Image result for pattukkottai kalyanasundaram

எளிமையும் இனிமையும் கருத்தும் நிறைந்த பாடல்கள் பல எழுதிப் பிரபலமானவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனார். 

அவரது கல்யாணப்பரிசு படப்பாடலை இம்மாத திரைக்கவிதையாகத் தேர்ந்தெடுப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். 

1959 இல் வெளியான படப்பாடல் இது. 

ஒவ்வொரு வருடமும் தீபாவளியன்று ரேடியோவில் – டி வி யில்  இந்தத் தீபாவளிப் பாடல் ஒளி பரப்பாமல் தீபாவளியே நிறைவு ஆகாது. 

கேப்பு, மத்தாப்புக்களை வைத்து ‘உன்னைக் கண்டு நான் ஆட’ என்று இனிமையான பாடலைத் தந்திருக்கிறார் பட்டுக்கோட்டையார்!

அதே மெட்டில் சோகம் இழையோடும்  ‘ உன்னைக் கண்டு நான் வாட’ என்று வரிகளை மாற்றி அமைத்திருப்பார். 

ஏ.எம்.ராஜாவின் இசையில் சுசீலா/ராஜாவின் குரல்களில் பாடலும் இசையும்  காதில் ரீங்காரமிட்டுக்கொண்டே இருக்கும். 

 

படம் : கல்யாணப் பரிசு
பாடல் : பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
இசை : ஏ.எம்.ராஜா

Image result for unnai kandu naan aada

ஆனந்தம் 

உன்னக் கண்டு நானாட
என்னைக் கண்டு நீ ஆட
உல்லாசம் பொங்கும் இன்ப தீபாவளி
ஊரெங்கும் மகிழ்ந்து உல்லாசம் கலந்து
உறவாடும் நேரமடா…
உறவாடும் நேரமடா…

கன்னத்தில் ஒண்ணே ஒண்ணு கடனாகத் தாடா
கண்ணுக்குள் விளையாடும் கலையே நீ வாடா
எண்ணத்தில் உனக்காக இடம் நான் தருவேன்
எனக்கு இனி நீ என்னென்ன தருவாய்
வல்லமை சேர நல்லவனாக
வளர்ந்தாலே போதுமடா..
வளர்ந்தாலே போதுமடா..

சித்திரப் பூப்போலே சிதறும் மத்தாப்பு
தீயெதும் இல்லாமல் வெடித்திடும் கேப்பு
முத்திரைப் பசும்பொன்னே ஏன் இந்த சிரிப்பு
முகமோ மலரோ இது என்ன ரசிப்பு
மின்னொளி வீசும் உன் எழில் கண்டால்
வேறேன்ன வேண்டுமடா…
வேறேன்ன வேண்டுமடா…

 

(சோகம்)

 

Image result for Kalyana Parisu 1959

உன்னக் கண்டு நான் வாட
என்னைக் கண்டு நீ வாட
கண்ணீரும் கதை சொல்லும் தீபாவளி
ஊரெங்கும் மணக்கும் ஆனந்தம் நமக்கு
காணாத தூரமடா காணாத தூரமடா

நெஞ்சமும் கனலாகி நீராகும் போது
நிம்மதி என் வாழ்வில் இனியேது
கொஞ்சிடும் மொழிகேட்டு மகிழ்ந்தவள் எங்கே
குலத்தின் விளக்காய் திகழ்ந்தவள் எங்கே
கண்ணுக்குள் நடந்த காட்சிகள் எல்லாம்
கனவாகிப் போனதடா கனவாகிப் போனதடா

ஆசைக்கு அணைபோட்ட அறிவான நங்கை
அன்புக்குப் பொருள் சொன்ன அருள் மங்கை
பாசத்தின் சுமையோடு பறந்து சென்றாளே
பழகும் உனையும் மறந்து சென்றாளே
கண்டதும் நினைவில் கொண்டதும் முடிவில்
கதையாகிப் போனதடா கதையாகிப் போனதடா