மீனங்காடி – நிறைவுப் பகுதி

அடுத்து
வந்தது
ஒண்ணா
இருக்கக் கத்துக்கணும்
அணி !

image

 

அவர்கள்
மிகவும் விசித்திரமாகச் செய்தார்கள்!

 முதல் இரு
அணிகள் போல ஜாலியான கத்தல்
கூச்சல் எதுவும் இல்லாமல் அமைதியாக
ஆரம்பித்தார்கள்.!
 பின்னணி இசை கூட மெதுவாக இழையோடிக் கொண்டிருந்தது.  அந்த  அணியிலிருந்து ஒரு பெண் மெதுவாக மேஜிக்மெஸ்மெரிஸம் செய்பவள் போல வந்து நின்றாள் !

image

உங்கள்
அனைவருக்கும் எங்கள் வந்தனங்கள் !
 இதுவரை ஆடி ஓடிக் களைப்படைந்திருப்பீர்கள்.! சற்று அமைதியாக உட்காருங்கள் ! நன்றாக ரிலாக்ஸ் செய்து கொள்ளுங்கள் ! தயவு செய்து நான்
சொல்கிறபடி செய்யுங்கள் !

 உங்கள்
கண்களை மெல்ல மூடிக் கொள்ளுங்கள்.! நன்றாக ஒருமுறை மூச்சை இழுத்து விடுங்கள்.!
அப்படியே அமைதியாக ரிலாக்ஸ்டாக இருங்கள் !
 நிகழ்ச்சி முடிகிற வரை கண்களை மூடிக் கொண்டே இருங்கள் ! சாதாரணமாக மூச்சு விடுங்கள் ! எங்கள் அணி நண்பர்கள் இப்போது உங்களுக்காக சில நிகழ்ச்சிகளை வழங்குவார்கள் ! அவை உங்கள் மனத்தை எங்களுடனும், எங்கள் மனத்தை உங்களுடனும் ஒண்ணா இருக்கச் செய்யும்.!

 நாங்கள்
சொல்லப் போகிற கருத்துக்களைக் காது கொடுத்துக் கேளுங்கள் ! அப்படியே அமைதியாக
ரிலாக்ஸ்டாக கண்ணை மூடிக் கொண்டு சாதாரணமாக மூச்சு விட்டுக் கொண்டு கேளுங்கள்!

 முதலில்
இந்தப் பொன்மொழியைக் கேளுங்கள் !

‘ 

நேற்று
என்பது சரித்திரம்
மறந்து விடுங்கள் !

நாளை என்பது புதிர்     கவலை விடுங்கள் !

இன்று
என்பது இன்பம்
   அதில் வாழுங்கள் !

 

பிறகு
சேகர் வந்தான்.! தனது சொந்த வாழ்க்கையைப் பற்றிக் கூறினான்.
 அதில் ஒரு சோகம் இழைந்தது. நான் ஓடி ஓடி உழைத்துக் கொண்டிருந்த காலம்.
இரண்டு வேளை சாப்பாட்டிற்காக நான்கு வேளை உழைத்தேன். அந்த சமயங்களில் எல்லாம் என்
ஒரே பெண் அடிக்கடி என்னிடம் கெஞ்சுவாள்
, “ அப்பா! வாயேன்! ப்ளீஸ்! நாம் அந்தப்
பூங்காவிற்குப் போய் விட்டு வரலாம்
என்று அடிக்கடி கேட்பாள் ! நானும் அவள்கிட்டே இன்னிக்கு அப்பாவுக்கு வேலை இருக்கும்மா! என்
செல்லமில்லே ! இன்னொரு நாளைக்குப் போகலாம்
என்று சொல்லி ஆபீசிற்கு ஓடிக் கொண்டிருந்தேன்.
நாள் வாரமாயிற்று
; வாரம்
மாதமாயிற்று: மாதம் வருஷங்களாகி விட்டன ! நான் இன்னும் அவளை அந்தப் பூங்காவிற்குக்
கூட்டிக் கொண்டு போகவே இல்லை. இப்பொழுது என் பெண்ணிற்கு பதினைந்து வயதாகிறது.
பூங்காவிற்குப் போகும் ஆசை எல்லாம் போய் விட்டது.
 நான் நேற்றையையும், நாளையையும் எண்ணி எண்ணி இன்றையைக் கோட்டை
விட்டேன்.

image

நான்
மீனங்காடிக்குப் போனபோது அங்கே இருந்த ஒருத்தர் கூடப் பேசினேன்.
 என் சோகம் என்னை அறியாமல் வெளியே வந்தது.  அவர் அடுத்த நாளைக்கு மீனங்காடிக்குக் குறிப்பா
பெண்ணோட வரும்படி சொன்னார் ! என் பெண்
 வரமாட்டேன் என்று பிடிவாதம் பிடித்தாள்!

நான்
கெஞ்சிக் கூத்தாடி அவளையும் கூப்பிட்டுக் கொண்டு வந்தேன் !
 எங்களுக்கு ஒரு சுகமான அனுபவம் மீனங்காடியில் கிடைத்தது. ஆபீஸ் வேலை என்று ல்லாமல் அன்றைய முழு நாளையும் எங்களுக்காகவே
வாழ்ந்தோம் ! ஒரு நிமிஷம் தனிமை கிடைத்ததும் என் பெண்ணிடம்
விளையாடக் கூப்பிட்ட போது வராத மோசமான அப்பாவாக
இருந்திருக்கேனே
என்று
சொல்லி மன்னிப்புக் கேட்டேன். இனிமேல் ஆவலோடு அவள்
 தேவைப்படும் போதெல்லாம் இருப்பேன் என்றும் சொன்னேன்.  நீ ஒன்றும் அவ்வளவு மோசமான அப்பா இல்லை.  என்னோட நீ  ஒண்ணா  இருந்தா ‘ போதும் என்று சொன்னாள். அப்பொழுதுதான்  ஒண்ணா இருக்கக் கத்துக்கணும் என்ற தத்துவத்தின் முழு அர்த்தத்தையும்
உணர்ந்தேன். அந்த நிமிடத்திலிருந்து நான் நிகழ் காலத்திற்காக வாழ முடிவு செய்து
விட்டேன் !
 நான் இழந்து விட்டேனோ என்று கலங்கிய என் மகள் எனக்குத் திரும்பக் கிடைத்து விட்டாள் !

 

டோனி மெல்ல
மேரியின் காதில் சொன்னான்.
சேகர் குறிப்பிட்ட ஆள் தினகர் ! புதிதாக
மீனங்காடியில் சேர்ந்தவன். அன்றைக்குத் தான் முதன் முதலில் மற்றவருக்கு உதவ
ஆரம்பித்திருக்கிறான்.
 என் கிட்டே சொல்லி ரொம்ப சந்தோஷப்பட்டான் டோனியின் குரலில் சந்தோஷம் கொப்பளித்தது.

 

அடுத்துப்
பேசின சுரேன் தன் முந்தைய வேலையில் தன்னுடன் வேலை பார்த்த ஒரு பெண்ணின் கதையைக்
கூறினான்.
 கேட்கவே சோகமாயிருந்தது. அந்தப் பெண் சமீபத்தில்தான் வேலைக்குச்
சேர்ந்தவள். எனக்குப்
 பக்கத்து சீட் தான்.  அடிக்கடி என்கிட்டே ஏதோ சொல்ல வருவாள் ! நான் வேலை மும்முரத்தில் அவளை அலட்சியம் செய்தேன். தொந்தரவு செய்யாதே என்று மூஞ்சியில் அடித்தாற் போல்
சொல்லியிருக்கேன். திடீரென்று ஒரு நாளைக்கு ஆபீஸே அல்லோலகல்லோலப் பட்டது. அந்தப்
பெண் தப்பும் தவறுமாக பல காரியம் செய்திருக்கிறாள். தெரியாமல் தான்
செய்திருக்கிறாள். வேண்டும் என்று இல்லை.
 இருந்தாலும் கம்பெனிக்கு மிகவும் நஷ்டம்.  சரிப்படுத்த முடியாத அளவிற்குப் போய் விட்டது.  அவளை வேலையை விட்டு நீக்கினார்கள்.  அது மட்டுமல்ல, அவள் செய்த தவறினால் மார்க்கெட்டிலும்
கம்பெனியின் பெயர் கேட்டுப் போய்
 விட்டது.  அதன் தொடர் விளைவாக எங்கள் டிபார்ட்மெண்டில் இருந்து பத்து ேர் வேலையும் போயிற்று, என்னையும் சேர்த்து.  நான் அடிக்கடி நினைத்துக் கொள்வேன்.  நான் சரியான நேரத்தில் அவள் கூட பேசி அவள் பிரச்சனை என்ன என்று கேட்டு இருந்திருந்தால் இந்த கெட்ட பெயர், நஷ்டம் எல்லாவற்றையும் தடுத்து இருக்கலாமே  என்று ! என் மனம் வேலையில் இருந்தது.  ஆனால் கூட இருந்த மனிதர்களுடன் ஒண்ணா இருக்கக் கற்றுக் கொள்ளவில்லை அன்று.!

 

அடுத்து
வந்தாள் பாத்திமா !
 அவள் தன் வீட்டில்  நடந்த கதையைச் சொன்னாள். நல்ல பாஸிடிவ் ஆன கதை !

 

அவள் வெகு
மும்முரமாக டிவியில் நியூஸ் பார்த்துக் கொண்டிருந்த நேரம்.
 அவள் பையன் அவள் அருகே உட்கார்ந்து எதுவும் பேசாமல் உர் என்று இருந்தான். அப்பொழுது அவளுக்குப்
புரிந்து விட்டது
அவனுக்கு
ஏதோ பிரச்சனை என்று.
 டிவியை அணைத்து விட்டு அவன் கூட ஒரு மணி நேரம் பேசினாள்.  அன்றைக்கு ஆபீஸுக்கு வருவது கூட லேட்டாகி விட்டது. ஆனால் அவனுடன் மனம் விட்டுப் பேசியது சந்தோஷமாக இருந்தது.  டைவர்ஸ் வாங்கிக் கொண்டு தனி ஆளாக இருக்கிறவர்களுக்கு மற்றவர்களின் உணர்ச்சிகள் நன்றாகவே புரியும்.  அவன் பள்ளிக் கூடத்தில் ஏகப்பட்ட அடிதடி ண்டை. எல்லார் மேலேயும் அவனுக்குக் கோபம்
வந்தது. அம்மா கூட பேசி முடிந்ததும் அவனுக்கும் தன் மன பாரம் இறங்கியது போல்
தோன்றியதாம். சந்தோஷமாகச் சிரித்துக் கொண்டே விளையாடப் போனான். அவன் கூட அன்றைக்கு
‘ ஒண்ணா
இருந்தது
 ‘ இரண்டு
பேருக்குமே மிகவும் திருப்தியாக இருந்தது.

 

இன்னும்
ஓரிருவர் தங்கள் சொந்தக் கதை
, ஆபீஸ் கதைகளை உருக்கமாகவும், அழுத்தமாகவும் சொன்னார்கள்.  அனைவரும் இனிமேல் வாடிக்கையாளர்களுடன் ஒன்றிப் போவோம் என்று உறுதி பூண்டார்கள்.  மனதும் செயலும் ஒன்றோடு ஒன்று இணையும் போது தான் மற்றவர் நலனில் அக்கறை செலுத்த ரம்பிக்கிறோம்.  மற்றவர் நம்மிடம் கேள்வி கேட்க வரும்போது அவர்களுடன் ஒண்ணா இருந்தால் தான் அவர்கள் பிரச்சனை நமக்குப்
புரியும்.
 அதற்கான சரியான விடையும் கிடைக்கும்.

  அலுவலகத்தில்
நண்பர்கள் ஏதாவது யோசித்துக் கொண்டிருந்தால் செல்லமாக அவர்களைத் தட்டி விட்டு
எங்கே இருக்கிறாய் டியர் என்று கேளுங்கள். அவர்கள் நிகழ் காலத்துடன்
ஒன்றிப் போவார்கள்.
 யாரை சந்தித்தாலும் என்ன சௌக்கியமா என்று கேட்பதற்குப் பதிலாக ஒண்ணா இருக்கியா ? ‘ என்று கேட்டு அதனை நினைவு படுத்திக் கொள்ளலாம்
என்றும் யோசனை சொன்னார்கள்.
 

அதைப் போல
மனமும் செயலும் ஒன்றாமல் இருக்கும் நண்பர்களிடம் மற்றவர் முன் தட்டிக் கேட்கத்
தயக்கம் வரும் போது
அலை பாயுதே
என்று
குறிப்பாகச் சொல்லலாம்
, என்றும்
அப்படிச் சொல்லும்போது அவர்கள் தவறாக எடுத்துக் கொள்ளவும் கூடாது என்றும் வேண்டிக்
கொண்டார்கள் ! மற்ற மக்கள் எல்லோரும் அவற்றை ஒரு மனதாக ஏற்றுக் கொண்டார்கள்.

 வாடிக்கையாளர்களுடன்
போனில் பேசும்போது ஈமெய்ல் படிப்பது
, மற்ற பேப்பர் படிப்பது என்ற வேலைகளில்
ஈடுபடாமல் அவர்கள் பேச்சிலேயே ஒன்றாக இருப்பது என்றும் முடிவு எடுத்தனர்.

                 
                   
  
எண்ணத்தைத்
தேர்ந்தெடு
 

கடைசியாக
வந்தது
எண்ணத்தைத்
தேர்ந்தெடு
அணி !  அவர்கள் கருத்துரை சுருக்கமாக இருந்தது.  இதைச் செயலாற்றினால் கிடைக்கும் நன்மைகளைப் பற்றி அழகாக எடுத்துச் சொன்னார்கள்.

இதனால்
நமக்கு நாமே பொறுப்பாளி என்ற எண்ணமும்
, ஆக்க பூர்வமாகச்  செய்ய வேண்டும் என்ற உறுதியும் தோன்றும்.  இவை நமக்கு மூன்றாம் மாடிக்கு ஒரு புது சக்தியையும்
உத்வேகத்தையும் அளிக்கும் என்பது உறுதி !

 நம்
எண்ணத்தை நாமே தேர்ந்தெடுப்பதினால் மற்றவர் நம்மை மட்டமாக நினைக்கிறார்கள் என்ற
எண்ணமே தோன்றாது !

இதனால்
நாம் நமது முழுத் திறமையையும் வேலையில் காட்ட முடியும் ! விரும்புகிற வேலை செய்வதை
விட செய்கிற வேலையை விரும்பினால் சிரமமே தோன்றாது.
 இது ஒன்றை மட்டும் நாம் செயலாற்றினால் போதும், மூன்றாம் மாடி ஒரு அழகான, இனிமையான, சந்தோஷமான, புதுமையான இடமாக மாறும் என்பதில் சந்தேகமே
இல்லை.

 

இனி இந்த எண்ணத்தை எப்படி அமுல் படுத்துவது என்று அணியின்
கருத்துக்களை மக்கள் முன் எடுத்து வைக்க வந்தாள் அனு !

 “ ‘ எண்ணத்தைத் தேர்ந்தெடு ‘ என்பது மிகவும் சொந்த விஷயம் !  பெரும்பாலான மக்கள் தேர்ந்தெடுக்கும் உரிமையையே மறந்து விட்டோம்.  மற்றவர் திணிக்கும் எண்ணப்படியே செயலாற்றி வருகிறோம்.  இனி அதை மாற்றுவோம்.  ஒருவருக்கு ஒருவர் அனுசரணையாக இருப்போம்.  அது சமயம் நமது சொந்த எண்ணத்திற்கு மதிப்புக் கொடுத்து அதன்படி நடக்க உறுதி பூணுவோம் ! நீங்கள் செய்யும் வேலையில் உங்கள் எண்ணத்தில் நம்பிக்கை இல்லை என்றால்
அல்லது நம்பத் தயார் இல்லை என்றால் அதைச் செய்யாதீர்கள் !
 நம்மில் பலர் பலவிதமான கஷ்டங்களில் இருக்கிறோம். இதை முயற்சி செய்வதே பெரிய கஷ்டமாகவும் இருக்கும்.  நாம் முயலுவோம் வெற்றியும் பெறுவோம்

என்று
சொல்லி விடை பெற்றாள் அனு.
 

 

அடுத்து
வந்த அந்த அணித் தோழர்
, “ நாங்கள்
இதை உபயோகப் படுத்த இரண்டு வழிகளைக் கண்டு பிடித்திருக்கிறோம்.

 

முதலாவதாக, ஷிவகேராவின்  ‘ YOU CAN WIN ‘ – நீங்களும் வெற்றியடையலாம் என்ற புத்தகத்தை
உங்கள் அனைவருக்கும் எங்கள் அணியின் பரிசாகத் தருகிறோம். அதை அனைவரும் படிப்போம்.
அடுத்த மாதம் நாம் அனைவரும் அதில் கூறப்பட்டுள்ள கருத்துக்களை ஆலோசித்து நம்மால்
எவற்றை உபயோகப் படுத்த முடியுமோ அவற்றை எடுத்துக் கொள்வோம்.
 அது போல மேலும் நிறைய புத்தகங்கள் வாங்கி அலசி ஆலோசித்து கருத்து முத்துக்களை எடுப்போம். அவை நமது எண்ணங்களைத் தேர்ந்தெடுக்கப் பெரிதும் உதவும்.

 

இரண்டாவதாக, நமது எண்ணம் பற்றிய மெனு கார்டை நோட்டீஸ் போர்டில் தினமும் போடுவோம்.  முதல் கார்டு யார் போட்டார்களோ தெரியவில்லை ! அவர்களுக்கு எங்களது மனமார்ந்த நன்றி !  அது போல தினமும் எங்கள் எண்ணப் பாதை தொடரும் !

 

இதோ ஒரு சாம்பிள் கார்டை ஸ்லைடில் பாருங்கள் !

image

 

எல்லா
அணிகளும் அவர்களுடைய பணியைச் சிறப்பாக முடித்ததும் மேரி மேடையில் ஏறி அவர்கள்
ஒவ்வொருவருக்கும் தனித் தனியே நன்றி கூறினாள்.
 தனித் தனியாக அழைத்துப் பாராட்டுதல்களையும் தெரிவித்தாள் !  டோனியும் கூட வந்து அவர்களை வாழ்த்தினான் ! மேரி ஆகாயத்தின் உச்சத்தில் இருந்தாள்.  அவளுக்கு நன்றாக விளங்கி விட்டது, இனி மூன்றாம் மாடி ஒரு கலக்கல் டிபார்ட்மெண்டாக
மாறும் என்பதில் ! குப்பைத் தொட்டியைக் கடாசி விடுவார்கள் என்பதில் முழு நம்பிக்கை
பிறந்தது !

 

டோனியும்  மேரியும் ஒன்றாக நிதிக் கம்பெனிக்கு வந்தார்கள் ! அவர்களைக் கம்பெனியில் பலர் மற்ற டிபார்ட்மெண்ட்காரர்கள் ஆச்சரியத்துடன்
பார்த்தனர்.
 அவர்களில் பலருக்கு டோனியைத் தெரிந்திருந்தது.

 

மேரி !
உனக்கு வந்த புது வேலை பற்றி உன் பாஸுக்குத் தெரியுமா
? டோனி கேட்டான். இரண்டு வாரம் கழித்து நிதிக்
கம்பெனியின் முக்கியமான போட்டிக் கம்பெனி மேரிக்கு நிறைய சம்பளத்தோடு சௌகரியமான
இடத்தில் வேலை கொடுத்து அவள் சம்மதத்திற்காகக் காத்துக் கொண்டிருந்தார்கள்.!

 

எங்க
கம்பெனியின் பழைய பாஸ் கிட்டே பேசியிருக்காங்க ! நான்
 அந்த வேலையைப் பற்றி நிதிக் கம்பெனியில் யார் கிட்டேயும் பேசவில்லை.!

 

பின்னே ஏன்
அதை வேண்டாம் என்று சொல்லி விட்டாய்
?  எனக்குப் புரியுது மேரி ! நீ ஆரம்பித்த இந்தப்
புதிய திட்டத்திற்கு உன்னை நீயே அர்ப்பணித்து விட்டாய் ! புதிய வாழ்க்கை ஆரம்பிக்க
இருக்கிற மக்களை விட்டுப் போக மனசில்லை. சரியா
? “

 

அது ஒரு
விதத்தில் சரி தான் டோனி !
 ங்கேயே அதே சந்தோஷமும், மகிழ்ச்சியும் கிடைக்கும் என்றிருக்கும் போது
நான் எதற்காகப் புது வேலையைத் தேடணும்
?  நல்ல நாட்கள் வந்திடுச்சு டோனி ! வந்திடுச்சு !

 

 

                 
       
ஒரு வருடத்திற்குப் பிறகு  

 

image

பிப்ரவரி 7 . ஞாயிற்றுக் கிழமை. மேரி தன்னுடைய எளிமையான நினைவு புத்தகத்தைப் பிரித்தாள். போன வருடம் பிப்ரவரி 7 ந்தேதி எழுதினதை நினைவு கூர்ந்தாள் !

 

போன வருடம்
எப்படி குப்பைத் தொட்டி டிபார்ட்மெண்டில் குப்பை கொட்டுவது என்று கவலைப் பட்டுக்
கொண்டிருந்தேன்.
 என் சொந்த
வாழ்க்கையும் ஒரு பிரச்சனையாக இருக்கும்போது எப்படி ஒரு பெரிய டிபார்ட்மெண்டைத்
திருத்துவது என்று பயந்து கொண்டிருந்தேன் !

 

தாஜ்
ஹோட்டலில்
நான்கு
அணிகளும் அவர்கள் தொகுத்து வழங்கிய விதமும் முக்கியமான திருப்பு முனையாக அமைந்தன.
மக்கள் அதற்கு மேலும் பல படிகள் போக முடியும் என்று நிரூபித்தார்கள் !
 மீனங்காடித் தொழிலாளர்கள் காட்டிய பாதையில் இவர்கள் பல படிகள் சென்றார்கள் ! மூன்றாவது மாடி இப்போது மிகமிக வித்தியாசமான இடமாய் மாறி விட்டது.  இப்போது ஒரு புதுப் பிரச்சனை உருவாகி உள்ளது. மற்ற டிபார்ட்மெண்ட் மக்கள் அனைவரும் இதில் வேலை செய்ய
விரும்புகிறார்கள்.! அந்த புது சக்தி
புது ஒளி எரிந்து கொண்டே இருக்கிறது !

எல்லாவற்றிற்கும்
மேலே கம்பெனியின் சேர் உமன் கொடுத்த
பரிசு ஆச்சரியமாக இருந்தது. அதற்குக் கிடைத்த
சர்ட்டிபிகேட்டின் நகல் நிறைய வேண்டும் என்று கேட்டபோது அம்மையார்
ஆச்சரியப்பட்டுப் போனார்கள் ! அதன் நகலை தனக்கும்
, டோனிக்கும், பிரசாத்துக்கும், மற்ற டிபார்ட்மெண்ட் தொழிலாளர் அனைவருக்கும் அது மட்டுமல்ல மீனங்காடித் தொழிலாளர்
அனைவருக்கும் கொடுத்தாள் மேரி.
 மீனங்காடியில் கேஷ் கவுண்டருக்கு மேலே அதை பிரேம் செய்து மாட்டியிருந்தார்கள்.  டோனியின் அறையிலும் தனியே இடம் பெற்றிருந்தது.  

தன்னையறியாமலே
அவளுக்கு
  பா. விஜய்யின் வரிகள் மனதில் தாளத்தோடு வந்தன !

 

     வாழ்க்கைக் கவிதை வாசிப்போம்

     வானம் அளவு யோசிப்போம்

     முயற்சி என்ற ஒன்றை மட்டும்

     மூச்சு போல சுவாசிப்போம்

     லட்சம் கனவு கண்ணோடு

     லட்சியங்கள் நெஞ்சோடு

     உன்னை வெல்ல யாருமில்லை

     உறுதியோடு போராடு !

 

மேரி தனது
கண்களிலிருந்து வழியும் நீரை மெல்லத் துடைத்துக் கொண்டாள் !
 அவளது சந்தோஷக் கீற்றுக்களை ஊக்குவிக்கும் கருத்துக்கள் கொண்ட அந்தப் புத்தகத்தை மெல்ல மூடினாள்.!

 ***********************

டோனி! அந்த
சிப்ஸ் தட்டை இப்படி நகர்த்து ! நீயே எல்லாவற்றையும்
சாப்பிட்டு விடாதே !
’ 

டோனி
அவளுக்கு எதிரில் உட்கார்ந்து புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தான்.
 அந்தத் தட்டை அவளிடம் நீட்டினான் .  மேரி புத்தகத்தைப் பார்த்துக் கொண்டே தட்டில் இருந்து சிப்ஸ் எடுக்கப் பார்த்தாள். ஏதோ வித்தியாசமாகத் தட்டுப்
பட்டது.! நிமிர்ந்து பார்த்தாள் !
 

அதில்  சிப்ஸுக்குப் பதிலாக ஒரு அழகான மீன் பொம்மை ! அதன் வாயினுள் ஜொலிக்கும் வைர மோதிரம் ! எங்கேஜ்மெண்ட் மோதிரம் ‘ 

 டோனியை
நிமிர்ந்து பார்த்தாள் !
மேரி !
என்னை ஏற்றுக் கொள்வாயா
?’ என்ற
கேள்விக் குறி அவன் கண்களில் தெரிந்தது.
 சந்தோஷத்தில் அவளுக்குத் தொண்டை அடைத்தது ! ஓ ! டோனி !வார்த்தைகளே வரவில்லை.  கண்களில் நீர் தெறிக்கக் கேட்டாள்        உன் விளையாட்டுக்கு எல்லையே இல்லயா டோனி ?”

image

 

image

அந்த இரவு
வெளியில் மிகவும் குளிராக
, இருட்டாக, வாட்டமாக இருந்தது.  ஆனால் மேரி, டோனி இருவர் உள்ளத்திலும் அதற்கு நேர் மாறாக
உவகையும் இன்பமும் துள்ளிப் பாய்ந்தன !
      
                 

       
                     
         

       
           
சேர்மன் அம்மையார் பரிசளிப்பு விழா   

 

நிதிக் கம்பெனியின்
தலைவி மேடைக்கு வந்து பேச ஆரம்பித்தார் !

 “ இதை விடப்
பெருமை தரும் இரவு எனக்கு இதுவரை இருந்ததில்லை.
 இருக்கப் போவதும் இல்லை.  மிகமிகச் சிறப்பான நிகழ்ச்சி ஒன்று நமது கம்பெனியில் சமீபகாலமாக நடைபெற்றுக் கொண்டு வருகிறது.  மேரியும் அவளது சக தொழிலாளர்களும் மூன்றாம் மாடி டிபார்ட்மெண்டை  ஒரு சந்தோஷமான சௌகரியமான திருப்திகரமான இடமாக மாற்றி இருப்பதை நான்
இன்று என் கண்களால் கண்டேன். இன்றைக்கு என்ன புது விசேஷம்
? என்று நான் கேட்ட கேள்விக்கு அவர்கள் பதில்
சொன்ன விதம் என்னை மகிழ்ச்சியின் எல்லைக்கே கொண்டு சென்றது ! அவர்கள் சொன்ன பதில்
என்ன தெரியுமா
?  ‘ இன்றைக்கு
ஒரு மிகப் பெரிய சந்தோஷமான நாளாய் இருக்க நாங்கள் முடிவு செய்து விட்டோம்
என்று.

 

அது
மட்டுமல்ல ! வெகு காலம் சர்வீஸ் போட்ட சீனியர் தொழிலாளர்கள் எல்லாம் நேற்றைக்கு
வேலைக்குச் சேர்ந்தது போல் உற்சாகத்தில் இருப்பதைக் கண்டேன் ! வழக்கமான வேலை என்று
இருந்ததை மதிப்புள்ள வேலை என்று மாற்றி விட்டார்கள் ! இதற்கான மந்திரத்தை அவர்கள்
மீனங்காடியில் கண்டு பிடித்ததாகவும் கூறினார்கள்.!
 மீன் மார்க்கெட்டை ஒருவர் ஜாலியான இடமாக மாற்றும்போது நமது
கம்பெனியை ஒருத்தி சந்தோஷமான இடமாக மாற்றுவதில் அதிக சிரமம் இருந்திருக்காது என்று
நான் நம்புகிறேன் !

 

இந்த
மாறுதலை ஒரு சலவைக் கல்லில் ஓவியமாக
இல்லை காவியமாகத் தீட்டி அழகான வார்த்தைகளில்
பொறித்து நமது தலைமை அலுவலகத்தின் நுழை வாயிலில் அனைவரும் முதலில் பார்க்கும்
இடத்தில் வைக்க உத்தரவிட்டுள்ளேன் !
 அதில்  பொறிக்கப் போகும் வார்த்தைகள் என்ன தெரியுமா ?

                
       
நமது பணிக்கூடம்

 இந்த நுழை வாயிலில் செல்லும் ஒவ்வொருவரும் இன்றைய நாளை மிகச் சிறப்பான நாளாக மாற்றுவோம் என்ற உறுதியுடன் உள்ளே காலெடுத்து வையுங்கள்.!
உங்களது அன்பு கலந்த நன்றி உங்களுக்கும்
, சக தொழிலாளர்களுக்கும்,  வாடிக்கை யாளர்களுக்கும் உரித்தாகட்டும் !  சந்தோஷமாக ஆட்டம் கொண்டாட்டத்துடன் இருக்க புது வழிகளைக் கண்டு பிடியுங்கள் !  கவலைகளை மறந்து விட்டு மகிழ்ச்சியுடன் வேலையில் கவனம் செலுத்துங்கள் ! மற்றவர்கள் உங்கள் சேவைகளைத் தேடி வரும்போது அவர்களுடன் எப்போதும் ஒன்றாக இருங்கள் !  உங்கள் உற்சாகம் குறைவது போல இருந்தால் இந்த மருந்தை
எடுத்துக் கொள்ளுங்கள் !
 உதவி தேவைப்படும் ஒருவரைக் கண்டு பிடித்து அவருக்கு உதவுங்கள் !  சேவை தேவைப்படும் மனிதர்களைத் தேடிப் பிடித்து சேவை வழங்குங்கள் !  அந்த நாள் அவர்கள் நெஞ்சிலே நிலைக்க உதவி செய்யுங்கள் !  இவை என்றென்றைக்கும் நம்மையும் மற்றவரையும்
மகிழ்ச்சியில்திளைக்க வைக்கும் என்பது உறுதி

(முற்றும் )


பக்கம் –  22 

மீனங்காடி

அந்த நாள்
ஞாபகம் நெஞ்சிலே

 

image

அடுத்து வந்தது ‘ அந்த நாள்
ஞாபகம் நெஞ்சிலே ‘ அணி !

 

“ நண்பர்களே ! எங்கள் நிகழ்ச்சி இன்னும்
பத்து நிமிடத்தில் ஆரம்பமாகும் .  அதுவரை
நீங்கள் காத்துக் கொண்டிருக்க வேண்டியதில்லை,  பக்கத்தில் உள்ள கேண்டீனில் உங்களுக்கான காபி
தயாராக இருக்கிறது.  குடித்து விட்டுப்
பத்தே நிமிடத்தில் வாருங்கள் ! உங்களுக்குப் பல அதிசயமான செய்திகள் காத்துக்
கொண்டிருக்கின்றன “ என்று அந்தக் குழுவின் தலைவி
அறிவித்தாள்.  வேறு யாரும் அல்ல
சுஜாதா தான்.

 

எல்லோரும் திரும்பி வந்தபோது
அரங்கத்தில் ஐந்தாறு இடங்களில் வட்ட வட்டமாக நாற்காலிகள் போடப் பட்டிருந்தன .

 

“ நண்பர்களே ! இப்போது நீங்கள்
உங்களுக்குப் பிடித்த நாற்காலி வட்டத்தில் அமருங்கள்.  ஒவ்வொரு வட்டத்திலும் எங்கள் அணி ஆட்கள்
உங்களுக்கு உதவ இருப்பார்கள்.  உங்கள் வேலை
என்னவென்றால் இன்னும் பதினைந்து நிமிடத்தில் நாம் நமது வாடிக்கையாளர்களுக்கு
என்னென்ன சேவை செய்யலாம் என்பதைச் சொல்லுங்கள் ! உங்கள் கருத்துக்களைத் தொகுத்து
நாங்கள் வழங்குவோம் ! அதற்கு முன்னால் …….
சில வினாடிகள் மௌனம்.

 

            ஒரு பயங்கரத்திற்குத் தயாராக
இருங்கள் !

கடந்த ஒரு மாதமாக நாங்கள் எடுத்த ‘
வாடிக்கையாளர் ‘ சர்வேயிலிருந்து, அவர்கள் நம்மைப்
பற்றிக் கூறிய கருத்துக்களை உங்கள் முன் சமர்ப்பிக்கின்றோம் ! எங்களைப் போல
உங்களில் பலருக்கு இது அதிர்ச்சியாக இருக்கக் கூடும் !  தயாராயிருங்கள் ! மேடையிலிருந்து திரையில்
முதல் ‘ ஸ்லைடு ‘ வந்தது ! அனைவருக்கும் ‘ ஷாக் ‘ அடித்தது
போல் இருந்தது! அதற்கேற்றபடி அரங்கத்தில் இருட்டு ! அனைவருடைய பெருமூச்சும் பலமாக
ஒலித்தன !

 

image

 

                 வாடிக்கையாளர்
சர்வேயின் முடிவுகள்

 

முக்கியக் கருத்து ‘ ஸ்லைடிலும்
‘  பின்னணியில் சுஜாதாவின் குரலும்
தோன்றின.

 

“ நம்முடைய வாடிக்கையாளர்கள் நம்முடன்
வேலை செய்வதை கசப்பான அனுபவங்களாக உணருகிறார்கள் ! நம்மை அவர்கள்  ‘ தூக்கத்தில்
நடக்கும் பிராணிகள் ‘ என்று குறிப்பிடுகிறார்கள்!

“ சண்டை போடுபவர்களைக் கூடப் பொறுத்துக்
கொள்ளலாம் , ஆனால் இப்படி ஒன்றுமே செய்யாமல் இருக்கும் கும்பலை எப்படி
சகித்துக் கொள்வது ?  “ என்று
கேட்கிறார்கள்!.

 

“ நாம் நமது வேலையைச் செய்வது பற்றித்
தான் யோசிக்கிறோமே தவிர வாடிக்கையாளர் திருப்தியைப் பற்றிக் கவலைப்படுவதே
கிடையாது.  அவர்கள் சந்தோஷத்திற்காக ஒரு
துரும்பைக் கூட நாம் அசைப்பது இல்லை “

 

“ நாம் நமது வாடிக்கையாளர் அனைவரையும்
நமக்குத் தொந்தரவு தருபவர்களாக எண்ணுகிறோம்!

குறித்துக் கொள்ளுங்கள் ! இதெல்லாம்
அவர்களின் கருத்துக்கள் ! நம்மைப் பற்றி ! “

 

“ நாம் வாடிக்கையாளர்களை  ‘ இங்கே வா ! அங்கே
போ  ! என்று துரத்துகிறோமே தவிர அவர்களது
பிரச்சினையை சரி செய்ய முயற்சிப்பதில்லை “

 

மாலையில் – அதாவது ஆபீஸ் நேரம்
முடிவடைகையில் நாம் பஸ் பிடிப்பதற்காகப்  பிடிக்கும் ஓட்டத்தைப் பற்றி
வாடிக்கையாளர்கள் பலவிதமாக ‘ ஜோக் ‘ அடிக்கிறார்கள் ! நமது ‘ ஓட்டம்
திண்டாட்டம் ‘ அவர்களை வேதனையோடு சிரிக்க வைக்கிறது.

 

நமக்கு நம் கம்பெனியின் முன்னேற்றத்தில்
கொஞ்சம் கூட அக்கறை இல்லை என்பது அவர்கள் அபிப்பிராயம் ! நமக்கு மேலதிகாரிகளிடம்
பயம் இல்லை என்பது அவர்கள் கருத்து !

 

நாம் எப்பொழுதும் பழைய சட்ட
திட்டங்களைச் சொல்லுவதால் ஓட்டு மொத்தமாக நமக்கு அவர்கள் வைத்த பெயர் ‘ பழைய
பஞ்சாங்கம் ‘.

 

அவர்கள் நம் மேலதிகாரிகளிடம் கேட்க
விரும்பும் ஒரே கேள்வி ! ‘ ஏன் இந்த டிபார்ட்மெண்டை மூடக் கூடாது ?’  இந்த வேலையை மற்ற கம்பெனிக்கு ஏன் ‘ அவுட்
சோர்ஸ் ‘ செய்யக் கூடாது ?

image

சுஜாதா தொடர்ந்தாள்.  அவள் குரல் பயங்கரமாக ஒலித்தது. “ நம்மைப்
பற்றிய உண்மை சுடுகிறதல்லவா ?  
வாடிக்கையாளர்களுக்கு இப்படிச் சொல்ல உரிமை இருக்கிறது !  நாம் என்ன சாக்கு போக்கு சொன்னாலும் அவற்றை
அவர்கள் ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை.  நாம்
மாற வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்க்கிறார்கள் !  இனியும் மாறவில்லை என்றால் அது தற்கொலைக்குச்
சமம் ! “

 

அடுத்து அதே அணியில் இருந்து இன்னொருவன்
தொடர்ந்தான் !

 

நமக்கு நமது கம்பெனியில் எவ்வளவு
முக்கியத்துவம் இருக்கிறது என்று நமக்குப் புரியவே இல்லை !  நமது செயல் மொத்தமாக கம்பெனியை எப்படிப்
பாதிக்கிறது என்பதையும் நாம் உணரவில்லை.
மற்ற டிபார்ட்மெண்ட் அனைவரும் நம்மைக் கேவலமாகப் பார்க்கிறார்கள் ! நல்ல
சேவையை அவர்கள் தருவதில் நாம் முட்டுக் கட்டையாக இருப்பதாக அவர்கள் சொல்கிறார்கள்
!

 

சுஜாதா மீண்டும் வந்தாள் !

 

“ இப்போது – இதன் பின்னணியில் உங்கள்
யோசனைகள் மிக மிக அத்தியாவசியமாகிறது !
இந்தச் சூழ்நிலையில் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை ஆலோசியுங்கள்.  உங்கள் அனைவரையும் நான்கு அணியாகப்
பிரிக்கிறோம் . இப்போது அந்த வட்ட நாற்காலிகளில் உட்கார்ந்து உங்கள்
யோசனைகளை ஒன்று சேருங்கள். பதினைந்து நிமிடத்தில் ஒவ்வொரு அணியும் தங்கள் தங்கள்
கருத்துக்களைத் தெரிவியுங்கள்! இது தான் எங்கள் அணியின் தொகுப்பு“.

 

‘ ஆட்டம்
கொண்டாட்டம் ‘ அணி ஆரம்பித்த உற்சாகம் அவர்களை இன்னும் ஒரு படி மேலே போக
வைத்தது.  மிகவும் சுறுசுறுப்பாகத் தங்கள்
வட்டங்களில் அமர்ந்து சுடச் சுட யோசனைகளைக் கூற ஆரம்பித்தார்கள்.!

 

கடைசியில் மீண்டும் சுஜாதா வந்தாள்.

image

“ இவ்வளவு யோசனைகள் வரும் என்று யாருமே
எதிர்பார்க்கவில்லை !  உங்கள் அனைவருக்கும்
எங்கள் நன்றி !  இந்த நான்கு அணிகளில்
நான்காவது அணி அங்கத்தினர்கள் அதிக அளவில் சிறப்பான யோசனைகளைச் சொல்லி
இருக்கிறார்கள்.  அந்த அணியில்
இருப்பவர்களை மேடைக்கு அழைக்கிறோம்.! அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு சிறப்புப்
பரிசு வழங்கப் படுகிறது. –  ‘ அந்த நாள்
நெஞ்சிலே ‘ அணியின் சார்பாக !

 

‘ ஹாய் ‘ என்று
கத்திக் கொண்டே அந்த நான்காவது அணி மேடைக்கு வந்தது. ‘ அந்த நாள்
நெஞ்சிலே ‘என்ற வார்த்தை பொறித்த பெரிய உலோக பேட்ஜ் ஒவ்வொருவருக்கும்
சட்டையில் குத்தப்பட்டது. அதே வாசகம் பொறித்த சிறிய பேட்ஜ் மக்கள் அனைவருக்கும்
தரப்பட்டது.

 

பிறகு அவர்கள் கூறிய கருத்துக்களைத்
தொகுத்து வழங்கினர். முதலில் ‘ அந்த நாள் நெஞ்சிலே ‘ இருப்பதால்
உண்டாகும் நன்மைகள்.

 

·        
நம்முடைய கம்பெனியின் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக
இருக்கும் !

·        
நமது வாடிக்கையாளர்களுக்கு சந்தோஷம் தருவது நமக்கு
உற்சாகத்தைத் தருவதாக இருக்கும்.!

·        
நாம் வேலை செய்வதன் பலன் நமக்குக் கிடைக்கும்.

·        
நமது முயற்சிகள் வாடிக்கையாளர் பிரச்சினைகளை மட்டுமல்ல நமது
பிரச்சினைகளையும் தீர்க்கும்.

·        
பொதுவாக நமது ஆரோக்கியம், சந்தோஷம், சக்தி
எல்லாம் அதிகரிக்கும்.

 

அது சரி ! ‘ அந்த நாள்
நெஞ்சிலே ‘ திட்டத்தை எப்படி கம்பெனியில் செயல் படுத்துவது ? இதோ
அதற்கான வழிகள் !

·        
நாம் ஆபீஸ் நேரத்தை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை
மாற்றுவோம்.  வாடிக்கையாளர்கள் கண்டிப்பாக
இதை வரவேற்பார்கள்.  நமக்கும் இது
சௌகரியமாக இருக்கும். நம்மில் சிலர் சீக்கிரம் வந்து சீக்கிரம் செல்லலாம் .
மற்றவர் லேட்டாக வந்து லேட்டாகச் செல்லலாம்.!

·        
நமது  அலுவலகத்தில்
சில குழுக்கள் அமைத்து வாடிக்கையாளரின் தேவை என்ன ? எப்படி
சேவைகளை அதிகரிப்பது ? என்பதை ஆராய வேண்டும்.

·        
வாடிக்கையாளரின் கருத்துப்படி இந்த மாதம் சிறந்த சேவை
செய்பவர் என்ற விருது வழங்கலாம். அதே போல வருடத்திற்கான சிறந்த சேவைக்கான பரிசும்
தரலாம்.

·        
360 டிகிரி அளவில் வாடிக்கையாளர்,
தொழிலார்கள், மேலதிகாரிகள் அனைவரது கருத்துக் கணிப்பைப் பெற்று அவற்றை
தீவிரமாக ஆலோசனை செய்ய வேண்டும் !

·        
வாடிக்கையாளர்களுக்கு திடீர் திடீர் என்று புதுவித சந்தோஷ
அலைகளைத் தருவதற்கென்றே ஒரு தனி படை அமைக்க வேண்டும்.

·        
முக்கிய வாடிக்கையாளர் வரும்போது அவர்களுக்கு நமது
அலுவலகத்தைச் சுற்றிக் காட்ட வேண்டும்.

·        
சில ஏர்லைன்ஸ் கம்பெனிகள் செய்வது போல நாமும் மனதைத்
திறந்து உண்மையான சேவை புரியத்
தயாராகுவோம்.!  நமது ஒவ்வொரு சேவையும்
சிறப்பானதாக அமைய வேண்டும் .! அமையும் !

image

 


மேரிக்கு பிரமிப்பாக இருந்தது. சுஜாதாவின் அணி இவ்வளவு தூரம் போக முடியும்
என்று அவள் எதிர் பார்க்கவே இல்லை.
அப்படியே ஓரக் கண்ணால் டோனியைப் பார்த்தாள்.! அவன் சந்தோஷம் அவன் முகத்தில்
வெளிச்சம் போட்டுக் காட்டியது.!


(தொடரும்) 

மீனங்காடி

அணிகளின் அணிவகுப்பு

 

image

கொடுத்த ஆறு வாரம் முடிந்தது.  இன்று அவர்கள் தொகுத்து வழங்கும் ‘பிரஸன்டேஷன் ‘ தினம்.  இரண்டுகுரூப்பும் ஒன்றாகக் கலந்து கொள்ள அலுவலகத்தில் மேலதிகாரிகளிடம் முன் அனுமதிவாங்கியிருந்தாள் மேரி. டிப்பார்ட்மெண்டின் முக்கியமான வேலைகளை – வரும் டெலிபோன்களைக்கவனிப்பது போன்றவற்றை மற்ற டிபார்ட்மெண்ட் மக்கள் கவனித்துக் கொள்ள வேண்டியது
என்று பாஸ் பிரசாத்தே உத்தரவு போட்டு விட்டார். ‘ மேரி! நீ
என்ன செய்கிறாய் என்பது புரியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்! மூன்றாவது
மாடியில் ஒரு புதுக் காற்று  

வீசுது என்பது மட்டும் புரிகிறது!
தொடர்ந்து இதை வெற்றிகரமாக முடித்து விடு!
இதன் விவரம் எல்லாம் எனக்குப் பின்னால் தெரிவி! வேறு ஏதாவது உதவி தேவை
என்றாலும் தயங்காமல் கேள்! “

 

மேரிக்குக் கொஞ்சம் பயமாகத்தான்
இருந்தது. நான்கு அணிகளையும் தனித் தனியே சந்தித்து அவ்வப்போது அறிவுரைகள்
சொல்லிக் கொண்டு தான் வந்தாள்.
இருந்தாலும், ‘ பிரஸண்டேஷன் ‘ நாளுக்கு ஒவ்வொரு
அணியும் என்ன தயார் செய்திருக்கிறார்கள் என்பதை அவளால் கண்டு பிடிக்க
முடியவில்லை.  மிகவும் ரகசியமாகத்தான்
வைத்திருக்கிறார்கள் நான்கு அணிகளும்.
எப்படியும் இன்றைக்குக் காலை அவர்களின் திட்டம் வெளிச்சத்திற்கு வந்து
விடும்.  கொஞ்சம் ‘ திக் ‘ என்றுதான்
இருந்தது. மேரிக்கு!.

 

அன்று காலை ஒன்பது மணி.! மூன்றாம் மாடி
மக்களின் கூட்டத்திற்காக ‘ தாஜ் ‘ ஹோட்டலில் ஒரு ஹால் எடுக்கப் பட்டிருந்தது.  பிரசாத்தும் மற்றும் இதர டிபார்ட்மெண்ட்
மக்களும் இவர்கள் வேலைகளை எடுத்துக் கொண்டனர்.
பிரசாத் தனியாக ‘ குட்லக் ‘ என்று சொல்லி வழி அனுப்பினார்.

 

image

தாஜ் ஹோட்டலில் அந்த அரங்கத்திற்குப்
பெயர் ‘ மார்க்கெட் அரங்கம் ‘. – சரியான பொருத்தம் என்று மேரி நினைத்துக் கொண்டாள்.  ‘ எண்ணத்தைத்
தேர்ந்தெடுங்கள் ‘ அணி கடைசியில்!
மற்ற அணிகள் எப்போது மேடைக்கு வார வேண்டும் என்பதெல்லாம் தீர்மானித்தாள்
மேரி.  “ முதலில் விளக்கப் படம், பிறகு
கருத்துக்களைத் தொகுத்து வழங்குங்கள். கடைசியில் நாம் செய்ய வேண்டிய முயற்சிகளை
வரிசைப் படுத்துங்கள். இது தான் பொதுவான விதிகள் “ என்றாள் மேரி.

 

மேரி அரங்கத்தில் நுழையும்போது மிகவும்
உணர்ச்சி வசப்பட்டவளாக இருந்தாள்.
அந்த  அரங்கத்தை மக்கள் மாற்றிய
விதம் – மேடை அமைப்பு – தோரணங்கள் – பின்னணி இசை எல்லாம் சந்தோஷத்தின்
வெளிப்பாடாகத் தெரிந்தது.  எல்லா
நாற்காலிகளிலும் பலூனைக் கட்டித் தொங்க விட்டிருந்தார்கள்.  வண்ணப் பூக்களின் அலங்காரம் அந்த அரங்கத்திற்கு
ஒரு மயக்கம் தரும் மணத்தைப் பரப்பியது.
அரங்கத்திற்கே உயிர் இருப்பது போல் இருந்தது. ‘ அவர்களின்
கடிகாரம் நன்றாக சாவி கொடுக்கப் பட்டிருக்கிறது ‘ மேரி
நினைத்துக் கொண்டாள்.  திரும்பிப்
பார்த்தால் – டோனி –  அவனுடைய வழக்கமான
மீனங்காடி உடையில் முதல் வரிசையில் அமர்ந்திருக்கிறான்.  மேரியும் அவன் அருகில் போய் அமர்ந்தாள்!.

 

முதலில் ‘ ஆட்டம்
கொண்டாட்டம் ‘ அணி !

 

image

“ ஹலோ! எங்கள் அணி ஆட்டம் கொண்டாட்டம்
அணி !  நாற்காலியில் உட்கார்ந்திருக்கும்
அனைவரும் இங்கே மேடைக்கு வாருங்கள்.
இப்படி அப்படி நில்லுங்கள் ! வரிசையில் நிற்க வேண்டாம் ! ‘ மோடி
மஸ்தான் ‘ வித்தை பார்க்க எப்படி நிற்பீர்களோ அப்படி நில்லுங்கள் !
வெரிகுட் ! அப்படித்தான் ! இப்போது நாங்கள் எங்கள் அணியின் விளக்கப் படத்தை ஒரு
விளையாட்டு மாதிரி நடத்தப் போகிறோம் !  அந்த அணியின் தலைவி பிரபா அறிவித்தாள்.

மேடையில் வண்ண வண்ண வட்டங்கள் வரையப்
பட்டிருந்தன. “ இது ஒரு புது விதமான மியூசிகல் சேர் ! பின்னணி இசை நின்றதும்
மக்கள் அனைவரும் ஒரு வட்டத்திற்குள் போக வேண்டும்.  அதில் ஒரு பேப்பர் இருக்கும்.  அதில் உள்ளதை ஒருவர் சத்தமாகப் படிக்க மற்றவர்
உடன் சொல்லணும் !  அந்தப் பேப்பரில் இரண்டு
கருத்து இருக்கும். ஒன்று – இந்த ஆட்டம் கொண்டாட்டத்தால் என்னென்ன சௌகரியம்
கிடைக்கப் போகிறது என்பது.  இரண்டாவது –
இந்தத் திட்டத்தை எப்படிச் செயல் படுத்துவது என்பது.  ஆரம்பிக்கலாமா ?  ஒரே ஒரு வேண்டுகோள் ! மக்கள் அனைவரும் அழகுப்
போட்டியில் நடப்பது போல் ‘ கேட் வாக் ‘ செய்ய வேண்டும்.
ஓகே ! மியூசிக் ! ஸ்டார்ட் !  படு குஷியில்
ஆரம்பித்தது ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் ! பாட்டும் நடையும் விசிலும் சேர்ந்து
கொண்டன !

 

image

இந்த விளையாட்டுத் திட்டத்தால் ஏற்படும்
பயன்கள் – சௌகரியங்கள் என்ன தெரியுமா ?  டும் டும் டும் .

 

·        
சந்தோஷமான மக்கள் மற்றவரை சந்தோஷமாக வைப்பார்கள் – டும்
டும் டும்.

·        
ஜாலி புதுமைக்கு வழி காட்டும் – டும் டும் டும்.

·        
நமக்கு நேரம் போவதே தெரியாது – டும் டும் டும் .

·        
நல்லபடியா சந்தோஷமா வேலை செய்வது உடலுக்கும் நல்லது – டும்
டும் டும் .

·        
வேலையில் பரிசு வாங்குவதை விட வேலையே நமக்குப் பரிசாய்
அமைந்து விடும் – டும் டும் டும்.

 இவற்றை எல்லாம்
எப்படி அலுவலகத்தில் செயல் படுத்துவது என்று கேட்கிறீர்களா ? மியூசிக்
காதைப் பிளந்தது !

 ·        
ஆபீஸில் ஒரு பெரிய போஸ்டர் போடணும் ! அதில் “ இது ஒரு
விளையாட்டு மைதானம் – பெரிய குழந்தைகளுக்காக “ என்று எழுதணும் .

·        
நோட்டீஸ் போர்டில் தினமும் ஒரு ‘ ஜோக் ‘ எழுதி
வைக்க வேண்டும்.  ஒவ்வொரு மாதக்
கடைசியிலும் சிறந்த ஜோக்குக்காகப் பரிசு தர வேண்டும்.

·        
ஆபீஸ் ரூமில் பல இடங்களில் வித்தியாசமான பெயிண்ட் அடித்து
சுறுசுறுப்பான இடமாக அதை மாற்ற வேண்டும் .

·        
ஆபீசுக்கு உயிரூட்ட நிறைய செடி. கொடி, மீன்
தொட்டி வைக்க வேண்டும்.

·        
சாப்பாட்டு இடைவேளை போது கேண்டீனில் ‘ யாரு நல்ல
ஜோக்கர் ‘ என்று சின்னச் சின்னப் போட்டிகள் தினமும் நடத்தணும் !

·        
புதிய யோசனை யாருக்காவது தோன்றினால் ஆபீஸில் முக்கியமான
இடத்தில் ஒரு கலர் பல்ப் எரிகிற மாதிரி தயார் செய்யணும் !

·        
ஆபீஸ் மெமோ, நோட்டீஸ்,
சுற்றறிக்கை எல்லாவற்றிலும் ஒரு புதுமை இருக்கணும் !

·        
‘ ஐடியா மேடை ‘ என்று ஒரு மண்
மேடையை அமைத்து பேப்பர் கொடிகளில் யோசனைகளை எழுதி அங்கே குத்தி வைக்கச் செய்ய
வேண்டும்.   மறக்காமல் மாலையில் அதிகாரிகள்
அவற்றைப் படிக்க வேண்டும் !

·        
புதுப் புது விளையாட்டுக்களைக் கண்டு பிடிக்க ஒரு குழு
அமைக்க வேண்டும் !

 

image

‘ ஆடுவோம், பாடுவோம், கொண்டாடுவோம் ‘ என்று பாட்டுடன்
அவர்கள் முடிக்க அரங்கமே அதிர்ந்தது.

(தொடரும்) 


பக்கம் – 20 

மீனங்காடி

                                           திட்டம் 

 

image

மேரி திட்டம் தீட்டினாள் !

 எப்படி  ‘ உங்கள் எண்ணத்தைத் தேர்ந்தெடுங்கள் ‘ கருத்தை வலியுறுத்துவது ?  மீனங்காடி மக்கள் தினமும் தவறாது அதைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.  அதில் ஒருவன் சொன்னானே ! ‘ இந்த வேலையைச் செய்யும்போது உனக்கு ரெண்டே ரெண்டு சாய்ஸ். ஒன்று உலக நாயகன் ஆவது : இரண்டாவது  கலக நாயகன்.  ஒன்றில் விருப்பு: மற்றொன்றில் வெறுப்பு:  உலக நாயகன் ஆக வேண்டும் என்றால் அது மாதிரி வித்தியாசமாகச் செய்ய வேண்டும் “  நாம் யாராக இருக்கப் போகிறோம்? மேரி யோசித்தாள் !

 அடுத்தது ‘ ஆட்டம் கொண்டாட்டம் ‘ மீனங்காடி மக்கள் தான் எப்படி எல்லோரும் ஓடி ஆடி விளையாடுகிறார்கள்?  அதில் தான் எவ்வளவு சந்தோஷ சக்தி  ! நாமும் விளையாட வேண்டும் ! எப்படி அந்த ஜாலி, சக்தியைக் கொண்டு வருவது ? – மேரி தீவிரமாக யோசித்தாள்.!

 மூன்றாவது படி ! ‘ அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே ‘ – மீனங்காடியில் தொழிலாளிகள் வாடிக்கையாளர்களுடன் விளையாடி அவர்கள் நெஞ்சில் இடம் பிடிக்கிறார்கள்.  அது நல்ல எண்ணத்தையும் மகிழ்ச்சியான சூழ்நிலையையும் உருவாக்குகிறது.  நமது வாடிக்கையாளர்கள் யார் யார் ? நாம் எப்படி அவர்கள் கவனத்தை ஈர்க்கப் போகிறோம்? நாம் எப்படி அவர்களுக்கு ‘ அந்த நாள் ஞாபகத்தை நெஞ்சில் ‘ நிறைய வைக்கிறது ?

 கடைசியா ‘ ஒண்ணா இருக்கக் கத்துக்கணும் ‘ – எவ்வளவு அருமையான கருத்து ! மீனங்காடி மக்கள் எல்லோரும் ஒருமித்து வாடிக்கையாளர்களுடன் ஒன்றிப் போய் விடுகிறார்கள்.  நாம் எப்படி நமது வேலையோடு வாடிக்கையாளர்களோடு ‘ ஒண்ணா இருப்பது ?

       இவற்றை எல்லாம் விவரித்து விட்டு மேரி தன்  டிபார்ட்மெண்ட் மக்களிடம் சொன்னாள் !

       “இவற்றைப் பற்றித் தீவிரமாக யோசியுங்கள் ! எப்படி நாம் இவற்றை நம் செயலில் கொண்டு வருவது ? என்பது பற்றி ஆழமாக யோசியுங்கள்.  திங்கட்கிழமை நாம் சந்திக்கும்போது திட்டங்களோடு வாருங்கள்.  நாம் நிச்சயம் வெல்வோம்.!”

 

                         சனி – ஞாயிறு – மீனங்காடி  

 

image

      “ டீச்சரம்மா உங்களுக்கெல்லாம் ‘ ஹோம் ஒர்க்‘ கொடுத்து இங்கே அனுப்பியிருக்காங்களா?” டோனி சிரித்துக்கொண்டே சுஜாதாவிடம் கேட்டான்.  அவள் தலைக்கு மேலே ஒரு மீன் பறந்து போய்க் கொண்டிருந்தது 

 “ ஆமாம் எங்கள் பாஸ் எங்களை ஹோம் ஒர்க் செய்யச் சொன்னார்கள்!”

 “ யாரு மேரியா?”

 “ அட! மேரி மேடத்தை உங்களுக்குத் தெரியுமா?” அதற்குள்ளே ஆரம்பித்து விட்டது ‘ போகுது பார்’ ‘ போகுது பார் ‘ – இந்த சுறாமீன் சிங்கப்பூர் போகுது.’ டோனிக்கு சுஜாதாவின் கருத்தைத் தெரிந்து கொள்ள ஆசை! சுஜாதாவிற்கும் எப்படி இந்த மக்கள் அனைவரும் மனதும் வேலையும் ஒன்றாக இருக்கிறபடி இருக்கிறார்கள் என்று டோனியிடம் கேட்க ஆசை!.

 “ போன வாரம் மேரி கூட நீங்கள் வந்தபோது பார்த்திருக்கிறேன்.  நீங்கள் தானே அந்த கவுண்டர் பின்னால் போய் வெற்றிகரமாக மீனைப் பிடித்தது?”

 “ அட! நீங்களும் பார்த்தீர்களா! அது உங்களுக்கும் ஞாபகம் இருக்கா?”

 “ நல்லா ஞாபகம் இருக்கு! ஆமாம்! ஏன் நீங்கள் கொஞ்சம் டல்லாக இருப்பது போல் இருக்கிறீர்கள்?”

 

image

சுஜாதா தான் எழுதிய நோட்டுப் புத்தகத்தைப் பிரித்தாள். “ டோனி! எனக்கு உங்கள் செயல்பாட்டில் எல்லாம் புரியுது. ஒண்ணே ஒண்ணைத் தவிர. ‘ ஒண்ணா இருக்கக் கத்துக்கணும்’ என்கிறீர்கள். இப்போ நீங்க என்னோட இருக்கீங்க! அது ஓகே!  அப்புறம் அந்த ‘ அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே‘ அன்றைக்கு நான் மீன் பிடித்தது இன்றைக்கு மட்டும் அல்ல, என்றைக்கும் என் நெஞ்சில் இருக்கும்.  அதுவும் ஓகே! மூணாவது ‘ ஆட்டம் கொண்டாட்டம் ‘ விளையாட்டு எனக்கு ரொம்பப் பிடிக்கும். நிறைய பேரை கலாட்டா செய்திருக்கிறேன் !  ஆனால் இந்த ‘ உங்கள் எண்ணத்தைத் தேர்ந்தெடுங்கள் ‘ என்று சொல்கிறீர்களே! அதுதான் புரியவில்லை.  அது எப்படி நாம் எண்ணத்தைத் தேர்ந்தெடுப்பது? மற்றவர்கள் தான் நம்மீது அதைத் திணிக்கிறார்களே! “

 “ சரியான கேள்வி சுஜாதா! இதுக்கு பதில் நம்ம ஓநாய்த் தலைவர்கிட்டேதான் இருக்கு.  அவர் ஒரு பெரிய ரேஸ் கார் ஒட்டினவர்.  ஒரு நாள் பலமான விபத்தில் அடிபட்டு பிழைத்ததே பெரிய காரியமாகக் கிடந்தார்!  மீதிக் கதையை அவர்கிட்டேயே கேளுங்கள்!  ஆனால் அதுக்குக் கடைக்குப் பின்னால் வார வேண்டியிருக்கும்.  அங்கே ஐஸ் கொட்டியிருக்கும். ரொம்ப குளிராக இருக்கும்! வர முடியுமா?” டோனி கேட்டான்.

 “ நான் அங்கே வர அனுமதி உண்டா?” – சுஜாதா கேட்டாள்.

 “ நாங்களும் வரலாமா?”

 திரும்பிப் பார்த்தால் சுரேஷ்! ரமேஷ்! அவனின் அழகான பையன்.

“ வாருங்கள் “ என்று சொல்லி அனைவரையும் அழைத்துக் கொண்டு ஓநாய்த் தலைவரைப் பார்க்கச் சென்றார்கள். அவர் தன் கதையை அழகாகச் சொன்னார்.  உருக்கமாகவும் இருந்தது. “ அந்த விபத்துக்குப் பிறகு நான் ஒவ்வொரு நாளும் என் எண்ணத்தைத் தேர்ந்தெடுக்கக் கற்றுக்  கொண்டேன்! அதுதான் எனக்குத் திருப்பு முனை – வழி காட்டி !  ஒவ்வொரு நாளும் எப்படி எப்படி அவர் மாறினார் என்பதை விளக்கமாகச் சொன்னார்.  மூவரும் வாயைப் பிளந்து கேட்டுக் கொண்டிருந்தனர்.  திங்கட்கிழமை மீட்டிங்கில் இதைப் பற்றிச் சொல்ல வேண்டும் என்று முடிவு எடுத்தார்கள்.

 அதற்குப் பிறகு சுரேஷ் வெளியே போய் விட்டான்.  சுஜாதாவும், ரமேஷும் அவனுடைய குழந்தையும் அருகில் உள்ள சிற்றுண்டிச் சாலைக்குச் சென்று காபி, சாக்லேட். கேக் என்று வாங்கி சாப்பிட்டார்கள்.  சுஜாதா தான்  முதலில் ஆரம்பித்தாள். “ ரமேஷ்! நம்ம குப்பைத் தொட்டியை முதலில் சுத்தம் செய்ய ஆரம்பிக்கணும்! இந்த வேலையை விட்டு விட்டு வேறு வேலைக்குப் போனால் அதுவும் இப்படி இருக்காது என்பது என்ன நிச்சயம்?  மேரி மாதிரி ஒரு நல்ல மேனேஜர் கிடைக்குமா? சந்தேகம் தான்! எனக்கு அவங்க கிட்டே ஒரு மரியாதை தோணுது.  பிரசாத்தைக் கூட அவங்க எதிர்த்துப் பேசினார்களாம்! எந்த மேனேஜருக்கு அந்த தில் இருக்கு?’

 “ சுஜாதா! நான் நினைச்சதையே நீயும் சொல்கிறாய்!  இந்த மீனங்காடி தொழிலாளர்களால் செய்ய முடியும் என்றால் நம்மால் ஏன் செய்ய முடியாது?  அதுவும் மேரி மாதிரி ஒரு மேனேஜர் இருக்கும்போது.  ஆனாலும் அது அவ்வளவு சுலபம் இல்லை சுஜாதா! நம்ம மக்கள் சிலருக்குக் கொஞ்சம் பயமா கூட இருக்காம். நாம் அவர்களுக்குத் தைரியம் சொல்லணும்.  அப்பத்தான் நாம் நினைக்கிற – எதிர்பார்க்கிற மாறுதல் கிடைக்கும்.”

 சுஜாதா மீனங்காடியை விட்டுக் கிளம்பும்போது பார்த்தாள், – மேலும் நாலைந்து அவளது ஆபீஸ் நண்பர்கள் குழந்தை குட்டிகளுடன் மீனங்காடியில் நுழைவதை!

  

                        திட்டத்தின் முதல் கட்டம்

 

image

திங்கட்கிழமை காலை முதல் குரூப் மீட்டிங்கில் ஆரவாரம் அதிகமாகவே இருந்தது.  மேரி வழக்கம் போல் பேச்சை ஆரம்பித்தாள். 

 “ இன்று நாம் புதிய அத்தியாயத்தைத் துவக்கப் போகிறோம்! நமது குப்பைத் தொட்டியைத் தூக்கி எறியப் போகிறோம்.  திட்டத்தை எப்படி செயலாற்றுவது என்பது தான் முதல் கட்டம்.  மீனங்காடியில் நாம் கண்டதை – கேட்டதை –  கற்றதை எப்படி நாம் அலுவலகத்தில் செயல் படுத்தப் போகிறோம் என்பதைப் பற்றி உங்கள் கருத்துக்களை – ஆலோசனைகளை – யோசனைகளை தெரிந்து கொள்ள ஆசைப் படுகிறேன்.  அவற்றை எல்லாம் நாம் தீவிரமாகப் பரிசீலிப்போம்.”

 சுஜாதாவும், ரமேஷும் எழுந்து தாங்கள் ‘ ஓநாய்த் தலைவருடன் ‘ பேசியதைப் பற்றி எடுத்துச் சொன்னார்கள்.  சுஜாதா தான் ஆரம்பித்தாள்.

 “ ஓநாய்த் தலைவர் நல்ல ஜாலியான மனிதர்.  ஆளைப் பார்த்தால்முதலில் கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது.  அதிலும் அவர் குரல் ரொம்பவே பயமுறுத்துவது போலத் தான் இருந்தது.  ஆனால் அவர் சொன்ன அவருடைய வாழ்க்கைக் கதை எங்களை மிகவும் உருக்கி விட்டது. அவர் ரேஸ் கார் வீரராக இருந்து ஒரு பெரிய விபத்திற்குப் பிறகு வாழ்க்கையே நொந்து போய்த் தவித்துக் கொண்டிருந்தாராம்.  அவரோட காதலி அவரை விட்டு விட்டுப் போய் விட்டாளாம்.  நண்பர்கள் கூட அவரிடம் பழகுவதைக் கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்தி விட்டார்களாம்.  அவர்மீது அவருக்கே வெறுப்பும் கோபமும் தோன்றியதாம்.  வாழ்க்கையே இருட்டாக இருப்பதைப் போல உணர்ந்தாராம்.

அப்போதுதான் அவருக்கு அந்த இரண்டு வழித் தத்துவம் தோன்றியதாம்.  ஒரு வழி – வாழ் நாள் முழுவதும் இழந்து போனதை நினைத்து வருத்தப்பட்டுக் கொண்டே சோகமாக இருப்பது, – மற்றொன்று அதை மறந்து விட்டு சந்தோஷமாக ஜாலியாக இருப்பது.  இந்த இரண்டு வழிகளில் ஒன்றைத் தேர்ந்து எடுக்க வேண்டும். அன்றைக்கே முடிவு செய்தாராம் – இனி வரும் நாட்களில் தான் மகிழ்ச்சியாக, ஜாலியாக இருப்பது என்று.  அதுதான் ‘ உங்கள் எண்ணத்தைத் தேர்ந்தெடுங்கள் ‘ என்ற தத்துவத்தின் கருத்து என்று விளக்கினார். “

 

image

ரமேஷும் தொடர்ந்தான் . “ என் பையனுக்கும் ஓநாய்த் தாத்தாவை மிகவும் பிடித்திருந்தது.  அவர் சொன்ன பிறகுதான் என்கிட்டே –  நம் மக்கள்கிட்டே எவ்வளவு சக்தி இருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டேன். ‘ ஓநாய்த் தலைவருடைய அறிவுரைப்படி நாம் செயலாற்றினால் இந்த அலுவலகத்தை நாம் ஒரு சந்தோஷமான இடமாக மாற்றலாம்.  ஒவ்வொரு நாளிலும் நாம் நமது எண்ணத்தைத் தேர்ந்தெடுப்போம்.  அது நல்லதா, சிறப்பா அமையணும்! அமையும்! “

 சுரேஷும் தன் கதையைச் சொன்னான்.

“ ஓகே! சுரேஷ்! ரமேஷ்! சுஜாதா! இந்த வார விடுமுறையில் நிறைய ‘ ஹோம் ஒர்க் ‘  செய்திருக்கிறீர்கள்.  ‘ ஓவர் டைம்  ‘கேட்காததற்கு நன்றி “

 மேரி சொல்லவும் கூட்டத்தில் கசமுசவென்று சிரிப்பு தெளித்தது.

 அதற்குப் பிறகு கிட்டத்தட்ட அரைமணி நேரம் எல்லோரும் அவரவர் கருத்துக்களைக் கூற ஆரம்பித்தனர்.  கடைசியில் மேரி, “ நாம் அடுத்தது என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி யாராவது புதிதாக ஏதாவது சொல்ல முடியுமா?” என்று கேட்டாள்.

 இதுவரை வாயையே திறக்காமல் இருந்த ஒருவன் கூறினான்.

 “ நாம் ஏன் நான்கு டீம் தயார் செய்து அந்த மீனங்காடியின் நான்கு ஐடியாக்களையும் எப்படி உபயோகப் படுத்துவது என்று திட்டம் தீட்டக் கூடாது ?”

 மற்ற எல்லோரும் அதை ஆமோதித்தனர்.  அதைத் தொடர்ந்து மேரியும் “ ரொம்ப சரி! எனக்கும் இந்த யோசனை நன்றாகவே படுகிறது! எதற்கும் அடுத்த குரூப்பையும் கலந்து கொண்டு முடிவைச் சொல்கிறேன்”.

 மீட்டிங் முடிவில் ஒரு பேப்பரைக் கொடுத்து யார் யார் நான்கு டீமில் எதில் சேர ஆசைப்படுகிறார்கள் என்று கையெழுத்து வாங்கினாள்.  இரண்டாவது குரூப்பும் முதல் குரூப்பின் யோசனையை அப்படியே ஏற்றுக் கொண்டது.  அவர்களும் அவர்களுக்குப் பிடித்த டீமில் சேரக் கையெழுத்துப் போட்டுக் கொடுத்தனர்.

 முதல் கட்டம் தயார் ! செயலாற்ற வேண்டியதுதான் !

                         அணியில் சிறு சிறு மாறுதல்கள்

image

 ‘ ஆட்டம் கொண்டாட்டம்’ அணியில் சேர நிறையப்பேர் பெயர் கொடுத்திருந்தார்கள்.  மேரி அவர்களுடன் கலந்து பேசி ‘ எண்ணத்தைத் தேர்ந்தெடுங்கள் ‘  அணிக்குச் செல்பவர்களுக்கு மீனங்காடியில் இலவச ‘ டீ ஷர்ட் ‘ கிடைக்கும் என்றதும் சிலர் தாவினர்.  அணிகள் சரியாக அமைந்ததும் அதை ஆபீஸ் ஆர்டராகப் போட்டு நோட்டீஸ் போர்டில் ஒட்டினாள் மேரி!  அணிகள் எப்படி செயலாற்றுவது என்பதற்கான அறிவுரைகளையும் தயார் செய்தாள்.

                         அணிகளுக்கான அறிவுரைகள்

 ஒவ்வொரு அணிக்கும் ஆறுவார நேரம் தரப்படும்.  அதில் அவர்கள் மீட்டிங் போடுவது, வேண்டிய தகவலைச் சேகரிக்கிறது, கலந்து ஆலோசிப்பது எல்லாம் அடக்கம்!  கடைசியில் எல்லாவற்றையும் சேர்த்து ஒரு ‘ விளக்கப் படமாக ‘ – ‘ பிரஸன்டேஷன் ‘ தயார் செய்து மக்கள் முன் காட்ட வேண்டும்.

 விளக்கப் படங்களைத் தொடர்ந்து திட்டங்களை எப்படி நிறைவேற்றுவது என்ற குறிப்புகளையும் தர வேண்டும்.

 அணிவேலைக்கென்று வாரத்தில் ஒவ்வொருவருக்கும் இரண்டு மணி நேரம் அலுவலக நேரத்திலேயே சௌகரியப்படி ஒதுக்கித் தரப்படும்.  மற்றவர்கள் அந்த வேலையைப் பகிர்ந்து கொள்ள வேண்டும்.

 ஒவ்வொரு அணிக்கும் கைச் செலவிற்காக ஆயிரம் ரூபாய் தரப்படும்.

 அணிகள் அவரவர்களுக்கான மீட்டிங்கைத் தாங்களே தயார் செய்து கொள்ள வேண்டும்.

 எந்தப் பிரச்சினை வந்தாலும் அதைத் தீர்த்து வைக்க நான் எப்போதும் தயார்.  இருந்தாலும் அணிகள் தங்கள் பிரச்சினைகளைத் தாங்களே தீர்த்துக் கொள்வது தான் நல்லது.

   நாம் வேலை செய்யும் இடத்தை

  நாம் விரும்புகிற இடமாக மாற்றுவோம் !

  குட்லக்  –   மேரி 


(தொடரும்)

மீனங்காடி

                        திங்கள் காலை

 

image

      மேரி ஆபீஸுக்குள் நுழைந்து லிப்டில்  ஏறும் போதே அவள் பாஸ் பிரசாத்தைப் பார்த்து விட்டாள். “ சரி ! தனியாக அவர் கிட்டே போய் விவரமா சொல்கிற வேலை மிச்சம ‘ என்று எண்ணிக் கொண்டாள்.  ஆனால் லிப்டில் எக்கச்சக்கமான கூட்டம்.  பேச முடியவே இல்லை.  மூன்றாவது மாடி  வந்ததும் வெளியே செல்லப் போவதற்கு முன்னால் “ மிஸ்டர் பிரசாத் ஒரு சின்ன பரிசு ! இதுக்குப் பேர் சிரிக்கும் சிங்காரி “  “ என்ன மேரி இது ? “ அவர்  கேட்கு முன் மேரி வெளியே வந்து விட்டாள்.  லிப்ட் கதவு மூடிக் கொண்டது..

image

      அவள் நாற்காலியில் உட்கார்ந்த உடன் போன் அடித்தது. பிரசாத் தான்.  அதை அவள் எதிர் பார்த்திருந்தாள்.  ‘ வேடிக்கையான பரிசு மேரி “ அவர்  பேச்சிலேயே ஒரு சிரிப்பு தெரிந்தது.  அவர் கிட்டே சனிக்கிழமை மீனங்காடிக்குச் சென்றது – கண்டது – படித்தது எல்லாவற்றையும் சுருக்கமாகச் சொன்னாள்.

      “ நீ செய்ய நினைக்கிறதைச் செய் மேரி ! மீனங்காடி சமாசாரம் நம்ம நிதிக் கம்பெனிக்கு எப்படி ஒத்து வரும் என்று புரியவில்லை.  ஒண்ணு மட்டும் நிச்சயம் ! டென்ஷனோட வந்த என்னை உன் ‘ சிரிக்கும் சிங்காரி ‘ சிரிக்க வைத்தது என்றால் உன்னால் அதுக்கு மேலேயும் ஏதாவது செய்ய முடியும் !”

      போனை வைத்ததும் அவளுக்கே அவள் பேச்சு செயல் எல்லாம் பிடித்திருந்தது.  மற்ற மேனேஜர் எல்லாம் பிரசாத் கூட இப்படிப் பேச யோசிப்பார்கள்.!  எப்போதும் ‘ ஆமாம் சார் ! சரி சார் ! ‘ என்று தான் பேசுவார்கள்.  நாம் இப்படி வெளிப்படையாப் பேசினது அவருக்குப் பிடித்திருக்கு என்று தான் அவரது குரலே சொல்லிற்று.!

                        ஜாலியா ஒரு பயணம்

image

அடுத்த இரண்டு வாரங்களிலும் திங்கட்கிழமை காலை மீட்டிங்கில் மேரி இதைப் பற்றித் தான் பேசினாள்   ‘ ஒவ்வொரு நாளும் நாம் அனைவரும் நம்முடைய எண்ணத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை நீங்கள் போட்ட ‘ மெனு கார்ட் ‘ அழகாக எடுத்துக் கூறியது.  நீங்கள் துணிச்சலாகச் செய்த அந்த நிகழ்ச்சி நம்ம கம்பெனியில் மிகவும் பிரபலமாகி விட்டது என்ற சேதி உங்களுக்குத் தெரியுமா ?   இப்போது நாம் அடுத்த கட்டத்திற்குப் போக வேண்டும்.  நீங்கள் எல்லோரும் அதை மனப்பூர்வமாக, அனுபவ பூர்வமாக, நேரடியாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.  மதியம் சாப்பாட்டு இடைவெளி போது நாம் அனைவரும் ஒரு குட்டி பயணம் போகிறோம்.  இரண்டு குரூப்பாகப் பிரிந்து செல்வோம். ஒரு குரூப் புதன் கிழமை மதியம்.  அடுத்த குரூப் வியாழக்கிழமை மதியம்.  அன்றைக்கு யாரும் சாப்பாடு கொண்டு வர வேண்டாம்.  கம்பெனி செலவில் சாப்பாடு ஏற்பாடு செய்யப் படும்.

      நாம் ‘ அவுட்டோர் ‘ பயணம் போகிற இடத்திற்கு உங்களில் சிலர் ஏற்கனவே போயிருக்கக்கூடும்.  நாம் போகிற மீனங்காடி தனி விதம்.  அங்கு கொப்பளிக்கும் சந்தோஷத்தை – சக்தியை உணரவே நாம் அங்கே போகிறோம்.  அங்கே இருக்கிற தொழிலாளிகளும் முதலில் நம்மை மாதிரியே பிரச்சினையில் தவித்து முடிவாக இந்த புதுப் பாதையைக் கண்டு பிடித்து இருக்கிறார்கள்.  அதை அனுபவ பூர்வமாய் உணருவது, பிறகு அதை எப்படி நமது கம்பெனியில் பயன் படுத்துவது ஆகிய இரண்டும் தான் நமது ‘ அவுட்டோர் ‘ பயணத்தின் முக்கிய நோக்கம் !”

      “ ஓ ! மேடம் ! அன்றைக்கு எனக்கு பல் டாக்டர் கிட்டே போகணும் “ “ எனக்கு வேற இடத்தில் லஞ்ச் ஏற்பாடு செய்திருக்கிறேன் “ இப்படி சில குரல்கள் எழாமல் இல்லை.

      ஆனால் மேரி அழுத்தம் திருத்தமாகச் சொன்னாள்.  “ நீங்கள் என்ன செய்வீர்களோ எனக்குத் தெரியாது.! உங்கள் மற்ற திட்டங்களை எல்லாம் ஓரம் கட்டி வைத்து விட்டு எல்லோரும் மீனங்காடிக்கு வருகிறீர்கள். ! வர வேண்டும் ! இது மிக மிக முக்கியம் .”

மேரிக்குத் தன் குரலில் இருந்த உறுதியை எண்ண ஆச்சரியமாக இருந்தது.

 image

      புதன் கிழமை மதியம் முதல் குரூப் தயாராக இருந்தார்கள்.  “ நீங்கள் பார்க்கும் ஒவ்வொரு நிகழ்ச்சியையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.! போகும் போது கையில் டீ கப்புடன் போங்கள்.” என்று மேரி டி.வி. விளம்பரத்தில் வருவது போல் சொன்னதைக் கேட்டு அனைவரும் ‘ பக பக ‘ என்று சிரித்து விட்டனர்.  நல்ல ஆரம்பமாகத் தோன்றியது மேரிக்கு.

      வழக்கம் போல மீனங்காடி சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தது.  அவ்வளவு பெரிய கும்பலில் நிதிக் கம்பெனியின் கும்பல் கலந்து வெவ்வேறு இடத்திற்குப் போய் விட்டார்கள்.  அவர்கள் ஒவ்வொருவரும் எப்படி உணருகிறார்கள் என்று மேரி அவர்களின் முகத்தையே அடிக்கடி அவர்களுக்குத் தெரியாமல் பார்த்து வந்தாள்.  பலர் ஜாலியாக அனுபவிப்பது அவர்கள் முகத்திலேயே தெரிந்தது.  ஜானும், ஸ்வேதாவும்  ஒரு மீன்காரனிடம் பேசிக் கொண்டிருந்தது தெரிந்தது.  அந்த மீன்காரன் தன்  அனுபவங்களை அவர்களிடம் பகிர்ந்து கொண்டிருந்தான்.  மக்கள்  உங்கள் கடைக்கு – ஆபீஸுக்கு வரும் போது அவர்கள் முகத்தைப் பாருங்கள்.  ஒரு நாள் நண்பன் வந்தால் எப்படி ஆர்வத்தோடு பார்ப்பீர்களோ அது மாதிரி பாருங்கள்.!  மற்ற வேலைகளை எல்லாம் விட்டு விட்டு அவர்களை மட்டும் கவனியுங்கள். “ ஜானும், ஸ்வேதாவும் தீவிரமாகக் கேட்டுக் கொண்டிருந்தது மேரிக்குப் பிடித்திருந்தது.

 image

      வியாழக் கிழமை இரண்டாவது குரூப்பும் கிட்டத்தட்ட இதே மாதிரி தான் போய் விட்டு வந்தார்கள்.  யாரும் அதிகமாகக் கேள்விகள் கேட்கவில்லை.  சாதாரணமாக மீனங்காடி நிகழ்ச்சிகளை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.  அப்பொழுதான் ஒரு புது திருப்பம் நிகழ்ந்தது.  சுஜாதா – ரொம்ப வருஷமா வேலை செய்கிற சீனியர் டைப்பிஸ்ட்.  அவளிடம் மீனங்காடி ஆள் வந்து “ மேடம் ! நீங்கள் அந்த தடுப்புக்குப் பின்னால் இருக்கும் இடத்திற்குப் போய் அந்த மீனைப் பிடிக்கிறீர்களா ? “ என்று கேட்டான். சுஜாதா முதலில் தயங்கினாலும் பிறகு ‘ சரி ‘ என்று மெதுவாகப் போனாள் . ரெண்டு மூன்று தடவை பிடிக்க மீன் நழுவி நழுவிப் போவது கூட்டத்தில் பார்த்துக் கொண்டிருந்த அனைவருக்கும் குஷியாக இருந்தது.  அங்கிருக்கும் அனைவரும் சுஜாதாவையே பார்த்துக் கொண்டு ‘ ஆய் ! ஊய் ! ‘ என்று கத்தினார்கள்.  மூன்றாவது தடவை ‘ கபால் ‘ என்று வெறும் கையால் அந்த மீனை சுஜாதா பிடித்ததும் அங்கிருந்த அனைவரும் சேர்ந்தாற்போல் கை தட்டி  ஆரவாரித்தனர்.  விசில் சத்தம் வேறு !  மீன் மாதிரியே சுஜாதாவும் அன்று சந்தோஷ வலையில் மாட்டிக் கொண்டு ரசித்தாள். !

      சுஜாதா மற்றவர்களுக்கு ஒரு வழி காட்டியாக விளங்கினாள்.  அன்றைக்கு நிதிக் கம்பெனி ஆட்கள் டீ கப்பைத் தூக்கிக் கொண்டு ‘ போகுது பார் ! போகுது பார் ! என்று சொல்வதை விட துள்ளிக் குதித்து மீனைப் பிடிக்கும் ஆக்ஷனில் இறங்கி இருந்தார்கள்.

                              வெள்ளி மதியம் மீட்டிங் .

 image

      வெள்ளிக் கிழமை மதியம் மேரி இரண்டு குரூப்புகளையும் தனித் தனியே சந்தித்தாள்.  “ நாமும் அந்த மீனங்காடி தொழிலாளிகள் மாதிரி  ஜாலியாக வேலை செய்தால் எவ்வளவு  நன்றாக இருக்கும்? “ என்று பேச்சைத் துவங்கினாள்.  சிலர் தலை ஆட்டினர்.  சிலர் மீன் தலைக்கு மேல் பறப்பதை நினைத்துச் சிரித்துக் கொண்டிருந்தார்கள்.  சுஜாதாவின் அவுட்டுச் சிரிப்பு அவளைக் காட்டிக் கொடுத்து விட்டது.

இரண்டு குரூப்புகளிலும் எதிர்ப்புகள் வராமல் இல்லை.  ‘ நாம் என்ன மீனா விற்கிறோம்?

‘ இது ஆபீஸ் ‘ அது ஆம்பளைங்க சமாசாரம் ‘ ‘ நம்ம வேலை எப்படிச் செய்தாலும் போர் தான் ‘ “ “ நாம் எதைத் தூக்கிப் போட்டுப் பிடிப்பது ?  கரன்சி நோட்டையா ?’

      “ நீங்கள் சொல்வதெல்லாம் சரிதான் ! இது மீன் மார்க்கெட் இல்லை. அவர்கள் வேலையை விட நமது வேலை வித்தியாசமானது தான்.  இருந்தாலும் நான் ஒன்று கேட்கிறேன்..  நாமும் ஏன் அவர்களைப் போல ஜாலியா சந்தோஷமா வேலை செய்யக் கூடாது ?  மனம் விட்டுச் சிரிக்கணும் ! வேண்டா வெறுப்போடு இல்லாமல் மன நிறைவோடு  வேலை செய்ய வேண்டும் .

‘ ஏண்டா ஆபிசுக்கு வருகிறோம்’ என்று இல்லாமல் ‘ஆபிசுக்கு வருவதே ஜாலி ‘ என்ற  நினைவு  வர வேண்டும்.  ஏற்கனவே மெனு கார்ட்போட்டு உங்கள் எண்ணத்தைத் தேர்ந்தெடுத்து விட்டீர்கள். ! அதற்கு அடுத்த கட்டத்திற்குப் போக வேண்டாமா ?”

      சுஜாதா எழுந்தாள்.  எனக்கு அந்த மீனங்காடி சூழ்நிலை மிகவும் பிடித்திருக்கிறது.  ஆனால் இங்கே நம்ம ஆபீசுக்கு வேலைக்கு வருவதே பிடிக்கவில்லை.  மூச்சு முட்டுது இங்கே !  உயிரே இல்லாத இடத்தில் இருப்பது போன்ற உணர்வு தான் எனக்கு இங்கு வருகிறது.  நான் உண்மையைச் சொல்லுவதற்காக என்னை மன்னித்து விடுங்கள்.  நான் வேறு வேலைக்குப் போக வேண்டும் என்று  போன மாதமே முடிவு எடுத்து விட்டேன்.  இந்த இடத்தில் உயிரும் உணர்வும் கொண்டு வர முடிந்தால் இங்கேயே இருப்பதைப் பற்றி எனக்கு ஆட்சேபணை ஒன்றும் இல்லை.!

      “ ரொம்ப நன்றி சுஜாதா ! “ உண்மையைச் சொன்னதற்காக “ சுரேஷ் எல்லாரையும் பார்த்து விட்டு மெதுவாகச் சொன்னான்   “ நான் இந்த இடத்தை ஜாலியான வேலை செய்யும் இடமாக மாற்ற வேண்டும் என்று ஆசைப் படுகிறேன். “

      ரமேஷ் கையைத் தூக்கினான் !  “ சொல்லு ரமேஷ் “  “ மேடம் ! அன்றைக்கு நீங்கள் உங்கள் சொந்த வாழ்க்கையைப் பற்றிச் சொன்னீர்கள்.!  எந்த மேனேஜரும்  இது மாதிரி சொன்னது இல்லை .  நானும் உங்களை மாதிரி தனி ஆளாக இருந்து கொண்டு என் பையனை வளர்த்தி வருகிறேன்.  எனக்கும் இந்த வேலை , சம்பளம், பாதுகாப்பு எல்லாம் அவசியம்.  நானும் ஒரு உண்மையை ஒப்புக் கொள்கிறேன்.  நான் மற்ற டிபார்ட்மெண்ட் ஆட்கள் வந்தால் எரிந்து எரிந்து விழுந்திருக்கிறேன்.  காரணம் அவர்கள் எல்லோரும் சந்தோஷமாக இருக்கிறார்கள்.  

நாம் மட்டும் இங்கே  இந்த  டிபார்ட்மெண்டில் அவதிப் படுகிறோமே என்ற வெறுப்பு, கோபம், ஆத்திரம். நீங்கள் அன்று பேசின பிறகு உணர்ந்தேன். – எவ்வளவு தவறான எண்ணம் என்னுடையது என்று.  நாம் நம்ம டிபார்ட்மெண்டை குப்பையா நினைத்தால் இது குப்பைத் தொட்டிதான்.  நாம இதை கோபுரமா நினைச்சா அது கோயிலாக மாறாதா ?  இதைப் பத்தி தீவிரமாக யோசித்தேன்.  நாமும் முயற்சிப்போம்.   நம்மால் இங்கேயே ஒரு ஜாலியான – சந்தோஷமான ஆபீஸை உருவாக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு வந்திருக்கிறது.”

      “ ரொம்ப தேங்க்ஸ் ரமேஷ் !  அவனை மிகவும் நன்றியுடன் பார்த்தாள் மேரி ”

 image

      “ இன்னும் சிலர் ரமேஷின் வார்த்தைக்குத் தலை ஆட்டுவது எனக்குப் புரிகிறது.  நீங்கள் சொல்கிற வார்த்தைகள் எல்லாம் உணர்ச்சி பூர்வமான வார்த்தைகள்.  இதயத்திலிருந்து வரும் வார்த்தைகள் ! அவற்றை நான் பெரிதும் மதிக்கிறேன்.  உங்கள் ஒத்துழைப்புக்கு நன்றி !  நாம் நமது ஆபீஸை நாம் விரும்புகிற ஒரு இடமாகக் கூடிய சீக்கிரம் மாற்றுவோம்.! இதில் கொஞ்சங்கூட சந்தேகமில்லை.!” கை தட்டல் பிறந்தது

      .  “ வருகிற திங்கட்கிழமை முதல் மீனங்காடித் தத்துவத்தை நமது மூன்றாம் மாடியில் அமுல் படுத்துவோம்.  அதுவரை நீங்கள் உங்களுக்கு மீனாங்காடியில் ஏற்பட்ட அனுபவங்களைப் பற்றியும் அவை உங்கள் வாழ்க்கையை எப்படி பாதிக்கிறது என்பதைப் பற்றியும் யோசியுங்கள் !  உங்கள் எண்ணம், கருத்து, சந்தேகங்கள் அனைத்தையும் ஒரு நோட்டுப் புத்தகத்தில் எழுதுங்கள்.!  நாம் அடுத்த தடவை சந்திக்கும்போது மேற்கொண்டு என்ன செய்யலாம் என்பதைப் பற்றித் தீர்மானிப்போம்.!  அதுவரைக்கும் ஜாலியா யோசியுங்கள்.”

      “ சரி ! நாம் கரன்சி நோட்டைத் தூக்கிப் போடா விட்டாலும் இங்கே இருக்கிற குப்பைத் தொட்டியை தூக்கி எறியலாமா ?”  ஜேக்கப் கேட்டதும் அனைவரும் சிரித்தார்கள்.! சிரிப்பு அலை போல தொடர்ந்து வருவது அனைவருக்கும் புரிந்தது.

 image

      “ என்னென்ன செய்யலாம் ‘ என்று கோடு போட்டுக் காட்டினாள் மேரி ! எல்லோரும் அந்த வார விடுமுறையில் அதைப் பற்றி நன்றாக யோசித்து விட்டு புதுப் புதுத் திட்டங்களுடன் வர வேண்டும் “ என்று திரும்பத் திரும்பச் சொன்னாள் மேரி ! 

      எல்லோரும் சென்ற பிறகு தனது இருக்கையில் சாய்ந்து உட்கார்ந்தாள் மேரி !  கொஞ்சம் சோர்வாகத் தோன்றியது.  சனி ஞாயிறு நாட்களில் யோசித்து விட்டு வாருங்கள் என்று சொன்னோமே ! செய்வார்களா ?  பெரிய நம்பிக்கை தோன்றவில்லை மேரிக்கு.  பெருமூச்சு தான் வந்தது. 

      ஆனால் அந்த வார சனி ஞாயிறு விடுமுறையில் அவர்களில் யார் திரும்பவும் அந்த மீனங்காடிக்கு குழந்தை குட்டிகளுடன் போனார்கள் என்பது மேரிக்கு சத்தியமாகத் தெரியாது.

 image

(தொடரும்) 

பக்கம்  21/25 

மீனங்காடி

                        ஒண்ணா இருக்கக் கத்துக்கணும்
 image
      கடைசியில் ஒரு டேபிள் காலியாக இருந்தது.  நாலு  பேரும் உட்கார்ந்து சாண்ட்விச், தோசை, காபி எல்லாம் ஆர்டர் செய்தார்கள்.  மார்க்கெட்டுக்கு மக்கள் வரத் தொடங்கி விட்டனர்.  “ அங்கே பார் மேரி ! நம்ம சிஷ்யன் எப்படிக் கலக்குகிறான் பார் ! நல்லா கவனித்துப்  பார்த்தால் நம்ம பாடத்தில் கடைசி ஆயுதம் தெரியும் !  அவளை உற்றுக் கவனிக்கத் தூண்டினான் டோனி. மேரி ஒவ்வொரு  தொழிலாளியையும், இப்படி அப்படி பார்த்துக் கொண்டே இருந்தாள்.  என்னவெல்லாம் வித்தை காட்டுகிறார்கள் என்று அதிசயித்துப் போனாள்.  இப்படி யாரும் ஜாலியா, குஷியா, சந்தோஷமா வியாபாரம் செய்து அவள் பார்த்ததே இல்லை.  இடைக்கிடையே அவர்கள் அடுத்த ஆளை எப்படிக் கவரலாம் என்று யோசிப்பதும் புரிகிறது.  பிரமிப்பாக இருந்தது மேரிக்கு!

image

      முந்தா நாள் குழந்தைகளைக் கூட்டிக் கொண்டு சூப்பர் மார்க்கெட்டுக்குப் போனது ஞாபகம் வந்தது மேரிக்கு .  ராத்திரி நேரம்.  குழந்தைகள் கண்ணில் தூக்கம் கப்பிக் கொண்டு வந்த நேரம்.  கவுண்டரில் சாமான்களைக் கொடுத்து விட்டு பில் போடுவதற்காகக் காத்துக் கொண்டு இருந்தாள்.  இருந்தது இரண்டே இரண்டு வாடிக்கையாளர்கள் தான்.  ஆனால் அந்த கேஷியர்களுக்குத் தான் எவ்வளவு அலட்சியம் ?  குழந்தைகளுடன் நிற்கிறாளே, சீக்கிரம் முடிப்போம் என்று தோண  வேண்டாம் ?  கேஷில் இருக்கும் இரண்டு பெண்களும் ஊர்க் கதை உலகக் கதை எல்லாம் பேசிக் கொண்டே இருந்தார்கள்.  மேரிக்குப் பொறுமையே போய் விட்டது.  குழந்தைகள் வேற “ சீக்கிரம் வாம்மா “ என்று சிணுங்க ஆரம்பித்து விட்டார்கள்.  அந்த மாதிரி நிச்சயம் இங்கே நடக்காது.  இந்த டோனியின் ஆட்கள் வேறு உலகத்திற்கு மனசாலும் போக மாட்டார்கள்.  அவர்களின் எண்ணம், செயல் எல்லாம் எப்போதும் வாடிக்கையாளருடன் ஒண்ணா இருக்கும் .  ஓ ……அது .தான்…..

      “ மேரி ! நீ கண்டு பிடிச்சுட்டே ! எனக்குத் தெரியும் “ என்று சின்னப் பையன் மாதிரி கத்தினான் டோனி.  “ இங்க பாருங்க உங்க அம்மாவை ! குப்பைத் தொட்டி டிபார்ட்மெண்ட் மேனேஜரை !” அவளைக் கிண்டல் செய்ய குழந்தைகள் கும்மாளமிட்டுச் சிரித்தார்கள்.   

      “ மேரி ! நானும் போன வாரம் ஒரு பெரிய கடைக்குப் போயிருந்தேன்.  நான் வரிசையில் காத்துக் கொண்டிருக்கும் போது அங்கு வேலை செய்யும் மக்களைப் பார்த்தேன். அவர்கள் ஜாலியாகத் தான் இருந்தார்கள். சந்தோஷம் ! குஷி ! அரட்டை எல்லாம் இருந்தது. ஆனால் அவை எல்லாம் அவர்களுக்குள்ளே தான் இருந்தது.  நம்மைப் போன்ற வாடிக்கையாளர்களை எல்லாம் ஒரு அந்நியனைப் போலத்தான் பார்த்தார்கள்.  அவங்க சந்தோஷத்தை நம் கூடப் பகிர்ந்து கொண்டார்கள் என்றால் எவ்வளவு நன்றாக  இருக்கும் ? அவங்க கிட்டே எல்லா சமாசாரமும் இருந்தது.  ஒண்ணே ஒண்ணைத் தவிர.  அவர்கள் தங்கள் உலகத்தில் இருந்தார்கள்.  வாடிக்கையாளர் உலகத்துக்கு வரவில்லை .  ‘ நீ வேறு நான் வேறு ‘ என்று இருந்தார்கள்.  ஒண்ணா இருக்கக் கத்துக் கொள்ளவில்லை.  அந்த உண்மையை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை. 
      மேரி நோட்டுப் புத்தகத்தை எடுத்து ‘ ஒண்ணா இருக்கக் கத்துக்கணும் “ என்று எழுதிக் கொண்டாள்.
      டோனி கிளம்ப ஆரம்பித்தான் “ மேரி நான் மீனங்காடிக்குப் போகணும் ! என் தோழர்கள் எல்லோரும் என் வேலையையும் சேர்த்துச் செய்கிறார்கள்.  அதிக நேரம் அப்படிச் செய்ய வைப்பது நியாயமில்லை.  போவதுக்கு முன்னாடி கடைசியா ஒண்ணே ஒண்ணு சொல்ல விரும்புகிறேன் “ பெரிய பீடிகை போட்டு நிறுத்தினான் டோனி.
      “ சொல்லு டோனி ! கேட்க ஆவலாயிருக்கேன் !’
      “ உன் ஆபீஸில் எப்படி இந்த ஐடியாக்களை எல்லாம் எப்படி செயல் படுத்தப் போறேன்னு புரியலை.  ஒண்ணு மட்டும் முக்கியம் !  உன் மக்கள் கிட்டே இதைப் பற்றி பாடம் எடுப்பதை விட அவர்களுக்கு இதை நேரடியாகப் புரிய வைத்தால் நல்ல பலன் கிடைக்கும் என்று தோணுது. ! ஜோ சொன்ன மாதிரி அவர்களையும் இங்கு வந்து பார்த்துத் தெரிஞ்சிக்க  வைத்தால் என்ன?”
      “ நீயும் ஜோவும் சரியான ஜோடி ! எப்படி இதை ஆரம்பிக்கிறது என்று யோசித்துக் கொண்டிருந்த எனக்கு அனுபவ  பூர்வமா அவர்களுக்குப் புரிய வைக்கிறது தான் நல்ல வழி என்று முதலிலேயே தோணவில்லை.! அதுதான் சிறந்த வழி டோனி !  ரொம்ப ரொம்ப நன்றி டோனி ! இந்த நாளை நான் ஆயுசுக்கும் மறக்க முடியாது.  இப்படி இந்த நாளை ‘ அந்த நாள் நெஞ்சிலே ‘ என்று பாடும் அளவிற்கு மாற்றியதற்கு எப்படி நன்றி சொல்வது ? “

      வீடு திரும்ப வரும் வரைக்கும் ஜோ பேசிக்கொண்டே வந்தான்.  இவ்வளவு குஷியாக இருந்து அவனைப் பார்த்ததே இல்லை.  ஜேனும் தான்.  மேரியும் அன்றைக்கு முழுவதும் குழந்தைகளுடன் அவர்கள் உலகத்தில் ‘ ஒண்ணா ‘ இருந்தாள் ! டோனியைப் பற்றி நினைத்தாள்.  எங்கோ பாடல் ஒலித்தது. ‘ உன்னை நான் சந்தித்தேன் ! நீ ஆயிரத்தில் ஒருவன் “ சரி ! சரி ! திங்கட்கிழமை வரட்டும் பார்க்கலாம் என்று முடிவு செய்தாள் மேரி. !

image

 
                        ஞாயிறு மதியம்
      மேரி தனி உலகத்திற்குச் செல்லும் நேரம்.  ஞாயிறு மதியம் வந்தது.  ஆவலோடு நோட்டுப் புத்தகத்தை எடுத்து குறிப்புக்களை விரிவு படுத்த ஆரம்பித்தாள்.! 

உங்கள் எண்ணத்தைத் தேர்ந்தெடுங்கள்:-

image

 இது நல்ல விதமாக ஆரம்பமாகி விட்டது.  அந்த ‘ மெனு ஐடியா ‘ – இன்றைய – ஸ்பெஷல் – மிகவும் நன்றாகவே வந்திருந்தது.  வெற்றியின் முதல் படி என்று சொல்லலாமா ? இது தான் முக்கியமான படி. இந்த எண்ணம் இல்லாமல் மற்றது எல்லாம் இருந்தும் பிரயோஜனமில்லை. இந்த எண்ணத்தை மேலும் வளர்க்கணும்.! இன்னும் நல்லா எல்லாருக்கும் புரியும்படி செய்யணும்.

ஆட்டம் கொண்டாட்டம்:- 

image

இந்த மீனங்காடி பெரியவர்களின் விளையாட்டு  மைதானம் போல் இருக்கிறது.  இந்தத் தொழிலாளிகள் இப்படி ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என்று இருக்கும்போது நமது நிதிக் கம்பெனியிலும் இதைக் கண்டிப்பாகக் கொண்டு வரலாம்.!

அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே :-

image

வாடிக்கையாளர் எல்லோரையும் ஜாலியா இருக்கிறபடி செய்ய வேண்டும்.  பழைய பாஸ் ஜோசப் மாதிரி இருக்கக் கூடாது.  அவர் மற்றவர் கிட்டே பேசும் போதும் ஏதோ டேப்பில் ரிகார்ட் செய்வது போலப் பேசுவாரே தவிர மனிதர் கூடப் பேசுகிறோம் என்ற உணர்வே இல்லாமல் இருப்பார் ! அப்படி இருக்கக் கூடாது. .

ஒண்ணா இருக்கக் கத்துக்கணும் :-  

image

இந்த மீனங்காடி தொழிலாளர்கள் எப்படி வாடிக்கையாளர் கூட ஒன்றிப் போய் விடுகிறார்கள் ? தங்களோட தனி உலகத்தில் இருப்பதே இல்லை.! அப்படியே வாடிக்கையாளர் மனதில் ஊடுருவி நிற்கிறார்கள்.  அவர்கள் கூட ரொம்ப நாள் பழகின சிநேகிதன் போலப் பேசுகிறார்கள்! பழகுகிறார்கள் ! இதை விட வேறு என்ன வேண்டும் ? 

(தொடரும்) 

பக்கம்  21/25 

மீனங்காடி

                                                      22/25

image

அடுத்த வெள்ளிக் கிழமையன்று அது நடந்தது.! மேரி தனது மூணாம் மாடி ஆபீஸுக்கு லிப்டில் இருந்து வெளியில் வந்தாள்.! அங்கே கண்ணை உறுத்துவது போல மிகப் பெரிய போஸ்டர் !

      image

                       உங்கள் எண்ணத்தைத் தேர்ந்தெடுங்கள்

                இன்றைய மெனு – இன்றைய ஸ்பெஷல்

 

            மேரி மகிழ்ச்சியின் உச்சத்துக்குப் போனாள்.  அவளுக்கு ரொம்ப குஷியாக இருந்தது.  மக்கள் புரிந்து கொண்டார்கள் என்பதை இந்த போஸ்டரே சொல்லிற்று.  உடனே டோனிக்கு போன் செய்ய ஓடினாள்.!

      அவளோட முதல் வெற்றி ! மிகவும் சந்தோஷத்தைக் கொடுத்தது. இன்னும் நிறைய செய்யணும். “ டோனி ! இதைப் பத்தி உங்கிட்டே நிறையப் பேசணும் ! எப்ப உன்னை சந்திக்கலாம்?”

      “ சனிக்கிழமை சந்திக்கலாமே ! உன் குழந்தைகளையும் கூட்டிட்டு மீனங்காடிக்கு வாயேன் !”

      “ ஓகே !” உற்சாகமாய் இருந்தாள் மேரி .

                        மீனங்காடியில் சனிக்கிழமை

 

      “ மீனங்காடி சனிக்கிழமை ரொம்ப பிஸியாக இருக்கும்.  காலையில் சீக்கிரமா வாயேன் !”

      “ நீ எப்ப வருவே ?”

      “ காலையில அஞ்சு மணிக்கு !”

      “ ஊகும் ! அவ்வளவு விடியற் காலையில் குழந்தைகளைக் கஷ்டப் படுத்த முடியாது.”

      “ சரி ஐந்தரைக்கு வா !” சிரித்துக் கொண்டே சொன்னான் டோனி.

      “ அதெல்லாம் முடியாது. எட்டு மணி?”

      “ சரி வா !”

      குழந்தைகள் தூக்கக் கலக்கத்தில் இருந்தாலும் ஸ்கூல் – வீடு என்று ஒரே மாதிரி இருந்ததற்கு புதுசா மீன் மார்க்கெட்டுக்குப் போவது கொஞ்சம் மாறுதலா இருந்தது.

      “ என்ன மீன் இருக்கும்? பெரிய மீன் எல்லாம் இருக்குமா?  சுறா மீன் ? எங்களை மாதிரி பசங்கள் வருவாங்களா விளையாட ? “ கேள்வி மேல் கேள்வி கேட்டுக் கொண்டே வந்தார்கள் ஜோவும், ஜேனும்.

      மீனங்காடி அப்போதைக்குக் கொஞ்சம் அமைதியாக இருந்தது.  டோனியை நேரடியாகப் பார்த்தாள்.  மீனங்காடி அழகாக  எல்லாம் அதன் அதன் இடத்தில் விவரம் எல்லாம் எழுதி வைத்து – பார்க்கவே நன்றாக இருந்தது, ஒரே ஒரு இடத்தில் மட்டும் மீன் எதுவும் இல்லை.  ஐஸ் கொட்டிக் கிடந்தது.

      “ ஹேய் ! குட் மார்னிங் !” வழக்கம் போல சிரித்துக் கொண்டே வந்தான் டோனி.  “ யார் இந்த குட்டி மீன்கள் ?” குழந்தைகள் ஜோவையும், ஜேனையும் அவனுக்கு அறிமுகம் செய்து வைத்தாள்.

      “ மேரி வேலையை ஆரம்பிக்க வேண்டியதுதான் “

      உடனே நோட்டுப் புத்தகத்தையும் பேனாவையும் எடுத்தாள்.

      “ நோ ! நோ ! உன் வேலையைச் சொல்லலை.  என் வேலையை ஆரம்பிக்கணும்னு சொன்னேன் ! நீங்க மூணு பேரும் அங்கே இருக்கிற மீன்களை எல்லாம்  எடுத்து அழகா அடுக்கி வைக்க உதவுவீங்க என்று நம்புகிறேன் “ என்றான்.

      “ ஓ ! செய்றோமே ! – ஜோ அவன் பின்னால் ஓடினான். மேரி தோளைக் குலுக்கிக் கொண்டாள். ஜேன் அம்மா கையைப் பிடித்துக் கொண்டாள் !

      “ மாஸ்டர் ஜோ ! உன் சைசுக்கு பூட்ஸ் இல்லை.  ஆனா குட்டி ஜாக்கெட் தர்றேன் ! நாம இந்த மீன்களை எல்லாம் ‘ பேக்  பண்ணலாம். “

      டோனி ஜோவைக் கூட்டிக் கொண்டு கடையின் பின் பக்கம் போனான்.  ஜேன் அம்மாவை விட்டுப் போகாமல் ஐஸ்ஸை வைத்து விளையாட ஆரம்பித்தாள்.

பத்துப் பதினைந்து நிமிஷம் இரண்டு பேரையும் காணோம் !  மேரியும் கடையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.

கட கட என்று மீன் வண்டி வரும் சத்தம் கேட்டது.  ஒரு பெரிய டிராலியில் மலை மாதிரி மீன்களைக் கொட்டிக் கொண்டு ஐஸ் கட்டிகளோட டோனியும், ஜோவும் வந்து கொண்டிருந்தார்கள்.  டோனி தான் தள்ளினான்.  ஜோ அதன் கைப் பிடியில் தொங்கிக் கொண்டே தரையில் பட பட வென்று காலைத் தேய்த்துக் கொண்டே வந்தான் !

                              ஆட்டம் கொண்டாட்டம்

image

      “ அம்மா ! உள்ளே எவ்வளவு மீன் கொட்டிக் கிடக்கு தெரியுமா ! இவ்வளவு ! “ என்று கையை விரித்துக் காட்டினான் ஜோ.  “ நான் தான் எல்லாத்தையும் வண்டியில ஏத்தினேன் ! சரி தானே டோனி அங்கிள் ?”  டோனி சிரித்துக் கொண்டே கேட்டான் ! “இதெல்லாம் பேக் பண்ண எனக்கு உதவி செய்வாயா ஜோ ?”  “ ஓ யெஸ் “ – டோனிக்கு மீன் எடுத்துக் கொடுக்கிறது, ஐஸ் கட்டி கூட வைக்கிறது. ஜோ உயரத்திற்கு ஒரு பெரிய மீன்.  அதை இரண்டு பெரும் தூக்கி அழகா படுக்க வைத்தார்கள். “ சே ! காமிரா கொண்டு வர மறந்திட்டேனே !” என்று மேரி வருத்தப் பட்டாள். டோனி ஜோவை வேலை வாங்கியது மனதுக்கு இதமாக இருந்தது.  ஜோவுக்கு பரம குஷி !

டோனி திடீரென்று “ மீன் என் கையைக்  கடிச்சிடுச்சு “ என்று அலறினான்.  ஜோ ஒரு நிமிஷம் பயந்து பார்ப்பான்.  அப்புறம் விளையாட்டு என்று தெரிந்ததும் ‘ ஆஹா ஓஹோ ‘ என்று சிரிப்பான்!. அன்னிக்கு   ‘ உனக்குப் பிடிச்ச ஹீரோ யார் ? என்றால் ரஜினி, கமல், கிரிக்கெட் தோனி எல்லாரையும் விட்டுட்டு மீனங்காடி டோனி  அங்கிள் தான் என்று சொல்வான்.

ரொம்பவும் சந்தோஷத்தில் துள்ளிக் குதித்தனர் குழந்தைகள்  இருவரும்.!

“ சரி ஜோ ! ஜேன்! இப்போ உங்க அம்மாவுக்கு ஒரு சின்ன ‘கிளாஸ் ‘ எடுப்போம் ! உங்க ஆபீஸில் அடுத்தது என்ன செய்யணும் என்பதை ஜோ உனக்குச் சொல்லுவான்.  “

      “ ஜோ !”

      “ ஆமாம் ! அவனையே கேளு ! உங்க ஆபீஸில் இரண்டாவதாக நீங்கள் செய்ய வேண்டிய காரியம் என்ன தெரியுமா ! எல்லா குழந்தைகளுக்கும் அது தெரியும்.  நாம தான் வயதான பிறகு அதை மறந்து சீரியசாயிடறோம்.  ஜோ ! நீ சொல்லு ! ஸ்கூல்ல ரீசஸ் பீரியடிலே நீ என்ன செய்வே ?”

 மீன் வண்டியை நகர்த்திக்  கொண்டிருந்த ஜோ தலையைத் திரும்பிப் பார்க்காமலே பதில் சொன்னான் –  "விளையாடுவோம் “.

மேரி நோட்டுப் புத்தகத்தை எடுத்து எழுதினாள். ‘

விளையாட்டு – ஆட்டம் – கொண்டாட்டம் ‘ அதுதான் அவள் மீனங்காடிக்கு வந்த முதல் நாள் நடந்து கொண்டிருந்தது.  நன்றாகப் படித்துப் பட்டம் பெற்று டை கட்டி ஆபீஸில் வேலை செய்பவர்கள் எல்லாம் இடைவேளையின் போது குழந்தைகள் போல விளையாடிக் கொண்டிருந்தார்கள்.  மீனைத் தூக்கிப் போடுவது, ஒருத்தரை ஒருத்தர்  கிண்டல் செய்வது, சத்தம் போட்டுப் பேசுவது, கோரஸாக எல்லோரும் ‘ போகுது பார் ‘ என்று பாடுவது எல்லாம் அவர்களின் விளையாட்டு தான். ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் தான். அவற்றை எல்லாம் மனக் கண்ணில் கொண்டு வந்த மேரிக்கு உடம்பில் மின்சாரம் பாய்ந்தது போல இருந்தது.

  “ தப்பா நினைக்காதே மேரி ! இது உண்மையான வியாபாரம் தான்.  லாபம் சம்பாதிக்கத் தான் நாங்கள் இருக்கிறோம்.  ஆனால் ஒரு சின்ன உண்மையைக் கண்டு பிடிச்சோம்.  சீரியஸா வியாபாரம் செய்யணும்; ஆனால் அதை விளையாட்டா செய்யணும் ! என்ன ஒண்ணுக்கொண்ணு ஏடா கூடமா இருக்கா? எங்க வாடிக்கையாளர் எல்லாம் இதை பெரியவர்களுக்கான மரியாதையான விளையாட்டு என்று நினைக்கிறார்களே தவிர தப்பா நினைக்கிறதில்லை.”

இதிலே நிறைய வசதி இருக்கு மேரி !  நாங்க மற்ற கடைகளை விட அதிகம் விற்கிறோம்.  நிறைய லாபம் வருது.  நாங்க எங்க வேலையை சந்தோஷமா செய்யறோம். இல்லேன்னா இது ரொம்ப கஷ்டமான வேலை.  மீனங்காடி தொழிலாளிகள் அனைவரும் ஒரு ஜெயிக்கிற கிரிக்கெட் டீம் மாதிரி நல்ல நண்பர்களாகப் பழகுகிறோம்.  இந்த உண்மை உலகத்திற்கே தெரிஞ்சதினாலே நாங்கள் உலக நாயகர்களாகி விட்டோம்.  எல்லாம் எப்படி ?  யோசிச்சு யோசிச்சு ‘ ஜோ ‘ சொன்ன வேலையைத் தான் செய்தோம்.  செய்யறோம் செய்வோம் ! எப்படி விளையாடணும் என்று எங்களுக்குத் தெரியும் “

“ ஏம்மா ! உங்க ஆபீஸ் சிடு மூஞ்சிக்களை எல்லாம் இங்கே கூட்டிட்டு வாயேன் ! டோனி அங்கிள் அவர்களுக்கு எப்படி விளையாடறது என்று சொல்லித் தருவார்! சரியா டோனி அங்கிள் ?”

                        அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே

       திடீரென்று ஒருத்தன் மேரி கிட்டே வந்து , “ ஹேய் ! பத்திரிகை லேடி ! மீன் வாங்கலையா என்று கேட்டுக் கொண்டே வந்தான்.  டோனியின் சிஷ்யன் கையில் ஒரு குட்டி மீனை எடுத்துக் கொண்டு , “ ரொம்ப சல்லிசா தர்றேன் ! இதோட தாடி எலும்பு கொஞ்சம் உடைஞ்சிருக்கு !  அதனாலத் தான்  சல்லிசா தர்றேன் ! “ மீனோட வாயைத் திறந்து காட்டினான்.  இதுக்குப் பேரு  ‘சிரிக்கும் சிங்காரி ‘ ஒரு ரூபாய் தான்! ‘’  அவளிடம் வேடிக்கையாகப் பேசினான் அந்த ஓநாய் போல இருக்கும் வயதான இளைஞன். கூட்டத்தினர் அவனுக்கு வைத்த பெயர் ‘ ஓநாய்த்  தாத்தா ‘. டோனி அவளைப் பார்த்து சிரித்துக் கொண்டே இருந்தான்.  ஜோவுக்கு அதைப் பிடிக்க ஆசை ! ஜேனுக்கு இப்ப தான் பயம் கொஞ்சம் தெளிந்தது.  அம்மா பின்னாலிருந்து கொஞ்சம் தைரியமாக அந்த ஓநாய்த் தாத்தா கிட்டே வர ஆரம்பித்திருக்கிறாள். 

 image

      மேரி ஒரு ரூபாய் கொடுத்து அந்த மீனை வாங்கினாள்.  ஏன் அவனை எல்லோரும் ‘ ஓநாய் தாத்தா ‘ என்று கூப்பிடுகிறார்கள் என்று யோசிக்கவே வேண்டாம் .  அவர் தலை அப்படி இருந்தது.  அது மட்டுமல்ல அவர் பார்க்கும் பார்வை,  அப்படி இப்படி நடக்கிற விதம் அசல் ஓநாய் தான்.  தன்னை அப்படி அழைப்பதில் அவருக்கும் ரொம்பப் பெருமை.!  வயதான மனிதரானாலும் என்ன சுறுசுறுப்பு ! உற்சாகம் ! வீட்டில் பழகின ஓநாய் என்று சொல்லலாம் .  அவளவு ஜாலி ! ஜோவுக்கும் ஒரு ‘ சிரிக்கும் சிங்காரி ‘ வாங்கிக் கொடுத்தாள்.

“ எனக்கும் ஒண்ணு “ என்று ஜேன் கேட்க அவளுக்கும் தனியே பையில் போட்டு சிரிக்கும் சிங்காரி கொடுத்தார் ஒநாய்த் தாத்தா !.  சிங்காரமாகச் சிரித்தார்கள் அனைவரும்.!

 image

      டோனி ஓநாய்த் தாத்தாவிடம் , “ ரொம்ப நன்றி தாத்தா ! நீங்கள்  மேரிக்கு சிரிக்கும் சிங்காரி மட்டும் கொடுக்கவில்லை.  மூன்றாவது ‘ மருந்தும் ‘ கொடுத்தீர்கள் “ என்றான்.

      “ நிஜமாவா ?” மேரி ஆச்சரியத்தில் மீன் மாதிரி வாயைத் திறந்தாள்.

      “ மேரி இரண்டாவது தடவை இந்த மீனங்காடிக்கு வந்தாயே ! அப்போ  இங்கே என்ன நடந்தது ? நினைச்சுப் பாரு மேரி ! உன் மனசில் என்ன நிலைச்சு நின்னது ? “

      “ ஒரு காலேஜ்  பொண்ணு ! 20 வயது இருக்கும்.  அவள் மேடை மேலே ஏறி மீன் பிடிக்க ஐஸ் பாதையில் ஓடியாடி .  இரண்டு மூன்று தடவை தடுக்கி விழுந்து.  கடைசியில் தட்டுத் தடுமாறி மீனை ரெண்டு கையாலும்  லபக்குன்னு பிடிச்சு   ஒலிம்பிக்கில் தங்கம் கிடைத்தது போல குதித்தாளே !     அதுவா ?  

      “ சரியா சொன்னே மேரி !  அந்தப் பொண்ணுக்கு அந்த நிகழ்ச்சி நினைவில் இருக்குமா ? “

      “ நிச்சயமா ! அவள் ஓடும் போது பார்த்துக் கொண்டிருந்த நாங்கள் அனைவரும் அவள் கூடவே ஓடி, தடுக்கி விழுந்து, கடைசியில் நாங்களும் அவள் கூடச் சேர்ந்து மீனைப் பிடித்து துள்ளிக் குதித்தது போல ஒரு பிரமை. 

“மேரி! இன்னிக்கு ஜோ எதை நினைச்சு  சந்தோஷப்படுவான் ?”

      “ பெரிய ஆள் மாதிரி ! உன் கடைக்குப் பின்னாடி போனது .  மீன் வண்டியில் வைத்துத் தள்ளிக் கொண்டு வந்தது.  உன் கூட வேலை செய்து மீனை அடுக்கி வைத்தது.  இதெல்லாம் அவன் ஆயுசுக்கும் மறக்க மாட்டான். “ 

இதுதான் எங்கள் மூலதனம் மேரி !  வாடிக்கையாளர்கள் நம்மிடம் வரும் ஒவ்வொரு நாளையும் அவர்கள் நினைவில் நிற்கிற நாளாய் மாற்ற வேண்டும்.  இந்த நாள் மறக்க முடியாத நாள் என்று அவர்கள்  நினைக்க வேண்டும்.  நாங்கள் தீவிரமாக யோசித்து அப்படி ஒரு நாளை அவர்களுக்குக் கொடுக்கிறோம்.  அவர்களுடன் பேசி, பழகி, ஒட்டி உறவாடுவோம்.  அவர்களை  விட்டு மற்ற கடைக்காரர்கள் போல விலகி இருக்க மாட்டோம்.  அதே சமயம் அவர்களை மிகுந்த மரியாதையுடன் எங்கள் விளையாட்டில் பங்கு பெற வைப்போம்.  நாங்கள் வெற்றி அடைந்தோம் என்றால்  அவர்களுக்கு ‘ அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே ‘ என்றைக்கும் நிலைத்து நிற்குமல்லவா?       

  மேரி தனது நோட்டுப் புத்தகத்தை எடுத்து எழுதினாள். 

      ‘ அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே ‘

      அவள் மனம் சிறகடித்துப் பறந்தது.  இவர்கள் வாடிக்கையாளர்களுடன் இணைந்து உறவாடுகிறார்கள்.  வேடிக்கையாகப் பங்கு பெற வைக்கிறார்கள்.  அவர்களும் இவர்களுடன் சேர்ந்து ஒரு நாடகம் போல – ஒரு நடனம் போல – ஒரு கலை  நிகழ்ச்சி  போல பங்கு பெறுகிறார்கள்.  அந்த சந்தோஷமான நிகழ்ச்சி அவர்கள் மனத்தில் புன்னகையையும் நிறைந்த மகிழ்ச்சியையும் தோற்றுவிக்கிறது.  ‘ அந்த நாள் ஞாபகம் ‘ நெஞ்சிலே என்றைக்கும் இருக்கும்.  வாடிக்கையாளரின் நெஞ்சில் அந்த நாளை மறக்க முடியாத நாளாக மாற்றுவது எவ்வளவு பெரிய கலை !  அதைத் தொடர்ந்து  செய்யும் இந்த  மீனங்காடித் தொழிலாளர்களின்  மனம்  எவ்வளவு மகிழ்ச்சிகரமாக இருக்கும் !

      “ ஹலோ ! மேடம் ! என்னாச்சு? வீட்டிலே சொல்லிக்கிட்டு வந்திட்டியா ? “ வேடிக்கையாக விரலைச் சொடக்கினான் டோனி ! மேரி சிலிர்த்துக் கொண்டாள்.  டோனி, ஜோ,ஜேன் மூவரும் சிலை போல நின்று கொண்டிருக்கும்  மேரியை ஒரு  நிமிஷம் உற்றுப் பார்த்தார்கள். 

      “ சாரி  டோனி ! சாரி குட்டீஸ் ! இந்த ‘அந்த நாள் ஞாபகம்’ அஸ்திரத்தை எங்கள் ஆபீஸில் எப்படிப் போடுவது என்று யோசித்துக் கொண்டிருந்ததில் எல்லாவற்றையும்  மறந்து விட்டேன்.“

 ”இதோடு இன்னிக்குப் பாடம் போதும்.! குழந்தைகளுக்கு பசிக்கும் ! நான் வாங்கித் தருகிறேன்.  வாங்க ஜோ ! ஜேன் ! வா மேரி “ என்று அழைத்துக் கொண்டு புறப்பட்டான் டோனி .

      “மீன் குட்டிகளா ! உங்களுக்குப் பசிக்குதா ?

      “ ஆமாம் அங்கிள் “ கோரசாக இருவரும் சொன்னார்கள்.

மேரியும் மெல்ல ‘ ஆமாம் ‘ என்று சொல்லி அவர்கள் பின்னால் நடந்தாள்.!

(தொடரும்)

image

மீனங்காடி

24/25  

                          ஞாயிறு மதியம்  

image

ஞாயிற்றுக் கிழமை மதியம். மேரி எப்பொழுதும் தனக்குத் தானே ஒதுக்கிக் கொண்ட நேரம்.

குழந்தைகள் இருவருக்கும் பாடம் சொல்லிக் கொடுக்க ஒருத்தியைப் போட்டு விட்டு இரண்டு மணி நேரம் தனக்காக அந்த நேரத்தைச் செலவழிப்பாள். அடுத்தடுத்து வருகிற பிரச்சினைகளைச் சமாளிக்கவும் , அமுக்கமான வாழ்க்கையைப் புதுப்பிக்கவும், ஓய்வெடுக்கவும் அந்த இரண்டு மணி நேரத்தைப் பயன் படுத்துவாள்.  நல்ல கதைகள் படிப்பது, பைக் ஓட்டுவது, காப்பி குடித்துக் கொண்டே ஓய்வெடுப்பது போன்றவை அவளது அந்த நேர வேலைகள். கோவாவைச் சுற்றி எக்கச்சக்கமான காப்பிக் கடைகள்.  அடுத்த தெருவில் இருக்கும் காப்பிக் கடையில் கடைசி டேபிளில் காபி குடித்துக் கொண்டே புத்தகம் படிப்பது அவளுக்கு மிகவும் பிடித்த பொழுது போக்கு.

இன்றும் அதே இடத்தில் காபி ஆர்டர் செய்து விட்டு சாரா எழுதிய ‘ எளிமையான நிறைவு ‘ என்ற புத்தகத்தைப் படித்தாள்.  அதில் ஒவ்வொரு நாளுக்கும் ஒவ்வொரு அறிவுரை இருக்கும்.  அன்றைய தேதிக்கான கருத்தைப் படித்தாள்.

“ நீ ஒரு நாடக மேடையில் நடிக்கும் நடிகன் ! இந்த உண்மை பலருக்குத் தவறாகக் கூடத் தோன்றும்.! ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஒவ்வொரு பாவத்தை வெளிப்படுத்துகிறாய் ! அதை நீ ஒருவன் மட்டும் தான் செய்ய முடியும்.  நீ உலகில் பிறந்ததே ஒரு தனி அடையாளச் சின்னம் ஏற்படுத்தத்தான்,  அதுதான் உன் தனித் தன்மை.  அதுக்கு மரியாதை கொடு. உன் திறமைக்கு உருவம் கொடு. நம்பிக்கைக் காலெடுத்து நட !  உன் செயல்கள் அனைத்தும் உன்னைப் போலவே உண்மை என்று உணருவாய் ! நீ மகிழ்ச்சியோடு கூறும் நன்றி என்ற சொல்தான் உன் வாழ்வின் அர்த்தம் என்பதைப் புரிந்து கொள்வாய்.! அவள் வேலையைப் பற்றி நினைத்துப் பார்த்தாள்.! நம்பிக்கை, முயற்சி இரண்டையும் நினைக்கும்போது தன்னை அறியாமல் மீனங்காடி ஞாபகம் வந்தது.  நிச்சயமாய் அந்த மீனங்காடி பசங்கள் அனைவரும் கலைஞர்கள் தான். அதனால் தான் அவர்கள் ஒவ்வொரு நாளையும் உருவாக்குகிறார்கள்.  அப்போதுதான் அவளுக்கும் புதிதாக உதித்தது.  ‘ தானும் கூட கலைஞன் ‘ என்ற எண்ணம் . அவள் பையில் ‘ தலைவனாகும் தகுதி ‘ என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கத்தில் சொற்பொழிவுகள் அடங்கிய புத்தகம் இருந்தது. அதில் அவளது அபிமான எழுத்தாளர் ஜான் கார்டினரின்.  கட்டுரை இருந்தது. அதைப் படிக்க வேண்டி புத்தகத்தைப் புரட்டினாள் !

ஜான் கார்டினரின் கருத்துக்கள் !.

image

விதையாய் இருக்கும் மனிதன் பிஞ்சாய், காயாய், கனியாய் மாற வேண்டும்.  அதுதான் நியதி.

சிலர் மட்டும் ஏன் முளைக்காத விதையாய் இருக்கிறார்கள் !  அவர்கள் கற்றுக் கொள்வதை மறந்து விட்டவர்கள்.  வளர்வதை நிறுத்திக் கொண்டவர்கள்.

மேரி நினைத்தாள்.  தன் ஆபீஸில் நிறைய பேருக்கு அது பொருந்தும்.  ஏன் நேற்றைய மேரிக்கும் அது பொருந்தும்.  ‘ நேற்றைய மேரி ‘ என்ற நினைப்பை நினைத்து சிரித்துக் கொண்டாள்.

அப்படி அவர்கள் இருப்பதன் காரணத்தை ஆராய வேண்டும்.  ஒரு வேளை வாழ்வில் அவர்கள் பெற்ற துயரங்கள், காயங்கள் அவர்கள் நம்பிக்கையையும், தன்னம்பிக்கையையும் தகர்த்திருக்க வேண்டும்.  இல்லை என்றால் ‘ஏன் ஓடுகிறோம்’ என்பதை மறந்து ஒடுபவர்களாக இருக்க வேண்டும்.

அவர்களைக் குறை கூறவில்லை.  வாழ்க்கை கடினம். அதைத் தொடர்ந்து நடத்த தைரியம் தேவை !  அது இல்லாததால் அவர்கள் நடைப் பிணங்களாக – இயந்திரமாக வாழ்ந்து வருகிறார்கள்.  பிரெஞ்ச் எழுத்தாளர் கூறியது போல ‘ அவர்களது கடிகாரம் ஒரு கால கட்டத்தில்  ஓடுவதை நிறுத்தி விட்டது ‘.  நின்ற கடிகாரத்தை ஓடவைக்க முடியும்.

உன்னைப் பற்றி உனக்கே தெரியாத ஒரு உண்மை எனக்குத் தெரியும்,  அதுதான் உன் சக்தியின் அளவு.  நீ செய்து காட்டியதை விட பல மடங்கு சக்தி உன்னிடம் இருக்கிறது, 

கார்டினர் என்றால் கார்டினர்தான்.  என்ன அழுத்தமான கொள்கை !  எங்கள் ஆபீஸில் நிறைய கடிகாரங்களுக்கு சாவி  கொடுக்க வேண்டும்.  என்னையும் சேர்த்து என்று மேரி எண்ணிக் கொண்டாள். 

 image

அடுத்த ஒரு மணி நேரம் மேரி அவளது  நோட்டுப் புத்தகத்தில் நிறைய எழுதினாள்.  மனதிற்கு மிகவும் நிறைவாக இருந்தது.  வீட்டுக்குப் புறப்படு முன் எழுதிய குறிப்புக்களை ஒரு முறை படித்தாள்.  அதுதான் அடுத்த நாளுக்கு – அதாவது திங்கட் கிழமைக்கு வழி காட்டியாகப் போகிறது!

என் தொழிலில் எனக்கு இப்போதைய தேவை ‘ நான் தலைவி ‘ என்ற எண்ணம் !  தோல்வி வரலாம்.  துவண்டு விடக் கூடாது.  கத்தி எடுக்கப் போகிறேன்.  காயம் எனக்கே படலாம்.  ஆனால் சும்மா இருந்தால் தோல்வி நிச்சயம்.  துவக்கப் போகிறேன்.  என் முதல்படி – என்னுடைய எண்ணப் போக்கை மாற்றிக் கொள்வது.  தன்னம்பிக்கை, உண்மை, தைரியம் இவை தான் என் ஆயுதங்கள்.  நின்று கொண்டிருக்கும் கடிகாரங்களை ஓட விடப் போகிறேன்.  கார்டினர் சொன்னது போல கற்பதையும், வளர்வதையும் குறிக்கோளாகக் கொண்டு மீனங்காடியில் பார்த்துப் புரிந்து கொண்டதை வைத்து எங்கள் ஆபீஸில் அந்த குப்பை மேட்டை கோபுரமாக மாற்றப் போகிறேன் ! இது உறுதி . ‘

                        திங்கட் கிழமை காலை

image

   காலையில் அஞ்சரை மணிக்கே குழந்தைகளை எழுப்ப வேண்டியதாயிற்று.  வேறு வழி இல்லை. குழந்தைகளை சீக்கிரம் காப்பகத்தில் விட்டு வேலையை உடனே ஆரம்பிக்க வேண்டும்.  “ சாரி ! குட்டீஸ் ! இனிமே இந்த மாதிரி விடியற்காலையில உங்களை எழுப்ப மாட்டேன்.  இன்னிக்கு அம்மாவுக்கு ஆபீஸில் முக்கியமான வேலை இருக்குமா ! ப்ளீஸ் !.  தூக்கம் கலையாத குழந்தைகள் “ பரவால்லேம்மா “ என்றார்கள்.  ஜோ, சீக்கிரம் போனால்  சீக்கிரம் வீடியோ கேம் ஆடலாம் என்று சொல்லிக் கொண்டான்.

  குழந்தைகள் தலையில் செல்லமாகத் தட்டிக் கொடுத்து, அவர்களைக் காப்பகத்தில் விட்டு விட்டு ஆறு மணிக்கெல்லாம் ஆபீஸ் சென்றாள்.  சூடான காபி எடுத்துக் கொண்டு தனது இருக்கைக்குப் போனாள்.  பேப்பரை எடுத்துப் பெரிய எழுத்தில் எழுதினாள். 

                  உங்கள் எண்ணத்தைத் தேர்ந்தெடுங்கள் 

 

படிகள்

 image

 ஒன்று –    ஒரு மீட்டிங் கூப்பிட்டு மனம் விட்டுப் பேச வேண்டும்.

 இரண்டு –   எல்லோருக்கும் புரிகிற மாதிரி ‘ உங்கள் எண்ணத்தைத் தேர்ந்தெடுங்கள் ‘என்ற செய்தி தயார் செய்ய வேண்டும்.

 மூன்று –   எல்லோரையும் ஊக்குவிக்க வேண்டும்.

 நான்கு –    நம்பிக்கையோடு உறுதியாகவும் இருக்க வேண்டும்.

 அடுத்தது –  மிகவும் கடினமான செயல். ‘ அவர்களிடம் எப்படிப்  பேசப்  போகிறேன் ?’ மனதில் தோன்றிய கருத்துக்களைப் பேப்பரில் எழுதினாள்.!

  திங்கட் கிழமைகளில் மக்கள் இரண்டு ‘ஷிப்டில் ‘ வருவார்கள்.  முதல் குரூப் அவளுடன் மீட்டிங்கில் இருக்கும் போது அடுத்த குரூப் வேலையைப் பார்ப்பார்கள்.  அப்புறம் அடுத்த குரூப்போடு மீட்டிங்.

  முதல் குரூப் வந்து சேர்ந்தது.  மீட்டிங் துவங்கியது.  வழக்கமாக அவர்கள் ‘ இது சரியில்லை  அது சரியில்லை ‘என்ற குற்றம் குறைகளுடனே ஆரம்பிப்பார்கள்.  அவர்கள் அனைவரையும் ஒரு முறை ஆழமாகப் பார்த்தாள்.  அனைவரும் நல்லவர்களாகவே தோன்றியது.  அவள் நெஞ்சு ‘ பட பட ‘ என்று அடித்துக் கொள்வது அவளுக்கே கேட்டது.  எல்லோரும் மேரியையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.  இப்படி ஆரம்பித்தது……

  மேரியின் விளக்கம்

image

      “ இன்று மிக மிக முக்கியமான விஷயத்தைப் பற்றி நாம் ஆலோசனை செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.  நமது சேர்மேன் ஒரு கருத்தரங்கிற்குப் போய் விட்டு வந்த பிறகு நமது கம்பெனி இன்னும் சக்தி வாய்ந்த, சுறு சுறுப்பான, துடிப்பான கம்பெனியாக மாற வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்.  எந்தக் கம்பெனியின் வெற்றிக்கும் அவை தான் திறவு கோல்கள். ! அவர் நமது கம்பெனி மேலதிகாரிகளிடம் நமது செயல்பாடுகளைப் பற்றி விவாதித்தாராம்.  அந்த விவாதத்தில் நமது டிபார்ட்மெண்டைப் பற்றி என்ன கூறினார் தெரியுமா ? ‘ குப்பைத் தொட்டி ‘ ஆமாம்  ‘ குப்பைத் தொட்டி தான் ‘ என்று மிகவும் வருத்தத்தோடு கூறிக் குறைப் பட்டுக் கொண்டாராம்.  நாம் வேலை செய்கிற – நமக்குச் சொந்தமான டிபார்ட்மெண்டைப் பற்றி கூறப்பட்ட வார்த்தை ‘ குப்பைத் தொட்டி ‘ ! அதை சரி படுத்துவது, மாற்றுவது தான் நமது முக்கியமான் கடமை ! வேலை ! இல்லையா ?”

      மக்கள் முகத்தில் எந்தவித சலனமும் இல்லை.  மேரி ஒவ்வொருவராக அனைவரையும்உற்றுப் பார்த்தாள்.  ஆனந்த் எழுந்து நின்றான் – ரொம்பவும் சீனியர் அவன்.  “ இந்த வேலையை வேறு யாரையாவது செய்யச் சொல்லுங்கள் ! அப்போ புரியும் இது எவ்வளவு வெறுப்பான, போரான வேலை என்று. சுறு சுறுப்பு இருந்தா என்ன இல்லாட்டா என்ன ? வேலை எப்படியும் நடக்குதில்லே?  வேலை செய்யாமல் சும்மாவா உட்கார்ந்திருக்கோம் ?”

      குப்பைத் தொட்டி என்று சேர்மனே சொன்னாரே என்று யாரும் கவலைப் பட்டது மாதிரி தெரியவில்லை.  மற்றவர்கள் சொல்லிக் கேட்டுக் கேட்டுப் பழகி விட்டது போலும்.

      மேரி தொடர்ந்தாள்.

      “ இது இத்தோட முடியற சமாசாரம் இல்லை ! சேர்மன் அவருக்கு இருக்கும் ஆயிரம் வேலைகளில் இதை மறந்திடலாம். பிரசாத் கூட விட்டு விடலாம்.  ஆனால் நான் இதை இப்படியே விட்டு விடத் தயாரா இல்லை.  இந்த ‘ குப்பைத் தொட்டி ‘ என்ற வார்த்தையை, நமது டிபர்ட்மெண்டைப் பற்றி சொன்ன விதத்தை என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை.  மற்ற டிபார்ட்மெண்ட் மக்கள் நம்மைப் பற்றிக் கேவலமாகப் பேசுகிறார்கள். ஜோக் அடிக்கிறார்கள். நம்மிடம் பேசப் – பழகத் தயங்குகிறார்கள் ! அவர்களைக் குறை கூறுவானேன் ?  நம்மில் யாருக்கு இங்கே வேலை செய்யப் பிடிக்கிறது ?  நாமும் இதைக் ‘ குப்பைத் தொட்டி ‘ என்று தானே நினைக்கிறோம்.! இதை எப்படியாவது மாற்ற வேண்டும் என்று நான் இன்றைக்கு உறுதி எடுத்துக்கிட்டேன் ! ஏன் தெரியுமா ?”

      ஒரு மாதிரி பார்த்துக் கொண்டிருந்தவர்கள் இப்போது ஆச்சரியத்துடன் மேரியைப் பார்க்க ஆரம்பித்தார்கள்.  யாரும் பேசவில்லை, முணுமுணுக்கவில்லை. பயங்கரமான அமைதி நிலவியது. 

      “ உங்க எல்லாருக்கும் என் சோகக் கதை தெரியும்.  நானும் ஜானும் இரண்டு குழந்தைகளுடன் எப்படி கனவுகளுடனும் ஆசைகளுடனும் இந்த ஊருக்கு வந்தோம் என்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும்.  ஜானின் திடீர் மறைவு என்னை தனியாளாக மாற்றி விட்டது.  ஜானின் இன்சூரன்ஸ் பணம் அவரது ஆஸ்பத்திரி செலவிற்குப் பத்தலை.  அதனால் நான் மிகப் பெரிய பொருளாதார நெருக்கடியில் இருக்கிறேன்.

      இதற்கும் ஆபீசுக்கும் என்ன சம்பந்தம் என்று நீங்கள் கேட்கலாம்.  இது என்னை எப்படிப் பாதிக்கிறது என்பது உங்களுக்குத் தெரியாமலும் இருக்கலாம்.  உங்களில் சில பேர் என்னை மாதிரி தனித்து இருந்து குழந்தைகளைக் காப்பாற்றி வருகிறீர்கள். அவர்களுக்குப் புரியும் நான் சொல்வதன் அர்த்தம்.  புரியும்படி சொல்கிறேன் ! எனக்கு இந்த வேலை மிக மிக அவசியம் !சமீப காலங்களில் என் திறமை குறைந்து விட்டது போல ஒரு உணர்வு.  அலை போகிற வேகத்தில் நானும் போனேன்.  வேலை போய் விடக் கூடாதே என்ற பயத்தில்.  இப்போது அந்த வேலைக்கே உலை வைபப்து போல் ஆகி விட்டது நான் சென்று கொண்டிருக்கும் பாதை ! இன்றிலிருந்து இதெல்லாம் பழங் கதையாகப் போகிறது.!

      இன்று தான் இதன் கடைசி எல்லை.! எனக்கு இந்த வேலை எவ்வளவு முக்கியம் என்பது பற்றிச் சொன்னேன்.  ஆனால் அதற்காக என் வாழ்க்கையை, வருங்காலத்தை ஒரு ‘ குப்பைத் தொட்டியில் ‘ கழிக்க விரும்பவில்லை.  குடும்பத்தைப் பற்றி, குழந்தைகளைப் பற்றிய பயம் இந்த நிமிடத்திலிருந்து என்னை விட்டுப் போய் விட்டது.  வாழ்க்கையில் சாதிக்க வேண்டியது எவ்வளவோ இருக்க ஏன் அவற்றைக் கண்டு பயந்து ஓட வேண்டும்? நாம் ஆபீஸில் அதிக நேரம் செலவழிக்கிறோம். அதை ஏன் வீனடித்துக் கொள் வேண்டும் ?  நாம் இருக்கிற இடத்தை – வேலை செய்யற இடத்தை – சந்தோஷமான இடமாக மாற்ற வேண்டும் – மாற்றப்பட வேண்டும் என்று உறுதியாக நம்புகிறேன் !

 image

      ஒரு நல்ல சேதி !  நான் ஒரு அலுவலக ஆலோசரை சந்தித்தேன். இந்த வேகம், விவேகம், சுறு சுறுப்பு, ஜாலி, சக்தி இவை எல்லாவற்றிலும் திறமையானவர்.  உலகப் புகழ் பெற்ற அலுவலகத்தில் இருக்கிறார்.  நீங்கள் எல்லோரும் விரைவில் அவரைச் சந்திக்கப் போகிறீர்கள் !  அவர் சொன்ன முதல் அறிவுரை என்ன தெரியுமா ?

                  “ உங்கள் எண்ணத்தைத் தேர்ந்தெடுங்கள் “

      மேரி இன்னும் விளக்கமாக எப்படி இந்த எண்ணத்தைத் தேர்ந்தெடுப்பது என்பது பற்றி சொன்னாள்.  விளக்கமாகவே சொன்னாள். கடைசியில் ‘ஏதாவது சந்தேகம் இருந்தால் கேட்கலாம் ‘ என்று அவர்களின் பதிலுக்காகக் காத்திருந்தாள்.

      சுரேஷ் கையைத் தூக்கினான்! மேரி  தலை  அசைத்ததும் பேசத் தொடங்கினான். “ ஒரு கேள்வி ! நாம் பைக் ஓட்டிக்கொண்டு போகும்போது ஒரு மடையன் திடீரென்று குறுக்கே ஓடினால் அவனை  இறங்கி நாலு அறையாவது அறையாமல் போக முடியுமா ! இந்த இடத்தில் நான் எந்த எண்ணத்தைத் தேர்ந்தெடுப்பது ? “

      “ சுரேஷ் ! நான் ஒரு பதில் கேள்வி கேட்கிறேன் ! ரௌடிகள் இருக்கிற குப்பத்துப் பக்கம் போகும்போது இப்படி நடந்தா உன்னால தைரியமா இறங்கி அடிக்க முடியுமா !”

      “ ஐயய்யோ ! அவங்க நம்மை சட்னி ஆக்கிடுவார்கள் .”

      ‘ அங்கே வித்தியாசம் தெரியுதல்ல ! அங்கே வேற மாதிரி நடந்துக்கிறோம்.  அது மாதிரி தான் பய உணர்ச்சி இருந்தால் எல்லா இடத்திலும் ஒரேமாதிரி எண்ணத்தைத் தேர்ந்தெடுக்கலாம்.

      “ ஓகே ! மேடம் ! நான் ஒப்புக்கிறேன் !”  

      “ சுரேஷ் ! இதை விட சரியான கேள்வியைக் கேட்க முடியாது ! இன்னொரு சமாசாரம் . மத்தவங்க பைக் ஓட்டுவதை நம்மால் மாற்ற முடியாது.  ஆனால் நாம் எப்படி நடந்துக்கணும் என்பதை மாத்திக்க முடியும்.  புரியலையா ?  நம்ம கம்பெனியில் எந்த வேலையை யார் பார்க்கணும் என்பதை நம்மால் தீர்மானம் பண்ண முடியாது.  ஆனால் இந்த வேலையை – நம்ம வேலையை – இப்படித் தான் செய்யணும் என்பதை நம்மால் தீர்மானம் பண்ண முடியும் ! புரியுதில்லே ? நீங்கள் எல்லோரும் இதைப் பற்றி தீவிரமா யோசியுங்கள் ! பிறகு முடிவெடுப்போம்  நமது எதிர்காலம் இதைப் பொறுத்துத் தான் இருக்கப் போகிறது.!  குட் லக் !”

      அடுத்த ‘ ஷிப்ட் ‘ மீட்டிங்கும் கிட்டத்தட்ட இதே மாதிரி தான் நடந்தது.  யாரும் எதுவும் கேட்காதபோது சுரேஷ் எழுப்பின அதே கேள்வியை  உதாரணமாக வைத்தாள்.  காலை மணி பத்தரை வரை மீட்டிங் போயிற்று.  மிகவும் சோர்வாக இருந்தாலும் மனதளவில் தனது கருத்தைத் தேர்ந்தெடுக்க நல்ல சந்தர்ப்பம் அமைந்தது குறித்து மிகவும் சந்தோஷப் பட்டாள். !

 image

      ஒரு வாரம் ஓடியது.  மேரி வழக்கம் போல தினமும் எல்லா இடங்களுக்கும் போனாள்.  நடுவில் சுரேஷைப் பார்த்தாள்.

      “ மேடம் ! அன்னிக்கு மீட்டிங்கில் என்னைக் கிழிச்சிட்டீங்க !”

      “ சாரி ! சுரேஷ் ! நான் சொன்னது தப்பாப் பட்டுதா?”

      “ மேடம் ! நீங்க எனக்குப் பெரிய உதவி செஞ்சீங்க ! என்னுடைய சொந்த வாழ்க்கை சமீபத்தில் கன்னா பின்னான்னு போயிக்கிட்டிருக்கு.  நீங்க எனக்கு ஞாபகப் படுத்தினீங்க ! என் முடிவுகளை நான் தான் எடுக்க வேணும்னு ! அதை எடுக்க எனக்கு தைரியம் தான் வேண்டியிருக்கு ! “

      “ தைரியமா ? புரியலையே !”

      “ என் வாழ்க்கை திசை மாறி ஓடிக்கிட்டிருக்கு.  நான் அதை சரி செய்ய ஏதாவது செய்யணும்.  எல்லோரும் என்னைப் பழி வாங்கறாங்க என்று நினைச்சு எந்த பிரயோசனமும்இல்லை.  பிரச்சனையை சந்திக்கணும்.  அதை விட்டு ஓடிப் போறதில எந்த பலனும் இல்லே என்பதை அன்றைக்கு புரிஞ்சிக்கிட்டேன். பொதுவா சொல்றேனேன்னு நினைக்காதீங்க ! இது என் சொந்த – பர்சனல் வாழ்க்கை.”

      எல்லாம் சரியாப் போயிடும் சுரேஷ் ! நம்பிக்கை இருந்தாப் போதும். என்னை நம்பி இதைச் சொன்னதற்கு ரொம்ப நன்றி சுரேஷ் .”

      “ மேடம் ! நாங்கள் எல்லோரும் உங்களை நம்பறோம் ! நீங்களே பாருங்கள் ! எங்கள் வேலை எல்லாம் எவ்வளவு போராயிருக்கு ! அதனால் தான் ஏகப்பட்ட குற்றச் சாட்டுக்கள் !  எங்க கூட எல்லோரும் மோத வருவது போல ஒரு உணர்ச்சி !  இதை மாத்த எந்த முயற்சி வேணும்னாலும் எடுங்க ! அதைச் செய்யற முதல் ஆளாய் நான் இருப்பேன் “.

      ஆச்சரியமாக இருந்தது மேரிக்கு ! இப்படி எல்லாம் பாராட்டு கிடைக்கும் என்று எதிர் பார்க்கவே இல்லை. மக்கள் எல்லோருக்கும் என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தாலும் ‘ நாம வேலை செய்யற இடத்திலே சந்தோஷம் இருக்கணும்’ என்ற கருத்து எல்லோருக்கும் பிடிச்சிருக்கு.  ஆனால் வெளிப்படையா எதுவும் நடக்கலை!

      அடுத்த வெள்ளிக் கிழமையன்று அது நடந்தது.! மேரி தனது மூணாம் மாடி ஆபீஸுக்கு லிப்டில் இருந்து வெளியில் வந்தாள்.! அங்கே கண்ணை உறுத்துவது போல மிகப் பெரிய போஸ்டர் !

மீனங்காடி

image

மாற்றத்திற்கு முதல்படி தைரியம் 

      அடுத்த இரண்டு நாளைக்கும் மேரிக்கு ஆபீஸில் சரியான வேலையாக இருந்தது. அப்படிச் சொல்லித் தப்பித்துக் கொள்ளப் பார்த்தாள். ஆனால் அவள் எண்ணம் முழுவதும் ‘ டோனி ‘ சொன்ன ‘ எண்ணத்திலேயே ‘ இருந்தது.  அவனோட பேசும்போது  மீனங்காடியின் தத்துவம் சரி என்று தோன்றினாலும் இடை இடையே நிறைய சந்தேகமும் வந்து கொண்டிருந்தன. ‘ சந்தேகம் வரும்போது அதைப் பற்றி நிறைய தகவலைத் தேடிக் கண்டுபிடி ‘ என்று அவள் பள்ளிக்கூட ஆசிரியர் சொன்னது ஞாபகம் வந்தது. வெள்ளிக் கிழமை பாஸ் பிரசாத்துடன் இதைப் பற்றிப் பேச வேண்டும் என்று முடிவு செய்தாள். போனை எடுத்தாள். 

 “ பிரசாத் ! நம்ம சேர்மன் சொன்னபடி மக்களை உற்சாகத்தோடு வேலை செய்ய வைக்க என்ன செய்யலாம்”  உங்கள் யோசனையைச் சொல்லுங்களேன் “ – நிதானமாகத் தான் கேட்டாள் மேரி !

 “ என்னது ! உற்சாகத்தோடு வேலை செய்ய வைக்கிறதா? அதெல்லாம் புதுக் கம்பெனிகளுக்குத்  தான். அது இதுன்னு உன் நேரத்தை ஏன் வீணடிக்கிறே” “

மேரிக்கு ஆத்திரம் வருவது போல் இருந்தது. மெல்ல பல்லைக் கடித்துக் கொண்டாள்.

 “ இதோ பாருங்கள் பிரசாத் ! இந்த வேலையை நான் எடுத்துக் கொண்ட போதே நம்ம ரெண்டு பேருக்கும் நல்லாத் தெரியும். இதில் நாம நிறைய செய்ய வேண்டியிருக்கும் என்று. இப்போ அது ரொம்பத் தீவிரமா போய்க் கொண்டிருக்கு ! நீங்க என் பாஸ் ! என்னை விட உங்களுக்குத்தான் இதை சரி செய்யற பொறுப்பு, அக்கறை இருக்கணும்.  நீங்க எனக்கு உதவப் போகிறீர்களா? இல்லை முட்டுக் கட்டை போடப் போகிறீர்களா? “

 மேரிக்குத்  தன்னையே நம்ப முடியவில்லை. ‘ நாமா இப்படித் தைரியமாகப் பேசினோம் ‘  என்று. பேசின பிறகு ரொம்ப நன்றாகவே இருந்தது.

 பிரசாத் அனுபவசாலி. பனங்காட்டு நரி. இந்த மாதிரி யாராவது எதிர்த்துப் பேசினால் அவருக்குக் கோபம் வராது. சந்தோஷமாக இருக்கும். ‘ சரி! சரி ! மேரி ! கவலைப்படாதே ! சேர்மன் அந்த கருத்தரங்கில் கலந்துக்கிட்டபோது எடுத்த டேப் எங்கிட்டே இருக்கு. எனக்கு அதைக் கேட்க நேரமில்லை. நீ அதைக் கேட்டுட்டு அதோட முக்கிய கருத்து என்ன என்று எனக்குச் சொல்லு !”

 “ சரி சார் ! நான் வந்து வாங்கிக்கறேன் .”

image

                       நெஞ்சம் நிறைந்த பயணம்

காரில் போய்க் கொண்டிருந்தாள் மேரி.  சரியான டிராபிக்.  ‘ பம்பர் டு பம்பர் ‘ இருந்தது. ஆனாலும் அவளுக்கு நேரம் போவதே தெரியவில்லை.  தன்னைப் பற்றியே யோசித்துக் கொண்டு போய்க் கொண்டிருந்தாள். ‘ எப்போ எனக்கு என்மேல நம்பிக்கை போச்சு?  ரெண்டு வருஷம் இருக்குமா? அது எப்படி திரும்ப வந்தது?  இந்த ரெண்டு வருஷத்திலே மேலதிகாரிகிட்டே இவ்வளவு அழுத்தம் திருத்தமா பேசினது இது தான் முதல் தடவை. அவளுக்கு அவளையே பிடித்திருந்தது. மனதின் அடித்தளத்தில் சந்தோஷமும் எட்டிப் பார்த்தது.  ‘ சரி ! சரி ! ரொம்ப கொண்டாடாதே ! பாஸ் கொடுத்த டேப்பைக் கேளு ‘ என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டாள்.

காரின் ஸ்டீரியோ ஸ்பீக்கரில் கேசட்டின் சப்தம் துல்லியமாகக் கேட்டுக் கொண்டிருந்தது.  ஆரம்பமே ஒரு நம்பிக்கையை ஊட்டுற பாட்டு ! தனக்காகவே எழுதியது போலவே இருந்தது.

image

பா. விஜய்யின் ‘ ஆட்டோகிராப் ‘ பாட்டு ! என்ன சுகமான அன்பான ஆணித்தரமான பாட்டு.

ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே !  
வாழ்க்கை என்றால் போராடும் போர்க்களமே !        
ஒவ்வொரு  விடியலுமே சொல்கிறதே !
இரவானால் பகல் ஒன்று வந்திடுமே !

நம்பிக்கை என்பது வேண்டும் நம் வாழ்வில் !
லட்சியம் நிச்சயம்  வெல்லும் ஒரு நாளில்

மனமே ! ஓ ! மனமே ! நீ மாறி  விடு !
மழையோ அது பனியோ நீ மோதி விடு

உள்ளம் என்றும் எப்போதும் உடைந்து போகக் கூடாது.
என்ன இந்த வாழ்க்கை என்று எண்ணம் தோன்றக் கூடாது
எந்த மனிதன் நெஞ்சுக்குள் காயம் இல்லை சொல்லுங்கள்
காலப் போக்கில் காயம் எல்லாம் மறைந்து போகும்                                                                                                             மாயங்கள்
உளி தாங்கும் கற்கள் தானே மண் மீது சிலையாகும்
வலி தாங்கும் உள்ளம் தானே நிலையான சுகம் காணும்
யாருக்கில்லை போராட்டம் கண்ணில் என்ன நீரோட்டம்
ஒரு கனவு கண்டால் அதை தினமும் கண்டால்
ஒரு நாளில் நிஜமாகும்.

மனமே ! ஓ ! மனமே ! நீ மாறி விடு !
மழையோ அது பனியோ நீ மோதி விடு !

ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
வாழ்க்கை என்றால் போராடும் போர்க்களமே !

வாழ்க்கைக் கவிதை வாசிப்போம் !
வானம் அளவு யோசிப்போம் !
முயற்சி என்ற ஒன்றை மட்டும்
மூச்சு போல சுவாசிப்போம் !

லட்சம் கனவு கண்ணோடு லட்சியங்கள் நெஞ்சோடு

உன்னை வெல்ல யாருமில்லை  உறுதியோடு போராடு !

மனிதா உன் மனதைக் கீறி விதை போடு மரமாகும்
அவமானம் தடுத்தால் நீ எல்லாமே உறவாகும்
தோல்வி இன்றி வரலாறா ! தூக்கம் என்ன என் தோழா ?
ஒரு முடிவிருந்தால் அதில் தெளிவிருந்தால்
அன்றே வானம் வசமாகும்

மனமே ஓ மனமே நீ மாறி விடு !
மழையோ அது பனியோ நீ மோதி விடு !

மேரியின் நெஞ்சம் விம்மியது.  எனக்காகவே எழுதிய பாட்டா இது?’ மாணவன் தவிக்கும்போது ஆசிரியர் தானே தேடி வருவார் ‘ என்ற பொன்மொழி எவ்வளவு உண்மை ! ஒவ்வொரு வார்த்தையுமே நம்பிக்கை இழந்த எனக்காகவே எவ்வளவு அழகாக ஆணித்தரமாக இருக்கிறது.  நான் எப்படி இப்படிப் போனேன்? ஜானின் திடீர் மறைவு – இரண்டு குழந்தைகளைக் காப்பாற்றும் பொறுப்பு – இவையா என்னை – என் நம்பிக்கையை பயமுறுத்துகின்றன? தோற்று விட்டால் குழந்தைகளின் எதிர்காலம் என்னவாகும் என்ற பயம் தானே என்மீது படர்ந்து இருக்கிறது !

image

இந்த வேலையை விட்டு புது வேலை தேடலாம்.  ஆனால் அது ஆபத்தானது. வேலை கிடைக்கத் தாமதமாகலாம். இருக்கிற வேலையும் போகலாம் ! சரி ! வேலையை விடாமல் இதையே தொடர்ந்து செய்து வந்தால் என்ன ஆகும்?  அப்போதும் வேலை போகலாம். அதுக்காக உயிரே இல்லாத ஒரு வேலையில் மரக்கட்டை மாதிரி கிடப்பதற்கு அவள் தயாராக இல்லை.  மீறி மீறிப் போனால் என்ன நடக்கும்? வருங்காலம் எப்படி இருக்கும் என்று ஊகிக்கவே முடியவில்லை. ‘

இப்படியே ஏனோ தானோ என்று வாழும் வாழ்க்கை என்ன வாழ்க்கை? என் குழந்தைகளுக்கு நான் ஒரு உதாரணமாக இருக்க வேண்டாமா?  தீர்மானித்து விட்டாள். திங்கட்கிழமை புது முயற்சி ஆரம்பிக்கப் போகிறேன். முதல் வேலை என்னுடைய எண்ணத்தை மாற்றிக் கொள்ளப் போகிறேன். நம்பிக்கையை வளர்த்துக் கொள்ளப் போகிறேன்.  என்ன நடந்தாலும் நன்றாகவே இருக்கும் என்ற நம்பிக்கையை வளர்த்துக் கொள்ளப் போகிறேன்.

 ‘ எனக்குத் திறமை இருக்கிறது ! நிறைய இடங்களில் அதை நிரூபித்துக் காட்டியிருக்கிறேன். எதையும் என்னால் சிறப்பாகச் செய்ய முடியும்.  மனதிலே தோன்றுகிற பயத்தை வேரோடு பிடுங்கி எறியணும். வாழ்க்கையை ஓட்டறதுக்காக இல்லை. அது சிறப்பா அமையணும் என்பதற்காக இதைச் செய்யணும். சோதனையில் வெற்றி பெறணும் என்பதிற்காக அல்ல.  வாழ்வில் வெற்றி பெறணும் என்பதற்காக இதைச் செய்ய வேண்டும்.  என்மீது எனக்கு நம்பிக்கை  வளர இதுதான் சரியான வழி !

மனமே ! ஓ ! மனமே ! நீ மாறி விடு !
மழையோ அது பனியோ நீ மோதி விடு !

குழந்தைகள் காப்பகத்தில் காரை நிறுத்தியதும் கீழே இறங்காமல் தனது நோட்டுப் புத்தகத்தையும் பேனாவையும் எடுத்துக் காரிலேயே எழுதத் தொடங்கினாள்.!

 ‘ விலை மதிப்புள்ள வாழ்க்கையை
  விழித்திருக்கும் பாதி நாட்களை
  குப்பைத் தொட்டியில் போடுவதா?’

இப்படித்தானே என் கீழே வேலை செய்யும் அனைவரும் எண்ணுவார்கள். இந்த மூன்றாம் மாடிக்கென்று ஒரு தனி கலாசாரம் ஆண்டாண்டு காலமாய் இருந்து வருகிறது.!
அதை நான் உடைக்கப் போகிறேன் ! என்ன துன்பம் வந்தாலும் சரி !

சமீபத்திய நிகழ்வுகள் என் நம்பிக்கையைக் குலைத்திருக்கலாம் !

நன்மையில் முடியும் என்ற எண்ணத்தோடு நம்பிக்கையைப் புதுப்பிக்கப் போகிறேன் !

ஒன்றும் செய்யாமல் அழிவதை விட திருப்தியாகச் செய்து அழிவு வந்தால் அது அழிவே இல்லை !  

‘போருக்குத் தயார்!  கத்தியைத் தீட்டி விட்டேன் ‘ காரின் கதவைத் திறந்து புது உற்சாகத்தோடு குழந்தைகளை அழைத்துச் செல்லக் காப்பகத்தில் நுழைந்தாள்.

image

:” ஏம்மா ! உன் கண் கலங்கியிருக்கு ! அழுதியா? “
 ‘ ஜோ ‘ கிட்டே எதையும் மறைக்க முடியாது. “ ஆமாண்டா கண்ணா ! அழுதேன் அது ஆனந்தக் கண்ணீர்.”
“ அப்படீன்னா?”
“ அது இருக்கட்டும் ! நீங்க எப்படி இருந்தீங்க ?”
 “ அம்மா ! அம்மா ! நான் நம்ம குடும்பப் படம் வரைஞ்சேன். மிஸ் கூட நல்லா இருக்குன்னு சொன்னாங்க ! காட்டட்டுமா?”
“ காட்டேன் “
நாலு பேரை வரைந்திருக்கிறாள்.  கடவுளே ! என் நம்பிக்கைக்கு இப்படி சோதனையா? பெருமூச்சு விட்டாள்.
“ வா ! ஜோ ! ஜேனையும் கூட்டிக்கொண்டு வீட்டுக்குப் போகலாம்!

(தொடரும்)

மீனங்காடி (ஒன்பதாவது வாரம்)

               எண்ணத்தைத் தேர்ந்தெடுங்கள்    

image

மேரி தனது நோட்டுப் புத்தகத்தை எடுத்து எழுதத் தொடங்கினாள்.

‘எந்த வேலையைச் செய்வது என்ற முடிவு நம் கையில் இல்லை.  ஆனால் எந்த வேலையை எப்படிச்  செய்வது என்ற முடிவு நிச்சயமாக நமது கையில் தான் இருக்கிறது. ‘

image

மேரி யோசித்தாள்.  ‘ ஏன் எந்த வேலையைச் செய்வது என்ற முடிவு நம் கையில் இல்லை?

 ‘சரியான கேள்வி மேரி ‘

 நாம் வேலையை எப்போது வேண்டுமானாலும் விட்டு விடலாமே !  அந்த வகையில் பார்த்தால் முதல் கருத்துக்கான முடிவு நம் கையில் தானே இருக்கு .  ஆனால் அது புத்திசாலித்தனமாகுமா ? நமக்குக் கிடைத்த வாய்ப்பையும், திறமையையும் நழுவ விடுவது போல அல்லவா அமையும் !  அதனால் தான் மறுபடி சொல்கிறேன். வேலையைத் தேர்ந்தெடுக்கிற முடிவு நம் கையில் இல்லை.  ஆனால் கிடைத்த வேலையில் நாம் கொண்டு வருகிற ஆர்வம், முயற்சி , கவனம் எல்லாம் நம்ம கையில் தான் இருக்கு. ‘

டோனி தொடர்ந்தான். “ நான் ஒரு பாட்டி கதை சொல்றேன் !  என் பாட்டி எப்போதும் சந்தோஷத்தோடு தான் எல்லா வேலையையும் செய்வாள்.  நாங்களும் வீட்டிலே  அவளுக்கு  ஒத்தாசையா தட்டு கழுவறது,  பாத்திரம் எடுத்து வைக்கிறது இந்த வேலையெல்லாம் ஜாலியா செய்வோம்.   அதுக்குக் காரணம்   பாட்டியோட ஈடுபாடு.  ஒரு குஷி ! ஒரு விளையாட்டு போல இருக்கும். எங்கள் வீட்டு அடுப்படி தான் எங்கள் விளயாட்டு மேடை.  இப்ப புரியுது. பாட்டிக்குப் பாத்திரம் தேய்க்கிற வேலையெல்லாம் பிடிக்காமல் இருந்தாலும் அதை ஜாலியா செய்யும்படி தன்னை மாத்திக்கிட்டு மத்தவங்களையும் ஜாலியா செய்ய வைத்தாள் . 

image

அந்த மாதிரி தான் நானும் என் நண்பர்களும் இந்த மீனங்காடியில் ஒவ்வொரு நாளும் ஒரு புது உற்சாகத்தைக் கொண்டு வருகிறோம்.  சோகமா  வந்து ஏனோ தானோ என்று வேலை செய்வதில் யாருக்கு லாபம்?  அதுக்குப் பதிலா சந்தோஷமா – குஷியா –  ஜாலியா வேலை செஞ்சா ஒவ்வொரு நாளும் மிகப் பெரிய நாளாக இருக்கும்.  இந்த எண்ணத்தைப் பற்றி நாங்கள் அடிக்கடி பேசுவோம்.  ஒவ்வொரு நாளும் சிறப்பான நாளாய் அமைய இந்த ‘ எண்ணம்  ‘ ஒன்று இருந்தால் போதும்.  நான் சொல்வது சரி என்று உனக்குப் படுகிறதா? “

“ நிச்சயமா “

எங்களுடைய எண்ணங்களைப் பற்றி நினைக்கும்போது எங்களுக்கே ரொம்பப் பெருமையாக இருக்கு.  உலகமே எங்கள் ஆர்வத்தைப் பார்த்து ஆச்சரியப் பட வேண்டும் என்று முடிவெடுத்தோம். இப்படி முடிவு எடுத்த பிறகு ஒவ்வொரு நாளும் குஷி நாள் தான்.  சாதாரண நாள் என்ற பேச்சுக்கே இடமில்லை.  நான் சொல்வது உனக்குப் புரியுதா?  மீன் கடை வேலை என்பது ஈரம், குளிர், நனைந்த உடை, நாற்றம், வழுக்கல்  எல்லாம் கலந்த கஷ்டமான வேலை.  ஆனால் அந்த வேலையில் எப்படி எங்கள் எண்ணத்தைக்  கொண்டு வந்தோம் என்பதுதான் எங்கள் வெற்றி.”

“ புரியுது டோனி!  ஒவ்வொரு நாளும் ஆர்வத்தோடு வேலை செய்கிறீர்கள். அந்த எண்ணம் தான் உங்க வேலையை எப்படிச் செய்ய வேண்டும் என்று தீர்மானிக்கிறது.  நாம் செய்யற வேலையை ஏன் சாதாரணமாகச் செய்யணும்?  உலகமே பாராட்டுற அளவிற்குப் பெரிசா செஞ்சா எவ்வளவு நல்லா இருக்கும்? ரொம்ப சரியாய்ப் படுது டோனி!”

image

“ புரிந்து கொள்வது சுலபம் மேரி!  ஆனால் செய்யறது அவ்வளவு ஈஸி கிடையாது. ஒரே நாளிலே இந்த மாதிரி  மாத்திக்க  முடியாது.  எங்களுக்குக்  கிட்டத்தட்ட ஒரு வருஷம் ஆச்சு.  நான் சொன்னேன் இல்லே?  முன்னாடி நானும் சொந்த வாழ்க்கையை வேலையோடு போட்டுக் குழப்பி நானும் குழம்பிக்கிட்டிருந்தேன். உலகமே என் கிட்டே மோசமா நடந்துக்கிற மாதிரி ஒரு எண்ணம்.  அதைப் பழி வாங்க நானும் மத்தவங்க கிட்டே படு மோசமா நடந்து கொண்டிருந்தேன்.  ஒரு பெரியவர் என்னைத் தனியா கூப்பிட்டு அறிவுரை சொன்னார்.  “ ஏன் இப்படி வெறுப்போடு வேலை செய்யறே?  விருப்பத்தோடு , அதுக்கு மேலே ஆர்வத்தோடு அதுக்கும் மேலே எண்ணத்தோடு செய்!  சொர்க்கமே உன் காலடியில் கிடக்கும்” என்று.  நானும் தீவிரமா யோசித்துப் பார்த்தேன். ‘நாம் ஏன் அவர் சொன்னபடி மாறக் கூடாது? ‘ என்று.  அவர் சொன்ன விதத்திலே, வார்த்தைகளிலே எனக்கு  முழு நம்பிக்கை பிறந்தது.  மனிதன் தன் எண்ணத்தைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள முடியும் என்ற தத்துவத்தைக் கண்டு கொண்டேன்.”

image

மேரிக்கு டோனியின் பேச்சு மட்டுமல்ல, அவனையும் ரொம்பப் பிடித்து விட்டது.  பகல் கனவில் ஆழ்ந்து கொண்டிருந்த அவள் சட்டென்று விழித்துக் கொண்டாள் .  டோனி அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.  “ சரி டோனி! நானும் நிச்சயமாய் முயற்சிப்பேன் !  இந்த வெற்றிக்கு ‘ எண்ணத்தைத் தேர்ந்தெடுங்கள் ‘ என்ற ஒரு மருந்து தானா? இல்லை, இன்னும் வேறு மருந்து இருக்கா? – ஆர்வத்தோடு கேட்டாள் மேரி.

“ இந்த வெற்றிக்கு  மொத்தம் நாலு  காரணம் கண்டு பிடிச்சோம்.  இந்த ‘ எண்ணத்தைத் தேர்ந்தெடுங்கள்’  தான் ரொம்ப ரொம்ப முக்கியம்.  இது இல்லாமல் மற்றது எல்லாம் இருந்தும் பிரயோஜனமில்லை. இன்னிக்கு இத்தோட  நிறுத்திக்குவோம்.  மற்ற மூன்றையும் அப்புறம் பார்த்துக்கலாம்.  உனக்கு எப்போ நேரமிருக்கிறதோ அப்போ கூப்பிடேன்.  நாம் பேசலாம். என்  போன் நம்பர் தெரியுமில்லையா? “

“ உங்க மீனங்காடியில தான் ஒவ்வொரு மூலையிலும் பெரிது பெரிதாக எழுதி வைத்திருக்கிறீர்களே !

ஆமாமில்லே! நாங்க ஏன் வெட்கப்படணும்? உன்னை சந்தித்ததிலே ரொம்ப சந்தோஷம் மேரி ! மீண்டும்  பார்க்கலாம்.”

(தொடரும்) 

மீனங்காடி ( எட்டாவது வாரம்)

image

“நிச்சயமா ! ஆனால் நீங்கள் ஏன் எங்களுக்காக இதைச் செய்யணும்?” மேரி கேட்டாள்.

டோனி மெதுவாகச் சொல்லத் தொடங்கினான்.

“ மேடம் ! என் வாழ்க்கையில் இந்த ‘மீனங்காடி’ ஒரு திருப்பு முனையா அமைந்தது என்றால் தப்பில்லை. என்னைப் பற்றிச் சொல்லி போரடிக்க விருப்பமில்லை. ஆனாலும் தட்டுத் தடுமாறிக் குட்டிச் சுவரா போய்க் கொண்டிருந்த என் வாழ்க்கைக்குப் புது அர்த்தமே இங்கு வந்த பிறகு தான் கிடைத்தது.  எனக்கு இப்படி புது வாழ்வு கிடைத்ததற்கு நன்றி சொல்கிற மாதிரி ஏதாவது செய்யணும் என்று எனக்கு எப்போதும் ஒரு ஆசை !  நீங்கள் உங்கள் பிரச்சினைகளைச் சொன்னதுமே முடிவு செய்து விட்டேன்.  இந்த மீனங்காடியில் உங்களுக்கு மருந்து கிடைக்கும். அந்த மாதிரி சந்தோஷத்தை உண்டாக்குகிறோம் நாங்கள் !

டோனியும் மேரியும் பேசிக் கொண்டிருக்கும் போது அவர்கள் இருவருக்கும் இடையில் ஒரு பெரிய நண்டு பறந்து சென்றது.  யாரோ தூக்கிப் போட்டது தான். கூடவே வந்தது கோரஸ்.

“ போகுது பார் ! போகுது பார் ! அந்த நண்டு நியூ டெல்லிக்குப் போகுது பார் ! – போகுது பார் ! போகுது பார் ! எதிரொலித்தது.

“ ரொம்ப சரி டோனி ! இந்த மீனங்காடியில் எது இருக்கிறதோ இல்லையோ, நிச்கயமாக ஒரு சந்தோஷ அலை அடிக்கிறது ! அதைப் புரிந்து கொள்ள சீக்கிரம் வருவேன் .”

வாட்சைப் பார்த்தாள். சீக்கிரம் நடந்து போனால் தான் இடைவேளை முடிவதற்கு முன் ஆபீஸ் போய்ச் சேரலாம். நாம் வந்து போகும் நேரத்தை எல்லாம் அந்த டைப்பிஸ்டுகள் குறித்து வைத்தாலும் வைப்பார்கள்.

“  ஹேய் ! நீங்க ஏன் நாளைக்கு இதே நேரத்தில் இங்கே வரக் கூடாது? வரும்போது மறக்காம ரெண்டு டீ கப் கொண்டு வாங்க ! எனக்கும் சேர்த்து ! “  சொல்லிக் கொண்டே திரும்பப் போய் பக்கத்தில் இருக்கும் ஒரு பையனுக்கு ஏரி மீனுக்கும், கடல் மீனுக்கும் உள்ள வித்தியாசத்தைச் சொல்லத் தொடங்கினான் !

                              மீண்டும் மீனங்காடி 

image

அடுத்த நாள் சரியாக சாப்பாட்டு நேரத்தில் மேரி அந்த மீனங்காடிக்கு வந்தாள். டோனி அவளுக்காகக் காத்துக் கொண்டிருந்தது போல ஆர்வத்தோடு பேசினான்.

“ இந்த மார்க்கெட் கடைசியில் ஒரு நல்ல ஹோட்டல் இருக்கிறது ! வாருங்கள் போகலாம்” என்று கூறி, அவளை  அழைத்துச் சென்றான்.  அங்கிருந்து பார்த்தால் துறைமுக ஏரியா நன்றாக இருந்தது. இருவரும் ‘ வடா பாவ் ‘ சாப்பிட்டுக் கொண்டே பேசத் தொடங்கினர்.  அவன் சொன்ன மீனங்காடி கதையைக் கேட்டதும் இந்த மீன் மார்க்கெட்டிலும் இவ்வளவு பிரச்சினைகள் இருக்கின்றனவே என்று ஆச்சரியப் பட்டாள்.  இவ்வளவு கஷ்டங்களுக்கு நடுவே இவர்கள் இவ்வளவு ஜாலியாக இருக்கிறார்கள் என்றால் அந்த மீனங்காடியில் ஏதாவது சிறப்பு இருக்கத்தான் செய்யும் என்று மேரி எண்ணினாள்.

“ நீங்க சொன்னதைக் கேட்டதும் எனக்கு எங்கள் ஆபீஸ் தான் நினைவுக்கு வருகிறது ! இரண்டு இடத்திலும் ஒரே மாதிரி பிரச்சனைகள் .”

“ நிஜமாகவா? “

“ ஆமாம் ! எங்கள் டிபார்ட்மெண்ட் மக்கள் ஒரே மாதிரி வேலையைத் திரும்பத் திரும்பச் செய்து அலுத்துப் போய் விட்டார்கள்.  அவர்கள் பிரச்சினை என்னவென்றால், “ நாம செய்யற சின்னத் தப்பை எல்லாம் பெரிசு படுத்தி ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள்.  ஆனால் நாம செய்யற ஆயிரம் நல்லதை எல்லாம் யாரும் கண்டுக்கவே மாட்டேன் என்கிறார்கள்” என்பதுதான். ‘ சரியான பேஜார் வேலை’ என்று அடிக்கடி சொல்லிக் கொள்வார்கள். நீங்களோ இந்த மீனங்காடியில் பேஜாரான வேலையை ஜோரான வேலையா மாற்றி இருக்கீங்க ! கேட்கவே ஆச்சரியமா இருக்கு  ! ”

“ எந்த வேலையானாலும் அதை செய்துதான் ஆகணும் என்றால் அது வெறுப்பாகத் தான் இருக்கும். இந்த கம்ப்யூட்டர் மக்களை எடுத்துக் கொள்ளுங்களேன். உலகம் பூரா சுற்றி வருகிறார்கள். ரொம்ப ஜாலியா இருக்குமே என்று கேட்டால்  ‘ சரியான போரப்பா ‘ என்று தான் சொல்கிறார்கள்.  எந்த வேலையும் கொஞ்ச நாட்களில் போரடிக்க ஆரம்பிச்சிடும். “

“ ரொம்ப சரி டோனி !  நான் ஸ்கூலில் படிக்கும்போது மாடலிங் செய்தேன். மற்ற டீனேஜ் பெண்ணுகளுக்கெல்லாம் ஒரே பொறாமை.  இப்படி ஜாலியான வேலை கிடைச்சுதே என்று.  ஆனால் எனக்கு கொஞ்ச நாளிலேயே அது போரடிக்க ஆரம்பித்து விட்டது.  அதே மாதிரி பின்னால்  பத்திரிகையில் செய்தி தயாரிக்கும் வேலையும் கிடைத்தது.  நாளாக நாளாக அதுவும் அலுப்பாகத் தோன்ற ஆரம்பித்தது.”

“ நீ சொல்லுவது உண்மை தான் மேரி ! இப்படி யோசிச்சுப் பாரு ! எந்த வேலையும் போராக இருக்கும் என்று சொல்வது போல எந்த வேலையையும் ஜாலியா சந்தோஷமா செய்ய முடியும் என்பதும் உண்மையாகத்தானே இருக்கணும்? ”

“ எனக்குப் புரியலை ! சரியாகச் சொல்லேன் டோனி !

“ ரொம்ப சுலபம் ! இந்த மீன் மார்க்கெட்டில் இருக்கிற மற்ற எல்லா கடைகளையும் கவனி ! அவர்கள் எல்லாரும் ஒரே மாதிரி செய்த வேலையையே திரும்பத் திரும்ப செக்கு மாடு மாதிரி செய்து கொண்டிருக்கிறார்கள். இவர்கள் மத்தியில் ‘ மீனங்காடி ‘ வித்தியாசமாகச் செய்கிறதாலே எங்களுக்கு நல்ல வியாபாரம்.  நான் முன்பே சொன்ன மாதிரி நாங்களும் இப்படித் தான் இருந்தோம். பிறகு நாங்கள் எல்லோரும் ஒரு மனதா இந்தப் புதிய எண்ணத்தைத் தேர்ந்தெடுத்தோம். ‘ எந்த வேலையைச் செய்வது என்ற முடிவு நம் கையில் இல்லை.  ஆனால் எந்த வேலையை எப்படிச் செய்வது என்ற முடிவு நிச்சயமாக நம் கையில் தான் இருக்கு ! இதுதான் நாங்கள் கற்றுக் கொண்ட மிகப் பெரிய பாடம் ! அதனால் தான் இந்த மீனங்காடி இப்போது உலகப் புகழ் பெறும் அளவுக்கு உயர்ந்து விட்டது.  நாம் செய்கிற வேலையில் நமது எண்ணத்தைக் கொண்டு வருவது தான் மிக மிக முக்கியம் ! ”

image

(தொடரும்)

மீனங்காடி (ஏழாவது பகுதி)

image

“ என்ன ஆச்சு உங்களுக்கு? டீ கப் தொலைந்து போச்சா?” என்று சாதாரணமாகக் கேட்டுக் கொண்டே வந்தான்,  நல்ல சுருட்டை முடியுடன் வாட்ட சாட்டமாக அந்த மீனங்காடி இளைஞன், அவள் முகத்தைப் பார்த்துச் சிரித்துக் கொண்டே கேட்டான்.

‘இதோ இருக்கே’ என்று தட்டுத் தடுமாறி பக்கத்துத் தூணில் இருந்த ஒரு காலி கப்பைக் கையில் பிடித்துக் கொண்டு நின்றாள் மேரி. பிறகு மெதுவாக அவனிடம் ‘ இங்கு என்ன நடக்கிறது? எனக்குக் கொஞ்சம் கூடப் புரியவில்லை” என்று மெதுவாகக் கேட்டாள்.

“இதற்கு முன்பு இங்கு வந்திருக்கிறீர்களா?”

“ஊகூம். பெரும்பாலும் லஞ்சுக்கு அந்த ஏரிக்கரைக் கடைக்குத் தான் போவேன்”

image

“ புரியுது ! அங்கே அமைதியாக இருக்கும் ! ஆனால் இங்கே அப்படி இருக்காது ! எது உங்களை இங்கே வரவழைத்தது?” தெளிவாகவே கேட்டான்.

பக்கத்தில் இன்னொரு மீன்காரன் “ யாருக்கு வேணும் மீனு மீனு” என்று வேண்டுமென்றே கட்டைக் குரலில் கத்தத் தொடங்கினான்.  இன்னொரு மீன்காரன் மீனைக் காட்டி ஒரு பெண்ணை வேடிக்கையாகப் பயமுறுத்திக் கொண்டு இருந்தான்.  மேரியின் தலைக்கு மேலே ஒரு பெரிய கடல் நண்டை  ஒருத்தன் தூக்கிப் போட்டான். “அந்த நண்டு பொண்ணு பார்க்கப் பக்கத்து ஊருக்குப் போகுது பார்” என்று சொல்ல உடனே ஆரம்பித்து விட்டது கோரஸ்-  ‘போகுது பார் போகுது பார்’. ஒரு ஜாலியான பைத்தியக்காரக் கும்பல் போல் இருந்தது மேரிக்கு. ‘கேஷ் கவுண்டர்’ அருகே ஒருத்தன் வினோதமான ‘கேப்’ போட்டுக் கொண்டு ‘தையா…. தையா’ என்று டான்ஸ் ஆடிக் கொண்டிருந்தான். ஏதோ ஒரு பொருட்காட்சி மைதானம் மாதிரி இருந்தது அந்த இடம்.

மேரி பராக்குப் பார்த்து விட்டுத் திரும்பினால் அந்த இளைஞன் கூச்சலைப் பற்றி எல்லாம் கவலைப் படாமல் அவள் முகத்தையே பொறுமையுடன் பார்த்துக் கொண்டிருந்தான். “கடவுளே ! அவன் என் பதிலுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறான். நான் பாட்டுக்கு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறேன்” என்று மேரி நினைத்தாள்.  ஆனால் அவனிடம் என்ன சொல்வது? ஆபீஸில் ஏகப்பட்ட பிரச்சினைகள் அன்று சொன்னால் அவனுக்குப் புரியுமா? கேட்ட கேள்விக்கு பதில் சொல்வோம் என்ற கணக்கில் அவள் ஆபீஸ் பிரச்சினைகள் பற்றி சுருக்கமாகச் சொன்னாள்.

அவன் பெயர் டோனி. மேரி தன் மூணாம் மாடி அலுவலகத்தைப் பற்றிச் சொல்லும்போது பொறுமையாகக் கேட்டான். யாரோ தூக்கி எறிந்த மீன் அவன் மேலே பட்டு கீழே விழுந்ததைக் கூட அவன் பொருட்படுத்தவில்லை. மேரி சொன்ன தொழிலாளர் பிரச்சினைகள் பற்றிக் கவனத்தோடு கேட்டுக் கொண்டிருந்தான்.

சுருக்கமாகச் சொல்லி விட்டுத் தலையை மெல்லத் தூக்கிக் கேட்டாள்.’என்ன நினைக்கிறீர்கள் எங்கள் குப்பைத் தொட்டி டிபார்ட்மெண்டைப்பற்றி?´ டோனி உடனே பதில் எதுவும் சொல்லி விடவில்லை. சற்று யோசித்து விட்டு “ மோசமான ஆபீஸ் தான். நானும் அதுமாதிரி இடங்களில் எல்லாம் வேலை பார்த்திருக்கிறேன் ! ஏன் இந்த ‘மீனங்காடி’ கூட முதலில் அபப்டித்தான் இருந்தது. இப்போ எப்படி இருக்கு?” என்று கேட்டான்.

“ ஜாலியான சத்தம் ! ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் “ தயங்காமல் சொன்னாள் மேரி.

“இந்தக் கும்மாளம், வேடிக்கை, விளையாட்டு எல்லாம் உங்களுக்குப் பிடித்திருக்கிறதா?

“ ரொம்ப ரொம்பப் பிடிச்சிருக்கு”

“ எனக்கும் இது பிடிச்சிருக்கு ! இங்கே வேலை பார்த்து விட்டு வேறு எங்கேயும் வேலை பார்க்க முடியும்னு தோணலை.  முன்னாடி இந்த இடம் நீங்க சொன்னீங்களே அந்தக் ‘குப்பைத் தொட்டி’மாதிரி தான் இருந்தது.  நாங்கள் எல்லோரும் சேர்ந்து இதை மாத்தணும்னு முடிவு பண்ணினோம்.  அதன் முடிவு தான் இந்த ஜாலி ! வேடிக்கை !. இந்த சந்தோஷம் உங்கள் டிபார்ட்மெண்டுக்கு வரணுமா? “

“ வேணும் ! நிச்சயமா வேணும் ! அது தான் சரியான மருந்து “  மேரி சிரித்துக் கொண்டே சொன்னாள்.

“ நான் வேணும்னா இந்த ‘மீனங்காடி’ எப்படி மாறியது என்று சொல்றேன்.  யாருக்குத் தெரியும்? அதிலிருந்து உங்களுக்கு ஏதாவது யோசனை பிறந்தாலும் பிறக்கலாம்.”

image

“ ஆனா  எங்ககிட்டே தூக்கிப் போட்டுப் பிடிக்க எதுவுமே இல்லை.  நாங்க செய்யறதெல்லாம் ரொம்ப அறுவையான வேலை அதையே திரும்பத் திரும்ப……

“ நிறுத்துங்க மேடம் ! தூக்கிப் போட்டுப் பிடிக்கிறதில் இல்லை இந்த சந்தோஷம் ! உங்க வேலை நிச்சயமா இதை விட வித்தியாசமானதுதான்.  உங்களுக்குப் பெரிய சவால் காத்துக் கொண்டிருக்கிறது என்று நான் நினைக்கிறேன்.  நான் ஏன் உங்களுக்கு உதவி செய்யக் கூடாது? நாங்க எப்படி இந்த இடத்தை இப்படி ஜாலியான வேலையாக மாற்றினோம் என்பதைச் சொல்லுகிறேன். இந்த ‘மீனங்காடி’ எப்படி ஒரு ஜாலியான வியாபாரத் தலமாக மாறிய கதையைச் சொல்லுகிறேன். நீங்க அதைப் புரிஞ்சிக்கிட்டீங்கன்னா அது உங்களுக்கு உதவியா இருக்காது? “ டோனி கேட்டான்.

“நிச்சயமா ! ஆனால் நீங்கள் ஏன் எங்களுக்காக இதைச் செய்யணும்?” மேரி கேட்டாள்.

(தொடரும்) 

மீனங்காடி – ஆறாம் பகுதி (தொடர் பகுதி)

image

“ அந்த பெரிய மீன் என்ன ஆகாயத்தில் பறக்கிறதா?” மேரி ஆச்சரியத்துடன் பார்த்தாள்.  மறுபடியும் இன்னொரு மீன் உயரே பறந்தது.  அந்த ‘மீனங்காடி’ ஆள் தான் மீன்களை ஒவ்வொன்றாக எடுத்துத் தூக்கி ‘ஸ்டைலாக’ எறிய அவை இருபது அடிக்கு மேலே பறந்து போய் விழுகிறது

“இதோ பாருங்கள் ! ஒரு பெரிய இறால் மீன் பம்பாய்க்குப் போகுது’ என்று கத்த மற்ற மீன் கடைத் தொழிலாளிகள் அனைவரும் கோரஸாக ‘போகுது பார், போகுது பார்’ என்று திரும்பிக் கத்தினர்.  தடுப்புக்கு அந்தப் புறம் இருந்த கடைக்காரன் ஒருத்தன் அந்த மீன்களை லாவகமாக ஒற்றைக் கையால் பிடித்து தலை வணங்கி ‘சல்யூட்’ அடித்து நிற்க, மற்ற மக்கள் எல்லோரும் கை தட்டி சந்தோஷத்தில் சிரித்தனர். அவர்களது அந்த ‘சந்தோஷ அலை மேரிக்கு ஆச்சரியமாக இருந்தது.

image

அவளுக்குப் பக்கத்தில் இன்னொரு மீன்காரன் ஒரு சிறிய மீனைக் கையில் எடுத்துக் கொண்டு அதன் வாயை இப்படி அப்படி  அசைத்து அருகில் இருந்த ஒரு சிறுவன் கிட்டே மீன் பேசுவது போல பேசிக் கொண்டு இருந்தான்.

இன்னொரு வயதான மீன்காரன் ‘கேளுங்க, கேளுங்க ! மீனைப் பத்திக் கேளுங்க’ என்று ‘தேவுடா தேவுடா’ ஸ்டைலில் பாடிக் கொண்டிருந்தான்.

கேஷ் கவுண்டருக்கு மேலே இரண்டு பெரிய கடல் நண்டுகள் நடனமாடிக் கொண்டிருந்தன. டை கட்டிக் கொண்டு நின்ற அந்தக் கும்பல் அவர்கள் வாங்க வந்த மீன்களோடு கடைக்காரர்கள் உரையாடிக் கொண்டிருப்பதைப் பார்த்து ‘பக பக’ என்று சிரிக்கத் தொடங்கினர்.  மொத்தத்தில் அந்த இடம் ‘ஒரு விளையாட்டு மைதானம்’ போலத் தான் தோன்றியது. மேரி தன் கவலையெல்லாம் மறந்து வாய் விட்டுச் சிரித்து அவற்றை ரசிக்க ஆரம்பித்தாள். !

டீ கப்பைக் கையில் வைத்திருக்கும் அனைவரும் ஆபீசர்கள்.-நல்ல பதவியில் இருப்பவர்கள் போலத் தோன்றுகிறது. இந்த மட்ட மத்தியானத்தில் மீன் வாங்க வந்தார்களா? இல்லை வேடிக்கை பார்க்க வந்தார்களா? ஒன்றும் புரியவில்லை.

அந்தக் கூட்டத்தில் ஒரு மீன் கடைக்காரன் தன்னையே குறிப்பாகப் பார்த்துக் கொண்டிருந்தான் என்பதை மேரி வெகு நேரம் உணரவில்லை. அவளுடைய சீரியஸான முகமும் அதில் தெரியும் ஆர்வமும் அந்த மீனங்காடிக்காரனை அவள் பக்கம் வரவழைத்தது.

image

“ என்ன ஆச்சு உங்களுக்கு? டீ கப் தொலைந்து போச்சா?” என்று சாதாரணமாகக் கேட்டுக் கொண்டே வந்தான்.  நல்ல சுருட்டை முடியுடன் வாட்ட சாட்டமாக அந்த மீனங்காடி இளைஞன்,

(தொடரும்) 

மீனங்காடி ( ஐந்தாம் பகுதி)

வழக்கத்திற்கு மாறாக …………….

image

மேரி படிகளில் இறங்கி வழக்கம் போல ஏரிக்கரைக்கு மதிய உணவிற்காகச் சென்று கொண்டிருந்தாள். கால்கள் நடந்தன. ஆனால் மனம் மட்டும் பிரசாத் சொன்னதையே நினைத்துக் கொண்டிருந்தது.  இன்னும் கொஞ்ச தூரம் அதிகம் நடந்தால் நல்லது என்று அவளுக்குத் தோன்றியது. ‘குப்பைத் தொட்டி டிபார்ட்மெண்ட்’ – அந்தப் பெயர் அவள் மண்டையில் ஓடிக்கொண்டிருந்தது. குப்பைத் தொட்டியை எப்படித் தூக்கி எறிவது? ஏதாவது செய்யணும் !

யோசித்துக் கொண்டே நடந்ததில் மேரி இதுவரை வராத புதுப் பகுதிக்கு வந்து விட்டாள். ‘ஹோய். ஹோய்’ என்று பலர் சிரிக்கும் சத்தம் கேட்டபிறகு தான் அவளுக்குப் புரிந்தது – தான் மீன் மார்க்கெட் பக்கம் வந்து விட்டோம் என்று. அது ஒரு பிரபலமான மீன் மார்க்கெட். அதைப் பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறாள். மிக உயர்ந்த ரக மீன்கள் எல்லாம் கிடைக்கும் என்று.ஆனால் அவள் பொருளாதார நெருக்கடி – இரண்டு குழந்தைகளின் பராமரிப்பு அவளை அங்கு வர விடுவதில்லை.ஜானுக்காக வாங்கிய கடனைக் கட்டிய பிறகு தான் மற்ற வசதிகள் எல்லாம்.

அந்த மார்க்கெட் பக்கம் போவது இதுதான் முதல் தடவை.
அங்கே இருக்கிற எண்ணற்ற மீன் கடைகளில் மீனங்காடி என்ற கடையில் மட்டும் ஏராளமான கும்பல் இருப்பதைக் கவனித்தாள்.  அங்கிருந்துதான் அந்த ‘ஹோய் ஹோய்’ சிரிப்புச் சத்தமும் கேட்டுக் கொண்டிருந்தது. அந்தக் கடையைச் சுற்றிக் கத்திச் சிரிக்கும் அவர்களைப் பார்த்தால் வேடிக்கையாக இருந்தது. அவளுக்கும் அந்த சிரிப்பு அலை தொற்றிக் கொள்ளும்படி இருந்தது. ஆனாலும் தன் மண்டையில் ஓடும் எண்ண அலைகளினால் சீரியஸாகவே இருந்தாள்.

image

கொஞ்சம் ஆர்வத்துடன் உள்ளே என்ன நடக்கிறது என்று எட்டிப் பார்த்தாள். சரி ஏதோ வித்தை காட்டி  தமாஷ் பண்ணுகிறார்கள் என்று அவர்களை விட்டு விலகிப் போகப் பார்த்தாள். அப்போது தான் அவள் மண்டையில் தட்டுப்பட்டது – அட நமக்கும் கொஞ்சம் வேடிக்கை, சிரிப்பு தேவைப் படுகிறது என்று. கும்பலின் மையத்துக்குப் போனாள்.

அங்கே மீன் விற்றுக் கொண்டிருந்த ஒருத்தன் சத்தமாகக் கத்தினான். “ஹாய் ! டீ கப் வீரர்களே !” அங்கு நின்று கொண்டிருந்த அனைவரும் தங்கள் கையில் இருந்த பிளாஸ்டிக் டீ கப்பைத் தூக்கி உயர்த்தி ‘ஹாய்’ என்று கத்தினார்கள் – நன்றாக டை கட்டிக் கொண்டு நின்று கொண்டிருக்கும் அந்த பத்து இருபது பேரும். ‘இதென்ன கூத்தாயிருக்கு?’ என்று மேரி மனதிற்குள்ளேயே எண்ணிக் கொண்டாள்.

(தொடரும்) 

மீனங்காடி (தொடர்) — நான்காவது பகுதி

மீனங்காடி 
(சென்ற மாதம் முடிவில்………..)

image

அவள் இருக்கையை விட்டு இரண்டடி கூட நடக்கவில்லை. மேஜை மீது இருந்த போன் அடித்தது.ஸ்கூலிலிருந்து பையன் கூப்பிடுவானாயிருக்கும், காலையிலேயே ஜலதோஷம், ஸ்கூலுக்குப் போக மாட்டேன் என்று அடம் பிடித்தான். திட்டி அனுப்பி வைத்தாள். இப்போ என்ன பிரச்சினையோ? போனை எடுத்தாள்.

(இனி இந்த மாதம் ! ……………………………)

image

மேரி ! நான் தான் பிரசாத் பேசறேன்”

பிரசாத் அவளது புது டிபார்ட்மெண்டுக்கு மேலதிகாரி !

கடவுளே ! இந்த நேரத்தில் இவரா? இந்த டிபார்ட்மெண்டுக்கு வருவதா வேண்டாமா என்று யோசித்ததற்கு இன்னொரு முக்கிய காரணம் இவர்.  ரொம்பவும் திமிர் ஜாஸ்தி ! எல்லோரையும் எடுத்தெறிந்து பேசுவதில் கில்லாடி ! நாம் பதில் சொல்லிக் கொண்டிருக்கும் போதே போனைக் கீழே வைத்து விடுவார். “ஏன் இந்த வேலையை இன்னும் முடிக்கலை” என்ற கேள்விக்கு நாம் பதில் சொல்லும்போதே, “அதெல்லாம் எனக்குத் தெரியாது, நாளைக்குள்ளே முடிக்கணும்” என்று சொல்லி விட்டு எழுந்து போய் விடுவார்.  கேட்டதையே திருப்பித் திருப்பிக் கேட்கும் வினோத அதிகாரி அவர்.  “ மேரி ! இந்த ஸ்டாண்டர்ட் புராஜக்ட் என்னாச்சு? ஏன் இன்னும் முடிக்கலை?” எல்லோருக்கும் தெரியும் , அது இன்னும் இரண்டு வருஷத்துக்கு முடியாது என்று. இருந்தாலும் இப்படிக் கேட்பதுதான் பிரசாத்தின் வழக்கம்.  இந்த மூணாம் மாடிக்கு இங்கிருக்கிற தொழிலாளர்கள் மட்டுமல்ல, அவர்களின் மேலதிகாரி பிரசாத்தும் ஒரு சாபக்கேடு என்று மேரி எண்ணினாள் !

“ இப்போது தான் டைரக்டர்கள் மீட்டிங் முடிந்து வர்றேன் ! உன் டிபார்ட்மெண்ட் பற்றி விவரமா பேசணும் ! இன்னிக்கு மத்தியானமே !”

கண்டிப்பா வர்றேன் ! ஏதாவது பிரச்சினையா?”

“சேர்மன் சொல்றார். கம்பெனிக்குக் கடுமையான போட்டி இருக்கு ! சமாளிப்பது ரொம்பக் கஷ்டம். நாம இருக்கிற இடத்திலேயே நிற்க இன்னும் அதிகம் ஓட வேண்டியிருக்கும். எல்லா தொழிலாளிகளும் வேலையில் அதிக அக்கறை எடுத்துக் கொள்ளணும் ! உற்பத்தி இரண்டு மடங்காக அதிகரிக்கணும் ! சில டிபார்ட்மெண்டுகளில் இருக்கும் மெத்தனமான மந்த போக்குகளைப் பற்றிப் பேசினோம்.”

மேரியின் உடம்பில் ஒரு பயம், நடுக்கம் பரவியது.

“சேர்மன் ஒரு கருத்தரங்குக்குப் போனாராம். நம்ம கம்பெனியில் இருக்கிற மந்தப் போக்கைப் பற்றி மற்றவர்கள் பேசியது ரொம்பவும் அவமானமாயிருந்ததாம். மூணாம் மாடி மட்டும் அப்படி இருக்குன்னு குறிப்பிட்டு சொல்லவில்லை ! ஆனால் இந்த உன்னோட டிபார்ட்மெண்ட் பெரிய தலைவலியாகத் தான் இருக்கு ! நீ என்ன சொல்றே?”

image

“மூணாவது மாடி பற்றி குறிப்பா என்ன சொன்னாங்க?” மேரி கேட்டாள்.

“இந்த டிபார்ட்மெண்டுக்குப் புதுப் பட்டப் பெயர் வைச்சிருக்கார்களாம் ! ‘குப்பைத் தொட்டி டிபார்ட்மெண்ட்’ எவ்வளவு அசிங்கமா இருக்கு ! என் அதிகாரத்தில் இருக்கிற ஒரு டிபார்ட்மெண்டுக்கு இப்படி ஒரு கேவலமான பேரா?”

“குப்பைத் தொட்டி என்று சொன்னார்களா?”

“ ஒரு தடவைக்கு நாலு தடவை சொன்னார். உன்னால், உங்க டிபார்ட்மெண்டால் எனக்கு சரியான டோஸ் கிடைத்தது. தேவையா என்ன? நாம் எடுத்த புது முடிவுகளைப் பற்றி அவங்க கிட்டே சொன்னேன். உன்னை இந்த டிபார்ட்மெண்டுக்கு மேனேஜரா போட்டிருக்கிறதையும் சொன்னேன். ‘சாக்குப் போக்கு எல்லாம் வேண்டாம், இந்த டிபார்ட்மெண்ட் சீக்கிரம் சரியாகணும்’ என்று உத்தரவு போட்டார். நீ  எல்லாவற்றையும் சரி செய்திட்டே இல்லே?”

‘எல்லாவற்றையும் சரி பண்ணிட்டேனா?” வந்து ஒரு மாதம் கூட ஆகவில்லை. ஏழெட்டு வருஷமா இருக்கிற பிரச்சினை. “

இன்னும் இல்லை” என்று மெதுவாகச் சொன்னாள்  மேரி.

“மேரி ! நீ இன்னும் வேகமா போகணும். உன்னால் முடியாதுன்னா சொல்லு ! உனக்குப் பதிலா வேறு யாரையாவது போடறேன் ! பாஸ் கண்டிப்பா சொல்லிட்டார்.

image

இங்கே இருக்கிற தொழிலாளிகள் அனைவரும் ஒழுங்கா வேலை செய்யணும். அவர்களின் நடவடிக்கைகள்  எல்லாம் சுத்தமா மாறி ஆகணும். அதுக்கு நீ என்ன, எப்படி செய்வாய்னு தெரியாது ! ஆனால் சீக்கிரம் முடிக்கணும். ஏன் இந்த மூணாம் மாடி மட்டும் இப்படி இருக்கீங்க? நீங்க எல்லோரும் ஆபீஸ் வேலை தானே செய்யறீங்க? ஏதாவது ராக்கெட்டா விடறீங்க? உங்களால் கம்பெனிக்கு வெளி மார்க்கெட்டில் எவ்வளவு கெட்ட பெயர்? இதை இனிமே வளர விடக் கூடாது. மீட்டிங்கில் ஒவ்வொரு டைரக்டரும் கேவலமா பேசறாங்க ! உங்க கிழட்டுக் கும்பல் வேலையில் பெரிசா ஒண்ணும் சாதிக்க வேண்டாம். பிரச்சினைகளை உண்டு பண்ணாமல் இருந்தால் போதாதா?” கன்னா பின்னா என்று கத்தினார்.

‘சரி இதைப் பற்றி இன்னும் விவரமா பேசணும் ! எப்ப வர்றே?”

“இரண்டு மணிக்கு வரட்டுமா?”

“இரண்டரைக்கு வா ! சரியா?”

 “கண்டிப்பா” அவள் குரலில் இருந்த கோபம் அவருக்குப் புரிந்திருக்க வேண்டும்.

“கவலைப்படாதே மேரி ! நீ இதில் இன்னும் தீவிரமா கவனம் செலுத்தணும்”

போனை வைத்து விட்டார்.

"சரியான…….. ” திட்ட வார்த்தை தெரியாமல் தடுமாறினாள் மேரி.

என்ன இருந்தாலும் அவர் பாஸ். சொன்ன விதம் எப்படி இருந்தாலும் விஷயம் என்னமோ நூறு சதவீதம் உண்மை. ‘கவலைப்படாதே மேரி’ தனக்குத் தானே சொல்லிக் கொண்டாள்.

(தொடரும்)

மீனங்காடி – தொடர் – மூன்றாவது அத்தியாயம்

                           மூன்றாம் மாடி

 image

வேலையில் சேர்ந்த உடனே அந்த டிபார்ட்மெண்டின் தன்மை என்ன -மற்றும் வேலை செய்பவர் யார் யார் என்று தெரிந்து கொண்டாள்.  இதற்கே ஒரு மாதம் பிடித்தது. அங்கு வேலை செய்யும் சிலரின் நடவடிக்கைகளைப் பார்த்தாலே ‘ சாவு கிராக்கி’ ‘குப்பைத் தொட்டி’ என்பது சரியான பெயர் என்று தோன்றும். அதிலும் அந்த பாபு ஏழு தடவை போன் அடித்த பிறகு தான் எடுப்பான்.  எடுத்த உடனே தொடர்பையும் துண்டிப்பான். அதில் என்ன திருப்தியோ அவனுக்கு ! அந்த எலிசபெத் இன்னும் ஒரு படி மேலே !  சீக்கிரமா வேலை செஞ்சா என்ன குறைஞ்சு போயிடும் – என்று மிரட்டிய அதிகாரியின் சொந்த பைலை வேண்டுமென்றே தொலைத்து விட்டு அவரைத் திண்டாட வைத்தவள். மேரி ஸ்டோர் ரூமுக்குப் போகும்போது இந்த மாதிரி பேச்சுக்கள் நிறைய காதில் விழும். மத்தியானம் சாப்பிட்டுவிட்டு டிபார்ட்மெண்டுக்கு வந்தால் நாலைந்து பேர் மேஜை மீது தலை குனிந்து தூங்கிக் கொண்டிருப்பார்கள்.

பத்து மணி ஆபீஸுக்கு பத்தரை வரை ஒருவர் மாற்றி ஒருவராக வந்து கொண்டிருப்பார்கள்.  அதுவரை போன் அடித்துக் கொண்டே இருக்கும்.  வேறு யாரும் மற்றவர் போனை எடுக்கவே மாட்டார்கள். ‘ ஏன் லேட்’ என்றால் ‘ இன்னிக்கு லீவு சொல்ல வந்தேன்’ பாணியில் பேசி விட்டுப் போவார்கள் !  எல்லாமே ரொம்ப ரொம்ப நிதானமாக ஆமை வேகத்தில் நடக்கும்.  மேரிக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் தான் அவளை உறுத்திக் கொண்டே இருந்தது.

ராத்திரி குழந்தைகள்  இருவரும் தூங்கிய பிறகு டயரி எடுத்து நேற்று எழுதியதைப் படித்தாள்.

“என்ன ஆபீஸ் ! கொஞ்சம் கூட உயிரே இல்லாத மயான பூமி மாதிரி அல்லவா இருக்கிறது ! மனித நடமாட்டமே இல்லாத தீவு மாதிரி இருக்கிறது ஆபீஸ் ! எதற்குமே சந்தோஷப்படாத ஜந்துக்கள் இங்கு இருப்பவர்கள் ! இப்படிக் கூட இருக்க முடியுமா என்ன?

முப்பது பேர் எனக்குக் கீழே வேலை செய்கிறார்கள். வாங்குகிற சம்பளத்துக்குத் தகுந்தபடி வேலை செய்ய வேண்டும் என்ற எண்ணமே இவர்களுக்குக் கிடையாது போலும் !  மனிதர்கள் என்னவோ நல்லவர்கள் போலத் தெரிகிறார்கள்.  ஒரு வேளை வருடக் கணக்காக ஒரே வேலையைத் தொடர்ந்து செய்து வந்ததினால் வந்த அலுப்பா !  வேலையில் ஏன் இப்படி ஒரு மந்தம்?  அதில் வேலை செய்யும் இளைஞர்கள் கூட கிழவர்கள் மாதிரி இருக்கிறார்கள்.  அந்த டிபார்ட்மெண்டின் கலாசாரம் எல்லோரையும் நன்கு பாதித்து இருந்தது.  கொஞ்ச நஞ்ச திறமைசாலியைக் கூட மரக்கட்டையாக மாற்றி விடும் திறமை அந்த டிபார்ட்மெண்டுக்குத் தான் உண்டு.

image

அந்த ஆபீஸுக்குள் – அந்த மூன்றாம் மாடிக்குள் நுழையும்போது ஏதோ ஆக்ஸிஜனே இல்லாத காற்றை சுவாசிப்பது போல மூச்சு மூட்டுகிறது !  போன வாரம் தான் தெரிந்தது அந்த நாலு கிளார்க்குகளும் ஆபீஸில் வாங்கின கம்ப்யூட்டரை இரண்டு வருஷமா உபயோகப் படுத்தாமலே இருக்கிறார்கள் என்று. “ நாங்க இவ்வளவு வருஷமா கூட்டிக் கழித்துக்கிட்டு வரலே ! புதுசா எதுக்கு கம்ப்யூட்டர்?” என்று கூறுகிற கும்பல் அவர்கள்.  இது மாதிரி  இன்னும் எத்தனை பேரோ?

நம்ம வேலையை நாம நல்லா செய்தால்தான் நமக்கும் நல்லது, நம்ம கம்பெனிக்கும் நல்லது. இந்த உண்மையை மூணாம் மாடி மக்களிடம் எப்படிச் சொல்லிப் புரிய வைப்பது?
“நாங்க செய்யற வேலை முக்கியமான வேலை. இது எங்களுக்கே புரியுது.  ஆனால் எங்களைப் பற்றி யாரும் கவலைப் படறதில்லை.  மேலதிகாரிகளும் எங்கள் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதில்லை. தாமதமானாலும் வேலை நடந்தால் போதும் என்று விட்டு விட்டார்கள்.” என்று அவர்களே சொல்லும் அளவிற்கு மோசமாகவே இருந்தது அந்த டிபார்ட்மெண்ட்.

இந்த வேலையில் விருப்பத்தோட எவரும் வேலை செய்யறதில்லை. என் ஒருத்திக்குத்தான் பணப் பிரச்சினை.  பெண்களில் பெரும்பாலானவர்கள் டைவர்ஸ் செய்தவர்கள். குழந்தைகளுடன் தனியே வாழ்பவர்கள் !  அந்த ரேணுகா போன வருடம் பாட்டியாகி விட்டாள். இந்த ஜார்ஜ் அவங்க அப்பாவோட உடம்பை சரி செய்யவே இந்த வேலையில் ஒட்டிக் கொண்டிருக்கிறான். எதற்காக எல்லோரும் – என்னையும் சேர்த்து – இந்த வேலையில் இருக்கிறோம் ! நல்ல சம்பளம், சௌகர்யம், பாதுகாப்பு இதுக்குத்தானே !”

மேரி தான் எழுதிய கடைசி வரிகளை மீண்டும் நினைத்துப் பார்த்தாள்.  இந்த வேலை நிச்சயமாக ஒரு வரப் பிரசாதம் தான். நிரந்தர வேலை, நல்ல சம்பளம், நல்ல  பாதுகாப்பு !  திடீரென்று அவளுக்கு ஒரு பயம் வந்தது. ‘ இந்த பாதுகாப்பான வேலை நிரந்தரமாக எப்போதும் இருக்கும் என்பது என்ன நிச்சயம்? இந்த உண்மை இங்கே வேலை செய்பவர்களுக்குத் தெரியுமா? இல்லை புரியுமா? மார்க்கெட் நிலவரம்  நிதிக் கம்பெனிகளை எப்படி எல்லாம் மாற்றுகிறது என்பதை இவர்கள் அறிவார்களா? மற்ற நிதிக் கம்பெனிகளுடன் போட்டி போட்டு முன்னால்  நிற்க நாம் எப்போதும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்ற கருத்து ஏன் இவர்கள் மூளைக்கு இன்னும் எட்டவில்லை? நாம் தயாராக இல்லாவிட்டால் நமது வேலை பறி  போய் புதிய வேலை தேட வேண்டும் என்ற உண்மை ஏன் இவர்களுக்குப் புரியவில்லை?

மேரிக்கு அதற்கான பதில் தெரிந்திருந்தது.  இவர்கள் இந்த டிபார்ட்மெண்டில் ரொம்ப காலமாகவே இருந்து கிணற்றுத் தவளைகளாக மாறி விட்டவர்கள். பெரிய பிரச்சினை வந்து கம்பெனியை மூடுவதற்கு முன்னால் நாம் ‘ரிடயர்ட்’ ஆகி விடுவோம் என்ற நம்பிக்கை அவர்கள் அனைவருக்கும் இருந்தது.  மேரி தன்னைப் பற்றி நினைத்துக் கொண்டாள். தனக்கு அந்த மூட நம்பிக்கை இருக்கிறதா?

போன் மணி அவள் எண்ணத்திற்கு முற்றுப் புள்ளி வைத்தது. நனவுக்கு வந்தாள். அதைத் தொடர்ந்து வந்தன தொடர் வெடிகுண்டு போல ஒரே களேபரம் !

ஒரு முக்கியமான வாடிக்கையாளரின் பைலைக் காணவில்லை. இந்த டிபார்ட்மெண்டில் தான் கடைசியாக இருந்ததற்கான ஆதாரம் இருந்தது.  அடுத்தது வேறு டிபார்ட்மெண்டிலிருந்து இங்கே வந்து ஒருவருடன் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதெல்லாம் போதாது என்று ஒரு கம்பெனி வக்கீலோடு பேசும்போது போனை மூணு தடவை வேணுமென்றே ‘கட்’ செய்து விட்டார்கள் என்ற குற்றச்சாட்டு வேறு.  ஒரு முக்கியமான ப்ராஜெக்டுக்கு இன்று தான் கடைசி நாள். அதிலே வேலை செய்யும் ஆள் உடம்பு சரியில்லை என்று இன்று வரவில்லை. பிரச்சினைகள் ஒன்று மாற்றி ஒன்றாக வந்து கொண்டிருந்தன. இவற்றையெல்லாம் யோசித்துக் கொண்டே மதிய உணவிற்குக் கிளம்பினாள் மேரி. !

இந்த டிபார்ட்மெண்டுக்கு வந்த பிறகு மதிய உணவிற்குக் கேண்டீன் போகாமல் வெளியே போய் சாப்பிடும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தாள் மேரி. கேண்டீனில் மற்ற சீனியர் மேனேஜர்கள் இவள் டிபார்ட்மெண்டைப் பற்றி சொல்லும் குறைகளைக் கேட்க முடியவில்லை. இதைத் தவிர்க்கவே அவள் வெளியே போய் சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்.

அப்படியே ஆபீஸுக்கு வெளியில் உள்ள ஒரு சின்ன மலைக்கு அருகே இருக்கும் ஏரிக்கரையில் இருக்கும் உணவு விடுதியில் தான் சாப்பிடுவாள். நல்ல அமைதியான இடம். அப்பப்போ உல்லாசப் பிரயாணிகளும் வருவார்கள். மனதுக்கும் இதமாக இருக்கும் அந்த இடம் !

அவள் இருக்கையை விட்டு இரண்டடி கூட நடக்கவில்லை. மேஜை மீது இருந்த போன் அடித்தது.ஸ்கூலிலிருந்து பையன் கூப்பிடுவானாயிருக்கும், காலையிலேயே ஜலதோஷம், ஸ்கூலுக்குப் போக மாட்டேன் என்று அடம் பிடித்தான். திட்டி அனுப்பி வைத்தாள். இப்போ என்ன பிரச்சினையோ? போனை எடுத்தாள்.

மீனங்காடி (தொடர்)

மீனங்காடி

image

மேரி  அவளது மூன்று வருட வேலையில் முதல்தர மேனேஜர் என்று பெயர் வாங்கியிருந்தாள்.

ஆபீஸுக்குசீக்கிரம் வந்து லேட்டாக வீடு திரும்பும் வர்க்கம் அவள் இல்லை என்றாலும் அவளது மேஜையில் பேப்பர் எப்பொழுதும் தங்கியிருக்காது. அவள் வேலையை அவ்வளவு அக்கறையுடன் செய்வதில் சிறிய சிறிய சிக்கல்களும் இருந்தன. மற்றவர்கள் தங்கள் வேலையையும் அவளிடம் தள்ளி விடத் துவங்கினர். மேரி செய்தால் இன்னும் சிறப்பாக அமையும் என்று சொல்லியே தங்கள் வேலையை அவளை விட்டு செய்யச் சொல்லுபவர் பலர்.

மேரி மிகவும் பொறுப்புடன் வேலை செய்கிறவள். மற்றவர்கள் சொல்லும் யோசனைகளை அக்கறையுடன் கேட்பாள்.  அதனால் எல்லோரும் அவளை எப்போதும் மதிப்போடுதான் பேசுவார்கள்.  “ மேரி என் குழந்தைக்குக் கொஞ்சம் உடம்பு சரியில்லை ! நீ என் வேலையைக் கொஞ்சம் கவனிச்சுக்கிறியா?” என்று யார் கேட்டாலும், “கவலைப்படாதே ! நான் பார்த்துக் கொள்கிறேன்” என்று சொல்வதுதான் மேரியின் பதிலாக இருக்கும்.  அவள் பார்த்த வர்த்தகப் பிரிவு மிகவும் சௌகரியமாக இருந்தது.  அவளும் டென்ஷன் ஏற்றிக் கொள்ளாமல் மற்றவர்களையும் டென்ஷன் படுத்தாமல் அழகாக நிர்வாகம் செய்து வந்தாள். கூட வேலை செய்பவர்களும், மேலதிகாரிகளும் மேரியையும் அவளது டீம் பற்றியும் பெருமையாகவே பேசுவார்கள்.

இதற்கு நேர்மாறாக ‘வரவு செலவு டிபார்ட்மெண்ட்’ ஒன்று மூன்றாம் மாடியில் இருந்தது. அந்த மோசமான டிபார்ட்மெண்ட் நிதிக் கம்பெனியில் மிகவும் பிரசித்தி பெற்றது. திருத்தவே முடியாத, தண்டமான, மோசமான, சொன்னால் கேட்காத – இன்னும் அலுவலக அகராதியில்  என்னென்ன கெட்ட வார்த்தையில்  திட்ட முடியுமோ அத்தனையையும் தாங்கிக் கொண்டிருப்பது அந்த ‘டிபார்ட்மெண்ட்’.  ‘ குப்பைதொட்டி’ ‘சாவு கிராக்கி’ என்ற சிறப்புப் பட்டப் பெயர்கள் கூட அதற்கு உண்டு.  இதிலே என்ன கொடுமை என்றால் நிதிக் கம்பெனியின் மற்ற எல்லா டிபார்ட்மெண்ட்களும்இத்துடன் தொடர்பு கொள்ள வேண்டிய கட்டாயம் இருந்தது. ‘வரவு செலவு’  எல்லோருக்கும் பொது. ஆனால் அதில் இருக்கிற சாவு கிராக்கிகளுடன் பேச எல்லோருக்கும் கொஞ்சம் பயம் தான்.

image

இன்றைக்கு அந்த ‘குப்பைத் தொட்டியில்’ என்ன நடந்தது தெரியுமா?’  அங்கே நடக்கிற சண்டை, அடிதடி, வாக்குவாதம் பற்றி இப்படித்தான் மற்றவர்கள் பேசிக் கொள்வார்கள்.  அங்கே ஏதாவது வேலையாகப் போன அத்தனை  பேரும் “ இது என்ன இழவு டிபார்ட்மெண்டோ” என்று அலுத்துக் கொண்டு தான் போவார்கள். மேரியின் கூட வேலை செய்கிறவன் ஒரு நாளைக்குச்  சொன்னான்“ மேரி இந்த வருடம் நோபல் பரிசு யாருக்குக் கிடைக்கப் போகிறது தெரியுமா? நம்ம மூணாம் மாடி சாவு கிராக்கி டிபார்ட்மெண்டில் உயிருள்ள ஒருவரைக் கண்டு பிடிப்பவர்க்குத் தானாம்”. குலுங்கிக் குலுங்கிச் சிரித்தாள் மேரி !

சில வாரங்களுக்கு முன்பு மேரிக்கு பதவி உயர்வு வந்தது. அவள் பயந்தபடியே அவளை அந்த மூன்றாம் மாடி ‘வரவு செலவு’ டிபார்ட்மெண்டுக்கு பொறுப்பாளியாகப் போட்டார்கள். உயர் அதிகாரிகளுக்கு மேரியைப் பற்றித் தெரியும்.  அவள் மீது பெரிதும் நம்பிக்கை வைத்திருந்தார்கள். ஆனால் அவளுக்குத்தான் தயக்கமாக இருந்தது, இப்போது இருக்கும் வேலை மிகவும் சந்தோஷமான வேலை. சுறுசுறுப்பான திறமையான மக்கள் ! அதுமட்டுமல்ல !  ஜான் மறைவதற்கு முன்பே அந்த டிபார்ட்மெண்டில் இருந்து வந்தாள். எல்லோருக்கும் ஜானைப் பற்றி மேரியைப் பற்றி நன்றாகத் தெரியும். அவள் சொந்த வாழ்க்கையில் கஷ்டப் பட்ட போதெல்லாம் துணையாய் நின்றவர்கள் அவள் டீம் மக்கள் !.

image

ஜான் மறைவதற்கு முன்னால் மேரி எந்த அடாவடி வேலையையும் எடுத்துக் கொள்ளத் தயாராக இருந்தாள். ஆனால் இப்போது ‘மூணாம் மாடி மூணாம் பேஸ்து’ என்று சிலர் சொல்வதைக் காதாலேயே கேட்டாள். அதைப் பற்றி நன்கு  தெரிந்து வைத்துக் கொண்டிருந்தாள்.  ஜானின் கடைசிக் காலத்தில் ஆஸ்பத்திரி செலவிற்கு வாங்கின கடன் இன்னும் அடையவில்லை. மிகப் பெரிய தொகை அது.  இல்லையென்றால் ‘ இந்த பதவி உயர்வும் வேண்டாம் !  அந்த மூணாம் மாடி வேலையும் வேண்டாம்” என்று உதறி விட்டுப் போயிருப்பாள். அவளுக்குப் பதவி உயர்வை விட அந்த வேலை, சம்பளம் எல்லாம் மிகவும் தேவையாய் இருந்தது. மனதைத் திடப்படுத்திக் கொண்டு புதிய பொறுப்பை ஏற்றுக் கொண்டாள்.  இரண்டு வருடங்களில் மூன்று பேர் வந்து ஓடிப்போன டிபார்ட்மெண்ட் அது !.

(தொடரும்) 

மீனங்காடி (தொடர்)

மீனங்காடி

 

( உலகப் பிரசித்தி பெற்ற ‘ THE FISH’ என்ற Stephen C Lundin , Harry Paul and John Christensen எழுதிய புத்தகத்தின் தமிழ் வடிவம். தமிழ் வாசகர்களுக்காக இடம் ,பெயர்,மேற்கோள் எல்லாம் மாற்றப்பட்டுள்ளது)

 

image

 கோவாவில் அது ஒரு மோசமான மழைக்காலம். வானம் மப்பும் மந்தாரமாக இருந்தது.  ஈரமான, குளிரான, தயக்கமான மயக்கம் தரும் திங்கட்கிழமை அன்று. மதியத்துக்கு மேல் மேக மூட்டம் விலகலாம்  என்கிறது வானிலை அறிக்கை.  இது மாதிரி நாட்களில் தான் மேரிக்கு சென்னையின் அருமை தெரியும்.

‘என் வாழ்க்கை எப்படி மாறிவிட்டது?’ மேரி தனது மூன்று வருடங்களை மனதில் மெல்ல வருடிப்பார்த்தாள். அவள் கணவன் ஜானுக்கு கோவாவில்  ஐ டி கம்பெனியில் வேலை கிடைத்டதும்  எவ்வளவு சந்தோஷத்துடன் வந்தார்கள். பழைய வேலைக்கு நோட்டீஸ் கொடுத்து, வீட்டை காலி செய்து, புது ஊரில் புது வீடு பிடித்து, குழந்தைகளுக்கு காப்பகம் கண்டுபிடித்து எல்லாவற்றையும் ஒரே மூச்சில் செய்தார்கள். அவளுக்கும் கோவாவில் ‘முதல் நிதிக் கம்பெனியில்’  வர்த்தகப் பிரிவில் வேலை கிடைத்தது.

 

ஜானுக்கு இந்த ஐ டி கம்பனி மிகவும் பிடித்திருந்தது. சாயங்காலம் வீ ட்டுக்கு வரும் பொது மிகவும் சந்தோஷத்துதுடன் வருவான். கம்பெனியில் செய்யும் வேலை மற்றும் அங்கு நடக்கும் முக்கிய நிகழ்ச்சிகள்  எல்லாவற்றையும் மேரியிடம் சொல்லி மகிழ்வான். ஜானும்  மேரியும்   குழந்தைகளைச்  சீக்கிரம் தூங்கப்பண்ணிவிட்டு வெகுநேரம் சிரித்து மனம் விட்டு பேசி விளையாடிக்கொண்டே இருப்பார்கள். மேரியுடைய நிதிக் கம்பெனியைப் பற்றியும் மற்ற உடன் வேலை பார்ப்பவர்களைப் பற்றியும் ஆர்வத்தோடு கேட்பான். பார்ப்பவர்கள் கண்  படும் அளவிற்கு இருவரும் நல்ல நண்பர்கள் போல – காதல் பறவைகள் போலப்  பறந்து திரிந்தனர். ஒருவரை ஒருவர் பார்க்கும் போது அவ்வளவு துள்ளல் மகிழ்ச்சி.

                            image

எல்லாவற்றையும் அழகாகத் திட்டம் போட்டிருந்தனர் மேரியும் ஜானும் – ஒன்றே ஒன்றைத் தவிர. ஒரு வருடம் ஆன பிறகு  ஜான் அடி வயிற்றில் ஏதோ ரத்தப் போக்கு என்று ஆஸ்பத்ரிக்குப் போனான். ரத்தப் போக்கு அதிகமாகி அதிலேயே  அவன் திடீரென்று  இறந்து  போனான். சொல்லிக் கொள்ள, அழ, விடை பெற எதற்கும் அவனுக்கு நேரமில்லை.

அது இரண்டு வருடம் முன்பு. ஊருக்கு வந்து முழுவதுமாக ஒரு வருடம் கூட ஆகவில்லை அந்த சமயம். அதை நினைக்கும் பொழுது மேரியின் உள்ளம் சுக்கு நூறாக

வெடித்தது. தன்னைக் கட்டுப் படுத்திக் கொண்டாள் . ‘எனது சொந்தக் கவலைபற்றி நினைக்க இப்போது நேரமில்லை.

திங்கட்கிழமையில்  ஆபீசில் ஏராளமான வேலை இன்னும் பாக்கி இருக்கிறது’.   

(தொடரும்)