
“ஆனந்த யாழை மீட்டுகிறாய் ” என்று எழுதிய இவரது கரங்கள் தற்போது இறைவனுக்காகப் பாடல் புனையப் போய்விட்டன !
“அழகே அழகே எதுவும் அழகே : என்று அழகை ஆராதித்த இவர் சொர்க்கத்தின் அழகை வர்ணிக்கப் போய்விட்டார் !
‘காவிரி நாட்டையும் கைக்குத்தல் அரிசியையும்’ பல்லெலக்கா என்று பாடிய இவர் இவற்றையெல்லாம் உதறித் தள்ளிவிட்டு வேறு உலகம் சென்றுவிட்டார்!
இரண்டு தேசிய விருதுகள் ! தமிழக அரசு விருதுகள்! பிலிம்பேர் விருதுகள்! என்று விருதுகள் வாங்கிக் குவித்தவர் இன்று ஆண்டவன் கையில் விருது வாங்கப் புறப்பட்டுவிட்டார் !
நல்ல கவிஞரை நாடு இழந்துவிட்டது!
அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கும் ரசிகர்களுக்கும் குவிகம் தனது ஆழ்ந்த வருத்தங்களைத் தெரிவித்துக் கொள்கிறது.
