
மக்களையும் மாக்களையும் பிரிப்பது ஓர்காலே!
பாகையையும் பகையையும் பிரிப்பது அதேகாலே!
இந்தியராம் நாமெல்லாம் ஒர்குலம் ஒர்ஜாதி
எம்மதமும் சம்மதமென சொல்லிவிடுவோம் ஓர் செய்தி
எல்லோரும் மன்னராய்ப் பாகைசூடி வாழ்வதுவே
காந்திகண்ட ராஜ்ஜியத்தில் பலமான அஸ்திவாரம்
ராமரும் அல்லாவும் ஏசுவும் பகையில்லை
ஓரினமாய் இருப்பதுவே அவர்காட்டிய வாழ்வுநிலை
மதங்களின் போதனை அன்பும் அரவணைப்பும்
மதப்பெயரில் நம்சாதனை கொலைகளும் கொள்ளைகளும்
பாகையின் காலெடுத்து பகையாகிப் போனோமே
மக்களுக்குக் கால்கொடுத்து மாக்களாக ஆனோமே!
