நேற்று இலக்கிய சிந்தனை மற்றும் குவிகம் இலக்கியவாசல் இணைந்து நடத்திய கூட்டம், சீனிவாசகாந்தி நிலையத்தில்.
ஓவியர் அமுதன் இலக்கியசிந்தனையின் பேச்சாளர்.

இவர் கண்ணதாசனுடன் பணி ஆற்றியவர். இந்த வகையில் கவிஞர் பற்றி நாம் அறிந்திராத பல நிகழ்ச்சிகளைக் கூறினார்.
இவரின் கூற்றின்படி காற்றுமண்டலம், புகைமண்டலம் போல்.. எண்ணங்களுக்கும் ஓர் மண்டலம் உண்டு. அதனால்தான் நாம் நம் கை கொண்டுதான் வரைகிறோம். ஆனாலும் அந்த ஸ்ட்ரோக் வந்து விழுந்தது என்று கூறுகிறோம். அதேபோல் பாட்டில் அந்த வரி வந்து விழுந்தது என்றும் சொல்கிறோம். நம் எண்ணத்தில் உதித்த வார்த்தைகளை எங்கிருந்தோ வந்து விழுந்தது என்று ஏன் கூறுகிறோம்…. அது இந்த எண்ண மண்டலம்தான். இங்கே சுழலுகின்ற எண்ணங்கள் எல்லோர் மீதும் விழுவதில்லை. யார் அதற்க்குத் தகுதி ஆனவரோ அவருக்கே இது பிராப்தம்.
அப்போது தகுதி என்பது எப்படி அளந்து பார்ப்பது? நம் sincerity அந்த தகுதி. எவ்வளவுக்கெவ்வளவு செய்யும் வேலையை நாம் நம் முழு மனதுடன் செய்கிறோமோ…. அப்போது இந்த அற்புத எண்ணங்கள் தானாகவே வந்து விழும்.
இதற்க்கு கண்ணதாசனை ஓர் உதாரணமாகச் சொன்னார்.
நாம் அனைவர் கேட்டு ரசித்த பாடல்….அவள் ஒரு நவரச நாடகம்….படம் உலகம் சுற்றும் வாலிபன். இந்த பாடல் எழுதப்பட்டபோது, கவிஞரும் திரு MSVஅவர்களும் பாடல் கம்போஸிங்கில் இருந்தனர். சாதாரணமாக திரைப்படப் பாடலுக்குப் பன்னிரெண்டு வரியில் பாடல் இருந்தால் போதுமானது. இந்தப் பாடல் எழுதப்படுவதற்கு முன்பே கவிஞரிடம் ஓர் வேண்டுகோள் வைக்கப்பட்டது. அந்தப் பாடல், ‘காலங்களில் அவள் வசந்தம்போல்’ ஒர் all time memory hit பாடல் போல் இருக்கவேண்டும் என்று.இதை மனதில் வைத்துக்கொண்டு, கவிஞர் பாடல் வரிகள் சொல்லத் தொடங்கினார். இருபது,முப்பது,நாப்பது…..வரிகள் சொல்லிக்கொண்டே போனார். MSV அவர்களும்…..அண்ணே… பன்னிரெண்டு வரிகள் போதும். இவ்வளவு வரிகள் சொல்லுகிறீர்கள்? போதும்….
கண்ணதாசன் நிறுத்தவில்லை….
இல்லை என் மனதில் இன்னும் அந்த வரிகள் வந்து விழவில்லை….அது வரை நான் நிறுத்தமாட்டேன் ..
கடைசியாக அந்த வரிகள் வந்து விழுந்தன…
அவை….
தழுவிடும் இனங்களில் மான் இனம்….
தமிழும் அவளும் ஓர் இனம்…..
நிறைய வரிகள் கொடுத்துவிட்டேன். நீ எதை வேண்டுமானாலும் எடுத்துக்கொள் …. கடைசியாக சொன்ன இரு வரிகள் நிச்சயம் இருக்கவேண்டும்….
பதினந்து வரிகள் கொடுத்துவிட்டுப் பணத்தைப் பெற்றுக் கொண்டு போயிருக்கலாம்….
ஆனால்…செய்யவில்லை…
இது sincerity … dedication.
அவருக்கு வார்த்தைகள் வந்து விழுந்தது…
ஆமாம்….
இந்த வார்த்தை மண்டலம் போல்….
கற்கள் மணடலம் ஒன்று இருக்காதுதானே….
(நன்றி : லதா ரகு )
குவிகம் இலக்கிய வாசல் சார்பாக திருமதி சரஸ்வதி “இளைஞர் விரும்பும் இலக்கியம்’ என்பதுபற்றி அழகாகப் பேசினார்.

சுரேஷ் அவர்களின் நன்றியுரையுடன் கூட்டம் இனிது முடிந்தது.

