குவிகம் இல்லத்தின் வாரந்திரக் கூட்டம் இம்மாதம் 12 ஆம் தேதி MBOOKs என்ற அமைப்பின் நிறுவனர் திரு மாதவன் அவர்களுடன் ஒரு அளவளாவல் என அமைந்தது. பேசப்பட்ட கருத்துக்களின் சுருக்கம்.:
கலையும் தொழில் நுட்பமும் இணைந்து செயல்பட்டால், இரண்டுமே சிறக்கும் என்பது பொது நம்பிககை. திரு மாதவன் முயற்சியில் சிறுகதைகளுக்கான ஒரு செயலி நடைமுறைக்கு வருகிறது.
எழுதுபவர்கள் ஏராளம். படிக்க விரும்புவர்களும் மிக அதிகம். இப்போதுள்ள வார, மாத பத்திரிகைகள் தேவைக்கு மிகக் குறைவான பகுதியையே பார்த்துக்கொள்கிறது. . கணிசமான எண்ணிகையில் இணைய இதழ்களும், விரல் விட்டு எண்ணக்கூடிய வலைத் தளங்களும் இருந்தாலும் தேவையின் ஒரு சிறு பகுதியே பூர்த்தியாகிறது. வழங்கலையும் தேவையையும் இணைக்கும் சந்தையாக செயலிகள் இயங்கலாமே? ஓரிரு செயலிகள் இருந்தாலும் இன்னுமொரு செயலிக்கு இடம் கட்டாயம் இருக்கிறது.
திரு மாதவன் அவார்களின் mbooks செயலி தமிழ் சிறுகதைகளுக்கான முதல் சந்தா செலுத்தவேண்டிய செயலி. (வருடத்திற்கு ரூ. 499) அதில் ஒரு பகுதியை எழுத்தாளார்கள் நிதி என ஒதுக்கிவைத்து படிக்கப்படும் பக்கங்களுக்கு ஏற்ப ஒவ்வொரு எழுத்தாளருக்கும் சன்மானம் வழக்கப்படும். இது வரும் அக்டோபர் மாதம் முதல் அமலுக்கு வரும்.
இந்த நவீன முயற்சிக்கு குவிகம் சார்பில் தேவைப்பட்ட ஒத்துழைப்பை நல்க சித்தமாயிருக்கிறோம்.

