ஆழ்வார்பேட்டை நாரத கான சபாவில், கார்த்திக் பைன் ஆர்ட்ஸின் பிரபலமான வருடாந்திர கோடை நாடக விழா நடைபெற்றுள்ளது. 12 நாடகங்கள். ஏப்ரல் 22 முதல் மே 3 வரை, தினமும், மாலை 7 மணி,
முற்றிலும் இலவசம்.
(இணைய தளங்களிலிருந்து)
இண்டியன் எக்ஸ்பிரஸ் விமர்சனம் :
The dramas that were presented on stage included —
Surukku Pai helmed by Koothapiran’s grandson R Vignesh, a story about a grandson stealing his grandmother’s belongings;
Vallamai Thaarayoh, a story of a gifted singer whose life takes a dramatic turn when she faces unjust imprisonment;
Idhudhan Sorgam depicting the the desires of a middle class yearning to experience the charm of an old age home by seasoned actor-director Madhava Boovaraga Moorthy;
Meendum Thanikudithanam, a tweak on Marina’s popular play Thanikudithanam;
Kaatchi Pizhaigalo by Sreevathson V telling a poignant tale of a visually challenged and the relentless research on restoring vision;
Roudhram Pazhagu where Dharini Komal recalled the Nirbhaya case;
Big Boss by director-script writer P Muthukumaran shedding light on the dire straits of today’s education system;
Gnana Thangame, a family drama entwined in some unforeseen situations;
Ambi Mama that deals with the mismatch in the idea of horoscopes;
Prananathan that narrates the story of an ideal teacher;
Thotra Mayankkangalo, a play on the pursuit of getting an enticing giant project; and
Pattinathil Bootham, a mysterious plot scripted by Ezhichur Aravindan.
காட்சிப் பிழைகளோ :

காண்பதெல்லாம் மறையுமென்றால் வெறும் காட்சிப் பிழைதானோ என்பது மஹா கவியின் வார்த்தைகள். பார்வையிழந்தவர் காணும் காட்சிகள் எப்படியிருக்கும்?. அவருக்குப் பார்வை திரும்பினால் முதலில் காணவிரும்பும் காட்சி எதுவாகயிருக்கும்?
கண்ணப்பநாயினாரான சங்கர நேத்திராலாயாவின் டாக்டர் பத்ரிநாத்தைக் குருவாக ஏற்றுத் தனது நீண்டகால ஆராய்ச்சியின் இறுதியில் ஒரு ஊசி மருந்தைக் கண்ணில் செலுத்துவதின் மூலம் இழந்த கண்பார்வையை மீட்க முடியும் என்பதைக் கண்டுபிடிக்கிறார் டாக்டர் சங்கர் ராமன்.
மிருகங்களின் மீது நடத்திய சோதனைகளின் வெற்றியைத்தொடர்ந்து அதை ஒரு பார்வைத்திறன் இழந்தவரிடம் முதலில் சோதிக்க விரும்புகிறார். சோதனைக்கு அவர் தேர்ந்தெடுத்த நபர் அவரது மனைவி மானஸ்வனி.
ஆம் அவர் பார்வையிழந்தவர். 20 ஆண்டுக்கும் மேல் தன் பார்வையில்லாததை ஒரு குறையாகவே பொருட்படுத்தாமல் வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் எதிர்கொள்ளும், தன் தங்கையை, கணவனை மகளை நேசிக்கும் ஒரு பெண் அவர்.
தன் ஆராய்ச்சியின் முதல் சோதனையைத் தன் மனைவியிடமே சோதிக்க விரும்பும் கணவர். அதில் தனக்குச் சம்மதம் எனச்சொல்லும் மனைவி. ஆனால் சிகிச்சையைத் தொடங்கமுடியாமல் தொடர்ந்து எழும் தொழில் ரீதியான சிக்கல்கள். தெய்வ நம்பிக்கை கொண்ட இந்தத் தம்பதியினரின் அன்புமகள் காதலிப்பது நாத்திகம் பேசும் ஒரு அரசியல்வாதியின் மகனை.
.
இந்தச் நிலையில் இந்த சிகிச்சையை டாக்டர் சங்கர் ராமன் செய்ய இயலாதுபோகும் சூழல், எதிர்பாராதவிதமாக அந்தச் சோதனை சிகிச்சையைச் செய்ய முன்வரும் தலைமை மருத்தவர். ஆனால் அதற்கு அவர் எழுப்பும் வினோதமான கோரிக்கைகள்
இடையில் மகளின் காதலினால் எழும் சிக்கல்.. இறுதியில் சிகிச்சை நடைபெற்றதா? மானஸ்வினி பார்வையைப் பெற்றாரா?? என்பது தான் கதை
இது லாவண்யா வேணுகோபல் இணைந்திருக்கும் Three என்ற மூவர் அணி குழுவினரின் இரண்டாவது நாடகம். லாவண்யாவின் நடிப்பு அருமை என்று ஒரு வார்த்தையில் சொல்லிவிட்டுப் போய்விடமுடியாதளவுக்கு சிறப்பாகச் செய்கிறார். விழித்திறன் இல்லாதவராகத் திரைப்படத்தில் நடிப்பதை விட மேடையில் நடிப்பது மிகச் சவாலானது. ஆனால் லாவண்யா அந்தக் கதாபாத்திரத்தை மிக அனாசியமாகச் செய்கிறார் மிக எளிதாகச் சில செய்கைகளின் மூலம் தன் பாத்திரத்தை ரசிகர்களுக்கு உணரவைக்கிறார். பார்வையற்றவர்களுக்கே உள்ள கேட்கும் திறன் அதிகம் என்பதை எளிதாகப் புரியவைத்து விடுகிறார். “ஒசைகளை பார்ப்பவர்கள்” அவர்கள். அதைக்கூட நமக்குப் புரியவைக்கிறார். பார்வையற்றவர்களின் நடையில் ஒரு தனிக் கவனம் தெரியும். அதைக்கூடத் துல்லியமாகக் காட்டுகிறார். (மனோரமாவின் ஒரு பாத்திரத்தை அவரை மிஞ்சுமளவிற்கு செய்தவராயிற்றே!).
கணவரைப் பெயர் சொல்லாமல் டாக்டர் என்றே வெவ்வேறு மாடுலேஷன்களில் அழைப்பது அந்தக்காட்சிகளின் கனத்தைச் சொல்லுகிறது. கண்பார்வை பெறுவது குறித்த ஆராய்ச்சி, ஆய்வுக்குழுவினர் ஏற்ற முடிவை டாக்டர்களுக்கு விளக்குவது போன்ற விஷயங்களில் டெக்னிகலான ஆங்கில மருத்துவச் சொற்கள் நிறைய இருந்தாலும். ஆராய்ச்சியில் கதாநாயகன் வெற்றிபெற்றிருக்கிறார் என்பதை ரசிகர்களுக்கு எளிதாகப் புரியவைத்துவிடுகிறார்கள்.
இயல்பாக வரும் வார்த்தைகளே வசனங்களாக விழுவதால் ரசிகர்கள் காட்சிகளில் ஒன்றிப் போகிறார்கள். இசை காட்சிகளுக்கு உயிரூட்டுகிறது.
வழக்கமான சிக்கல்களில் சிக்கும் மத்தியமர் குடும்பக்கதை, காதல். போராட்டம் போன்றவற்றிலிருந்து கதைக்களன்களை மாற்றி யோசிப்பவர்கள் Three குழுவினர்
. குறைவான பாத்திரங்கள் அழுத்தமான சூழல்கள் சிந்திக்கவைக்கும். முடிவு என்ற பாணியில் தங்கள் படைப்புகளை அமைப்பவர்கள்.
அந்த வரிசையில் இது அவர்களின் இரண்டாவது படைப்பு
லாவண்யாவிற்கும் Three குழுவினருக்கும் பாராட்டுகள்.
