
டாக்டரும் கடவுளும் ஒன்றாமே! எப்படி?
ரெண்டும் நின்று கொல்லும்!
டாக்டரும் திருடனும் ஒன்றா? எப்படி?
ரெண்டு பேரும் கத்தியைக் காட்டி காசைப் பிடுங்குறாங்க!
டாக்டருக்கும் வக்கீலுக்கும் கொஞ்சம் தான் வித்தியாசம்!
எப்படி?
அவர் குத்திக் குத்தி பீஸ் வாங்குவார்!.
இவர் கத்திக் கத்தி பீஸ் வாங்குவார்!

டாக்டர்! என் கணவர் குறட்டை விடறார் !
சத்தம் அதிகமா இருந்தாத்தான் பிரச்சினை.
பக்கத்து வீட்டுக்காரங்க எல்லாம் ராத்திரி பத்து மணிக்கு மேல் ஏன் மிக்ஸியை ஓட விடறேன்னு கேட்கிறாங்க!

உங்களுக்கு என்ன வியாதின்னு இப்போ சொல்லமுடியாது!போதை தெளிஞ்சப்புறம் தான் டெஸ்ட் பண்ண முடியும்.
சரி டாக்டர்! இன்னும் நாலு மணி நேரம் கழிச்சு வர்றேன்! அதுக்குள்ளே உங்களுக்கு போதை தெளிஞ்சுடும்னு நினைக்கிறேன்!

டாக்டர்! நேத்திலிருந்து எனக்குக் கடுமையான வயத்துவலி!
ஏன்! என்ன சாப்பிட்டீங்க?
நீங்க கொடுத்த சோத்துப் புண் மருந்து தான்!
அடப்பாவி! அது சேத்துப்புண் மருந்தாச்சே!
டாக்டர் சார்! எனக்கு வயத்திலே கட்டியாம்!
புரோகிதர்வாள்! பதினாயிரம் கட்டி வராகன்னு சொல்லும்!
