அழுகை தானே அழுகை தானே

 

போகும்     போது       யாரும்      ஒன்றாய்    போவதுமில்லை
இருக்கும்  வரையில்  யாரும்   பிரிவை     நினைப்பது மில்லை
அழுகைதானே  மனிதன்   பேசும்       ஆரம்ப      வார்த்தை-அவன்  அடங்கும்    போதும்     தொடங்கும்  வார்த்தை அழுகை தானே !   அழுகை தானே !

                           image

இன்பம்      யாவும்      இரவைப்    போல
       விடிந்த      பின்னால்    கலைந்து    போகும்
துன்பம்      யாவும்      நிழலைப்     போல
       ஓட         ஓட         கூடத்       தொடரும்
சிரிப்பை     மனிதன்     மறந்து      விட்டால்
      வாழ்க்கை   எல்லாம்     அழுகை     ஆகும்
துடிக்கும்    மனதை     அடக்கி      வைத்தால்
      சொர்க்க     புரியின்      கதவு        திறக்கும் !
 
ஆசை       நெஞ்சில்    தீர்ந்து       போனால்
      அழுகை     கண்ணில்    மறைந்து    போகும்
காசை       அள்ளி      வீசினாலும்
      துயரம்      அங்கே      தோன்றப்    போமோ?
செய்யும்    தொழிலை   சுத்தமாகச்
      செய்யும்    மனிதன்     தெய்வமாவான் – அவன்
போகும்     போது       உலகம்      முழுதும்
      அழுகை     தானே !     அழுகை     தானே !!