
என்ன சொல்லிப் புரிய வைக்க….!
ஸிக்னலை நெருங்கியதும் கரெக்டாக சிகப்பு விளக்கு
எரிந்தது. அலுப்போடு காரை நிறுத்தினேன்.
கோடை வெய்யில் சுட்டெரிக்க, ‘ரமா, கொஞ்சம் தண்ணி
கொடு’ என்றேன் மனைவியிடம்.
மனைவி நீட்டிய பாட்டிலிலிருந்து நீர் அருந்தி முடிக்கவும்
ஆம்பர் லைட் வரவும் சரியாக இருந்தது. காரை ஸ்டார்ட்
செய்தேன்.
‘அப்பா.. வெயிட்..வெயிட்.. நீங்க இப்போ வண்டி ஓட்டக்
கூடாது’ என்று தடா போட்டாள் என் அருகில் அமர்ந்திருந்த
என் பெண் மிதிலா.
‘ஏம்மா…”
‘அங்கே பாருங்க.. அந்த போர்டைப் பாருங்க.’ என்று
ரோட்டின் ஒரு புறத்தில் இருந்த போர்டைக் காட்டினாள்.
‘டோன்ட் டிரிங்க்.. அன்டு டிரைவ்’ என்று ஆங்கிலத்தில்
எழுதப்பட்டிருந்தது.
அட.., பகவானே… இந்தச் சின்னப் பெண்ணுக்கு என்ன
சொல்லி புரிய வைப்பேன்..!
