(நன்றி: https://tamilvaralaru.wordpress.com/)

Related image

பாறைகளில் எழுதிவந்த தமிழர்கள் பிற்காலத்தில் பனையோலையைப் பயன்படுத்தத்தொடங்கினர். எழுதுதாள் கண்டுபிடிக்கப்பட்ட காலம்வரை பனையோலையில் எழுதுகின்றமுறை தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகள் அனைத்திலும் இருந்திருக்கிறது. இவ்வாறு எழுதப்பட்ட அனைத்தும் எழுத்தோலைகள் எனப்படுகின்றன.

ஒவ்வொருவருக்கும் பாட்டெழுதும்போது குறிப்பிட்ட அளவு (விரற்கடை அளவு ) எழுத்தோலையைப் பயன்படுத்த வேண்டுமென்பதைக்கூட பாட்டியல் நூல்கள் வரையறை செய்துள்ளன.  இதன்படி நான்மறையாளர்க்கு 24 விரற்றானமும், அரசருக்கு 20 விரற்றானமும், வணிகருக்கு 18 விரற்றானமும், வேளாளர்க்கு 12 விரற்றானமும் இருக்கவேண்டும் என்று கீழ்க்காணும் கல்லாடனார் வெண்பாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறே எழுதிய ஓலையைப்பற்றிச்  சீவகசிந்தாமணியில் கூறப்பட்டுள்ளன.

மாதவி கோவலனுக்குக் கோசிகமாணி வாயிலாக அனுப்பிய  ஓலை அனைவரும் அறிந்ததே. அவை  பெரும்பாலும் பனையோலையே என்று ஊகிக்கப்படுகிறது.

கிராமசபைகளில் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்ததற்கு அவர்கள் பெயர்களை ஓலைகளில் எழுதிக் குடத்திலிட்டுப்பின் அவற்றை எடுத்து முடிவுசெய்யும் நிகழ்ச்சியாகிய குடவோலை வாயிலாகத் தேர்ந்தெடுத்தல் என்ற செய்தி கல்வெட்டுகளில் காணப்படுகிறது

எழுத்தோலைகளில் அமைப்பு, செய்தி போன்றவைகளுக்கேற்ப அவை வகைப்படுத்தப்பட்டன.

*நீட்டோலை

திருமணம் மற்றும் இறப்புச் செய்திகளுக்கான ஓலை “நீட்டோலை” என அழைக்கப்பட்டன.

*மூல ஓலை

ஓலைச் செய்தியைப் படியெடுத்து வைத்துக்கொள்ளும் முறை அந்தக்காலத்திலேயே இருந்துள்ளது. இந்த ஓலைகளை “மூல ஓலை” என அழைத்தனர்.

*சுருள் ஓலை

ஓலை ஆவணங்கள் நாட்டுப்புற மகளிர் அணிந்துவந்த சுருள்வடிவமான காதோலைபோல் சுருட்டிவைத்துப் பாதுகாக்கப்பட்டன. இவை “சுருள் ஓலைகள்” எனப்பட்டன. 

*குற்றமற்ற ஓலை

மூளியும் பிளப்பும் இல்லாத ஓலை “குற்றமற்ற ஓலை” எனப்பட்டது.

*செய்தி ஓலைகளின் வகைகள்

எழுத்தோலைகளில் உள்ள செய்திகளைக்கொண்டும் அவை தனிப்பெயர்களில் அழைக்கப்பட்டன.

*நாளோலை

தமிழகத்திலுள்ள கோவில் செய்திகளுக்குப் பயன்படுத்தப்பட்ட ஓலை “நாளோலை” எனப்பட்டது.

*திருமந்திர ஓலை

அரசனது ஆணைகள் எழுதப்பட்ட ஓலை “திருமந்திர ஓலை” எனப்பட்டது. இதை எழுதுவதற்காக அரசவைகளில் ஓலை நாயகம் என்பவர் இருந்தார். அரசனது ஆணைதாங்கிய எனப்பொருள்படும் 

*மணவினை ஓலை

திருமணச்செய்தியைத் தெரிவிக்கும் ஓலை “மணவினை ஓலை” எனப்பட்டது. இதன்மூலம் திருமணச்செய்தி உற்றார் உறவினர்க்குத் தெரியப்படுத்தியது.

*சாவோலை

இறப்புச் செய்திகளைக்கொண்டு சென்ற ஓலை “சாவோலை” எனப்பட்டன.

பின்வரும் விகிதத்தில் இந்தியாவில் ஓலைச்சுவடிகள் உள்ளன:

மருத்துவம் – 50%
சோதிடம் – 10%
சமயம் – 10%
கலை, இலக்கியம் – 10%
வரலாறு – 5%
இலக்கணம் – 5%
நாட்டுப்புற இலக்கியம் – 10%

சாதாரண பனைமரம் வருடத்திற்கு ஒருமுறை காய்காய்க்கும். ஆனால், அரியவகையான தாழிப்பனை வாழ்நாளில் ஒரே ஒருமுறைமட்டுமே காய்க்கும் என்பது குறிப்பிடத்தக்கது. பண்டைய காலத்தில் சுவடிகள் எழுத இந்த மரத்தில் இருந்து பெறப்படும் ஓலைகளைத்தான் பயன்படுத்தினர்.

தஞ்சையில் ஓலைச்சுவடி பயிலரங்கம் நடத்தப்பட்டது. 

தஞ்சை சரஸ்வதி மஹாலில் பல ஓலைச்சுவடிகள் பத்திரப்படுத்தி வைக்கப்பட்டுள்ளன. 

உ வே ஸ்வாமிநாத அய்யர் பழந்தமிழ் நூல்களான பத்துப்பாட்டு, எட்டுத்தொகை போன்றவற்றை ஆயிரக்கணக்கான ஓலைச்சுவடிகளை ஆராய்ந்த பின்னரே வெளியிட்டிருக்கிறார். 

நமது மக்களுக்கு நன்றாகத்தெரிந்த ஓலை -நாடி ஜோதிடம். பழைய ஓலைகளைவைத்து அவர்கள் காட்டும் சித்துவேலைகளைப்  புரிந்துகொள்ள நமக்கு ஒரு ஜன்மம் போதாது!