Image result for a k ramanujan

ஏ கே ராமானுஜன் (1929-1993)

மைசூரில் பிறந்த தமிழர்

அமெரிக்க பல்கலைக் கழகத்தில் மொழியியலில் டாக்டர் பட்டம் பெற்றவர்.

சிகாகோ, ஹார்வர்ட், பெர்க்லி போன்ற பல்கலைக் கழகங்களில்  ஆசிரியராக இருந்தவர்.

பத்மஸ்ரீ பட்டம் பெற்றவர்

தமிழ், தெலுங்கு, கன்னடம், சமஸ்கிருதம் , ஆங்கிலம் ஆகிய மொழிகளில்  வல்லுனர்

ஒரு கவிஞர், மொழி பெயர்ப்பாளர், நாட்டுப்புரவியல்  மற்றும் மொழியியல் வித்தகர்,

ஏராளமான கவிதைகளை ஆங்கிலத்தில் எழுதியுள்ளார்.

இவரது சிறப்பு சங்கத் தமிழ்க் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து உலகத்துக்கு அறிமுகப் படுத்தியவர்.

உதாரணத்துக்கு ஒன்று :

 

குறுந்தொகை 312 – இயற்றியவர் – கபிலர்,  குறிஞ்சி திணை – தலைவன் சொன்னது 
இரண்டறி கள்வி நம் காத லோளே
முரண்கொள் துப்பில் செவ்வேன் மலையன்
முள்ளூர்க் கான நாற வந்து
நள்ளென் கங்குல் நம்மோர் அன்னள்
கூந்தல் வேய்ந்த விரவுமலர் உதிர்த்துச்
சாந்துளர் நறுங் கதுப்பு எண்ணெய் நீவி
அமரா முகத்த ளாகித்
தமரோர் அன்னள் வைகறை யானே.
இதை ராமானுஜம் ஆங்கிலத்தில் இப்படி எழுதியிருக்கிறார்!

My love is a two-faced thief.
In the dead of night
she comes like the fragrance
of the Red-Speared Chieftain’s forest hills,
to be with me.
And them, she sheds the petals
of night’s several flowers,
and does her hair again
with new perfumes and oils,
to be one with her family at dawn
with a stranger’s different face.

A K Ramanujam

 நாமும் அந்தப் பாடலை இப்படி எழுதியுள்ளோம் ( கபிலரும், ராமானுஜனும் மன்னிக்கட்டும் )
அடி என் காதலி!
இரவில் மலை  வீட்டிலிருந்து தனியாக வருகிறாய்!
வரும் போதே உன் வாசனையால்  என்னை மயக்குகிறாய்!
இரவு முழுதும் என்னுடன் கொஞ்சிக் கலக்கிறாய் !
விடியற்காலையில் ,
இரவுப்பூக்களின் இதழ்களை மெல்ல உதறுகிறாய் !
கலைந்த கூந்தலை  எண்ணையிட்டு சீவி முடிக்கிறாய்!
கள்ளமில்லா கள்ள முகத்துடன்
உன் வீட்டிற்குள் கலந்து கொல்கிறாய் !
அடி என் காதலி!
உனக்கென்ன இரண்டு முகங்களா?

 

அதெல்லாம் இருக்கட்டும்.. அதென்னா 300 ராமாயணம் என்று தலைப்பில் போட்டிருக்கிறதே என்று கேட்கிறீர்களா?

2011இல் இவருடைய  கட்டுரை டெல்லி பல்கலைக் கழகத்திலிருந்து தலைமை நீதி மன்றம் வழியாக உலக அரங்கிற்குப் போனது!

கூகில் சர்ச்சில் தேடிப்பாருங்கள்! அந்த சர்ச்சை புரியும்!

(அல்லது ஏப்ரல் குவிகத்திற்காகக் காத்திருங்கள்)