ஆங்கிலத்தில் படித்தது ! 
Illustrate the paradox of the court in a Japanese ink drawing style, using brown and red ink. The scene should depict an ancient Greek courtroom setting, with Protagoras and Euathlus standing before a judge, each presenting their argument. Protagoras, with a confident posture, gestures towards Euathlus, who appears contemplative and ready to rebut. The courtroom is adorned with simple, elegant lines that suggest the architecture of the period, and the characters are dressed in traditional Greek attire. The use of brown ink should capture the seriousness of the courtroom and the debate, while red ink highlights the tension and the paradoxical nature of the dispute between the teacher and the student.
மிகவும் சுவாரசியமான ஒரு முரண்!
கிரேக்க நாட்டில்  வெகு காலம் முன்னாள் ஒரு சட்டப் படிப்பு படிக்கும் மாணவனுக்கு கல்லூரிக்குக் கட்டப்  பணம் இல்லை!  தன் ஆசிரியரிடம் பணத்தைக் காட்டுமாறு வேண்டிக் கொண்டான். தான் சட்டப் படிப்பு  முடிந்ததும்  முதல் முறை  வழக்கில் வெற்றி பெறும்போது  இந்தக் கடனை அடைக்கிறேன் என்று உறுதி கூறினான்.
ஆசிரியரும் ஒப்புக்கொண்டு அப்படியே செய்தார்.
அவன் படிப்பு முடிந்ததும் கொடுத்த பணத்தைத் திருப்பிக்கொடு என்று அவனிடம் நச்சரித்தார்.
மாணவனோ தான் வெற்றி பெற்ற பிறகே தரமுடியும் என்று வாதிட்டான்.
கோபம் கொண்ட ஆசிரியர் பணத்தைத் தாராத மாணவன் மீது வழக்குத் தொடுத்தார். அவர் எண்ணம் இப்படியிருந்தது.
இந்த வழக்கில் நான் வெற்றி பெற்றால் கோர்ட் தீர்ப்புப்படி எனக்கு அவன் பணம் தர வேண்டும். மாறாக நான் தோல்வி அடைந்தால் அவன் வென்றதாக ஆகும். அப்போது அவன் முதல் முறை வென்றதும் ஒப்பந்தப்படி பணம் தரவேண்டும்.   ஆக, எனக்கு எப்படியும் பணம் கிடைக்கும் என்று நம்பினார்.
அந்த புத்திசாலி மாணவன் தன் எண்ணத்தை இப்படிக் கூறினான்.
நான் வெற்றி பெற்றால் சட்டப்படி நான் அவருக்கு எதுவும் தரவேண்டியதில்லை. நான் தோல்வி அடைந்தால் நான் இன்னும் முதல் வெற்றி அடையவில்லையாதலால் அப்போதும் பணம் தர வேண்டியதில்லை.
எப்படி இருக்கிறது இந்த சுவாரசியமான முரண்?
சரி! இதன் முடிவு என்ன?
இது நடந்தது கி மு 485-415 இல். இந்த முரண்  கிரேக்க சரித்திரத்தில் இடம் பெற்றுள்ளது.
அதன் படி,  ஆசிரியராக வழக்குத் தொடுத்தவர் புரோட்டகோரஸ் என்பவர். அவர்  சாக்ரடிஸுக்கு முன் இருந்த மிகச் சிறந்த அறிஞர் மற்றும் மாபெரும் தத்துவ ஞானி ! பிளேட்டா அவர்களால் போற்றப்பட்டவர்.
அதனால் இந்த முரணுக்கு  புரோட்டகோரஸ் முரண் என்றே பெயர் வைத்து விட்டார்கள்!
இந்த முரண்  இன்னும் தீர்க்கப் படாமலேயே இருக்கிறது !
இன்றைக்கும் உலகெங்கும் உள்ள  சட்டக் கல்லூரிகளில்  இந்த வழக்கின் முடிவு பற்றி பல்லாயிரக் கணக்கானோர் வாதிட்டுக் கொண்டிருக்கிறார்களாம்!
இது எப்படி இருக்கு?

 

Ronald Opus

இதைப் போல இன்னொரு வினோதமான வழக்கு!

அமெரிக்காவில் ரொனால்ட் என்பவர் தலையில் துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்தாக பிரேதப் பரிசோதனையில் தெரிய வந்தது.

அந்த ரொனால்ட் தற்கொலை  செய்து கொள்வதற்காகப் பத்தாவது மாடியிலிருந்து கீழே குதித்திருக்கிறார்.  ( தற்கொலைக் கடிதம் எழுதிவிட்டுத்தான் குதித்திருக்கிறார்) . ஆனால் அவர் 9 வது மாடி வழியாக விழும்போது அங்கே ஒரு அறையில் இருந்த ஒருவர் ஜன்னல் வழியாகத் துப்பாக்கியால் சுட்டதால் ரொனால்ட் தலையில்  குண்டு பாய்ந்து அவர் உடனே இறந்திருக்கிறார்.

இன்னொரு திருப்பம் என்ன வென்றால் 8 வது மாடியில் தவறி விழுபவர்களைத் தாங்கிக் கொள்ள பாதுகாப்பு வலை இருந்தது. அது ரொனாலடுக்கும் சுட்டவருக்கும் தெரியாது.

வலை இல்லையென்றால் அவன் எப்படியும் இறந்துபோவான். அதனால் குண்டு பட்டாலும் தற்கொலை என்றே கொள்ள வேண்டும் என்று முதல் ஆர்கியூமெண்ட் எழுந்தது.

ஆனால் வலை இருந்ததால்  இந்தத்   தற்கொலை , கொலைக் குற்றமாக மாறியது.

அந்த 9 வது மாடியில் ஒரு பெரியவரும் அவர் மனைவியும் இருந்தனர். அந்தப் பெரியவர் மனைவி மீது கோபம் கொண்டு துப்பாக்கியால் சுட்ட போது அது குறி தவறி ஜன்னல் வழியாகச் சென்று ரொனால்டைத் தாக்கியது.

அதனால் பெரியவர் மீது கொலைக் குற்றம் சாட்டினார்கள்.  பெரியவரோ, தன் மனைவியைப் பயமுறுத்த குண்டு போடாத துப்பாக்கியால் அவளை அடிக்கடி சுடுவது போல நடிப்பது வழக்கம் என்றும் இப்போதும் அப்படியே செய்த போது அதில்  தவறுதலாக குண்டு இடப்பட்டிருந்தது. அதனால் இது ஒரு விபத்து என்றே கருதவேண்டும் என்ற ஆர்கியூமெண்ட் வந்தது.

இன்னும் தீவிர விசாரணையின் போது அந்தத் தம்பதிகளின் மகன், தனது  தாய் தனக்குப் பணம் தராததால் அவளைக்  கொல்வதற்காக தந்தையின்  வெற்றுத் துப்பாக்கியில் குண்டு போட்டான் என்பது  நிரூபணமாயிற்று.  அதனால் அவர்கள் மகன் மீது ரொனால்ட் கொலைக் குற்றம் விழுந்தது.

இன்னொரு முக்கிய திருப்பம் இந்த வழக்கில் !

அவர்கள் மகன்தான் செத்துப்போன  ரொனால்ட்! அம்மாவைக் கொல்ல வைத்திருந்த துப்பாக்கியை  அப்பா சில வாரங்களாக உபயோகிக்கவேயில்லை என்பதால் வெறுத்துப் போய் தற்கொலை செய்து கொள்ள பத்தாவது மாடிக்குச் சென்று குதித்தான்  அவன். அந்த நேரம் பார்த்து அவன் லோட் பண்ணின துப்பாக்கியால் அவன் அப்பா அவன் அம்மாவைச் சுடுவதாக நடித்த போது உண்மையில் குண்டு வெடித்து ஜன்னல் வழியாகச் சென்று ரொனால்டைத் தாக்கிக் கொன்றது.

ஆகிய அவனே அவன் சாவுக்குக் காரணம் . ஆகையால் இந்த வழக்கைத்  தற்கொலை என்று முடிவு கட்டி அனைவரும் பெருமூச்சு விட்டார்கள்!

இது எப்படி இருக்கு?