
என் வீடு
எனக்கில்லை இங்கே…..
வீழ்ந்தது இருப்பிடமாக…
வீணானதோ வாழ்க்கை !//
உயிர்வாழும் நெருடலில்
உள்வாங்கும் மிடறுகள்//
தொலைந்த உடைமைகள்
தொல்லையாகிப் போனதோ//
இதயம் இன்னும்
இரத்தச் சிதரலில்//
இரவுகளின் இருளின்
இல்லாத நிழலில்…//
பதைபதைப்பு பரிதவிப்பாய்
பாதுகாப்பின்றி பரிமாற//
விண்ணின் தேவதை
விருப்பங்களை நிறைவேற்றிட//
விரைந்தே வருவாள்
விளைந்தே தருவாளெனும்//
தேடலில் கனவுகளை
தேவையின்றியே சுமந்தே//
தன்னிலை மேன்மையாய்
தந்திரங்களின் தவணையில் //
திசை தெரியாத
தேசத்தில் அகதியாய்..//
அலைகளின் ஆரவாரமாக
அந்நியனாய் வாழ்ந்திட.. //
