல் பெங்களூரும்
எங்கள் வீடே !

எங்கள் நாட்டை என்றும் நாங்கள்
போற்றியே காப்போம் !
ஜன கண  மண  ! ஜன கண  மண  !
பாடி நிற்போமே !


ஊருக்குப் போகலாமா ?

அடுத்த விடுமுறைக்கு
எந்த ஊர் போகலாம் ?
எத்தனையோ ஊர்களிலே
எத்தனையோ உறவெனக்கு !

மதுரை பெரியம்மா எனக்கு
மல்லிகைப் பூ கொடுத்தாங்க !
மயிலாப்பூர் பாட்டி எனக்கு
மைசூர் பாக் கொடுத்தாங்க !


திருநெல்வேலி தாத்தா எனக்கு
தட்டை முறுக்கு கொடுத்தாங்க !
பங்களூர் பாட்டி எனக்கு
சட்டை தைத்துக் கொடுத்தாங்க !

வேலூர் சித்தி என்னை
வெளியே கூட்டி செல்வாங்க !
பங்களூர் பெரியப்பா எனக்கு
பன் பிஸ்கட் தந்தாங்க !

திருச்சி போனா அத்தை வீட்டில்
திகட்டும் போளி தருவாங்க !
திண்டுக்கல்லு மாமா வீட்டில்
தினுசு தினுசா தருவாங்க !

எனக்குன்னு உறவு முறை

எத்தனையோ உண்டுங்க !
உங்களையும் கூட்டிப் போறேன் !
கூட நீங்கள் வந்திடலாம் !


 

என் பெயர் இல்லத்தரசி – செவல்குளம் செல்வராசு

எல்லாம் இருக்கிறது வீட்டில்

எனக்கென்று எதுவுமில்லை

பிடித்த உணவு, பிடித்த உடை,

பிடித்த பலகாரம், பிடித்த தேநீர்,

விழிப்பு வரும்வரை உறக்கம்,

பிடித்த புத்தகம், பிடித்த பாடல்,

பிடித்த திரைப்படம், பிடித்த கதாநாயகன்

எல்லாம் மறந்து பலகாலமாகிவிட்டன.

எனக்கு திருமணமாகிவிட்டது

விரும்பிய அலைவரிசை பார்த்து,

பாடல் கேட்டு, கூடவே பாடி,

சின்னதாய் ஆட்டம் போட்டு,

தூறல் ரசித்து, தூரிகை பிடித்து,

காதல் மொழிகள் கேட்டு, பேசி,

கையில் மருதாணி வைத்து

சில ஆண்டுகளாகிவிட்டன

எனக்கு இரண்டு குழந்தைகள்

 

உதிரிமல்லி வாங்கி

ரசித்துச் சரம் தொடுத்து

ஆசை தீர முகர்ந்து

தலையில் சூட அவகாசமில்லை

கோப்பை நிறைய

கொதிக்க கொதிக்க

சுக்குமல்லித் தேநீர் அருந்த

அவகாசமில்லை

அக்கம் பக்கம் நட்பு பாராட்ட

அம்மா, அக்காவிடம் அலைபேசியில் பேச

நாட்டு நடப்பு அறிய செய்திகள் பார்க்க

அவருக்கு வரும் இதழ்கள் படிக்க

எதற்கும் நேரமில்லை

எது எப்படிக் கிடந்தாலும்

கொஞ்ச மட்டுமே குழந்தைகளைத் தூக்குவார்.

எழுதும்போது குழந்தைகள் குறுக்கிட்டால்

கடுங்கோபம் வரும் அவருக்கு

வீடு திரும்பியதும் தேநீர் வேண்டும் அவருக்கு

வீடு திரும்பும் நேரம் மட்டும்

ஒருநாளும் சொல்லமாட்டார்

என்றாவது சொல்லிச் சென்றாலும்

சொன்ன நேரம் வரமாட்டார்

பண்டுவம் பார்ப்பது முதல்

பாடம் சொல்வது வரை

எல்லாம் செய்துமுடித்து

படுக்கையிலும் சிரிக்க வேண்டும்.

பரவசம் என்பதை உணர்ந்தே

பலகாலமாகிவிட்டது

  

அவதி அவதியாய் ஓடும் வாழ்வில்

இறந்த காலமே மறந்துவிட்டது

எதிர்காலமும் இறந்துவிட்டது

என் காலம் எதுவும்

என் கடிகாரப்படியில்லை

வீடு என்னும் தொழிற்சாலையில்

விடுமுறையே இல்லை

விலக்கு நாட்களிலும் விலக்கு இல்லை.

ஆனால் ஊரெல்லாம் சொல்லித் திரிவார்

அவ வீட்டுல சும்மாதான் இருக்குறா என்று

 


காத்திருப்பு -துரை தனபாலன்

காத்திருப்பு - காதல் கவிதை

மழலையெனும் பருவத்தில் மார்பூட்டும் தாய்க்காகக்
குதலைமொழி பேசுகின்ற குழந்தையது காத்திருக்கும்!
விடலையாம் பருவத்தில் விளையாடுந் துணைக்காக
வீதியிலே நட்புக்கு விழிதேடிக் காத்திருக்கும்!

இளமையெனும் பருவத்தில் இனிதான இணைக்காக
இமையிரண்டும் மூடாமல் இதயந்தான் காத்திருக்கும்!
திருமணத்துப் பருவத்தில் தேடிவந்த உறவொன்று
ஒருமனதாய் ஒன்றிவிட உள்ளந்தான் காத்திருக்கும்!

காத்திருக்கும் நேரமெலாம் கண்ணிரண்டும் பூத்திருக்கும்
பூத்திருக்கும் நீள்விழியில் நீர்முத்துக் கோர்த்திருக்கும்!
காதினிலே நெஞ்சத்தின் துடிப்போசை கேட்டிருக்கும்
ஓசையிலே உயிர்பாடும் ஆசையெனும் பாட்டிருக்கும்!

கால்களிலே அசைவின்றிக் கட்டையென மரத்திருக்கும்
காலமது ஓடுவதைக் கவனமது மறந்திருக்கும்!
காலமெலாம் அன்புக்குக் காத்திருக்கும் மானிடரைக்
காலனவன் காத்திருந்து கவர்ந்திழுக்கும் மாயமென்ன..?

Pratilipi | Read Stories, Poems and Books

 

குமார சம்பவம் – எஸ் எஸ்

ஏழாம் சர்க்கம்

நன்றாக வந்திருக்கிறது 'நண்பன்' ! : ஷங்கர் | Lord ganesha paintings, Hindu art, Shiva parvati images

குறித்த நான்காம்நாளில் பூர்வாங்க காரியம் செய்திட இமவான் துவங்கினன்

நகரமாந்தர் தம் பெண்ணின் மணவிழா போல் மங்கள காரியம் செய்தனர்

பட்டுவிதானம் அமைத்து வாயிலில் தோரணம் கட்டி  பூக்களையும்  தூவினர்

பார்வதியை உயிரெனக் கருதிய இமவான்  வேண்டியதனைத்தும் செய்தனன்

உறவினப்பெண்டிர் பார்வதிக்கு அணிகலன் பூட்டி  ஆசி வழங்கி அருளினர்    

சுமங்கலிப்பெண்கள் நல்ல நேரத்தில்  அலங்காரம் செய்யத் துவங்கினர்

எண்ணெய்  ஸ்நானம் செய்திட வேண்டி தக்க உடையும் பாணமும் தந்தனர்

குளிப்பதற்கு முன்னரும்  வளர்பிறை மதியம்போல் அழகுடன் கொழித்தாள்

வாசனைப் பொடி தடவி கஸ்தூரி மஞ்சள் பூசி  நீராட அழைத்துச் சென்றனர்   

ரத்தினக் குளியலறையில் தங்கக்குடநீர் பெய்து மங்கள ஸ்நானம் புரிந்தனர்

மங்களக் குளியலுக்குப்பின் வெண்பட்டு அணிந்து பொலிவுடன் இருந்தாள்    

மணிகள் பதித்த அலங்கார மண்டபத்துக்கு அவளை அழைத்துச் சென்றனர்

அலங்காரம்  புரியவந்த பெண்கள் பார்வதியின் எழிலில் மயங்கி நின்றனர்  

அகிற்புகையிட்டு மலர்செருகி  பூச்சரம் தொடுத்து கூந்தலை முடிந்தனர்

மேனியெங்கும் வெண்சாந்து பூசி அழகு வரிகளையும் ஆங்காங்கே எழுதினர்

மேகக்கூந்தலில் அழகுமுகம் சந்திரபிம்பமோ வண்டு குவிந்த தாமரையோ

சாந்து பூசிய கன்னம் பூக்கள் பதித்த செவிகள் பார்த்த கண்கள் மயங்கின   

செம்பஞ்சுண்ட இதழ்கள் தேன்மெழுகிட்டதும் அசைந்து அசைந்து துடித்தன

செம்பாதத்தில் சிவன்சிரசு படும்போது சந்திரகலையை எட்டி உதைப்பாளோ

கண்ணே இத்தனை கருத்திருக்க மேலும்  அதற்கு மையிடல் தேவையோ

ஆபரணங்களை அவள் மேனி அணிவது நட்சத்திரங்கள்  உதிக்கும் வானமோ

தன்எழிலை ஆழியில் கண்டதும் அதனை ரசிக்கவரும் சிவனை நினைத்தாள்

முடிவில் மேனை பார்வதிக்கு தந்தக் காதணி அணிவித்து உச்சி முகர்ந்தாள்

நல்லவரன் அமைந்ததென  மகளை ஆனந்தக் கண்ணீரால் அலங்கரித்தாள்

மங்கலநூலை மகள்கையில் கட்டும்போது  கண்ணீர் பெருகத் தடுமாறினாள்   

வெண்பட்டு உடுத்திய பார்வதி பாற்கடல் புரளும் நுரைபோல் பொங்கினாள்

அலங்காரம் முடிந்த பார்வதி தெய்வத்தையும் பெண்டிரையும் வணங்கினாள்

பதிவிரதைப் பெண்டிர் பார்வதிக்குக் குறைவின்றி ஆசிகள் வழங்கினர்

பெண்ணை மணமகளாய்க் கண்ட இமவான் மணமகன் வரக் காத்திருந்தான்

hinducosmos | Lord shiva painting, Lord shiva, Shiva parvati images

சிவனுக்கும் அதே சமயம் அலங்காரம் செய்விக்க ஆடை அணிகலன் வந்தன

சிவனின் உடலைத் தழுவிய பொருட்கள் தாமே அணிகலன்களாய் மாறின

விபூதி சந்தனமாக கபாலம் தலையணியாக  தோலாடை பட்டாயிற்று   

நெற்றிக்கண் ஹரிதாள திலகமாய் மாறி முகத்திற்கு அழகு சேர்த்தது    

கழுத்தில் கையில் தோளில் இடுப்பில் இருந்த பாம்புகள் ஆபரணங்களாயின

ஒளிவீசும் சந்திரகலை சிரசை அலங்கரிக்க வேறொரு ரத்தினம் எதற்கு ?

தன் சக்தியால் அழகு பெற்ற சிவபிரான் கத்தியில் தம் அழகைக் கண்டார்

நந்திகேஸ்வரர் கைபிடித்து ரிஷப வாகனத்தின் மீதேறி சிவனும் புறப்பட்டார்

தாய்மார்கள் எழுவர்  சிவபிரான் பின் தத்தம் வாகனத்தில் உடன் சென்றனர்

பொன்னிறத் தாய்மார்கள்பின் கருத்த மேகம் போன்று பத்ரகாளி சென்றாள்

சிவசேவகர் பிரானுக்கு முன் வாத்யம் முழங்கி தேவர்புடைசூழ சென்றனர்   

விஷ்வகர்மா குடைவடிக்க சூரியன் பிடித்திருக்க சிவபெருமான் சென்றார்

கங்கையும் யமுனையும் தேவவடிவம் கொண்டு வெண்சாமரம் வீசி வந்தனர்

பிரும்மரும் விஷ்ணுவும் சிவபிரானை எதிர் கொண்டு வரவேற்கச் சென்றனர்

வேதநாயகன் விவாக சுபதினத்தில் மும்மூர்த்திகளும் பேதமின்றி  இருந்தனர்

இந்திராதி தேவரும் நந்திதேவர் அருள்பெற்று சிவபெருமானை வணங்கினர்

பிரும்மருக்குத் தலையசைப்பு விஷ்ணுவுடன் உரை சிவனின் சபைகௌரவம்

வந்திருந்த சப்தரிஷிக்களிடம் விவாகம் நடத்தித்தர   சிவனும் வேண்டினார்  

கந்தவர்கள் பிரானைப் பாடித்துதிக்க  சிவனும் செவிமடுத்து மேலேசென்றார்

சிவபிரான் இவர்ந்த ரிஷபவாகனம் அசைந்துஅசைந்து அழகாய்ச் சென்றது

ஔஷதிப்ரஸ்தம் சென்ற பிரான் பொன்னகரைப்  புன்னகையுடன் பார்த்தார்

 திரிபுர வதையின்  பாணமென சிவன் விண்ணிலிருந்து கீழே இறங்கினார்

இமவானும்   வாசலில் வந்த சிவனை வரவேற்க சுற்றம் சூழச்  சென்றான்

சிவசேவகரும்  இமவான் உறவும் நீரோடு நீர் கலந்தார்போல கலந்தனர்

உலகே வணங்கும் சிவன் தன்னை வணங்கக் கண்டு வெட்கினான் இமவான்

மருகனாய்வந்த பிரானை மலரிட்ட பாதையில் தானே அழைத்துச்சென்றான்   

 

உலாவரும் சிவனைக் கண்ணால்காண பெண்களின் துடிதுடிப்பு அம்மம்மா

அவிழ்ந்த கூந்தலை முடியாமல் விரைந்து சன்னலருகு சென்றாள் ஒருத்தி

காலில் செம்பஞ்சு பூசிடும்போது பூச்சு வழிய  ஓடினாள் மற்றொருத்தி

ஒரு கண்ணுக்கு மையிட்டு மறு கண்ணை மறந்து ஓடினாள் இன்னொருத்தி

அவிழ்ந்த ஆடையை இழுத்துச் சொருகாமல் அப்படியே ஓடினாள் ஒருத்தி

நூலில் ரத்தினம் கோர்ப்பவள் அவை சிதறுவது அறியாமல் சாடினாள் ஒருத்தி

ஜன்னலில் பூத்த மலர் போல் அழகுப் பெண்கள் சிவனைப் பார்த்து நின்றனர்

அனைவரும் ஆவலாய்ப் பார்த்திருக்க தோரண வீதியில் சிவனும் வந்தார்

பிரானின் திருவுருவைப் பார்த்த பெண்டிர் பார்த்த வண்ணமே நின்றனர்

அழகியசிவனை அடைய பார்வதியின் தவம் நியாயமே எனப் பகர்ந்தனர்  

அழகும் அழகும் இணையாவிடில் அழகுக்கே  பொருளில்லை என்றனர் சிலர்

சிவன் எழில் கண்ட மதன்  நாணித்  தானே சாம்பலானான் என்றனர் சிலர்

உயர்ந்தஇமவான் சிவன் மருகனானபின்  இன்னும்உயர்வான் என்றனர் சிலர் 

 

பெண்டிர் சொல்கேட்ட  சிவன் புன்னகையுடன் இமவான்இல்லம் அடைந்தார்

விஷ்ணு கைகொடுக்க பிரும்மன் வழிகாட்ட சிவன் மணவறை  சென்றார்

தேவரும் ரிஷிக்களும் சேவகரும் மற்றையோரும் அவர் பின் தொடர்ந்தனர்

இமவான் சிவபிரானை சாஸ்திரப்படி பட்டாடை கொடுத்து வரவேற்றான்   

 

புத்தாடை உடுத்திய சிவபிரானை மணமேடைக்கு அழைத்துச் சென்றனர்

பூத்திருக்கும் பார்வதியைக்  கண்ட சிவனின் கண்கள் மகிழ்வில் மலர்ந்தன

காணத்துடித்த இருவர் கண்களும்   பிறர் காணாதபோது கண்டு மகிழ்ந்தன     

பார்வதிகரத்தை இமவான்  தந்திட சிவனும் பற்றிட இன்பம் அங்கே பிறந்தது 

பார்வதி மயிர்க்கூச்செறிய சிவன் கைவியர்க்க கரஸ்பரிசம் காரணமாயிற்று

அழகே உருவான இருவரும் தங்கள்  மணநாளில் அழகுக்கு அழகு சேர்த்தனர்

தம்பதிகள் இருவரும் மற்றவர் கைபற்றி மின்னும்  அக்னியை வலம் வந்தனர்     

உணர்ச்சியில் துடித்த இருவரும் அக்னியில் பொரியிட்டு ஹோமம் செய்தனர்

 புரோகிதர் ஆணைப்படி ஓமப்புகை கையெடுத்து முகர்ந்தனள் பார்வதி

பார்வதி கண்மை புகையில் கரைய சூடிய மலர்களும் புகையில் வாடின

விவாகம் முடித்த புரோகிதர் சிவபார்வதி இருவருக்கும் ஆசி வழங்கினர்

புரோகிதர் கூறிய  ஆசி வார்த்தைகளை மனதினில் பதித்தாள் பார்வதிதேவி

துருவநட்சத்திரம் பாரென சிவன்கூற  பார்த்தேன் என பார்வதி உரைத்தாள்       

உலகின் தாய்தந்தை  சிவபார்வதி பாட்டன் பிரும்மமரை வணங்கினர்

பார்வதிக்கு ஆசி வழங்கிய பிரும்மர் சிவனிடம் சொல்வதறியாது நின்றார்

சிவ பார்வதி இருவரும் பொன்மணை அமர்ந்து அட்சதை ஆசிகள் ஏற்றனர் 

லட்சுமிதேவி வெண்தாமரை மலரெடுத்து தம்பதியர்க்குக் குடை பிடித்தாள்

சரஸ்வதிதேவி சிவ பார்வதியரை  தனித்தனி மொழியில் வாழ்த்தினாள்

தம்பதியர் இருவரும்  தேவமகளிர் நடித்த நாடகம் பார்த்து மகிழ்தனர்

தேவர்கள் அனைவரும் தம்பதியரிடம் மன்மத சேவையை ஏற்க வேண்டினர்

சிவனும் உளம் மகிழ்ந்து  மன்மத பாணங்கள் தம்மிடம் வருவதை ஏற்றார்

பார்வதி கரம்பற்றிய சிவன்  அலங்கார சயனஅறைக்கு அழைத்துச்சென்றார்   

வெட்கத்தில் தவித்த பார்வதிக்கு ஹாஸ்யரசம் தந்து வெட்கம் விடச் செய்தார்

 

நமப்  பார்வதி பதையே !   ஹர ஹர மகாதேவா !   

 

முற்றும் 

குண்டலகேசியின் கதை -3 – தில்லை வேந்தன்

குண்டலகேசியின் கதை -3

KANKALAI #குண்டலகேசி-அறிமுகம் #சங்க இலக்கியம் #ஐம்பெரும் காப்பியங்கள் - YouTube

முன் கதைச் சுருக்கம் :

A0111

பூம்புகார் நகரத்துப் பெருங்குடி வணிகனின் அருமை மகள் பத்திரை.
சிறு வயதில் தாயை இழந்தாலும் அன்புத் தந்தையின் அரவணைப்பில் மகழ்ச்சி அடைந்தாள்..
ஒருநாள், அரசனின் வீரர்கள், கொடிய கள்வன் காளன் என்பவனைக் கொலைக் களத்திற்கு இழுத்துச் செல்வதைக் கண்டாள். அவன் மீது காதல் கொண்டாள்…….

குண்டலகேசி (மூலமும் உறையும்): By Praveen Kumar G by நாதகுத்தனார்

பத்திரை நிலை!

ஓதிய கல்வி, கேள்வி,
ஒன்றுமே உதவ வில்லை.
ஈதலும், அறமும் கொண்ட
இல்லதன் பெருமை விட்டாள்.
கோதிலாத் தந்தை காத்த
குலமுறை மரபும் விட்டாள்.
காதலால் நாணும் கெட்டாள்,
காரணம் அறிய மாட்டாள்

 

எயிற்றிலே நஞ்சை ஏந்தும்
எழில்கொளும் அரவம் உண்டு
வயிற்றிலே முத்தைத் தாங்கும்
வனப்பிலாச் சிப்பி உண்டு
பயிற்றியே விளக்கும் கல்வி
பாங்குடன் கற்ற போதும்,
கயிற்றினால் ஆடும் பாவை
காதலால் ஆனாள் பாவை.

( எயிற்றில் — பல்லில்)

தோழியிடம் தன் காதலைக் கூறுதல்

என்னுயிர் அனையாய் நானிங்கு
இயம்பிடும் சொற்கள் கேளாய்!
இன்னுயிர் தங்க வேண்டின்
இவனையான் மணக்க வேண்டும்
மின்னெனச் செல்வாய், எந்தை
விரும்பிட இதனைச் சொல்வாய்
மன்னனைப் பார்த்துப் பேசி
மாற்றிட வேண்டும் ஆணை.

 

தோழியின் அறிவுரை

கள்ளினை அமுதாய் எண்ணிக்
களிப்புடன் பருக லாமோ?
முள்ளினை மலராய் எண்ணி
முடிதனில் சூட லாமோ?
புள்ளினை வேடன் கையில்
புகலெனக் கொடுக்க லாமோ?
கள்ளமும் சூதும் கொண்ட
கயவனை விரும்ப லாமோ?

 

செய்தி அறிந்த தந்தை புலம்புதல்

மங்கையின் தோழி செய்தி
வணிகனைக் கண்டு சொன்னாள்.
வெங்கதிர் தளர்ந்து மேற்கில்
வீழ்வதைப் போலச் சாய்ந்தான்.
தங்கிய புகழும் போனால்,
தள்ளரும் மானம் போனால்,
எங்குலப் பெருமை போனால்,
இங்குநான் வாழேன் என்றான்.

 

இந்தவோர் இழிவு நேர
என்பிழை செய்தேன் கொல்லோ!
முந்தையோர் முறைகள் யாவும்
முடிந்தன கொல்லோ! என்றன்
சொந்தமும் நட.பும் ஊரும்
சொல்வதைப் பொறுப்பேன் கொல்லோ!
சிந்திடும் கண்ணீர் மல்கச்
செப்பினன் உயிரைத் தாங்கி.

பத்திரையிடம் தந்தை கூறுவது

வழிவழியாய் வந்தகுடிப் பெருமை விட்டு
வழிப்பறிசெய் கொள்ளையனை விழைந்தாய் போலும்
பழிவருமே தந்தைக்கு மறந்தாய் போலும்
பற்றென்மேல் வைத்ததெல்லாம் துறந்தாய் போலும்
விழிவிரித்த வலையினிலே விழுந்தாய் போலும்
வெல்லுமதி முழுதினையும் இழந்தாய் போலும்
அழிவென்ற வழிவிரும்பி நடந்தாய் போலும்
அன்புடனே சொல்கின்றேன், கடந்து போவாய்.

கேட்டவை எல்லாம் தந்தேன்
கேட்டினைத் தரவே மாட்டேன்.
காட்டுவாழ் புலிஅன் னானைக்
கடிமணம் புரிய ஒப்பேன்
ஊட்டியே வளர்த்த பெண்ணை
உயிருடன் இழக்க மாட்டேன்
நாட்டினில் வேறு நல்லோன்
நன்மணம் செய்து வைப்பேன்.

 

பத்திரை மறுமொழி.

உளத்தினால் விரும்பி விட்டால்
உறுமணம் என்றே சொல்வர்.
வளத்தினால், புகழால் ஓங்கி
வாழ்வதால் தயங்கு கின்றாய்.
அளத்தலில் அன்பால் மெல்ல
அவனையான் திருத்தி, வாழ்வில்
விளைத்திடும் விந்தை கண்டு
வியந்துநீ மகிழ்வாய் என்றாள்.

 

பொம்மையால் மகிழ்ந்த காலம்
போனதே பின்னர் என்றன்
அம்மையால் மகிழ்ந்த காலம்
அதுவுமே போன தந்தோ!
இம்மையில் மகிழ மீண்டும்
இந்தவோர் வாய்ப்புத் தந்தால்
செம்மையாய் வாழ்ந்து காட்டிச்
சிறப்பதைக் காண்பாய் நீயும்!

(தொடரும்)

 

 

 

குதூகலம் தரும் குழந்தை பாடல்கள் -ஜி.பி.சதுர்புஜன்-

குவிகம் வாசகர்களுக்கு வணக்கம்.

“குதூகலம் தரும் குழந்தை பாடல்கள்” என்ற பாடல் தொடரை உங்கள் வீட்டு குழந்தைகளுக்காக வழங்குகிறேன்.
எளிய நடையில் குழந்தைகளுக்கு ஏற்றவாறு ஒவ்வொரு பாடலையும் அமைக்க முயற்சிக்கிறேன். ஒவ்வொரு குவிகம் மாத இதழிலும் ஒன்று, இரண்டு அல்லது மூன்று சிறிய பாடகள் இடம் பெறும். பாடல்களை செல்வி சாய் அனுஷா அழகாக தன கொஞ்சும் குரலில் பாடிய வீடியோக்களையும் இத்துடன் இணைத்துள்ளோம்.
பார்த்து, கேட்டு மகிழுங்கள் !
இதுவரை இந்த பாடல் தொடரில் இடம் பெற்றவை:

1. பிள்ளையார் பிள்ளையார் – ஜூலை 2020
2. அம்மா அப்பா ! – ஜூலை 2020
3. ஹையா டீச்சர் ! – ஆகஸ்ட் 2020
4. இயற்கை அன்னை ! – ஆகஸ்ட் 2020
5. எனது நாடு – செப்டம்பர் 2020
6. காக்கா ! காக்கா ! – செப்டம்பர் 2020

 

 

7. செய்திடுவேன்!

 

உதயம் முன்னே எழுந்திடுவேன் !
உற்சாகமாய் நான் ஓடிடுவேன் !
உடற்பயிற்சிகள் செய்திடுவேன் !
மூச்சுப் பயிற்சியும் செய்திடுவேன் !

பச்சைக் காய்கறி சாப்பிடுவேன் !
பழமும் தினமும் நான் உண்பேன் !
எதிர்ப்பு சக்தியை வளர்த்திடுவேன் !
ஆரோக்கியம் நான் பேணிடுவேன் !

ஆலயம் நானும் சென்றிடுவேன் !
ஆண்டவனையே வேண்டிடுவேன் !
அம்மா அப்பா சொன்ன விதம் –
அழகாய் நானும் வாழ்ந்திடுவேன் !

உறவுகள் நானும் போற்றிடுவேன் !
உதவிகள் செய்தே வாழ்ந்திடுவேன் !
நல்ல பழக்கங்கள் மேற்கொள்வேன் !
நல்லவன் என்றே பெயர் எடுப்பேன் !

நாடும் வீடும் போற்றணுமே !
நாளைய உலகம் சிறக்கணுமே !
நானும் நீயும் சேர்ந்திடுவோம் !
நல்ல உலகத்தைப் படைத்திடுவோம் !

 

8. மயிலே ! மயிலே ! மயிலே !

 

மயிலே ! மயிலே ! மயிலே ! – உனக்கு
வண்ணத் தோகை தந்தது யாரு ?
வண்ணத் தோகை தந்து உன்னை
ஆடச் சொன்னது யாரு ?

குயிலே ! குயிலே ! குயிலே !- உனக்கு
இனிய குரலைத் தந்தது யாரு ?
குரலைத் தந்து கூ கூ என்றே
கூவச் சொன்னது யாரு ?

காட்டின் தலைவா சிங்கம் – உனக்கு
வீர நடையைக் கொடுத்தது யாரு ?
நடையைக் கொடுத்து காட்டுக்கே நீ
ராஜா என்றது யாரு ?

வீட்டைச் சுற்றும் பூனை – உனக்கு
மீசை தந்தது யாரு ?
மீசை தந்து உன் மேல் எனக்கு
ஆசை தந்தது யாரு ?

எத்தனை உயிர்கள் எத்தனை உயிர்கள் –
உலகில் உள்ளது பாரு !
உலகில் உள்ள அனைத்தும் பாரு –
இயற்கையின் பெருமையைக் கூறு !
இயற்கை என்பது என்ன ? தம்பி –
இறைவன் என்பதும் அதுதான் !
இறைவன் புகழைப் பாடு – தம்பி
இன்பம் சேர்த்தே வாழு !

 

 

 

 

 

 

மூன்று கவிதைகள் – பானுமதி.ந

ராகு செவ்வாய் பலம் சேர எளிய பரிகாரம் - குமுதம் செய்தி தமிழ்

 

பட்டம்

இராகு பிடித்தது என் விண்மீனை
பனைஒலைப் பட்டம் கட்டி விரதமிருந்த
சிறு வயதில் ஆதவன் வெளி வரும் வரை
அத்தனை யம பயம்
வரவேற்கக் காத்திருக்கிறேன்
பின்னவரை இன்றும் கூட
என் விண்மீனில் தானாம்
பட்டம் கட்டாத படபடப்புடன்.
வழி பாத்திருக்கும் மணமகள்

 

நளன் - தமிழ் விக்கிப்பீடியா

 

தன் நலன்

பாதி கிழித்துப் போனான்.
மீதி வாழ்வில் என்னைக்
கோர்த்து தாய்வீடு அனுப்பிய
தயாளன்,முழுதும் கொடுத்திருப்பேன்
கேட்டிருந்தால் அவன் முன்பு கொண்டிருந்த
அன்பையே ஆடையென்றணிந்து
அவனை நள(ல)ன் என்காதீர்கள் இனியும்.

 

 

 

 

மாற்றம்

தீபச் சுடரொளி என தென் கிழக்கிலிருந்து
மிதந்து வந்த அந்த வான் தூதுவன்
திசை மாறி வட மேற்காய் சிவப்பு ஒளியில்
அலுமினிய வான் கோள் சொன்ன சேதி ஒன்று
வழிகாட்டியை மாற்றியவன் அந்த வித்தகன்.

விதிகளை மாற்றிவிடு! — கோவை சங்கர்

கடமை பெரிது 3257829.html - Dinamani

மனம்நொந்து உனைநாடி வருகின்ற பக்தரிடம்
முன்பிறவி கர்மாவென சொல்வதுவும் சரிதானோ?
பாவங்கள் செய்தவன் செழிப்போடு வாழ்ந்திட்டான்
அப்பாவி பக்தனை அல்லல்பட விடலாமோ?

பாவச்சுமை ஏற்றியவன் சுகமாகப் போய்விட்டான்
பாவவினை விலையென்ன அவனுக்குத் தெரியாது
பாவம்செயா இவனுமே அல்லல்பல படுகின்றான்
தப்பென்ன செய்தோமென இவனுக்குப் புரியாது!

பாவங்கள் செய்தவன் சுகமாகச் சென்றுவிட
அப்பாவி மனிதனுக்கு இத்தனை தண்டனையா?
தர்மநெறி நிற்பவன் நிலைகுலைய மாட்டானா?
‘அறநெறி நல்வழி’யெனும் நம்பிக்கை போகாதா?

தப்புகளைச் செய்தவன் மனம்வருந்த தண்டனையை
அப்பிறவியில் கொடுத்துவிடு அவன்கணக்கைத் தீர்த்துவிடு
பிற்பிறவி மனிதனையே மகிழ்வோடு வாழவிடு
பிறவியின் விதிகளை யதற்கேற்ப மாற்றிவிடு!

ஆசை – கடன் – சந்தைப் பொருளாதாரம் – செவல்குளம் செல்வராசு

Tamil Nadu: Rs 3 lakh can get you a doctorate without research | Chennai News - Times of India

நீண்ட இடைவெளிக்குப் பின்

தற்செயலாய் சந்தித்துக்கொண்டோம் வங்கியில்.

நல்ல படைப்பாளி நண்பர் அவர்.

 

கொரானா, பொதுமுடக்கம்,

ஊதிய இழப்பு, புலம்பெயர் தொழிலாளர்கள்,

அரசியல், சமூகம்,

போராட்டங்கள், தொழிற்சங்கங்கள்,

ஆசைகள், இலக்குகள்,

குடும்பம், நண்பர்கள்

இப்படியாக நிறைய பேசினோம்.

 

வீடு கட்டவிருப்பதாகச் சொன்னார்.

 

பழைய மகிழுந்தின்

மூன்றாவது உரிமையாளராகவிருப்பதை

கொஞ்சம் கூச்சத்தோடு சொன்னேன்

 

பின் ஆளுக்கொரு

கடன் படிவத்தை எடுத்து

நிரப்பத் துவங்கினோம்.

தலையங்கம்

Image result for ஓலைச்சுவடிகள்

Image result for jayalalitha sasikala dinakaran

Image result for r k nagar election candidates

Image result for stalin modi

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்ததால் அவர் வென்ற ஆர் கே நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் !

அவர் மறைந்து ஒரு வருடம்  கழித்து நடக்கப்போகும் தேர்தல் !

இந்த ஒரு வருடத்தில்தான் தமிழ் அரசியல் வானில் எத்தனை எத்தனை மாறுதல்கள் ! 

  • சசிகலா முதல்வராகத்  துணிதல், பின்னர் அவர் சிறைக்குச் செல்லல்
  • பன்னீர்செல்வம்  தனித்து இயங்கல்,
  • எடப்பாடி பழனிச்சாமி முதல்வராதல் ,
  • தினகரன்  ஆர் கே நகரில் போட்டியிடுதல், பின்னர் அவரும் லஞ்ச வழக்கில் சிறைசென்று ஜாமீனில் வருதல் ,
  • சின்னம்மா என்றுகூறிய சட்டமன்ற உறுப்பினர்கள் சசிகலா – தினகரனை உதறுதல்,  
  • இபிஎஸ்ஸும்  ஓ பி எஸ்ஸும் இணைதல்,  அவர்களுக்கே இரட்டை இலைச்  சின்னம் கிடைத்தல்,  
  • அரசு இயந்திரம் தள்ளாடித் தள்ளாடிச் செல்லல்,
  • ஜெயலலிதாவின் மரணம்பற்றிய விசாரணக் கமிஷன்  அமைத்தல் ,
  • மோடி-கருணாநிதி சந்திப்பு 
  • எல்லாவற்றிற்கும் பின்னால் நிற்கும் பி ஜே பியின் அரசியல் சதுரங்க ஆட்டம்,
  • ஆட்சியைப் பிடிக்கத் தவிக்கும் தி மு கவின் ஆசைத் துடிப்பு
  • என்ன செய்வது என்று புரியாமல் தவிக்கும் மற்ற எதிர்க்கட்சிகளின் தடுமாற்றம்,

இவை எல்லாம் கலந்த  மேகமூட்டம்தான்  இன்றையத்  தமிழக அரசியல் வானம்!

இந்தச் சூழ்நிலையில் டிசம்பர் 21 இல்  ஆர் கே நகரில் இடைத் தேர்தல் வருகிறது.   

தேர்தல் என்றாலே தமிழகத்தில் பணமழை என்பது நிரூபிக்கப்பட்ட காட்சி!

பலர் நோட்டு வாங்கிக் குத்தலாம்  ! சிலர் நோட்டாவில் குத்தலாம் !       சிலர் முதுகில் குத்தலாம்! சிலர் மாறுதலுக்காகக் குத்தலாம் ! சிலர் கொள்கையோடு குத்தலாம்! சிலர்  கொள்கையின்றிக் குத்தலாம்! சிலர் குத்தாமலே ஓடலாம்!   

என்ன ஆனாலும் தமிழக வாக்காளர்கள் புத்திசாலிகள் !

அவர்கள் என்ன செய்யப்போகிறார்கள்? 

பொதுத்தேர்தலுக்கு இது ஒரு பானைப்பதமாக இருக்கும் ! 

காத்திருப்போம்! 

 நாம் ( முன்பு) வாழ்ந்த வீடு ! – தில்லைவேந்தன்

 Image result for old village house with garden flowers in tamilnadu
 
 
மூச்செல்லாம் மணம்நிரப்பும் பவள மல்லி
   மொய்க்கின்ற அரளியுடன் செம்ப ருத்தி
பூச்செடிகள் புன்னகைத்து வரவேற் கின்ற
   பொலிவான முன்வாயில் அமைந்த  வீடு.
கீச்சென்று கிளிக்கூட்டம் கொஞ்சிப் பேசிக்
  கிழக்கிருக்கும் வேம்பின்மேல் ஆட்டம் போடும்.
பாச்சுவைபோல் இனிக்கின்ற கனிகள் தொங்கும்
   பாங்கான மாமரங்கள் வீட்டின் பின்னே.
  
கல்லிருக்கும் கிணற்றடியில் துவைப்ப தற்கு;
  கருவேப்பி லைக்கன்று நெருங்கி நிற்கும்.
கொல்லையிலே வெட்டிவிட்ட வாய்க்கால் ஓரம்
  குலைத்தெங்கோடு இலைவாழை இணைந்தி ருக்கும்
செல்லரித்த பந்தலதன்  கூரை மீது
  சிறுபாகல் கொடியோடு பிணையும் பீர்க்கு.
சொல்லினிலே அடங்காத அழகுத் தோட்டம்
   சுவைசேர்க்கும் நாவினுக்கும் வாழ்வி னுக்கும்.
 
 மாடத்தில் மங்கலமாம் துளசிக் கன்று;
   மரக்கிளையில் ஆடுகின்ற கயிற்றின் ஊஞ்சல்;
கூடத்தில் புகைப்ப டங்கள் அரைநூற் றாண்டு
     குடும்பத்தின் வரலாற்றை எடுத்து ரைக்கும்.
நாடித்தான் வருகின்ற உறவும்,நட்பும்
     நாட்டுநிலை பேசிப்பின் செல்வ துண்டு.
பாடித்தான் பறக்கின்ற பறவை போல
     பல்வேறு திசைபிரிந்து விட்டோம் இன்று.
 
  தாயுடனே அனைவருமே வாழ்ந்த வீடு
     தாலாட்டுப்    பலகேட்டு வளர்ந்த வீடு
சேயிசைக்கும் மழலையுடன், சிரிப்பும்,பேச்சும்
     சிறியவர்கள் விளையாட்டின் ஓசை யாவும்
பாயுமொரு காலவெள்ளம் அடித்துச் செல்லப்
     பழங்கதையாய் மாறிப்போய் மெல்ல,மெல்ல
ஓயுமென ஒருநாளும் நினைக்க வில்லை
     ஒருகனவோ என்பதுவும் தெரிய வில்லை.
 
 
 
 

ஈடு ஆமோ ?-   தில்லை வேந்தன் 

 

தலைவனிடம், தலைவி ,”உலகத்திலேயே சிறந்த பரிசு வேண்டும். தருவாயா ? “என்று கேட்டாள்.

உன்னைத் தொட்ட தென்றல்…! – கோவை சங்கர்

Related image

உன்னைத் தொட்ட தென்றல் என்னைத் தொடும்போது
மதுவுண்ட மயக்கமே இனிமை இனிமை
உன்னுருவம் நிழலாடும் கள்ளுண்ட என்னுள்ளம்
களிப்புடனே குதிப்பதுவும் புதுமை புதுமை !

ஈரவிதழ் ரோஜாவை சுற்றிவரும் வண்டானேன்
கயல்விழியை  பூசிநிற்கும் குளிர்ச்சிமிகு மையானேன்
கன்னங்கரு கூந்தலையே அளைக்கின்ற சீப்பானேன்
தேமதுரக் குரலினிலே இணைந்துவரும் இசையானேன்..!

கட்டான மேனியின் வழுவழுப்பும் நானல்லவோ
எடுப்பான மார்பகத்தின் துடிப்புமது நானல்லவோ
அன்னநடை மெல்லிடையின் அழகான அசைவானேன்
நாணத்தால் கன்னங்கள் நிறம்மாற சிவப்பானேன்..!

எனக்காக நீயும் உனக்காக நானுமாய்
ஏழேழு ஜன்மங்கள் தொடர்ந்துவரும் சொந்தமடி
ஈருடல் ஓருயிர் பெண்ணே பெண்ணே
நீவேறு நான்வேறு இல்லையடி கண்ணே..!

பேசா பெருமரம் – நிலாரவி.

 
Photo

முதலில் இருவர் 
பசியற்று பரமசுகத்திலிருந்தனர்
பின் சுகமற்றல் குறித்து
யோசித்த வேளையில் 
பசித்தது
நியதிகளைச் சொல்லி 
கனிந்தது மரம்
கனி ஒன்றை இருவரும்
பகிர்ந்துண்டனர்
இருவர் மூவராக 
மூவர் நால்வராயினர்
நான்கு கனிகளை
ஆளுக்கு ஒன்றெனத்  தந்து
நியதிகளைத் தொடர்ந்து 
சொன்னது மரம்

இப்படியே நால்வர் ஐவராகி
அடுத்துப் பெருகி
ஆயிரமாயிரம் ஆயினர்
ஆயிரமாயிரம் கனிகளை
இறைஞ்சினர்
நியதிகளோடு கனிந்தது மரம்

நியதிகளைக்  காப்பதாக
உறுதி சொல்லி
மொத்தக்  கனிகளையும்
தந்துவிட்டு் மௌனமாய்
மறையச் சொல்லினர் 
மரத்தை எல்லோரும்…
“எனது நியதிகளே நான்”
என
நினைவுபடுத்தி
பேசாப்  பெருமரமென
மறைந்தது.

முதலில் இருந்தவர்கள் 
முடிந்தவரை அள்ளிக் கொள்ள
கடைசியிலிருந்தவர்கள்
கனியற்று நின்றனர்.

கனிகளுடையோர் கோலேச்ச
கனியற்றோர் நொந்தனர்
மரத்தின் நியதிகளை மறைத்து
புது நியதி செய்தனர்
கனிகளுடையோர்

எங்களிடம் தருவதற்கில்லை
எல்லாம் மரம் செய்த பிழை
என எப்போதும்
மரத்தை தூற்றினர் சிலர்
நியதிகளை தூற்றினர் சிலர்
தாமே அம்மரமென்றனர் சிலர்
மறைந்த பின்
மரமென்று ஏதுமில்லை 
என்றனர் சிலர் 
கனிகளே நிஜமென்றனர் சிலர்
கனியுடையோர் சிலர் 
மறுத்திருக்க
கனிவுடையோர் சிலர் 
பகிர்ந்துகொண்டனர்.

கம்ப்யூட்டர்   காதல் – (எஸ் எஸ் )

 

கம்ப்யூட்டர்   காதல்

image

காதல் என்பது சாப்ட்வேர்
காமம் என்பது  ஹார்ட்வேர்
இரண்டும்  சேர்ந்து படைத்த ப்ரோக்ராம்
குழந்தை என்பது அதன் பேர்

மடியில் தவழும்  லேப்டாப்பாக
மாறிட எனக்கு வரம் தா
வளைவுகள் என்னும் கீ போர்டில்
வருடிட எனக்கு  கரம்  தா!

ஆடைகள்  என்ற விண்டோசை
மெல்லத் திறந்திடு சீசேம் !
ஓப்பன் கோர்ஸ் ஒஎஸ்சை
முழுதாய் திறந்தால் பப்பி ஷேம்!

மேனி முழுதும் அம்பாய் மாறி
தேடுவது உந்தன் மவுசா!
கிளிக் கிளிக் என்று அமுக்கி என்னை
உசுப்புவது உந்தன் ரவுசா!

கருப்புச் சேலை திரையில்
கலர் கலராக வருவாயா
கண்ணை அடித்து வெப் கேமில்
என்னைப் படமாகப் பிடிப்பாயா

எந்தன் காதல் வரிகளை
மைக்கில் கேட்டு வந்தாயா
உந்தன் மோக முனகலை
ஸ்பீக்கர் போட்டு காட்டாதே

உணர்வுகள் என்னும் வெப் சைட்டில்
உறவுகள் கொண்டோம் இன்டர்நெட்டில்
நமக்குள் இருக்கும் ரகசியம் காக்க
பாஸ்வேர்ட் அதற்குத் தேவையில்லை

நீலக் கண்ணால் பார்க்கும் போது
ப்ளூடூத்  ப்ளுரே  தெரிகிறதே
மேடம்  உந்தன் மோடத்தில்
காதல் பாடம் படித்தேனே

வைப் இல்லாவிட்டால் பரவாயில்லை
வை-பை  இருந்தால் போதும்  எனக்கு
வாடி என்றும் அருகில் அழைத்து
டிவிடியை சுழல வைத்தேன்

பென்   டிரைவ் ஒன்றை சொருகிக் கொள்
டேட்டா பேஸூம் திறந்து கொள்ளும்
உடம்பின் சூட்டை குறைத்திடவே
கூலிங்க் பேடாய் நான் வரவா

காதல் என்ற சமூக வலையில் 
உதடு தான் பேஸ்புக் வலைப் பதிவா
முத்தமிட்டு  நான் போனால்
சத்தமில்லாமல் லைக் போடு

டேப்லெட் உன்னிடம் இருக்கும் வரை
நேரடிக் காதலில் தவறில்லை
பேட்டரி நன்றாய் இருக்கும் வரை
டிஸ்சார்ஜ் பற்றிக்  கவலையில்லை

மெமரி சரியாய் இருக்கும் வரை
வைரஸ் கவலை தேவையில்லை
தேதிகள் கொஞ்சம் தவறிப் போனால்
ஆன்டி வைரஸ்  போட்டுக்கொள்

ஹார்ட் டிஸ்க்  சரியாய் இருக்கும் வரையில்
பேக்கப் பற்றி பயமில்லை
பிளக் அண்ட் பிளே வந்தபிறகு
குஷிக்கு கொஞ்சமும் குறைச்சலில்லை

காதல் டிஜிட்டலாய் மாறும் போது
மொழிகள் அதற்குத் தேவையில்லை
விண்டோஸ் மூடிச் செய்தால் காதல்
திறந்த வெளியில் செய்தால் காமம்

உடம்பின் வளைவுகளைத் தெரிந்துகொள்ள
ஸ்கேனர் எனக்குத் தேவையில்லை
காதல் பயணம் செய்யும் போது
டிரைவர் எதுவும் தேவையில்லை

யாரும் நம்மை பார்த்து விட்டால்
கண்ட்ரோல் ஆல்ட் டெல் போட்டிடுவோம்
நிறுத்து  நிறுத்து என்றாலும்
ஸ்டார்ட் பட்டனைத் தான் அமுக்க வேணும்

எல்லாம் நன்றாய்  முடிந்த பின்னர்
ஸ்லீப் மோடுக்கு போயிடுவோம்
சாதனைப் பட்டியலைப் பார்த்த பின்னர்
ரீ- ஸ்டார்ட் மீண்டும் செய்திடுவோம்!

கவிதையான சிவமே ! -படமும் பாடலும் – சு ரவி


 

 

நிலவு சூடும் அழகும்-கங்கை
நீர்மலிந்த சடையும்
உலவும் அரவு புனையும்- எஃகின்
உறுதி பாய்ந்த உடலும்,
அலகிலாத கருணை -பொழியும்
அமுத வதனமைந்தும்
கலைகளான பரமே- என்றன்
கவிதையான சிவமே!

அதல, சுதலம் முதலாய்- வளரும்
அண்டமாளு கின்றாய்!
நிதமும் கருணை  கொண்டே- பாரம்
நீக்கி அருளுகின்றாய்!
நுதலில் விழியினுள்ளே- ஞானச்
சுடர் வளர்த்து நின்றாய்!
முதலுமான பரமே- என்றும்
முடிவிலாத சிவமே!

அஞ்சும் நெஞ்சினோடு-சூழும்
அசுர, தேவர் கூட்டம்
தஞ்சமென்று நின்றன்-கமலத்
தாள்பணிந்த வேளை
அஞ்சலஞ்சல் என்றே -ஆங்கே
ஆலகாலமென்றோர்
நஞ்சையுண்ட பரமே!- என்னுள்
நடனமாடும் சிவமே!

பாடுகின்ற நாவில் -பனுவல்
பரிமளிக்க வருவாய்!
தேடுகின்ற நெஞ்சில்- பக்தித்
தேன் துளிர்க்க வைப்பாய்!
ஏடு தந்து நின்மேல்- பாடல்
எழுதவைத்துகந்தாய்!
காடுநாடும் பரமே- உமையாள்
காதலிக்கும் சிவமே!

தாதையாகி நின்றாய்- நீயே
தாயுமாக வந்தாய்!
வேதவடிவமானாய்!- எங்கும்
விரியும் அண்டமானாய்!
ஜோதி வடிவமானாய்-வானில்
சுழலும் கோள்களானாய்!
நாதமான பரமே!-என்னுள்
நானுமான சிவமே!