கவியரசர் கண்ணதாசனுக்கு குவிகத்தின் நினைவாஞ்சலி!
Monthly Archives: November 2014
2/25
செல்ஃபி பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!!
குவிகம் தனது முதலாவது பிறந்த நாளைக் கொண்டாடுகிறது!
ஒரு வருடம் ஒரு டிஜிட்டல் பத்திரிக்கையைத் தொடர்ந்து நடத்துவதே ஒரு இமாலய இல்லை ரோகித் சர்மா சாதனை தானே!
மாதம் 25 டிஜிட்டல் பக்கம் . 12 மாதம். 300 பக்கம்! மனதுக்கு நிறைவைத் தருகிறது.
இதை ஆரம்பிக்கும் போது நண்பர் ஒருவர் கேட்டார் -இது குமுதமா? கல்கண்டா? என்று. கல்கண்டு என்று சொன்னேன். அதாவது தமிழ்வாணன் போல எல்லா கதை – கட்டுரை – கவிதைகளை நான் ஒருவனே எழுதிக் கொண்டிருந்தேன். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக மனைவி, மகள்,உறவினர் மற்றும் நண்பர்கள் என்று எழுதுவோர் வட்டம் பெரிதாகிக் கொண்டு வருகிறது. வாசகர் வட்டம் இன்னும் அதிகம் சேரவேண்டும்!
மாதம் முழுதும் செய்வதற்கு ஒரு வேலை! கடைசி வாரத்தில் ஓவர்டைம் போல அதிக நேரம் செலவிடல். 15ம் தேதி காலக் கெடு. கிராபிக்ஸ் செய்ய நிறைய நேரம் எடுத்துக் கொள்வது. இவை அனைத்தும் என்னை சுறுசுறுப்பாக வைத்திருப்பதிலும் மனதிற்கு மகிழ்ச்சியைத் தருவதிலும் தலையான பங்கைச் செய்கின்றன.
உங்களின் இந்த வெளிப்பாடு என்னை ஆச்சரியப் படவைக்கிறது- பொறாமைப்பட வைக்கிறது என்று நான் பொறாமைப்படும் நண்பர்கள் கூறும் போது எனக்குள் மகிழ்ச்சி அலை தெறிக்கிறது.
இரண்டாவது வருடத்தில் குவிகத்தை அடுத்த படிக்கு – உயர்ந்த நிலைக்குக் கொண்டு செல்லவேண்டும்!
அதைப்பற்றி அடுத்த இதழில் பார்க்கலாம்.
மேளம் கொட்டட்டா
3/25
செல்லக் குட்டி வெள்ளாடு
அடிச்சுப் போட்டா சாப்பாடு
காலைத் தூக்கும் கறுப்பாடு
விளையாடாதே கற்போடு
மூச்சு வாங்கும் முசக்குட்டி
கடிக்கத் தோதா கருப்பட்டி
வெள்ளம் வழியும் அணைக்கட்டா
மெல்ல மெல்ல அணைக்கட்டா
காலைக் கொஞ்சம் கடிக்கட்டா
லெக்பீஸ் என்று சுவைக்கட்டா
தேனைக் கொஞ்சம் குடிக்கட்டா
வண்டாய் மாறிப் பறக்கட்டா
தோளைக் கொஞ்சம் குலுக்கட்டா
மாங்கனி விழுந்தால் பொறுக்கட்டா
வளைந்து நெளியும் வாய்க்காலா
பொங்கி வழியும் கால்வாயா
இதயத் துடிப்பை நிறுத்தட்டா
இடுப்பில் துடிப்பைத் தொடரட்டா
திருட்டு மீனைப் பிடிக்கட்டா
உருட்டுக் கட்டையை உருட்டட்டா
இருட்டும் போது அமுக்கட்டா
குருட்டுப் பூனையாய் பாயட்டா
உதட்டில் உதட்டை இணைக்கட்டா
நெஞ்சில் மயங்கிச் சாயட்டா
மடியில் முகத்தைப் புதைக்கட்டா
இடையில் மேளம் கொட்டட்டா ?
ஃபிட் பிட் ( FITBIT )
4/25
ஃபிட் பிட் என்பது ஒரு சிறிய எலெக்ட்ரானிக் கருவி. ஒரு பென் டிரைவ் ( pen drive )வடிவத்தில் இருக்கும் . அதை நம்முடைய பாக்கெட்டிலோ கையிலோ கட்டிக் கொண்டால் அது நம் உடம்பின் அசைவுகளைக் கணித்து அதன் மூலம் நமது சுறுசுறுப்பை அளக்க உதவும்.
நாம் எவ்வளவு அடிகள் நடக்கிறோம், எவ்வளவு தூரம் நடக்கிறோம், எவ்வளவு கலோரி செலவழிக்கிறோம் என்பதை சுலபமாகச் சொல்லும் கருவி.
தூங்கும் போது அதைக் கட்டிக் கொண்டு (?) படுத்தால் , நாம் எப்படித் தூங்கினோம், எவ்வளவு தடவை புரண்டு படுத்தோம் என்று நமது தூக்கத்தின் தன்மையை அறிய உதவும்..
நமது தினசரி நடவடிக்கைகளைக் கம்ப்யூட்டரில் WI-FI மூலமாக அப்டேட் செய்து கொள்ளும். (அதற்கு fitbit.com இல் பெயர்,பாஸ் வேர்டைப் பதிவு செய்து கொள்ளவேண்டும்)
வாரா வாரம் நம்முடைய சுறுசுறுப்பின் ரிபோர்ட்டும் கிடைக்கும். நமது ஃபிட் பிட் நண்பர்களையும் இந்த சைட்டில் இணைத்துக் கொண்டால், நமது காலடித் தூரங்களை அவர்களுடன் ஒப்பிட்டுiப் பெருமைப்படலாம் அல்லது இன்னும் தீவிரமாக முயற்சிக்கலாம்.
இதை நாள் முழுதும் கட்டிக் கொள்ளலாம். தூங்கும்போதும் குளிக்கும்போதும் கூட கட்டிக் கொள்ளலாம்.
2008ல் அறிகுமாகப் படுத்தப்பட்ட கருவி இது. இதில் ஒரு பூங்கொடியின் படம் உள்ளது. நம் சுறுசுறுப்பின் அவதாரம் அது. நமது நடைகள் அதிகமாகும்போது பூங்கொடி படர்ந்து மலர் விரிந்து காணப்படும்.சோம்பல் அதிகமாக இருந்தால் கொடியும் வாடிக் கிடக்கும்.
மொத்தத்தில் இது ஒரு தேக ஆரோக்கியத்தை மனதில் வைத்து உருவாக்கப்பட்டக் கருவி. நம்மை சுறுசுறுப்பாக மாற்ற அருமையான உறுதுணை.
ஃபிட் பிட் (FITBIT) ஜோக்ஸ்
ஜோக்ஸ் -1
6/25
ரசித்த படைப்புகளும் படைப்பாளிகளும் (எஸ். கே. என்)
7/25
இம்மாத எழுத்தாளர் : இந்திரா பார்த்தசாரதி
பத்மஸ்ரீ, சாஹித்ய அகெடமி, சரஸ்வதி சன்மான், பாரதிய பாஷா பரிஷத் என பல விருதுகளால் கெளரவிக்கப்பட்ட, ஆர். பார்த்தசாரதி என்னும் திரு. இந்திரா பார்த்தசாரதி நிதர்சனத்தை ஒரு அங்கதச் சுவையோடு ( அங்கதத்துக்கு புரிகிற பாஷையில் சொல்லணும்னா – சடையர் – satire ) நம்முன் வைப்பதில் மன்னன். சிறுகதை, நாவல்கள் கட்டுரைகள் தவிர நாடகங்களும் எழுதியுள்ளார்.
அவரது மனிதாபிமானம் என்னும் கதை.
ஒரு அறையில் வேறு மூன்று நபர்களுடன் தங்கியிருக்கும் தனது நண்பன் பற்றி டெல்லியில் வேலை பார்க்கும் ஒருவர் சொல்வதாக இந்தக் கதை. நண்பர்கள் வேறு வேறு அலுவலகத்தில் வேலை பார்க்கிறார்கள். ‘ரிவோலி’ தியேட்டரில் படம் பார்க்க அறையில் வசிக்கும் நண்பன் டிக்கெட் வாங்கி வைத்திருக்கிறான்.
(இ பா, இந்தக்கதையில் இரு நண்பர்களுக்கும் பெயரையே குறிப்பிடவில்லை. வசதிக்காக கதை சொல்பவரை நம்ம ஆள் என்றும் மற்றவரை நண்பன் என்றும் வைத்துக்கொள்ளலாம்)
நம்ம ஆள் நண்பன் அறைக்குப் போகும்போது நண்பனுக்கு மஞ்சள்காமாலை என்று தெரிகிறது. அவனோ அலோபதியில் நம்பிக்கை இல்லாதவன். மறுமுறை பார்க்கச் செல்லும்போது தனியாக அறையில் மோசமான நிலையில் கிடக்கிறான். மற்ற அறை நண்பர்கள் யாரும் இல்லை. அவனை மருத்துமனையில் மிக்க சிரமத்தோடு சேர்த்து விடுகிறார் நம்ம ஆள். அரசாங்க மருத்துவமனையில் சேர்க்கும் பிரச்சினைகளோடு உடனடியாக ஆபரேஷன் செய்ய சம்மதித்து கையெழுத்திடவும் நேர்கிறது.
நண்பனின் குடும்பத்தினரின் முகவரிக்காக திரும்பவும் அவன் அறைக்குச் செல்கிறார். அங்கு அறை நண்பர்கள் சீட்டாடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கும் விவரம் தெரியாததால் மறுநாள் அவன் அலுவலகத்திலிருந்து முகவரி பெற்று தந்தி அடிக்கிறார். நண்பன் ஆபத்திலிருந்து வெளிவந்து விட்டாலும் அவனது தம்பி வரும்வரை நண்பனைக் கவனித்துக் கொள்கிறார்.
ஒய்வு தேவைப்படுவதால் நண்பன் சொந்த ஊர் சென்று விடுகிறான்.
திரும்பி வந்த பிறகு சந்திக்கும்போது “ரொம்ப தாங்க்ஸ்” என்கிறான் நண்பன். கூடவே “ரிவோலியிலே ஒரு சினிமா படம், பேர் ஞாபகமில்லே. டிக்கெட் வாங்கின மறுநாள்தான் நான் படுத்துட்டேன்”
“ஸோ?”
“எனக்கு நீ ஏழரை ரூபா தரணும்” என்றான் நண்பன்.
என்று கதையை முடிக்கிறார் இ .பா
இந்தக்கதையின் இடையே நம்ம ஆள் கூட தங்கியிருப்பவன் (காலையில் காயத்ரி மந்திரம் – இரவில் நீலப்படம்"), நண்பனின் அறைவாசிகள் சீட்டாட்டம் (பெயர் அவசியமில்லாததால் அவர்களை ‘இரண்டு ஏஸ்’ , ‘கலர்’, “மூன்று ஏழு” என்றுதான் சொல்கிறார் ), மருத்துவமனையில் சேர்க்கும்போது அந்த டாக்ஸி டிரைவர் (உதவி செய்வதோடு பணமும் வாங்காமல் “என்னையும் ஒரு நண்பன் என்று வைத்துக்கொள்ளுங்கள்”) என பல சிறு பாத்திரங்கள் . இ பா அவர்களின் சாதுரியமான உரையாடல்களும் கிண்டல் தொனிக்கும் கதை சொல்லும் முறையும் வழக்கம் போல.
அவரது மற்ற இருகதைகளின் லிங்க்
http://azhiyasudargal.blogspot.in/2012/09/blog-post_6.html
http://azhiyasudargal.blogspot.in/2011/01/blog-post_20.html
டெல்லி வாழ் தமிழர்கள், மத்திய அரசு அதிகாரிகளிடையே போலி கௌரவம், நுனி நாக்கு ஆங்கில ‘அறிவு ஜீவிகள் ‘என பலரையும் கிண்டல் தொனிக்க எழுதிய கதைகள் அனேகம். நினைவில் இருக்கும் சில கதைகள் – ஒரு இனிய மாலைப்பொழுது, ஒரு கப் காபி, அஸ்வத்தாமா, ஏற்பாடு, நான் கண்டேனா?, வழித்துணை.
இவரது முக்கிய நாவல்கள் : தந்திரபூமி, குருதிப்புனல் (சாகித்ய அகாடமி பரிசு) ,ஆகாசத்தாமரை, ஹெலிகாப்டர்கள் கீழே இறங்கிவிட்டன, மாயமான் வேட்டை, தீவுகள், யேசுவின் தோழர்கள், சுதந்திர பூமி, கிருஷ்ணா கிருஷ்ணா ,வேதபுரத்து வியாபாரிகள், வெந்து தணிந்த காடுகள், திரைகளுக்கு அப்பால்.
நாடகங்கள்: உச்சி வெயில் ( மறுபக்கம் என்றபெயரில் திரைப்படம்) ,ஔரங்கஜீப் ,நந்தன் கதை, ராமானுஜர், போர்வை போர்த்திய உடல்கள் .
முதல் இரவா?
8/25
நெருப்பைக் கொட்டி விட்டுப் போனவளே !
நெஞ்சைக் கீறி விட்டுச் சென்றவளே !
எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்து
கண்கள் கலந்து கடி மணம் புரிந்தோம்
இரு மனம் கூடி புது மணம் தேடி
இருவரும் விரைந்தோம் இரவினை நாடி !
உன்னை அழகென்றேன் அனலில் மெழுகானாய் !
கன்னிமை எனதென்றேன் கண்ணிமை துடித்திட்டாய் !
கன்னத்தில் கன்னம் வைத்தேன் கள்வனென்றாய் !
கனிந்த கன்னம் பழமா கடித்துத் தின்னவா !
கன்னத்தின் ஓரம் காது அது இனி இருக்காது !
கயிற்றைக் காட்டி கழுத்தை ஏன் வளைக்கிறாய் !
வலிக்கிறது என்று சொல்லி வாய்பொத்த வருகிறாய் !
பொய் சொன்ன இதழுக்கும் நாவிற்கும் தண்டனை !
வாய்ச் சொற்கள் நின்ற பின் நெஞ்சங்கள் பேசுகிறதே !
நெஞ்சம் சுடுகிறதே அது சுரமா எரியும் பந்தமா
உரசலில் எழுந்தது அச்சுரம் பாதியில் நின்றால் அபசுரம் !
அணைத்தால் அணையும் புதுத் தீ தான் இதுவோ
கண்ணில் என்ன செவ்வரி ! கண்ணே எரிகிறதா ?
விடியும் வரை எரிந்தது அந்த விளக்கு
ஆசை நெய்யிட்டு வேட்கைத் திரியிட்டு
காமத் தீ இட்ட விளக்கல்லவா அது !
கருக்கலில் எழுந்து காலை ஒற்றினாய் !
தீர்க்க சுமங்கலி வாழ்த்தொலி வேண்டினாய் !
கண நேரத்தில் கண்கள் மயங்கினாய் !
மண மாலையுடன் மடியில் சரிந்தாய் !
இமைகள் மெல்லத் துடிக்கின்றன !
இதழ்கள் சொல்லத் துடிக்கின்றன !
இதயம் கொல்லத் துடிக்கிறது !
ஸ்வாசம் மெள்ள நிற்கிறது !
நாடி வந்தவளின் நாடி நின்றது !
பாடி வந்தவளின் மூச்சு நின்றது !
முதலும் முடிவுமான அந்த இரவினிலே
நெருப்பைக் கொட்டி விட்டுப் போனாளே !
நெஞ்சைக் கீறி விட்டுச் சென்றாளே !!
சுட்ட ஜோக்ஸ்
9/25
வாட்ஸ் அப்ல வந்தது.
நான் மட்டுமே சிரிச்சா எப்படி?
நீங்களும் சிரிங்க !
மாத்தி யோசி (சிவமால் )
10/25
ஜோக்ஸ் -2
(நன்றி:ஹரி )
பொன்மகள் வந்தாள் (நிறைவுப் பகுதி)
12/25
அன்பின் திருவுருவே அலங்கார நாயகியே
தஞ்சமென்று வந்தோரை தாங்கியே நிற்பவளே!
என்னையன் திருமாலின் இதயத்து நாயகியே
உலகமது உருண்டோட உறுதுணையா யிருப்பவளே
மின்னுகின்ற வுன்விழியின் கருணையின் நீரூற்று
பொன்மாரி பொழிந்துவுன் பக்தரையே களிப்பூட்டும்
உன்பாதம் பணிந்தயிவ் வேழைதம் மேனியிலும்
சிலதுளிகள் தெளிக்கட்டும் வாழ்க்கை மலரட்டும் !
தேவியுன் னருளோடு வேய்ந்தவிப் பாடல்கள்
ஒலிக்கின்ற மனைகளிலே மகிழ்ச்சியும் பொங்கட்டும்
ஒவ்வாமை ஏழ்மை நெருங்காம லிருக்கட்டும்
இல்லையென்ற சொல்லே இல்லாம லிருக்கட்டும்
செவ்வனே நடப்பதெலாம் நல்லவையா யிருக்கட்டும்
பிணியென்ற வார்த்தைக்குப் பணியிலாமல் போகட்டும்
அவனியிலே மாந்தரெலாம் ஒற்றுமையா யிருக்கட்டும்
அன்போடு அமைதியும் ஊரெல்லாம் பரவட்டும் !
அன்னையே திருமகளே தேவியே அனுதினமும்
ஒருவேளை யுனைதுதித்தால் பாவங்கள் நீங்கிவிடும்
இருவேளை யுனைதுதித்தால் செல்வங்கள் நிறைந்துவிடும்
மூன்றுவேளை யுனைதுதித்தால் எதிரிகள் விலகிடுவர்
நாள்முழுது முனைதுதித்தால் மகிழ்ச்சியும் பெருகிவிடும்
நற்குணங்கள் நற்செயல்க ளெமைதமை வந்தடையும்
சான்றோரும் புகழ்பாடும் பெரும்பேறு நாடிவரும்
அண்டங்களை இயக்குகின்ற ஆதிலக்ஷ்மியே போற்றி !
உலகையே செழிப்பாக்கும் தான்யலக்ஷ்மியே போற்றி !
கோழையை வீரனாக்கும் வீரலக்ஷ்மியே போற்றி !
வலிமையைத் தந்தருளும் கஜலக்ஷ்மியே போற்றி !
மழலை யின்பம்தரும் சந்தானலக்ஷ்மியே போற்றி !
வெற்றிக் கொடிகட்டும் விஜயலக்ஷ்மியே போற்றி !
பார்புகழ வாழவைக்கும் ஐஸ்வர்யலக்ஷ்மியே போற்றி !
செல்வங்கள் பெருக்குகின்ற தனலக்ஷ்மியே போற்றி !
அறம் வாழ ஈரஞ்சு அவதாரம் எடுத்த ஸ்ரீமன்
நாரணன் தேவியாம்மகாலக்ஷ்மி நின்பாதம்
போற்றிபோற்றி போற்றிபோற்றி போற்றிபோற்றி
— சம்பூர்ணம் —
13/25
கவியரசு கண்ணதாசன் நினைவு நாள் அக்டோபர் 17.
சிவகங்கை மாவட்டம் சிறுகூடல்பட்டியில் 1927 ஜூன் 24ல் பிறந்து சிகாகோவில் 1981 அக்டோபர் ,17ல் மறைந்த கவியரசர் கண்ணதாசன். முத்தையா என்பது அவரது இயற்பெயர்.
படைப்பாற்றல் :
மாங்கனி என்ற சிறு காப்பியம் படைத்தார்.
சங்கரர் வட மொழியில் எழுதிய கனகதாரா ஸ்தோத்திரத்தை தமிழில், பொன்மழை யாகத் தந்தார்.
பஜகோவிந்தத்தை எளிய நடையில் மொழி பெயர்த்தார்.
பகவத்கீதைக்கு உரை விளக்கம் தந்தார்.
270 நூல்களை -நாவல்கள் ,கட்டுரைகள், நாடகங்கள், கவிதை நூல்கள் ,வாழ்க்கைச் சரித்திரம், எழுதியிருக்கிறார்.
நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், 5 ஆயிரத்துக்கும் மேல் சினிமா பாடல்கள் எழுதியுள்ளார்.
அரசவைக் கவிஞராக இருந்திருக்கிறார் .சேரமான் காதலிக்காக சாகித்ய அகாடெமி பரிசு பெற்றவர்.
அவரது சிறப்பு கருத்து நிறைந்த எளிமையான திரைப்படப் பாடல்கள்.
அவரது முத்துக்களில் சிலவற்றை இந்த இதழ்களின் பக்கங்களில் ஸ்பரிசிக்கிறோம் !
ஒரு பத்து நிமிடம் கால அவகாசம் இருந்தால் கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்து மதம் அறிமுகம் மேலே உள்ள வீடியோவில் கேளுங்கள்!
ராவணன் அசோக வனத்தில் சீதையை மயக்க எல்லா வேடமும் போட்டு சீதை முன் நின்றானாம். ஆனால் ராமன் வேடம் போட்டு அவள் முன் நிற்க முடியவில்லையாம். அதற்கான காரணத்தைக் கவிஞர் அழகாக விளக்குகிறார்!
This gallery contains 4 photos.
கோவையில் நடக்கும் கவிதைக் கருத்தரங்கத்திற்குக் குவிகத்தின் அன்பான வாழ்த்துக்கள்! விழாவின் முக்கிய நிகழ்வுகளை அடுத்த குவிகத்தில் காணலாம்!