—————-
———–
நவில்தொறும் நூல்களைப் படிக்கணும் தாயே!
நாவினில் நின்பெயர் நிலைக்கணும் தாயே!
நினைவினில் நின்னுரு இருக்கணும் தாயே!
நீயின்றி நானில்லை என்றாகணும் தாயே!
நுங்கினைப் போலநான் இனிக்கணும் தாயே!
நூபுர கங்கைபோல் பெருகணும் தாயே!
நெஞ்சினில் ஈரம் கசியணும் தாயே!
நேர்மை வடிவாய் விளங்கணும் தாயே!
நைடதம் போல்நூல் படிக்கணும் தாயே!
நொந்த மனமது மாறணும் தாயே!
நோன்புற்று வந்தேன் மாங்காட்டுத் தாயே!
ஔஷதம் போலதினம் உதவணும் தாயே!
ந்யாயமாய் இவைதந்து காத்திடுவாய் நீயே!
