தலையங்கம்

1எடிட்

 

Image result for தமிழக அரசியல்

Image result for தமிழக அரசியல்

தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் முடிந்து மிதமான தட்ப வெட்ப  நிலை  உருவாகி வருகிறது. கேரளாவில் தென்மேற்குப் பருவ மழை துவங்கிவிட்டது. இந்த வருடம் 98 சதவீதம் மழை இருக்கும் என்று வானிலை ஜோதிடர்கள்  சொல்லுகிறார்கள்! பலிக்குமா தெரியவில்லை !

அரசியலில்?

தினகரன் சிறையிலிருந்து வெளியே வந்து தனது விளையாட்டைத் தொடங்கிவிட்டார். சதுரங்க வேட்டை ஆரம்பமாகிவிட்டது. அரசியல் சேவகர்கள் அதற்குத் தகுந்தபடி இங்கும் அங்கும் நட(ன)மாட ஆரம்பித்து விட்டார்கள். ஜெயலலிதாவின் கட்டைவிரலுக்குக் கீழே இருந்து  பொம்மலாட்டம் ஆடிக்கொண்டிருந்த  எம் எல் ஏக்கள், மந்திரிகள் இன்று இபிஸ், ஓபிஸ், தினகரன் என்று மூன்று சக்கர  சர்க்கஸ் விளையாட்டில் ‘பார்’ ஆடிக்கொண்டிருக்கிறார்கள். தான் கீழே விழாமல் இருக்க எந்தக் கையை வேண்டுமானாலும் பிடித்துக் கொள்ளத்  தயாராய் இருக்கிறார்கள்.   ‘நான் ஈ’ என்று  சொல்வது  போல  ‘எங்கே சர்க்கரை?’ என்று சப்புக் கொட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

ஸ்டாலினோ, அண்ணன் எப்போ விழுவான் திண்ணை   எப்போ காலியாகும் என்று காத்துக் கொண்டிருக்கிறார்.

காங்கிரஸ் தலைவர்களுக்கோ குஷ்புவுக்கும் நக்மாவுக்கும் டச் அப் வேலை செய்யவே நேரம் போதவில்லை

பி ஜே பியோ ஜனாதிபதி தேர்தலுக்கு இந்த அக்கன்னா (ஃ) –  அதிமுக என்ன செய்யப் போகுதோ என்று நூல் விட்டுக் கொண்டிருக்கிறது.

பா மு காவுக்கும் , விஜயகாந்த் கட்சிக்கும் பகல் கனவு காணவே நேரம் போதவில்லை

நாட்டு நடப்பு, நிர்வாகம் இவற்றைப் பற்றி யாருக்கு என்ன கவலை?

மக்களும்  ஜல்லிக்கட்டை விட்டுவிட்டு ஜி‌ டி பி , ஜி‌ எஸ் டி, மாட்டிறைச்சி, டாஸ்மார்க் , நீட் தேர்வு என்று பிசியாகிவிட்டார்கள்.

படிப்பாளிகள் இணைய தளங்களில் மீம்ஸ் போட்டுவிட்டு அப்பீட் ஆகிவிடுகிறார்கள் !

ரஜினியும் தன் பங்குக்கு ‘ம்மேய்ய்ய்’  … என்று வாய்ஸ் கொடுத்துக் கொண்டு 2.0க்கு ரெடியாகிக் கொண்டிருக்கிறார்.

நாமும் தலையங்கம்  எழுதி விட்டு  சோம்பலை முறித்துக்  கொள்வோம்!

ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வளவு தான் !!

தலையங்கம்

Related image

ஆர்‌கே நகர் திரைப்படம் பார்ட் 2 (பாகுபலி மாதிரி ) வருவதற்கு முன் கொடநாடு படம் வந்து சக்கைப் போடு போட்டுக்கொண்டிருக்கிறது. அதன் விமர்சனத்தைப் பார்ப்போம்.

Related image

முதல் சீனில் ஜெயாவும் சசியும் கொடநாட்டு வெள்ளை மாளிகையில் பட்டம் விட்டு விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்! (லலல்லா பாட்டு). சிம்பாலிக்காக ஜெயா விடும் பட்டம் மாஞ்சா தடவிய சசிகலாவின் நூலால் அறுந்துவிடுகிறது.

அடுத்தது போயஸ் கார்டென் மாடிப்படி சீன் !

தொடர்ந்து வருவது மணிரத்தினத்தின் இருட்டடிப்பு சீன் மாதிரி அப்பல்லோ மருத்துவமனை சீன்! ஜெயா முகத்தையே காண்பிக்காமல் ஆட்கள் ஓடுவது, தலைவர்கள் வருவது, கட்சிக்காரர்களின் பிரார்த்தனைக் கூட்டம் இப்படிக் காட்டியே விறுவிறுப்பை ஏற்றுகிறார்கள். நடு நடுவில் சசிகலாவின் முகத்தைக் காட்டும்போது கொடுக்கப்படும் திகில் மியூசிக் !

அடுத்த சீன் ஜெயாவின் மரணக்காட்சி! பார்ப்பவர் கண்களைக் குளமாக மாற்றிவிடுகிறது. சசியின் மேக்கப் , தோற்றம், உடல்மொழி கொஞ்சம் கொஞ்சமாக மாறுவது நல்ல எடிட்டிங். இறுதியில் சசியின் ஒவ்வொரு உறவினர்களும் ஜெயாவைச் சுற்றி வளைத்துக் கொண்டு நிற்பது அபாரமான காட்சி!

Image result for ஜெயலலிதா மரணம் சசிகலா உறவினர்கள்

ஜெயாவின் இறுதி ஊர்வலக்காட்சியின்போதே சசிக்கான பதவி ஏற்பு ஏற்பாடுகளைக் காட்டுவது படம் வேகமாகப் போவதை உணர்த்துகிறது.

சசி பெங்களூர் சிறைக்குப் போனவுடன் கொடநாட்டு பங்களாவில் கத்தும் ஆந்தையின் அலறல்! அப்படியே இடைவேளை!

Image result for கொடநாடு

பாப்கார்ன் சாப்பிட்டுவிட்டு வந்தால் பன்னீரும் தினகரனும், பவர் ஸ்டாரும் சந்தானமும் போல வந்து போகிறார்கள் ! (கண்ணா லட்டு தின்ன ஆசையா) ஆர்‌கே நகர் எலெக்ஷன் , தினகரன் கைது கதைக்குச் சூடு ஏற்றுகிறது.

இடை இடையே கொடநாட்டு ஆந்தையின் அலறல்.

அந்த அலறல் நிற்கிறது. அப்படியே கழுத்துத் திருகப்பட்டு ஆந்தை மரத்திலிருந்து கீழே விழுகிறது.

Image result for கொடநாடு

அதற்குப்பின் படம் எக்ஸ்பிரஸ் வேகத்தில் போகிறது. காவலாளி கொலை, பணப் பெட்டிகள் திருட்டு. காவல்துறை தேடல். இவற்றில் சம்பந்தப்பட்ட  இருவர் ஆக்ஸிடெண்டில் இறக்கும் கொடூரமான காட்சி.

காவல்துறை சிலரைக்  கைது செய்து விசாரிக்கிறது. ஏன் அந்தக் கொலைகாரர்கள் காவலாளியைக் கொன்றார்கள் என்பது “கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்றார்?” என்பதைவிட திரில்லிங்காக இருந்தது.

அப்படியே படத்தை முடித்துவிட்டு காவலாளியை யார் எதற்காகக் கொன்றார்கள் என்பதுதான் கொடநாடு பாகம் இரண்டு.

அது எப்போது வருமோ?

 

 

 

தலையங்கம் – ஆர் கே நகர் – சினிமா விமர்சனம்

சென்னையை வைத்து நிறைய படங்கள் வந்துள்ளன – வர இருக்கின்றன – மெட்ராஸ், மதராசபட்டணம்,  வட சென்னை, மாநகரம், தூங்காவனம்.

அந்த வரிசையில் சமீபத்தில் ஏப்ரல் 12ல் வெளியானது ஆர் கே நகர்.

படம் செம டக்கர் ! வசூலில் அள்ளிக் கொண்டு போகிறது.! படம் வெளியாகும் முன்னே 89 கோடி வசூலாம். 

மறைந்தImage result for jayalalitha last journey முதல்வர் அம்மாவின் இறுதி யாத்திரையோடு துவங்குகிறது. பார்ப்பவர் நெஞ்சை உருக்கச் செய்கிறது. (இதையே பின்னாடி பன்னீர் ஆளுங்க வேற மாதிரி செய்வாங்க ) 

Image result for sasikala in jayalalitha samathi hittingஅப்புறம்  சின்னம்மாவின் வருகை – கொஞ்சம் கொஞ்சமாக அவர்கள் முதல்வர் நாற்காலிக்கு வருவது. அதில் உட்காரப்போகும்போது சிறைத் தண்டனை என்று அவரை பெங்களூருக்கு அழைத்துப்போவது. போவதற்கு முன் அவர் அம்மாவின் சமாதிக்குச்சென்று மூன்று முறை அடித்து சபதம் செய்து தினகரன் கையில்  கட்சியைக் கொடுக்கும் காட்சி படத்தை விறுவிறுப்பாகக் கொண்டு செல்கிறது. 

Image result for pannir and dinakarஅதுவரை அமைதியாக இருந்த பன்னீர்,  விஜய் சேதுபதிபோல அப்படியே ஒளி  வட்டத்துக்கு வருகிறார். அவர் வரும் காட்சியில் எல்லாம் அமைதியான நடிப்பால் கைதட்டல் வாங்கிறார்.  

அதற்கு முன்  கூவத்தூர் காட்சி செம கலக்கல்! 

Image result for kuvathur

நம்பிக்கைத் தீர்மானத்தின்  போது சட்டசபையில் நடந்த கலாட்டாக்கள் பயங்கர காமெடி.

Image result for dinakaran with a capஅதற்கப்புறம்தான் புது விதமாக ரி -என்ட்ரி ஆகிறார் தினகரன் அரவிந்த்சாமி ஸ்டைலில் தொப்பி போட்டுக் கொண்டு. 

ஏப்ரல் 12ல் தேர்தல்

 

ஊரு இரண்டு படும் போது ஸ்டாலின் சீரியசாக தனது ஆImage result for rajini and gangai amaranளை  உள்ளே நுழைக்கிறார். அத்தோடு இன்னும் நிறைய பேர் நிற்பது காமெடி பீஸ் போல  இருக்கு!  ( ரஜினி கூட சின்ன CAMEO செய்திருக்கிறார்) 

 

Image result for kasu panam thuttu maniபணம் எல்லா இடத்திலும் கொட்டுகிறது. (காசு பணம் துட்டு மனி மனி என்ற சூது  கவ்வும் பாடல் இதற்கு நன்றாகப்  பொருந்துகிறது. ) 

 

கிளைமாக்ஸில் வருமானவரி சோதனையும் அப்போது  நடக்கும் காட்சிகளும் (அதிலும் குறிப்பாக ஒரு ரகசிய டாக்குமெண்டை அதிகாரிகள் பார்க்கும் போதே கைமாறி கேட்டுக்கு வெளியே கொண்டு போகும் காட்சியில் டைரக்டர் எங்கோ போய் விட்டார்.) பரபரப்பாக இருந்தன.

அந்தக் களேபரத்தில்  தேர்தல் ஒத்திப்போடப்பட்டுள்ளது என்று அறிக்கை வருகிறது.

எல்லா வேட்பாளர் முகத்திலும் முதலில் ஒரு கோபம் – பிறகு திகில் -பிறகு அப்பாடா என்பது மாதிரி இலேசான புன்னகை .

அப்போது டைட்டில் வருகிறது –  

விரைவில்  ஆர் கே நகர் பார்ட் -II !

 

 

 

தலையங்கம்

 

1எடிட்

Image result for modi win in up

Image result for sasikala and panneerselvam

Image result for tamil nadu politics in 2017

Image result for neduvasal

Image result for neduvasal

தமிழக அரசியல் வானில் கரு மேகங்கள் !

  • ஜெயலிதா அவர்களின் மறைவு 
  • சசிகலா முதல்வராக முயற்சி
  • உச்ச நீதி மன்றத்தின் தண்டனையினால்  சசிகலா சிறைவாசம் 
  • தினகரன் துணை பொதுச் செயலாளர் 
  • பன்னீர்செல்வம் போர்க்கொடி 
  • கூவத்தூர்  விடுதியில்  122 எம் எல் ஏக்கள் கூண்டோடு அடைப்பு 
  • எடப்பாடி பழனிசாமி முதல்வராகத் தேர்ந்தெடுத்தல் 
  • அடி தடி ரகளையுடன் சட்டசபையில் நம்பிக்கைத் தீர்மானம் வெற்றி 
  • சசிகலா பொதுச் செயலாளர் பதவி வகிப்பது முறையா ? தேர்தல் அதிகாரிகள் ஆராய்ச்சி
  • உள்ளாட்சித் தேர்தல் விரைவில் 
  • இத்தனை அரசியல் போட்டா போட்டிகளுக்கு நடுவே ,  வாடி வாசல் (ஜல்லிக்கட்டு) , நெடுவாசல் (ஹைட்ரோகார்பன் ) போராட்டங்கள் !

இவையெல்லாம் தமிழகத்தில் நடைபெற்ற முக்கிய செய்திகள் 

இவற்றையெல்லாம் விட எகிறும் வட இந்தியா தேர்தல் நிலவரம்

  • உத்தரப் பிரதேசத்தில், மற்றும் உத்தர் கண்டில்  பி ஜே பியின் இமாலய வெற்றி 
  • மணிப்பூர், கோவா இரண்டையும் பி ஜே பி யே கைப்பற்றும் நிலை
  • பஞ்சாபில் காங்கிரஸ் வெற்றி   

மொத்தத்தில்  மோடியின் கரங்கள் பலமடைந்திருக்கின்றன.

செல்லா நோட்டு விவகாரம் செல்லா நோட்டாகிவிட்டது.

நாடு முன்னேற்றப் பாதையில் செல்ல இதைவிடச் சிறந்த தருணம் கிடைக்காது! 

மோடிஜி !

நாட்டை வெற்றிப் பாதையில் கொண்டு செல்ல உங்கள் பின் அணிவகுத்து வரத் தயாராயிருக்கிறோம்! 

தலையங்கம்

 

Image result for அம்மா சின்னம்மா

தமிழகத்தில் அம்மா போய் சின்னம்மா வந்தாகிவிட்டது.

முகமாற்றம் மட்டுமல்ல !

அ தி மு க வின் தலைமைப் பதவி சின்னம்மாவிற்குத் தங்கத் தாம்பாளத்தில் தந்தாகிவிட்டது.

ஓ பன்னீர்செல்வத்தை எப்போது எப்படி போகச் சொல்வது என்று தீவிரமாக யோசித்துக் கொண்டிருக்கிறார்கள்.

கிச்சன் கேபினெட்டை மக்கள் கேபினெட்டாக மாற்ற நினைக்கிறார்கள்.

பின்னணி பாடியவர்  திரைக்கு முன்னால்  வர விரும்புவது புரிகிறது.

அது வரும்வரைக்கும் தமிழகத்தின் சாதாரணக் குடிமகனுக்கு இது ஏட்டுச்  சுரைக்காய்தான்,  அகடமிக் இன்டிரஸ்ட் தான்.

எப்போது சின்னம்மா அரசுக் கட்டிலில் அமர்கிறார்களோ அப்போதிலிருந்து அவரது  ஒவ்வொரு நடவடிக்கையும் தராசுத் தட்டில் வைக்கப்படும்.

அவரது நேற்றைய மற்றும் இன்றைய செயல்பாடுகளை முழுச் சுதந்திரத்தோடு விமரிசிப்பது மட்டுமல்லாமல் அவரின் தனிப்பட்ட வாழ்க்கையையும் விமரிசிக்க நேரக்கூடும்.

எதிர்க்கட்சிகளும் வரிந்து கொண்டு களத்தில் இறங்கும்.

தமிழகத்தில் அப்போது உண்மையான ஜல்லிக்கட்டு நடைபெறும்.

அப்போது சொல்லுவோமா ‘பலே  வெள்ளையம்மா !’

1எடிட்

 

தலையங்கம்

Image result for modi address to the nation on demonetisation

நவம்பர்  எட்டு – இரவு எட்டு  மணி 

மதிப்பிற்குரிய பிரதமர் மோடி அவர்கள் அறிவிப்பு!

” 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது.”

மெத்தப் படித்த மேதைகளும் அன்றாடங்காய்ச்சிகளும் – சிவாஜி the boss மற்றும் பிச்சைக்காரனும்,  ஏன்-   நீங்களும் நானும் பலமுறை பல இடங்களில் சொல்லி வந்தது!

” எந்த அரசியல்வாதிக்காவது தில் இருக்கா ? ஐநூறு ஆயிரம் ரூபாயைச்  செல்லாது என்று அறிவித்து கறுப்புப் பண  முதலைகளின் வாயைக் கிழிக்க முடியுமா? ”   

‘என்னால் முடியும் தம்பி’ என்று ஒருவர் துணிந்து செயல் படுத்தியிருக்கிறார். 

அவரது காலில் விழுந்து வணங்குவோம்! 

நமது புரையோடிய புண்ணுக்கு – அடைப்புள்ள இதயத்துக்கு இது தேவையான  பொருளாதார அறுவை சிகிச்சை !

பணத்தைக் கடலுக்கு அடியில் பதுக்கி வைத்திருந்த அதிகாரக்  கும்பலின் வயிற்றைக் கிழித்த பண உலகின் சுனாமி ! 

நாசவேலை செய்யத் தூண்டிவிடும் வெளி நாட்டு வெறிநாய்களுக்கு போட்டுவிட்ட விஷ  ஊசி !

அக்கிரமம் செய்யும் புலிகளும் நரிகளும் ஓநாய்களும் வேட்டையாடப்படும்போது  மான்களும் முயல்களும் அடிபடுவது இயற்கை!

ஆனால் பின்னால் நமக்குக் கிடைக்கப் போகும் ஆனந்த சுதந்திரத்தை எண்ணி இந்தத் தற்காலிகத் துயரங்களை நாம் தாங்கிக்கொள்ளத்தான் வேண்டும்!   

நாட்டுக்காக இதைக் கூட  நாம் செய்யவில்லை என்றால் நாம் மனிதர்களே அல்ல!

நாளை நமதே! 

India hand lettering and doodles elements background. Vector illustration

( இது பற்றிய பிரதமரின் ஆங்கிலப் பேச்சைக்  கேட்கத் தவற விட்டவர்கள் இங்கே கேட்கலாம்) 

தலையங்கம்

Image result for recent photo of jayalalitha

தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்கள் அப்பல்லோ மருத்துவ விடுதியில் உடல்நலம் சரியில்லாததால் இருபது நாட்களுக்கு மேலே சிகித்சையில் இருக்கிறார்.

முதலில் , அவர் எல்லா நலன்களும் பெற்று விரைவில் குணமாகி வரவேண்டும் என்று அனைவரும் வேண்டிக் கொள்வோம்.

அவருக்கு இருக்கும் மன வலிமை அவரைப் பலமுறை விளிம்பின் எல்லையிலிருந்து  மீட்டிருக்கிறது. இம்முறையும் அது அவரை மீட்கும் என்பதில் ஐயமில்லை.

இதில், இப்போது முக்கிய நிகழ்வு என்னவென்றால், அவரது உடல்நிலையைப் பற்றி வதந்திகளை ஊடகத்தில் பரப்பும் சிலரை அரசு கைது செய்திருக்கிறது.

jj1

 

 

 

 

 

 

இதை முழு மனதுடன்  வரவேற்கிறோம்.

ஊடகம் ஒரு பொறுப்பான சாதனம். அதைத் தவறாகப் பயன்படுத்துவது சட்டத்திற்குப் புறம்பான செயல்.  வாட்ஸ் அப்பிலும் முகநூலிலும் மக்கள் எவ்வளவு அலட்சியமாகப் பொய்யை மெய் போல் எழுதிக் குவிக்கிறார்கள். அவர்களைத்  திருத்துவது எப்படி?

அந்தக் காலத்தில் மதிப்பும் மரியாதையும் நிரம்பிய குமுதம் ஆசிரியர் அவர்கள் ஒருமுறை ஏப்ரல் முட்டாள் தினத்துக்காக குஷ்புவையும் பாலச்சந்தரையும் இணைத்து எழுதிய கட்டுரைக்காக அவர் பலமுறை நீதி மன்றத்துக்குச் சென்று மன உளைச்சலில்  தவித்தார் என்று கூறுவார்கள். இது அனைவருக்குமே சரியான பாடமாகும்.

விளம்பரத்துக்காக எதை வேண்டுமானாலும் எழுதலாம் என்று அலையும் சிலரின் வக்கிரத்துக்குக் கிடைக்கவேண்டிய தண்டனையே வதந்தியைப் பரப்புபவர்களுக்குக் கிடைக்கப் போகிறது.

இது வரவேற்கப்படவேண்டிய விஷயம் !

1எடிட்

தலையங்கம்

1எடிட்

 

தலையங்கத்தில் ஏதாவது ஒரு செய்தியைப் பற்றிச் சொல்லவேண்டும் என்று யார் சொன்னது?  செய்திகள் சிலவற்றைப்  பற்றியும் அதைப் பற்றிய நமது கருத்துக்களையும்  எழுதுவோமே !!

ரயில்ல  அப்பர் பர்த்துன்னு ஒண்ணு  இருக்கும்.அது 70 வயசுக்கு மேலே உள்ளவங்களுக்குத் தான் கிடைக்கும். அதுக்கும் மேல பர்த் போட்டு ஓட்டை போட்டு உள்ளே இருந்த அரசாங்க பணத்தைக் கொள்ளையடிச்சுட்டுப் போயிருக்காங்களே  !                                                                                           எஸ் ஆர் எம் குழுத் தலைவர் பாரிவேந்தர் என்கிற பச்சமுத்து மாணவர்களிடமிருந்து மருத்துவக் கல்லூரியில் சேர்த்து விடுவதில் 75 கோடி பணம் பெற்றார் என்று குற்றம்சாட்டி நீதி மன்றக் காவலில் வைக்கப்பட்டிருக்கிறார்                                                                                                                                                          காவிரித் தண்ணீர் பிரச்சினை. – முதலில் கர்நாடக முதல்வர் தண்ணீர் தர மறுப்பு . தமிழக அரசு உச்ச நீதி மன்றத்துக்கு மேல்முறையீடு – தண்ணீர் தர தீர்ப்பு – எல்லையில் பதட்டம்  – பந்த் – பஸ் எரிப்பு – அடிதடி                                                                                                                                               ரிலயன்சின் ‘ஜியோ’ அறிமுகத்தால் ஏர்டெல் , ஏர்செல். ஐடியா போன்ற கண்பனிகளின் ஷேர் மதிப்பு வீழ்ந்தது.                                                                                                                      ஐநாவில் 50 ஆண்டுகளுக்கு முன் எம் எஸ் சுப்பலக்ஷ்மி பாடிப் பரவசப்படுத்தினார்.                                                                                                                                                                                                                                                                                 அக்டோபர் 24க்குள் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்வு முடிவுற வேண்டும்.                                                                                  சிவாஜிக்குப் பிறகு செவாலியர் விருது நம்ம  கமல்ஹாசனுக்குக் கிடைத்திருக்கிறது.                                                                                                                                                      ஒலிம்பிக்ஸில்  பதக்கங்களைப் பெற்ற வெள்ளி  சிந்துவுக்கும் வெண்கல சாக்ஸிக்கும் பரிசு மழை குவிகிறது                                                                                                                                                                                                                                              சதாப்தி ,துரந்தோ ரயில்களில் மாறும் கட்டண விகிதம் அறிமுகமாகப் போகிறது.                                                                                                                                                      கி ராஜநாராயணனுக்கு இலக்கிய சாதனையாளர் விருது.                                                                                                                                                                                              டி எம் கிருஷ்ணாவுக்கு மாகசஸே விருது                                                                                                                                                                                                                                       ‘பெருமாள் முருகன் என்ற எழுத்தாளர் செத்துவிட்டார் ‘ என்று அவரையே சொல்ல வைத்தவர்களின் முகத்தில் கரியைப் பூசியது நீதிமன்றம்.                                                                                                      
             பட்டி மன்றத்தில ராஜா
             சொன்னாலும்  அதுல                       ரொம்ப
             உண்மை இருக்கு !

 

 

 

                                                              இது ஒரு எரிமலையின் துவக்கம் தான். எத்தனை முதலைகள் திமிங்கிலங்கள் இன்னும் பதுங்கிக்  கொண்டிருக்கின் றவோ ? கடவுளுக்குத்தான் வெளிச்சம் !

 

                                                                     

இதற்கு ஒரு முடிவே இல்லையா?   ஒரு நிரந்தர  தீர்வு பிறக்க வழியே இல்லையா?  இரு மாநிலங்களும்  தண்ணீரைப் பகிர்ந்து கொள்ள என்ன வழி?                                                                                                                                                                                                                                                                                                                           இவ்வளவு  காலம் நம்மை ஏய்த்துக் கொண்டிருந்தவர்கள் அல்லவா? நமக்கு நல்ல காலம் வருமா?                                                                                                                                                                                             இன்று எம் எஸ்ஸின் 100 வது பிறந்த நாளில் ஏ ஆர் ரஹ்மான் அதே ஐநாவில் பாடி மகிழ்வித்திருக்கிறார்.                                                                                                                                                                                                                        நம்மைத் தேற்றுவார் யாரும் இல்லை                                                                                                                                                                                            ரஜினி சொன்னார் : மகிழ்ச்சி                                                                                                                                                                                                                                                                                                                                            அனைவருமே பெருமைப்படுகிறோம். இருந்தாலும் ‘இவ்வளவு தானா நம்ம திறமை’ என்று ஆதங்கப்படாமல் இருக்கமுடியவில்லை                                                                                                                                                       இதன்படி  கட்டணம் பின்னால் வாங்குபவர்களுக்கு 40-50% அதிகமாக இருக்கும் . ரொம்பக் கொடுமை மோடி சார்!                                                                                        மிகவும் தகுதி பெற்றவர்.  இந்த வருடம் ஞானபீடம் அவருக்கென்று பட்சி சொல்கிறது                                                                                                                மேடையில் புரட்சி செய்த பாடகர்.  இதற்கும் மேலான  பரிசுக்கும் அவர் தகுதி வாய்ந்தவர்.                                                                                                               நீதி அவரை உயிர்ப்பித்துவிட்டது                                                                                                                                                                                                                                                                                                                                                      

  

 

தலையங்கம் – தங்கம் வாங்கலையோ தங்கம்?

1எடிட்

உலகத்திலேயே அதிகமாகத்  தங்கம் வாங்கும் நாடு நம் இந்தியாதான்! ஆனால் ஒலிம்பிக்கில் மட்டும் ஏன் நம்மால் தங்கம் வாங்க முடியவில்லை?

அதற்கான வீரம் இல்லையா,  விவேகம் இல்லையா, தரம் இல்லையா, தகுதி இல்லையா ?   அல்லது சாதிக்கப் பிறந்தவர்கள்  யாருமே இல்லையா ? அனுமனும்  பீமனும் கதை நாயகர் மட்டும் தானா? உதாரண புருஷர்கள் இல்லையா ? நாம் பழமை பேசித் திரியும் பஞ்சாங்கமா?

விளையாட்டுக்கும் உடற்பயிற்சிக்கும் பள்ளியிலிருந்து முக்கியத்துவம் கொடுத்து நம்மை நாமே தயார் செய்யவில்லை என்றால் நம் இந்தியா வல்லரசானாலும் வெறும் சொல்லரசாகவே இருக்கும்.

ஏட்டுச் சுரைக்காய் போல டாக்டரையும் இஞ்சினியரையும்  தயாரிக்கும் தொழிற்சாலையாக இல்லாமல் உண்மைக் குடிமக்களை உருவாக்க நாம் முயலவேண்டும்.

செய்வோமா ? செய்வீங்களா?

Image result for rio olympicsIndia players carrying the Indian flag at the opening ceremony of the 2012 London Olympics

 

யார் அந்த சிவப்பு டாப் மற்றும் நீல ஜீன்ஸ் பெண் ? எப்படியோ நமது டீம் கொடியெடுத்து வரும் போது கலந்து கொண்டு ஜாம் ஜாம் என்று மார்ச் பாஸ்டில் நடை போட்டு வருகிறாரே?  யாருக்கும் தெரியவில்லையாம்.

அடுத்த குளிர் கால ஒலிம்பிக்ஸ் எங்கே தெரியுமா ? பையோங்க்ஸங்க் என்ற சிறு  நாட்டில் 2018இல் நடக்க உள்ளது.

அதற்கு அடுத்த கோடைகால ஒலிம்பிக்ஸ் பீஜிங்கில் 2020இல் நடைபெற உள்ளது.

அதற்கு இப்போதே தங்கப்பையன்களையும் தங்கப்பெண்களையும் தயார் செய்வோம்.

 

தலையங்கம் – ஸ்வாதி கொலையில் ஊடகங்கள்

 

P. Ramkumar (24), the suspected assailant in the Swathi murder case

ஜூன் 24, வெள்ளிக்கிழமை. இன்போசிசில் பணிபுரியும் ஸ்வாதி என்ற இளம்பெண்  நுங்கம்பாக்கம் இரயில் நிலையத்தில் ஒரு கொலையாளியால் தாக்கப்பட்டு கொடூர  மரணம் அடைந்தார். அவர் அடிபட்டுக் கிடக்கும் காட்சியைப்  புகைப்படத்திலும்  வீடியோவிலும் பார்த்துத்  துடிக்காத மனித இதயமேகிடையாது. .

காவல் துறை  முதலில்  மெத்தனமாகச் செயல்பட்டது. உயர்நீதிமன்றம் முடுக்கிவிட்ட பிறகு அபார திறமையுடன் செயலாற்றி ராம்குமார் என்ற இளைஞனைக் குற்றவாளி எனக் காவல்துறை பிடித்திருக்கிறார்கள்.  பிடிபடும் போது   அவன் கழுத்தில் வெட்டிக்கொண்டது பதட்டத்தை மேலும் அதிகப் படுத்தியது..

நேரடியாகப் பார்த்த சாட்சியம் குறைவாக இருப்பதால்,  பிடிபட்டவன் தான் குற்றவாளி என்று நிரூபிக்கவேண்டிய பொறுப்பு காவல் அதிகாரிகளுக்குச் சற்று அதிகமாகவே இருக்கிறது.

ஜாதிகள் வேறு இதில்  குறுக்கிடுவது  அனைவருக்கும் வேதனையைத் தருகிறது.

ஊடகங்களும்  முகநூல்களும் இணைய தளங்களும்  வாட்ச் அப்புகளும் இந்த வழக்கில்  மட்டுமல்ல இதைப்போன்ற மற்ற பரபரப்பான – முக்கியமான விவகாரங்களில் தங்கள் மூக்கை அதிகமாக  நுழைத்து பெரும் சர்ச்சையைக் கிளப்பி மக்களைத் தவறான பாதையில் திசை திருப்புகிறார்கள்.

தீர்ப்புக்கள் நீதிமன்றத்தில் தான் எழுதப்படவேண்டும். ஊடகங்கள் அதில் புகுந்தால் நீதிக்கும் நேர்மைக்கும் ஆபத்து.

இந்தப் போக்கு மிகவும் கண்டிக்கத் தக்கது.

இதைத்  தடுக்கப் புதிய சட்டம் வரவேண்டும்.

வரும்.

 

1எடிட்

 

தலையங்கம்

 

மாத்தி யோசி….மாத்தி யோசி…. மாத்தி யோசி …

நாளை மே  16 தமிழகத்தில் தேர்தல் நாள்.

மாறி மாறி வரும் தி மு க -அ தி மு க என்ற துலாம் பலகை ஆட்டமா?   

இல்லை இந்த ஆண்டு அம்மா மீண்டுமா? 

இரண்டும் இல்லாத மூன்றாவது அணிக்கு  வாய்ப்பு இருக்கிறதா ?

கவர்ச்சி நடிகை கவர்ச்சியைக் காட்டி மக்களை இழுப்பது போல அரசியல்வாதிகளும் இலவசங்களைக் காட்டி நம்மைக் கவரப் பார்க்கிறார்கள். 

கருத்துக்கணிப்பு இப்போது விலை போகிறது. கட்சிகள் சொல்லுவது போலக் காட்சிகள் எழுதப்படுகின்றன.  

ஓட்டைக் கூடக் காசு கொடுத்து வாங்கலாம் என்று அரசியல் வாதிகள் துணிந்து செயல்படுகிறார்கள். 

தொலைக்காட்சி கலந்துரையாடல் நிகழ்ச்சிகளில் தலைவர்களோடு ஒருங்கிணைப்பாளரும் சேர்ந்து அலறுகிறார்.  

ஊடக  விளம்பரங்களில் நாகரிகம் நசுங்கி மிதிபடுகின்றது. 

எந்தக் கட்சிக்கும் கொள்கை கிடையாது . பண்பு கிடையாது. நல்ல உணர்வுகள் கூடக் கிடையாது.

இணையதளங்களிலும், எல்லாக் கட்சிகளும் ஒருவரை  ஒருவர் எவ்வளவுக்கு அசிங்கம் செய்ய முடியுமோ அவ்வளவு செய்கிறார்கள்.

படித்தவர் –  படிக்காதவர், பணக்காரன் – ஏழை , ஆண் –  பெண் அனைவரும் அசிங்கப் படுத்துகிறோம். அசிங்கப் படுகிறோம்.

எங்கே நாம் போகிறோம். ? போகப்போக இவை இன்னும் மோசமாகப் போகுமேயன்றி நல்லபடியாக மாறும் என்பதற்கான அறிகுறிகளே இல்லை.   

ஆபாசம் இல்லாத தேர்தல் நடக்காதென்றால் தேர்தல் இல்லாத ஜனநாயகம் சாத்தியமா என்று மாத்தி யோசிக்கலாமே? 

 

 

 

தலையங்கம் -சூடு

panama copy

 

இந்தியாவில்  குறிப்பாகத் தமிழகத்தில் எங்கும் எதிலும் இப்போது சூடு பறக்கிறது !

மார்ச் ஏப்ரல் மாதத்திலேயே 100 டிகிரிக்கு மேல் கோடையின் தாக்கச் சூடு. கொதிக்கும் சாலைகள் தமிழகத்திலும் வெயிலின் தாக்கம் அதிகரிக்கத்   துவங்கியுள்ளது.

பனாமா வெளியீட்டால் ஊழல் வாதிகள் உலகெங்கும் பறந்து கிடக்கிறார்கள் என்கிற சூடு!

கேரளாவில் கொல்லத்திற்கு அருகே பரவூர் தேவி கோவிலில் நடைபெற்ற வாண  வேடிக்கை விபரீதமாகி 110  க்கும் மேற்பட்டவர்களைப் பலி வாங்கிய சூடு !

( அந்தக் கொடுமையை இந்த வீடியோவில் பார்த்தால் அந்த சூட்டின் கொடுமை புரியும்! )

கொல்லம் கோவில் பட்டாசுத் தீ விபத்து

எல்லாவற்றிற்கும் மேலாக தேர்தல் சூடு வேற!

தமிழகம், கேரளா, அஸ்ஸாம், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் தேர்தல் சூடு பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது.

தமிழகத்தில் அண்ணா தி மு க வின் இரட்டை இலை எல்லா தொகுதிகளிலும் போட்டியிடுகிறது.

தி மு க கூட்டணியில் காங்கிரஸ் மற்றும் சில குட்டிக் கட்சிகள்.

விஜய்காந்த் கூட்டணியில் வை கோ, திருமாவளவன், இடது வலது சாரிகள் கடைசியாக வாசனின் த மா கா ,

பாட்டாளி கட்சி  தனியாக ,

பி ஜே பி  தன்னந் தனியாக

இப்படி ஐந்துமுனைப் போட்டி உருவாகியுள்ளது. இதனால் தேர்தல் சூடு அதிகரித்துக் கொண்டே வருகிறது. கத்திரி வெயிலே தேவலாம் என்ற அளவில் இருக்கிறது தேர்தல் ஜுரம்.

இப்படிப் பலவித சூடுகள்!. நாம் எப்போதும் சூடு கண்ட பூனை ஆயிற்றே!  எததனை சூடு பட்டாலும் நமக்கு சூடு சொரணை வருமா?  தெரியவில்லை. ஆனால் ஓட்டுப் போடுவது நமது கடமை. ஐந்து முகங்களுடன் நோட்டா  ( 49 ஓ) சேர்த்து ஆறு முகங்கள் இருக்கின்றன.  விதியை மனதில் எண்ணிக்கொண்டு நமக்குப் பிடித்த முகத்தில் குத்துவோம். நடப்பது நடக்கட்டும். 

 

 

 

Editor and Publisher’s office address:

S.Sundararajan
B-1, Anand Flats,
50 L B Road, Thiruvanmiyur
Chennai 600041
போன்: 9442525191
email : ssrajan_bob@yahoo.com

ஆசிரியர் & பதிப்பாளர்  : சுந்தரராஜன்
துணை ஆசிரியர்     : விஜயலக்ஷ்மி
இணை ஆசிரியர்    :அனுராதா
ஆலோசகர்              :அர்ஜூன்
தொழில் நுட்பம்    : ஸ்ரீநிவாசன் ராஜா
வரைகலை             : அனன்யா

தலையங்கம் – விஜய் மல்லையா – பாலன்

 

வில்லன்களெல்லாம் ஹீரோவாக பவனி வரும் இன்றைய நாளில் விஜய் மல்லையா தான் சமீபத்திய ஹீரோ.

சரக்கு விற்றுக்  கோடி கோடியாய்ச்  சேர்த்து இந்தியாவின் முதன்மை பணக்காரர்களில் ஒருவராக இருந்தவர் பின்னர் பறக்க ஆசைப்பட்டு  கிங் பிஷர் ஆகாயவிமான சர்வீசில் தன்னை இணைத்துக் கொண்டார். பணம் பறந்தது, கடன் எகிறியது. இன்று அவர் 9000 கோடிக்கு மேல் கடனாளி. வங்கிகளுக்கு  அவர் தன்னுடைய  சொந்த ஜாமீன் கொடுத்ததால் அவரது மற்ற சொத்துக்களிலிருந்து தங்கள் கடனை வசூலிக்க வங்கிகள் தீவிரம் காட்டிவருகிறது. அவரை  ‘பணம் வைத்துக்கொண்டே தர  மறுக்கும் கடனாளி ‘ என்று வங்கிகள் அறிவித்துள்ளன. 

அவரைக் கைது செய்ய வேண்டும் என்று வங்கிகள் நீதி மன்றத்துக்குப் போய்க் கொண்டிருக்கும் போதே அவர் இந்தியாவிற்கு “டா டா பை பை” என்று கூறிவிட்டு லண்டனுக்குப் பறந்து போய் விட்டார். இனி அவராக வந்து பணம் கொடுத்தால் தான் ஆச்சு. 

வராக் கடனில் மூழ்கித் தத்தளிக்கும் இந்திய வங்கிகளுக்கு இந்த மாதிரி தராக் கடன் சோதனைக்கு மேல் சோதனை தான். 

எதிர்க்கட்சி ஆளுங்கட்சியையும் ஆளும் கட்சி எதிர்க்கட்சியையும் குறை கூறிக்கொண்டு பிறகு ஒன்றுமே நடக்காதது மாதிரி துடைத்துக்கொண்டு போய் விடுவார்கள். 

ஆனால் தஞ்சாவூர் பாலன் என்ற விவசாயி  வாங்கிய  7 லட்சம் ரூபாய் டிராக்டர் கடனுக்கு ஐந்து லட்சம் கட்டியும் பாக்கி வரவில்லை என்று காவல்துறையினர் அவரை அடித்து உதைத்து டிராக்டரை பறிமுதல் செய்திருக்கிறார்கள். 

ஏழைக்கும் பணக்காரனுக்கும் நீதி கூட தனித்தனி தான். !!

 

Editor and Publisher’s office address:

S.Sundararajan
B-1, Anand Flats,
50 L B Road, Thiruvanmiyur
Chennai 600041
போன்: 9442525191
email : ssrajan_bob@yahoo.com

ஆசிரியர் & பதிப்பாளர்  : சுந்தரராஜன்
துணை ஆசிரியர்     : விஜயலக்ஷ்மி
இணை ஆசிரியர்    :அனுராதா
ஆலோசகர்              :அர்ஜூன்
தொழில் நுட்பம்    : ஸ்ரீநிவாசன் ராஜா
வரைகலை             : அனன்யா