
பல நாட்கள் ஆனாலும் எப்போத கேட்ட ரேடியோ நாடகங்கள், தொலைக்காட்சி நாடகங்கள் / தொடர்கள், படித்த கதைகள் இன்றும் மனதில் நிற்கின்றன. அவற்றைப் பற்றி சில மாதங்கள் எழுதலாம் என்று இருக்கிறேன்.
40 / 50 வருடங்களுக்கு முன்னால் கேட்ட ஒரு ரேடியோ நாடகம் இன்றும் நினைவில் இருக்கிறது. அகில பாரத நாடக நிகழ்ச்சி என்று ஒலிபரப்புவார்கள். பலவேறு மொழிகளில் எழுதப்பட்ட சிறந்த நாடகங்களை மொழி பெயர்த்து ஒலிபரப்புவார்கள். இந்த நாடகம் ஒரு வட மாநில எழுத்தாளர் எழுதியது (ஒரியா என்று நினைக்கிறேன்). திருச்சி வானொலி நிலையம் ஒளிபரப்பியது. முக்கியமான பாத்திரமான “முஸ்தபா” வாக M M கண்ணப்பா என்ற அருமையான நடித்திருந்தார். வானொலியில் கேட்கும் போதே நேரில் பார்ப்பது போல, அந்த கதாபாத்திரங்கள் நம்மிடையே நடமாடுவது போல தோன்றியது. இன்றும் தோன்றுகிறது.
கதை இதுதான்.
முஸ்தபா என்கிறார் ஒரு கொஞ்சம் பெரிய கிராமத்தில் தனியாக வசித்து வருகிறார். கூட யாரும் இல்லை. தனக்கு உறவு என்று யாரும் இல்லை என்று சொல்லி இருக்கிறார். எல்லோரிடமும் நட்புடனும் அன்புடனும் நடந்து கொள்ளுவதால் எல்லோருக்கும் அவரை பிடிக்கும். யாரைக் கேட்டாலும் மிக மிக நல்லவர் என்றுதான் சொல்வார்கள்.
பக்கத்தில் இருக்கும் ஒரு தொழிற்சாலையில் வேலை. ஒரு நாள் வேலை முடிந்து வீட்டுக்குத் திரும்பும்போது ஒரு பெண் வேகமாக ஓடிவந்து ஒரு புதரில் ஒளிந்து கொள்வதைப் பார்க்கிறான். இருட்டில் சரியாகத் தெரியவில்லை. யாரோ நாலைந்து பேர் “இந்த பக்கம்தான் ஓடினாள், இந்தப் பக்கம்தான்” என்று சொல்லிக் கொண்டு இங்கும் அங்கும் தேடி விட்டு, “சரி சனி விட்டது. எந்த போயிடும் பாக்கலாம். இவ்வளவு தூரம் நம்மை அலையவிட்டாளே பாக்கலாம். உருட்டி விட்டது தேட முடியாது. அப்புறம் வருவோம்” என்று சொல்லி விட்டு போய்விடுகிறார்கள்.
சிறிது நேரம் கழித்து முஸ்தபா “பயப்படாதம்மா வெளில வா அவங்க போயிட்டாங்க. பயப்படாம வெளில வா” என்று அழுது கொண்டே ஒளிந்திருக்கும் பெண்ணைக் கூப்பிடுகிறான். நடுங்கிக் கொண்டே வெளியே வருகிறாள். “பயப்படாதே, என் கூட வா. இப்ப எதுவும் பேச வேண்டாம். என் வீட்டுக்கு வா. அமைதியா பின்னர் பேசலாம்” என்று கூறி வீட்டுக்கு அழைத்துப் போகிறான்.
வீட்டுக்கு வந்ததும் நன்றி சொல்லி அழுது விட்டு “தயவு செய்து என்னைப் பற்றி எந்த தகவலும் கேட்காதீர்கள் எனக்கு யாரும் கிடையாது. நாளைக் காலை நான் போய் விடுகிறேன். ” என்கிறாள். “எங்கே போவாய் யாரும் இல்லை என்று சொன்னாயே”. “எனக்கு போக்கிடம் இல்லை. என் விதிப்படி நடக்கட்டும். என்னைக் காப்பாற்றியது க்காக இங்கேயே இருந்து உங்களுக்கு தொல்லை கொடுக்க முடியுமா”
“நீ இங்கே இருப்பதால் எனக்கு எந்த தொல்லையும் இல்லை. உண்மையில் எனக்கும் யாரும் இல்லை. உனக்கு ஆட்சேபணை இல்லை என்றால் நீ இங்கேயே தங்கலாம்”.
மிகுந்த சந்தோஷத்துடன் ” நான் இங்கேயே இருக்கலாம்? யாரும் எதுவும் சொல்ல மாட்டார்களா?
“எனக்கு யாரும் இல்லை எதுவும் சொல்ல. என் நண்பர்களிடமும் மற்றவர்களிடமும் நான் சொல்லிக் கொள்கிறேன்” என்று சொல்கிறான்.
அவர்கள் வாழ்க்கை இப்படித் துவங்குகிறது. ஓரிரு வார்த்தைகளே பேசிக் கொள்கிறார்கள். சமைக்க என்ன வேண்டும். வேறு தேவையான சாமான்கள் என்ன வேண்டும் என்று அதோடு பேச்சு வார்த்தை முடிந்துவிடும்.
அவள் பெயர் “பேதானா” “Bhedhanaa” என்று சொல்கிறாள். அந்த பெயர் நினைவில் நிற்க மாட்டேன் என்கிறது இதோ இந்த கதவில் எழுதி வைத்துக் கொள்கிறேன் என்று சொல்லி விட்டு. சத்தமாக ஒவ்வொரு எழுத்தாக “பே” “தா” னா” என்று விட்டு எழுதுகிறான்.
வெளியிலும், அவன் அலுவலகத்திலும் கேட்கிறார்கள் கொஞ்சம் கேலியாக “என்ன இப்ப வெல்லாம் இங்க சாப்பிடுவது இல்லை. கையிலும் சாப்பாடு பாக்ஸ் எடுத்துக்கிட்டு வந்துடறீங்க ” என்று கேட்கும் போது “இப்ப வெல்லாம் அவங்களே செஞ்சு குடுத்துராங்க வித விதமா செய்யறாங்க , நல்லாவும் இருக்கு. முன்பெல்லாம் வீட்டுக்குப் போனா யாரும் இருக்க மாட்டாங்க, இப்ப வீட்டில யாரோ காத்துக் இருக்காங்கன்னு நினைக்கும் போது சந்தோஷமா இருக்கு” அப்படீன்னு பதில் சொல்லுவான். அவனைப் பற்றி எல்லோரும் தெரியும் என்பதால் ஒருத்தர் கூட சந்தேகம்கூடப் படவில்லை. அவள் யார் என்று கேட்கும் போது அப்பாவியாக “தெரியாது ஆனால் பாவம்” அப்படீன்னு சொல்லுவான்.
கட்டிக்கப் போறியான்னு கேட்டால் “தெரியாது” அப்படீன்னு சொல்லுவான்.
ஒரு முறை. “பேதானா.. என் நண்பர்கள் நம்மைப்பற்றி பேசிக்கறாங்க”
“என்ன பேசிக்கறாங்க? “
“என்னமோ பேசிக்கறாங்க… அதை விடு. நான் உன்னை பேதானா ன்னு கூப்பிடறேன் நீ என்ன சொல்லி கூப்பிடப்போறே “
“எப்படிக் கூப்பிடட்டும்…? “
இரண்டுபேரும் ஒருவரை ஒருவர் விரும்புகிறார்கள். அதைவிட பலமடங்கு ஒருவரை ஒருவர் மதிக்கிறார்கள்.
இவர் மனதில் என்ன இருக்கிறது காப்பாற்றியதற்காக கல்யாணம் செய்து கொள்ளச் சொல்ல முடியுமா? அவர் தப்பாக எடுத்துக் கொண்டு விட்டால். இவ்வளவு நல்லவரை மன வருத்தப்படச் செய்யலாம்? பாவம். என்று அவளும்.
காப்பாற்றியதற்காக என்னை கட்டிக்கிறாயா என்று கேட்டால் நம்மை என்ன நினைப்பாள் என்று அவனும் மனதுக்குள் தவிக்கிறார்கள்.
“என்னை என்ன சொல்லி கூப்பிடப்போறே? அண்ணா அப்படீன்னு கூப்பிடறியா? ” ஒருவேளை அப்படி நினைக்கிறாளோ என்னவோ. நான் அதாவது சொல்ல நம்மை தப்பா நினைச்சுட்டா.. என்ன சொல்கிறாள்சொல்கிறாள் என்று பார்ப்போம் என்று எண்ணி அப்படிக் கேட்டு விட்டான்.
அட இவர் மனதிலே அப்படித்தான் நினைகிறாரா? நல்ல வேளை நான் எதுவும் தப்பாக பேசிவிட்டு வில்லை. நல்ல மனிதர் என்னைப்பற்றி என்ன நினைத்திருப்பார் என்று மனதை மாற்றிக் கொண்டு பதில் சொல்ல வரும்போது வெளியிலே இருந்து யாரோ “முஸ்தபா” என்று கூப்பிட வெளியே போய் விடுகிறான்.
ஒருநாள் அவளுக்கு காய்ச்சல் வந்து ரொம்ப கஷ்டம் படுகிறாள். வேலையில் இருந்து வீட்டுக்கு வந்தவன் பதறிப் போய் உடனே பக்கத்து ஊரிலிருந்து தெரிந்த டாக்டரை அழைத்து வருகிறான். சோதித்து விட்டு மருந்து கொடுத்து விட்டு “பயப்பட வேண்டாம்” என்று சொல்லிவிட்டுப் போகிறார்.
உடம்பு தேறி பழையபடி வாழ்க்கை தொடர்கிறது.
ஒருநாள் டாக்டர் முஸ்தபாவை பாத்து “முஸ்தபா உங்கள் வீட்டிலே இருக்காங்களே.. பேதானா தானே அவங்க பேர்? இவங்களை நான் கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படறேன், உங்க ரெண்டு பேருக்கும் சம்மதம்னா வீட்டுக்கு வந்து கேட்கிறேன்” என்று சொல்கிறார். மனதுக்கு கஷ்டமா இருந்தாலும் “கேட்டுட்டு சொல்றேன்” என்று சொல்லிவிட்டு. இவ்வளவு நல்ல மனிதர் கிடைப்பது அதிர்ஷ்டம் தான் என்று எண்ணி வீட்டுக்கு வந்து கேட்கிறான்.
“நம்ம டாக்டர் ரொம்ப நல்லவர் அவருக்கு உன்னை புடிச்சு இருக்கு. கல்யாணம் பண்ணிக்கிறாயா? “
எவ்வளவு நல்ல மனிதர். எவ்வளவு நாள் நான் இவருக்கு பாரமா இருக்கிறது. வேண்டாம் என்று சொன்னால் வருத்தப் படுவார் என்று எண்ணி. “உங்கள் இஷ்டம்” என்று சொல்லி விடுகிறாள். திருமணம் நடந்து அவள் டாக்டர் வீட்டுக்கு போய் விடுகிறாள். மீண்டும் தனிமை. இப்போது இன்னும் அதிகமாக தெரிகிறது. அந்த வீட்டின் ஒவ்வொரு இடமும் அவளை நினைவு படுத்துகிறது. வேறு வேலை வாங்கிக் கொண்டு ஊரைவிட்டு போகிறார். போகும்போது வீட்டைக் காலி செய்யும் போது உதவ வரும் நண்பரிடம் பெட்டியைக் கொடுத்து விட்டு உள்ளேபோய் எதுவும் இல்லை என்று உறுதி செய்து கொண்டு கதவைப் பூட்டுகிறார். அப்போது நண்பரிடம் சொல்கிறான். இதோபார் அவள் பேர் இந்த கதவுல எழுதியிருக்கு. மூணு எழுத்து பே தா னா …. இன்னும் ஒரு மூணு எழுத்து எழுதிடரேன்” என்று மேலும் மூணு எழுத்து “இ ல் லை” எழுதிவிட்டு . சேர்த்து படிக்கிறான்
“பே தா னா… இ ல் லை” என்று சொல்லிவிட்டு பெரிதாக அழுவான்.
அதோடு முடியும். மிகவும் பேசப்பட்டு நிறைய பாராட்டுக் கடிதங்கள் திருச்சி வானொலி நிலையத்துக்குக் குவிந்தது.
முஸ்தபா வாக நடித்த கண்ணப்பா என்ற நிலைய நடிகரை அதற்குப்பின் “முஸ்தபா” என்றே கூப்பிட்டார்களாம்.
This Drama disturbed me for long time. I told it to many even in Bank after decades and really wept when completed the narration with பே தா னா இ ல் லை.
