
புரபஸர் வகுப்பில் போர்டில் எழுதத் திரும்பினார்.
அப்போது அங்கு ஒரு விஸில் சபதம் கேட்டது.
யார் விசிலடித்தத்து என்று பலமுறை கேட்டார். யாரும் பதில் சொல்லவில்லை.
“சரி! இன்றைக்கு இதற்கு மேல் இந்தப் பாடத்தை நான் நடத்தப் போவதில்லை
ஆனால் உங்களுக்கு மீதமுள்ள நேரத்தைப் போக்க நான் ஒரு கதை சொல்கிறேன். கேளுங்கள் !” என்றார்.
எல்லாரும் ஆவலோடு கேட்க ஆரம்பித்தார்கள்.
“நான் நேற்று இரவு படம் பார்த்துவிட்டு காரில் வரும் போது ஒரு அழகான பெண் அப்போதுதான் ஒரு பார்ட்டி முடிந்து திரும்பி வந்துகொண்டிருந்தாள். மழை சிலு சிலு என்று பெய்ய ஆரம்பித்தது.
அவளுக்கு லிப்ட் கொடுக்கலாம் என்று கூப்பிட்டேன் . அவளும் மகிழ்ச்சியோடு வந்தாள். நானும் அவளும் பல விஷயங்களைப் பேசிக் கொண்டே வந்தோம். நல்ல புத்திசாலிப் பெண்ணாகவும் இருந்தாள். அந்தச் சில நிமிடங்களில் எங்கள் இருவருக்கும் இடையே ஒரு அன்பு உருவாவதை இருவரும் உணர்ந்தோம்.
அவள் வீட்டிற்கு அருகே அவளை இறக்கிவிட்டேன் .
அவள் தன்னைப் பற்றிச் சொன்னாள். நானும் இந்தக் கல்லூரியில் ஆசிரியராக இருக்கிறேன் என்றேன்.
“ஓ அப்படியா? இப்போது நாம் நல்ல நண்பர்களாகிவிட்டோம் போல தோன்றுகிறது. எனக்கு ஒரு சிறு உதவி செய்யமுடியுமா? என்று கேட்டாள்.
“கண்டிப்பாக ” என்றேன்.
“என் கஸீன் இந்தக் கல்லூரியில்தான் படிக்கிறான். அவன் படிப்பில் கொஞ்சம் வீக். அவன் நீநன்றாகப் படிக்க நீங்கள் உதவமுடியுமா ? ” என்று கேட்டாள்.
நானும் மகிழ்ச்சியோடு சரி என்று சொல்லிவிட்டு அவன் பெயர் வகுப்பைக் கேட்டேன்.
அதற்கு அவள் சிரித்துக்கொண்டே, ” நீங்கள் பேராசிரியராயிற்றே ! அதை நீங்களே கண்டுபிடிக்கவேண்டும். ஒரே ஒரு க்ளூ அவன் வகுப்பில் நன்றாக விசிலிடிப்பான்” என்று சொல்லிவிட்டு வீட்டிற்குள் சென்றுவிட்டாள்.
வகுப்பிலிருந்த அத்தனை பேரின் கண்களும் அங்கே விசிலடித்த பையனையே பார்த்தன.
அவர் அந்தப் பையனைப் பார்த்து, ” நான் சைக்காலஜியில் பட்டம் காசு கொடுத்து வாங்கவில்லை. படித்துவிட்டு வாங்கியிருக்கிறேன். ” என்று புன்னகையுடன் கூறினார். .
கல்லூரியில் சரியாகக் கற்றுக்கொள்ளாத சில விதிகள்
- உங்கள் இரு கையிலும் களிமண்ணை எடுத்து பொம்மை செய்யப் போகும்போதுதான் மூக்கு அரிக்கும்.
- உங்கள் கையிலிருந்து கீழே விழுந்த ஸ்கிரூ டிரைவர் பீரோவிற்கு அடியில் எடுக்க முடியாத இடத்திற்குப் போகும்.
- நீங்கள் தவறுதலாக தப்பான எண்ணிற்கு போன் அடித்தால் அதில் எங்கேஜ்மென்ட் டோன் வந்ததாகச் சரித்திரம் கிடையாது.
- பள்ளியில் ஆசிரியரிடம் ‘நேற்று வயிற்று வலி; அதனால் வரவில்லை ” என்று சொன்னால் அடுத்த நாள் நிஜமாகவே வயித்து வலி வரும்
- நீங்கள் எப்போது ஒரு க்யுவிலிருந்து அடுத்த கியூவிற்குப் போனாலும் முதல் கியூ விரைவாக நகரும்.
- நீங்கள் குளிக்கலாம் என்று ஷவரைத் திறந்தவுடன் உங்கள் டெலிபோன் அடிக்கும்.
- யாரைப் பார்க்கக்கூடாது என்று நினைத்துப் போனால் அவரைக் கட்டாயம் பார்ப்பீர்கள். அதைவிட அவரும் உங்களைப் பார்த்துவிடுவார்.
- உங்கள் பையன் பிஸ்கட் சாப்பிடமாட்டான் என்று நண்பர் வீட்டில் சொன்ன பொது அவன் ஒரே நேரத்தில் பத்து பிஸ்கட் சாப்பிடுவான்.
- உங்கள் முதுகில் கைக்கு எட்டாத தூரத்தில் எப்போதும் பெரிதாக அரிக்கும்.
- பிளேனில் நீங்கள் முதல் இருக்கையில் இருந்தால் ஜன்னலுக்குப் பக்கம் சீட் பெற்ற நபர் எப்போதும் லேட்டாகவே வருவார். நீங்கள் எழுந்து இடம் கொடுக்கவேண்டும்.
- நீங்கள் சூடான டீ குடிக்கவேண்டும் என்று ஆபீஸில் ஆரம்பிக்கும்போதுதான் பாஸ் அவசர அவசரமாக கூப்பிடுவார். நீங்கள் வருவதற்குள் டீ ஆறிப் போய்விடும்.
ஏன் இவை எல்லாருக்கும் சொல்லி வைத்தாற்போல் நடக்கின்றன ?
