சென்ற மாத இலக்கியவாசலின்  “கதைகேளு கதைகேளு ” என்ற நிகழ்வு மிக அருமையாக அமைந்தது. போன வருடம் இதே ஜூலையில் சிறுகதைச் சிறுவிழா என்ற பெயரில் கதைகளைப் படிக்க வைத்தோம். இந்த முறை அதற்கு மாறுதலாக  கதைகளைச் சொல்ல வைத்தோம். 

கதை சொல்வதைத் தொழிலாகக் கொண்ட சில கதை சொல்லிகளையும் அழைத்திருந்தோம். அவற்றுள் ஒருவர்தான் வர  முடிந்தது (திருமதி கீதா கைலாசம் அவர்கள்) . அந்தத் தொழில் வித்தகரிடமிருந்து அனைவரும் நிறைய கற்றுக் கொண்டோம்.

வந்திருந்த அனைவரும் கதையை மேடையில் சொல்வது இது தான் முதல் முயற்சி என்று சொன்னாலும் அனைவரும் சிறப்பாகச் செய்தார்கள்.  அதிலும் குறிப்பாகச் சதுர்புஜன்  அவர்கள் தேர்ந்தெடுத்த கதையும் சொன்ன விதமும் எல்லோரையும் கவர்ந்தது. 

அவரது வீடியோவை நீங்களே பாருங்கள் – கதையைக் கேளுங்கள் !

 

பிரபல கதை சொல்லி திருமதி கீதா கைலாசம் அவர்களின் கதையையும் கேட்டு மகிழுங்கள்.

 

திரு மாதேவன் என்ற இளைஞர் (இவர் வந்ததால் இலக்கியவாசல் வாசகர்களின் சராசரி வயது  வெகுவாகக் குறைந்தது) சொல்லிய கதையையும் அதைத் தொடர்ந்து அவர் எழுப்பிய கேள்வியும் அதற்கான பதிலையும் கேளுங்கள்! 

 

இந்த வீடியோக்களுடன் மற்ற கதை சொல்லிகளின் கதைகளையும் கேட்க/பார்க்க  http://ilakkiyavaasal.blogspot.in/p/blog-page.html என்ற வலைப்பூவிற்குச் செல்லுங்கள்!