காதல் விவகாரம் : 15 ஆவது மாடியில் இருந்து குதித்த இளைஞர்!! | வவுனியா நெற்

‘பிறப்பும், இறப்பும் மனிதர்களாகிய நம் கையில் இல்லை.. எல்லாம் வல்ல
இறைவன் என்ன எழுதியிருக்கானோ .. அதது, அப்பப்ப, அப்படியப்படி நடக்கும்..
எல்லாம் அவன் சித்தம்..’

முந்தைய நாள் சொற்பொழிவில் குருஜி சொன்ன வார்த்தைகள் அந்த மூன்று
நண்பர்கள் காதுகளிலும் ரீங்காரமிட்டுக் கொண்டிருந்தன.

அந்த அடுக்கு மாடிக் கட்டிடத்தின் மொட்டை மாடியில் நின்று அதைப் பற்றித்தான் விவாதித்துக் கொண்டிருந்தார்கள்.

‘வாட் ரப்பிஷ்.. குருஜியும், அவரைச் சேர்ந்தவர்களும் இன்னும் பதினாறாம்
நூற்றாண்டிலேயே இருக்கிறார்கள். டெக்னாலஜியும், மெடிகல் ஸயின்ஸும்
டெவெலப் ஆன இந்தக் காலத்திலே, அவனவன் நாளையும் குறித்து, முகூர்த்த
வேளையையும் குறித்து குழந்தையைப் பெத்துக்கறாங்க… இப்போ பிறப்பும்,
இறப்பும் டெக்னாலஜி கையில்… அதாவது நம் கையில்..’ என்றான் மோகன்.

‘இல்லடா மோகன்.. அப்படிச் சொல்ல முடியாது.. நீ சொன்ன மாதிரி
எத்தனையோ பேர் டெக்னாலஜி உதவியாலே நல்ல நட்சத்திரம் உள்ள நாளில்
ஸிஸரியன் மூலமா குழந்தையைப் பெத்துக்கறாங்க.. சரிதான். ஆனா அதுலே
எத்தனை கேஸ்கள் ஏதாவது தடங்கல் வந்து – திடீர்னு கரண்ட் கட் ஆகியோ,
டாக்டர் வர தாமதமாகியோ, வேறு ஏதாவது காம்ப்ளிகேஷன் ஆகியோ – குறித்த
நேரத்திலிருந்து தள்ளிப் போகுது.. சில கேஸ்கள் அவர்கள் குறித்த நாளுக்கு
முன்னாடியே பிரசவ வலி ஏற்பட்டு எமர்ஜன்ஸி ஆபரேஷன் செய்து குழந்தை
பிறந்து விடுது. அப்போ கடவுள் எழுதி வெச்சது அதுமாதிரின்னு எடுத்துக்-
கலாமே..’ என்றான் சேகர்.

‘அப்போ.. அவங்க குறிச்ச டைம்லே நிறைய பிரசவம் நடக்குதே.. அது..’
என்று கேட்டான் மோகன் ஒரு வெற்றிப் புன்னகையோடு.

‘அந்தக் கேஸ்களிலே கடவுளும் அது மாதிரியே எழுதி வெச்சிருந்திருக்-
கலாம்..’ என்றான் சேகர்.

‘இப்போ ஒரு மனிதன் சாகணும்னு நெனச்சான்னா அதுக்கு எத்தனையோ
வழிகள் இருக்கு,..’…. மோகன்

‘ஆமா .. அப்போ தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்யற
எல்லோருமே சாகணுமே…அப்படி இல்லையே… அப்படி முயற்சி பண்ணின
எத்தனை பேரை இதே மெடிகல் ஸயின்ஸும், டெக்னாலஜியும் காப்பாத்தி
இருக்கு… அவங்களுக்கு இன்னும் வேளை வரலைன்னு அர்த்தம்..’ என்றான்
சேகர் தீர்மானமாக.

‘ஆமா.. நிகில்.. நீ என்னடா ஒண்ணுமே சொல்லலே… ‘ என்று நிகிலிடம்
கேட்டான் மோகன்.

‘டேய்.. இந்த மொட்டை மாடியில் இருந்து கீழே குதித்தால் என்னடா
ஆகும்?’ என்று கேட்டான் நிகில்.

‘ஒரு எலும்புத் துண்டு கூடக் கிடைக்காது. எல்லாம் சிதறிப் போயிடும்..’
என்றான் மோகன் காஷுவலாக.

‘அப்போ.. நாளைக்குப் பேப்பர்லே, என் ஃபோட்டோவையும் போட்டு,
‘பிறப்பும், இறப்பும் நம் கையில்’ என்று நிரூபிக்க மொட்டை மாடியில்
இருந்து கீழே குதித்து இறந்த வாலிபன்’னு கொட்டை எழுத்திலே எல்லா
தினசரிகளிலும் நியூஸ் கொடுத்துடுங்கடா…’ என்ற நிகில் மொட்டை மாடிச்
சுவரின் மேல் ஏறி நின்றான்.

‘டேய், முட்டாள்.. என்ன காரியம்டா செய்யப் போறே.. நோ.. ‘என்று
நண்பர்கள் ஓடிவந்து அவனைத் தடுக்கும் முன் நிகில் கீழே குதித்து விட்டான்.

‘டேய்… என்ன பைத்தியக்காரத்தனம்… என்னடா இப்படிப் பண்ணினே?’
என்று அலறிய நண்பர்கள் கீழே போவதற்காக மாடிப்படிகளை நோக்கி
விரைந்தனர்.

கீழே, பெரும் உறுமலுடன் வந்த லாரி ஸடன் ப்ரேக் போட்ட சத்தம்
மாடிப்படி நோக்கி ஓடிக் கொண்டிருந்த இவர்களுக்கு தெளிவாகக் கேட்டது.

அடுக்குமாடிக் கட்டிடத்தின் வெளியே ரோட்டிற்கு வந்த அந்த நண்பர்கள்
அங்கே ஒரு லாரி நிற்பதையும், அதை அடுத்து ஒரு சிறு கூட்டம் சூழ்ந்து
நிற்பதையும் பார்த்தனர்.

ப்ரேக் போட்டு வண்டியை நிறுத்திய லாரி டிரைவர், இறங்கி லாரியின்
பின்பக்கமாக வந்து பார்த்தான். கீழே விழுந்த நிகிலை லாரி ஏற்றி வந்த

பஞ்சு மூட்டைகள் தாங்கிப் பிடித்துக் கொண்டிருந்தன.

கூட்டத்திலிருந்த ஓரிருவர் உதவியுடன் பஞ்சு மூட்டைகள் மேலேறிய
டிரைவர், நிகிலை மெதுவாகக் கீழே இறக்கி, அந்த அடுக்குமாடிக் கட்டிடத்தின்
கேட்டிற்கு முன்னால் படுக்க வைத்தான்.

‘பெரிய லூஸா இருப்பான் போலிருக்கு… இப்படியா ஒருத்தன் மொட்டை
மாடியிலிருந்து குதிப்பான்..?’ என்றார் ஒரு முதியவர்.

‘யார் கண்டார்கள்..? ஏதாவது லவ் ஃபெயிலியர் ஆகியிருக்கும்.. அதுதான்
தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்திருக்கான்..’ என்றது ஒரு இளவட்டு.

‘சிச்சீ.. பையனைப் பார்த்தா டீஸன்டா இருக்கான். அப்படி ஒன்றும்
இருக்காது.. ஏதோ கால் தவறி விழுந்திருப்பான்..’ என்றார் ஒரு நடுத்தர வயது
ஆசாமி.

கூட்டத்தை மெதுவாக விலக்கிக் கொண்டு எட்டிப் பார்த்தனர் சேகரும்,
மோகனும்.

நிகிலின் மூக்கின் கீழ் விரல் வைத்துப் பார்த்து சோதித்த ஒருவர்.
‘இல்லப்பா.. பையனுக்கு இன்னும் உயிர் இருக்கு. சீக்கிரமா ஆஸ்பத்திரிக்குக்
கூட்டிட்டு போகணும்..’ என்றார்.

சேகரும், மோகனும் முன்னால் வந்து, ‘ரொம்ப தாங்க்ஸுங்க.. இவர்
எங்க நண்பன்தான்.. கால் தவறி விழுந்துட்டார்.. அவரை நாங்க ஆஸ்பத்-
திரிக்குக் கூட்டிட்டுப் போறோம்…’ என்று சொல்லி, சேகர் தன் காரை கொண்டு
வந்து அந்த கேட்டின் பக்கத்தில் நிறுத்த, கூட்டத்திலிருந்த சிலபேர் உதவியுடன்
நிகிலை பின் ஸீட்டில் படுக்க வைத்து ஆஸ்பத்திரிக்கு விரைந்தனர்.

‘சேகர்.. நிகில் என்ன இப்படி ஒரு பைத்தியக்காரத்தனத்தை செய்திருக்கான்..? மேல்வாரியா பார்த்தா பெரிய அடிபட்டதா தெரியலே..
கையில் சின்னதா ஒரு ஃப்ராக்ச்சர் மட்டும் இருக்கும்னு தோணுது.. எக்ஸ்ரே,
ஸ்கான்னு எல்லா டெஸ்டும் பண்ணச் சொல்லி இருக்கேன். அவனுக்கு
இம்மீடியட்டா ஒரு ஊசி போட்டிருக்கேன். தூங்கிட்டிருக்கான். ஓகே.. நீங்க
வீட்டுக்குப் போங்க.. நான் பார்த்துக்கறேன். ஏதாவது தேவைப் பட்டால்
கால் பண்ணறேன்..’ என்றார் டாக்டர் மதன் – அந்த நண்பர்களின் டாக்டர்

நண்பன்.

அடுத்த நாள் காலை.. நிகிலுக்கு எப்படி இருக்கிறதோ என்ற கவலையில்
சீக்கிரம் எழுந்து எட்டு மணிக்கே ஆஸ்பத்திரிக்கு வந்து விட்டார்கள்
சேகரும், மொகனும்.

நிகில் கட்டிலில் சாய்ந்தபடி உட்கார்ந்து காபி குடித்துக் கொண்டி-
ருந்தான். இவர்களைப் பார்த்ததும் புன்னகைத்தான். அவன் கையில்
பான்டேஜ் போடப் பட்டிருந்தது.

‘பாவி மனுஷா… இப்படியாடா பண்ணுவே… ஒரு நாளா எங்க உயிர்
எங்ககிட்டே இல்லே தெரியுமா..?’ என்று அவனைக் கடிந்து கொண்டார்கள்.

‘ஓகே..ஓகே… கூல் .. கூல்… இப்பத்தான் எனக்கு ஒண்ணும் ஆகலையே..
ஆனா எனக்கு ஒரு பெரிய உண்மையை புரிய வெச்சுட்டாரே கடவுள்..’
என்றான் நிகில் ஒரு புன்னகையோடு.

ஒன்றும் புரியாமல் அவனைப் பார்த்தார்கள் சேகரும் மோகனும்.

‘ஆமாண்டா… நம்மை மீறிய சக்தி ஒண்ணு இருக்குடா..’

‘டேய்.. டேய்.. என்னடா சொல்றே..?’என்றனர் சேகரும், மோகனும் கோரஸாக.

‘ஆமாண்டா.. இல்லேன்னா… வெறிச்சோடிக் கிடந்த அந்த ரோட்டிலே
நான் விழற சமயம் பார்த்து ஏன் ஒரு லாரி – அதுவும் பஞ்சு மூட்டைகள் ஏற்றிய
ஒரு லாரி – திடீர்னு எங்கிருந்தோ வரணும்? விழுந்தவனைத் தாங்கி
பிடிக்கணும் .. காப்பாத்தணும்.. அந்தக் கடவுள் எழுதி வெச்ச என் முடிவு நேரம்
அதுவல்ல…’

‘ஏண்டா… தப்பா நெனச்சுக்காதே… அது ஒரு கோயின்ஸிடன்ஸா இருக்-
கலாம் இல்லையா..?’ என்றான் மோகன்.

‘இல்லடா மோகன்… நேற்று ஒரு சாலை விபத்துலே அடிபட்டு குற்றுயிரும்
குலையுயிருமா இருந்த ஐந்து பேரை இங்கே அட்மிட் செய்திருக்காங்க..
அதுலே ஒருத்தர் நல்ல முதியவர். இருவர் திடகாத்திரமான இளைஞர்கள்..

மற்ற இருவரும் நடுத்தர பெண்மணிகள். நடந்ததோ ஒரே ஆக்ஸிடன்ட்.
எல்லோருக்கும் நல்ல அடி… அந்த முதியவர் நிலைமை வெரி க்ரிடிகல்னு
பிழைக்கறது கஷ்டம்னு சொன்னாங்க டாக்டர்ஸ். மற்றவங்கெல்லாம்
ஆபத்து நிலைமையில் இல்லைன்னும் சொன்னாங்க. ஆனா இவங்க
கொடுத்த ட்ரீட்மென்ட்னாலே இம்ப்ரூவ் ஆகி அந்த முதியவர் ஆபத்து
நிலையிலிருந்து வெளியே வந்துட்டார். ஆனா அந்த இளைஞர்களில்
ஒருத்தரின் உடம்பிலே திடீர்னு காம்ப்ளிகேஷன் டெவலப் ஆகி இன்னிக்கு
காலையிலே இறந்துட்டார்.. அந்தக் கடவுள் கணக்குப்படி அந்த முதியவ-
ருக்கு இன்னும் டைம் வரலே… அந்த இளைஞருக்குப் போக வேண்டிய டைம்.
நாம பெருமையாச் சொல்லிக்கிற அட்வான்ஸ்ட் மெடிகல் ஸயின்ஸ் ஒண்ணும்
பண்ண முடியலே… அதனாலதான் இப்போ டாக்டர்களும் சொல்றாங்க..
‘நாங்க எங்களாலே முடியறதெல்லாம் செய்து பார்த்துட்டோம்.. இனி எல்லாம்
அந்தக் கடவுள் கையில்’னு. நானும் உணர்ந்துட்டேண்டா.. நம்மை மீறி சக்தி
ஏதோ ஒண்ணு இருக்கு.’ என்று ஒரு சொற்பொழிவே செய்து விட்டான் நிகில்.

‘டேய்.. நீ நாளைக்கே அந்த குருஜியின் ஸிஷ்யனா போயிடுவேன்னு
நினைக்கிறேன்’ என்றான் சேகர்.

அங்கே சிரிப்பலை படர்ந்தது.

‘என்ன நண்பர்கள் எல்லோரும் ஜாலியா இருக்கீங்க போலிருக்கு’
என்றபடி வந்தார் டாக்டர் மதன்.

‘நம்மை மீறி ஒரு சக்தி இருக்காங்கற டிஸ்கஷன்லே தான் இந்த லூஸுத்-
தனத்தைப் பண்ணினான் இந்தப் பாவி… இப்போ இருக்குன்னு சொல்லி ஒரு
பிரசங்கமே பண்ணிட்டான்’ என்றான் சேகர் சிரித்துக் கொண்டே.

‘ஓ… இப்போ நான் சொல்லப் போற குட் நியூஸைக் கேட்டா நீங்க
என்ன செய்யப் போறீங்கன்னு தெரியலே… நீங்க யாரும் இந்த மாடியிலிருந்து
குதிக்க முடியாது.. ஏன்னா எல்லா வின்டோஸும் மூடியிருக்கு.. ‘ என்றார்
டாக்டர் சிரித்துக் கொண்டே.

‘அப்படி என்ன டாக்டர்….?’

‘சொல்றேன்.. சொல்றேன்… நிகிலுக்கு சில டைம்லே ஒரு மாதிரி –
மைக்ரேன் மாதிரி – கடுமையான தலைவலி வந்து ஓரிரு நாட்கள் மூளை
கலங்கி சஞ்சலப்பட்டு இருக்கும் இல்லையா..’

‘ஆமா ‘

‘நேத்து எடுத்த ரிப்போர்ட்ஸெல்லாம் பார்த்தபோது மூளையிலே
அதைக் காஸ் பண்ணற பர்டிகுலர் நெர்வ்ஸ் சரியா ஸெட்டாகி கரெக்ட்
பொஸிஷனுக்கு வந்துடுத்துன்னு நினைக்கிறேன்.. நேத்து கீழே அந்தப்
பஞ்சு மூட்டைகள்லே விழுந்த இம்பாக்ட்லே இந்த மிரக்கிள் நடந்திருக்கணும்.’
என்றார் டாக்டர் சந்தோஷமாக.

‘ஓ.. மை காட்.. டாக்டர் நீங்கதான் இப்போ என் கடவுள்..’ என்றான்
நிகில் குரல் தழுதழுக்க.

‘சேகரும், மோகனும் மகிழ்ச்சியில் என்ன செய்வதென்று தெரியாமல்
நின்றார்கள்.

‘கடவுளே.. எல்லாம் என் கையில்’ என்று மமதையுடன் பேசிய எனக்கு
இப்படி ஒரு சாட்டை அடி… ஆனால் இந்த சாட்டையடி எனக்கு வலிக்கவில்லை..
ரொம்ப சுகமாக இருக்கு’ என்று டாக்டரையே நன்றியுடன் பார்த்துக் கொண்-
டிருந்தான் நிகில்.