
மலையையே இறைவனாய் போற்றுவதும் நாமே
அதை உடைத்தெறிவதும் நாமே
மாவிலையையும் வேப்பிலையையும் பவித்ரமாய்க் கருதும் நாமே
அம்மரங்களை அறுத்தெறிவதும் நாமே
ஆறுகளையும் கடல்களையும் வழிபடுவதும் நாமே
அவற்றை நச்சாக்கிக் கொல்வதும் நாமே
அன்பேசிவம் என்று துதிக்கும் நாமே
வன்முறையைக் கட்டவிழ்ப்பதும் நாமே
இறைவன் படைத்த இயற்கைக்கு எதிராக
எங்கே ஓடிக்கொண்டிருக்கிறோம் நாம் ?
புயல் ,
நாம் இயந்திர வாழ்க்கையில் சிக்கிப் போனதால்
உள்ளுக்குள் மரத்துப் போய்விட்ட மனிதத் தன்மையை
மீண்டும் துளிர்த்து எழக் கிடைத்த
சந்தர்ப்பமாய் எண்ணுங்கள்
இயற்கையை எதிர்த்து வாழ்வது அல்ல ஆனந்தம்
இயற்கையை அன்போடு அரவணைப்பது ஆனந்தம்
இழப்பைச் சந்தித்தவர்களுக்கு
ஆதரவாய் இருப்பது ஆனந்தம்
இயலாதவருக்கு இதயப்பூர்வமாய் சேவை செய்வது ஆனந்தம்
ஒன்றோடு ஒன்றிணைந்து
தோளோடு தோள் கொடுத்து
அமைதியாய் வாழ்வது ஆனந்தம்
ஆனந்தமாயிருந்தால் வாழ்வில்
எல்லாப் புயலும் கடந்து போகும்
சத்தமும் இல்லாமல்
சலனமும் இல்லாமல்
