2016-06-20-PHOTO-00000009 2016-06-20-PHOTO-00000012குவிகம் இலக்கிய வாசலின் 2016 ஜூன் மாத நிகழ்வான “வலையில் சிக்கும் இலக்கிய மீன்கள்” 18 ஆம் தேதி சனிக்கிழமை மாலை எலியட்ஸ் கடற்கரைச்  சாலையில் அமைந்திருக்கும் புதுமையான  ‘ஸ்பேசஸ்’ அரங்கில் சிறப்பாக நடந்தேறியது.

சுந்தரராஜன் குவிகம் அமைப்பைப்பற்றியும் இந்நிகழ்வின் நோக்கம் பற்றியும் கூறி  அனைவரையும் வரவேற்று நிகழ்வைத் தொடங்கிவைத்தார்.

வேணுகோபால் அவர்கள் வாசித்த “தர்பன சுந்தரி’  எல்லோரையும் நெகிழச்செய்த கதையாக அமைந்தது !. 

பேராசிரியர் சிந்தாமணியின் கவிதைகள்  நிகழ்ச்சிக்கு பெருமை சேர்த்தன.

இணையம் பற்றியும் சிற்றலை வானொலிபற்றியும் பல தகவல்களுடன் ஜெய்சக்திவேல் தனது கருத்துக்களைக் கூற கலந்துரையாடல் தொடங்கியது.வானொலி பற்றி விரிவாகப் பேசிய இவர் குறிப்பிட்ட தளங்கள்  சர்வ தேச வானொலி  மற்றும் பிராஜக்ட் மதுரை.

தாரிணி கணேஷ், கோமல் சாமிநாதன்  அவர்களின் இலக்கிய இதழ் “சுபமங்களா”   வெளியிட்ட படைப்புகளை  இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படிருந்ததாகவும்  இப்போது தளம் செயல்படுகிறதா என்று தெரியவில்லை என்று  தெரிவித்தார்.

கலந்துரையாடல் நிகழ்வில் பெரும்பாலானோர் கலந்துகொண்டது மிகுந்த நிறைவைத் தந்தது.

புத்தகமா  இ- புத்தகமா ?  என்ற கேள்வி எழுந்தாலும் அச்சடிக்கப்பட்டவையும் இணையத்தில் கிடைப்பவையும்  இரண்டுமே இன்றைய சூழ்நிலையில் தேவையே என்ற கருத்து பரவலாகப் பேசப்பட்டது . 

இறுதியாகப் பேசிய கிருபானந்தன் தன் நன்றி உரையுடன் இலக்கியப் பணியாற்றிவரும் தளங்களில் ஒரு சிலவற்றைக் குறிப்பிட்டார்.

நிகழ்வு இனிதே நிறைவுற்றது.

இந்த விழாவின் விவாதங்களின் முழு விவரமும் காண கீழே கொடுத்துள்ள இலக்கியவாசலின் வலைப்பூவிற்குச்  செல்லுங்கள்!! 

http://ilakkiyavaasal.blogspot.in/2016/07/blog-post.html