கவிதை தொடர்கிறது ……..

இன்னும் கனவுகள் ….

என்னையே தேடி
இன்று போல் கனவுகளும் என்னை
ஏற்றுக்கொள்ள மறுக்கும்
எப்போதும் கனவுகளிலே

இருப்பினும்
காணாமல் போகிறது
இந்த விந்தையான தினங்கள்!

விடியல் எப்போதும்
எல்லோருக்கும் விடிந்து கொண்டிருக்க….
எனக்கு மட்டும் இருட்டை
உருட்டிக் கொண்டிருக்கிறது
இதய அறைக்குள்ளே…..

ஆதவனின் கதிர்கள்
சுட்டெரிப்பதற்கு பதிலாக
அசட்டையாக
கேலி செய்கிறது ….

தேடி ஓடும் வேளையில்
எல்லாம் எதைத் தேட வேண்டுமோ
அதை விட்டு மற்றவற்றை
தேடிக் கொண்டிருக்கிறது
மனசில் விழுந்த கீறல்கள்

விழுந்தால் விதையாக
விதையின் விருட்சமாக விரிந்து

இன்னும் விதையாகி விருட்சமாக
விரிந்து கொண்டிருக்கிறேன்

விழும் போது புவி ஈர்ப்பு விசையும்
மண்ணில் விழுந்த விதையாக
இருப்பவன் விருட்சமாக
விண் ஈர்ப்பு விசையில்
இன்னும் புவியியலை
மாற்றிப் போட்டுக் கொண்டிருக்கும்
தளிர்களாக …..

முற்றுப்புள்ளிகளாக மாற
துடிக்கும் வாழ்க்கை
இன்னும் தொடர்ந்து
கொண்டிருக்கிறது

போலியாகவும் புலால் உண்ணாத
புலியாகவும் இருக்க
மனதில் போட்டிகள்…..

விதைகளின் வீரியத்தில்
தளிர்கள் புவியியலை மாற்றி
முளைத்தெழும் ….
விண் ஈர்ப்பு விசைக்கு
இழுத்துச் செல்கிறது
நிசங்களின் தங்க முலாம்கள்…

வாழ்க்கையின் வழியில்
எங்கே பயணம்
எங்கே பாதை புரியாமல்
கால்கள் எங்கும் தடுமாறி
பயணம் செய்து கொண்டிருக்கிறது ….

இன்னும் தேடுகிற மனம்
எதையோ தேடி கிடைக்காமல்
கிடைத்ததை குரங்கு கையில் மாலையாக
பிய்த்து போட்டுக் கொண்டிருக்கிறது

நாளைகளின் வாழ்க்கை
எங்கு தேடினும் கிடைக்காமலே
கனவுகளின் ஓரத்து
கடல் அலைகளில் ஓரத்தில்
ஓடிக்கொண்டிருக்கும்
வண்டியில் நுரை தள்ளிய குதிரை
வாடிக்கையாக …..

என்ன சொல்ல
என்ன புரிய
இன்னும் இழுத்து கொண்டு ஓடுகிறது
சாட்டையின் வலி தாங்காமல்……