சென்னகேஷவா என்னும் விஜயநாராயணா வைணவ கோவில் கர்நாடகா மாகாணத்தின் ஹாஸன் ஜில்லாவில் வெலபுரா நதி தீரத்தில் ஹோய்ஸாலா வம்சத் தலைநகரான பேலூரில் அமைந்துள்ளது. மூன்று தலைமுறை ஹோய்ஸாலா மன்னர்களால் இதைக் கட்டி முடிக்க 103 ஆண்டுகள் பிடித்து விஷ்ணுவர்தனா மகாராஜாவால் 1117ம் ஆண்டு துவக்கப்பட்டது. காலதாமத்தின் காரணம் அங்கு நேர்ந்த பல யுத்தங்களினால் கொள்ளையடிக்கப்பட்டும் தாக்கப்பட்டுச் சிதிலமடைந்தும் திரும்பத்திரும்பச் சீர் செய்யப்பட்டு தடைப்பட்டதால் நேர்ந்ததாகும். இதன் சிற்பங்கள் கட்டடக் கலையின் மிகவும் தலை சிறந்த 3டி முறையில் கட்டப்பட்டுஃப் பார்ப்பவர்களைப் பிரமிக்க வைக்கின்றன. இது வைணவ சம்பிரதாய கோவிலானாலும் ‘எம்மதமும் சம்மதம்’ என்னும் அடிப்படையில் சைவ, ஜைன, புத்த மதங்களையும் போற்றுவிக்குமாறு கட்டப்பட்டிருக்கிறது. சரித்திர ஆராய்ச்சியாளர்களுக்கு இதில் கல்வெட்டு ஆதாரங்கள் குவிந்து காணப்படுகின்றன.
இந்தக் கோவிலில் ஒரு காணக் கிடைக்காத அதிசயம் ஒன்று இருக்கிறது.
கோவிலின் பிரகாரத்தில் மேடையின்மேல் ஒரே கல்லில் உருவாக்கப்பட்ட கருங்கல் தூண் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. அடித்தளம் இல்லா இத்தூணின் உயரம் 42 அடி. அஸ்திவாரம் இல்லாமல் புவி ஈர்ப்புச்சக்தியால் நின்றுகொண்டிருக்கிறது! இது கிபி 1414ல் விஜய நகர சாம்ராஜ்யத்தின் மன்னர் தேவராயர் காலத்தில் கட்டி இந்தக் கோவிலில் சேர்க்கப்பட்டது. தூணின் பாரம் மூன்று பகுதிகளில் மட்டுமே தாங்கியிருக்குமாறு அமைக்கப்பட்டிருக்கிறது. தூணின் அடியில் எஞ்சியுள்ள பகுதியில் ஒரு காகிதத்தை நுழைக்கும்படியான இடைவெளியோடு அக்காலக் கட்டிடக்கலை வல்லுநர்களால் கட்டப்பட்டிருப்பது அதிசியமே!!!
இது ஒரு UNESCO WORLD HERITAGE SITE.


