நட்பென்ற கானல்

மன்னிக்க வேண்டும்
அதனை கற்க வேண்டும்

நான் முழுதாய் நம்பி
பலருடன் பழகினேன்
நட்பை
கத்திக்  கொன்றார்கள்
குத்திக்கொன்றார்கள்
பகட்டும் பாசாங்கும்
தெளிம்பித்  தெளிம்பி
கண்ணை மறைத்தது
ஏமாந்தபோதும் ஏக்கம்தான் ….

என்றேனுமொருநாள் மாறுமின்னிலை
காத்ததும் பயனில்லை
நண்பன் ரூபத்தில்
நடமிடும் நல்லவரை

மன்னிக்க வேண்டும்
அதனை கற்க வேண்டும்
தினசரி வாழ்க்கை

Image result for lovers' fight in tamilnadu paitings

விடிந்தது காலை
கோபத்தில் இல்லாள்
தேக்கிவைத்த காதலை
சொல்ல யத்தனிக்கை……

மறுத்தது வார்த்தை
கவிதையை வடித்தேன்….
மாலை உடன்பாடு எட்டும்

ஆனால்

வார்த்தை தடித்தது
பேச்சும் தடித்தது

சண்டையின் போது
வார்த்தை
சிதைந்து வரும்
கோபம்
கிளர்ந்து எழும்
அந்நேரம் காலைக்காதல்
மனதில் நில்லாது
களத்தில் செல்லாது

அதை எழுதிய
பின்னாளில்
இதுக்கா அழுதோமென
சிரித்துக் கொண்டிருக்கலாம்

Image result for fight between husband and wife in tamilnadu