மூன்று அறிதல் முறைகள்

B. Jeyamohan - Wikipedia

அக்டோபர் 10, வாஷிங்டன் மாநில ரெட்மண்ட் நகரத்தில் எழுத்தாளர் ஜெயமோகன் மூன்று அறிதல் முறைகள் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார், ஜெமோ அவர்கள் அமெரிக்காவில் ஆற்றும் முதல் தத்துவார்த்த உரையாகும். செரிவான இந்த உரையை முழுமையாக உள்வாங்குவதும் அதன் முழுமை அடையதும் என்பது காலத்தின் மூலமும் அவரின் உரை எழுப்பிய கேள்விகளை எண்ணங்களை தொடர்வதன் மூலமே அடைய முடியும் என்று எண்னுகிறேன். அதே வேளையில் அவர் உரையின் என் குறிப்புக்களை இங்கு தொகுத்துள்ளேன். இது இன்னும் மெருகேற்றப்பட வேண்டிய முழுமையடையாத குறிப்பு. அவர் உரையில் குறிப்பிட்ட கூடாதுகளில் ஒன்று paraphrasing. அந்த கூடாதில்தான் இந்தக்கட்டுரை நிற்கிறது எனினும், இந்த காலிஃபிளவர் இப்படித்தான் இயங்குகிறது.

சங்கர் பிரதாப் இலக்கியத்திற்கும் நிரல்மொழிக்கும் உள்ள தொடர்ப்பை மிக அழகாக எடுத்துரைத்தார், Donald E. Knuth. அவர்களின் Art of Computer Programming புத்தகத்தை மேற்கோள்காட்டி ஒரு புதிய சிந்தைக்கான விதைவிதைத்தார். ஜெயமோகன் அவர்களின் நித்யவனம் முன்னெடுப்புகளை தொட்டுப் பேசியது அதுபற்றி மேலும் அறியும் ஆவலை தூண்டியது.

ஒரு தத்துவார்த்த உரை என்பது அடிப்படையை கலைப்பது (Rapture) அதன் பின் கேள்வி பதில் இருப்பதில்லை, ஆனால் அது ஒருவருடைய புரிதலை கலைத்துவிடும், அது சரியாக காலம் ஆகும் என தத்வ உரையின் தன்மை சொல்லி தொடங்கினார்.

தத்துவங்களை அனுகுவதில் மூன்று பிழைகள் உண்டு. ஒன்று, ஒரு கருத்தை பேசும்போது மனம் அது தொடர்பான எண்ணங்களை கொண்டு செல்லும். ஒன்றிலிருந்து இன்னொன்றுக்கு பாயும் (association), அது கூடாது. இரண்டு, கருத்தை சொல்லும்போதே அதற்கான மாற்று கருத்தை (negation fallacy) மனம் கொண்டுவந்துகொண்டடே இருக்கும், இது அந்த கருத்தை உள்வாங்க தடையை உண்டுசெய்துவிடும். மூன்று, சொல்லும் கருத்தை மீண்டும் தன்னுடைய மொழியில் அதை மறு உருவாக்கம் செய்தல், ‘அன்பு குடும்பத்தின் அடிப்படை’ என்றால் அதை ‘பாசம் குடும்பத்தின் அடிப்படை’ என திரும்ப சொல்லல் (paraphrasing). இதன் மூலம் அந்த மூலக்கருத்து முழுமையாக வந்தடையாமல்போகிறது. எனவே இந்த மறுமொழிதல் (paraphrasing) கூடாது.

Advertisement

இன்று சூரியகிரகணம், இதில் தத்துவ உரைசெய்ய நல்ல சகுனம். சுவர்பானு எனும் அசுரன் ராகு, கேதுவாக மாறினான், இந்த சுவர்பானு பாம்பு சூரிய, சந்திரனை விழுங்குவது என்பது தொன்மம். இதற்கு எதிரான பகுத்தறிவும் இங்கு உண்டு. இந்த இருநிலையின் (duality) அடிப்படை இந்த உரை.

ஒவ்வொரு துறையின் உச்சம் கவிதையாகிறது, பாடலாகிறது அது மற்ற துறைகளில் தாக்கத்தை தருகிறது. 1951ல் நடராஜ குரு கட்டுரை சமர்பிக்கப்படுகிறது Can science be sung? (Wisdom). இது பகவத்கீதை பற்றியது. பகவத்கீதை பாடப்பட்ட அறிவியல். இந்த கேள்வியை விடையளிக்க முயலும் போது ‘ஏன் பாட வேண்டும்?’ என்ற கேள்வி வருகிறது. மரம் மலர்கள் விட்டு மனம் பறப்புவது என்பது கடினமானது அழகும் இனிமையுமாக மாறுவது இயற்கையின் கவித்துவம். பிரமீளின் கவிதையொன்று ‘எவ்வளவு கனிந்திருந்தால் மரம் மலராகியிருக்கும்’ என்கிறது.

பிரமிளின் emc2 கவிதை, Barry Parker அவர்களின் Einstein’s Dream புத்தகம் அறிவியல் கவிதையாவதன் சாட்சிகள். அறிவியலில் இருக்கும் ஒரு ஒத்திசைவு symmetry, aesthetics முக்கியமாகிறது. சமஸ்கிரதத்தில் அனன்யதா என்ற சொல் பிரிதொன்றில்லா தன்மையை குறிக்கும், தனித்துவமும் sprouty முளைக்கும் தன்மையும் பங்களிக்கிறது.

இந்தியமரபு அறிவியலையும் தத்துவத்தையும் கவிதையாக முன்னெடுக்கிறது. பகவத்கீதை ஒரு கதை சூழலை முன்னிறுத்தி அதன் முக்கிய கட்டத்தில் தத்துவத்தை சொல்கிறது. சொந்தங்களை கொல்லவேண்டாம் என்ற அர்சுனனின் உண்மைக்கும் மேலான ஒரு உண்மை அங்கே மொழியப்படுகிறது. சமான்ய உண்மைக்கு மேல் விஷேச உண்மை விளக்கப்படுகிறது. இது போலவே சாந்தோக்கிய உபநிஷதம் உத்தாலக ஆருணி தன் மகனும், சீடனுமான சுவேதகேதுவிடம், எதை அறிந்தால் அனைத்தையும் அறிந்ததாக கொள்ள முடியும் எனக் கேள்வி எழுப்பும் இடத்தில் தொடங்குகிறது. இப்படி தத்துவங்கள் ஒரு dramatic situation கொண்டுள்ளது.

பகவத்கீதை ஒவ்வொரு அத்தியாயமும் அதன் முந்தைய அத்யாயத்தை முறன்படுகிறது. சரணாகதியை பேசி, அடுத்த அத்யாயத்திலேயே சாங்கிய யோகம், தர்கம் பேசுகிறது, இப்படி ஒவ்வொன்றாக மறுத்து அது விபூதி யோகத்தில் முடிகிறது.

இவ்வுலகத்தின் வரலாறு நீண்டது. மனிதன் மிக சமீபத்தில் வந்தவன். Andrew H. Knoll அவர்களின் A Brief History of Earth: Four Billion Years in Eight Chapters புத்தகத்தில் சில பக்கங்கள் மட்டுமே மனிதனைப்பற்றி பேசுகிறது.

மூன்று அறிதல் முறைகள் இருக்கிறது

1. கற்பனை Imagination

2. தர்கம் Logic

3. உள்ளுணர்வு Intuition

I. Imagination

குகையோவியங்களுக்கும் இன்று உள்ள ஓவியங்களுக்கும் பெரிய வித்யாசம் இல்லை. 30,000 ஆண்டுகளுக்கு முன் வரைந்த ஓவியங்கள் இன்றைய ஓவியங்களின் உட்கூறுகளை கொண்டுள்ளது (Timeless connectivity). மீன் ஓவியம் (மந்தாரே திரண்டி மீன்), யானை என கனகச்சிதமான ஓவியங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த ஓவியங்கள் இருக்கம் இடங்களில் தங்கி அந்த ஓவியங்கள் தரும் உணர்வுகளில் தோய்ந்து கனவு கான்பதும் சமீப காலங்களில் செய்யப்படுகிறது. archaeology dream என்று பெயர்.

இப்படிக் கனவுகள் வருவதற்கென்றே சில வகை காளான்களை உண்டு அந்த குகையோவிங்கள் இருக்கும் இடங்களில் தங்குவார்கள்.

மனிதன் தன்னுடைய கற்பனையின் மூலமே Idea, Concept, கருத்துருவங்கள் ஏற்படுத்துகிறான். Erich அவர்களின் The Art of Loving என்ற புத்தகம் சிறந்த வாசிப்பு.

II. Logic

யானையின் தும்பிக்கை அசாத்தியமானது அது மிகச்சிறிய பூவையும் கசங்காமல் தரையிலிருந்து எடுக்கும் வல்லமைகொண்டது, ஒரு பெரும் மரத்தையும் சாய்க்கும் வல்லமை கொண்டது. கற்பனை என்பது தும்பிக்கை என்றால் அதன் கால்கள்தான் தர்கம் (logic). படைப்பில் நாக்கும், தும்பிக்கையும் மிகவும் அசாத்தியமானது, மனிதனால் அதுபோன்ற ஒரு கருவியை இன்னும் உருவாக்க முடியவில்லை.

மொழிதான் தர்கத்தின் தொடக்கம். கற்பனையை பூமியுடன் practicality பற்றி பேசுவது. வேதாந்தம் Idealistic பேசும் போது சாருவாகம் practicality பேசுகிறது. objectivity எலோருக்கும் விளங்கவைக்ககூடியது. collective truth, generalization தர்கம் இது இருப்பதால் இது இன்னது என்றும், இன்னதுக்கு எல்லாம் இது இருக்கும் என்ற ஒரு பொதுமையை கொண்டுவருகிறது. Static-ness. ஒரு நிலைமையை (certainty) தரும் அதே நேரத்தில் ஒரு ஊசலாட்டத்தையும் அது வழங்குகிறது. Certainty with Suspension, இது ஒரு நிரூபிக்கப்பட்ட உண்மையை (empirical truth) நோக்கி செல்கிறது. இது ஒரு structureயை உருவாக்கிறது. Structure is logic.

வாழ்வின் வெவ்வெரு பரணாமங்களும் ஒன்றெயென்று சார்ந்து அமைகிறது, imagination logic என்பது duality. உதாரணமாக இசை (imagination), இலக்கியம், தத்துவம், கணிதம் (logic), இசை என சுழல்கிறது.

III. Intuition

Intuition என்பதற்கு சேதனா என்று சமஸ்கிரத்தில் ஒரு சொல்லுண்டு தமிழில் இதற்கு முன் சொல் இல்லை ஆனால் தற்போது உள்ளுணர்வு என்று அதை சொல்லாக்கம் செய்துள்ளோம். Bhom-JK Project

மனிதனுக்கு language knowledge, bio intelligent, culture knowledge, cosmic knowledge என்று பல தலங்களிலிடையே ஊடாடி தன்னுடைய சிந்தனையை ஆக்குகிறான். இது intuition மூலமே! உலகம் முழுதும் ஓன்றாகவே இருக்கிறது.

நம் imagination, logical intelligenceயை suspend செய்து bio existenceஆக மாரும் போதுதான் இத்த பிரபஞ்ச பிரமாண்ட knowledge பெருவதற்கான சாத்தியமாகிறது. இதுதான் தியான மரபு. வெரும் இயற்கையின் பகுதியாய இருந்து அறியும் அறிவு.

இந்த மூன்று அறிதலும் கலவை! எதுவும் தனித்து இயங்குவதில்லை! ஒவ்வொருவரும் அவர்களின் எல்லை மருவக்கூடிய இடத்தை அறியவேண்டும்.

நம் மூளை ஓர் கூழ் போல ஒருபகுதி மூளையை இழந்தவன் தன் வாழ்நாளில் எந்த ஒரு குறையும் இல்லாமல் சில நேரங்களில் தலைவலியை மட்டும் அனுபவித்து வாழ்ந்து முடித்த சான்றுகள் இங்கு உண்டு. குகை மனிதன் பிரம்மாண்ட நெடுகல் வைத்துள்ளான். தன்னுடைய தலைமுறை தாண்டியும் காலமெல்லாம் (eternity) தன் தலைவன் கீர்த்தி இருக்கவேண்டும் என்று எது உந்துகிறது.

மானுடம் முழுதும் வெவ்வேறு விதத்தில் ஊற்று நீரை பெருகிறது. அது வெவ்வேறு அறிதல் வகையில் வெளிப்பட்டாலும் எல்லாம் ஓர் பிரம்மம் தான்.

எகிப்திய புராணங்களில் ராகு கேது போன்ற கதை உண்டு, கிரேக்க புராணங்களில் பாம்பு உண்டு, ஏன் இதுபோன்ற ஒத்த சிந்தனைகள் ஏற்பட்டன என்பதை நோக்கி செல்வது உகந்தது.

Sponsored Content
Urologist: 92% of Men with ED Don’t Know About This Easy Fix (Try It Tonight)
Urologist: 92% of Men with ED Don’t Know About This