அறிவற்ற மூளையின் உத்தரவைக் கேட்காத பேனா தானா எழுதிய கவிதை.

பேனாவின் முனை - ஏனைய கவிதைகள்

புது கவிஞர்களின் அணிவகுப்பு.

தேர்ந்தெடுக்கப்பட்ட பத்துக்  கவிஞர்கள்.

ஆண்கள்ஐந்து பெண்கள் நான்கு. ஒருவர்திருநங்கை.

கவிதை வாசிக்குமுன். நெறியாளர்.

கவிஞர்களை

உசுப்பேத்தினர்.

கோபப்படுத்தினார்.

அலறவைத்தார்.

அழவைத்தார்.

சிரிக்கவைத்தார்.

பைத்தியமாக்கினார்.

அரங்கத்தில் அனைத்துக்கும்.

சீட்டி விசில்  ஆரவாரம்கைதட்டல்.

ஒவ்வொரு கவிதையும் மாணிக்க விதைகள்.

( அட, உண்மையில் நான் மணிக் கவிதைகள் என்று எழுதினேன் . தானே திருத்தும் எம் எஸ் வேர்ட் மாணிக்க விதைகள் என்று மாற்றிவிட்டது. இதுதான் பேனா தானா எழுதியதோ?)

அரங்கத்தில் அனைத்துக்கும். ஆரவாரம்கைதட்டல்.

ஒவ்வொரு கவிதையும் மணிக் கவிதைகள் மாணிக்க விதைகள்.

நரம்பை முடுக்கும். முட்டுக் கவிதைகள்

ஒருவர் வானவீதியில் அணுவைப்  பிறந்தார்.

ஒருவர். குரங்குக்குள். செயற்கை நுண்ணறிவு புகுத்தினார்.

ஒருவர் எறும்பு புற்றுக்குள் ஈயத்தை ஊற்றினார்.

ஒருவர் ரத்தத்தின் சிவப்பை நீலமாக்கினார்.

ஒருவர் மதத்தில் ஏறிய மனிதன் காலை. உடைத்தார்.

ஒருவர் வயிற்றுக்குள். ஈய்ந்த உணவைத் . துப்பினார்.

ஒருவர் செருப்புக்கும் முடிக்கும். முடிச்சுப்  போட்டார்.

ஒருவர் நோட்டாவா தோட்டாவாஎன்றார்.

ஒருவர் குப்பையைக்  கிளறி செத்ததை உண்டார்.

கடைசியாக ஒருவர்.

மனைவியைக்  கொன்று விட்டேனே என்று. அழுதார்.

போலீஸ் அவரைச் சிறைப் பிடித்தது.

கவிதையைக் கொன்றதற்கும் சேர்த்து! ..

 

 

அசை  

அவசரம் அவசரமாக விழுங்கி
வெந்தது வேகாதது பாதிபாதியாய்
சுவை கொஞ்சமும் உணராமல்
கிடைச்சது நிலைக்குமோ என்றபயத்தில் 
பற்கள் நாக்கை  ஒதுக்கிவிட்டு
இரைப்பை ரொப்பினால்  போதும்
அப்பாடா என்ற திருப்தியில் உழலும்
மாட்டைவிடக் கேவலமானவன்  நான் !

ஆனாலும் மாட்டுக்கு அறிவுண்டு
முழுங்கினதைத் திருப்பி எடுத்துவந்து
வாய்க்கே அதையும் கொண்டுவந்து
காலைச் சுகமாப் பரப்பிக்கொண்டு
வாலையும் மெதுவாய் ஆட்டிக்கொண்டு
ஆசையா தாடை அசைய அசைய
அசை போடும் அழகு வித்தையை
சாமி எனக்குச் சொல்லித் தரலை !

ஆனா நினைவுகளைப் பிடித்து
திரும்பத் திரும்பக் கொண்டுவந்து
அசைபோடத் தெரியுமே எனக்கு
நானும் புத்திசாலிதான் ஐயா

மாட்டுக்கு கொடுத்தான் ஓர் அசை !
எனக்குக்  கொடுத்தான் வேற அசை !