Image result for accident victim in india

ஏம்ப்பா நீயே இடிச்சுட்டியா?”
 
“அய்யோ இல்லை டாக்டர்!
 
“விசிட்டிங் கார்டு வெச்சிருக்கியா?”
 
“இந்தாங்க டாக்டர்!”
 
“ என்னது எம் டியா? இந்தக்கம்பெனிக்கு எம் டியா நீ?”
 
“பெரிய கம்பெனியெல்லாம் ஒண்ணும் இல்ல டாக்டர்!”
 
“கொஞ்சம் விவரமா சொல்லு! கிழவர்தான் மயக்கமா இருக்காரே! ஒண்ணும் பயமில்ல!”
 
“ஐ ஐடியில எம் டெக் முடிச்சுட்டு இந்த புதுமையான சாஃப்ட்வேர் தயார் பண்ணி பெரிய ஆளா வரணும்னு அமெரிக்கா சான்ஸல்லாம் விட்டுட்டு கம்பெனி ஆரம்பிச்சேன். ஆரம்பம் நல்லாத்தான் இருந்தது. ஆனா இங்க யாருமே என்னை என்கரேஜ் பண்ண முன்வரல டாக்டர்! ஆச்சு ரெண்டு வருஷம்! எல்லா காபிடலும் கரைஞ்சு போச்சு. நாப்பது பேரவெச்சு ஆரம்பிச்சது இப்ப ஏழே பேர்னு வந்துடுத்து. இவங்களும் எத்தன நாளைக்குதான் சம்பளம் இல்லாம வேல செய்வாங்க!”
 
“ஏன் பிராடக்ட் நல்லா இல்லியா? வாங்க ஆள் இல்லையா?”
 
“ஒவ்வொரு இடத்துலயும் புரூவ் பண்ணிட்டேன் டாக்டர்! ஆனாலும் சாஃப்ட்வேர்னா அமெரிக்காதான். நம்ம ஊர் பிராடக்ட நம்பி ஆர்டர் தரமாட்டேங்கறாங்க! எனக்கும் அலுத்துப்போச்சு டாக்டர்! இன்னும் ரெண்டு மாசத்துல இழுத்து மூடிட்டு அமெரிக்கா போய்டப்போறேன்!”
 
“அவ்வளவு சீக்கிரம் மனசத்தளர விடாதப்பா! பொறுமையா இருந்தா ஜெயிக்கலாம்!”
 
”நா மட்டும் பொறுமையா இருந்தா போறாதே டாக்டர்! கூட இருக்கறவங்களுக்குச் சம்பளம் தரணுமே! அவங்களும் இருந்தாத்தானே இந்த பிராடக்ட இன்ஸ்டால் பண்ணி ஓடவெச்சு இதோட பயனை உறுதிப்படுத்த முடியும்!”
 
“எங்க தொழில் மாதிரிதானேப்பா! காசுக்காக அலைஞ்சா முடியுமா? முதல்ல நெறய கஷ்டப்படணும்! ஆனா விடிவு வந்துரும்ப்பா!”
 
“தாங்க்ஸ் டாக்டர்! அப்ப நான் புறப்படறேன் டாக்டர்! அந்தக்கிழவர…?”
 
“நா பாத்துக்கறேன்! அவரோட பையில ஏதோ ஒரு நம்பர் இருக்கே! அங்க டெலிஃபோன் பண்ணி அவர்  சம்பந்தப்பட்ட யாரையானும் வரவெச்சு அனுப்பிடறேன்! நீ பண்ணினது நல்ல காரியம்ப்பா! யாராவது பார்த்துப்பாங்கன்னு விட்டுடாம, சம்பந்தமேயில்லாத நீயே தேடிவந்து எங்கிட்ட அவர அட்மிட் பண்ணி…….டோண்ட் ஒர்ரி! உன் நல்ல மனசுக்குப் பயன் கிடைக்கும்!”
 
” நா பாத்துண்டே இருக்கும்போது வாணி மகால் சிக்னல்ல இடிச்சுட்டு நிக்காம போய்ட்டான் டாக்டர்!”
 
” நீயும் போயிருக்க வேண்டியதுதானே எனக்கேன் வம்புன்னு?”
 
“சேச்சே! அதெப்படி டாக்டர்! சக மனுஷன்னு ஒரு தாட்சண்யம் வேண்டாமா?”
 
“குட், வெரி குட்! இந்த மனிதாபிமானம்தான் இன்னும் நம்மளையெல்லாம் நாகரீகமா வெச்சிண்டிருக்கு! யூ டிட் ய நோபிள் ஜாப்!”
 
“அவ்வளவு பெரிசெல்லாம் இல்ல டாக்டர்! ஒரு சின்ன பரிதாபம்தான்!”
 
“உனக்கு கடவுள் நம்பிக்கை உண்டா? இல்லை நீயும் அந்தக் கறுப்புச்  சட்டை ஆசாமிகள்ள ஒருத்தனா?”
 
“நெறய இருந்தது டாக்டர்! இப்பதான் விரக்தி கொஞ்சம் கொஞ்சமா…!”
 
“ நோ நோ! கடவுள் நம்பிக்கைய விடவே கூடாது! அந்த ஸ்ரீரங்கம் ரங்கநாதர வேண்டிக்கோ! ஆல் தெ பெஸ்ட் யங் மேன்!”
 
“சுகுமார்! மணி பத்தாச்சு! ஆஃபீஸுக்கு வரல?”
 
“ என்ன அவசரம் வாசு! வந்தா மட்டும் என்ன ஆகப்போறது?”
 
“ டேய்! நீதான் இந்த கம்பெனியோட எம் டி! நீயே இப்படிப் பேசினா?”
 
“ப்ஸ!”
 
“இதக்கேளு, ஆல்ஃபா சிஸ்டம்ஸ்லேர்ந்து ஃபோன்! ஜெனெரல் மானேஜர் கலிவரதன் உன்னப்பாக்கணும்னாரு!”
 
“அடபோடா! கலாய்க்காதே!”
 
“ஐயாம் நாட் ஜோக்கிங்! வாடா! பன்னண்டு மணிக்கு அப்பாயின்ட்மெண்ட்!”
 
“ வெல் மிஸ்டர் சுகுமார்! எங்களுக்கு திருப்திதான்! க்ளட்ச் இந்தியாவுல நீங்க பண்ணின மாடல் பார்த்தோம். இந்த பிராடக்டுக்கு பெரிய டிமாண்ட் இருக்குன்னு எங்க எம் டி ஃபீல் பண்றாரு. மொத்தமா ஒரு லட்சம் யூனிட்டுக்கு ஆர்டர் கொடுக்கச்சொல்லிட்டாரு. இந்த பிராடக்ட, ஆல்ஃபா சிஸ்டம்ஸே அமெரிக்கா ஐரோப்பாவுல விற்பனைக்கு எடுத்துண்டு போலாம்ங்கறது அவரோட கணிப்பு! ஒரு அரை மணி வெயிட் பண்ணினா அட்வான்ஸ் செக் வாங்கிண்டு போய்டலாம்!”
 
“ ஓ ஷ்யூர் சார்!”
 
“நீங்க வந்தா மீட் பண்ணனும்னு எம் டி சொன்னாரு! போய் ஒரு அஞ்சு நிமிஷம் பாத்துட்டு வந்துடலமா?”
 
“அய்யோ! நானே அவரப்பாத்து நன்றி சொல்லணும்னு இருந்தேன் சார்! உடனே போலாம் சார்!”
 
வாங்க!”
 
ஒட்டியிருந்த அறையில் சுகந்த வாசனை. பாஸ்டல் நிற கர்ட்டன் காற்றில் அலைபாய்ந்தது. ஓர டேபிளில் ஷாம்பூ கூந்தல் படர்ந்த செக்ரட்டரி இவர்களைக் கண்ணாலேயே வரவேற்று “ஒரு நிமிஷம், எம் டி இஸ் ஆன் த ஃபோன்” என்றாள்.
 
ஒரு சில குளுமையான நிமிடங்கள்.
 
“ எஸ் யூ மே கோ நௌ!”
 
திறந்த கதவின் வழியாக சில்லென்ற ஏஸி காற்று. பெரிய அறை. நேரேதிரே அரை வட்ட மஹோகனி மேஜைக்குப்பின்னால் ஆர்கே சாரி! ஆல்ஃபாவின் நிறுவன எம் டி! இங்கும் அந்த சுகந்த வாசனை.
 
வசீகர புன்னகையுடன் பேசினார்.
 
“யூ மஸ்ட் பி சுகுமார்! அபார பிராடக்ட்யா உன்னோடது! எங்க இருந்த இத்தன நாளா?”
 
பேசத்தொடங்கின சுகுமார் ஆர்கே சாரியின் டேபிளுக்குப்பின்னால் இருந்த ஃபோட்டோவைப்   பார்த்துத் திகைத்தான். பேச்சு தடுமாறியது.
 
“சார்! இந்த ஃபோட்டோ…..இங்க எப்படி…?”
 
“ஓ அதுவா? எங்க பெரிய மாமா! குடும்பத்துகே பிதாமகர் மாதிரி! என்னை அமெரிக்காவுக்கு அனுப்பிப் படிக்க வெச்சது, இந்த ஆல்ஃபா கம்பெனி வெக்க முதல் கொடுத்தது எல்லாம் அவர்தான்! ய ரிமார்க்கபிள் மேன்! டாக்டர் வைகுண்டம்! அவர்தான் உன்னோட விசிட்டிங் கார்டு கொடுத்தார். அப்புறம்தான் கலிவரதன விட்டு உன்னோட பேசச்சொன்னேன்!”
 
வெளியே மேகமூட்டமாகி மழை பெய்யும் ஆயத்தங்கள் தொடங்கின.