
வாலி அவர்களின் நயமான பாடல் வரிகள் இவை. இந்தப் பாடல்களின் முதல் வரியையும் இடம்பெற்ற திரைப் படத்தையும் கண்டுபிடியுங்கள்!!
விடை 25ஆம் பக்கத்தில்
1) பொன்மேனி தேரசைய என்மேனி தாங்கிவர
ஒன்றோடுஒன்றாய்க் கூடும்
காலமல்லவோ
நில்லென்று நாணம் சொல்ல
செல்லென்று ஆசை தள்ள
நெஞ்சோடு நெஞ்சம் பாடும்
பாடல் சொல்லவோ?
2) பல இடத்தில் பிறந்த நதிகள்
ஒரு கடலில் வந்து சேரும்
பல நிறத்தில் பூத்த மலர்கள்
ஒரு மாலைபோல் உருமாறும்
3) இதயம் என்றொரு ஏடெடுத்தேன்
-அதில்
எத்தனையோ நான் எழுதிவைத்தேன்
எழுதியதெல்லாம் உன்புகழ்
பாடும்
எனக்கது போதும் வேறென்ன
வேண்டும்
4) பாலூட்ட ஒரு பிள்ளை அழைக்கின்றது
நான் படும்பாட்டை ஒருபிள்ளை
ரசிக்கின்றது
எனக்காக இரு நெஞ்சம் துடிக்கின்றது
-இதில்
யார் கேட்டு என்பாட்டை முடிக்கின்றது?
5) பாசமென்றும் நேசமென்றும்
வீடு என்றும் மனைவி என்றும்
நூறு சொந்தம் வந்த பின்பும்
தேடுகின்ற அமைதி எங்கே
6) ஆசையில் விளைந்த மாதுளங்
கனியோ
கனியிதழ் தேடும் காதலன்
கிளியோ
உனக்கெனப் பிறந்தேன் உலகத்தை
மறந்தேன்
உறவினில் வளர்ந்தேன்
(இன்னும் வரும் )
பக்கம் – 16
