ஆடா தொடா எலை

ஆடா தொடா எலையை அரைச்சுப் போட்டான் – அந்தக்
காயமெல்லாம் மாயமாக மறைஞ்சு போச்சே !
முந்தா நாள் காலையில மாடு வாங்கப் போகையில
கந்தன் வந்தான் கத்தி கந்தன் வந்தான்
கந்தன் வந்தான் கத்தி கந்தன் வந்தான்
ஜோப்பு மேல உள்ள காசை அள்ளித் தாடா – இல்லை
பல்லைத்தாட – என்று
கந்தன் கேட்டான் கத்தி கந்தன் கேட்டான்
கந்தன் கேட்டான் கத்தி கந்தன் கேட்டான்
காசு மேல ஆசையால இல்லே என்றான்
மாடன் இல்லே என்றான்
ஆளு வரும் சத்தம் கேட்டு ஓடப் போனான்
கந்தன் ஓடப் போனான்
போகு முன்னே மாடனுக்கு தடியால் தந்தான்
மூங்கில் கழியால் தந்தான்
முதுகில் பலமாய் தந்தான் – வலி
தாங்க முடியாமலே ஓடி வந்தான்
மாடன் ஓடி வந்தான்
மருந்து தேடி வந்தான்
நாட்டு வைத்திய நரை முனியும் தடவிப் பார்த்தான்
முதுகைத் தடவிப் பார்த்தான்
முதுகைத் தடவிப் பார்த்தான்
அப்புறம்
ஆடா தொடா எலையை அரைச்சுப் போட்டான் – அந்தக்
காயமெல்லாம் மாயமாக மறைஞ்சு போச்சே!
