
![]()
திருப்பாவையில் விஷ்ணுவைப் பற்றிய குறிப்புகள் எத்தனை வருகின்றன என்று கேட்டிருந்தோம்
இதோ அதற்கான பதில்:
மார்கழித் திங்கள்:
1. நந்தகோபன் குமரன்
2. யசோதை இளம் சிங்கம்
3. கார் மேனி செங்கண்
4. கதிர் மதியம் போல் முகத்தான்
5. நாராயணன்
வையத்துள் வாழ்வீர்காள்:
6. பரமன்
ஓங்கி உலகளந்த உத்தமன்
7. ஓங்கி உலகளந்த உத்தமன்
ஆழி மழைக் கண்ணா :
8. ஊழி முதல்வன்
9. பற்பனாபன்
மாயனை மன்னுவட
10. வட மதுரை மைந்தன்
11. யமுனைத் துறைவன்
12. ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கு
13. தாமோதரன்
புள்ளும் சிலம்பின காண்:
14. புள்ளரையன்
15. பேய் முலை நஞ்சுண்டவன்
16. சகடம் கலக்கழித்தவன்
17. வெள்ளத்தரவில் துயிலமர்ந்த வித்து
18. அரி
கீசு கீசு என்று எங்கும்:
19. நாராயணன்
20. மூர்த்தி
21. கேசவன்
கீழ் வானம் வெள்ளென்று:
22. மாவாய் பிளந்தான்
23. மல்லரை மாட்டியவன்
24. தேவாதி தேவன்
தூமணி மாடத்து:
25. மாமாயன்
26. மாதவன்
27. வைகுந்தன்
நோற்றுச் சுவர்க்கம்:
28. நாராயணன்
29. புண்ணியன்
கற்றுக் கறவைக் கணங்கள்
30. முகில் வண்ணன்
கனைத்து இளம் கற்றெருமை:
31. இலங்கை(க்) கோமானைச் செற்றவன்
32. மனத்துக்கு இனியான்
புள்ளின் வாய் கீண்டானை :
33. புள்ளின் வாய் கீண்டான்
34. கிள்ளிக் களைந்தான்
உங்கள் புழக்கடை:
35. சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
36. பங்கயக் கண்ணான்
எல்லே இளம் கிளியே :
37. வல் ஆனை கொன்றான்
38. மாற்றாரை மாற்றழிக்க வல்லான்
39. மாயன்
நாயகனாய் நின்ற:
40. மாயன்
41. மணி வண்ணன்
அம்பரமே தண்ணீரே
42. ஓங்கி உலகு அளந்தவன்
43. உம்பர் கோமான்
44. உம்பி
உந்து மத களிற்றன்:
45. பந்து ஆர் விரலி மைத்துனன்
குத்து விளக்கெரிய:
46. மலர் மார்பன்
47. மைத் தடம் கண்ணினாய் மணாளன்
முப்பத்து மூவர்:
48. கலி
49. செப்பம் உடையவன்
50. திரள் உடையவன்
51. செற்றார்க்கு வெப்பம் கொடுக்கும் விமலன்
52. மணாளன்
ஏற்ற கலங்கள்:
53. ஆற்றப் படைத்தான் மகன்
54. ஊற்றம் உடையவன்
55. பெரியோன்
56. தோற்றமாய் நின்ற சுடர்
அம் கண் மா ஞாலத்து :
————
மாரி மலை முழைஞ்சில்:
57. பூ வண்ணா
அன்று இவ்வுலகம்:
58. அன்று இவ்வுலகம் அளந்தவன்
59. தென் இலங்கை செற்றவன்
60. சகடம் உதைத்தவன்
61. கன்று குணில் ஆவெறிந்தவன்
62. குன்று குடையாய் எடுத்தவன்
63. வென்று பகை கெடுத்தவன்
ஒருத்தி மகனாய்:
64. ஒருத்தி மகனாய்ப் பிறந்தவன்
65. ஒருத்தி மகனாய் ஒளித்து வளர்ந்தவன்
66. நெடுமால் .
மாலே மணிவண்ணா.
67. மால்
68. மணிவண்ணா.
69. ஆலின் இலையாய்
கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா:
70. கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா
கறவைகள் பின் சென்று:
71. குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா
72. இறைவா
சிற்றம் சிறு காலே:
73. மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்தவன்
74. பறை கொள்வான்
75. கோவிந்தா
வங்கக் கடல் கடைந்த:
76. மாதவன்
77. கேசவன்
78. திருமால்
