
விண்ணில் பாய்ந்தது சந்திராயன்-3 விண்கலம்! ( 14 ஜூலை )
இந்த செய்தி வந்திருக்கும் இந்த சமயத்தில் இந்தக் கட்டுரைக்கதை வருவது மிகவும் பொருத்தம்
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
சரவணன் வீட்டிற்குள் வரும் போது இனிமையான நறுமணம் அவன் நாசியை நிறைத்தது. அம்மா, என்னவோ, ஸ்பெஷலாகச் செய்திருக்கிறார் என்று நினைத்தான். அம்மா, ஃப்ளாஸ்க், ஓரு எவர்சில்வர் தூக்குப் பாத்திரம், மற்றும், வாயகன்ற, மூடியுள்ள ஒரு எவர்சில்வர் டப்பா ஆகியவைகளை பிரம்புக் கூடைக்குள் வைத்துக் கொண்டிருந்தார். அப்பா, மற்றொரு கூடையில் தரை விரிப்புகளும், குடி தண்ணீர் நிரம்பிய போத்தல்களையும் வைத்துக் கொண்டிருந்தார். சரூவிற்குப் புரிந்து விட்டது. ‘ஹையா’ என்று குதித்தான். அவர்கள் பீச்சிற்குப் போகப் போகிறார்கள், அதுவும் தின்பண்டங்களோடு. அங்கே அதிக நேரமும் இருக்கப் போகிறார்கள். அதெல்லாம் சரி, அம்மா வாசனை, வாசனையாக என்ன செய்திருக்கிறார், நாவில் நீர் ஊறுகிறதே!
“சரூ, கை கால் அலம்பிண்டு, ட்ரெஸ்ச மாத்திண்டு ஓடிப் போய், சஞ்சையையும், பவானியையும் கூட்டிண்டு வா. நாமெல்லாரும் மெரினா போறோம்.”
‘ஒரே நிமிஷம்மா, என்ன தீனி செஞ்சுருக்க, வீடே மணக்கறதே, எனக்குக் கொஞ்சம் தாயேன்.’
“நீ கேப்பேன்னு எனக்குத் தெரியாதா, என்ன? ஒரு வடை வச்சுருக்கேன் டேபிள்ல. அத எடுத்துக்கோ. மீதியெல்லாம் முழு நிலாவப் பாத்துண்டு நல்ல காத்துல பீச்ல சாப்படலாம்.”
அம்மா ஆனாலும் கஞ்சம். இன்னும் ஒண்ணு தரப்படாதா? ஆமா, வழக்கமான வட மாதிரியில்லையே; சரி, அப்றமா அம்மாவே சொல்லுவா என்ற சரூ தானும் தயாராகி, தன் நண்பர்களை அழைத்து வரவும், அப்பா காரை வெளி வாசலிற்கு எடுத்து வருவதற்கும் சரியாக இருந்தது.
அம்மா, அத்தனை கூடைகளையும் உள்ளே வைத்துவிட்டு தானே காரோட்ட அமர்ந்தார். சரூவிற்கு ஆச்சர்யமான ஆச்சர்யம். ‘எப்பம்மா கத்துண்ட?’
“அதெல்லாம் ஆச்சுடா. இப்ப ‘எல்’ அட்டை மாட்டியிருக்கேனே பாக்கலியா” என்றார் அப்பா.
‘சும்மா உனக்கு சர்ப்ரஸ் தரணும்னு தான் சொல்ல.’
பவானி அந்தக் காரில் இருந்த வழிகாட்டித் தடத்தைப் பார்த்துக் கொண்டே வந்தாள். சரூ அதைக் கவனித்துவிட்டு, ‘இது ஜி பி எஸ் (GPS-Geographical Positioning System) அதாவது, புவியியல் நிலை அமைப்போட உதவியோட நாம பயணம் செய்யறதுக்கு உதவும் வழிகாட்டி’ என்றான்.
“தெரியும், சரூ. முதல்ல இத வடிவமைச்சது யாருன்னு சொல்லு பாக்கலாம்.”
“அது வந்து.. வந்து”
‘க்ளேடிஸ் வெஸ்ட்’ (Gladys West) என்ற கறுப்பினப் பெண். ரொம்ப ஏழைக் குடும்பம். விவசாயக் கூலிகள் அவங்களும், அவங்க அம்மா, அப்பாவும். ஆனா, க்ளேடிஸ் படிப்புல நல்ல திறமசாலி. பெண், அதுலயும் கறுப்பினம், அதனால அவங்கள பாராட்ட யாருமே இல்ல; ஊக்கம் தரவும் ஆளில்ல. ஆனா, அவங்க மெரிட்ல கணிதக் கல்வில இடம் கிடச்சுப் படிச்சாங்க; அப்றம் முதுநிலை பட்டம்; அமெரிக்காவுல, அவங்க, வர்ஜீனியாவச் சேந்தவங்க, கப்பல் ஆயுதத் துறைல, வேலைக்குப் போனாங்க. மேல மேல உயர்ந்தாங்க. கிரகங்கள் ஒன்றின் மேல ஒண்ணு என்ன பாதிப்ப ஏற்படுத்துதுன்னு அவங்க செஞ்ச ஆய்வு பலரால பாராட்டப் பட்டது.’
“ஆமாண்டா, சரூ, முக்கியமா, ப்ளூடோ, நெப்ட்யூன் இயக்கங்கள். ‘சீசேட்’ (Seasat) என்ற கடல் சார்ந்த செயற்கைக் கோளை ஐ பி எம்ல (IBM) மறு சீரமைச்சதுல பெரும் பங்கு அவங்களுக்கு. பூமி எப்போதுமே இயங்கிண்டிருக்கு, அது மேல அலைகளின் தாக்கம், புவியீர்ப்பு விசைன்னு பல சக்திகள் தொடர்ச்சியா செயல்படுது. இந்த நிலைல பூமியோட பொசிஷன எப்படி சரியா கணிக்கிறது? அதுலதான் அவங்க மூணு முக்கிய செயல்களச் செய்தாங்க. அதுக்குப் பேரு ‘ஜியோடெடிக் மாதிரி’. (Geodetic Model) பூமியோட நிலவியல், வெளியை நோக்கிய அதன் இடம் சார்ந்த கோணம், (Earth’s space Orientation) ஈர்ப்பு விசை இதைத்தான் அவங்க கச்சிதமா கணக்கிட்டாங்க.”
‘அமெரிக்காவுல 31 செயற்கைக் கோள்கள் இந்த மூணையும் கண்காணித்து பூமில உள்ள ரிசீவருக்கு அனுப்பும். அதுக்கும் முன்னாடி இது எதையெதை சொல்லும்னு பாக்கலாம். முக்கியமா ஐந்து விஷயங்கள்:
நான் எங்கிருக்கிறேன்? எங்கே போகிறேன்? நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்? அங்கே நான் வருவதற்கு சிறந்த வழி என்ன? நான் அங்கே எப்போது வந்து சேருவேன்?’
“வான வெளியில 11,000 கடல் மைல்கள் தூரத்ல தங்களோட சுற்று வட்டப் பாதையில அந்த செயற்கைக் கோள்கள் இருக்கு. இது பூமில எந்த இடம் என்பதச் சரியாகக் கணிக்கும். நான்கு கோள்கள் சொல்லும் செய்திகளை கட்டுப்பாட்டு அறை சரி பார்க்கும். அந்தத் தகவல் நம்மோட கை பேசிக்கோ. இப்போ ஆன்டி ஒட்ற கார்ல இருக்கற ரிசீவருக்கோ வந்து சேந்து நமக்கு வழி காட்டும்.”
‘சரி, சஞ்சய், நான் நம்ம நாட்டோட ஜிபிஎஸ் என்னன்னு சொல்லவா? அதுக்குப் பேரு ‘நேவிக்’ (NAVIC) அதாவது, ‘நேவிகேஷன் வித் இந்தியன் கான்ஸ்டலேஷன்- (Navigation with Indian Constellation) நம்ம இஸ்ரோ (ISRO) செஞ்சது இது. கார்கில் போரின் போது ‘பொசிஷனிங்கிற்காக’ இது தயாரிக்கப்பட்டது. பிஷாரத் ராமா பிஷாரதி என்ற கேரள விஞ்ஞானி நமது இந்திய ஜி பி எஸ்சின் தந்தை எனக் கருதப்பட்றார். பர்சனல், கமர்ஷியல், இராணுவம்னு மூணு பிரிவு இருக்கு. ஜிபிஎஸ் செயற்கைக் கோள்கள்ல அணுக் கடிகாரம் (Atomic Clock) இருக்கு. அதனால், நேரம் துல்லியமா இருக்கும். அம்சமான விஷயம் என்னன்னா, நம்ம நேவிக்ல இரட்டை அலவரிச, அதனால, நம்ம ‘பொசிஷனிங்’ தரம் இருக்கே அது 10 மீட்டருக்குள்ள எந்த இடம்னு துல்லியமாக் காட்டிடும். ஆனா, ஜிபிஎஸ்ன்னு பொதுவா அமெரிக்கவோடத சொல்றோமே அது 20 மீட்டர் துல்லியத்ல தான் காட்டும். இப்ப, எல் 5 அலைவரிசைல இயங்குறதால, நம்ம அலைபேசிகள்ல நேவிக் வரதில்ல. எல் 1 அலைவரிசைக்கு அது 2024-25ல வந்துடும். அப்போ நம்ம அலைபேசிகள்ல நேவிக் வந்துடும்னு இஸ்ரோ சொல்லியிருக்காங்க.’
“நல்ல விஷயம் ஒண்ணு, சஞ்சய். மே 29, 2023ல் இஸ்ரோ வெற்றிகரமா ஜி எஸ் எல் வி-எஃப் 12/ என் வி எஸ்-01ஐ (GSLV-F12/NVS-01) நிறுவியிருக்கு. அந்த என் வி எஸ்(Navigation Satellite) என்ற செயற்கை கோளோட வெயிட் எவ்வளவுன்னு தெரியுமா? 2,232 கிலோ. இந்தத் தொடர்ல எல் 1 L1)பேன்ட் (Band) வரும். இந்தியாவுல தயாரித்த அணுக்கடிகாரம் இதுல இருக்கு. நாம எல்லாருமே சைன்ஸ், டெக்னாலஜி, இங்ஜினீரிங், கணிதம் (STEM) எல்லாத்தையும் நன்னாப் படிக்கணும், நம்ம நாட்டுக்குப் பெரும தரும் கண்டுபுடிப்புகளச் செய்யணும்.”
கடலும், வானும் கவிதை பாடி அவர்களை வரவேற்றன. வானில் வைகாசி விசாக பூரண நிலவு பால் போலப் பொழிந்து கொண்டிருந்தது.
அம்மா சொன்னார்: “சூர பத்மனை வதம் செய்வதற்காக சிவன் தன் நெற்றிக் கண்ணிலிருந்து விடுவித்த ஆறு பொறிகள் கங்கையிலிருந்து சரவணப் பொய்கையில் ஆறு தாமரைகளில் குழந்தையாகப் பிறப்பெடுத்தது. தேவி பார்வதி, அழகுக் குழந்தைகளை சேர்த்தணைக்க ஆறு முகங்களும், பன்னிரண்டு திருக்கரங்களுமாக முருகன் என்ற அழகன் உண்டானார். முருகனுக்கான விரத நாள் இது; அவரோட கல்யாண நாளும் இது. நம்மாழ்வார் பிறந்த நட்சத்திரம் விசாகம்; அர்ச்சுனன் சிவனிடமிருந்து பாசுபத அஸ்திரத்தை வாங்கியதும் விசாகம். திருமழப்பாடியில் சிவன் ஆனந்த நடனம் ஆடியதும் விசாகம். இராமலிங்க வள்ளலார் சுவாமிகள் ‘சத்ய ஞான சபை’யைத் தோற்றுவித்ததும் விசாகம் தான்.”
மூவரும் பந்தை எடுத்துக் கொண்டு வெகு நேரம் விளையாடி விட்டு களைத்து வந்தார்கள். அம்மா, சுத்தம் செய்யும் காகிதங்களை முதலில் கொடுத்தார். பின்பு, தட்டில் வடைகள், தினை மாவு உருண்டைகள், கோப்பையில் நாட்டுச் சர்க்கரை கலந்த பசும்பால் அனைவருக்கும் கொடுத்தார்.
‘ஆன்டி, இந்த வட சக்கரவள்ளிக் கிழங்குல செஞ்சீங்களா?’ என்றாள் பவானி.
“சரியாக் கண்டு பிடிச்சுட்டயே. நன்னா, கிழங்க வேக வச்சு மசிச்சு, வெல்லத் தூள், ஏலம், கொஞ்சம் போலப் பாலத் தெளிச்சு, தோசக் கல்லுல தவளவடயைப் போட்டு எடுக்கற மாறி, சுத்தி வர நெய்யும், எண்ணெய்யும் கலந்து ஊத்தி மொறு மொறுப்பா எடுக்க வேண்டியதுதான்.”
அம்மா, செய்முறை விளக்கம் சொல்லிக் கொண்டிருக்க, சரூ மூன்றாவது வடையைக் கபளீகரம் செய்வதை பவானி கடைக் கண்ணால் பார்த்துக் கொண்டிருந்தாள்.
பானுமதி ந
