ரிமோட் ஸொலூஷன்

மாமியாரை கொடுமை படுத்தும் மருமகள் | Mamiyar vs Marumagal | Tamil Stories |  Tamil Kathaigal | Tamil - YouTube

நானும், மனைவியும், மிதிலாவும் டி.வி. ஸீரியல் பார்த்துக் கொண்டிருந்தோம்.

‘ஏண்டி.. நீயெல்லாம் ஒரு நாத்தனாரா..? வீட்டுக்கு வந்த மருமகளை படாத பாடுபடுத்தி அவளைப் பல ப்ரச்னைகளில் மாட்டவச்சே… அதிலிருந்தெல்லாம் கஷ்டப்பட்டுத் தப்பிச்சு வந்தவள்கிட்டே, அழுது புலம்பி, எமோஷனல் ப்ளாக் மெயில் பண்ணி மன்னிப்புக் கேட்டே.. அந்த வாயில்லாப் பூச்சியும் ‘தன்னாலே இந்தக் கூட்டுக் குடும்பம் பிரிஞ்சுடக் கூடாது.. மாமனார், மாமியார் மனசு வருத்தப் படக் கூடாதுன்னு’ உன்னை பெரிய மனசு பண்ணி மன்னிச்சு விட்டுட்டா.. மன்னித்தவள் இன்னும் அவள் ரூமிற்குக் கூடப் போயிருக்கமாட்டா..
அதற்குள்ளே அவளை அடுத்து என்ன ப்ரச்னையில் மாட்டி விடலாம்னு’ யோசிக்க ஆரம்பிச்சிட்டியே.. நீயெல்லாம் ஒரு மனுஷியா..?’ என்று கொதித்தாள் என் மனைவி.

அவள் ரத்தக் கொதிப்பு 160 டிகிரியைத் தொட்டிருக்கும். அவளை ஒரு புன்சிரிப்போடு திரும்பிப் பார்த்தேன்.

‘பின்னே என்னங்க… இதென்ன முதல் முறையா..? நாலாவது முறையா அந்தப் பொண்ணு மன்னிச்சு விடறாங்க… இதெல்லாம் திருந்தாத ஜன்மங்க.. அந்த மருமகளுக்காவது புத்தி வேணும்.. மாமனார், மாமியார் கிட்டே தைரியமா ‘அத்தே,.. எனக்கும், நாத்தனாருக்கும் ஒத்து வரலே.. நாத்தனாரே எல்லா சொத்துக்களையும் வெச்சுக்கட்டும்.. நீங்களும் இந்தப் பெரிய வீட்லே அவங்களுடன் இருங்க… நாங்க ஒரு சின்ன வீடாப் பார்த்துப் போயிடறோம்..’னு
சொல்லி தனி வீட்டிற்குப் போயிடணும்.. எப்பங்க அவ அவ லைஃபை வாழப் போறா..?’ என்றாள் அதே கொதிப்போடு.

அருகில் இருந்த மிதிலா, ‘ வெரி ஸிம்பிள் மம்மி.. இந்த ஸீரியலைப் பார்த்துக்கொண்டிருக்கிற எல்லோரும், ரிமோட்டை எடுத்து தாட்சண்யம் பார்க்காம சடக்கென்று வேறே சானலுக்கு போயிடணும்.. வியூவர்ஸ்ஷிப் குறைஞ்சு டி.ஆர்.பி. ரேட்டிங் குறைஞ்சு, அந்த டைரக்டரே ஸீரியலுக்கு ஒரு ‘என்ட்’ கார்டு போட்டிடுவார். அந்த நாயகிக்கு புத்தி வரதோ இல்லையோ..? அந்த டைரக்டருக்கு டெஃபனிட்டா புத்தி வரும்…’ என்றாளே பார்க்கலாம்..

அதுதானே..!

— சிவமால்

 

கொஞ்சம் சிரித்து வையுங்க பாஸ்:

 

‘டு’வால் வந்த வேதனை..!

‘ஏன்பா.. ஏன் உன் மனைவி உன்னை இப்படி துவைச்சு எடுக்கறா..?’

‘அது பெரிய கொடுமைப்பா.. நாங்க பெண் பார்க்கப் போனபோது என் அப்பா நான் எங்க கம்பனியிலே அஸிஸ்டன்ட் டு வைஸ்ப்ரஸிடன்டா இருக்கேன்னு சொல்றதுக்கு பதிலா தவறிப் போய் ‘அஸிஸ்டன்ட் வைஸ் ப்ரஸிடன்டா’ இருக்கேன்னு சொல்லிட்டார். அவங்களும் இந்தப் பெரிய கம்பனியிலே வைஸ் ப்ரஸிடன்டா இருக்கான்னா நல்ல இன்கம் இருக்கும்னு
பெண்ணைக் கட்டிக் கொடுத்துட்டாங்க.. இப்பத்தான் அவங்களுக்குப் புரிந்தது உண்மை நிலை. அதுதான் தினமும் இந்த மண்டகப்படி… அந்த ‘டு’ வால் வந்த வேதனை..!’

‘!!!!?!!!’

— சிவமால்