நண்பர் காந்தி அவருக்கு அஞ்சலி !!

Image may contain: 1 person, text that says 'Prof. A. Gandhi Dean Saveetha Engineering College In Loving Memory In this sorrowful time, we would like to exteno to you our heartfelt condolences. May your soul Rest in Peace.'

                                                                                                                 ( நன்றி சசிகுமார் முகநூல்) 

 

 

Image may contain: 1 person, standing and indoorஎங்கள் இனிய நண்பர் காந்தி !

எங்களை  ஆழாத்  துயரில்  ஆழ்த்தி

தன் இனிய நினைவுகளை மட்டும்  அளித்துவிட்டு

இறைவனடி சேர்ந்துவிட்டார்.! 

 

கிட்டத்தட்ட ஐம்பது வருட நட்பு! 

 

சிரித்த முகம் ! செயலில் தெளிவு!  கடமையில்  கண் !  அன்பின் வடிவம் ! 

பண்பில்  குன்று! பார்வையில்  இனிமை !  பாசத்தில் மழை !

பேச்சில் திறமை ! கொள்கையில் பிடிப்பு! நேர்மையின் சிகரம்!

கல்லூரிக்கு பேராசிரியர் ! மாணவர்க்கு  தோழர் !

குடும்ப விளக்கு! உறவுக்கு தூண் !

கட்சியில் தலைவர்! காட்சிக்கு எளியர்  ! இன்னும் எத்தனையோ !

 

இவை ஒவ்வொன்றும்  வெறும்  வார்த்தைகள் அல்ல!  சத்தியம் !

இவரது  வாழ்வின் ஒவ்வொரு அத்தியாமும் அவற்றை நிரூபிக்கும்!

 

 

                                                        எங்கள் நட்பு மலரின் அழகிய இதழ் ஒன்று உதிர்ந்துவிட்டது ! 

                                             எங்கள் பஞ்ச முக விளக்கில் ஒரு திரி மட்டும் தனித்து விண்ணில் எரிகின்றது !

                                                          எங்களுக்கு இவரும் ஒரு மகாத்மா தான் !  வாழ்க நீ எம்மான் ! 

 

                      காந்தி!, உங்கள் பிரிவால் வாடும்,: சுந்தரராஜன்,  சந்திரமோகன், சிந்தாமணி, சந்திரசேகரன்

 

 

குண்டலகேசியின் கதை -3 – தில்லை வேந்தன்

குண்டலகேசியின் கதை -3

KANKALAI #குண்டலகேசி-அறிமுகம் #சங்க இலக்கியம் #ஐம்பெரும் காப்பியங்கள் - YouTube

முன் கதைச் சுருக்கம் :

A0111

பூம்புகார் நகரத்துப் பெருங்குடி வணிகனின் அருமை மகள் பத்திரை.
சிறு வயதில் தாயை இழந்தாலும் அன்புத் தந்தையின் அரவணைப்பில் மகழ்ச்சி அடைந்தாள்..
ஒருநாள், அரசனின் வீரர்கள், கொடிய கள்வன் காளன் என்பவனைக் கொலைக் களத்திற்கு இழுத்துச் செல்வதைக் கண்டாள். அவன் மீது காதல் கொண்டாள்…….

குண்டலகேசி (மூலமும் உறையும்): By Praveen Kumar G by நாதகுத்தனார்

பத்திரை நிலை!

ஓதிய கல்வி, கேள்வி,
ஒன்றுமே உதவ வில்லை.
ஈதலும், அறமும் கொண்ட
இல்லதன் பெருமை விட்டாள்.
கோதிலாத் தந்தை காத்த
குலமுறை மரபும் விட்டாள்.
காதலால் நாணும் கெட்டாள்,
காரணம் அறிய மாட்டாள்

 

எயிற்றிலே நஞ்சை ஏந்தும்
எழில்கொளும் அரவம் உண்டு
வயிற்றிலே முத்தைத் தாங்கும்
வனப்பிலாச் சிப்பி உண்டு
பயிற்றியே விளக்கும் கல்வி
பாங்குடன் கற்ற போதும்,
கயிற்றினால் ஆடும் பாவை
காதலால் ஆனாள் பாவை.

( எயிற்றில் — பல்லில்)

தோழியிடம் தன் காதலைக் கூறுதல்

என்னுயிர் அனையாய் நானிங்கு
இயம்பிடும் சொற்கள் கேளாய்!
இன்னுயிர் தங்க வேண்டின்
இவனையான் மணக்க வேண்டும்
மின்னெனச் செல்வாய், எந்தை
விரும்பிட இதனைச் சொல்வாய்
மன்னனைப் பார்த்துப் பேசி
மாற்றிட வேண்டும் ஆணை.

 

தோழியின் அறிவுரை

கள்ளினை அமுதாய் எண்ணிக்
களிப்புடன் பருக லாமோ?
முள்ளினை மலராய் எண்ணி
முடிதனில் சூட லாமோ?
புள்ளினை வேடன் கையில்
புகலெனக் கொடுக்க லாமோ?
கள்ளமும் சூதும் கொண்ட
கயவனை விரும்ப லாமோ?

 

செய்தி அறிந்த தந்தை புலம்புதல்

மங்கையின் தோழி செய்தி
வணிகனைக் கண்டு சொன்னாள்.
வெங்கதிர் தளர்ந்து மேற்கில்
வீழ்வதைப் போலச் சாய்ந்தான்.
தங்கிய புகழும் போனால்,
தள்ளரும் மானம் போனால்,
எங்குலப் பெருமை போனால்,
இங்குநான் வாழேன் என்றான்.

 

இந்தவோர் இழிவு நேர
என்பிழை செய்தேன் கொல்லோ!
முந்தையோர் முறைகள் யாவும்
முடிந்தன கொல்லோ! என்றன்
சொந்தமும் நட.பும் ஊரும்
சொல்வதைப் பொறுப்பேன் கொல்லோ!
சிந்திடும் கண்ணீர் மல்கச்
செப்பினன் உயிரைத் தாங்கி.

பத்திரையிடம் தந்தை கூறுவது

வழிவழியாய் வந்தகுடிப் பெருமை விட்டு
வழிப்பறிசெய் கொள்ளையனை விழைந்தாய் போலும்
பழிவருமே தந்தைக்கு மறந்தாய் போலும்
பற்றென்மேல் வைத்ததெல்லாம் துறந்தாய் போலும்
விழிவிரித்த வலையினிலே விழுந்தாய் போலும்
வெல்லுமதி முழுதினையும் இழந்தாய் போலும்
அழிவென்ற வழிவிரும்பி நடந்தாய் போலும்
அன்புடனே சொல்கின்றேன், கடந்து போவாய்.

கேட்டவை எல்லாம் தந்தேன்
கேட்டினைத் தரவே மாட்டேன்.
காட்டுவாழ் புலிஅன் னானைக்
கடிமணம் புரிய ஒப்பேன்
ஊட்டியே வளர்த்த பெண்ணை
உயிருடன் இழக்க மாட்டேன்
நாட்டினில் வேறு நல்லோன்
நன்மணம் செய்து வைப்பேன்.

 

பத்திரை மறுமொழி.

உளத்தினால் விரும்பி விட்டால்
உறுமணம் என்றே சொல்வர்.
வளத்தினால், புகழால் ஓங்கி
வாழ்வதால் தயங்கு கின்றாய்.
அளத்தலில் அன்பால் மெல்ல
அவனையான் திருத்தி, வாழ்வில்
விளைத்திடும் விந்தை கண்டு
வியந்துநீ மகிழ்வாய் என்றாள்.

 

பொம்மையால் மகிழ்ந்த காலம்
போனதே பின்னர் என்றன்
அம்மையால் மகிழ்ந்த காலம்
அதுவுமே போன தந்தோ!
இம்மையில் மகிழ மீண்டும்
இந்தவோர் வாய்ப்புத் தந்தால்
செம்மையாய் வாழ்ந்து காட்டிச்
சிறப்பதைக் காண்பாய் நீயும்!

(தொடரும்)

 

 

 

பிரியம்- ரேவதி ராமச்சந்திரன்

Sadabhishekam Samagri Kit, पूजा की किट, पूजा किट - Pooja Dhravyam 18, Hyderabad | ID: 11505880933

தலைப்பு சம்ஸ்கிருதத்தில் இருக்கிறதே என்று யோசிக்கிறீர்களா, கதையைப் படித்தவுடன் நீங்களே இந்த தலைப்புதான் இதற்குப் பொருத்தம் என்று எண்ணுவீர்கள். இதற்கு சமமான அன்பு, ஆசை, பாசம், நேசம், காதல் என்று எத்தனை வார்த்தைகள் இருந்தாலும் இத்தம்பதியரின் அந்நியோன்யத்தைப் ‘பிரியத்’தைத் தவிர வேறு எதனாலும் பறை சாற்ற முடியாது என்று நீங்களும் உணர்வீர்கள்.

‘கல்யாணமாம் கல்யாணம் 60 ஆம் கல்யாணம்’ என்று 20 வருடங்களுக்கு முன் 60 ஆம் கல்யாணம் முடிந்து, இதோ 10 நாட்களுக்கு முன் 80 ஆம் கல்யாணமும் ஆயிற்று அந்த தம்பதியினர் பார்வதி சங்கரனுக்கு. பெண், பிள்ளைகள் கல்யாணம் ஆகி தம்தம் குழந்தைகளோடு அமெரிக்காவில் உள்ளனர். இவர்கள் இருவரும் தற்போது சின்னதொரு வீட்டில் சிறிய சிறிய பூந்தொட்டிகளுடனும், அளவான சமையலுடனும் இரண்டாவது தனிக்குடித்தனம் நடத்திக் கொண்டிருந்தனர். மெதுவாக கோவிலுக்குச் செல்வதும், தம்தம் காரியங்களைத் தாமே செய்து கொள்வதுமாக நாட்களைக் கடத்திக் கொண்டிருந்தனர் .

அந்த வீட்டிற்குப் பக்கத்து வீட்டிற்குப் புதிததாக மணமுடித்த தமபதியினர் சதீஷும் ஹேமாவும் குடித்தனம் வந்தனர். துணி உலர்த்தும் போது பார்த்து பரிச்சயம் ஆன இந்த மூத்த தம்பதியினரின் பரிவும், பேச்சும், அக்கறையும் இவர்கள் இருவருக்கும் மிகவும் பிடித்துப் போய் விட்டன. அப்பப்ப கேரள ஸ்டைல் எரிசேரி, காளான், ஓலன் என்று சதீஷுக்குப் பிடித்த சமையல் ஐட்டங்களை பார்வதியிடமிருந்து கற்று வந்து ஹேமா சமைப்பாள். இப்படி அவர்களின் நட்பு நாளொரு மேனியும் பொழுதொரு சமையலுமாக வளர்ந்து வந்தது.

பார்வதி ஒரு நாள் சாயந்திரம் காபி குடிக்க சதீஷையும், ஹேமாவையும் அழைத்தார். காபி அருந்தி விட்டுக் கொஞ்ச நேரம் அளவளாவிக் கொண்டிருந்து விட்டு இவர்கள் இருவரும் வீட்டிற்கு வந்தனர். இதில் இரண்டு தம்பதியினர்க்கும் சுவாரஸ்யம் ஏற்படவே இப்பழக்கம் தொடரலாயிற்று.

சதீஷ் தினமும் காபி சாப்பிடும் நேரத்தில் ஒரு காட்சியைக் கவனித்தான். பார்வதி காபி குடுவையைக் கொண்டு வருவதும், அதைத் திறக்க முடியாமல் திணருவதும், தன் கணவர் சங்கரனை விட்டுத் திறக்கச் சொல்வதுமாக இருந்தாள். சதீஷுக்குத் தன் அம்மா நினைவு வரவே, அந்தப் பெண்மணியின் கஷ்டத்தைப் போக்க நினைத்தான். அந்தக் குடுவையை எளிதாகத் திறக்க ஒரு ஸ்பேனர் மாதிரி பொருளை வாங்கி வந்து அவர் கணவருக்குத் தெரியாமல் பார்வதியிடம் கொடுத்து ‘நீங்கள் என அம்மா மாதிரி. தினமும் குடுவையைத் திறக்கக் கஷ்டப்படுகிறீர்கள். இதன் உதவியால் திறந்து பாருங்கள். உங்கள் கஷ்டம் தீரும்’ என்று ஆதரவாகக் கூறினான். அதைக் கேட்டு பார்வதி ஒரு சிறு புன்முறுவலுடன் அதனை ஏற்றுக் கொண்டாள்.

ஆனால் இது என்ன! மறு நாள் பழையபடியே பார்வதி தன் கணவரை விட்டு குடுவையைத் திறக்கச் சொல்வதைப் பார்த்து சதீஷ் ஆச்சர்யப்பட்டான்! ஏன் நான் வாங்கிக்கொடுத்த ஸ்பேனர் சரியில்லையா அல்லது அவர்களுக்கு அதை உபயோகப்படுத்தத் தெரியவில்லையா என்று யோசித்தான். பார்வதி உள்ளே சென்றவுடன் இவனும் பின்னாலயே சென்று ‘ஏன் அம்மா ஸ்பேனர் சரியில்லையா, ஏன் அதை உபயோகப்படுத்தவில்லை’ என்று வினவினான். அதைக் கேட்டு பார்வதி ‘கண்ணா, நீ என மீது இவ்வளவு அக்கறையும் பரிவும் காட்டுவதற்கு நன்றி. என்னால் எதன் உதவியும் இல்லாமல் இந்தக் குடுவையைத் திறக்க முடியும்’ என்று சிறிது நிறுத்தினாள். அதைக் கேட்டு ஆச்சரியம் அடைந்த சதீஷ் ‘அப்ப ஏன் மறுபடியும் உங்கள் கணவரையேத் தொந்தரவு செய்கிறீர்கள்’ என்று கண்கள் விரிய, புருவம் சுருங்கக் கேட்டான். அதற்கு பார்வதி சொன்ன பதில் அவனை வியப்பின் எல்லைக்கே கொண்டு சென்றது. ‘ மகனே, என்னால் முடியாமல் நான் அவரிடம் செல்லவில்லை. இந்த மாதிரி அவரைக் கேட்பதால் அவர் மனத்தில் நான் இன்னமும் அவரைச் சார்ந்திருப்பது போலும், அவரில்லாமல் என்னால் இயங்க முடியாது என்றும், என வாழ்வின் ஆதாரம் அவர், இந்தக் குடும்பத்தின் தலைவர் அவர் என்ற உணர்வு அவர் மனதை விட்டு நீங்காதிருக்கவும் தான் நான் அவ்விதம் நடந்து கொள்கிறேன்’ என்றார். இதைக் கேட்ட சதீஷ் கண்கள் பணிக்க, மனம் நிறைக்க வியந்து மகிழ்ந்து வீடு திரும்பினான்.

பின்னால் வந்து கொண்டிருந்த சங்கரன் அவர்கள் இருவரும் அறியா வண்ணம் இதைக் கேட்டு விட்டு தனக்குள் சிரித்துக்கொண்டே ‘எனக்காகத்தான் பார்வதி இவ்வாறு நடந்து கொள்கிறாள் என்பது நான் மட்டுமே அறிந்த ரகசியம். அவள் மனம் கோணாதவாறு நானும் நடந்து கொள்வேன்’ என்று மனத்தில் நினைத்துக் கொண்டார்.

இவர்களது இத்தனைக்  கால வாழ்வின் இயல்பு ஒருவரைஒருவர் சார்ந்திருக்கும் இந்தப் ‘பிரியமே’ என்று புலனாகிறது அல்லவா!

 

குதூகலம் தரும் குழந்தை பாடல்கள் -ஜி.பி.சதுர்புஜன்-

குவிகம் வாசகர்களுக்கு வணக்கம்.

“குதூகலம் தரும் குழந்தை பாடல்கள்” என்ற பாடல் தொடரை உங்கள் வீட்டு குழந்தைகளுக்காக வழங்குகிறேன்.
எளிய நடையில் குழந்தைகளுக்கு ஏற்றவாறு ஒவ்வொரு பாடலையும் அமைக்க முயற்சிக்கிறேன். ஒவ்வொரு குவிகம் மாத இதழிலும் ஒன்று, இரண்டு அல்லது மூன்று சிறிய பாடகள் இடம் பெறும். பாடல்களை செல்வி சாய் அனுஷா அழகாக தன கொஞ்சும் குரலில் பாடிய வீடியோக்களையும் இத்துடன் இணைத்துள்ளோம்.
பார்த்து, கேட்டு மகிழுங்கள் !
இதுவரை இந்த பாடல் தொடரில் இடம் பெற்றவை:

1. பிள்ளையார் பிள்ளையார் – ஜூலை 2020
2. அம்மா அப்பா ! – ஜூலை 2020
3. ஹையா டீச்சர் ! – ஆகஸ்ட் 2020
4. இயற்கை அன்னை ! – ஆகஸ்ட் 2020
5. எனது நாடு – செப்டம்பர் 2020
6. காக்கா ! காக்கா ! – செப்டம்பர் 2020

 

 

7. செய்திடுவேன்!

 

உதயம் முன்னே எழுந்திடுவேன் !
உற்சாகமாய் நான் ஓடிடுவேன் !
உடற்பயிற்சிகள் செய்திடுவேன் !
மூச்சுப் பயிற்சியும் செய்திடுவேன் !

பச்சைக் காய்கறி சாப்பிடுவேன் !
பழமும் தினமும் நான் உண்பேன் !
எதிர்ப்பு சக்தியை வளர்த்திடுவேன் !
ஆரோக்கியம் நான் பேணிடுவேன் !

ஆலயம் நானும் சென்றிடுவேன் !
ஆண்டவனையே வேண்டிடுவேன் !
அம்மா அப்பா சொன்ன விதம் –
அழகாய் நானும் வாழ்ந்திடுவேன் !

உறவுகள் நானும் போற்றிடுவேன் !
உதவிகள் செய்தே வாழ்ந்திடுவேன் !
நல்ல பழக்கங்கள் மேற்கொள்வேன் !
நல்லவன் என்றே பெயர் எடுப்பேன் !

நாடும் வீடும் போற்றணுமே !
நாளைய உலகம் சிறக்கணுமே !
நானும் நீயும் சேர்ந்திடுவோம் !
நல்ல உலகத்தைப் படைத்திடுவோம் !

 

8. மயிலே ! மயிலே ! மயிலே !

 

மயிலே ! மயிலே ! மயிலே ! – உனக்கு
வண்ணத் தோகை தந்தது யாரு ?
வண்ணத் தோகை தந்து உன்னை
ஆடச் சொன்னது யாரு ?

குயிலே ! குயிலே ! குயிலே !- உனக்கு
இனிய குரலைத் தந்தது யாரு ?
குரலைத் தந்து கூ கூ என்றே
கூவச் சொன்னது யாரு ?

காட்டின் தலைவா சிங்கம் – உனக்கு
வீர நடையைக் கொடுத்தது யாரு ?
நடையைக் கொடுத்து காட்டுக்கே நீ
ராஜா என்றது யாரு ?

வீட்டைச் சுற்றும் பூனை – உனக்கு
மீசை தந்தது யாரு ?
மீசை தந்து உன் மேல் எனக்கு
ஆசை தந்தது யாரு ?

எத்தனை உயிர்கள் எத்தனை உயிர்கள் –
உலகில் உள்ளது பாரு !
உலகில் உள்ள அனைத்தும் பாரு –
இயற்கையின் பெருமையைக் கூறு !
இயற்கை என்பது என்ன ? தம்பி –
இறைவன் என்பதும் அதுதான் !
இறைவன் புகழைப் பாடு – தம்பி
இன்பம் சேர்த்தே வாழு !

 

 

 

 

 

 

காளிதாசனின் குமாரசம்பவம் எஸ் எஸ்

 

Jallandhara | Devon ke Dev... Mahadev Wiki | Fandom

டுந்தவம் புரியும் பார்வதியின் ஆஸ்ரமத்தில் சடாமுடி முனிவர் வந்தார்

தேஜஸ் கூடிய  பிரும்மச்சாரியை அதிதி பூஜைப் பொருளுடன் வணங்கினள்

பேசத் தெரிந்த அம்மனிதர் பேசும் முறைப்படிப் பேசத்தொடங்கினார் 

 

“பெண்ணே ! நீ உன் சக்திக்கு மீறாமல் சரியாகத் தவம் செய்கின்றாயா ?

உன் ஆஸ்ரமத்து  செடி கொடிகள்  உன்னைப் போல் அழகாக இருக்கின்றன

தர்ப்பையைத்  திருடும்  மானிடமும்  அன்பாய்  இருப்பாய் என எண்ணுகிறேன்

உன் கனிவான தோற்றமே சொல்கிறது நீ தவறின்றி  தவம் செய்தாய் என்று

தூய்மைத்  தவத்தால் கங்கையினும்  பெருமையைத் தந்தைக்குத் தந்தாய்   

தர்மம் அர்த்தம் காமம் இம்மூன்றில் நீ போற்றிய தர்மமே மிகச் சிறந்தது

உன் கனிவான பண்பைப்   போற்றுகிறேன் என்னை நண்பராக ஏற்றுக்கொள் 

நட்பு  முறையில்  ஒன்று கேட்க விழைகிறேன் விருப்பமிருந்தால் பதில் கூறு

நற்குடி , செல்வம், இளமை எல்லாம்  இருக்க ஏன் இப்படித் தவம் புரிகின்றாய்

கடுந்துயர்  நீங்க கடுந்தவம் புரிவர், துயர் வர உனக்கு  வாய்ப்பேயில்லை 

இமவான் இருக்க யார் உனைப் பழிக்க இயலும்? தவத்தின் காரணம் யாதோ?

இரவுப்பெண் போன்ற நீ ஆபரணம் இன்றி  மரவுரி தரித்து இருப்பது முறையா

நீயே ரத்தினம் போன்றவள் கணவனுக்காக தவமியற்றவும் தேவையில்லை

கணவனுக்கான தவமென முகமே சொல்கிறது, உனை மறுப்பவன் எவன்   

உன் அழகு முகத்தைச்  சடைகள் மறைத்தும்  வராத கடினசித்தன்  யாரோ 

உடல் மெலிய முகம் வாட தவம் புரியும் உனைக் காண வராதவன் எவன்?     

நீ விரும்பிய அந்தக்  கர்வி இன்னும் வராதது  நஷ்டம் அவனதன்றி உனதல்ல  

விரும்பும் கணவனை அடைய தவப்பலன் தருகிறேன் யாரவன் என்று சொல்

 

அறியாதது போல வந்தவர் கேட்டிட பார்வதி வெட்கித் தோழியை நோக்கினள்

தோழியும் பார்வதி உடலை வருத்தித் தவம் புரிவதன் காரணம் விளக்கினள்

 

அழகில் மயங்காத  சிவபிரானைத்  தவத்தால் அடைய விழைகின்றாள் 

மதனின் பாணம்  அவனையே எரித்தாலும் பார்வதி மனதில் ஆழத் தைத்தது   

அளவிலாக் காதல் சிவனிடம் பெருகிட  அவளுடல் அனலாய்க் கொதித்தது   

சிவனை நினத்து உருகும்  அவளைக் கண்ட தோழியர் கலங்கித் தவித்தனர்

கனவிலும் நனவிலும் சிவனையே எண்ணி  உறக்கம்தன்னை   துறந்தனள்

மனதில்  இருக்கும் எம்பிரான் காதலை ஏன் ஏற்கவில்லை எனத் தவிப்பாள்

பற்பல உபாயம் யோசித்து தவமே நல்வழி எனஎண்ணி இவ்வனம் வந்தனள்

அவளிட்ட செடிகள் மரமென துளிர்த்திடஅவள்காதல் எப்போது துளிர்க்கும்?

தவத்தில் வாடித் தவிக்கும் இவளுக்கு சிவபிரான் அருள் எப்போது கிட்டும்?  

 

உவகை கொண்ட பிரானும் ‘தோழி உரைத்தது உண்மையோ’ என வினவினர்

மலர்க்கரம் குவித்து வணங்கிய பார்வதி செவ்விதழ் திறந்து பேசலானாள் 

‘தோழியுரைத்தது உண்மையே! சிவனை அடையவே இத்தவம் ‘ என்றனள்

 

வந்திருந்த வணங்கா சடாமுடியர் பார்வதியிடம் மேலும் பேசலானார்

“பெண்ணே! உன் அழகை அலட்சியம் செய்த சிவனை விரும்புதல் முறையோ

பாம்பைச் சுற்றிய அவன் கரம் நின் மங்களக் கரத்தைப் பற்றுவது சரியா?

யானத்தோலுக்கும் வெண்பட்டிற்கும் பொருத்தம் எங்கேனும் உண்டோ?

உன்மலர்ப்பாதம் சுடுகாட்டின் கடுந்தரையில்  பதிவதை யார் பொறுப்பர்?

அவன் மேனிச் சாம்பல் உன் சந்தன மார்பில் படிவது தகாத செயலான்றோ?

மணவிழாவில் எருதின்மேல் நீவிர் ஊர்கோலம் சென்றால் ஊர் சிரிக்காதோ?

சிவனை அடைந்த சந்திரன் கலை இழந்தான்  நீயும் களை இழக்க சம்மதமா?   

அழகு, நற்குடி,செல்வம் இவைஏதுமில்லா சிவன் உனக்கு ஏற்றவன் அல்லன்

யாக பூஜையை மயானத்தில் செய்வது போன்ற  தகாத ஆசையை விட்டுவிடு!

 

அதிதி சொல் கேட்ட பார்வதி உதடுதுடிக்க கண்சிவக்க பதிலுரைத்தாள்

 

“ சிவபிரானின் அருமை பெருமை தெரியாத மூடரே அவரை நிந்திப்பர்    

 உலகைக் காக்கும் ஈசன் அவருக்கு எப் பொருளாலும் பயனில்லை

 பாம்பணி ஆயினும் சாந்தஸ்வரூபன் அள்ளிக் கொடுக்கும் வள்ளள் பிரான்

 உலகே உடலாய் அமைந்த சர்வேஸ்வரன் எவராலும்  அறியப்படாதவர்     

 அவர் உடல் பட்ட சுடுகாட்டுச் சாம்பலைத் தேவரும் சிரசில் கொள்வர்

யானை ஏறும் இந்திரனும் எருதில் பவனி வரும் சிவனின் பாதம் பணிவன்

பிறப்பில்லை என்ற  சொல் உண்மையுடைத்து ஆதி அந்தமில்லாதவர் அவர்

 உமது கூற்று சரியோ தவறோ பொருட்டில்லை, என்மனம் அவரையே நாடும்

தோழி, இவர் சொன்னது சொல்லவிழைவது எதுவும்எனக்குத் தேவையில்லை”   

 

கோபித்த பார்வதியை  சிவவடிவு காட்டி நகைமுகத்துடன் கரம் பற்றினார்

வெட்கமும் அச்சமும் சேர  பார்வதி மலையைச் சேர்ந்த நதிபோல் நின்றாள்

‘தவம் செய்து எனை அடைந்தாய், நான் உன் அடிமை’ என சிவபிரான் கூற

பெறர்க்கரிய பேறு பெற்ற பார்வதி செய்தவத்தின் பலன் முழுதும் பெற்றாள்  

இளநீர் – தீபா மகேஷ்.

பைசாவா சேத்தாலே ஒன்னும் காணல! இதுல இளநீரை டெய்லி குடிக்க முடியுமா? | படக் கட்டுரை | வினவு

 

சித்திரை மாதத்து வெயிலின் உக்கிரம் அந்த ஞாயிறு பிற்பகல் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது.

ஒரு வாரம் அலுவலக வேலையாய் வெளிநாடு சென்று விட்டு அன்று அதிகாலைதான் சென்னை திரும்பியிருந்தேன். அதனாலேயே என்னவோ வெய்யில் அதிகமாக இருப்பது போல தோன்றியது.

அந்த பயணத்தின் அலுப்பும், அசதியும் உடலில் இன்னும் நிறைய மிச்சம் இருந்தது. கண்களில் கூட லேசான எரிச்சல்.

வந்தவுடன் ஒரு நல்லெண்ணைக் குளியல் போட்டிருக்கலாம். சோம்பேறித்தனம்.

கண்டிப்பாக இன்று இளநீராவது குடிக்க வேண்டும்.

நான் ஒரு இளநீர் பைத்தியம். எல்லாருக்கும் ஏதாவது ஒரு பொருளின் மேல் இருக்கும் பற்றும் பைத்தியமும் எனக்கு இளநீர் மேல்.

மழை நாட்கள், குளிர் காலம் (அது எங்கு சென்னையில் இருக்கிறது?) தவிர, நான் சென்னையில் இருக்கும் பெரும்பாலான நாட்களில் இளநீர் குடிக்கத் தவறியது இல்லை.

கோடைக் காலம் என்றால் கேட்கவே வேண்டாம். தினம் ரெண்டு இளநீராவது குடித்து விடுவேன்.

எனக்கு நினைவு தெரிந்து முதலில் இளநீர் குடித்தது ஸ்கூல் படிக்கும் போதுதான். அப்போது எனக்கு மஞ்சள் காமலை வந்திருந்தது. தினமும் காலையில் அப்பா என்னை தி நகரில் இருக்கும் டாக்டரிடம் மருந்து சாப்பிட அழைத்துப் போவார்.

கசப்பான அந்த கஷாயத்தை குடித்து விட்டு திரும்பும்போது, என்னை சமாதானம் செய்யும் விதமாக பனகல் பார்க் அருகில் இருக்கும் இளநீர்க்காரனிடம் தினமும் இளநீர் வாங்கித் தருவார்.

“தண்ணி காயா ரெண்டு இளநீர் குடுப்பா”, என்று கேட்டு, ஒன்றை எனக்கு வெட்டி தரச் சொல்வார். நான் மிகுந்த ஆவலோடு அவன் அதை வெட்டுவதையே பார்த்துக் கொண்டிருப்பேன். அவன் காயின் மேல் பாகத்தை சீவி அதில் ஒரு ஸ்ட்ரா போட்டுத் தரும் போது ஏதோ ஆஸ்கார் அவார்ட் வாங்குவது போல நான் கை நீட்டுவேன். அந்த இளநீர் பூராவும் எனக்குத் தான் என்பதில் எனக்கு அலாதி சந்தோஷம்.

“இளநீர் உடம்புக்கு ரொம்ப நல்லதுமா. ரத்தத்த சுத்தம் பண்ணும். உடம்ப குளிர்ச்சியாக்கும்”, என்று அவருக்குத் தெரிந்த இயற்கை மருத்துவத்தை சொல்லுவார். எனக்கு அதைப் பற்றி எல்லாம் பெரிதாக அக்கறை இல்லை. ஆனால், இளநீர் நீரின் சுவை தொண்டை வழியே உள்ளே போக உடம்பெல்லாம் ஒரு புத்துணர்ச்சி பரவுவது போல தோன்றும்.

வீட்டில் உள்ள மற்ற எல்லாருக்கும் அந்த இன்னொரு காயில் இருக்கும் தண்ணீர் தான், பாவம், என்று நினைத்துக் கொள்வேன்.

இளநீரை பாட்டிலில் வாங்கி வந்து ஃப்ரிட்ஜ்ல் வைத்துக் குடிப்பதில் எல்லாம் எனக்கு உடன்பாடில்லை. சில மாதங்களுக்கு முன்னால் அமெரிக்கா போன போது அங்குள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் ‘கோகநட் வாட்டர்’ என்று அழகாக பேக் செய்து வைத்திருந்தார்கள். ஏன் நம் ஊரில் கூட இப்போது இளநீர் பேக் செய்து பாட்டிலில் வந்து விட்டது. ஆனால், ஏனோ அதை வாங்க மனம் ஒப்பவில்லை.

பாண்டி காய், பொள்ளாச்சி காய், செவ்வெளநீர் என்று நமக்கு இப்போது ‘சாய்ஸ்’ அதிகம். மேலும், நம் ஊரில் இளநீர் வாங்கி குடிப்பதே ஒரு தனி அனுபவம்.

“நல்ல தண்ணி காயா லேசா வழுக்கையோட குடுங்க,” என்று கேட்டு வாங்கி, கடைக்காரர் அதை அழகாக மேல் பக்கம் சீவி, லாவகமாக நடுவில் நெம்பி துளை போட்டுத் தரும் அழகை ரசித்துக் குடிக்க வேண்டும்.

நான் இளநீர் ஸ்ட்ரா போட்டு குடிப்பதை நிறுத்தி பல வருடங்கள் ஆகி விட்டது. ஸ்ட்ரா ப்ளாஸ்டிக் பொருள், சுகாதாரம் கிடையாது என்று காரணம் எல்லாம் தாண்டி, இளநீரை இரு கைகளில் பிடித்து, அதன் வாயோடு வாய் வைத்து, கடைசி சொட்டு வரை ரசித்துக் குடிப்பதில் ஒரு தனி சுகம் இருக்கத்தான் செய்கிறது.

இளநீர் கனவில் மூழ்கி இருந்தவளுக்குத் தாகம் அதிகமாகி எடுத்து ஏதாவது குடித்தால் தேவலை என்று தோன்றியது.

ஜில்லென்று கொஞ்சம் பானைத் தண்ணீர் குடித்தேன்.

டீ வி பார்த்துக் கொண்டிருந்த மகனிடம், ‘டேய், அம்மாக்கு இளநீர் வாங்கிட்டு வாடா’ என்றேன்.

அட போம்மா, உனக்கு வேற வேலை இல்லை என்பது போல என்னைப் பார்த்தான். ‘என்னால போக முடியாது, அப்பாவ போக சொல்லு,’ என்று அவரைக் கோர்த்து விட்டான்.

இதுதான் பிள்ளைகளின் சாமர்த்தியம். அவர் பாவமாக என்னைப் பார்த்தார்.

“கொஞ்ச நேரம் கழிச்சு டூ வீலெர்ல போய்ட்டு வரலாம்.  இப்ப வேணாம். ரொம்ப வெயிலா இருக்கு,” என்றார்.

இது நடக்கும் கதையாக எனக்குத் தோன்றவில்லை. ‘தெருமுனைதானே, நானே நடந்து போய் குடிச்சிட்டு வரேன்’, என்று வீம்பாக கிளம்பினேன்.

தெருவில் இறங்கி நடக்க ஆரம்பித்ததும் வெயில் கொஞ்சம் குறைந்திருப்பது போல தோன்றியது. காற்று கூட கொஞ்சம் அடித்தது.

நிழலில் நிறுத்தியிருந்த கார்களையும் என்னையும் தவிர தெரு வெறிச்சோடி இருந்தது.

எங்கள் தெருவின் இரு பக்கமும் நெடிந்து வளர்ந்து கிளை பரப்பியிருந்த குல்மொஹர் மரங்கள், சாலை முழுதும் மஞ்சள் பூக்களை இறைத்திருந்தன.

அவற்றை மிதிக்க மனமில்லாமல் சாலையின் நடுவில் நடந்தேன்.

தெரு முனையை நெருங்கும் போதே ஏமாற்றம் காத்திருந்தது.

எப்போதும் இருக்கும் இளநீர் வண்டி அங்கில்லை.

ஞாயிற்று கிழமை கூட இருப்பானே, ஏன் காணோம்? ஊருக்குப் போயிருப்பானோ? அவன் ஊரில் இல்லை என்று இவருக்கு முன்னாடியே தெரியுமோ? அதனால்தான் டூ வீலர்ல போலாம்னு சொன்னாரோ? என்றெல்லாம் யோசித்தபடி எனது அவசர குடுக்கைத்தனத்தை நானே திட்டிக் கொண்டேன்.

ஆனாலும் ‘இளநீர் தாகம்’ விடுவதாய் இல்லை. என்ன ஆனாலும் சரி. எவ்வளவு தூரம் நடந்தாலும் சரி. இன்று இளநீர் குடித்துவிட்டுதான் மறுவேலை, என்று முடிவு செய்துக் கொண்டேன்.

மெயின் ரோடில் கோயில் எதிரே ஒரு இளநீர்கடைக்காரர் இருப்பது நினைவுக்கு வந்தது.

இன்னும் கொஞ்சம் நடந்தால் அங்கே போய் குடிக்கலாம் என்று என்னை நானே உற்சாகப்படுத்திக் கொண்டு மறுபடியும் நடக்கத் தொடங்கினேன்.

மெயின் ரோடில் வெய்யில் அதிகமாகத் தெரிந்தது. வாகனத்தில் போய் பழக்கப்பட்ட அந்த ரோடில் நடக்கும் போது ரொம்ப தூரம் நடப்பது போல் தோன்றியது.

கொஞ்ச நேரத்திற்கெல்லாம் இது என்ன முட்டாள்த்தனமான பிடிவாதம் என்று தோன்ற ஆரம்பித்தது.

ஒரு வேளை அந்த கடையும் இல்லை என்றால்? இந்த வெய்யிலில் இவ்வளவு தூரம் நடப்பது ரொம்ப அவசியமா, அதுவும் ஊரிலிருந்து வந்தவுடனே? ஒரு நாள் இளநீர் குடிக்காவிட்டால் என்ன ஆகிவிடும்? என்றெல்லாம் என் சுய விமர்சனம் தொடர்ந்தது.

நல்ல வேளை தூரத்தில் கோவிலுக்கு எதிரே ஒரு பெரிய மரத்தின் நிழலில் இளநீர்க் கடை இருப்பது தெரிந்தது.

சட்டென்று நடையில் ஒரு சுறுசூறுப்பும் உற்சாகமும் வந்து ஒட்டிக்கொண்டன.  

ஒரு பெரிய தள்ளுவண்டி முழுதும் பெரிதும் சிறிதுமாய் காய்கள். வண்டிக்கு அருகில் ஒரு ப்ளாஸ்டிக் சேரில் கடைக்காரர்.

ஒரு அழுக்கான கரையேறிய லுங்கியில் தன்னுடைய பருத்த சரீரத்தை மறைத்திருந்தார். அவரது கண்கள் மூடி, வாய் லேசாக திறந்திருந்தது. நல்ல தூக்கத்தில் இருந்தார்.

அவர் மூச்சின் சீரான தாளத்திற்கேற்ப அவரது வயிறு மேலும் கீழும் ஏறி இறங்கியது.

வெப்பமோ, வாகனங்களின் இரைச்சலோ அவரை தொந்திரவு செய்ததாக தெரியவில்லை.

ஐயா என்று அழைத்து அவரை எழுப்பலாமா என்று தோன்றிய யோசைனையை சட்டென்று மாற்றிக் கொண்டேன்.

இந்த வெயிலில், சத்தத்தில் இப்படி தூங்குகிறார் என்றால் எவ்வளவு களைப்பு இருக்க வேண்டும். பாவம் என்ன அசதியோ, இரவு தூங்காமல் வேலைப் பார்த்தாரோ என்னவோ? யாருக்குத் தெரியும் இவர்களுடைய உழைப்பும், வாழ்க்கையும்?

என் மனம் தனக்குத் தெரிந்த விதத்தில் அவருடைய வாழ்க்கையைக் கற்பனை செய்து கொண்டது.

அவர் நிம்மதியாக தூங்குவதைப் பார்த்து ரசித்தபடியே, இளநீர் குடித்தத் திருப்தியோடு வீட்டை நோக்கி நடக்கத் தொடங்கினேன்.

 

மெய்நிகர் புத்தகக் கண்காட்சி

கொரானா காலத்தில்  புத்தகக் கண்காட்சி ! 

நடத்த முடியுமா? 

திரை  அரங்குகளைத் திறக்கவே உன்னைப் பிடி என்னைப் பிடி என்றிருக்கும் இந்தக் காலத்தில் திமு திமு என்று ஆட்கள் குவியும் புத்தகக் கண்காட்சியை  எப்படி நடத்துவது ? 

மக்கள் எப்படி வருவார்கள்? 

அரசு அனுமதி வழங்குமா? 

வழங்கும் !

காரணம் இது  மெய் நிகர் புத்தகக் கண்காட்சி ! 

VIRTUAL BOOK FAIR  !!!!

 

 

இதைக் கொண்டுவருபவர்கள் 

மற்றும் பலர்! 

இந்த மெய் நிகர் கண்காட்சி எவ்வாறு செயல்படப்போகிறது என்ற ஒரு கருத்துப் பறிமாற்றத்திற்கு செப்டம்பர் 26 அன்று நமது குவிகம் சார்பில் ஏற்பாடு செய்தோம். 

சிக்ஸ்த் சென்ஸ் புகழேந்தியும் அவரது புதல்வர் கார்த்திகேயனும் கலந்துகொண்டு இணையம் மூலம் எப்படி  இந்தப் புத்தகக் கண்காட்சி செயல்படும் என்பது பற்றி  ZOOM மூலம் விளக்கினார்கள் ! 

அமேசான் போன்ற மின்வணிக இணைய தளங்களில் புத்தகங்களை விற்பதில் பலவித பிரச்சினைகள் இருப்பதாக புதிப்பாளர்கள் கருதுகிறார்கள்.  அதில் குறைந்த விலை உள்ள புத்தகங்களைப் பதிவு செய்து விற்றால் நஷ்டம்தான் வரும்.   மேலும்  விற்பனைத்தொகை உடனே வராது.

புத்தகக் காட்சிக்குச் செல்ல இயலாதவர்கள், பல்வேறு காரணங்களால் அதைத் தவறவிட்டவர்கள் எதிர்காலத்தில் இந்த வசதியை அதிகம் பயன்படுத்திக் கொள்வார்கள்.

 இருந்த இடத்திலிருந்தே அவர்கள் புத்தகங்களை வாங்க இந்த ஏற்பாடு வசதியாக இருக்கும்.

வருடத்தின் 365 நாட்களிலும் ஒரு நாளின் 24 மணி நேரமும் இது செயல்பாட்டில் இருக்கும் என்பதால் எப்போது நினைத்தாலும் புத்தகங்களை வாங்கலாம்.

பதிப்பாளர்கள் தங்கள் புத்தகங்களை இந்தத்  தளத்தில் விற்க 10 புத்தகங்களுக்கு 3000 ரூபாய் செலுத்தவேண்டும். 1500 புத்தகங்களுக்கு 50000  ரூபாய் செலுத்தவேண்டும்.   

மெய்நிகர் புத்தகக் காட்சியில் அச்சுப் புத்தகம், மின் புத்தகம், ஒலிப் புத்தகம் என்று முழுவதுமே புத்தகம் விற்பனை மட்டுமே நடைபெறும். அதைப் பற்றிய செய்திகள் மட்டுமே இடம்பெறும். அதனால் புத்தக விற்பனை அதிக அளவில் நடைபெறும்

பதிப்பாளர், விற்பனையாளர், வாசகர் இவர்களுக்குப் பாலமாக இந்த அமைப்பு இருக்கும்.

இதில் பங்கேற்கும் அனைவருக்குமே தனைத்தனியாக வலைதளங்கள் இருக்கும். புத்தகங்கள் விற்ற தொகை அவரவர் வங்கிக் கணக்கிற்கு உடனே போய்ச் சேர்ந்துவிடும். அதற்குத் தேவையான கட்டண நுழைவு வாயில் வசதி (payment gateway option) ஒருங்கிணைப்பு (integration) இருக்கும்.

கொரானாப் பெருந்தொற்று காலத்தில் முன்னைவிட இணையம் வழியாகப் புத்தகங்கள் வாங்கும் பழக்கம் கணிசமான அளவு அதிகரித்திருப்பதைக் கண்கூடாகப் பார்க்க முடிகிறது. வருங்காலங்களில் இது இன்னும் அதிகரிக்கும் என்பதால் அந்த வாய்ப்பை அனைவரும்  பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

எல்லாவற்றிற்கும் மேலாக வாசிப்புத் தளத்தை விரிவாக்குவதுதான் இதன்  முதன்மை நோக்கம்.

மெய்நிகர் புத்தகக் கண்காட்சி  அமோக வெற்றி பெற வாழ்த்துக்கள் !

கீழ்க்கண்ட சுட்டியில் மெய்நிகர் புத்தகக்காட்சி குறித்த அனைத்து தகவல்களையும் பதிவேற்றப்பட்டுள்ளன. 

 http://thevirtualbookfair.com/

1) Technical Advantages :
http://thevirtualbookfair.com/adv-tam.html
http://thevirtualbookfair.com/adv-eng.html

2) Trade Benefits :
http://thevirtualbookfair.com/beni-tam.html
http://thevirtualbookfair.com/beni-eng.html

3)Subscriber Guidelines :
http://thevirtualbookfair.com/subs-tam.html
http://thevirtualbookfair.com/subs-eng.html

4)FAQs:
http://thevirtualbookfair.com/faq-tam.html
http://thevirtualbookfair.com/faq-eng.html

மூன்று கவிதைகள் – பானுமதி.ந

ராகு செவ்வாய் பலம் சேர எளிய பரிகாரம் - குமுதம் செய்தி தமிழ்

 

பட்டம்

இராகு பிடித்தது என் விண்மீனை
பனைஒலைப் பட்டம் கட்டி விரதமிருந்த
சிறு வயதில் ஆதவன் வெளி வரும் வரை
அத்தனை யம பயம்
வரவேற்கக் காத்திருக்கிறேன்
பின்னவரை இன்றும் கூட
என் விண்மீனில் தானாம்
பட்டம் கட்டாத படபடப்புடன்.
வழி பாத்திருக்கும் மணமகள்

 

நளன் - தமிழ் விக்கிப்பீடியா

 

தன் நலன்

பாதி கிழித்துப் போனான்.
மீதி வாழ்வில் என்னைக்
கோர்த்து தாய்வீடு அனுப்பிய
தயாளன்,முழுதும் கொடுத்திருப்பேன்
கேட்டிருந்தால் அவன் முன்பு கொண்டிருந்த
அன்பையே ஆடையென்றணிந்து
அவனை நள(ல)ன் என்காதீர்கள் இனியும்.

 

 

 

 

மாற்றம்

தீபச் சுடரொளி என தென் கிழக்கிலிருந்து
மிதந்து வந்த அந்த வான் தூதுவன்
திசை மாறி வட மேற்காய் சிவப்பு ஒளியில்
அலுமினிய வான் கோள் சொன்ன சேதி ஒன்று
வழிகாட்டியை மாற்றியவன் அந்த வித்தகன்.

கம்பன் சொல்லும் கதை ( இராமன் – பரசுராமர்) – கவி அமுதன்

 

ராமாயணம் – 1. பால காண்டம் – சரவணன் அன்பே சிவம்

கம்பன் சொல்லும் கதை

 கவிஅமுதன்

பரசுராமன் – இராமன் :

முன்கதை:

பரசுராமன் – இராமன் இருவருமே விஷ்ணுவின் அவதாரங்கள்.
இருவரும் ஒரே இடத்தில் சந்தித்தால்?
வால்மீகி – கம்பர் இந்தக் காட்சியை நமக்கு கதையாக்கியுள்ளனர்.
இராமன் – சீதை திருமணம் முடிந்து அவர்கள் மிதிலையிலிருந்து அயோத்தி வருகிறார்கள். தசரதனும் கூட வருகின்றார். வழியில், பரசுராமன் வருகிறார்.
பயங்கரமான அவர் வரவை கம்பர் ஒன்பது பாடல்களில் வர்ணிக்கிறார்.
பரசுராமன் வரவு கண்டு தசரதன் சோர்கிரான்.
இராமன் வினவுகிறான்:
‘யாரோ? இவர் யாரோ?’?
தசரதன் பரசுராமருக்குப் பூசை செய்து வணங்குகிறான்.
முனிவன் (பரசுராமன்) முனிந்திட்டான், சினந்திட்டான்.
இராமனைப் பார்த்து: ‘மிதிலையில் நீ செய்தவற்றைக் கேட்டு அறிந்தேன்.
உன் தோள் வலி காணவே வந்தேன். வேறு ஒன்றும் விஷயம் இல்லை”- என்கிறார்.
தசரதன் அபயம் வேண்டுகிறார்.
‘என் மகன் சிறியவன். விட்டு விடுங்கள்’ – கெஞ்சுகிறார்..

பரசுராமன் தசரதனை லட்சியம் செய்யாமல், இராமனைப் பார்த்து: ‘என்னிடம் இருக்கும் இந்த வில், நீ மிதிலையில் ஒடித்த வில்லுக்கு சமானமானது. இது என் தந்தை ஜமதக்கினிக்கு, மகாவிஷ்ணு அளித்தது. இதை வளைத்து நாணேற்றுவாய். அம்பும் தருகிறேன். இதை செய்வாயேல் பிறகு நாம் யுத்தம் செய்யத் தொடங்கலாம் – வல்லையேல் என வில்லை வளை”
கம்பன் வார்த்தைகளில்: –“வல்லை ஆகின , வாங்குதி. தனுவை’.

அதாவது, என்னுடன் யுத்தம் செய்ய உனக்குத் தகுதி இருக்கிறதா என்று முதலில் பார்க்கலாம் என்கிறார்.

கம்பர் வரிகளில்:
‘இராமனும் முறுவல் எய்தி, நன்று ஒளிர் முகத்தான் ஆகி.
“நாரணன் வலியின் ஆண்ட வென்றி வில் தருக”’  

தோளுற அந்த வில்லை வாங்கி சொல்லும்
இராமன் சொல்வதை – கம்பர் கவிக்கிறார்.

‘பூதலத்து அரசை எல்லாம் பொன்றுவித்தனை; என்றாலும் 
வேத வித்து ஆய மேலோன் மைந்தன் நீ; விரதம் பூண்டாய்.
ஆதலின் கொல்லல் ஆகாது; அம்பு இது பிழைப்பது அன்றால்,
யாது இதற்கு இலக்கம் ஆவது? இயம்புது விரைவின்!’என்றான்

அதாவது:
மண்ணில் உள்ள மன்னர்களை கொன்று குவித்தீர்.
தங்கள் தந்தை கொல்லப்பட்டதற்குப் பழி வாங்கினீர்.
அதைக் குற்றம் என்று சொல்லலாகாது.
ஆனால்.. என்னிடம் அம்பைக் கொடுத்தீர்.
வம்பை வாங்கினீர்.
இது வம்போ? அன்றி வீம்போ? நானறியேன்!
ஆயினும், உங்கள் ஆசைப்படி, இப்பொழுது இதை நாணேற்றி விட்டேன்.
இந்த அம்பு வீணாகலாகாதே!.
எந்த இலக்கை நோக்கி இந்த அம்பைச் செலுத்துவது?
இதற்கு பதிலை, விரைந்து சொல்வீரே!

இராமனுக்கே என்ன பிரச்சினை என்றால்:
அம்பு தொடுத்த பின் – அதை எய்யாமல் இருக்க இயலாது. மேலும் அம்பைத் தொடுத்தபின் உடனே எய்தாயாக வேண்டும். தாமதம் தகாது. அதனால் அந்த வார்த்தைகளைக் கூறினான்.

இராமன் வில்லை வளைத்ததும் பரசுராமனரது தேஜஸ் வாடியது.
அவரது அவதார சக்தியும் மறைந்ததாம். இராமனைப் பற்றி அவருக்கு எல்லாம் விளங்கிவிட்டது. இராமனைப் பார்த்து கூறுகிறார்:

கம்பன் வரிகள்:

‘எய்த அம்பு இடை பழுது எய்திடாமல், என்
செய் தவம் யாவையும் சிதைக்கவே!’ என
கை அவண் நெகிழ்தலும், கணையும் சென்று, அவன்
மை அறு தவம் எலாம் வாரி, மீண்டதே

இதன் கருத்து:
பரசுராமர்: நான் பெற்ற தவம் அனைத்தும் அழிய உனது அம்பை விடுவாயாக. அது கேட்டு, இராமன் வில்லில் இருந்து அந்தக் கணை புறப்பட்டு பரசுராமர் தவத்தை எல்லாம் வாரி- திரும்பியது.

பரசுராமன்: ‘எண்ணிய பொருள் எலாம் இனிது முற்றுக’. என்று இராமனை வாழ்த்தி விடை பெறுகிறான்.

பின்கதை:

இராமன் தந்தையைத் தொழுது அவர் துயர் போக்கினான்.
தசரதன் மகிழ்ந்து மகனை உச்சி மோந்தான்.
தேவர் மலர்மழை பொழிய, வருணனிடம் பரசுராமன் வில்லை சேமிக்கக் கொடுத்து விட்டு அயோத்திக்கு சென்றடைகின்றனர்.

யாம் ரசித்த இந்த கம்பன் கதையை யாவரும் ரசிப்போமே!

 

 

 

குவிகம் இலக்கியவாசல்

குவிகம் பற்றி சக பத்திரிகையாளர் விமர்சனம்:  

குவிகம் புதிய இதழில்  சில படைப்புகள் வாசித்தேன்
பெண்ணியம் பேசும் கவிதை மிக யதார்த்தம்
குண்டலகேசியை தில்லைவேந்தன் சிறப்பாகப் படம்பிடிக்கிறார்.
தாகூரின் நாட்டிய வழிபாடு மற்றும் ஆதிசங்கரர் பற்றிய கட்டுரைகள் புதிய செய்திகளைச் சொல்கின்றன.
108 வடைகள் கதைபோலில்லை. சொந்த அனுபவமாக மிளிர்கிறது.
ஆல்பம் ரேவதி ராமச்சந்திரன் சிறுகதையின் முடிவில் சேட்ஜின் மரணம் நெஞ்சைப் பிழிகிறது

வளவதுரையன் 

 

 

 

 

 

குவிகம் பொக்கிஷம் – துறவு – சம்பந்தன் (திருஞானசம்பந்தன்)

கலைமகள், வைகாசி 1943.

நன்றி- சுருதி வலைப்பக்கம்

Posted by என் செல்வராஜ் at 20:16:00

ஈழத்தில் போற்றுதலுக்குறிய எழுத்தாளர்களில் சம்மந்தன் என்கிற திருஞான சம்மந்தனும் ஒருவர். (1913-95)

சம்பந்தனின் முதலாவது சிறுகதை தாராபாய் 1938 ஆம் ஆண்டில் கலைமகளில் வெளிவந்தது. இவரது 11 சிறுகதைகள் கலைமகளில் வெளிவந்துள்ளன.[ இது தவிர மறுமலர்ச்சி, கலைச்செல்வி, கிராம ஊழியன், ஈழகேசரி ஆகிய இதழ்களிலும் இவரது சிறுகதைகள் வெளிவந்துள்ளன. 1966 ஆகத்து மாத விவேகி இதழ் “சம்பந்தன் சிறுகதை மலராக” அவரது ஐந்து சிறுதைகளைத் தாங்கி வெளிவந்தது. இலங்கை இலக்கியப் பேரவை 1998 ஆம் ஆண்டில் சம்பந்தன் சிறுகதைகள் என்ற சிறுகதைத் தொகுதியை வெளியிட்டது. இத்தொகுதியில் 10 சிறுகதைகள் அடங்கியிருந்தன.

1960களில் கவிதைகள் எழுத ஆரம்பித்தார். 1963 ஆம் ஆண்டில் இவர் எழுதத் தயாராக வைத்திருந்த சாகுந்தல காவியம் 1987 ஆம் ஆண்டிலேயே நூலாக வெளிவந்தது. கலைமகள் ஆசிரியர் கி. வா. ஜகந்நாதன் இந்நூலுக்கு அணிந்துரையும், பண்டிதமணி ஆசியுரையும் வழங்கியிருந்தனர்.

1990 ஆம் ஆண்டில் இலண்டனுக்குப் புலம்பெயர்ந்து சென்றார். அங்கிருந்து அவர் எழுதிய பாவிய மகளிர் எழுவர் பற்றிய நூல் தர்மவதிகள் என்ற தலைப்பில் அவர் இறந்த பின்னர் 1997 ஆம் ஆண்டில் வெளிவந்தது. இந்நூலுக்கு பேராசிரியர் கா. சிவத்தம்பி அணிந்துரை வழங்கியிருந்தார்.

சம்பந்தனின் நினைவாக ஆண்டுதோறும் “சம்பந்தன் விருது” எனும் இலக்கிய விருது வழங்கப்பட்டு வருகிறது.

 

 

சுருதி : எனக்குப் பிடித்த சிறுகதைகள் (7)

 

அவர் நிமிர்ந்திருந்தார். அவருக்குப் பின்புறமாகச் சற்று விலகி அந்தப் பாலசந்நியாசி உட்கார்ந்திருந்தார். பக்கத்தில் நின்ற ஆலமரம் வானத்தை மறைப்பது போல எங்கும் பரந்து வளர்ந்து கிடந்தது. சற்றுத் தொலைவில், அவர்களுக்கு எதிரில் நெருப்பு ஒரு மனித உடலைக் கழுவித் துடைத்து உண்டுகொண்டிருந்தது. அப்படி எரிந்துகொண்டிருந்த நெருப்பின் ஒளி வெகுதூரம் வரைக்கும் இருளைத் துரத்தி விரட்டியது. பிரமாண்டமான அந்த ஆலின் விழுதுகளின் நிழலும் அடிமரத்தின் நிழலும் பூதாகாரமாக எதிர்த்திசையில் படுத்துக் கிடந்தன.

இரண்டொரு நரை கண்ட பெரியவரின் கம்பீரமான முகமும், அடர்ந்து கறுத்த ரோமங்கள் பிரகாசிக்கும் இளையவரின் ஒளி நிறைந்த முகமும் தெளிவாகத் தெரிந்தன. பெரியவர் கண்களைப் பாதி மூடியபடி இருந்தார். மற்றவரோ அகல விழித்தபடி எதையோ கவனித்துக் கொண்டிருந்தார்.

எங்கும் நிசப்தம் நிலவியது. மரணத்தின் நிழல் படிந்த நிசப்தம் அது. அக்கினி அந்த உடலுடன் விறகையும் சேர்த்துத் துடைப்பதனால் உண்டான சப்தங்கள், அங்கே நிலவிய அமைதியை இடையிடையே மாசுபடுத்திக் கொண்டிருந்தன.

வாழுகிற மனிதனால் பெரிதும் அஞ்சி வெறுக்கப்படுகிற, கடைசியில் அவனுக்கு அடைக்கலம் தந்து ஆறுதல் செய்கிற இடம் அது. வேறுவகையில், அளவில், நிலையில், இன்பதுன்பங்களை மாறி மாறி அனுபவித்த தசை, நரம்பு, எலும்பு முதலிய எல்லாமே துகளாகி அந்த மண்ணின் உருவை ஏற்றுக் கொண்டு தாமும் அதுவாகி ஐக்கியமாகிவிட்டன.

ஒரு காலத்தில் யாரோ இரண்டு பகையரசர்களின் படைகள் ஒன்றோடொன்று மோதி நிர்மூலமான இடமும் அதுதானாம். அகால வேளைகளில் குதிரைகள் ஓடுகிற, கனைக்கிற, சத்தங்கள். யானைகள் பிளிறுகிற பேரொலிகள். வெட்டு, குத்து, கொல்லு என்ற இரக்கமற்ற குரல்கள், வேதனை தோய்ந்த மரண தாகத்தில் எழுகின்ற சோகமயமான ஓலங்கள் எல்லாம் கலந்து கேட்கும் என்று சொல்லுகிறார்கள்.

அது மயானம், இடுகாடும் சேர்ந்த மயானம். பேய்கள் தங்கள் விருப்பம்போல் விளையாடி மகிழும் இடம். எங்கே திரும்பினாலும் நிர்மானுஷ்யத்தின் சுவடுகள் தெரிந்தன.

பெரியவர் கண்களைத் திறந்து உற்றுப் பார்த்தார். எதிரில் அந்த உடல் கருகிச் சுருண்டு வெடித்து எரிந்து கொண்டிருந்தது. தீக்கொழுந்து எழுந்தும் அடங்கியும் வளைந்தும் நெளிந்தும் வேறு வேறு திசைகளில் குதித்தும் காற்றுடன் சேர்ந்து தானும் விளையாடியது.

திடீரென்று மேலே உறங்கிக் கிடந்த பறவைகளின் அவலக் குரல்கள் எழுந்தன. கூகை ஒன்று, எங்கிருந்தோ வந்து கொத்தியும் கிழித்தும் அவற்றைக் கொன்று தள்ளியது. அபாயத்தை எதிர்பார்த்திராத அந்த ஏழைப்பறவைகள் செயலற்று ஒவ்வொன்றாகக் கீழே விழுந்தன. யமனாகி வந்த கூகை அங்கிருந்து பறந்து சென்ற பிறகும், வெகுநேரம் வரைக்கும் அந்தப் பறவைகளின் துன்பக்குரல்கள் கேட்டுக் கொண்டே இருந்தன.

நடுநிசி ஆகிவிட்டது. அதுவரை ஓங்கி எரிந்த நெருப்பு மெல்ல மெல்ல அடங்கித் தழலுருவாயிற்று. மறுபடியும் சப்த நாடிகளையும் ஒடுங்கச் செய்யும் அந்தப் பேயமைதி. சுற்றிலும் இருள் இருளை விழுங்கி அதையே உமிழ ஆரம்பித்தது.

பெரியவர் திரும்பிப் பின்னால் உட்கார்ந்திருந்த இளந்துறவியின் முகத்தைப் பார்த்தார். அவருக்கே அது ஆச்சரியத்தைக் கொடுத்தது. அந்த வைராக்கிய புருஷனின் குழந்தை முகம் எதிரில் கிடந்த தழல் போல என்றும் இல்லாத ஒளியுடன் விளங்கியது.

“குழந்தாய்!” என்று அவர் தம்மை மறந்து கூப்பிட்டார்.

இளையவர் எழுந்து முன்னால் வந்தார். பெரியவர் கேட்டார்.
“இங்கே எதைக் காண்கிறாய்?”

சிறிது தாமதித்தே பதில் வந்தது. “கால ருத்திரனது நர்த்தனத்தையே காண்கிறேன், சுவாமி.”

கேட்டவர் சிறிது நேரம் மெளனமாக இருந்துவிட்டு, இனிப் புறப்படுவோம்” என்று சொல்லிக் கொண்டு எழுந்தார்.

இருவரும் நடக்க ஆரம்பித்தார்கள். குற்றுயிராய்க் கிடந்த ஏதோ ஒரு பறவையைச் சர்ப்பம் ஒன்று சிரமப்பட்டு விழுங்கியபடியே நகர்ந்து வழிவிட்டது.

கிழக்கிலிருந்து வந்தவர்கள் வடக்கு நோக்கிச் சென்றார்கள். பெரியவர் முன்னாகவே நடந்தார். எங்கும் வளர்ந்து கிடந்த நாணல்கள் அவர்களின் பாதங்களைத் தொட்டுத் தொட்டு மீண்டன. பாதையோ வளைந்து வளைந்து போய்க் கொண்டிருந்தது. இளையவர் அடிக்கடி வானத்தைப் பார்த்துக் கொண்டே நடந்தார். அது நிர்மலமாகி ஞானிகளின் மனம்போலத் தெளிந்திருந்தது. கொஞ்சத் தூரம் சென்றதும் பெரியவர் திரும்பி நின்று, “அப்பனே, உனக்குத் தூக்கம் வரவில்லையா?” என்று கேட்டார்.

“இப்பொழுது இல்லை, சுவாமி.”
“பசி?”

“அதுவுமில்லை.”

மறுபடியும் அவர்கள் நடக்க ஆரம்பித்தார்கள். இரண்டு நாழிகைத் தூரத்தில் அந்த ஒற்றையடிப்பாதை அகன்ற ஒரு சாலையில் போய் முடிந்தது. அந்தச் சாலையில் ஓரங்களில் பெரிய பெரிய மரங்கள் வளர்ந்திருந்தன. இடையிடையே மாளிகைகள் போன்ற வீடுகளும் தெரிந்தன.

அவர்கள் நிற்காமலே தொடர்ந்து நடந்தார்கள். “இது எங்கே போகிறது? நாம் எங்கே போகிறோம்?” என்ற விசாரம் அவர்களைத் தொடவில்லை. மேலும் சில நாழிகை தூரம் நடந்து சென்றார்கள். திடீரென்று பெரியவர் வழியை விட்டு இறங்கி ஒரு வீட்டின் முன்புறத்திலே மரமொன்றைச் சுற்றிக் கட்டியிருந்த மேடையை அடைந்து படுத்துக் கொண்டார். மற்றவரும் அவரைத் தொடர்ந்து சென்று அவரது காலடியில் சரிந்தார்.

புலருவதன் முன் இளையவர் எழுந்து உட்கார்ந்தார். மிகச் சமீபமாக யாரோ ஒரு பெண் நிற்பதைக் கண்டதும் அவர் நன்றாக ஊன்றிப் பார்த்தார். வைகறையின் மங்கிய ஒளியிலே அவளது தோற்றம் யாரோ ஓர் அணங்கு நிற்பதுபோல இருந்தது. பிரபஞ்சத்தின் எந்த விசாரமுமே அணுகாத அவரது உள்ளத்தில் அது பெரிய ஆச்சரியத்தையே உண்டுபண்ணியது. அதனால் அவர் அவளையே பார்த்தபடி உட்கார்ந்திருந்தார். கம்பீரமான அவரது தோற்றமும் பால் வடியும் முகமும் அவளையும் தன்னை மறந்த நிலையில் நிற்கச் செய்தன.

அந்தச் சமயத்திலேதான் பெரியவர் கண்களைத் திறந்தார். இந்த எதிர்பாராத காட்சி அவரை அதிரும்படி செய்யாவிட்டாலும் சிந்திக்கத் தூண்டியது. சிறிது நேரம் வரை அவர்கள் இருவரையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருந்தவர், “அப்பனே, இவள் யார்?” என்று கேட்டார். இளையவர் பதில் சொல்லவில்லை. ஆனால் அவள் திரும்பி நின்று பேசினாள். “சுவாமி, தங்கள் வரம் பெற்றதனால் பெரும் பாக்கியசாலி ஆனவள் இவள்.”

அவர் மெளனமாக இருந்தபடி அவளை உற்றுப் பார்த்தார். அப்போதும் அவளே தொடர்ந்து பேசினாள் : “சுவாமி, எதோ புண்ணியவசத்தால்தான் இங்கே தங்கி இந்த இடத்தைப் புனிதமாக்கிவிட்டீர்கள். கொஞ்சம் எழுந்து உள்ளே வருகிறீர்களா?”

அவள் நிலத்தில் விழுந்து வணங்கினாள். பெரியவர் கையை மேலே தூக்கி உயர்த்தி ஆசீர்வதித்தார். மற்றவரோ சும்மா இருந்தபடியே இருந்தார். அப்போழுது அவள் கண்கள் இருவரையும் மாறி மாறி மன்றாடின.

அவள் யாசித்ததை நிராகரிக்க அவர் விரும்பவில்லை. உடனே எழுந்து அந்த வீட்டை நோக்கி நடந்தார். அவர்கள் உள்ளே நுழையும் முன்பே அவள் ஓடிச் சென்று ஆசனங்களை இழுத்துவிட்டு “உட்காருங்கள்’ என்று வணங்கி நின்றாள். இருந்தவர் மற்றவரையும் உட்காரும்படி சமிக்ஞை செய்துவிட்டு எல்லாப் பக்கங்களையும் ஒருமுறை பார்த்தார். திடீரென்று அவரது முகத்தில் சொல்லமுடியாத ஒருவித வெறுப்பின் நிழல் படிந்தது.

அவள் இதை உணர்ந்ததும் மிகுந்த பண்புடன் பேச ஆரம்பித்தாள் : “சுவாமி பாவிகளுக்கு ஒருநாளும் விமோசனம் கிடைக்காதா?”

இந்த வார்த்தைகள் காதில் விழுந்ததும் அவர் கருணை நிறைந்த கண்களால் அவளைப் பார்த்து “நீயும் உட்கார்” என்று ஓர் ஆசனத்தைக் காண்பித்தார். அவள் உட்கார விரும்பவில்லை. மேலும் ஒருபுறமாக ஒதுங்கி நின்றாள்.

பெரியவர் பேசினார். “தவறு செய்தவர் தாமாகவே அதை உணர்ந்து பச்சாதாபப்படுவதே மிகச் சிறந்த பிராயச்சித்தமாகும்”

“சுவாமி, என்னைப் போன்றவர்களுக்கும் இந்த விதி பொருந்துமா?”

இப்பொழுது தெளிவான குரலில் அவர் பதில் கேட்டது : “குழந்தாய், உனக்குத்தான் இது முற்றும் பொருந்தும். வாழ்க்கை எல்லோருக்கும் எப்போதுமே நிதானமான பாதையில் செல்வதில்லை. மனம் சந்தர்ப்பவசத்தால் பல தடவைகளில் குழியில் தள்ளி விடுகிறது. குழந்தை நடக்கப் பழகும்போது எத்தனை தடவை விழுந்து விழுந்து எழும்புகிறது என்பதை நீ அறியாயா?”

“மறுபடியும் எழுந்திருக்க முடியாதபடி விழுந்துவிட்டால்?” பெருமூச்சின் நடுவே அவள் இப்படிக் கேட்டாள்.

அவர் ஒருமாதிரி சிரித்தபடியே பதில் சொன்னார் : “குழந்தையின் மானிடத் தாய் அல்லவே லோகநாயகி.”

அவள் ஓடிவந்து அவர் பாதங்களைத் தொட்டு கண்களில் ஒற்றிக்கொண்டாள். மற்றவரோ எல்லாவற்றையும் கவனித்தபடியே பின்னால் உட்கார்ந்திருந்தார்.

பிறகு அவள் பெரியவரையே பார்த்து, “சுவாமி, ஒரு பொழுதுக்காவது இங்கே தங்கிச் செல்லவேண்டும்” என்று வேண்டிக்கொண்டு உள்ளே போனாள். அப்பொழுது அவர் மற்றவரைப் பார்த்துச் சொன்னார் : “அப்பனே, எழுந்திரு. போகவேண்டும்.”

ஒருவர்பின் ஒருவராக அவர்கள் வெளியே சென்றார்கள்.

அவள் ஓடிவந்து பார்த்தபோது அந்தத் தெருவையே கடந்து அவர்கள் மறைந்துவிட்டார்கள்.

எதிர்பாராத வகையில் பெரியவர் வேகமாக நடந்தார். அவரது மனம் நிலைகொள்ளாமல் தடுமாறியது. அந்த நிலையிலும் ‘ஏன் இது?’ என்று தமக்குள்ளே கேட்டுப் பார்த்தார். காரணம் தெரியவில்லை.

“அங்கே நுழைந்தாயே, அதனால்தான்”

இது அவர் உள்ளத்தின் ஒரு கோணத்திலிருந்து எழுந்த குரல்.

“பாவத்தின் பயங்கர அந்தகாரம் சூழ்ந்த இந்த உலகத்தில் அவள் அப்படி ஓர் ஆகாத பண்டமா? உள்ளே இருந்து மற்றொரு குரல் இப்படிக் கேட்டது. பின்னால் தொடர்ந்து வரும் மற்றவரை ஒருமுறை திரும்பிப் பார்த்துவிட்டு அவர் மறுபடியும் முன்போலவே நடக்க ஆரம்பித்தார். இப்படிச் சிக்கலான மனநிலை அவரை முன்னும் சிலசமயங்களில் கலங்கச் செய்ததுண்டு. அப்போதெல்லாம் அதனதற்குரிய காரணங்களை நன்றாகத் தெரிந்து கொண்டிருந்தார். இன்று அது முடியவில்லை. விரும்பி முயன்றும் அது வெளிவர மறுத்தது.

அவர் முகத்தில் இலேசாக வியர்வை அரும்பியது. தமக்குள் பேசிக் கொண்டே நடந்தார். ’இந்த உலகத்திலிருந்து விடுபட்டு வாழ்வில் எத்தனையோ வருஷங்கள் கழிந்துவிட்டன. நித்திரை, உணவு என்ற இன்றியமையாதவற்றையே கட்டுப்படுத்தி மனத்தை மடக்கி வழி நடத்தினார். எத்தனை சோதனைகளைச் செய்து பார்த்தாயிற்று! எல்லாவற்றிலும் சித்தி லேசாகக் கிட்டியது. இன்றோ இது பெரிய புதிராகவே இருக்கிறது. அடிமனத்தில் – எங்கோ ஒரு மூலையில் – என் சக்திக்கு எட்டாத ஆழத்தில் ஏதோ ஒன்று அழுகிக் கிடக்கிறது.’

ஒரு பெருமூச்சுடன் திரும்பிப் பார்த்தார். இளையவரது முகம் வழக்கம் போலவே பிரகாசத்துடன் விளங்கியது.

“குழந்தாய்!”

அந்தக் குரலில் அன்பு அமுதாகி கடலாகிப் பொங்கி வழிந்தது.

“சுவாமி!” என்று உடனே பதிலுக்குக் குரல் கொடுத்தார் மற்றவர்.

“களைப்படைந்தாயோ என்று பார்த்தேன். அவ்வளவுதான்”

மறுபடியும் அவர்கள் ஒருவர் பின் ஒருவராக நடந்தார்கள். அவர்களுக்கு நடுவில் மெளனம் நிலைத்திருந்தது. கொஞ்சதூரம் சென்றதும் தெருவின் ஓரத்தில் நின்ற ஒரு மரத்தின் நிழலில் அவர் போய் உட்கார்ந்தார். இளையவரும் அவரைத் தொடர்ந்து சென்று ஒரு பக்கத்தில் ஒதுங்கினார்.

பெரியவருடைய மனத்தில் மற்றவரைப் பற்றிய நினைவுகள் திடீரென்று முளைத்தன. உடனே அவர் கேட்டார் : “குழந்தாய், நீ என்னை அடைந்து பன்னிரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. இல்லையா?”

“ஆம்” என்று தலையசைத்தார் இளையவர்.

“இதுவும் ஒருவகையில் நம்மைப் பாதிக்கக்கூடிய பந்தம் தானே? இதை நீ உணரவில்லையா?”

மற்றவர் பதில் இன்றி மெளனத்தில் மூழ்கியிருந்தார்.

“உனக்குப் பக்குவ நிலை கைவந்துவிட்டது. இனியும் நீ என் இறக்கைகளுக்குள் உறங்க வேண்டியதில்லை.”

இளையவர் பிறகும் பேச்சின்றியே இருந்தார். சிறிது பொறுத்து மறுபடியும் பெரியவே பேசினார்.

“அப்பனே, இனி நீயும் நானும் பிரிந்து விடவே வேண்டும். அல்லது இரண்டு பேருமே பெரிய நஷ்டத்தை அடைவோம்.”

இளையவர் எழுந்து கூப்பிய கரங்களுடன் அவர் பக்கமாகச் சென்று விழுந்து வணங்கினார்.

”குழந்தாய், உன்னை ஆண்டவன் ஆசீர்வதிப்பானாக!”

அவர் கண்களை மூடியபடி எழுந்து நின்றார். அவருடைய குரல் கரகரத்தது. மற்றவர் குனிந்து அவருடைய பாதங்களைத் தொட்டு பலமுறை கண்களில் ஒற்றிக்கொண்டு தெருவில் இறங்கினார்.

தெருவில் இறங்கிய இளையவர் ஒருமுறை கூடத் திரும்பிப் பாராமலே நடந்து கொண்டிருந்தார். அவரது நடையில் எது இல்லாவிட்டாலும் நிதானம் இருந்தது. எல்லாவற்றிலிருந்தும் விடுபட்ட தெளிவு இருந்தது.

அந்த உருவம் கண்களை விட்டு மறையும் வரையும் நின்றபடியே பார்த்துக் கொண்டு பெரியவர் தாய் போல் மாறி, “ஐயோ வெயில் கடுமையாக எரிக்கிறதே!’ என்று அங்கலாய்த்தார். பிறகு தாமும் தொடர்ந்து போக எண்ணியவர் போல அந்தத் திசையில் வேகமாக நடந்தார். சிறிது தூரம் சென்றதும் ஏனோ மறுபடியும் திரும்பி வந்து அந்த மரத்தின் கீழ் உட்கார்ந்தார்.

இளையவர் இருந்த இடம் சூனியமாகிக் கிடந்தது. ஆனால் மண்ணில் அவர் காலடிகள் நன்றாகத் தெரியும்படி பதிந்திருந்தன. அந்த அடையாளங்கள் ஏதோ அருமையான பொக்கிஷங்கள் போல அவருக்கு இருந்தன. வெகுநேரம் வரையில் அவற்றையே பார்த்துக் கொண்டிருந்தார். அதில் ஏதோ ஆறுதல் இருப்பது போலப்பட்டது. நடுவில், ‘இனி ஒருபோதும் சந்திக்க மாட்டேனா?’ என்ற கேள்வி எழுந்ததும் தடுமாறி எழுந்து நின்று அவர் போன திசையைப் பார்த்தார். பிறகு அங்கும் இங்குமாக நடக்க ஆரம்பித்தார். அப்போதெல்லாம் அந்த அடையாளங்கள் அழிந்து விடாதபடி விலகி விலகியே நடக்க வேண்டுமென்று அவருக்குத் தோன்றியது.

’இந்தப் பாசம் இவ்வளவு தூரம் என்னைப் பாதித்துவிட்டதே’ என்ற ஏக்கமும் அவருக்கு அடிக்கடி உண்டாயிற்று.
‘அன்றைக்கே, அவன் வந்தபோது ‘இது வேண்டாம் மறுபடியும் கட்டுப்படாதே’ என்று எச்சரித்த என் அந்தராத்மாவின் குரலை நான் கெளரவிக்கவில்லை. ‘சுவாமி, எனக்கு வழிகாட்டுங்கள்’ என்று வந்தவனை எப்படித்தான் போ என்று தள்ளமுடியும்? வா என்று ஏற்றுக்கொண்டேன். அவன் நிழலாகி வளர்ந்தான். இந்த நிலையிலும் அவனைப் பார்த்து மனம் களித்தேன். ஆனால் இன்று?

அவர் நீண்ட ஒரு பெருமூச்சுடன் கிளம்பி வந்தவழியால் நடந்தார். இப்பொழுது அவரது நடையில் வேகம் இல்லை. நிதானமும் இருக்கவில்லை. தகித்துக் கொண்டிருந்த வெயில்கூட அவரை அவசரப்படுத்தவில்லை. மெல்ல மெல்ல ஊர்ந்து சென்றார். பாரம் ஏறிய மனநிலையை அவரது முகம் எடுத்துக் காட்டியது.

வழியில் ஜனங்கள் போனார்கள். வந்தார்கள். அவர்களுக்குள் அவனும் இருக்கலாம் என்பதுபோல அவர் கண்கள் எல்லோரையும் ஆராய்ந்தன. ‘இனி வேண்டாம்’ என்று சில சமயங்களில் கண்களை மூடிக் கொண்டும் நடந்தார்.

வரவர அவருக்கு நடப்பதே பெரிய சிரமமாக இருந்தது. ஆயினும் நிற்காமலே சென்றார். அந்தச் சமயத்திலே, காலையிலே தாம் எந்த வீட்டில் இருந்து கிளம்பி ஓடினாரோ, அந்த வீட்டின் எதிரில் வந்துவிட்டதைத் தெரிந்து கொண்டார். நடப்பதை நிறுத்திவிட்டு அந்த மரத்தின் அடியில் இருந்து மேடையைப் பார்த்தார். எதிரில், ‘சுவாமி வாருங்கள்’ என்று வேண்டியவாறே அவள் ஓடிவந்தாள். அவர் இப்பொழுது அசையவில்லை. கண்களை அகல விழித்து அவளையே பார்த்துக் கொண்டி நின்றார். பிறகு தாமாகவே இறங்கி உள்ளே சென்றார்.

மற்றவரைப் பிரிந்ததினால் உண்டாகிய தாகம் மெல்ல மெல்ல தணிவதுபோல அவருக்குப் பட்டது. அப்பொழுது அவள் பேசினாள். ‘சுவாமி, எப்படியும் ஒரு நாளைக்கு உங்களைச் சந்திப்பேன் என்ற நம்பிக்கை எனக்கிருந்தது. ஆனால், அது இன்றைக்கே சித்தியாகும் என்று எண்ணவேயில்லை. நான் பெரிய பாக்கியம் செய்தவள்.’

அவர் உள்ளே புகுந்து ஒர் ஆசனத்தில் உட்கார்ந்தார்.

‘சுவாமி, மறுபடியும் போய்விட மாட்டீர்களே?’

அவள் உண்மையாகத்தான் இப்படிக் கேட்டாள்.

‘போ என்று தள்ளினாலும் முடியாத நிலையில் இப்பொழுது இருக்கிறேன்.’

காலில் விழுந்து வணங்கியவள் எழுந்து உள்ளே சென்றாள். அவர் அதற்குள் அதிலேயே அயர்ந்து தூங்கிவிட்டார். பிறகு அவர் கண்களைத் திறந்தபோது முற்றும் எதிர்பாராத தோற்றத்தில் அவள் எதிரில் நின்றாள்.

‘அம்மா, இது என்ன கோலம்?’

அவர் ஆச்சரியத்தோடு இப்படிக் கேட்டார்.

அவள் இதற்குப் பதில் சொல்லாமலே தன் கருத்தைச் சொன்னாள். ‘சுவாமி, இவையெல்லாம் இனித் தங்களைச் சேர்ந்தவையே. விருப்பம் எதுவோ அப்படிச் செய்யுங்கள்.’

அவர் அதிர்ந்து போய் சோர்வடைந்து கண்களை உயர்த்தி அவளைப் பார்த்தார்.

அதற்குள் அவள் வெளியே இறங்கி நடந்து கொண்டிருந்தாள்.

 

 

நடுப்பக்கம் – சந்திரமோகன்

Why did Tesla say that 3, 6, and 9 was the key to the universe? - QuoraFrisson 3 6 9 - Home | Facebook369 Logo - AnimationXpressWhat is the significance of 3, 6, and 9 in Indian mythology? - Quora

எண் ஜோதிடம். 3, 6, 9

ஜோதிடமா ? வர வர நம்பிக்கை குறைந்து வருகிறது.

இவ்வாண்டு ஜனவரி முதல் தேதி தமிழகத்தின் தலை சிறந்த ஜோதிடர்கள் எல்லாம் முழு மேக்கப்புடன், கலர் கலராக சட்டை போட்டுக் கொண்டு T V முன் அமர்ந்து பேசியதைப் பார்த்தோம்.

ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் பாலாறு நாட்டில் ஓடும் என்றார்கள்.
இரண்டாம் அரை வருடத்தில் தேனாறு ஓடும் என்றார்கள்.
பாவம் இன்று பலருக்கு குடி நீரே கிடைக்க வில்லை.

ஜோதிட கலை தவறா என்றால், இல்லை. சரியாக கணிப்பவர்கள் யாரும் இல்லை.
நீங்கள் 1 ஆம் எண் எண்ணில் பிறந்தவரா? இந்த எண்ணில் பிறந்தவரை திருமணம் செய்தால் வாழ்க்கையே நரகமாகிவிடுமாம்! - Mullai News
நுனிப்புல் மேய்ந்து, நம் முகம் படித்தே நம் பிரச்சனையையும், எதிர்காலத்தையும் சொல்லி விடுவார்கள்.

More of Physiognomy than astrology.

ஆனால் வாழ்க்கையில் கஷ்டம் என்று ஜோதிடம் பார்க்க வருபவர்க்கு ஆறு மாதங்களில் எல்லாம் சரியாகி விடும் என ஆறுதல் கூறி நம்பிக்கை அளிக்கும் ஜோதிடர்களின் சேவையும் தேவையே.

நம்பிக்கைதானே வாழ்வின் ஆதாரமும், வளர்ச்சியும்.

ஜோதிடக் கலையை உலகிற்கு அளித்து, ஜனணம் முதல் மரணம் வரை துல்லியமாக கணக்கிட்டு சொன்ன மஹான்கள் வாழ்ந்த புண்ணிய பூமி இது.

எண் ஜோதிடம் பற்றி கேட்கவே வேண்டாம்.

ஏதோ ஒரு எண், நம்ம வாழ்க்கையில் நுழைந்து நல்லது செய்ய முடியுமா என யோசித்துக் கொண்டிருந்த பொழுது, அறிவியல் விஞ்ஞானி நிக்கோலாஸ் டெஸ்லா அவசரம், அவசரமாக ஓடி வந்து 3, 6, 9 என்ற எண்களால் முடியும் என்கிறார்.

டெஸ்லாவை படித்த பின் யோசித்துப் பார்த்தால் அவ் எண்களில் ஏதோ இரகசியம் உள்ளது போல தோன்றுகிறது.

Muthukamalam.com / Astrology (General) - ஜோதிடம் சிறப்புப் பக்கங்கள்3,6,9 என்ற எண்களில் அப்படி என்ன பெரிய அதிசயம் ஒளிந்திருக்க போகிறது என்று சத்தமாக கேட்க வேண்டாம்.

அது கல்லறையில் உறங்கும் விஞ்ஞானி டெஸ்லா காதில் விழுந்தால் அவர் மனது கஷ்டப்படும்.

அவ்வெண்களின் மீது அவ்வளவு காதல் அவருக்கு.

விவேகானந்தரை பெரிதும் மதித்த டெஸ்லா நம் வேத சாஸ்திரத்தில் நம்பிக்கை வைத்திருந்தார்.

டெஸ்லா தனது வாழ்நாள் முழுதும் விசித்திரமான முறையில் அவ் எண்களை பயன்படுத்தினார்.

டெஸ்லா தான் தங்கி இருந்த விடுதிக்குள் நுழையும் முன்னர் வெளியே 3 முறை சுற்றி விட்டு பின்னர்தான் உள்ளே செல்வாராம்.

தான் தங்கும் அறை கூட 3 ஆல் வகுபடும் எண்ணைக் கொண்டதாகத்தான் தேர்ந்தெடுப்பாராம்.

நீங்கள் 1 ஆம் எண் எண்ணில் பிறந்தவரா? இந்த எண்ணில் பிறந்தவரை திருமணம் செய்தால் வாழ்க்கையே நரகமாகிவிடுமாம்! - Mullai Newsஒரு படி மேலே போய் தான் சாப்பிடும் தட்டை 18 நாப்கின்கள் கொண்டு துடைப்பாராம்.

இயற்கையைப் போலவே கணிதமும் நம்மால் உருவாக்கப் படவில்லை.
அவற்றின் பல பரிமாணங்கள் கண்டுபிடிக்கப் பட்டு உலகுக்கு தெரிவிக்கப் பட்டன.

எடிசன் போன்றோரால் ஏமாற்றப் பட்ட டெஸ்லா தன் கண்டு பிடிப்புகள் எதையும் முறையாக ஆவணப்படுத்த வில்லை.

அவரது மூளையின் ஒரு மூலையில் பதிவு செய்து வைக்கப்பட்டு இருந்த கண்டு பிடிப்புகள் அனைத்தும் அவரோடே அழிந்து விட்டன.

ஒரு வேலை ஆவணப் படுத்தி இருந்தால் அவர் கூற்றான “ If you only knew the magnificence of the 3, 6 and 9, then you would have a key to the universe.” என்பதின் உண்மை உலகிற்கு தெரிந்து இருக்கும்.

சற்று யோசித்தால் அவர் கூற்றில் ஏதோ, உண்மை இருப்பது போலவும் தெரிகிறது.

நம் முன்னோர் காரணம் இல்லாமல் எந்த காரியத்தையும் செய்தது இல்லை.

கீழே கண்டவை அனைத்தும் 3 ன் பெருக்கமாக அமைந்ததற்கு ஏதாவது காரணம் இல்லாமலா இருக்கும்?

தமிழ் வருடங்கள். 60
வருடத்திற்கு 12 மாதங்கள்,
நாளுக்கு 60 நாளிகைகள்,
24 மணிகள்,
60 நிமிடங்கள்,
60 விநாடிகள்.
12 அங்குலம் 1 அடி
3 அடிகள். 1 கஜம்

வட்டத்தில் 360 டிகிரிகள்.

சிவன், விஷ்ணு, பிரம்மா மும் மூர்த்திகள் உடன் உறைபவர்கள்
பார்வதி, லெக்ஷ்மி, சரஸ்வதி
அசுரர்களை ஒடுக்க அவதரித்தவன் ஆறுமுகன்.

Holy Bible கூறுவது God, Jesus and Holy Spirit.
எகிப்தியரின் புராணம் பேசுவதும் 3 கடவுள்கள் ( சொர்க்கம் , பூமி, நரகம் ஆகியவற்றின் பிரதி நிதிகள்).

Atom ( அணு) தன்னுள் அடக்கியது புரட்டான், நியூட்ரான், எலக்ட்ரான் என மூன்று பகுதிகள்.

27 நட்சத்திரங்கள்(9)
9 கிரகங்கள். 12 ராசிகள் . கூடவே நவாம்சம்.
9 X 12= 108

இந்து மதம், புத்த மதம், சமணமதம், யோகா ஆகியவற்றில் 108 க்கு தனி சிறப்பு.

108 திவ்ய தேசங்கள், விருந்தாவனத்தில் 108 கோபியர்கள். 12 ஆழ்வார்கள்.
இமயம் முதல் குமரி வரை சக்தி பீடங்கள் 108
108 உபநிடதங்கள்
18 புராணங்கள்
சிவனின் பூத கணங்கள் 108
ஜப மாலையில் 108 மணிகள்,
அர்ச்சனைகள் 108 அல்லது 1008.( அஸ்டோத்திரம், சகஸ்ரநாமம்)

ஜைனர்கள் கர்மாவை அடையும் வழிகள் 108.

பௌத்தர்களுக்கு அடக்க வேண்டிய உணர்வுகள் ( earthly temptations) 108 .
பௌத்தர்கள் 108 முறை மணி அடித்து புத்தாண்டை வரவேற்பார்களாம். ஜப்பானிலும் இதுவே பழக்கமாம்.
முக்கிய சடங்குகள் 9 துறவிகள் கொண்டுதான் நடக்குமாம்.
சீனர்களின் சொர்க்க கோபுரம் 9 வளையங்களால் சூழப்பட்டுள்ளதாம்.
சீனர்கள் 36 மணிகள் கொண்ட மூன்று மாலைகளை வைத்து ஜெபிப்பார்களாம்.
பௌத்த ஆலயம் 108 படிகளுடன், 108 புத்த விக்கிரகங்களை கொண்டதாக இருக்குமாம்.

இஸ்லாத்தில் 108 என்ற எண்னே இறைவனை குறிக்கும்.
அவர்களின் ஜப மாலையிலும் 108 மணிகளே.
இஸ்லாமியர்க்கு புனித தளங்கள் 3 ( மெக்கா, மெதீனா, ஜெருசலேம்).
அவர்களின் (Belief) நம்பிக்கைகள் 6.

யோகாவில் சூரிய நமஸ்காரம் துவங்கி 108 நமஸ்காரங்கள்.

நாட்டிய சாஸ்திரத்தில் நாட்டிய
அமைப்புகள் 108

ஆன்மாவிற்கு 108 ஆசைகளும் 108 எதிர் பார்ப்புகளும் இருக்குமாம். பட்டியலிட்டு உள்ளார்கள்.

பூமியின் விட்டத்தை விட சூரியனின் விட்டம் 108 மடங்கு பெரியதாம்.

பூமியிலிருந்து சூரியனுக்கும் சந்திரனுக்கும் உள்ள தூரம், அவைகளின் விட்டத்தை போல 108 மடங்காம்.

தமிழில் உயிர் எழுத்துக்கள் 12
மெய் எழுத்துக்கள். 18
உயிர் மெய் எழுத்துக்கள் 216.
சமஸ்கிருத வார்த்தைகள் ஆண் பால்54, பெண்பால் 54 என மொத்தம் 108.

சூரிய ஒளி கடக்கும் வேகம் விநாடிக்கு 186282 மைல்கள் (9)

ஈக்வேட்டரில் பூமியின் சுற்றளவு 21600 நாட்டிகல் மைல்கள்(9).

ஆரோக்யமான இதயம் துடிப்பது நிமிடத்திற்கு 60 தடவைகள்.
வெளி விடும் மூச்சு நிமிடத்திற்கு 15 தடவைகள்.
பகலில் 10800, இரவில் 10800 தடவைகள்.
உடம்பின் துவாரங்கள் 9 (ஒன்பது வாயிற் குடில்)
அன்னையின் கருவறையில் நாம் வசித்த காலம் 9 மாதங்கள்.
உடம்பில் 108 சூட்சுமங்கள் ( Nerve Points) மர்ம நாடிகள்.
அவை உடலின் 9 முக்கிய பாகங்களின் இயக்கத்தை கட்டுப்படுத்துகின்றனவாம்.

நவ மணிகள், நவ தாண்யம், நவ ராத்திரிகள்
நவ ரசம், நவ பாஷாணம். நவ நதிகள்,
நவ நிதிகள், நவ சக்திகள், நவாம்சம்,
நவ பிரம்மாக்கள், நவ திருப்பதிகள், நவ கைலாயம், நவ ஜோதி, நவ வீரர்கள், நவ அபிஷேகங்கள், நவ லோகம், நவ திரவியங்கள், நவ சிவ விரதங்கள், நவ சந்தி தாளங்கள், நவ குணங்கள், நவ குண்டலங்கள், நவ பக்தி, நவ சக்கரங்கள் இன்னும், இன்னும்.

ஆம்புலன்ஸ் கூட 108 தான்.
மனுஷனுக்கு 1008 வேலை, 1008 பிரச்சனைகள்.
9, பாவம் ஒரு சிலரை தவறாகவும் குறிப்பிடுகிறது.
தங்கம், பிளாட்டினம் 999 மார்க்.

தாய விளையாட்டில் 6,12 விழுந்தால்தான் பாதுகாப்பாக கட்டத்தை அடையலாமாம்.
ஆறும், பணிரெண்டும் என் பேத்தி வேண்டுகிறாள்.

ஆடு புலி ஆட்டத்தில் 3 புலிகள் 15 ஆடுகளுடன் ஆடுகிறாள்.

இன்னும் எவ்வளவோ. அனைத்தும் தற்செயலாகவா அமைந்திருக்கும்?

கூகுளாரிடம் கேட்டால் இந்த எண்களை கணிதமாகவும், விஞ்ஞானமாகவும் விவரிக்கிறார்.

என் அறிவுக்கு சற்று அதிகம்.

3, 6, 9 களில் ஏதோ இரகசியம், ஏதோ சிறப்பு இருப்பதை கண்களை மூடி ஒத்துக்கொள்ள வேண்டியதுதான்.

3,6,9 விதியை மாற்றும் ஜோதிட எண்கள் அல்ல.
அனைவர்க்கும் நல்லது செய்யும் புனித எண்கள்.

நல்லது நினைப்போம். நல்லதே நடக்கும்.

(எனக்கு 69 வது வயது துவங்கும் இன்று என் மகனுக்கு  36 வயது முடிவடைகிறது.
3,6,9 எண்கள் என்னுடன் பயனித்து நல்லவை மிகவே செய்துள்ளது.

இவ்வாண்டும் நல்லது மிக நடக்கும் என நம்புகிறேன்.)

விதிகளை மாற்றிவிடு! — கோவை சங்கர்

கடமை பெரிது 3257829.html - Dinamani

மனம்நொந்து உனைநாடி வருகின்ற பக்தரிடம்
முன்பிறவி கர்மாவென சொல்வதுவும் சரிதானோ?
பாவங்கள் செய்தவன் செழிப்போடு வாழ்ந்திட்டான்
அப்பாவி பக்தனை அல்லல்பட விடலாமோ?

பாவச்சுமை ஏற்றியவன் சுகமாகப் போய்விட்டான்
பாவவினை விலையென்ன அவனுக்குத் தெரியாது
பாவம்செயா இவனுமே அல்லல்பல படுகின்றான்
தப்பென்ன செய்தோமென இவனுக்குப் புரியாது!

பாவங்கள் செய்தவன் சுகமாகச் சென்றுவிட
அப்பாவி மனிதனுக்கு இத்தனை தண்டனையா?
தர்மநெறி நிற்பவன் நிலைகுலைய மாட்டானா?
‘அறநெறி நல்வழி’யெனும் நம்பிக்கை போகாதா?

தப்புகளைச் செய்தவன் மனம்வருந்த தண்டனையை
அப்பிறவியில் கொடுத்துவிடு அவன்கணக்கைத் தீர்த்துவிடு
பிற்பிறவி மனிதனையே மகிழ்வோடு வாழவிடு
பிறவியின் விதிகளை யதற்கேற்ப மாற்றிவிடு!

’நெருப்பில் ஒரு நகரம் ’ – மலையாளத்தில் ஐசக் ஈப்பன் தமிழில் மீனா

மலையாள மொழி இலக்கிய உலகில் ஐசக் ஈப்பன் சிறுகதை ,நாவல்,கட்டுரையாசிரியர்  என்று பன்முகம் கொண்ட  படைப்பாளி.

அவருடைய படைப்புகள் பதினாறு புத்தகங்களாக தொகுக்கப்பட்டுள்ளன.

பல படைப்புகள் ஆங்கிலத்திலும், பிற இந்திய மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. 

ஈவிஜி புரஸ்காரம், தகழி விருது,அபுதாபி சக்தி விருது,கொட்டாரகாரா தம்பிரான் விருது ,எஸ்.கே .பொட்டேகாட் விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றிருக்கிறார். 

’நெருப்பில் ஒரு நகரம் ’ என்ற அவரது சிறுகதை சாதி,மத,இனப் பின்னணியில் மாறி வரும் மனித வாழ்க்கை, சமுதாய அழிவிற்கு இட்டுச் செல்கிற  நிலையைக் கருவாகக் கொண்டதாகும்.

இருபதாண்டுகளுக்கு முன்னர் தாம் அனுபவித்த கல்லூரி வாழ்க்கை,வாழ்ந்த நகரம் ஆகியன வெவ்வேறு  மதம் சார்ந்த மூன்று நண்பர்கள் மனதில் ஆழமாகப் பதிந்திருக்கிறது.பல ஆண்டுகள் கழிந்த பிறகும், ஒரு முறையாவது அந்த நகரத்திற்குப் போய் வரவேண்டுமென்ற ஆசை அவர்களைத் தூண்ட ,ஆழ்ந்த திட்டமிடலுக்குப் பின்னர் மூவரும்பழையஎதிர்பார்ப்புகளோடு பயணிக்கின்றனர். தோற்றத்தில் மட்டுமின்றிச் செயல்பாடுகளிலும் நகரம் முழுவதுமாக மாறிப் போயிருக்கிறது. மதங்களால் மாறுபட்ட நெருங்கிய மூன்று நண்பர்களைப் பார்க்க நகரம் தயாராக இல்லை.அங்கு வளர்ந்து விட்ட மதப்பின்னணியிலான அபிப்ராயங்கள், தூண்டப்படும் எதிர்ப்புகள் ஆகியன மனித வாழ்க்கையைச் சின்னா பின்னப்படுத்துவதை  அவர்கள் பார்க்கின்றனர்.

மத, இன ,மொழிவேறுபாடின்றி தாங்கள் வாழ்ந்த அந்த நாட்களுக்கும், இன்று  பரவியிருக்கின்ற  எண்ணங்களுக்குமான வேறுபாடு நகரங்கள் அழிந்து போவதற்கான சூழலை உருவாக்குவதை அறிந்து ’எதுவும் செய்ய முடியாத ’நிலையில் வருத்தத்தோடு திரும்புவதாக  கதை அமைகிறது. 

இந்த கதையைத் தரவிரக்கம் செய்து கொள்ள கீழே கண்ட இணைப்பைச் சொடுக்கவும்.

https://drive.google.com/file/d/1KZVewZgZZFaH5nz3EZkBMHs_3QjOWBVF/view?usp=sharing

“எதிர்த்து நின்ற வீராங்கனை(கள்)!” – மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர் மாலதி சுவாமிநாதன்

Maalaimalar News: 13 year old girl harassment in puducherry

 

சுமார் முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது இது. பூமிஜா சந்தித்த இன்னல்களை, தன்னைப் பாதுகாத்துக் கொண்ட விதத்தை – மீறி வந்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்!

பூமிஜா எனக்கு அறிமுகம் ஆகும் போது பதிமூன்று வயதானவள். அவள் படிக்கும் பள்ளிக்கூடத்தில் ஆசிரியர்களுக்கு நான் மன நலக் கல்வியறிவு அளிக்கும் போது, அவளுடைய ஆசிரியை இவளைப் பற்றி என்னிடம் சொல்ல, அவளைப் பார்க்க ஆரம்பித்தேன்.

அழைத்ததும் கிடுகிடுவென்று அவள் மூச்சுக் காற்றை என்னுடைய ரோமங்கள் உணரும் அளவிற்கு மிக அருகில் வந்து நின்றாள் பூமிஜா. இடைவெளி இல்லாததைப் பலர் சாதகப்படுத்தி கொள்வார்கள் என்றதை இவள் தெரிந்து கொள்ளவில்லை என்று கொஞ்சம் சங்கடமாக இருந்தது. அவளுடைய முகபாவத்தில், வந்து நின்ற தோரணையில் ஒரு வெகுளித் தனம் எட்டிப் பார்த்தது. ஆகையால் அவளுக்கு இதனால் நேரக்கூடும் துன்பங்களை விளக்கினேன். இடைவெளி விடுவதைப் பற்றி விளக்கினேன். மனதில் வாங்கிக் கொண்டாள் என்றதைக் காட்டியது அடுத்த முறையெல்லாம் சந்திக்கும் போது உள்ள சரியான இடைவெளி.

பூமிஜா அணிந்திருந்த தடித்த கண்ணாடி பிரத்தியேகமாக இருந்தது. கையில் பெரிய கைக்குட்டை. மூக்கை துடைத்துக் கொண்டு இருந்தாள். அவளுடைய வயதினரோடு கொஞ்சம் வளர்ச்சி அதிகம். முக முதிர்ச்சியும். இது பிரச்சினை தரக்கூடும் என்பது என் மனதைக் குடைந்தது.

இவள் இந்தப் பள்ளிக்கூடம் சேர்ந்து இரண்டாவது வருடம். இவளை அறிமுக செய்த ஆசிரியை பூமிஜாவின் பெற்றோர் பள்ளியின் எந்த அழைப்பிற்கும் வராததைப் பற்றிக் கூறினாள். அவர்களின் இந்தச் செயல் தனக்குச் சங்கடமாக இருப்பதாகச் சொன்னாள். அற்புதமான ஆசிரியை என வியந்தேன்!

முதலில் பூமிஜாவை சந்தித்து அவளைப் பற்றிய தகவல்களைக் கேட்க ஆரம்பித்தேன். இவள் தான் மூத்தவள். அம்மா வேலையிலிருந்து வருவதற்குள் வீட்டைச் சுத்தம் செய்து, துணிகளை மடித்து, இரவு உணவையும் செய்து வைப்பது இவளுடைய பொறுப்பாம். இவளுடைய ஏழாவது வயதிலிருந்து இது ஆரம்பமானது. தங்கை நன்றாகப் படிப்பதால் எந்த வேலையிலும் கை கொடுக்க மாட்டாள். இவளிடம் அதிகம் பேச்சும் வைத்துக் கொள்ளவும் மாட்டாள். தம்பி சிலசமயங்களில் பூமிஜா செய்யும் வேலையில் ஒரு சிறிய பங்கைச் செய்வான். செய்யும் பலகாரங்களைப் புகழவும் செய்வான்.

அப்பா ராமன் வேலையில்லாமல் இருந்தார். பெரும்பாலும் வேலைக்குப் போகாமல் சீட்டு ஆடி, நண்பர்களுடன் பொழுதைக் கழிப்பாராம். அம்மா அவரிடம் பேசுவது  மிகக் குறைவாக இருப்பதாக பூமிஜா சொன்னாள்.

நண்பர்களுடன் வீட்டில் இருக்கும் போது அப்பாவிடம் போகவே பூமிஜா அஞ்சுவாளாம். ஏளனமாகப் பேசுவதும், தேவை இல்லாமல் சீண்டி விடுவதும் உண்டு. அவர் அப்பா என்றாலும் நண்பர்கள் முன்னே இப்படிச் செய்வது அவளை ஏதோ செய்ய, கூச்சமும், அழுகையும் வரும் என்றாள்.

அம்மாவைப் பற்றிச் சொல்லும் போது பூமிஜா, கொஞ்சம் முகபாவம் மாறியது. அம்மா ரமா பக்கத்திலிருந்த தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தாள். நல்ல உழைப்பாளி என்பதால் வெகு சீக்கிரத்தில் ஸுபர்வைஸராகி இப்போது மேல் அதிகாரியாக இருப்பதாகச் சொன்னாள். வீட்டில் தங்கை தம்பிக்கு அம்மா பாடம் சொல்லித் தருவதால் சாப்பிட்டு முடிந்த பின் சுத்தம் செய்வது பூமிஜா வேலை. இதையெல்லாம் கேட்கும்போது ஏதோ இல்லாதது போலவே தோன்றியது. அம்மாவுக்குப் பயந்தவளோ என நினைத்தேன்.

பூமிஜா அவளால் முடிந்தவரை மற்றவர்களுக்கு உதவுவது என்று எடுத்துக் கொண்டாள். தன்னால் முடிந்த வரை செய்தாள். யாரையும் திட்டவோ, கோபித்துக் கொள்ளவோ இல்லை. இதைத் தான் மோகன், அவனுடைய கூட்டமும் தவறாக எடுத்துக் கொண்டார்கள்

மோகனும் அவனுடைய தோழர்களும் பூமிஜாவை கேலி செய்வது, வேண்டும் என்றே காலை நீட்டித் தடுக்கி விழவைப்பது எனச் செய்தார்கள். முதலில் பூமிஜா பரவாயில்லை என்று விட்டு விட்டாள். போகப் போக மோகன் கைகள் அவள் மேல் பட, அதற்குப் பிறகு பார்க்கும் பார்வை அவளை உலுக்கியது. உஷாரானாள். அவர்களைத் தவிர்க்க முயற்சி செய்த போதிலும் இது தொடர்ந்தது. மூன்று முறை ஆனதும் ஆசிரியரிடம் புகார் செய்தாள். ஆசிரியர், பூமிஜாவை சமாதானம் படுத்தி அனுப்பி வைத்தார். கேலி தொடர்ந்தது.

பூமிஜாவுக்கு எப்படிக் கையாளுவது என்று தெரியவில்லை. ஆசிரியரிடம் சொல்லியும் அவர் மோகனை ஒன்றும் சொல்லவில்லை. மாறாக அவர்கள் முன்னேயே இவளிடம் “நீ அடக்க ஒடுக்கமாக இரு” என்றார்.

சக மாணவிகள் இதைக் கேட்டதும், அவர்கள் பரிந்துரை செய்ததில், தன் வகுப்பு லீடர் சன்ஜீவிடம் புகார் செய்தாள். அவனும் எடுத்துச் சொல்லி, இதைத் தடுக்க முடிந்த வரை முயன்றான்.

சரிசெய்ய முடியாததால் மனநல ஆலோசகரான என்னிடம் சன்ஜீவ் இதைப் பற்றிப் பேசினான். இப்படி நடப்பதை சகமாணவர் யாரும் தட்டிக் கேட்காதபடி மோகன் முழு வகுப்பையும் பயமுறுத்தி வைத்திருந்தான்.

வகுப்பு மாணவர்களிடம், மோகன், அவனுடைய ஜால்ரா கூட்டத்தார் செய்யும் இன்னல்கள் பற்றி விசாரித்தேன். தெளிவாகத் தெரிந்தது, அவர்கள் பூமிஜாவிடம் செய்வது அடாவடித்தனம் (bullying). புகார் செய்தும், ஆசிரியர் கண்டிக்கவில்லை, அதுதான் தொடர்ந்து தொந்தரவு செய்து கொண்டு வந்தார்கள்.

முடிவு செய்தேன், மோகன் கூட்டாளிகள் உட்பட, வகுப்பிற்கு இந்த அடாவடித்தனமான புல்லியிங் பற்றிய வர்க்ஷாப் நடத்த வேண்டும் என்று. தலைமை ஆசிரியரிடம் சொல்லி, ஒரு ஆசிரியர் இருந்தால் நல்லது என்று சேர்த்துக் கொண்டேன்.

ஆம், யாரிடம் புகார் செய்து நடவடிக்கை எடுக்காமல் இருந்தாரோ, அந்த ஆசிரியரைத் தான். அது அவரை தலைகுனிவு ஏற்படுத்த அல்ல, அவருக்கும் புரிய வைக்கத் தான். அவர் ஒன்றும் செய்யாதது, எப்படிச் செய்ய என்ற அணுகுமுறை தத்தளிப்பா? இல்லையேல், அவருக்கே தாழ்வு மனப்பான்மையா? அல்லது இந்த மாதிரியான வன்முறை பற்றிய தவறான கருத்து – பெண்களால் தான் ஆகிறது என்றா?

கடைசி பாடத்தில் இருபது நிமிடம் இதற்கு அமைத்தோம். சிலர் ஏன் இப்படிச் செய்கிறார்கள்? அதன் விளைவு, தீங்கு, வன்முறை என்ற பல கோணங்களில் வடிவமைத்துச் செய்து வந்தேன். பயிற்சியில் ஏன் இதை இப்போது நடத்துகிறேன் என்றதற்கு விளக்கம் அளிக்கவில்லை. யாருடைய பெயரும் (குற்றச்சாட்டு-பாதிக்கப்பட்ட நபர்) சொல்லப்படவில்லை.

போகப்போக, பூமிஜாவுக்கு நடப்பது உடல்-உணர்வு வன்முறை என்றதை உணர்ந்தார்கள். ஆசிரியர் தானாகப் போய் அவளிடம் பேசினார். அதைத் தடுக்க தன்னுடைய முழு ஒத்துழைப்பபைத்  தருவதாகவும்  கூறினார்.

இது நடந்து கொண்டு இருக்கையில் ஒரு நாள் பூமிஜா கலங்கி வந்தாள். அழுகையை அடக்க முடியாமல் விம்மினாள். அவளுக்கு ஒரு ஐந்து ஸ்பூன் சக்கரை போட்ட சூடான காப்பியை ஆயாவிடம் சொல்லி எடுத்து வரச் சொன்னேன். அருந்தினால் உடலை, மனதைச் சாந்தப் படுத்த உதவும் என்பதால் கொடுத்தேன். அழுதுகொண்டே, தன் அம்மாவிடம் ஏதோ பகிரப் பார்த்ததாகவும் அம்மாவோ கையை உதறிவிட்டு இவளைத் தள்ளிவிட்டுப் போனது, மனதை வலித்தது என்றாள்.

அன்று மாலை பூமிஜா வீட்டிற்குச் சென்று பெற்றோரை நேரில் சந்தித்து, மறுநாள் எங்களைப் பார்க்கப் பள்ளிக்கு வர வேண்டும் என்று சொன்னேன்., ரமா முடியாது என்றாள். ராமனும் மறுத்தார்.  இல்லை என்பதற்கு இடமில்லை என்று சொன்ன பிறகு, சம்மதம் வாங்கினேன். வந்தார்கள்.

ரமா ஜம்மென்று வந்திருந்தாள். தனியாகப் பேச வேண்டும் என்றதால் ராமனை வெளியே அமர வைத்து விட்டு வந்தேன். ரமா வெளிப்படையாகச் சொன்னாள், வற்புறுத்தி, ராமனை தனக்குக் கல்யாணம் செய்து வைத்தார்கள் என்று. கல்யாணத்திற்கு முன்பே வேலை இல்லாமல் சீட்டாடிக் கொண்டு இருப்பான். கல்யாணம் ஆனால் மாறும் என்று செய்து வைத்தார்கள் (தவறான கருத்து). சமுதாயத்திற்காக ராமனுடன் இருக்கிறாள் என்றாள்.

பூமிஜாவை கடுகளவு கூட பிடிக்காது என்று முகத்தைச் சுளித்து, வெறுப்பு பொங்கச் சொன்னாள். அதனால் தான் அவள் சம்பந்தப்பட்ட எதிலும் பங்கு கொள்வதில்லை என்றாள். இதன் தாத்பரியம், புமிஜாவிற்கு “பெற்றோரின் நிராகரிப்பு” (parental rejection). எக்காரணத்திற்கும் ராமனுடன் ஒரு அறையில் இருக்க விரும்பவில்லை என்றும், இனிமேல் பூமிஜாவுக்காக வர முடியாது எனச் சொல்லி விட்டுச் சென்றாள்.

ராமன், தகவல்களைப் பகிர்ந்தான். பூமிஜா பிரசவம், பிறப்பு எதுவுமே ரமாவிற்குப் பிடிக்கவில்லை என்றான். கூட, அவள் சற்று மனவளர்ச்சி குன்றிய குழந்தை என்றதால், தூக்கி வைத்துக் கொள்ள மாட்டாளாம். டாக்டர்கள் சொன்னது, படிப்பு மந்தமாக இருக்கலாம், ஆனாலும் எல்லா குழந்தைகள் போகும் பள்ளிக்குப் போகலாம். மாலையில் இவளைப் போன்ற குழந்தைகளுக்கு கற்றுத் தரும் ஸ்பெஷல் எடுகேடரிடம் படிக்க வேண்டும் என்று.

பூமிஜாவிற்கு வேலை சொல்லித் தரலாம் என்றார்கள். ரமா தன் அம்மாவைச் சொல்லித் தரச் செய்தாள். பூமிஜாவிற்கு விளாவரியாக புரிய வைக்க வேண்டும். மெதுவாகச் சொல்லித் தர வேண்டும். மற்றபடி அவளால் எல்லாம் செய்ய முடியும். ராமன் இதை நிராகரித்து, அவளை “மக்கு” என்றே அழைத்தான், எதுவும் புரியாது என்று எடுத்துக் கொண்டான்.

அதனால் தான் சீண்டுவான். இதைப் பார்த்து வந்த அவனுடைய ஒரு நண்பன், கொச்சையாக, “அவளை வைத்து, சம்பாதி” என்றான். ராமனுக்கு தன்னுடைய செலவுக்குப் பணம் தேவைப் பட்டது. கொஞ்சம் கூட உடம்பை அலட்டிக்கொள்ளாமல் இது ஒரு வழி என்று நினைத்தான், அவனுள் இருந்த அசுரன் வெளியேறினான். பூமிஜாவை பிடிக்காததால் ரமா தலையிட மாட்டாள் எனத் தெரியும்.

நண்பர்கள் வரவழைக்க ஆரம்பித்தான். பூமிஜாவை ஏதாவது ஒன்றைச் சொல்லி அவர்கள் அருகில் உட்கார வைப்பான். அவர்கள் தவறாக இங்கே அங்கே தொடுவதைப் பார்க்காதது போல இருப்பான். பணமும் வாங்கிக் கொண்டான்.

பூமிஜா நழுவ முயலுவாள். அவளுக்குத் தப்பு நடக்கிறது என்று நன்றாகப் புரிந்தது. தவித்தாள். அம்மாவிடம் சொல்ல முயன்றாள் அவளோ செவி சாய்க்கவில்லை.

எப்பவும் போல பூமிஜா மருத்துவரைப் பார்க்கப் போனாள். இவளுக்குக் குழந்தைப் பருவத்தில் நேர்ந்தது பல நோய்கள். அவைகளுக்கு இன்னும் சிகிச்சை போய்க்கொண்டு இருந்தது. இன்றைக்குப் போக மனம் வரவில்லை. அவள் இதுவரை பார்த்த மருத்துவர் தன்னுடைய ஊருக்குப் போவதாகச் சொல்லி இருந்தார். அந்த பகுதியில் எல்லோருக்கும் பிடித்தவர். பூமிஜா தன்னுடைய கவலை எல்லாம் பகிர்ந்து கொள்வாள். அப்பா பற்றிச் சொல்வதற்குள் மருத்துவர் கிளம்பி விட்டார்.

வேறு மருத்துவர் வந்தார், இவளும் சந்தித்தாள். ஆனால் இவர் அவர் மாதிரி இல்லை. முழு நம்பிக்கை வைத்திருந்தாள். அதனால் தான் எப்போதும் போல தனியாக வந்திருந்தாள். இவர் பரிசோதனை செய்யும் போது அவளுக்கு ஏனோ அசிங்கமாகப் பட்டது. ஏதோ சரியில்லை எனத் தோன்றியது.

இந்த நேரத்தில், வகுப்பு பயிற்சியில் சுயபாதுகாப்பைப் பற்றி மாணவி – மாணவர் எனப் பிரித்துச் சொல்லித் தந்து வந்தேன். பல விளக்கம்,உரையாடல், செய்து, புரிந்து கொள்ள ரோல் ப்ளே நடத்தி வந்தேன். இதிலிருந்து, ஏறத்தாழ பூமிஜா தனக்கு நேர்வதை அடையாளம் செய்தாள்.

இதையும் பூமிஜா ஸெஷன்களில் பகிர மேலும் விளக்கி, உரையாடினோம். பூமிஜா தன்னைத் தானே பார்த்துக் கொள்ள ஒவ்வொரு வார்த்தையையும் நன்றாக உள்வாங்கிக் கொண்டாள்.

வகுப்பில் எல்லோரும் தன் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள நேரம் அமைத்தேன்.

பூமிஜா முதலில் பகிர்ந்தாள். மோகன், அவன் கூட்டாளியும் அவளுடைய கையைப் பிடிக்கையில், இவள் மணிக்கட்டை இறுக்கிப் பிடித்து அழுத்த, கையை விடுவித்தார்கள். பயிற்சியில் சொன்னபடி, பயத்திற்குப் பதிலாகச் சமயோசிதமாகச் செய்வது உதவியது எனச் சொன்னாள். தனக்கு ஏற்பட்ட வேதனை, “அசிங்கம்”, சோகம் எல்லாம் சொன்னாள். பூமிஜா இருப்பதை அப்படியே சொல்ல, அது கேட்கும் ஒவ்வொருவரின் மனதைத் தொட்டது. பலருக்கு ஊக்கமானது.

இதைத் தொடர்ந்து செய்தோம். பலர் தைரியமாகப் பகிர்ந்த பின்பே மோகன் அன்ட் பார்ட்டிக்கு உரைக்க ஆரம்பித்தது.

பூமிஜாவுக்கு செய்வதை, அதன் வலி, ரணத்தைச் செய்பவர்கள் உணர வேண்டும். செய்பவர்களைப் பற்றி அறிந்ததால், அவர்களின் குறைபாட்டையும்ச் சரி செய்தோம். ஆசிரியரும் இதுபோல மற்ற வகுப்பில் நடக்காமல் இருக்க யோசனை, செயல்பாட்டைப் பகிர்ந்தார்.

பயிற்சியின் எதிரொலியாக, அன்று டாக்டர் பரிசோதனை செய்யும் போது தற்காப்புக்காக நர்ஸ் உள்ளே இருக்கச் சொன்னாள். அதையும் மீறி அவருடைய முரட்டுத்தனமான நடத்தையால் திகைத்துப் போனாள். இது நடந்தது சுமார் முப்பத்தைந்து வருடத்திற்கு முன்பு. இப்போது போன்ற சட்டம் இல்லை. மகளிர் காவல்நிலையம் இல்லை. அந்த மருத்துவரைப் பற்றி புகார் செய்ய அவளைக் காவல்நிலையம் அழைத்துச் சென்றேன். அவர் பெரிய புள்ளி என்று அறிந்தும் காவல்துறை அதிகாரிகள் அவருக்கு ஒரு எச்சரிக்கையிட்டு வந்தார்கள்.

பூமிஜா வீட்டில் வன்முறை தொடர்ந்தாலும், இப்போதெல்லாம் அந்த ஆண்கள் அவளை இழுத்தாலோ கை வைத்தாலோ சத்தம் போடுவதால் அவர்கள் தடுமாறிப் போவதைக் கூறினாள். அம்மா மாறாமல் இருந்தது கவலையாக இருந்தது. அப்போது திடீரென்று பல மாறுதல்கள் நடந்து விட்டது.

பூமிஜா வீட்டிற்குப் புதிதாகக் கல்யாணம் ஆன சிற்றப்பா சித்தி இங்கு வேலை கிடைத்ததால், அவர்களுடன் இருக்க வந்தார்கள்.

சித்தி பாசமானவள். பட்டதாரி. பூமிஜாவின் நிலை புரிந்து, பாடம் சொல்லித் தந்து, அவளுடன் வேலை செய்ததால், ரமாவிற்கு சித்தியையும் பிடிக்கவில்லை. வந்த புதிதில் பூமிஜா ராமன் அருகில் வந்தாலே குரலை எழுப்புவது, கண்களை விரித்து, ம்ம் என்றவுடன் அவனும் விலகியதைக் கவனித்தாள். எதுவும் கேட்கவில்லை. சில நாட்கள் கடந்தன. சிற்றப்பாவிடமும் அதையே செய்வதைச் சித்தி கவனித்தாள். வியப்பு ஆனது அவளுக்கு.

புது மாற்றத்தை என்னிடத்தில் சொன்னாள் பூமிஜா. இதுவரை, இவளைச் சமையல் அறையில் தூங்க வைத்தார்கள். அதை மாற்றி, அம்மா-தங்கை அருகில் படுக்க என யோசித்து வந்தோம். இதைச் செய்த பின் சில நாட்களுக்கு பூமிஜா பள்ளிக்கூடம் வரவில்லை, உடல்நலம் சரியில்லை என்ற கடிதம் வந்தது. மூன்றாவது நாள் தலைமை ஆசிரியரும் நானும் அவளைப் பார்க்கச் சென்றோம்.

பூமிஜா வீட்டில் இல்லை. பக்கத்துத் தெருவிலிருந்தாள். சித்தியுடன்.

சித்தி விளக்கினாள். அவளுடைய கணவனும் பூமிஜாவுடன் தவறாக நடந்து கொண்டதைப் பார்த்ததில் அங்கே அவர்களுடன் வாழ விருப்படவில்லை. தன்னுடைய பெற்றோரிடம் தெரிவித்து, இங்கு வந்து விட்டாள் என்று சொன்னாள். பூமிஜா தன்னுடைய பொறுப்பு மட்டுமே எனச் சொன்னாள்.

இருவரின் பாதுகாப்பைக் கருதி, காவல்துறையிடம் போய் விளக்கினோம். அவர்கள் ஆதரவாகப் பேசி, சித்தியின் தைரியத்தை வாழ்த்தி, அவர்களுடன் ராமன், சிற்றப்பா, ரமா மூவரையும் பார்த்து எச்சரிக்கை செய்து, அங்கே ரோந்து பணியில் உள்ள காவல்துறையினர் இவர்களைப் பார்த்துக் கொள்வதாகக் கூறினார்கள். செய்தார்கள்!

இத்துடன் முடியவில்லை, பூமிஜா பத்தாம் வகுப்பு முடித்தபின் வொகேஷனல் ட்ரைனிங் (vocational training, தொழில் பயிற்சி) சேர்ந்து பல கைவேலை கற்றுக்கொண்டாள். பூமிஜா தானாகச் சம்பாதிக்க, விசேஷங்களுக்கு கோலம் போடுவது என ஆரம்பித்தது. அவளை பலர் அழைத்தார். wire பை பின்னி விற்பனை, பூ தொடுத்துத் தருவது எனப் பல கைவேலை. பொருளை விற்பனை செய்ய இடம் அமைத்தேன். பக்கத்தில் உள்ள சிறுவர் பள்ளியில் உதவியாளராக வேலையும் கிடைத்தது. சித்தி மிகப் பாசமாகப் பார்த்துக் கொண்டாள்.

பல ஆண்டுகளுக்குப் பின்னர், ஒரு சந்தர்ப்பத்தில் சித்தியைச் சந்தித்த போது அவள் பூமிஜா எப்படி தான் வேலை செய்யும் இடத்தில் தற்காப்பு பற்றி கற்றுத் தந்தபடி, யாரும் அவளை வன்முறைக்கு ஆளாக்க விடாமல் இருந்ததையும் சொன்னாள்.

ஆசை – கடன் – சந்தைப் பொருளாதாரம் – செவல்குளம் செல்வராசு

Tamil Nadu: Rs 3 lakh can get you a doctorate without research | Chennai News - Times of India

நீண்ட இடைவெளிக்குப் பின்

தற்செயலாய் சந்தித்துக்கொண்டோம் வங்கியில்.

நல்ல படைப்பாளி நண்பர் அவர்.

 

கொரானா, பொதுமுடக்கம்,

ஊதிய இழப்பு, புலம்பெயர் தொழிலாளர்கள்,

அரசியல், சமூகம்,

போராட்டங்கள், தொழிற்சங்கங்கள்,

ஆசைகள், இலக்குகள்,

குடும்பம், நண்பர்கள்

இப்படியாக நிறைய பேசினோம்.

 

வீடு கட்டவிருப்பதாகச் சொன்னார்.

 

பழைய மகிழுந்தின்

மூன்றாவது உரிமையாளராகவிருப்பதை

கொஞ்சம் கூச்சத்தோடு சொன்னேன்

 

பின் ஆளுக்கொரு

கடன் படிவத்தை எடுத்து

நிரப்பத் துவங்கினோம்.

தாகூரின் “நாட்டியமங்கையின் வழிபாடு” -இரண்டாம் பகுதி – மொழியாக்கம்: மீனாக்ஷி பாலகணேஷ்

दो देशों को मीठे राष्ट्रगान देने वाले दुनिया के पहले कवि - Agniban

( இந்த நாடகம்  மகான்  தாகூர் அவர்கள்  எழுதித் தயாரித்த   நாட்டிய நாடகம். NATIR PUJA என்பது அதன் பெயர். 1932 இல்  ஒரு திரைப்படமாகவும்  தயாரிக்கப்பட்டது . தாகூர் அவர்கள் இயக்கி நடித்தும் இருந்தார். துரதிர்ஷ்டவசமாக  அந்தப் படத்தில் படச் சுருள் நெருப்புக்கு இரையாகிவிட்டது என்ற செய்தி நம் மனதில் வருத்தத்தை வரவழைக்கிறது. குவிகத்தில் இதன் தமிழாக்கத்தை வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம்) )

 

Natir Puja is the only film directed by Rabindranath Tagore. | by Bollywoodirect | Medium 

iஇதன் முதல் பகுதியைப் படிக்க விரும்புவர்கள் இந்த இணைப்பில் செல்லவும்)

தாகூரின் “நாட்டியமங்கையின் வழிபாடு” -முதல் பகுதி – மொழியாக்கம்: மீனாக்ஷி பாலகணேஷ்

 

உத்பலா செல்ல எத்தனிக்கிறாள்; ஆனால் அரசி அவளைத் திரும்ப அழைக்கிறாள்.

 

அரசி: பிட்சுணியே, கேள். எனது மகன் சித்ரா ஒரு புதுப்பெயரைத் தரித்துக்  கொண்டுள்ளானாமே, அது என்ன என்று உனக்குத் தெரியுமா?

பிட்சுணி: ஆம்! குசலசீலா என்பதே அது.

அரசி: (தனக்குத்தானே) தனது தாய் இட்டு அழைத்த பெயர் புனிதமற்றது என்று நினைத்தானோ என்னவோ- வெகு சுலபமாக அதனை உதறித்தள்ளி விட்டான்!

பிட்சுணி: மகாராணி, தாங்கள் விரும்பினால், தங்களைக் காண அவனை அழைத்து வருகிறேன்.

அரசி: நான் விரும்பினாலா? என்ன வெட்கக்கேடு. அவனை இவ்வுலகிற்குக் கொண்டுவந்த நானே உன்னிடம் ‘அவனை என்னிடம் அழைத்துக்கொண்டு வா’ எனக்கூற வேண்டுமா?

பிட்சுணி: அப்படியானால், நான் சென்றுவரட்டுமா?

அரசி: கொஞ்சம் இரு. நீ அவனை சிலசமயம் பார்ப்பாய் அல்லவா?

பிட்சுணி: ஆம்.

அரசி: சரி- ஒருமுறை மட்டும்… அவன் மட்டும் சரி என்றால் – இல்லை, வேண்டாம்; ஒன்றுமில்லை!

பிட்சுணி: நான் அவனிடம் சொல்கிறேன். அப்போது ஒருவேளை நீங்கள் அவனைக் காண முடியும்.

 

          உத்பலா செல்கிறாள்.

 

அரசி: ஒருவேளை! ஒருவேளை! நான் எனது இதயத்தின் ரத்தத்தை அவனுக்கு  ஊட்டியபோது ‘ஒருவேளை’ என ஒன்று இருந்ததில்லையே! ஒரு தாயிடம் பட்ட கடனுக்கான உரிமை இத்தனை சுருங்கி, ‘ஒருவேளை’யில்      தொக்கி நிற்கிறதே!

 இதுவே அவர்களின் மதம்! (கூப்பிடுகிறாள்) மல்லிகா!

                                        (மல்லிகா உள்ளே வருகிறாள்)

மல்லிகா: மகாராணி!

அரசி: இளவரசன் அஜாதசத்ரு பற்றிய செய்தி ஏதேனும் உண்டா?

மல்லிகா: ஆம். அவர் தேவதத்தனை அழைத்துவரச் சென்றுள்ளார். மூன்று ரத்தினங்கள் எனும்  மதத்தின் ஒரு சிறு    துரும்பைக்கூட அவர் இந்த நாட்டில் விட்டுவைக்க மாட்டார்.

அரசி: கோழை! அரசாளத் தைரியமற்ற அரசன்! புத்தரின் போதனைகள் வலிமையற்றவை என்பதற்கு எனது வாழ்வே சான்றாக நிற்கின்றது. இருப்பினும் அவனுக்கு, பிரயோசனமற்ற அற்பனான  தேவதத்தனைக் கூப்பிடாமல் அவற்றை எதிர்க்கத் திராணியில்லை.

மல்லிகா: யாரிடம் அதிகம்  பொருள் உள்ளதோ அவர்களிடமே பயமும் மிகுதியாக உள்ளது, மகாராணி. அவர் இந்த நாட்டுக்கு உரிமைகொண்டவராக இருப்பதனால் வலிமையுள்ள மற்றவர்களுடன் சமாதானமாக   இருப்பதனையே தைரியமற்ற அவர் விரும்புகிறார். புத்தபிரானின் சீடர்களுடன் அவர் மிகவும் இணக்கமாக இருப்பதனால், பயம்கொண்டு, தேவதத்தனின் சீடர்களுடனும் மேலும் இணக்கமாக இருக்க விழைகிறார். விதியின் வலிமையைத் தகர்க்க இரட்டைப் பாதுகாப்பை இரு பக்கங்களிலிருந்தும் பெற நினைக்கிறார்

அரசி: ஐயோ! எனது விதி இவ்வாறு ஒன்றுமில்லாமல் போயிற்றே! என்னிடமும் ஒன்றுமில்லை; பொய்மையைத்     துணைக்குச் சேர்த்துக்கொள்ளும்  கோழைத்தன்மையும் எனக்கு வேண்டியிருக்கவில்லை!

மல்லிகா: மகாராணி, தாங்கள் இப்போது நமது பிட்சுணியைப் போலப் பேசுகிறீர்கள். ‘நமது ராஜ்யத்தின் அரசி    ஆசிர்வதிக்கப்பட்டவள்; ஏனெனில் அவள் புத்தபிரானின் கருணையால் நம்மை மாயைகளுடன் பிணைக்கும் எல்லாத் தளைகளிலிருந்தும் விடுவிக்கப்பட்டவள்,’ என அவள் கூறுவாள்.

அரசி: இந்த வார்த்தை ஜாலங்கள் எனக்குக் கோபத்தையே வருவிக்கின்றன! இந்தப்  பொய்மையான       உண்மைகளை நீயே நினைத்து மகிழ்ந்துகொள், என்னை  மண்ணுடன் பிணைக்கும் தொடர்புகளைத் திரும்பக் கொடுத்துவிடு. அதன்பின்பு நான் எனது விளக்குகளை அசோகமரத்தினடியே உள்ள வழிபாட்டுப்  பீடத்தில் ஏற்றுகிறேன்; திரும்பவும் நூறு பிட்சுக்களுக்கு உணவளிக்கிறேன்; அவர்களுடைய ஒவ்வொரு மந்திரமும், ஒவ்வொரு நாளும் எனது அரண்மனையில் ஒலிக்கட்டும். அதனைச் செய்ய முடியாவிட்டால் பின்பு தேவதத்தன் வரட்டும்; அவன் உண்மையுள்ளவனா இல்லையா என எனக்கு  அக்கறையில்லை. நான் சென்று, காணும் கோபுரத்தின் மீதிருந்து அவர்கள்  வருகிறார்களா எனப் பார்க்கிறேன்.

 அவர்கள் செல்கிறார்கள்.

 நாட்டியமங்கை ஸ்ரீமதி தனது வீணையை ஏந்தியபடி வருகிறாள். தனது விரிப்பினைப் புல்தரையின்மீது     விரித்தவள், தனது மாணவிகளை அழைக்கிறாள்.

 ஸ்ரீமதி: நேரமாகி விட்டது. வாருங்கள் (அவள் அமர்ந்து கொண்டு பாடுகிறாள்)

                          இரவின் மௌனமான அமைதியில் என்ன ரகசியம் என்னை வந்தடைந்தது!

                          நான் அறியேனே!

                          அது விழித்திருத்தலா, அது உறங்கியிருத்தலா?

                          நான் அறியேனே!

 

          மாலதி என்னும் கிராமத்துப் பெண்ணொருத்தி நுழைகிறாள்.

 மாலதி: நீங்கள் தான் ஸ்ரீமதியா?

ஸ்ரீமதி: ஆம். உனக்கு என்ன வேண்டும்?

மாலதி: உங்களிடமிருந்து நான் சங்கீதம் கற்றுக்கொள்ளலாமென்று சொன்னார்கள்.

ஸ்ரீமதி: நான் முன்பு எப்போதாவது உன்னை இந்த அரண்மனையில்  பார்த்திருக்கிறேனா?

மாலதி: நான் இப்போதுதான் எனது கிராமத்திலிருந்து வருகிறேன். என் பெயர் மாலதி.

ஸ்ரீமதி: எதற்காக வந்தாய், குழந்தாய்? உனக்கு மிகுதியான நேரம் இருக்கின்றதா? அங்கு நீ பூஜைக்குரிய           மலர்போல இருந்தாய்; கடவுள்களும் மகிழ்ந்தனர். இங்கு கேளிக்கை எனப்படும் மாலையில் தொடுத்த ஒரு பூவாக இருப்பாய்; வக்கிரமான பிசாசுகள் உன்னைப்பார்த்து நகைக்கும். நீ பாடல்களைக் கற்றுக்கொள்ளவா வந்திருக்கிறாய்? நீ வேண்டுவது அதுமட்டும்தானா?

மாலதி: நான் உண்மையைக் கூறட்டுமா? எனது எதிர்பார்ப்புகள் மிக அதிகமானவை;  ஆனால் அதைப்பற்றிப்பேச என்னால் இயலவில்லை.

ஸ்ரீமதி: ஓ! அப்படியா? ஒருநாள் அரசியாகும் வெற்றுக்கனவினைக் காண்கிறாய்! உனது  முந்திய பிறவியின் பாவங்கள் போதுமானவையாக இருந்தால், அக்கனவு  பூர்த்தியானாலும் ஆகும். கானகத்துப் பறவை ஒன்று தங்கக்கூண்டிலிருக்க ஆசைப்பட்டால், கெட்ட தேவதைகள் அதன் சிறகுகளில் குடியேறும். உனது  காட்டிற்குத் திரும்பிப் போய்விடு! இன்னும் தாமதம் செய்யாதே!

மாலதி: சகோதரி,  சொல்வது எனக்குப் புரியவில்லை!

ஸ்ரீமதி: மகிழ்ச்சியற்ற பெண்ணே! கையிலணியும் ஒரு கங்கணத்திற்காக பிணிக்கும்  சங்கிலியை ஏன் தேடியலைகிறாய்?

மாலதி: நீங்கள் தவறாகப் புரிந்து கொண்டீர்கள்! நான் விளக்குகிறேன். புத்தபிரான் இந்த  நந்தவனத்திற்கு         ஒருமுறை வந்து இந்த அசோகமரத்தடியே அமர்ந்தார் என்று  கேள்விப்பட்டிருக்கிறேன். அந்த இடத்தில் மகாராஜா ஒரு வழிபாட்டு  மேடையைக் கட்டினார்.

ஸ்ரீமதி: உண்மைதான்!

மாலதி: ஒவ்வொருநாள் மாலையிலும் இளவரசிகள் தங்கள் நிவேதனப் பொருள்களுடன் அங்கு வருகின்றனர்  எனவும் கூறுகிறார்கள். அத்தகைய உயர்வான சலுகையை  நான் எதிர்பார்க்கவில்லை; ஆனால் நான் அந்த வழிபாட்டு மேடையைப்  பெருக்கிச் சுத்தமாக வைக்கலாம் அல்லவா? அந்தவொரு நம்பிக்கையே  உங்களுடைய பாடும்பெண்களின் குழுவில் சேர்வதற்கு  என்னை இங்கு அழைத்து  வந்தது.

ஸ்ரீமதி: வா சகோதரி, நான் மகிழ்ச்சியடைகிறேன். இளவரசிகளின் வழிபாட்டு தீபங்கள் வெளிச்சத்தைவிட       அதிகமாகப் புகையையே வெளிவிடுகின்றன; அவை உனது  புனிதமான தொடுதலுக்காகக் காத்திருக்கின்றன. ஆனால் எது உன்னை இவ்வாறு  எண்ணவைத்தது?

 

 (தொடரும்)

 

 

 

அக்கித்தம் அச்சுதன் நம்பூதிரி அவர்களுக்கு இவ்வாண்டுக்கான ஞானபீட விருது

 

அக்கித்தம் அச்சுதன் நம்பூதிரிக்கு ஞானபீடம்

(இந்த தளத்தில் உள்ள கட்டுரைகளை இணையத்தில் கட்டுரையின் இணைப்புடன் பகிர்ந்து கொள்ளலாம் – ஜெயமோகன் )

 

மலையாள கவிஞர் அக்கித்தம் அச்சுதன் நம்பூதிரி அவர்களுக்கு இவ்வாண்டுக்கான ஞானபீட விருது வழங்கப்பட்டுள்ளது. இதையொட்டி ஒரு நினைவு. 2007ல் மலையாள திரைப்பாடலாசிரியரும் கவிஞருமான ஓ.என்.வி.குறுப்ப்புக்கு ஞானபீடம் வழங்கப்பட்டபோது மலையாள வார இதழான மாத்ருபூமிக்கு நான் அளித்த நீண்ட பேட்டியில் ஓஎன்வி அவர்களுக்கு ஞானபீடம் வழங்கப்பட்டதை கண்டித்து அப்பரிசுக்கு எவ்வகையிலும் தகுதியானவர் அக்கித்தம் அவர்கள்தான் என்றும், அவர் இருக்கையில் ஓஎன்விக்கு அளிக்கப்பட்டது ஒரு வகை மீறல் என்றும் குறிப்பிட்டிருந்தேன்.

அது ஒரு சிறு விவாதத்தைக் கிளப்பியது. பலவகையிலும் மலையாளிகளுக்கு பிரியமான பிரபலக் கவிஞர் ஓஎன்வி. இடதுசாரிக்கவிஞர். கேரள இடதுசாரி இயக்கத்தின் பண்பாட்டுமுகங்களில் ஒருவர். அவர் பரிசுபெறும் அச்சூழலில் அவ்வாறு சொல்வது அவரை அவமதித்தலாகும் என்று சொல்லப்பட்டது. என் கருத்துடன் உடன்பட்டவர்கள்கூட இன்னொருவரிடம் ஒப்பிட்டிருக்கவேண்டாம், இருவருக்குமே சங்கடம் என்றார்கள். ஓஎன்வியின் பாடல்களின் இசையொருமை,சொல்லழகு பற்றி எனக்கு மாற்றுக்கருத்தில்லை என்றும் ஆனால் ஞானபீடம் என்பது தனக்கான தனிப்பார்வையும் தனிப்படைப்புமொழியும்கொண்டு ஒரு சூழலின் மையவிசையாக இயங்கும் படைப்பாளிக்கு அளிக்கப்படவேண்டியது என்றும் நான் மறுமொழி சொன்னேன். அதைச் சுட்டிக்காட்டவே அந்த ஒப்பீட்டை நிகழ்த்தினேன் என்றேன்.

அக்கித்தம் அவர்களுக்கு ஞானபீடம் என்னும் கருத்தை ஒருவகையில் அவ்வாறு தொடங்கிவைத்தேன் என எண்ணிக்கொள்கிறேன். ஏனென்றால் அக்கித்தம் அன்று பிரபலக் கவிஞர் அல்ல. அவர் சென்றகாலத்தைய கவிஞராக, ஒருவகையில் புதியவாசகர்களால் கவனிக்கப்படாதவராக ஆகிவிட்டிருந்தார். அவர் மலையாளத்தில் புதுக்கவிதை தோன்றுவதற்கு முந்தைய அழகியல்மரபைச் சேர்ந்தவர். அவர் தீவிரமாகச் செயல்படுவதை நிறுத்தி நீண்டநாள் ஆகிவிட்டிருந்தது

அக்கித்தம் என்பது அவருடைய குடிப்பெயர். 1926 மார்ச் 18 ஆம் தேதி பாலக்காடு மாவட்டத்தில் குமரநல்லூரில் பிறந்தவர் அக்கித்தம் அச்சுதன் நம்பூதிரி. அமேற்றூர் அக்கித்தத்து மனையில் வாசுதேவன் நம்பூதிரியும் சேகூர் மனைக்கல் பார்வதி அந்தர்ஜனமும் பெற்றோர். இவருடைய தம்பி அக்கித்தம் நாராயணன் புகழ்பெற்ற ஓவியர். இவர் மகன் அக்கித்தம் வாசுதேவனும் புகழ்பெற்ற ஓவியர்தான்

அக்கித்தம் இளமையில் இசையும் சோதிடமும் கற்றார். இளமையில் காந்திய இயக்கத்தி ஆதரவாளராகவும் பின்னர் இடதுசாரி கருத்துக்கள் கொண்டவராகவும் திகழ்ந்தார். எம்.ஆர்.பி [எம்.ராமன் பட்டதிரிப்பாடு] அவர்களின் ஆசிரியத்துவத்தில் கொல்லத்தில் இருந்து வெளிவந்த உண்ணிநம்பூதிரி என்னும் மாத இதழின் வெளியீட்டாளராக 1946ல் தன் இருபதாம் வயதிலேயே பணியாற்றினார். நம்பூதிரி சமூகத்தின் மூடநம்பிக்கைகள், பழைமையான ஆசாரங்களுக்கு எதிராகச் செயல்பட்ட முக்கியமான சீர்திருத்த இதழ் இது

கேரளத்தில் இலக்கியம், சமூகசிந்தனை ஆகியவற்றில் ஆழ்ந்த செல்வாக்கைச் செலுத்திய மங்களோதயம் யோகக்ஷேமம் போன்ற இதழ்களில் உதவி ஆசிரியராக பணியாற்றினார். திரிச்சூரிலிருந்து வெளியான மங்களோதயம் கேரள நவீனஇலக்கியத்தில் பல தொடக்கங்களை நிகழ்த்திய சிற்றிதழ்- ஒருவகையில் மணிக்கொடியுடன் ஒப்பிடலாம். இவ்விதழின் ஆசிரியரையும் இதழ்ச்சூழலையும் குறித்த வேடிக்கையான சித்திரத்தை வைக்கம் முகமது பஷீரின் ‘ஒரு பகவத்கீதையும் சில முலைகளும்’ என்னும் குறுநாவலில் காணலாம்

1956ல் கோழிக்கோடு ஆகாசவாணியில் ஆசிரியராக பணியில் சேர்ந்தார். 1975 ஆம் ஆண்டு திரிச்சூர் ஆகாசவாணியில் பொறுப்பாளரானார். 1985ல் ஓய்வுபெற்றார். அக்கித்தம் இசையிலும் ஈடுபாடுள்ளவர். பொதுவாக அரசியல் விவாதங்களிலோ இலக்கியவிவாதங்களிலோ ஈடுபாடு காட்டாதவர். அனைவரிடமும் நல்லுறவு கொண்டிருந்தவர். ஆனால் இடதுசாரி இயக்கத்தின் உட்பூசல்கள், சோவியத் ரஷ்யாவில் கம்யூனிஸ்ட் அரசின் மானுட அழிவுகளும் ஒடுக்குமுறைகளும் வெளிப்படுத்தப்பட்டமை அவரை இடதுசாரி இயக்கங்கள்மேல் அவநம்பிக்கை கொள்ளச்செய்தது.இஎம்எஸ் போன்ற மூத்த கம்யூனிஸ்டுத் தலைவர்களுடன் அணுக்கமான உறவு கொண்டிருந்த அக்கித்தம் அவ்வியக்கத்தின் தொடர்புகளை வெளிப்படையாக விலக்கிக் கொண்டார்.

1951ல் வெளிவந்த இருபதாம்நூற்றாண்டின் இதிஹாசம் [இருபதாம் நூற்றாண்டின் தொன்மம்] என்னும் புகழ்பெற்ற குறுங்காவியம் அந்த கொந்தளிப்பையும் விலக்கத்தையும் வெளிப்படுத்துவது.

வெளிச்சம் துஃகமாணு உண்ணீ

தமஸல்லோ சுகப்ப்ரதம்

[வெளிச்சமே துயரம் மகனே, இருட்டல்லவா இனியது]

என்னும் வரி அக்கவிதையில் உள்ளது. மலையாளத்தில் ஒரு பழமொழி போல புழங்குவது அது. 1983ல் வெளிவந்த ‘இடிஞ்ஞு பொளிஞ்ஞ லோகம்’ [இடிந்துசிதைந்த உலகம்] இடதுசாரிகள் மேல் கடுமையான விமர்சனத்தை முன்வைத்த இன்னொரு நீள்கவிதை.

இக்காரணத்தால் பொதுவாக இடதுசாரி விமர்சகர்களால் ஆளப்படும் மலையாள இலக்கியச் சூழலில் அக்கித்தம் தொடர்ச்சியாக புறக்கணிப்புக்கும் விமர்சனத்திற்கும் உள்ளானார். 1973ல் அவருக்கு கேந்திர சாகித்ய அக்காதமி விருது வழங்கப்பட்டது. அதன்பின் முக்கியமான விருதுகள் எவையும் அளிக்கப்படவில்லை. 2017ல் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. இப்போது ஞானபீடம்

அக்கித்தம் கவிதைகள் கேரளத்தின் மரபுக்கவிதை இலக்கணத்தை ஒட்டியவை. அதேசமயம் மரபுக்கவிதைகளிலுள்ள வழக்கமான சொல்லணிகள், மரபுத்தொடர்கள் அற்றவை. கேரளப் புதுக்கவிதையைப்பற்றிப் பேசும்போது ஒருமுறை பி.ராமன் சொன்னார். “மலையாளத்தில் வசனகவிதை எழுதுவதில் ஒரு சிக்கல் உள்ளது. மலையாள உரைநடை பேச்சுமொழிக்கு அணுக்கமாகச் செல்லும்போது தொய்வான சொல்முறையாக ஆகிறது. அதை இறுக்கமான உரைநடையாக ஆக்கமுயன்றால் செயற்கையாக மாறிவிடுகிறது.இறுக்கமான இயல்பான கவிமொழியை அடையவேண்டும் என்றால் மரபுக்கவிதையின் தாளக்கட்டு உதவுகிறது”

இது ஓர் உண்மை. அக்கித்தம் போன்றவர்களின் மரபுக்கவிதை வரிகளுடன் ஒப்பிட்டால் மலையாள வசனகவிதைகள் நீளநீளமாக ஒலிப்பதைக் காணலாம். மலையாள மரபுக்கவிதை சம்ஸ்கிருத சொற்புணர்ச்சி இலக்கண முறைமையை அடியொற்றி பல சொற்களை ஒன்றோடொன்று இணைத்து அடர்த்தியான சொல்லாட்சிகளை உருவாக்குகிறது. அது பழகிய தாளத்தில் அமைந்திருப்பதனால் நினைவில் நிற்கவும் நாவால் சொல்லவும் அயலாக இருப்பதுமில்லை.

அக்கித்தம் கவிதைகளை வாசிக்கையில் அவை பிறகுவந்த மலையாள நவீனக் கவிதைகளைவிடச் செறிவானவை எனத் தோன்றுவது இதனால்தான். ஏனென்றால் அவருடைய கவிதையின் பேசுபொருட்கள் புதுக்கவிஞர்கள் எடுத்துக்கொண்டவைதான். அவருடைய பார்வையும் நவீன காலகட்டத்தைச் சேர்ந்ததுதான். அவருடைய மொழி மட்டுமே யாப்புக்குள் நிற்பது.

மலையாள மரபுக்கவிதையில் இருந்த ‘காளிதாசக்களிம்பு’ அக்கித்தம் கவிதைகளில் இல்லை என்று விமர்சகர்கள் சொல்வதுண்டு. உணர்ச்சிக்கொந்தளிப்புள்ள, கட்டற்ற மொழியில் நீண்டு செல்லும் கவிதைகளையே மரபுக்கவிஞர்கள் எழுதிவந்தனர். அக்கித்தம் சொல்லெண்ணி சுருக்கி எழுதும் ஒரு மரபுக்கவிமொழியை உருவாக்கினார். ஆனால் இயல்பான ஓட்டமும் சொல்லழகும் கொண்டவையாக அவ்வரிகளை அமைத்தார். மலையாளப் புதுக்கவிதையில் சொற்செறிவுக்கு அதேயளவுக்கு கவனம் அளித்தவர் ஆற்றூர் ரவிவர்மா. அவருக்கு அக்கித்தம் மேல் பெருமதிப்பு இருந்தது.

இன்னொன்றும் கூறவேண்டும். மலையாள மரபுக்கவிதைகள் அவற்றின் செறிவு, இசைத்தன்மை ஆகியவற்றுக்காக சம்ஸ்கிருதச் சொற்களை நோக்கிச் செல்வதே வழக்கம். மலையாளம் ஒரு புழக்கமொழி. சந்தத்தில் அமையும் சொல்தேடிச்சென்றால் சம்ஸ்கிருதத்தையே நாடவேண்டும். மலையாள மொழியின் அமைப்புக்கு சம்ஸ்கிருதச் சொற்களை அப்படியே எடுத்தாள்வது பிழை அல்ல. ஆகவே மலையாளம் சற்று செம்மைகொண்டாலே நேரடிச் சம்ஸ்கிருதமாக ஆகிவிடும். புதுக்கவிதைகள்கூட சம்ஸ்கிருதச்செறிவு கொண்டவையே

ஆனால் முறையான சம்ஸ்கிருதக் கல்விகொண்டவரான அக்கித்தத்தின் கவிதைகளில் சம்ஸ்கிருதம் தேவைக்குமேல் பெருகி நிறைந்திருப்பதில்லை. மலையாள நாமொழி மரபிலிருந்தே சொற்களை கையாளவும் அவற்றை சம்ஸ்கிருதச் செவ்வியல் கவிநடை அளவுக்குச் செறிவுடன் அமைக்கவும் அவர் எடுத்த முயற்சியில் அடைந்த வெற்றியே மலையாளக் கவிஞர்களில் அவரை முதலிடம் கொண்டவராக ஆக்குகிறது. மலையாளக் கவிமொழியையே ஒட்டுமொத்தமாக மாற்றியமைத்தவர் என்று அவரைச் சொல்லமுடியும். பின்னாளில் எழுதவந்த அனைவரிடமும், இன்று எழுதிக்கொண்டிருக்கும் நவகவிஞரான பி.ராமன் வரை, அக்கித்தம் அவர்களின் செல்வாக்கு உண்டு.

ஒரு நவீனக் கவிதைவாசகன் அக்கித்தம் அவர்களின் கவிதையில் இன்று கண்டு வியப்பது நாட்டார்ப்பாடல் அளவுக்கு,பேச்சுமொழி அளவுக்கு எளிய மலையாளச் சொற்கோவைகள் அடர்த்தியான கவிமொழியாக ஆவதன் அழகைத்தான். சற்றே நிறுத்திச் சொன்னால் எவராலும் புரிந்துகொள்ளக்கூடிய வரிகளே அவருடைய பெரும்பாலான கவிதைகள்

 

இந்நலேப் பாதிராவில் சின்னிய பூநிலாவில்

என்னையும் மறந்து ஞான் அலிஞ்ஞு நில்கே

தானே ஞானுறக்கேப்பொட்டிக் கரஞ்ஞுபோயி

தாரகவியூகம் பெட்டெந்நு உலஞ்ஞுபோயி

 

பரமதுக்கம் என்னும் கவிதையின் முதல்நான்குவரி இது. மேலே உள்ள வரிகளிள் சொற்களை நான் பிரித்திருக்கிறேன். சம்ஸ்கிருத சொல்லிணைவு முறைமைப்படி இணைந்த சொற்களாக அமைந்த கவிதை இது. [நேற்று பாதி இரவில் சிதறிய நிலவொளியில் என்னையும் மறந்து நான் கரைந்து நின்றிருந்தபோது தானாகவே நான் விம்மியழுதுவிட்டேன். விண்மீன்களின் சூழ்கையும் மெல்ல நெளிந்தாடியது ]. எந்தக் காரணமும் இல்லாத, எவ்வகையிலும் விளக்கமுடியாத ஒரு துயரத்தின் கணத்தைச் சொல்லும் கவிதை இது.

அக்கித்தம் அவர்களின் இலக்கியச் சாதனைகளில் ஒன்று சம்ஸ்கிருதத்தில் இருந்து பாகவதத்தைச் செய்யுளில் மொழியாக்கம் செய்தது. மூன்று தொகுதிகளாக அது வெளியாகியிருக்கிறது. அக்கிதத்தின் கவிதைகள் இரண்டு பெருந்தொகைகளாக வெளிவந்துள்ளன.

அக்கித்தம் அவருடைய பின்னாளைய கவிதைகளிலூடாக நவீன ஜனநாயக விழுமியங்களுக்காகவும், மனித உரிமைகளுக்காகவும் பேசும் கவிஞராக வெளிப்படுகிறார். ஆனால் அவருடைய முதன்மையான கவிதைகளில் உலகியல் கொந்தளிப்புகளுக்கு அப்பால் மானுட உள்ளம் அடையும் தனிமையை, முழுமைக்கான தேடலை, அதன் மாற்றில்லாத துயரை வெளிப்படுத்துகிறார்.

மரபுக்கவிதையை நம் உள்ளம் இயல்பாக கற்பனாவாதத்துடன் இணைத்துக்கொள்கிறது. அக்கித்தம் கற்பனாவாதப் பண்புக்கு எதிரானவர். உணர்வடங்கிய நிலை கொண்டவை அவருடைய கவிதைகள். கொந்தளிப்பை வெளிப்படுத்தும்போதும் சமநிலை தவறாத சுருக்கமான மொழியை நோக்கிச் செல்பவை. பெரும்பாலும் மிக யதார்த்தமான வாழ்க்கைச்சித்திரங்கள் கொண்டவை.அவ்வகையில் அவரை நவீனச் செவ்வியலை எழுதியவர் என வரையறைசெய்ய முடியும்

 

அக்கித்தம் அவர்களுக்கு வணக்கம்

 

நாமும் ஜெயமோகன் அவர்களுடன் சேர்ந்து அக்கிடகம் அவர்களை வணங்குகிறோம் !

 

இன்னும் சில படைப்பாளிகள் – எஸ் கே என்

image.png

பி எஸ் ராமையா

உப்பு சத்தியக்கிரத்தில் பங்குகொண்டு சிறைத்தண்டனை பெற்றவர். கதர் விற்பனையாளராகவும் தொண்டர் முகாம்கள் அமைத்து நடத்துபவராகவும் தேசிய இயக்கத்தில் பணியாற்றியவர்.

தமிழ் உரைநடை இலக்கியத்தில் ‘மணிக்கொடி காலம்’ என்று அறியப்படும் அளவிற்கு மணிக்கொடி பத்திரிகை மிக முக்கியமானதாகும். வத்தலகுண்டு சுப்ரமணியன் ராமையா என்னும் பி எஸ் ராமையா (வத்தலகுண்டு ஆங்கிலத்தில் Batlagundu என்று எழுதப்படுகிறது) ‘மணிக்கொடி’ ஆசிரியராகப் பணியாற்றிய காலம் 1935 மார்ச் முதல் 1938 ஜனவரி வரை. மணிக்கொடியிலிருந்து விலகியபின்   நாடகத்திலும் திரைத்துறையிலும் கவனம் செலுத்தினார்.

“தேரோட்டி மகன்”, “பிரசிடன்ட் பஞ்சாட்சரம்”,   “போலீஸ்காரன் மகள்” போன்ற மிக நாடகங்கள் மாபெரும் வெற்றி பெற்றன. பிரசிடென்ட் பஞ்சாட்சரமும் போலீஸ்காரன் மகளும் திரைப்படமாகவும் வெற்றி பெற்றன. போலீஸ்காரன் மகள் தெலுங்கிலும் எடுக்கப்பட்டது.

1940 தயாரிக்கப்பட்ட “பூலோக ரம்பை” திரைப்படத்தில் தொடங்கி, “பணத்தோட்டம்” என இருபது திரைப்படங்கள் இவரது கதை- வசனம் கொண்டு தயாரிக்கப்பட்ட படங்கள். இவற்றில் சில படங்களை அவரே தயாரித்திருக்கிறார். இயக்கியும் இருக்கிறார்.  ஆனந்தவிகடன் நடத்திய போட்டியில் இவரது ‘மலரும் மணமும்’ கதைக்கு பத்து ரூபாய் சன்மானமாகப் பெற்றார்.  ‘ஜெயபாரதி’ என்னும் இதழில் துணையாசிரியராகப் பணிபுரிந்தார். முன்னூறுக்கும் ஏற்பட்ட சிறுகதைகள் எழுதியிருக்கிறார். அவற்றில் பெரும்பாலானவை  ‘ஆனந்த விகடன்’, ‘தினமணி கதிர்’, ‘குமுதம்’ தவிர மணிக்கொடியில் வெளிவந்தவை.

 ‘ராமையாவின் சிறுகதைப் பாணி’ என்னும் நூலை சி.சு. செல்லப்பா எழுதியிருக்கிறார்.

மணிக்கொடி இயக்கத்தைப் பற்றி எழுதிய “மணிக்கொடி காலம்” என்ற இலக்கிய வரலாறு புத்தகத்திற்கு 1982ம் ஆண்டிற்கான சாகித்திய அகாதமி விருது ராமையா பெற்றார்.

* * * * * *

இவரது “மடித்தாள் பட்டி” என்னும் கதை

மதுரையிலிருந்து பழனிக்குப்போகும் சாலையிலிருந்து நாலைந்து மைல் தூரத்திலிருக்கும் ஒரு கிராமத்திற்குப் போய் விட்டுத் திரும்பி வந்துகொண்டிருந்தேன். ஒரு காலத்தில் காட்டோடையாக இருந்த அந்த நொடிப் பாதையில், வண்டி அடிக்கொரு தரம் குலுங்கி விழுந்து ஆடி அசைந்து கொண்டிருந்தது. திடீரென்று வண்டிக்காரன் வண்டியை நிறுத்தி, “இடது காளைக்கு ஒரு லாடம் விழுந்திருக்குதுங்க மாடு நொண்டுது” என்றான்.

என்று தொடங்குகிறது

வேறு வழியின்றி வண்டியிலிந்து  குதித்து ஆலமத்தடிக்குப் போகிறார். புண்பட்ட மாட்டை மட்டும் ஒட்டிக்கொண்டு வண்டிக்காரன் செல்கிறான்.  அந்த இடத்தின் அழகும் கம்பீரமும்  அவர் மனத்திலிருந்த எரிச்சலெல்லாம் ஒரே வியப்பாக மாற்றுகிறது. மூன்று பக்கம் குன்றுகள் சூழ்ந்த இடம். சாதாரணக் காட்டுக் கள்ளிச் செடிக்குக்கூட இடம் கொடுக்கமறுக்கும் கருங்கல் கரடு ஒரு பக்கம்.  இங்கொன்றும் அங்கொன்றுமாக புதர்கள் முளைத்திருந்தன.

இரண்டு குன்றுகளுக்கிடையில் மாரிக் காலத்தில் குளமாக வேஷம் போடும் ஒரு பெரிய பள்ளத்தாக்கு அதில் அடர்த்தியாகக் கருவேலம் செடிகளும், மரங்களும் வளர்ந்து நிறைந்திருந்தன. இந்தக்குளத்தின் மூன்றாவது திசையில்தான் அந்த நீலப்பச்சைமலை நின்று கொண்டிருந்தது.

ஆலமரத்திற்கு மேற்கே கொஞ்சம்தள்ளி ஒரு பெரிய கிணறு இருந்தது. அதற்குக் கருங்கல்லால் கரை கட்டி உள்ளே இறங்கப் படிகளும் அமைக்கப்பட்டிருந்தன. கிணற்றையடுத்து ஒரு மரத்தடியில் ஒரு சிறிய காட்டுக் கோயில் மண் சாந்து வைத்துக் கருங்கற்களால் கட்டியது.

ஒரே அறைகொண்ட அந்தக் கோயிலின்  முன்புறம் ஆணும் பெண்ணுமாக இரு மண் சிலைகள்.  மரத்தில் கட்டப்பட்டிருந்த பெரிய வெண்கல மணி. படையல் இடப்பட்டதின் அடையாளமாக  அடுப்பு மூட்டி எரித்த மும்மூன்று  செங்கற்கள்.  ரசித்துக்கொண்டே சென்றுகொண்டிருந்த கதைசொல்லி  ‘முருகா’ என்று குரல் கேட்டுத் திரும்பிப் பார்க்கிறார்.

அறையில் கோவணம். மேலே உடலை மறைத்துப்போர்த்திய ஒருகாவித்துணி, மழ மழவென்று சிரைத்த தலை, நெற்றியிலும் உடலிலும் பளிச்சென்று பூசிய திருநீறு. கழுத்திலே காவித் துணிக்கு மேல் விழுந்து புரண்டு கொண்டிருக்கும் ருத்திராட்ச மாலை. வலது கையில் தண்ணிர்நிறைந்ததிருவோடு இடதுகையில் ஒரு முறுக்குத்திடி.

யாரோ சோம்பேறிப் பண்டாரம் என்று முதலில் தோன்றினாலும் அவர் முகத்தில் இருந்த தனிக்களை இவரை ஈர்க்கிறது. ’பூசை போட வந்தீர்களா’ என்று கேட்கிறார் பண்டாரம். தற்செயலாக இங்கு வரநேர்ந்ததைச் சொல்லிவிட்டு கோவிலைப்பற்றி விசாரிக்கிறார்.

 பண்டாரம் அந்த கோவிலின் கதையைச் சொல்கிறார். பக்கத்திலுள்ள இந்தக் கோயில்  தெய்வம் என்று அடுத்துள்ள கிராம மக்கள் நம்பினார்கள். முன்னொரு ஆண்டுகளுக்கு முற்பட்ட கோவில்.

மதுரையில் ஆண்டுவந்த திருமலைநாயக்கர் இறுதிக்காலத்தில் மைசூர் உடையார் படைகள் மதுரையைமீது படையெடுக்க வந்த வழியில்  சத்தியமங்கலம் வரை மைசூர் படைகள் பிடித்துவிட்டன. மறவச்சீமை அதிபதி ரகுநாத சேதுபதி நாயக்கருக்கு உதவியாக பெரும் படையுடன்  வந்தார்.  எதிரிளைத் துரத்தி வெகு தூரம் பின்வாங்கச் செய்துவிட்டார்.    

மூன்று புறம்  மலைசூழ்ந்து கோட்டைபோல இருந்தது. அதைப் பயன்படுத்திகொண்டு  மைசூரில் இருந்து வரும் உதவிக்காககே காத்திருந்தன மைசூர் படைகள். சேதுபதியின் படைகளும் ஒரு காத  தூரத்தில் முகாமிட்டார்.  பத்து நாள்வரை இரண்டு படைகளும் காத தூரத்திலேயே ஒதுங்கி இருந்தன

பத்தாம் நாள் மைசூரிலிருந்து புதிய படைகள் வந்திருப்பதாகச் சேதுபதிக்குச் செய்தி எட்டியது. அதுபற்றிய உளவு தெரிந்துகொண்டு மேற்கொண்டு யுத்தம் எப்படிச் செய்யலாம் என திட்டம் தீட்ட முடிவுசெய்தார், சேதுபதி. உளவறியத் திறமைசாலிகள் பலர் இருந்தும்  தானே உளவறியச் சென்றாராம் சேதுபதி.

அந்தக்காலத்தில் அதோ இருக்கிறதே. வண்டிப்பாதை அது ஒரு காட்டோடையாக இருந்தது. இந்த மடித்தாள் பட்டி அப்போது நல்ல செழிப்பான கிராமம். பத்துப் பதினைந்து மச்சு வீடுகளும் உண்டு. இந்த எல்லை போர்க்களமாக மாறியவுடன் கிராமத்து மக்கள் ஊரைவிட்டு ஓடிவிட்டார்கள். மைசூர்க்காரர்கள் வந்த பார்த்து யாருமில்லாததால் ஊரை அப்படியே விட்டு விட்டார்கள்.

ஊரைவிட்டு ஓடிவிட்ட கிராம மக்களில் ஒருவன் கள்ளமுத்தன். பணக்காரன். பணத்தை வீட்டிலேயே ஓரிடத்தில் புதைத்துவிட்டுப் போயிருந்தான். சில நாட்களாகச் சண்டை ஏதும் நடக்காததால் புதைத்த செல்வத்தை எடுத்துப்போக வந்திருந்தான் . மனைவியும் மடியாச்சியும் பிடிவாதமாகக் கூட  வந்திருந்தாள்.   

புதைத்தவற்றை தோண்டி எடுக்கும்போது சேதுபதி வீட்டுக்குள் குதித்தார். கள்ளமுத்தன் பயந்து கத்தினான். சேதுபதி தான் யாரெனப் புரியவைத்தார். சேதுபதிக்குப் பதிலாக கள்ளமுத்தன்  உளவறிந்து வரலாமே என்கிற யோசனையைச் சொல்கிறாள் மடியாச்சி. என்ன காரணத்தாலோ சேதுபதி அதற்குச் சம்மதித்தார்.   கள்ளமுத்தன் வீட்டிலிருந்து புறப்பட்டபோது சரியாகத் தானிருந்தான்.

ஆனால் போகும் வழியில் சூழ்ந்திருந்த இருளில் ஆட்சிபுரிந்த பேய்களின் குணங்கள் அவன் நெஞ்சிலும் ஆட்சிபுரிய ஆரம்பித்து விட்டன. சேதுபதிக்கு உதவி செய்வதில் கிடைக்கும் சன்மானம் எவ்வளவு இருக்கும்? ஆனால் எதிரி தளபதியிடம் சேதுபதியையே பிடித்துக் கொடுப்பதாகச் சொன்னால் ஏராளமான சன்மானம் கிடைக்கக் கூடுமல்லவா? இந்த எண்ணத்தை எதிர்த்துப் போராடி வெற்றி கொள்ள அவனிடம் சக்தி இல்லை. தன்னைக் கண்டு அவன் போட்ட பயக்கூச்சலைக் கொண்டே சேதுபதி இதைப் புரிந்துகொண்டிருக்கவேண்டும். ஆனால்..!

கள்ளமுத்தன் சேதுபதியைக் காட்டிக் கொடுத்து எதிரிகளிடமிருந்து பெரும் சன்மானம் பெறாலாம் முடிவு செய்கிறான். மைசூர்ப் படைகளின் தளபதியச் சந்தித்தான்  அதன்படி  ஐம்பது வீரர்களை உடனனுப்பினால் சேதுபதியைப் சிறைபிடித்துகொண்டு வருவதாகச் சொன்னான்.  ஆனால் தளபதியோ கள்ளமுத்தனைக் காவலில் வைத்துக்கொண்டு  வீரர்களை மட்டும் அனுப்புகிறான். துப்பு சரியாக இருந்தால் வெகுமதியும் தவறாக இருந்தால் தண்டனையும் கள்ளமுத்தனுக்குக்  கிடைக்கும் என்று ஏற்பாடு.

நூறு வீரர்கள் சேதுபதியைச் சிறப்பிடிக்கச் சென்றார்கள். சேதுபதி தப்புவதற்கு நேரம் தராமல் வீரர்கள் வீட்டுக்குள்ளேயே குதித்து விட்டார்கள்

 “மடிச்சியாச்சியைப் பிடித்த பயம் ஒரே நொடியில் அவளை தெய்வப் பெண்ணாக மாற்றிவிட்டது. அவளிடம் இயற்கையிலே இருந்த தாய்மைதான் பொங்கி எழுந்திருக்க வேண்டும். சேதுபதியைத் தன் சொந்த மகனாக வரித்துக் கொண்ட அந்தத்தாய், அடுத்த கணம். அன்னை பராசக்தியின் ஒர் அவதாரமாகிவிட்டாள்.

ஒரே கணத்தில் அந்தக்கூடத்துக்காட்சியை மாற்றி அமைத்தாள். ஒருபக்கத்தில் கிடந்தபாயைக்கொண்டுவந்து நடுக்கூடத்தில் விரித்தாள். முற்றத்தில் தோண்டிப் போட்டிருந்த மண்ணில் கொஞ்சம் அள்ளிக்கொண்டு வந்தாள். பானையிலிருந்த தண்ணிரில் மண்ணைக் கலந்து சேதுபதியின் நெற்றியிலும், கன்னங்களிலும், மூக்கின்மேலும்பூசினாள்.பாயின்மேல் உட்கார்ந்து சேதுபதியைத் தன் மார் மேல் சாய்த்துக்கொண்டு மகாராஜா, நீங்கள்தான் என் கணவர். உங்களுக்கு உடம்பு சரியில்லை என்று ரகசியமாகச் சொல்லிவிட்டு, உரத்த குரலில், ‘என் சாமியில்லே! கொஞ்சம் தூங்குங்க. உடம்பு நெருப்பாக கொதிக்குதே காளியாத்தா என் தாலிக் கவுத்தைக் காப்பாத்திக் குடு தாயே! ஒனக்கு ரெண்டு கடா வாங்கி வெட்டச் சொல்றேன் என்று பிரலாபிக்க ஆரம்பித்தாள்.

கணவனைத் தவிர வேறு யாரையும்  ஒரு பெண் மார்போடு அணைத்துக்கொள்ள மாட்டாள் என நம்பினார்கள்.  மடியாச்சியும் வீர்கள் கேட்ட கேள்விகளுக்கு நம்பும்படியான பதில்களைச் சொன்னாள். வீரர்கள் திரும்பிப் போய்விட்டார்கள்.

தளபதி கள்ளமுத்தன் மூக்கை அறுத்துவிட்டான். கள்ளமுத்தன் கோபத்துடன் திரும்பிவந்து மனைவியின் மூக்கையும் அறுத்ததோடு,  கண்டம் துண்டமாக வெட்டிப் போட்டான்.

சேதுபதி தாமே போய் உளவு அறிந்துகொண்டு  மறுநாளே மைசூர்ப் படைகளைத் தாக்கி மைசூர் வரையில் துரத்திக் கொண்டு போனார்.. மடிச்சியாச்சியின் மூக்குக்கு பதிலாக மைசூர் தளபதியின் மூக்கையே வாங்கிப் பழி தீர்த்துக்கொண்டார்.   அதனால்தான் அந்த யுத்தத்துக்கு மூக்கறுத்தான் சண்டை என்று பெயர் ஏற்பட்டது என்கிறார் அந்தப் பண்டாரம்..

சேதுபதி திரும்பி வரும் வழியில், இங்கே இதே இடத்தில்தான் தண்டடித்துத்  தங்கினார். மடிச்சியாச்சியை அடக்கம் செய்திருந்த அந்த இடத்தில் கோவிலைக் கட்டுவித்தார். அவளுக்கு மடி கொடுத்ததாய் என்று பெயரும் வைத்தார். மடிகொடுத்ததாய் மடி கொடுத்த அம்மனாகி இப்போது மடித்தாளம்மனாகிவிட்டாள்.

நானும் கூடவே எழுந்து, “இது நிஜக் கதையா ஸ்வாமி” என்றேன். பண்டாரம், “அவ்வளவும் கல்லிலே பொறித்து வைத்திருக்கிறது. கல் அந்தக் கிணற்றுக்குள்ளே கிடக்கிறது. உற்சாகமுள்ளவர்கள் தேடி எடுத்தால் பார்க்கலாம்” என்றுபுறப்பட்டார்.

அவர்போவதையே பார்த்துக்கொண்டு, அரை நாழிகைவரை நான் சிலைபோல் நின்றிருந்தேன் என்பது வண்டிக்காரன் சொல்லித் தான் எனக்குத் தெரியும்.

என்று கதை முடிகிறது.

*******

ஒரு செவிவழிக் கதையினை சுவாரசியமான சிறுகதையாகப் படைத்திருப்பது வியக்க வைக்கிறது.

எப்போதோ படித்த ஒரு செய்தி.  மணிக்கொடியின் இதழ் அச்சாவதற்குமுன் பக்கங்கள் குறைந்தால்  ‘இந்தா பிடி’ என்று ஒரு  அருமையான சிறுகதையை தேவையான பக்க அளவிற்கு   எழுதித் தந்துவிடுவாரம் ராமையா.

ஒருமுறை கு.அழகிரிசாமியின் ‘கவிச்சக்கரவர்த்தி” நாடகத்தையும், பி.எஸ். ராமையா எழுதிய தளவாய் குமாரப்பிள்ளை நாடகத்தையும் ‘சேவா ஸ்டேஜ்‘ தயாரித்து பம்பாயில் அரங்ககேற்றம் செய்ததாம்.  அது குறித்த சுவையான செய்திகளை ‘கோமல்’ சுவாமிநாதன் ‘பறந்துபோன பக்கங்கள்’ பகுதியில் சுபமங்களாவில் எழுதியிருக்கிறார்.   

 

 

மகாத்மா காந்தியின் ஐந்து வினாடிகள் ஜெர்மன் மூலம் தமிழில் கிருஷ்ணமூர்த்தி

Fact Check: Is this a photo of Mahatma Gandhi's assassination?

There Was No Time For Emotions': PTI Journalist Recalls How Gandhi's Assassination Was Reported

When newspapers across the world mourned the loss of Mahatma Gandhi | Gandhi's Last Days

வாசிப்போம் வாசிப்போம்: முப்பத்திரண்டாம் நாளின் வாசிப்பனுபவம் (03.10.2019)

தோட்டா            நான்காவது வினாடி முடிவடைந்து விட்டது, காந்தி. இன்னும் ஒரு வினாடி காலம் தான் நீ உயிர் வாழமுடியும்.. நான்.உள் இதய அறையில் தங்கி உறங்குவதற்குச் சிறந்த இடம் எங்கே என்று தேடிக் கொண்டிருக்கிறேன். உணர்ச்சி வசப்படாமல் இரு காந்தி! ஆறுதல் அடைந்து விடு. மகாத்மா! இன்னும் ஒரு விநாடியில் நாம் இருவருமே அமைதியில் ஆழ்ந்து விடுவோம்!  

குரல்       :        கரம்சந்த் காந்தி, இன்னும் ஒரு வினாடிகாலம் இருக்கிறது, உனக்கு. பயணத்தைத் தொடர்! நாம் பறந்து செல்லவேண்டிய பாதை வெகுதூரத்தில் உள்ளது. காற்று மண்டலம், அழுத்தம் குறைவானது! உன்னைத் தயார் செய்து கொள்! 

காந்தி :      நாம் மிக உயரத்தில் பறந்து மேலும் மேலும் மேலே சென்று கொண்டிருக்கிறோம். பூமி என்று ஒன்று இருப்பது கண்களுக்கு புலப்படவில்லையே! 

குரல்       :        (சிரித்து) பூமி என்றால் என்ன? மேல் நோக்கிப் பார்?   

காந்தி      :        முடியவில்லையே, பேரொளி கண்களை கூசுகிறது. கண்களை மூடிக்கொள்ள வேண்டியதாக இருக்கிறது.  

குரல்       :      (சிரித்துவிட்டு அந்தப் பேரொளியின் முன்னால் இன்னும் மூன்று மண்டலங்கள் இருக்கின்றன. நாம் அதில் நுழைந்து செல்ல வேண்டும்.     

காந்தி      :      குரலே, அதோ என்ன அது? மேகக் கூட்டங்கள் மேலும் கீழுமாக நகர்ந்து கொண்டு இவ்வளவு உயரத்தில் எப்படி மேகங்கள் இருக்க முடியும் என்று கூறமுடியுமா?           

குரல்       :        வாழ்க்கையின் குழம்பிப்போன கடவுள்கள் அவை. மேலும் இந்த கடவுள்களை தொற்றிக் கொண்டிருக்கும் மற்றவர்கள் தியானம் என்ன என்று தெரியாமல் வாழ்ந்து கொண்டு பேரொளியின் வாயில்படி வரைகூட வரமுடியாமல் நின்று விட்டவர்கள்.    

காந்தி      :        நான் இவர்களுடன் இருக்க வேண்டுமா?              

குரல்       :        நாம் முதல் திரையை ஊடுருவி வந்துவிட்டோம்!

 காந்தி     :        ஓ, என் குரலே! பேரொளி எவ்வளவு கம்பீரமாக இருக்கிறது?              

குரல்       :        இன்னும் ஒரு போர்வைத் திரை அதன்முன் உள்ளது. இதோ பார், நாம் அதை ஊடுருவிச் செல்கிறோம். 

காந்தி      :        என்ன அங்கே, இலேசான மேகங்கள் போன்று ?      

குரல்       :        தியானம் என்ன என்று அறிந்திருந்த ஆன்மாக்கள் அவை. எனினும் மகா அமைதியினுள் போகும் வழியைக் கண்டு கொள்ள இயலாதவை. இந்த உயரத்தில் இவை இலேசான மேகங்களாக இப்போது நின்று கொண்டிருக்கின்றன. 

காந்தி      :        நான் இங்கு இந்த ஆத்மாக்களுடன் தான் இருக்கப் போகிறேனோ?              

குரல்       :        நாம் தொடர்ந்து ஊடுருவிச் செல்ல வேண்டும்.       

காந்தி      :        மூன்று அடுக்கு போர்வை மண்டலம் கிழிந்து விட்டது. ஓ, என்னைக் காப்பாற்று என்குரலே! எவ்வளவு பயங்கரமாக இருக்கிறது இந்தப் பேரொளி? 

குரல்       :        (சிரிக்கிறது) அந்த ஒளி சாத்வீகமானது!.      

காந்தி      :        என்னை சுட்டு எரிக்கும் பயங்கரமான ஒன்றாக அது இருக்கும்போது எப்படி அது சாத்வீகமாக இருக்க முடியும்?      

குரல்       :      அது உன்னை சுடுகிறது. ஆனால் அதில் நீ தீய்ந்துபோகமாட்டாய். பயங்கரமாக இருந்தாலும் அந்த ஒளி சாத்வீகமானது. மேலே அண்ணாந்து பார், காந்தி!     

காந்தி      :        முடியவில்லை என்னால், கண்களை ஒளி குருடாக்குகிறது.       

குரல்       :        உன்னால் முடியும், கரம்சந்த் காந்தி!   

காந்தி      :      எவ்வளவு சாத்வீகமாக ஒளி இருக்கிறது? எவ்வளவு பயங்கரமாகவும் இது இருக்கிறது? அது குளிர்ச்சியான ஒரு நெருப்பு! அமைதியான ஒளியால் ஆன புயல்! இவ்வாறான ஒளியை நான் இதுவரை என் வாழ்வில் கண்டதில்லை, என் குரலே!       

குரல்       :        பயணத்தைத் தொடர்ந்து மேலே போக வேண்டும் காந்தி !  நாம் செல்லவேண்டிய பாதை மிக நீளமானது. இன்னும் அரை வினாடிகாலம் தான் எஞ்சியிருக்கிறது.    

காந்தி      :        சற்றுப்பொறு! என் குரலே, நான் உன்னை வேண்டிக்கொள்கிறேன். மூச்சு திணீறுகிறது. கண்கள் சக்தியை இழந்துவிட்டன. எதிரில் உள்ள வெளிச்சவெளியில் கறும் புள்ளிகளைக் காண்கிறேன். 

குரல்       :        (சிரித்து) அவை கரும்புள்ளிகள் அல்ல காந்தி, நட்சத்திரங்கள். 

காந்தி      :        கரு நட்சத்திரங்கள்!!!

குரல்       :        பேரொளியின் முன் இருண்டிருக்கும் நட்சத்திரங்கள். சிந்தனை மனதை ஒருநிலையில் நிறுத்தி தியானம், பொறுமையைக் கடைப்பிடித்தல் ஆகியவற்றின் வாயிலாக அமைதி மண்டலத்தை அடைந்த ஆன்மாக்கள் அவை. நிரந்தரமாக மௌன நட்சத்திரங்களாக இங்கு பிரகாசித்துக் கொண்டிருக்கின்றன.

காந்தி      :        இங்கேயே இருந்துவிட அனுமதிப்பாயா, என்குரலே!      

குரல்       :        நாம் இவற்றைக் கடந்து இன்னும் மேலே போக வேண்டும்.      

காந்தி      :        அங்கே என்ன இருக்கிறது? 

குரல்       :      (லேசாகச் சிரித்து) அங்கு நுழைவாயில் ஒன்று இருக்கிறது.     

காந்தி      :      நுழைவாயிலா?   

குரல்       :        நுழைவாயிலுக்கு பின்னால் பெரிய பணியாளர்கள் இருக்கிறார்களாம். முதலில் அவருடைய இருதயத்தினுள் இருந்து வெளியே சென்று மீண்டும் அவரிடமே அழைக்கப்பட்ட தியாகிகளாக!      

காந்தி :      பெரிய பணியாளர்கள் இருக்கும் இடத்திற்குள் நுழைய எப்படி எனக்குத் தைரியம் வரும்? நான் மிகவும் பலஹீனமானவன்  கோழை! மோசமானவன். பல முக்கிய சந்தர்ப்பங்களின் நான் ஆத்ம பலமின்றி பலஹீனமாகச் செயல் பட்டிருக்கிறேன். அவர்களின் கால்களைத் தொட்டு முத்தமிடக் கூட அருகதையில்லாதவன்.   

குரல்       :        நீ பலஹீனமானவனாக இருந்திருக் கலாம். முக்கியமான சந்தர்ப்பங்களில் ஆத்மபலமின்றி நீ செயல்பட்டிருக்கக் கூடும். ஆனால் உன் மனோதிடம் உறுதியாகத்தான் இருந்தது. அங்கே, மேலே ஒளியில் உள்ள அவர், இக்காலத்தில் உன்னைவிடச் சிறந்த தூதுவன் ஒருவனைக் காணவில்லை என்பதை மட்டும் நான் அறிவேன். உன் ஆயுளின் முடிவின் மூலம் நீ ரட்சிக்கப் பட்டிருக்கிறாய்! 

                              ஆனந்தப்படு, மகாத்மா! அங்கே பார்! கதவு தானாகவே திறந்து கொள்கிறது!  

காந்தி      :        உன்னைப் பின்பற்றி வருகிறேன், என் குரலே!       

                              (லேசாக இசையை புகுத்தவும்)    

குரல்       :  வேகமாக, இன்னும் வேகமாக! கோடிக்கணக்கான நட்சத்திரங்களைப் பார்!      

                              அவை உன் காலடியில் வீழ்ந்து பெரும் ஒளியில் மினுமினுப்பதைப் பார்.      

                           சொர்க்கத்தின் அளவை நிர்ணயிக்கும் சித்திரங்களைப் பார்!                அந்த வெண்ணிற நதியை – உங்கள் அந்தணர்களால் ஆகாய கங்கை என்று அழைக்கப்படும் அந்த வெண்ணதியைப் பார்!        

                              பலகோடி ஆண்டுகளாக இருந்து கொண்டு  பூமியில் வாழ்ந்து கொண்டு இருப்பவர்களுக்காகவும் இனி பிறவி எடுக்கப் போகிறவர் களுக்காகவும் முடிவில்லாத பிரார்த்தனை செய்து கொண்டிருக்கும் அந்த மாபெரும் நட்சத்திரங்களைப் பார்! |   

                              (இசை முடிவடைகிறது)     

காந்தி      :        யாராவது அவர்களின் பிரார்த்தனையைக் கேட்கிறார்களா?     

குரல்       :        இல்லை என்றால் பிரார்த்தனை செய்ய அனுமதி கிடைத்து இருக்குமா?     

காந்தி      :        நான் வேண்டிக் கொள்வதற்கு அனுமதி உண்டா ?            

குரல்       :        மற்றவர்களின் நலனுக்காகக் கெஞ்சி, பரிந்து பேசுபவர்கள் வாழும் மண்டலத்தின் வழியாகப் போகும் வரை அனுமதி இருக்கிறது. 

காந்தி      :        அதற்குப் பின்பு – – – ?               

குரல்       :        எனக்குத் தெரியாத ஒன்று!      

காந்தி :        அப்படி என்றால் பிரார்த்தனை செய்ய எனக்கு விருப்பமாக இருக்கிறது.

குரல்   தாராளமாக காந்தி! மோகன்தாஸ் கரம்சந்த் . . . நீ பிரார்த்தனை செய்! இன்னும் கால் வினாடி நேரம் உனக்கு இருக்கிறது.

காந்தி      :        ஓ, என் குரலே, என் கைகளை அசைக்க முடியவில்லையே! பிரார்த்தனை செய்வதற்கு என் கைகளை ஒன்றாகக் கூப்பிக் கொள்ள முடியவில்லையே!      

குரல்       :        நான் இப்போது உன் கைகளைத் தொடுகிறேன். இப்போது அவை பலமடைந்து விட்டன.

காந்தி :        என் உதடுகளை அசைக்க முடியவில்லையே!      

குரல்       :        நான் உன் உதடுகளில் முத்தமிடுகிறேன். இப்போது அவை பலமடைந்து விட்டன. 

காந்தி      :        கண்கள் பழுதடைந்து இருக்கின்றனவே! பேரொளியை என்னால் பார்க்கமுடியவில்லையே!   

குரல்       :        உன் கண்களை முத்தமிடுகிறேன். இப்போது நீ பேரொளியை பார்க்கமுடியும்.      

                              (இடைவெளி)    

காந்தி      :        (மெதுவாக) நீ . – . உன்னை எப்படி அழைக்கவேண்டும் என்று சொல்கிறாய்?    

குரல்       :        பேரொளியில் உள்ளவனே!       

காந்தி      :        பேரொளியில் உள்ளவனே! நீ என்னை உன்னிடம் அழைத்துக் கொண்டிருக்கிறாய்! உன் குரலை என் இருப்பிடத்திற்கு அனுப்பிவைத்தாய்!    

                              பல முக்கிய விஷயங்களில் அவைகளைத் தீர்மானிக்க வேண்டிருந்த வேளைகளில் நான் உறுதி படைத்த மனதுடன் செயல் படவில்லை.

 நான் பலஹீனமானவன், நான் அற்ப உள்ளம் படைத்தவன்,

உன்முன் இருக்கும் உயர்ந்த நட்சத்திரங்கள் முன்பும் நான் எவ்விதமான கருணைக்கும் லாயக்கற்றவன்.  

                              என்னுடைய மனோதிடத்திற்காகவும் எனக்கு தகுதியற்ற முறையில் மரணம் நேர்ந்த விதத்திற்காகவும் மட்டுமே கௌரவிக்கப் பட்டிருக்கிறேன்.       

                              என்னிடம் கருணைகாட்டு, பயங்கரமான பேரொளியே!        

                              ஆனால் தகுதிகள் ஏதும் இல்லாத, பலஹீனமான உள்ளத்தில் கொடிய எண்ணங்கள் நிறைந்த மனிதனாக நீ என்னை உன்னிடம் அழைத்துக் கொள்ளவில்லை. பதிலாக, தூதனாக அழைக்கிறாய்!  

                              ஓ, ஒளியில் உள்ளவனே!    

                              மனவலியினுடனும், சொல்ல முடியாத துன்பங்களுடனும் எல்லாவிதமான கேவலமான மனநிலைகளுடனும் தற்போது என்னுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் எல்லா மனிதர்களையும் என் பலமற்ற கைகளில் ஏந்தி உன்னிடம் கொண்டு வந்திருக்கிறேன்.      

                              அவர்களை ஆசிர்வதித்து எந்தவிதத் தடையும் சொல்லாமல் அவர்களை ஏற்றுக்கொள்!        

                              வெறுப்பினால் மட்டும் நிறைந்த, எதையும் புரிந்து. கொள்ளும் திறனற்ற என் கொலையாளியின் ஆன்மாவைக் கொண்டுவந்திருக்கிறேன்.    

                              அவனை ஆசிர்வதித்து எந்தவிதத்  தடையும் சொல்லாமல் அவனை ஏற்றுக் கொள்!  

            பல மடங்கு துன்பங்களை தாங்கிக் கொண்டிருக்கும் இந்தியாவை என் கைகளில் ஏந்தி உன்னிடம் கொண்டு வந்திருக்கிறேன்.      

                              பட்டினியால் வாடுபவர்களையும் மனவலியினால் வாடுபவர்களையும், விதவைகளையும், பிச்சைக் காரர்களையும், தீண்டத்தகாதவர் களையும் உன்னிடம் கொண்டு வந்திருக்கிறேன்.        

                              அவர்கள் எல்லோரையும் ஆசிர்வதித்து தடைஏதும் சொல்லாமல் ஏற்றுக்கொள்!        

                              யார் யாரெல்லாம் வன்முறைக்கு ஆளாக்கப் படுகின்றார்களோ அவர்களை எல்லாம் உன் முன் கொண்டு வந்திருக்கிறேன்.

           ஏழைகளுக்குள் பரம ஏழைகளானவர்களாக இருப்பவர்களையும் உன்னிடம் கொண்டு வந்திருக்கிறேன்.       

                              அவர்களை ஆசிர்வதித்து எந்தத் தடையும் சொல்லாமல் அவர்களை மிக்க அன்புடன் ஏற்றுக் கொள்!    

                              உன் மாபெரும் தூதர்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் நான் மிகச் சாமானியன் என்று எனக்குத் தெரியும்.  

                              ஆனால் என் காலத்தில் இருந்த துயரங்களும் துன்பங்களும் அவர்கள் காலத்தில் இருந்ததை விடக் கொடியவை.       

                              ஓ, ஒளியில் இருப்பவனே! ஒரு புதிய தூதனை உன் இதயத்திற்கு ஏற்ற ஒருவனை அனுப்பிவை!   என்னை விடப் பலமுள்ளவனை என்னைவிடத் தைரியசாலி ஒருவனை அனுப்பிவை!    

                              உன் ஒளியைப் போல் சாந்தமானவனாகவும் பயங்கரமானவனாகவும் உள்ள ஒருவனை அனுப்பிவை!  

                              அப்படிப்பட்ட ஒருவன் கால்களைத் தொட்டு முத்தமிட வேண்டும்!      

                              பின்பு அமைதியாகவும் ஆனந்தமாகவும் வெறுமையில் என்னை நானே கரைத்துக் கொள்வேன்!        

                              ஓ, ஒளியில் உள்ளவனே, என் வேண்டுகோளை ஏற்றுக் கொள்!    

                               (மெல்லிய குரலில்) என் பிரார்த்தனையை ஏற்றுக் கொள்!    

                              (மிக மெல்லிய குரலில்) என் பிரார்த்தனையை ஏற்றுக் கொள்!    

                              மணி ஓசை, உரக்க, எதிரொலியுடன்      

                              இடைவெளி     

அறிவிப்பாளர் அந்தச் சிறிய பறவை வெண்மேகத்தினுள் உட்புகுகிறது! யமுனை நதி மீண்டும் பேரிரைச்சலுடன் ஓடத் தொடங்கியது. காந்தியின் தலை சற்றுத் தாழ்ந்து சாய்ந்தது! அவர் வீழ்ந்து படுத்திருந்த மண்மேடு சுக்கு நூறாக உடைந்து சிதறியது.       

                              பண்டிட் நேரு டாக்டரைப் பார்த்தார்! அவர் லேசாகத் தலையை ஆட்டினார்!       

                              உடனே பண்டிட் நேரு எழுந்து நின்றார்.       

நேரு :        என் குழந்தைகளே! எப்படிச் சொல்வது என்று தெரியவில்லை! மகாத்மா காந்தி, நம் தந்தை மரணம் எய்திவிட்டார்!       

                              (பக்திப் பாடல் இசை) 

 

முற்றும் 

இறையருள் – எஸ் கண்ணன்

அவர் தமிழகத்தில் ஒரு பிரபலமான சாமியார்.

அவருடைய பெயர் ஸ்ரீ ஸ்ரீ பாபா சங்கர். வயது அறுபது.

தக்காளிப்பழ நிறத்தில் நீண்ட தாடியுடன்; கோல்ட் ப்ரேம் கண்ணாடியில் தள தளவென இருப்பார்.

அவர் சென்னையில் நேற்று ஒரு ஆன்மீக சத்சங்கத்தில் ஈடு பட்டுக் கொண்டிருந்தபோது திடீரென மார்பு வலி ஏற்பட்டு அப்பல்லோ ஹாஸ்பிடலில் அனுமதிக்கப் பட்டார்.

செய்தியைக் கேள்விப் பட்டவுடன் தமிழகமே பதறியது.

அவருக்கு உடனே ஆஞ்சியோகிராம் செய்யப்பட்டது. அவரைப் பரிசோதித்த டாக்டர் அவருக்கு இதயத்தில் 80% அடைப்பு இருப்பதைக் கண்டுபிடித்து, உடனே பை-பாஸ் சர்ஜரி செய்யவேண்டும் என்றார்.

பை-பாஸ் சர்ஜரி இல்லாமல் தனக்கு ஆஞ்சியோ பிளாஸ்ட் மட்டும் செய்யும்படி சாமியார் டாக்டரிடம் கெஞ்சினார். டாக்டர் அது அவருக்கு பலனளிக்காது என்பதை விளக்கிச் சொன்னபிறகு;  “எல்லாம் பகவத் சங்கல்பம்” என்று கைகளைக் கூப்பினார்.  கடைசியில் நீண்ட யோசனைக்குப் பிறகு சர்ஜரி செய்து கொள்வதற்கு சாமியார் ஒப்புக் கொண்டார்.

விஷயத்தைக் கேள்விப்பட்ட அவருடைய பக்தர்கள் மிகக் கவலையடைந்தனர். பை-பாஸ் சர்ஜரி நல்லபடியாக நடக்க வேண்டுமே என எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொண்டனர்.

Free Old People Cartoon, Download Free Clip Art, Free Clip Art on Clipart Library

சர்ஜரிக்கு முந்தைய நாள் சாமியாருக்கு உடம்பிலுள்ள மயிர்கள்  அனைத்தும் மழிக்கப்பட்டு அவரை சிகிச்சைக்குத் தயார் செய்தனர். . நீண்ட தாடியை இழக்க நேரிட்ட சாமியார் மொழுக்கென மிகவும் வித்தியாசமாக காணப்பட்டார். இரவு தூங்கும்முன் அவருக்கு எனிமா கொடுக்கப்பட்டு வயிற்றை காலியாக்கினர்.

சர்ஜரிக்கு குறைந்தபட்சம் நான்கு லட்சம் ஆகும் என்று டாக்டர்களால் எஸ்டிமேட் தரப் பட்டது. சாமியாரும் அதற்கு ஒப்புக் கொண்டார்.

எனினும் பை-பாஸ் சர்ஜரி என்பதால், அவருக்கு உள்ளூர மரண பயம் . தொற்றிக்கொண்டது. மிகவும் பயந்தபடியேதான் ஆப்பரேஷன் தியேட்டருக்குள் சக்கர நாற்காலியில் நுழைந்தார்.

ஆபரேஷன் நல்லபடியாக நடந்து முடிந்தது.

சாமியார் மிகுந்த சந்தோஷமடைந்தார்.

இரண்டு நாட்கள் சாமியார் ஐசியூவில் பாதுகாக்கப் பட்டார்.

அவரை டிஸ்சார்ஜ் செய்யும் முன், சாமியாரிடம் மருத்துவ மனையின் பொறுப்பான அதிகாரி ஒருவர் எட்டு லட்ச ரூபாய்க்கான டோட்டல் பில்லைக் கொடுத்தார்.

அந்தப் பில்லை வாங்கிப் பார்த்த சாமியார் பெரிதாக அழ ஆரபித்துவிட்டார். அவரின் அழுகையை மருத்துவ அதிகாரியினால் எவ்வளவோ முயன்றும் கட்டுப்படுத்த முடியவில்லை.

“சாமி… அழாதீர்கள். நான்கு லட்சத்திற்கு எஸ்டிமேட் கொடுத்தோம் என்பது உண்மைதான். ஆனால் தற்போது எட்டு லட்சம் வரை ஆகிவிட்டது. நான் எங்களின் சிஈஓவிடம் பேசிப் பார்க்கிறேன். அவர் கண்டிப்பாக மொத்தத் தொகையைக் குறைப்பார்…”

“அட போய்யா… எட்டு லட்சம் என்ன… இந்த உலகிற்கு என்னை மறுபடியும் மீட்டுத் தந்த இந்த ஹாஸ்பிடலுக்கு எண்பது லட்சமே என்னால் இப்போது தரமுடியும்…. ஆனால் அறுபது வருடங்களாக என் இதயத்தைப் பாதுகாத்த இறைவன் இதுவரை ஒரு ரூபாய்க்குகூட என்னிடம் பில்லை நீட்டவில்லையே… இத்தனை வருடங்களாக நான் இதை உணரக்கூட இல்லை. இப்போது அதை உணர்ந்துகொண்டதும் என்னால் என் அழுகையை கட்டுப் படுத்த முடியவில்லை…”

“………………………………”

“நான்கு மணிநேரங்கள் மட்டும் என் இதயத்தை கிழித்துப் பார்த்து தையல் போட்டுத் தைத்துவிட்ட உங்களுக்கு எட்டு லட்ச ரூபாய். ஆனால் அந்த எல்லாம் வல்ல இறைவன் என்னை இதுகாறும் 525,600 மணி நேரங்களுக்கும் மேல் பாதுகாத்திருக்கிறான். பதிலுக்கு அவனுக்கு நான் என்ன செய்தேன்? அவனின் கருணையையும்; அன்பையும் நினைத்துப் பார்க்கையில் எனக்கு பரவசம்தான் ஏற்படுகிறது…”

“ஆமாம் சாமி தாங்கள் கூறுவது உண்மைதான். நம் எல்லோருக்கும் இது பொருந்தும்…”

“இறைவனின் அருட்கொடைக்கு நிகர் இறைவனே… நாம்தான் நன்றி கெட்டவர்களாக இப்பூவுலகில் வாழ்கிறோம்…நம்மிடம் எந்த எதிர்பார்ப்புமே இல்லாமல்; நம்மை எப்பொழுதும் கண்ணும் கருத்துமாக பத்திரமாகப் பாதுகாப்பவர், அன்பே உருவான இறைவன் மட்டுமே.”

“நன்றாகச் சொன்னீர்கள் சாமி…”

“நமக்கு கிடைத்த இந்த நல்ல வாழ்க்கை எத்தனை பேருக்கு கிடைக்கவில்லை என்பதை உணர்ந்தால்,  நாம் இறைவனுக்கு நன்றி சொல்ல மட்டுமே தினமும் கோவிலுக்குச் செல்லுவோம்…”

சாமியார் அன்றே மொத்தத் தொகையான எட்டு லட்ச ரூபாயைக் கொடுத்துவிட்டு சந்தோஷத்துடன் ஹாஸ்பிடலை விட்டு வெளியேறினார்.

உயிருடன் முழுதாக மீண்டு வந்த சாமியார் மிகவும் மாறிப்போனார். அதன்பிறகு சாமியாரே வாழ்வின் தாத்பரியங்களைப் பற்றிய பல உண்மைகளை தனக்குள் உணர்ந்துகொண்டார். ஏழைகளின் நல் வாழ்விற்காக பல நல்ல காரியங்களுக்கு நிறையப் பணம் கொடுத்து உதவினார். அது தவிர, பல கல்வி நிறுவனங்களைத் தொடங்கி, நன்கு படிக்கும் ஏழை மாணவர்களுக்கு அதில் முன்னுரிமை கொடுத்து அவர்களை முன்னேறச் செய்தார். கல்வி ஒன்றுதான் மக்களை முன்னேறச் செய்ய ஒரேவழி என்பதை உலகிற்குப் புரிய வைத்தார்.

சேவை மனப்பான்மையை மட்டுமே தன் மனதில் குவித்து, அதைத் திறம்பட செயலில் காட்டி, மக்களிடம் மேலும் நிறைய மரியாதையை சம்பாதித்துக் கொண்டார்.

 

சரித்திரம் பேசுகிறது! –யாரோ

நந்திவர்மன்

 

பிரசங்கம் பண்ணிக்கொண்டிருக்கும் போது இது என்ன அதிகப் பிரசங்கம் – என்று சொல்வார்கள்.
அது போல.. பல்லவர்களைப் பற்றி சொல்லும் போது..
திடீரென்று இது என்ன இடையில் சேரமான் பெருமாள் கதை – ஆதி சங்கரர் கதை?
குமுறுகிறார்கள் நம் வாசகர்கள்!
ஒரே வார்த்தை : மன்னிப்பு
சரித்திரத்தை நகர்த்துவோம்.
சரி..பல்லவர்களை எங்கே விட்டோம்?

சிறிய முன்கதை:
நரசிம்மவர்மன்..
இரண்டாம் மகேந்திரன்..
பரமேஸ்வரவர்மன்..
ராஜசிம்மன்..
இரண்டாம் பரமேஸ்வரவர்மன்..
இவர்களுடன் சிம்மவிஷ்ணுவின் சந்ததி முடிகிறது.

சிம்மவிஷ்ணுவின் தம்பி. பெயர் பீமவர்மன் பரம்பரையில் வந்த நந்திவர்மன் அரசனாகிறான்.
அவன் அரசாட்சி – கிபி 710 முதல் 775 வரை.
அறுபத்தைந்து வருடங்கள் அரசாட்சி!
எந்தப் பல்லவ மன்னனும் இவ்வளவு வருடங்கள் ஆண்டதில்லை!
நந்திவர்மன் .. இரண்டாம் விக்கிரமாதித்யனிடம் தோற்றாலும்..
பல்லவ பதவியைத் தக்க வைத்துக் கொள்கிறான்.
ராஷ்டிரகூட மன்னன் தந்திவர்மனுடன் கூட்டு சேர்ந்து..
சாளுக்கிய மன்னன் கீர்த்திவர்மனைக் கொன்று..
சாளுக்கிய வம்சத்தை ஒரு முடிவுக்குக் கொண்டு வருகிறான்.
இரண்டாம் பரமேஸ்வரனது மகன் சித்திரமாயன் பல்லவ அரியணைக்காகப் போராடுகிறான்.

முன் கதை முடிந்தது.

ஒரு மனிதன் தோல்விகள் பல கண்டாலும்..துவளாமல் கடுமையாக பாடுபட்டால் வெற்றிக்கு வழி உண்டு.
மக்களின் மாறாத ஆழ்ந்த அன்பும்..
மனோ திடமும்..
புத்திகூர்மையும்..
நீண்ட ஆயுளும்.. (65 வருடம் அரசனாக ஆண்டான்)
இறையருளும் ..
இருந்தால் என்ன நடக்கும் என்பதற்கு நந்திவர்மன் கதை ஒரு சிறந்த உதாரணம்.

பிரச்சினை என்ன என்று பாருங்கள்:

எட்டாம் நூற்றாண்டில்..மிகவும் கடினமான வேலை என்ன தெரியுமா?
அது.. தென்னிந்தியாவில் ஒரு நாட்டின் அரசனாக இருப்பது..
அரண்மனை உண்டு.. அறுசுவை உண்டு .. அந்தப்புரம் உண்டு.. என்று ஆனந்தமாக இருக்க முடியாது.
பகை மேகங்கள் ..நாற்புறமும் .. இடி முழக்கங்களுடன். அனு தினமும்..
சும்மா இருந்தாலும் விடாமல் வலுச்சண்டைக்கு வர பல மன்னர்கள் ..
வித விதமாகக் கூட்டணி அமைத்துக் கொல்ல வரும் எதிரிகள்..

கதைக்குச் செல்வோம்:
முதல் வில்லன் :கீர்த்திவர்மன்
(நந்திவர்மன் இன்று நமது ஹீரோ.. அதனால் கீர்த்திவர்மன் இன்று நமது வில்லன்).
அவன் கதை முடிந்தது.
சாளுக்கிய வம்சமும் முடிந்தது.
அடுத்தவன்.. சித்திரமாயன் – பரமேஸ்வரன் மகன் ..
அவன் ஒரு பெரும் கூட்டணி அமைக்கத் திட்டமிட்டான்.
விக்கிரமாதிய சாளுக்கியனுடன் கூட்டுசேர்ந்தான்..
சாளுக்கியன் நந்திவர்ம பல்லவனை வென்ற பிறகு..
சித்திரமாயன் சில மாதங்கள் பல்லவ அரியணையில் அமர்த்தப்பட்டு இருந்தான் .
நந்திவர்மன் அவனைப் படையெடுத்துத் துரத்தி விட்டான்.
சாளுக்கிய ராஜ்யம் முடிவுக்கு வந்த பின் சித்திரமாயன் பாண்டியனுடன் கூட்டு சேர்ந்தான்.

பல்லவர்க்கும் பாண்டியர்க்கும் போர் நடந்ததற்கு ஒரு காரணம்..
கொங்குநாட்டு உரிமை!
கொங்குநாடு ஒருகாலத்தில் பாண்டியரிடமும் பிறிதொருகாலத்தில் பல்லவரிடமும் கைமாறிவந்தன.
நந்திவர்மன் கொங்குநாட்டைப் பிடிக்க முயன்றான்.
அதற்காகப் பாண்டிய அரசன் போரிட வேண்டியவன் ஆனான்.
அடுத்த காரணம்..
சித்திரமாயன் (பரமேசுவரன் மகன்) பாண்டியனைச் சரணடைந்திருந்தது.
இவ்விரண்டு காரணங்களாலும், பாண்டியன் அரிகேசரி பராங்குச மாறவர்மன் (கி.பி. 710-765) நந்திவர்மனைத் தாக்கச் சமயம் பார்த்திருந்தான்

சம்பவத்திற்கு வருவோம்..
கும்பகோணத்திற்கு அருகில் உள்ள ‘நாதன் கோவில்’ என்னும் இடம்.
அது அந்தக் காலத்தில் பல்லவரின் தென்புறக் கோட்டையாக இருந்தது.
அதற்கு நந்திபுரம் என்பது பெயர்.
அந்த நந்திபுரக் கோட்டைக்குள் பல்லவன் தங்கியிருந்தான் – சிறிய காவல் படையுடன்.
பல்லவ பெருஞ்சேனை காஞ்சியில் இருந்தது.
வழிவழியாகப் பல்லவர்க்குப் படைத்தொண்டு செய்துவந்த ‘பூசான்’ மரபில் பிறந்த உதயசந்திரன் – பல்லவப் படைத்தலைவன்.
அந்த தளபதி உதயசந்திரனோ காஞ்சியிலே!

பல்லவன் சிறுபடையுடன் நந்திபுரத்தில் இருப்பதை ஒற்றர்கள் மூலம் அறிந்தான் பாண்டியன்.
அது அவனுக்கு இனித்தது.
பாண்டியன் தன் துணைவரான சிற்றரசர் பலருடனும், பெருஞ் சேனையுடனும் போருக்கு வந்தான்.
பாண்டியன் படையெடுப்பை நந்திவர்மன் எதிர்பார்க்கவில்லை.
பாண்டியன் சில இடங்களில் வெற்றி பெற்றான்.
சிறிய பல்லவ சேனை சிதறியது.
நந்திவர்மன் நந்திபுரத்தில் நுழைந்தான்.
பாண்டியன் நந்திபுரத்தை முற்றுகை இட்டான்.
நந்திவர்மன் கோட்டைக்குள் அகப்பட்டுக்கொண்டான்.

சேதி கேட்ட சித்திரமாயன்..
தனது எதிரி நந்திவர்மன் தோற்று அழிவதைக் காண ஆசை கொண்டான்.
கியூரியாசிட்டியால் பூனைக்கு அழிவு என்று சொல்வார்கள்!
மதுரையிலிருந்து நந்திபுரம் செல்லக் குதிரையைத் தட்டினான்.

நந்திவர்மனது நிலை – ஓலை வடிவில் புறா ஒன்று உதயசந்திரனுக்குக் கொண்டு சென்றது.
படைத்தலைவன் உதயசந்திரன் பல்லவப் படையுடன் உடனடியாக நந்திபுரம் செல்ல படையெடுத்தான்.
உதயசந்திரன் வந்த பின் போரின் நிலைமை மாறியது.
பாண்டியர்கள் இரு பல்லவப் படைகளுக்கு நடுவே மாட்டிக்கொண்டு திணறினர்.
பாண்டியன் சித்திரமாயனிடம்:
“உன்னை மதுரையை விட்டு வர வேண்டாம் என்று தானே சொல்லியிருந்தேன்?
என்ன தலை போகிற காரியமாக.. இந்தப் போர்க்களத்துக்குப் புறப்பட்டு வந்தாய்?“ – என்றான்.
அவன் கேள்வி நியாயம் தான் போலும்..
அன்று நடந்த போரில் ..
உதயசந்திரன் தன் வாளால் சித்திரமாயன் தலை கொண்டான்.. கொன்றான்..
பாண்டியன் சொன்னது சரியாயிற்று..
சித்திரமாயனுக்கு அது தலை போகிற காரியமாகியது.
முடிவில் பல்லவர்கள் போரில் வெற்றி பெற்றனர்.
பாண்டியப்படை மதுரைக்கு திரும்பியது.

இருதரப்பினரும் தாங்கள் வென்றதை மட்டும் கல்வெட்டுகளில் பதித்தனர்.
(இவ்வளவு சரித்திரம் படித்தோமே,
எந்த மன்னனாவது எப்போதாவது தனது தோல்வியை..
கல்வெட்டுகளில் குறித்திருக்கிறானா என்ன?
நமக்கு எதற்கு இந்த குசும்பு)

நந்திவர்மன் கதை தொடரும்..(65 வருட ஆட்சியாயிற்றே).
விரைவில் சந்திப்போம்..

 

பால்கார வாத்தியாரு -வளவ. துரையன்

கர்நாடகா மாநிலத்தில் 384 ஆலமரங்களை நட்டு வளர்த்துள்ள 103 வயது சூப்பர் பாட்டி!

     பொழுது விடிந்தும் விடியாதது போல இருந்தது. முருகன் எழுந்திருக்க மனமின்றி படுத்துக் கிடந்தான். உடலோடு உள்ளமும் சோர்வாக இருந்தது. அம்மா வாசலில் சாணம் தெளிக்கும் சத்தம் கேட்டது. தோட்டத்தில் சேவல் குரலெடுத்துக் கூவியது. காகங்கள் கரையும் சத்தம் தெளிவாகக் கேட்டது.

      முருகன் எழுந்து வாசலில் திண்ணையில் உட்கார்ந்தான். அம்மா கோலம் போட்டுவிட்டுப் பால் கறக்கப் போய்விட்டாள். அம்மா போடும் கோலம் மிக அழகாக இருக்கும்.  இனி அவள் உலகம் தொடங்கி விட்டது. நான்கு மாடுகளில் பால் கறந்து அதைக் கொண்டுபோய்ப் பல வீடுகளில் கொடுத்துவிட்டு வந்து இவனைப் பள்ளிக்கு அனுப்பும் வேலைகளில் ஈடுபடத் தொடங்கி விடுவாள். சமையலை முடித்து முருகனுக்கும் சாப்பாடு எடுத்து வைத்துவிட்டு மாடுகளையும் ஆடுகளையும் மேய்க்கப் போய்விட்டாளானால் இவன் பள்ளிவிட்டு வருவதற்குள் வந்து விடுவாள்.

      பாலைக் கறந்து எடுத்துக் கொண்டு வந்தவள் முருகனைப் பார்த்து ”ஏன் தம்பி ஒக்காந்துகிட்டு இருக்கே, போய் பல்லு வெளக்கிட்டு வா, காப்பித் தண்ணி வச்சு குடுக்கிறேன்” என்று சொல்லி விட்டு உள்ளே போனாள்.

      முருகன் எழுந்து தோட்டத்திற்குப் போனான். அங்கே வீடு கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. இன்னும் வெள்ளை அடிக்க வேண்டியதுதான் பாக்கி. கிணற்றிலிருந்து நீர் இறைத்துப் பல் தேய்த்து முகம் கழுவியபின் சற்றுப் புத்துணர்ச்சி வந்ததுபோல் இருந்தது. 

      முருகா, ”காப்பியைக் குடி, பாலைக் கொண்டுபோய்க் குடுத்துட்டு வந்துடறேன்” என்று சொல்லிவிட்டு அம்மா போவது தெரிந்தது. பள்ளிக்குப் போகவேண்டுமே என்று முருகன் கவலைப் பட்டான். முதல் நாள் பள்ளிக்குப் போனபோது இருந்த புத்துணர்ச்சியெல்லாம் எங்கே போனதென்று தெரியவில்லை.

      தான் படித்த பள்ளியிலேயே அதுவும் படித்த தலைமையாசிரியர் கீழேயே வேலை பார்ப்பது என்பது முருகனுக்கு முதலில் மிகவும் உற்சாகமாக இருந்தது.  அந்தத் தனியார் உயர்நிலைப் பள்ளி அந்த வட்டாரத்திலேயே மிகவும் புகழ் பெற்றது. படிப்பிலும் விளையாட்டிலும் முதன்மையாய் இருந்த பள்ளி அது. ஓரிருவர் தவிர அனைவருமே உள்ளூர் ஆசிரியர்கள்தாம். அதனால் முருகனைப் பற்றி எல்லார்க்கும் நன்றாகத் தெரிந்திருந்தது. அதுவே அவனுக்கு பலமாகவும் பலவீனமாகவும் இருந்தது. 

      தமிழாசிரியாரகப் பொறுப்பேற்ற இந்த இரண்டு ஆண்டுகளிலேயே அவனது ஆளுமையால் முருகன் அனைவரையும் கவர்ந்து விட்டான். ஒவ்வொரு நாளும் இறைவணக்கத்தில் ஒவ்வோர் ஆசிரியர் மாணவர்க்கு அறிவுரை கூறி உரையாற்றும் வழக்கம் அங்கிருந்தது. முருகன் பேசுகிறான் என்றால் அனைவரும் கூர்ந்து கவனித்து வந்தனர்.

      இருந்தாலும் உள்ளூர் ஆசிரியர்கள் சேதுமாதவன், கோபாலன் போன்றவர்களின் போக்கு இன்னமும் அவனுக்குப் பிடிபடாத புதிராகவே இருந்தது. முதல் நாளே மதிய இடைவேளையில் சாப்பிடும் போது கோபாலன் கேட்டான். “பால்காரர் என்னா சாப்பாடு கொண்டாந்திருக்காரு?”

      பெரும்பாலும் எல்லாருமே மதிய உணவை எடுத்துக் கொண்டு வந்துவிடுவது வழக்கமாக இருந்தது. அதுவும் முருகனின் அம்மா ஆடு மாடு மேய்க்கச் செல்வதால் அவன் காலையில் வரும்போதே எடுத்து வந்து விடுவான்.

      காதில் விழாதவாறு முருகன் இருக்க கோபாலன் அதே கேள்வியை மறுபடியும் கேட்டான். வந்த கோபத்தை அடக்கிக் கொண்ட முருகன், ”என்பேரு முருகங்க, அதைச் சொல்லிக் கூப்பிடுங்க” என்றான். ”சரி, வெளையாட்டுக்குச் சொன்னேம்பா. என்னா கொண்டாந்திருக்கே? சொல்லு”

      ”தயிர் சோறுதான்”என்றான் முருகன் வருத்தமான குரலில்.

      பதிலுக்கு அங்கே உட்கார்ந்திருந்த சேதுமாதவன் ”அதானே பார்த்தேன், ஒங்க வீட்ல பாலுக்கும் தயிருக்கும் பஞ்சமா? தெனம் பால் தயிர்தானே?” என்றார் கிண்டல் குரலில். முருகன் பதில் சொல்லிப் பிரச்சினையை வளர்த்த விரும்பாமல் சாப்பிட்டு முடித்தான்.

      ”இப்படியும் மனிதர்கள் இருப்பார்களா” என்று முருகன் நினைத்தான். அவன் நினைத்தது சரிதான் அந்த மனிதர்கள் மறைமுகமாக பல பிரச்சனைகளை உருவாக்கினார்கள். முருகன் சும்மா இருந்தாலும் சீண்டிப் பார்த்தார்கள். அவனது வளர்ச்சியை அவன் பெரும் புகழைப் பார்த்துப் பொறமைப் பட்டார்கள். நேற்றுதான் அவனுக்குத் தெரியாமல் அந்த விஷ விருட்சம் மிகப் பெரியதாக வளர்ந்திருப்பதைத் தெரிந்து கொண்டான்.

      வகுப்பில் நுழையும்போது யாரோ ஒரு மாணவனின் குரல் ”டேய், பால்கார வாத்தியாரு வராருடா” என்று சொன்னது முருகன் காதில் விழுந்தது. அவனுக்குக் கோபம் வரவில்லை. இச் சூழலின் வேர் எங்கிருக்கிறது எனத் தெரிந்து கொள்ள விரும்பினான். எனவே சிரித்துக் கொண்டே ”யார்ரா அது சொன்னது” என்று கேட்டான். யாருமே பதில் பேசவில்லை.

      ”பயப்படாமே சொல்லுங்கடா, ஒண்ணும் செய்ய மாட்டேன், தைர்யமா சொல்லுங்கடா” என்று முருகன் மீண்டும் கேட்க ,”ஐயா, கண்ணாயிரம்தான் சொன்னான்” என்றான் ஒரு மாணவன். உடனே சிரிப்பு மாறாமல் முருகன் கண்ணாயிரத்தைப் பார்த்து, “என்னா கண்ணாயிரம்” என்றான்.

      எழுந்து நின்ற கண்ணாயிரம் பேசாமல் இருந்தான். அவன் முகத்தைப் பார்த்தால் அழுது விடுவான்போல் இருந்தது. முருகன் அவனைப் பார்த்து ”ஏம்பா தமிழ் வாத்தியார்னு சொல்லியிருக்கலாம்ல” என்றான்.

      ”இல்லிங்கய்யா தவறிப் போய் வந்திட்டுது” என்று அவன் பதில் சொல்ல வேறொருவன் எழுந்து ‘இல்லிங்கய்யா, கணக்கு வாத்தியார் சொல்லச் சொல்ல அதுவே பழக்கமாயிடுச்சி” என்றான். ”கணக்குக்கு யாரு,சேதுமாதவனா?” என்று கேட்டான் முருகன். கண்ணாயிரம் சொன்னான் ”ஆமாங்கய்யா, தெனமுமே தமிழ் வகுப்புக்கு முன்னாலே கணக்குதாங்கய்யா, அவர் கெளம்பிப் போகச்சே “அடுத்த வகுப்பு யார்ரா? பால்கார வாத்தியாரா”ன்னு கேட்டுட்டுதான் போவாரு.

      முருகனுக்கு முகத்தில் அறைவதுபோல் இருந்தது. மனம் மிகவும் கனமாகியது. ஆத்திரமும் கோபமும் சேர்ந்து வந்தன. தலைமை ஆசிரியரிடம் போய்ச் சொல்லலாமா, சொன்னால் என்ன ஆகும்? மாணவர்களுக்கு ஏதாவது பாதிப்பு வருமா” என்றெல்லாம் நினைத்தான். அப்படியே நாற்காலியில் உட்கார்ந்து விட்டான். ஒரு நொடிதான், அதற்குள் தன்னைச் சுதாரித்துக் கொண்டு முகத்தைச் சாதாரண நிலைக்குக் கொண்டு வந்து விட்டான். “சரி செய்யுள் பகுதியை எடுங்கள்” என்று கூறினான்.              ”என்னடா தம்பி ரெண்டு இட்லியைப் பாத்துக்கிட்டே ஒக்காந்துக்கிட்டு இருக்கே? காலையிலேந்தே ஒரு மாதிரியாயிருக்கே?” என்றாள் அம்மா. பதில் பேசாமல் ஒரு இட்லியை எடுத்து விண்டு வாயில் போட்டுக் கொண்டான். ”என்னடா முருகா,ஒடம்பு கிடம்பு சரியில்லியா?” என்று கேட்ட அம்மாவிடம் முருகன் பட்டென்று கேட்டான். “ஏம்மா நீ இந்த பால் வியாபாரத்தை உட்டுட்டா என்னா?”

      அவன் அம்மாவுக்கு இந்தக் கேள்வி ஆச்சரியமாக இருந்தது. ”என்னடா திடீர்னு இப்படிக் கேக்கறே?” சிரித்துக் கொண்டே கேட்டாள் அவள். ”இல்லம்மா, எனக்கும்தான் கை நெறய சம்பளம் வருது. பின்னால ஊடும்தான் ஓரளவிற்கு முடிஞ்சு போச்சு, இன்னும் ஏம்மா நீ கஷ்டப்படணும்தான். நானும் ரொம்ப நாளா நெனச்சிகிட்டுதான் இருக்கேன்.” என்று வருத்தமான குரலில் சொன்னான் முருகன்.

      ”இன்னும் ரெண்டு இட்லி வச்சுக்கோ” என்று கூறியவாறே இட்லியை வைத்துவிட்டுப் பேசாமல் இருந்த அம்மாவிடம் மேலே என்ன பேசுவதென்றே தெரியவில்லை முருகனுக்கு. சற்று நேரம் ஏதும் பேசாமல் இட்லிகளைத் தின்று முடித்த அவன் தட்டில் கை கழுவிக்கொண்டே  “என்னம்மா ஒண்ணுமே பேசலே” என்றான். அவன் அம்மா பதிலுக்கு, ”எனக்கு என்னடா கஷ்டம் வழக்கமா செய்யறததுதானே? நீயும் பள்ளிக்கூடம் போனதுக்கு அப்புறம் நான் இங்க குந்திகிட்டு என்னா செய்யப் போறேன். சும்மா மோட்டுவளையைப் பாத்துகிட்டு ஒக்காராமே மாடு கன்னை மேய்ச்சுட்டு வரேன் வேறஎன்னா?” என்றாள்.

       சட்டையை மாட்டிக் கொண்டே, ”இல்லம்மா, வாணாம் இந்த பால் வியாபாரம் உட்டுடு” என்றான் முருகன். ”என்னாடா அதையே புடிச்சுகிட்டிருக்கே, என்னாச்சு ஒனக்கு? ஏன் இந்தப் பால் வியாபாரம் செய்யறதுல்ல ஒனக்கு என்னா நஷ்டம்” என்று அழுத்தமாகக் கேட்டாள் அம்மா.  ”இல்லம்மா நாமதான் இப்ப கொஞ்சம் நல்லா வந்துட்டம்ல” என்று அவன் தொடங்கியதுமே அம்மா குறுக்கிட்டாள்.

      ”என்னடா நல்லா வந்துட்டோம், ஊடு கட்டிச்சுன்னா ஆச்சா,என்னும் எவ்வளவோ இருக்குடா. அது மட்டும் இல்லடா, இது ஒரு ஒதவி மாதிரி; நல்ல பாலை எல்லாருக்கும் கொடுக்கிறோம்ல?”

      ”நாம இல்லாட்டா வேற யாராவது கொடுக்கப் போறாங்க”

      ”என்னா நீ முடிவு செஞ்சுட்ட மாதிரி பேசறே? யாராவது ஏதாச்சும் சொன்னாங்களா?

      அம்மா இதைக் கேட்டதுதான் அவன் காதில் விழுந்தது. உடனே அவன் உள்ளில் இருந்தது பட்டென்று வெளியில் வந்துவிட்டது.

      அம்மாவைப்பார்க்காமல் வேறு பக்கம் திரும்பிச் சொன்னான் முருகன்.

      ’ஆமாம்மா எல்லாரும் பால்கார வாத்தியாருன்னு மட்டம்மா பேசறாங்கம்மா”

      ”அதானே பாத்தேன் இன்னிக்கி ஒருநாளும் இல்லாத திருநாளா அதையே பேசிகிட்டு இருக்கியேன்னு நெனச்சேன்”. என்று சிரித்த முகத்துடன் பேசினாள் அவன் அம்மா.  

      ”இல்லம்மா, எல்லாரும் பேசச்சே மனசுக்கு ரொம்ப வேதனையாயிருக்கும்மா”. அவனுக்கு அழுகை வருவது போல இருந்தது. மனம் மிகவும் கனத்தது. தலைவலி வரும்போல இருந்தது. இன்று பள்ளியில் எப்படிப் பாடம் நடத்தப் போகிறோம் என நினைத்தான். அதைவிட இந்த அம்மாவுக்கு எப்படிப் புரிய வைக்கப் போகிறோம் என நினைத்தான்.

      ஆனால் அவன் அம்மா மிகவும் தெளிவாகப் பேசினாள். ”முருகா, இந்த உலகம் பொல்லாதது. நாலுபேரு நாலுவிதமா பேசத்தான் செய்வாங்க, அதையே நெனச்சுகிட்டு ஒக்காந்தா வாழவே முடியாது. நான் கேக்காத பேச்சா, பாக்காத மனுசங்களா? பேசறவங்களா நாளைக்கு வந்து ஒதவப்போறாங்க, ஒங்கப்பா ஒன்னை அஞ்சு வயசுல உட்டுட்டு அல்பாயுசில போனபோது ரெண்டு ஆடும் ரெண்டு மாடும் தான் இருந்தது. நானோ வீட்டை உட்டு வெளியே போகாத ராசாத்தி மாதிரி இருந்தேன். கொஞ்சம் கொஞ்சம்மா பழகிகிட்டு இதுங்களை மேச்சு பெரிசாக்கி ஒன்னையும் வளத்து ஆளாக்கினேன். ஏதோ நாமும் இப்ப கொஞ்சம் மனுசங்க மதிக்கிற மாதிரி வர்றதுக்கு இதுங்கதான்பா காரணம். போ, மனசைக் கொழப்பிக்காதெ, வேலையைப் பாரு”    

       அம்மா சொல்லி விட்டுப் போய்விட்டாளே தவிர முருகன் மனம் இன்னும் நிலைக்கு வரவில்லை. ஊர் முழுதும் சுற்றி விட்டு வந்தால்தானே தேர் நிலைக்கு வரும். அவன் மனம் இன்னும் சுற்றிக் கொண்டே இருந்தது. முதல் இரண்டு பிரிவுகளும் பாடம் கற்பிக்கவே முடியவில்லை. மாணவர்களுக்கு எழுத்து வேலை அதிகமாகக் கொடுத்து சமாளித்தான். இடைவேளையின்போது தலைமை ஆசிரியர் அழைப்பதாகத் தகவல் வந்தது.  

      அவரிடம் போனபோது ”முருகா, நாளை இறைவணக்கத்தின் போது நீதான் பேசவேண்டும், அதற்குத்தான் வரச்சொன்னேன் என்று கூறினார். உரையாற்றக் கூடிய மனநிலையில் அவன் இல்லை என்றாலும் அவர் சொல்லை மீற முடியாமல் அவன் ஒப்புக் கொண்டான். அவன் பேசினான்.

      ”இன்று அன்னையர் தினம். நாம் அறியும் முதல் தெய்வம் தாய்தான். அதனால்தான் அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்றார்கள். ஒவ்வொரு தாயும் தனது பிள்ளையைப் பத்து மாதம் சுமந்து பெற்றுத் தருவதோடு அவனை அல்லது அவளை வளர்த்து ஆளாக்கி ஒரு நல்ல வாழ்வு உண்டாக்கித்தர படாத பாடு படுகிறாள். அது       அநுபவித்தவர்களுக்குத்தான் தெரியும். எனக்கு அந்த அநுபவம் உண்டு ஏனென்றால் என் தாய் என்னை அப்படித்தான் மாடு மேய்த்து பால் வியாபாரம் செய்துதான் வளர்த்துப் படிக்க வைத்தாள். அதனால் என் அம்மாவின் பெயரே எல்லாருக்கும் மறந்துபோய் பால்காரம்மா என்றாகி விட்டது. என்னையும் இப்போது பால்கார வாத்தியாரு என்று அழைக்க ஆரம்பித்து விட்டனர். இப்போது அது குறித்து எனக்கு வருத்தம் ஏதும் இல்லை. ”பால்கார வாத்தியாரு” என்று என்னை அழைக்கும்போது என் அம்மாவின் உழைப்பை மதிப்பதாகவும் கௌரவப் படுத்துவதாகவும்தான் நான் நினைக்கிறேன். அப்படி உழைத்த அம்மாவுக்கு நான் மரியாதை செலுத்த வேண்டாமா”     

      இப்போது முருகன் பேச்சை சற்று நிறுத்தினான். அவன் என்ன செய்யப் போகிறான் என்று யாருக்குமே தெரியவில்லை. சட்டென்று பள்ளிக் கட்டிடத்தின் பக்கம் திரும்பி “அம்மா இங்கே கொஞ்சம் வாங்க” என்று சத்தமாகக் கூவினான். அப்போதுதான் அவன் அம்மாவும் வந்திருப்பது அனைவர்க்கும் தெரிந்தது. மரங்களுக்கிடையில் மறைந்து இருந்தவர் வெளியில் வந்தார்.  

      சாதாரண கிராமத்துப் பெண்மணியாக ஒரு நூல் புடவை கட்டியிருந்த அவர் தலை குனிந்துகொண்டே கூச்சத்துடன் வந்தார். அடுத்து முருகன் செய்ததை யாருமே எதிர்பார்க்கவில்லை.

      ”இவங்கதான் என் பால்கார அம்மா” என்று கூறிக் கொண்டே அவர் காலில் அனைவர் முன்னிலையிலும் நெடுங்கிடையாய் விழுந்தான். “தம்பி என்னா இது எழுந்திரு’ என்று கூறியவாறே அவன் அம்மா அவனைத் தூக்கினாள்.  மாணவர்களின் கைத்தட்டல் வானைப் பிளந்தது. தலைமை ஆசிரியர் கண்ணாடியைக் கழற்றிக் கண்களைத் துடைத்துக் கொண்டார்.

            —————————  ———————————-  ————————-

கடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ பாஸ்கரன்

 

Krishnadevaraya — king, lover and a man of integrity...now in English- The New Indian Expressலைட்ஸ் ஆப்' - ரா.கி.ரங்கராஜன்Junior Vikatan - 05 September 2012 - கழுகார் பதில்கள் | kalukar pathilkal moovalur ramamirtham ammaiyar doctor muthulakshmi reddy janaki ammalஞானவயல்: எழுத்தாளர் ரா.கி.ரங்கராஜன்

 

 

அக்டோபர் 5 ஆம் தேதி திரு ரா.கி.ரங்கராஜன் அவர்களின் பிறந்தநாள். வாழ்நாளில் ஒரு மனிதர் இவ்வளவு எழுதிக் குவிக்க முடியுமா என்று மலைக்க வைக்கும் எழுத்தாளர், பத்திரிகையாளர், மொழிபெயர்ப்பாளர் ! பதினாறு வயதில் எழுத ஆரம்பித்த இவர் அறுபத்தி ஐந்து வருடங்கள் – தன் வாழ்நாள் இறுதி வரை எழுதிக்கொண்டே இருந்திருக்கிறார் – எளிமையாக, சுவாரஸ்யமாக, உண்மையாக, சிரிப்பாக, சிந்தனையைத் தூண்டும் விதமாக, இன்னும் விதம் விதமாக எழுதியுள்ளார்.

 

அந்த நாட்களில், கண்ணதாசனின் வனவாசம், மனவாசம், அர்த்தமுள்ள இந்துமதம் போன்ற புத்தகங்களை வாசிப்பது, என் மனதுக்கு இதமாக இருந்தது. வனவாசத்தில், தன்னை ‘அவன்’ என்று படர்கையில் வரித்துத் தன் சுயசரிதையை, மிகவும் வெளிப்படையாக எழுதியிருப்பார்.

 

அக்டோபர் 2004ல் நான் வாங்கிய புத்தகம் “அவன்”. கங்கை புத்தக நிலையம் வெளியீடு. எப்படித் தோன்றியது என்பது நினைவில் இல்லை. வாங்கியவுடன் ஒரே மூச்சில் வாசித்து முடித்தது நினைவிருக்கிறது! கண்ணதாசனைப் போலவே ‘அவன்’ என்று படர்கையில் தன் தனிப்பட்ட வாழ்க்கைக் கதையை ரா.கி.ர எழுதிய புத்தகம் அது. ‘உத்தியைப் பொறுத்த மட்டில் கண்ணதாசனின் வனவாசம் எனக்கு வழிகாட்டி. ஆனால் உண்மைகளை ஒப்புக்கொள்வதில் அவருக்கு இருந்த தைரியமும், துணிச்சலும் எனக்குக் கிடையாது. அவரது ஒப்பற்ற கவிதை நடையும் எனக்குக் கைவராது’ என்கிறார் தன் முன்னுரையில் ரா.கி.ர.!

 

1500 க்கும் மேற்பட்ட சிறுகதைகளும், 50 நாவல்களும், ஏராளமான கட்டுரைகளும், மொழிபெயர்ப்பு நாவல்களும், நகைச்சுவை நாடகங்களும் ‘மட்டும்’ எழுதியுள்ள ரா.கி.ர., ‘இலக்கிய வரலாறு என்று எனக்கு ஏதும் இல்லை’ என்கிறார்! மூன்று நாவல்கள் திரைப்படங்களாக வந்துள்ளன.

 

அவன் புத்தாத்தின், 334 பக்கங்களையும், தொடர்ந்து வாசிக்க வைக்கும் அற்புதமான எழுத்து அவருடையது. எத்தனை மனிதர்கள், நிகழ்வுகள், அனுபவங்கள் – கையில் பத்து ரூபாய் இல்லாத நேரம், கண்ணதாசனுக்கு அவசரமாக சேலம் செல்ல, தன் கை வாட்சைக் கழற்றிக் கொடுத்ததும், பின்னர் ஒரு நாளில் அவரிடமிருந்து திரும்பப் பெற்றுக் கொள்வதும் ஒரு சிறுகதை போல சொல்லுகிறார். தந்தை மகோபாத்யாய ஆர்.வி. கிருஷ்ணமாச்சாரியார் முதல் எம்.வி.வெங்கட்ராம், கு.ப.ரா., தேவன், டி.கே.சி., ராஜாஜி, எஸ்.ஏ.பி. (நாற்பத்தி இரண்டு வருடங்களுக்கும் மேலாக குமுதத்தில் எஸ்.ஏ.பி. யின் கீழே பணி புரிந்த அனுபவங்கள் சுவாரஸ்யமானவை!), வ.ரா. கி.வா.ஜ., நாடோடி, கண்ணதாசன், வானதி திருநாவுக்கரசு, டைரக்டர் ஶ்ரீதர், மாலன் (அவருக்கு ஸ்பெஷல் நன்றி சொல்கிறார், இந்தப் புத்தகத்தை எழுதத் தூண்டியதற்காக!)வரை அவரது அனுபவங்களின் திகட்டாத தொகுப்பு இந்தப் புத்தகம்.

 

ரா.கி.ர தனது பதினாறாவது வயதில் எழுத ஆரம்பிக்கிறார். முதல் கதை எழுதியதை சுவாரஸ்யமாகச் சொல்கிறார். படிப்பு முடிந்ததும், அண்ணனுடன் சென்னைக்கு வந்து, முதன் முதலாக திரு வாசனை அவர் வீட்டில் சென்று சந்திக்கிறார். வயது பத்தொன்பது இருக்கலாம். “ரொம்பச் சின்னப் பையனா இருக்கியேப்பா, கதையெல்லாம் எழுதுவியா? ஏதாவது இருந்தா எழுதிக் கொண்டு வா, பார்க்கலாம்” என்கிறார் வாசன். தன் தந்தையிடம் சமஸ்கிருதம் படித்த தேவன் அப்போது ஆ.வி.யில் முக்கியப் பொறுப்பில் இருந்தார். அவரிடம் இவர் எழுதிய கதையைக் கொண்டு கொடுக்க, ‘நன்றாக இருக்கிறது, பிரசுரிக்கிறேன்’ என்கிறார். பல மாதங்கள் கழித்து, 1946ஆம் வருடம் திடீரென்று அது விகடனில், ராஜுவின் கார்டூனுடன் பிரசுரமாகிறது! “என் முதல் சிறுகதை, முதன் முறையாக விகடனில் வெளியாகி, நானும் ஒரு எழுத்தாளன் என்று பிறவியெடுத்தது அன்றைய தினம்தான்” என்கிறார் ரா.கி.ர.!

 

‘சக்தி’ மாத இதழ், ‘காலலச்சக்கரம்’ வார இதழ், ‘ஜிங்லி’ சிறுவர் இதழ், ஆ.வி., ‘குமுதம்’ போன்ற பத்திரிகைகளில், இவரது படைப்புகள் வெளியாகியுள்ளன. ’அண்ணாநகர் டைம்ஸ்’ ‘மாம்பலம் டைம்ஸ்’ போன்ற வட்டார இதழ்களில் வெளியான கட்டுரைகள் ஆறு , ஏழு தொகுப்புகள் வெளிவந்துள்ளன. நாலு மூலை, சும்மா இருக்காதா பேனா, ரா.கி.ர. டைம்ஸ் போன்றவை அதிக அளவில் வரவேற்பையும், வாசிப்பையும் பெற்றவை. நாலு மூலை புத்தகத்தை 2005ல் படித்த போது, இப்படியும் இவ்வளவு விஷயங்களை, இவ்வளவு சுவாரஸ்யமாக எழுத முடியுமா என வியந்திருக்கிறேன்.

 

‘நான் கிருஷ்ணதேவராயன்’ வித்தியாசமாக எழுதப்பட்ட இவரது வரலாற்றுப் புதினம் – அதன் ஆடியோ சிடி ரிலீஸ் ஆழ்வார்ப்பேட்டை ‘டேக்’ செண்டரில் நடந்தபோது, இவரது எழுத்து மற்றும் படைப்புகளின் வீச்சும், இவரது மனிதநேயப் பண்புகளும் அன்று பேசிய எழுத்தாளுமைகளின் மூலம் தெரிய வந்தது.

 

பட்டாம்பூச்சி, தாரகை, ஜெனிஃபர், டுவிஸ்ட் கதைகள், காதல் மேல் ஆணை போன்ற மொழிபெயர்ப்பு நாவல்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை. “நன்றி கூறும் நினைவு நாள்” – ரா.கி.ர. டைம்ஸில், மொழிபெயர்ப்பு மற்றும் மொழிபெயர்ப்பவர்களைப் பற்றிய, வாசிக்க வேண்டிய சுவாரஸ்யமான கட்டுரை!

 

ஹாஸ்யக் கதைகள், திக்-திக் கதைகள், கன்னா பின்னா கதைகள் (எல்லாக் கதைகளும், கடிதங்கள் மூலமே சொல்லப்பட்டிருக்கும்!), எப்படிக் கதை எழுதுவது? (கதை எழுதுவதற்கான பல உத்திகளை, கதை போல சொல்லியிருப்பார்) போன்றவை ரா.கி.ர. வின் வித்தியாசமான படைப்புகள்!

 

குமுதத்தில் ‘லைட்ஸ் ஆன்’, கல்கியில் ‘சைட்ஸ் ஆன்’, துக்ளக்கில் ‘டெலி விஷயம்’ போன்றவை மிகவும் பிரபலமான கட்டுரைகள் – இவற்றில் வரும் செய்திகளின் விறுவிறுப்பும், கேலியும், நகைச்சுவையும் ஏராளமான வாசகர்களைக் கவர்ந்திருக்கின்றன! இவை புத்தகமாக வரவில்லையே என்கிற வருத்தம் ரா.கி.ர. வுக்கு இருந்ததாகக் கூறுகிறார் சுஜாதா தேசிகன்.

 

சிறுவாணி வாசகர் மையம் சமீபத்தில் வெளியிட்டுள்ள ‘ரா.கி.ர. டைம்ஸ்’ ஒரு சுவாரஸ்யமான கட்டுரைத் தொகுப்பு. அதில் “Disciplined, Beautiful writing என்று தொடங்கி, ‘ரா.கி.ர.வின் எழுத்தின் ரசிகன். சென்னையில் அவரைச் சந்திக்கும்போதெல்லாம், முதுகில் ஒரு ஷொட்டுக் கொடுத்து,’ ராட்சஸன்யா நீ’ என்று பாராட்டும்போது, அதில் துளிக்கூடப் பொறாமை இருக்காது. காரணம், அவரே ஒரு சக ராட்சஸர்” என்று சுஜாதா பாராட்டுகிறார்.

 

“தேவை பழி போட ஒரு ஆள்’ கட்டுரையில்:

தன் மீதுதான் தப்பு என்று ஒப்புக்கொள்ளும் தைரியம் கொண்ட தலைவர், அமெரிக்க ஜனாதிபதி ட்ரூமன் ஒருவர்தான். உலகமெங்கும் கெட்ட பெயர் வாங்கிக்கொண்டவர் அவர் ஜப்பான் மீது அணுகுண்டு போட்டதின் மூலம். இந்தியாவுக்கு என்றுமே நண்பராக இருந்தது கிடையாது. அவருடைய மேஜையின் மீது, ’The buck stops here’ என்று ஒரு பலகையில் எழுதி வைத்திருந்தார். ‘எல்லாப் பழியும் என் தலைமீதுதான் விடியும்’ என்பது அதன் பொருள்.

 

“வாரீர் பிரார்த்தனை செய்வோம்” கட்டுரையில்:

டோரதி ஹோகன் என்ற பெண்மணி தன் தாயைப் பற்றி எழுதிய கவிதை ஒன்றில் “அம்மா! நீ மட்டும் இப்போது இங்கே இருந்தாயானால், நன்றி அம்மா நன்றி என்பேன் – என்றைக்கு என்னைப் பெற்றெடுத்தாயோ அன்று தொட்டு, உன் உடலிலிருந்து உயிர் பிரியும் வரை, தியாகங்களையும், வேதனைகளையும், தனிமைகளையும், கண்ணீர்களையும், விரக்திகளையும் நீ தன்னலமற்றுத் தாங்கிக் கொண்டதிற்காக. (ஆதி சங்கரரின் ‘மாத்ரு பஞ்சகம்’ நினைவுக்கு வந்தது – அவர் எழுதிய உணர்ச்சிகளைக் கொட்டும் ஒரே ஸ்லோகம் – தன் அம்மாவைப் பற்றியது.)

 

“தன்னம்பிக்கை வளர” கட்டுரையில்:

ஒரு குட்டிக் கதை: சத்திரத்தில் படுத்திருந்த ஒருவன், தன் அருகே படுத்திருந்தவனிடம் ‘நான் இரண்டு பெண்டாட்டிக்காரன்! ஆஹா, என்ன ஆனந்தமான வாழ்க்கை!’ எனத் திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டிருந்தான்.

மற்றவனுக்கு அதைக் கேட்டு ஆசை ஏற்பட்டது. ஊருக்குப் போய் இரண்டு பெண்களை மணந்தான். ஆனால் வாழ்க்கை துன்ப மயமாயிற்று. நரக வேதனை தாளாமல், சத்திரத்துக்குத் திரும்பி வந்தான். அங்கிருந்தவனிடம், ’உன் பேச்சைக் கேட்டு நான் படாத துன்பமில்லை. எதற்காக என்னிடம் பொய் சொன்னாய்?’ என்று கோபித்தான்.

‘ரொம்ப நாளாய் நான் ஒண்டியாகவே இங்கே கிடக்கிறேன். ஒரு துணை இருந்தால் நல்லது என்று தோணியது.’ என்றான் அந்த மாஜி இரண்டு பெண்டாட்டிக் காரன்.

 

ஆழ்ந்து, விரிந்த வாசிப்பும், நகைச்சுவை கலந்த எழுத்து நடையும், புத்திசாலித்தனமான செய்தி விவரணைகளும் ரா.கி.ர. வின் படைப்புகள் எங்கும் விரவியிருக்கும். நாலு மூலை, ரா.கி.ர டைம்ஸ் வாசிக்க வேண்டிய கட்டுரைத் தொகுப்புகள்.

 

ஜெ.பாஸ்கரன்.ச்ர்